மகேசுவரமூர்த்தங்கள் 3/25 இடபாரூட மூர்த்தி

மகேசுவரமூர்த்தங்கள் 3/25 இடபாரூட மூர்த்தி
 
வடிவம் 
 
காளை மீது அமர்ந்த திருக்கோலம் –  ரிஷபாரூடர்
காளை அருகில் நிற்கும் திருக்கோலம் –  ரிஷபாந்திகர்
காளை(ரிஷபம்) மீது அமர்ந்து இருக்கும் திருமேனி.
நான்கு கரங்கள்.
வலது மேல் கரம் –  மழு
இடது மேல் கரம் – மான்
வலது கீழ் கரம் – அபய முத்திரை
இடது கீழ் கரம் – வரத முத்திரை
பிறை சந்திரன் – தலையில்
உமை அம்மை இடப்புறம்
காளையாக மகாவிஷ்ணு
யோக வடிவத்தால் குறிப்பிடப்படும்
சிவனில் பஞ்ச முகத்தில் ஒன்றான ஈசான்ய முகத்தில் இருந்து தோற்றம்.
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் – மூலவர் – விராதனூர் (மதுரை)
சிதம்பரம்
திருவாவடுதுறை
திருலோக்கி – திருவிடை மருதூர் அருகில்
விசயமங்கை – கோவந்த புத்தூர் – (கோவிந்தபுத்தூர்) – சுதை
திருத்துறையூர் – பண்ருட்டி
திருக்கோலக்கா – நாகப்பட்டினம் – சுதை
திருப்பழுவூர் –  தற்போது (கீழைப் பழுவூர்) – அரியலூர் –  சுதை
திருவான்மியூர் – சென்னை –  சுதை
திருவேற்காடு – – சென்னை –  சுதை
குடுமியான்மலை – புதுக்கோட்டை
சங்கரன் கோவில் –  சங்கர நாராயணர் கோவில்
பெரும்பால சிவன் கோவில்களில் இந்த வடிவம் கற் சிற்பமாகவே காணப்படுகிறது.
 
Image : Internet

Loading

சமூக ஊடகங்கள்

அனுட்டானம் செய்வது ஏன்?




அனுட்டானம்செய்வது ஏன்?











ஆன்மீகம்: இறைவனை அடையும் முதல் வகைப்பயிற்சி
அறிவியல்:
1. தலைமுதல் கால் வரை உடலில்திருநீறு பூசுவதால், உடலில் இருக்கும் நீர்நீக்கப்படும்.
2. அனுட்டானம்செய்வதற்கு செப்பு பாத்திரங்களே அதிகம்பயன்படுத்தபடும். இவை உடலில் இருக்கும்மாசுக்களை நீக்க வல்லவை. இதனால்உடற் பிணிகள் நீங்கும்.
3. அனுட்டானம்  முறைகளுக்குதக்கவாறு 12 முதல் 16 இடங்களில் திருநீறு அணிவர். இதனால் அந்தஇடங்களில் இருக்கும் வலிகள் நீக்கப்படும். (தொடுவர்மம்போன்றவை)
4. மந்திரஉச்சாடன ஒலிகள் குறிப்பிட்ட காலமாத்திரைகளில் நிகழ்வதால், மூச்சுக் காற்று சீராகி மனஇறுக்கம் மற்றும் அதன் சார்ந்தவியாதிகள் தடுக்கப்படும்.
மற்ற விஷயங்களை குரு முகமாக அறிக.
Image : Internet

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 2/25 நடராஜர்

வடிவம்
கேசாதி பாதமாக
முகம் – சாந்த சொருபம்
கூந்தல் அருகினில் நாகம் – கால சக்கரம்
கங்கை – அருளுதலை முடிவறச் செய்பவன்.
பிறைச் சந்திரன் – தீங்கு இழைத்தவர்களையும் மன்னித்து அருளுதல்
வலப்புற மேற்கை – டக்கா என்ற உடுக்கை(ப்ரணவ நாதம் தோற்றம்) – படைத்தல் 
இடப்புற மேற்கை – தீச்சுவாலை – அழித்தல் 
வலப்புற கீழ்க்கை – அபய முத்திரை – காத்தல் 
இடப்புற  கீழ்க்கை  – தும்பிக்கை நிலை (கஜ ஹஸ்தம்) – மறைத்தல்
சில இடங்களில் கைகளில் மான் – மனம் நிலையற்று இறைவனிடத்தில் மட்டும் ஒடுங்குதலைக் குறிக்கும்.
ஊற்றிய வலது கால் – த்ரோதண சக்தி – உயர் ஞானத் தேடல்
வலது கால் கீழ் – அபஸ்மாரன் அசுரன்(முயலகன் என்றும் கூறுவாரும் உண்டு) – முற்றுப்பெறா காமம்
தூக்கிய இடது கால் – ஆணவம் மற்றும் மாயை
குண்டலி சக்தி என்று குறிப்பிடப்படுவதும் உண்டு.
புலித்தோல் – இயற்கையை அணிதல்
நெருப்பு வட்டம் – ப்ரபஞ்ச நடனம்
நெருப்பு வட்டம் ஒவ்வொன்றும் மூன்று சிறு ஜ்வாலைகள் கொண்டது. அவை முறையே தோற்றம், இருப்பு மற்றும் முடிவு.
நெருப்பு வட்டத்திற்கும் எண்ணிக்கை உண்டு.
உடுக்கை ஒலி முனிவர்களுக்கு ஏற்றவாறு
பரதமுனி – நாட்டியம்
நாரதமுனி – சங்கீதம்
பாணினிமுனி – வியாகரணம்
பதஞ்சலிமுனி – யோகம்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
திருவாலங்காடு  – ரத்தின சபை –கால் மாற்றி நடனம்
சிதம்பரம் – கனகசபை 
மதுரை  – ரஜிதசபை (வெள்ளி சபை) – கால் மாற்றி நடனம்(பாண்டிய மன்னன் வேண்டுகோளுக்கு இணங்கி)
திருநெல்வேலி – தாமிரசபை – திருநெல்வேலி
சித்திரசபை – திருக்குற்றாலம்
திரு உத்திரகோச மங்கை – மரகதத்திருமேனி
ஸ்ரீவில்லிபுத்தூர்  மடவார் விளாகம் –  ஒரே கல்லில் செய்யப்பட்ட நடராஜர்
பேரூர் பட்டீஸ்வரர்
தஞ்சை பெரிய கோவில்
மற்றும் எல்லா சிவாலயங்கள் ((பட்டியல் முடிவற்றதாகிறது)
சிறப்புகள்
கூத்தன் – கூத்துக்களை செய்பவன்
அம்பல வாணன் – அம்பலத்தில் ஆடுபவன்
நட ராஜன் – ஆடல் கலையில் அரசன்
சபேசன் – சபைகளில் ஆடுபவன்.(5 சபைகள் )
இதரக் குறிப்புகள்
அருணகிரி நாதருக்கு திருச்செந்தூரில் காட்சி
ஒன்றி இருந்து நினைமின்கள்! உம் தமக்கு ஊனம் இல்லை; 
கன்றிய காலனைக் காலால் கடிந்தான், அடியவற்கா; 
சென்று தொழுமின்கள், தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்!-
“என்று வந்தாய்?” என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே.
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும், 
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால் 
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!
Image : Internet
உதவி : சைவ சித்தாந்தம் மற்றும் வலைத் தளங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 1/25 சோமாஸ்கந்தர்

 
வடிவம்
இறைவனான சிவனுக்கும், இறைவியாகிய பார்வதிக்கும் இடையே முருகப் பெருமான் வீற்றிருக்கும் திருக்கோலத்தை குறிப்பிடுவதே இது
அடர்ந்த திருக்கோலம். இடது கால் மடித்து, வலது கால் தொங்கவிட்டு.
நான்கு திருக்கரங்கள்
பின் இரு திருக்கரங்களில் மான், மழு.
முன் இரு திருக்கரங்களில் அபய முத்திரை, வரத முத்திரை
அம்பிகைஎதிர் மறை கால் மடித்து
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
  • திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்
  • காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்
  • குமரக்கோட்டம்
  • காமாட்சியம்மன் கோயில்
  • தென்காசி காசி விஸ்வநாதர் கோயில்
  • திருக்கேதீஸ்வரம்இலங்கை
  • திருக்கருகாவூர்
  • திருக்கள்ளில்
சிறப்புகள்
இல்லற வாழ்வினையும் அதன் சிறப்புகளையும் மக்கட்பேறு முதலியவற்றை குறிக்கும்.
இதரக் குறிப்புகள்
சிறு தொண்டருக்கு இவ்வடிவ காட்சி
1.
ஏவலார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும்
பாலன் ஆகிய குமரவேள் நடுவுறும் பான்மை
ஞால மேலுறும் இரவோடு பகலுக்கும் நடுவே
மாலை யானதொன்று அழிவின்றி வைகுமாறதொக்கும்
 – கந்தபுராணம்
2.
தம்மேனி வெண்பொடியால் தண்ணளியால் ஆரூரர்
செம்மேனி கங்கைத் திருநதியேஅம்மேனி
மானே யமுனை; அந்த வாணி நதியும் குமரன்
தானே குடைவேம் தனித்து
திருவாரூர் நான்மணிமாலைகுமர குருபர சுவாமிகள்
 
Image : Internet

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் – முன்னுரை

சிவன் என்ற சொல் சிவந்தவன் என்ற பொருளில் ஆளப்படுகிறது. ஆதி சித்தன், ஆதி தேவன், ஆதி நாதன், ஊழி முதல்வன் என்று எந்தப் பெயர் இட்டு அழைத்தாலும் அது முழுவதும் சிவன் பெயரே ஆகும்.
 
சிவன் பெரும்பாலும் அழித்தல் தொழிலுக்கு உரியவன் என்று கூறப்படுகிறது. அது நிச்சம்தான். ஊழ் வினைகளை அழிப்பவன்.
ருத்ரன், மகாதேவன் சதாசிவம் என்று பல பெயர்களில் அழைத்தாலும் அது வேறு வேறு வடிவங்களையே குறிக்கிறது.
சிவனுக்கான தொழில்கள் 5.
ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளுதல்.
சிவபெருமானின் இருபத்து ஐந்து சிவமூர்த்தங்கள் மகேசுவரமூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
சிவனுக்கான வடிவங்களும் பெயர்களும் எண்ணிக்கையில் வேறுபட்டாலும் சைவ சித்தாந்தக் கருத்துப்படி 25 ஆகும்.
அவையாவன (தருமை ஆதீனம் – சைவ சித்தாந்தப்படி)
  1. சோமாஸ்கந்தர்
  2. நடராஜர்
  3. ரிஷபாரூடர்
  4. கல்யாணசுந்தரர்
  5. சந்திரசேகரர்
  6. பிட்சாடனர்
  7. லிங்கோற்பவர்
  8. சுகாசனர்
  9. சக்திதரமூர்த்தி
  10. அர்த்தநாரீஸ்வரர்
  11. சக்ரவரதர்
  12. திரிமூர்த்தி
  13. ஹரிஹர்த்தர்
  14. தட்சிணாமூர்த்தி
  15. கங்காளர்
  16. காமாரி
  17. காலசம்ஹார மூர்த்தி
  18. சலந்தாரி
  19. திரிபுராரி
  20. சரபமூர்த்தி
  21. நீலகண்டர்
  22. திரிபாதர்
  23. ஏகபாதர்
  24. பைரவர்
  25. கங்காதர மூர்த்தி
ஒவ்வொரு கட்டுரையிலும் இறைவனின் வடிவங்கள் அதற்குரிய ஊர் , சிறப்புகள் போன்ற விஷயங்களை எழுத உள்ளேன்.
‘அவன் அருளாளே அவன் தாள் வணங்கி’  என்பதற்கு ஏற்ப அவன் துணை கொண்டு அவன் பற்றிய வடிவங்களை அவனே அருளட்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

2038 – Love-Anti-Love Pill

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.
சார் எனக்கு 10 மாத்திர வேணும். ஏன்னா நான் அழகா இருக்கேன்னு(அட பிக்காளிப் பயலே..) பல பேர்  சொல்லி இருக்காங்க. நான் 1st year Aero – Z படிக்கிறேன். Areo – B ரெண்டு பொண்ணுங்க, Mechanical – AZ    ஒருபொண்ணு, 2nd year CSE AZ    ஒருபொண்ணு, 3 year ECE- C ல ரெண்டு பொண்ணுங்க, Final year IT ல ரெண்டு பொண்ணுங்க, Passed out CSE – H ல மூணு பொண்ணுங்க அழகா இருக்காங்க. அவங்களுக்கு குடுக்கணும்
2.
Pre KG Students.
1 : டேய் மச்சான் எனக்கு 5 anti love tablet சொல்லுடா.
2 : ஏண்டா என்னடா ஆச்சு.
1 : பின்ன என்னடா நயந்தாரா, சமந்தா, அஞ்சலி யாருமே திரும்பி கூட பாக்க மாட்டேங்கிறாங்க.
3.
Love/Anti-Love Pill கண்டுபிடித்தவனும் ஒரு நாள் காதலில் தோற்றிருப்பான்.
இப்படிக்கு Love/Anti-Love Pill வாங்க காசில்லாமல் தத்துவம் பேசுவோர் சங்கம்
4.
Lover : டேய் இன்னாடா பேஜார் பண்ர. ரொம்ப பேஸ்ன 8 anti love pill போட்டு உட்டு போய்டே இருப்பேன்.
5.

இந்த மிஷின் புது கண்டுபிடிப்பு சார். Love  சினிமா பாட்டு எழுத 5 tablet சார். அதே மாதிரி anti Love  சினிமா பாட்டு எழுத 5 tablet சார். ரொம்ப சிம்பிள் சார்.

புகைப்படம் : SLKumar

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவிற்கோலம்

தல வரலாறு(சுருக்கம்)/சிறப்புகள் – கூவம்
 
·   சிவன் சுயம்பு மூர்த்தி
·   மூலவர் – தீண்டா திருமேனி
·   இறைவன் மேருவை கையால் வில்லாக பிடித்த தலம் – திரு+வில்+கோலம்
·   சிவன் – காளிக்காக ரக்க்ஷா(காத்தல்) நடனம் ஆடிய இடம்
·   சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகன், வித்யுன்மாலி – துவார பாலகர்கள்
·   கஜபிருஷ்ட விமானம்
·   இயற்கை பேரழிவுகளான மழை, வெள்ளம் வரும் போது சுவாமி வெண்மையாகவும், போர்நிகழும் காலத்தில் செம்மை நிறம் உடையதாகவும் மாறும் அதிசயம் நிகழும்..
·   அம்பாளுக்கு முன் புறத்தில் ஸ்ரீசக்கரம்
·   கூரம்(ஏர்க்கால்) முறிந்த இடமாதலால் இது கூரம். பின்னாளில் மருவி கூவம் என்றானது.
·   பைரவர் – நாய் வாகனம் இல்லாமல் காட்சி 
 
தலம்
கூவம்
பிற பெயர்கள்
கூவரம், திருவிற்கோலம், கூபாக்னபுரி
இறைவன்
திரிபுராந்தகர், சோமாஸ்கந்தர், புராந்தகேசுவரர்
இறைவி
திரிபுராந்த நாயகி, புராந்தரியம்மை
தல விருட்சம்
தனியாக ஏதுமில்லை. நைமிசாரண்ய ஷேத்திரம்
தீர்த்தம்
அக்னி, அச்சிறுகேணி மற்றும் கூபாக்கினி தீர்த்தம்
விழாக்கள்
·         சித்திரைபிரம்மோற்ஸவம்
·         ஆடிபூ பாவாடை திருவிழா
·         சிவராத்திரி
·         ஆருத்ரா தரிசனம்
மாவட்டம்
திருவள்ளுர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை
அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில்,
கூவம் – . பேரம்பாக்கம் வழி,திருவள்ளூர் மாவட்டம்.
பாடியவர்கள்
திரு ஞான சம்பந்தர், கூவப்புராணம்
நிர்வாகம்
திரு ராஜேந்திரன் – 93818-65515
இருப்பிடம்
சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து 9 கி,மீ தூரத்தில் உள்ளது
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   14 வது தலம்.
திரிபுராந்தகர்
 
 
 
திரிபுராந்த நாயகி
 

(இப்பதிகத்தில் 8வது பாடல் இல்லாததால் 5வது பாடலும், 9வது பாடலும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது)
பாடியவர்                     திருஞானசம்மந்தர்
திருமுறை                    3ம் திருமுறை 
பதிக எண்                    023
திருமுறை எண்               5
பாடல்
 
முந்தினான் மூவருள் முதல்வன் ஆயினான்
கொந்துலா மலர்ப்பொழிற் கூக மேவினான்
அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை
சிந்துவான் உறைவிடம் திருவிற் கோலமே 


பொருள்
இறைவன் எல்லாவற்றிக்கும் முற்பட்டவன்.படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் தொழிகளை உடைய மூவருக்கு முதலாவது ஆனவன். கொத்தாக பூக்கும் சோலைகளை உடைய கூகம் என்ற ஊரில் உறைபவன். அந்தி வானத்தில் தோன்றும் பிறை சந்திரனை தன் தலையில் சூடியவன். அடியவர்களுடைய வினைகளை முழுவதுமாக நீக்குபவன். அவன் உறையும் இடம் திருவிற்கோலம் ஆகும்.
* * * * * * * * * * * * * * * * * * * *
பாடியவர்                     திருஞானசம்மந்தர்
திருமுறை                    3ம் திருமுறை 
பதிக எண்                    023
திருமுறை எண்               9
பாடல்
 
திரிதரு புரம்எரி செய்த சேவகன்
வரியர வொடுமதி சடையில் வைத்தவன் 
அரியொடு பிரமனதாற்ற லால் உருத்
தெரியலன் உறைவிடம் திருவிற் கோலமே
பொருள்
இறைவன் முப்புரங்களை அழித்து தேவர்களைக் காத்தவன். வரிகள் உடைய பாம்பினையும் சந்திரனையும் தலையில் தரித்தவன். தங்களது கர்வத்தால் தங்களை பெரிதாக்கிக் கொண்டதால் ப்ரம்மா மற்றும் திருமால் இவர்களால் காணமுடியாதவன். இப்படிப்பட்ட இறைவன் வீற்றிருக்கும் இடம் திருவிற்கோலம்.
கருத்து
திருதரு – வானத்தில் பறந்து திருந்து கொண்டிருந்த; அட்டவீரட்டானத்தில் ஒன்று – திரிபுர தகனம்
சேவகன் – சிவன் எளிமையானவன் என்பதைக் குறிக்கிறது.
வரி அரவோடு – வரிகள் உடைய பாம்பு(மிகுந்த நஞ்சு உடையது)

புகைப்பட உதவி : தினமலர்

Loading

சமூக ஊடகங்கள்

2038 – DNA

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)
DNA library

உங்க library-ல  எவ்வளவு samples இருக்கு
20000
அடச்சே, என்னவோ 1000000 இருக்குற மாதிரி பேசறயே.

* * * *  
* * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * 

You really can change your DNA
மச்சான் கவலப் படாத இதெல்லாம் ஒரு பொண்ணா, விடு. என் ஃப்ரண்டு ஒரு டாக்டர், அவன்ட போவோம். ஒரே ஒரு DNA change தான். அப்புறம் அந்த பொண்ண மறந்துடலாம்.

* * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * *
DNA doesn’t lie
டேய் ஏண்டா, டென்சனா இருக்கே,
என் பொண்டாட்டி ஊருக்கு போய்டான்னு சந்தோஷமா இருந்தேன். அவ வந்த உடனே DNA டெஸ்ட் பண்ணுணுமாம். நான் சந்தோஷமா இருந்து தெரிஞ்சுடுமா?

 * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * *
மச்சான், நீ உண்மையான டாக்டர் தானே?
அதுல உனக்கு என்னடா சந்தேகம்.
நீ சொன்னேன் தானே அந்த 23க்கும் 24க்கும் இடையில இருக்கிறDNA- மாத்தி வச்சேன். அதுக்கு அப்புறம் கோவப்பட மாட்டேன்னு சொன்ன. ஆன அப்படி நடக்லயே.
எதுக்கும் எண்கணித மேதைக்கிட ஒரு வார்த்தை கேட்டுடுவோமா?

* * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * *

யோவ், சொன்னா கேளுயா, நீ வேல இல்லாதவன். உனக்கு 20 வயது வேற ஆயிடுத்து.  உனக்கு எப்படி DNA insurance பண்ணமுடியும்.

Image : Internet

Loading

சமூக ஊடகங்கள்

குப்பாச வாழ்க்கை

அவசர அவசரமாக பொத்தேரி புகை வண்டி நிலையத்தில் இருந்து கிண்டிக்கு பயணச் சீட்டுப் பெற்றேன். அடுத்த வண்டி 12.36 என்று எழுதி இருந்தது. கடிகாரத்தில் மணி பார்த்தேன்.
12.53. அப்பாடா புகைவண்டி சீக்கிரம் வந்துவிடும்  என்று அவசர அவசரமாக ஒடினேன்.
1.23க்கு புகைவண்டி வந்தது.
ஒரு நிகழ்வினை எதிர்பார்ப்புகள் இல்லாமல் பதிவு செய்ய எண்ணம் உண்டானது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பயணம் செய்பவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.
குழந்தைகள்பெரும்பாலும் பெரியவர்கள் ஏதாவது சொல்லிவிடுவார்கள் என்று பயத்துடன் பயணிக்கிறார்கள்.
கல்லூரிமாணவர்கள்அவர்கள்உலகத்தில்அவர்கள்
வயதானவர்கள்கவலைகளோடுபயணிக்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பெரும்பாலானவர்கள் இரண்டு  mobile  வைத்திருக்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கல்லூரிவயதுக்காரர்கள்  பெரும்பாலும் Temple run  விளையாடுகிறார்கள் அல்லது FB பார்க்கிறார்கள்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் நடுத்தர வயது உடையவர்கள் ‘நீ என்ன அப்பா டக்கரா’ வகையரா பாட்டுக்களைக் கேட்கிறார்கள். புகைவண்டி இரைச்சலை தாண்டி பாட்டு வெளியே கேட்கிறது.
 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இன்னைக்கு புதன் கிழகை வேற பார்ட்டி இல்ல. 12.5 லட்சத்துக்கு கேக்கிறான். திங்க கிழமை ரிஜிஸ்ட்ரேஷன் வச்சிக்கலாம்.பார்ட்டிய முடிச்சிடு.எனது பக்கத்து இருக்கைக் காரர். (நேரே போய் சொல்லி வந்திருக்கலாம்)
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
திருநங்கைகளின் கைத்தட்டல் ஓசை ஒரே விதமாக இருக்கிறது. பணம் கொடுப்பவர்களை மனமாற வாழ்த்துக்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பெரும்பாலான பொருள் ஏற்பவர்கள்(பிச்சைக்காரகள் என்று அழைக்க மனம் விழையவில்லை) பாத்திரம் ஒற்றை நாணயம் மட்டும் கொண்டிருக்கிறது. சிலர் பாடி பொருள் கேட்கிறார்கள். சிலர் ஏதுவும் பேசாமல் கேட்கிறார்கள். அவர்களின் பாத்திரம் நிரம்புவதே இல்லை. அதுவே மிகப் பெரிய வலி உண்டாக்குகிறது
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பெண்மணிகளே வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம். மாதம் Rs.30000 என்ற விளம்பரம் பெரும்பாலான இடங்களில் தென்படுகிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மிக அதிகமாக கசங்கிய ஆடைகளை உடையவர்கள் நுழைவு வாயில் அருகிலே அமர்ந்து விடுகிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பூர்விகா மொபைல் விளம்பரத்தில் இருக்கும் ஸ்ரீதிவ்யாவை சிலர் ஓரக் கண்ணால் பார்க்கிறார்கள். சிலர் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இரண்டு பேர் இருக்கையில் மற்றும் ஒருவர் நகர்ந்து கொள்ளச் சொல்லி இடம் கேட்டால் தி. நகரில் இருக்கும் பத்து க்ரௌண்ட் இடம் கேட்டது போல் முறைக்கிறார்கள்.
* * * * *
சில குழுக்கள் புகைவண்டியில் கதவருகே நின்று selfie எடுத்துக் கொண்டிருக்கிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மச்சான் அந்த மஞ்ச கலர் மைனாவ பார்தா த்ரிஷா மாதிரி இல்ல.
போடா டேய், த்ரிஷா எல்லாம் பாட்டி அவள போய் கம்பேர் பண்ரியே. சொல்லுவது ஆசை அஜித்(ஹா ஹா)
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தாய்மை உடையவர்கள் மிக அதிக கனமான இதயத்துடன் பயணிக்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கனத்த மௌனத்துடனே பெரும்பாலான பயணம் தொடர்கிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இலக்கை அடைந்த பின் வேறொரு பயணத்திகு தயாராகி விடுகிறார்கள்.
குப்பாசவாழ்க்கைநிலைஅற்றவாழ்வு
நன்றி : கந்தர் அலங்காரம்
புகைப்படஉதவி : Karthik Pasupathi

Loading

சமூக ஊடகங்கள்

ஜகத்பதி

நேற்று காலை
நகரின் பிரதான இடம் அது. தொகுப்பு வீடுகளும் தனி வீடுகளும் அமைந்திருக்கும் பகுதி.
பிளாட்பாரம் வழியாக பயணம்
பிளாட்பாரத்தில் மலம் கழிக்கப் பட்டிருந்தது.
மனுஷனா இல்ல மாடா இவனுக, இப்படி இருந்தா எப்படி  நடக்கறவன் நடப்பான்‘.
நேற்று மாலை
அந்தி சாயும் பொழுதுவாகனத்தில் பயணம்
கண் அற்றவன் ஒருவன் குச்சியை வைத்து நடந்து கொண்டிருந்தான்.
சார், சார்பார்த்து போங்க, இடிச்சிக்காதிங்க
ரொம்ப நன்றி சார்
உங்க பேரு என்னாங்க?
ஜகத்பதி
அது என்னாங்க அப்படி ஒரு பேரு
வடக்குத்தி சாமிங்க. நான் காசி போயிருந்தப்ப அங்க இருந்தவங்க எல்லாம் சொன்னாங்க. அதாலெ எம் பேர அப்படி மாத்திக்கிட்டேன். அதாவது உலகத்திற்கு அதிபதியாம்.
உட்காருங்க சார், நீங்க எங்க போவணும்ணு சொல்லுங்க இறக்கி விடறேன்‘,
தனக்கான நாளின் முடிவில் ஜகத்பதி.அப்போது மணி மாலை 6.30
எங்கியாவது இறக்கி விடுங்க சார், நான் தூங்கனும்‘, ஜகத்பதி
எத்தனை நாளா இந்த பென்சில் பேனா, ரேஷன் காடு விக்கிறீங்க‘,
எனக்கு கண்ணு தெரியாம போனதில் இருந்து‘, ஜகத்பதி
என்ன ஆச்சு உங்களுக்கு‘, அவன்
உடம்பு சரியில்லன்னு டாக்டர்ட போனேன். அவரு ஊசி போட்டார். அப்புறமா கொஞ்ச நால்ல ருந்து கண்ணு தெரியல‘, ஜகத்பதி
உங்களுக்கு சொந்த ஊர் எது‘,
குன்னூர் பக்கங்க‘, ஜகத்பதி
இங்க எப்படி வந்தீங்க‘,
ரயில்ல தான். நான் எம். இங்கிலிஷ் லிட்ரச்சர் படிச்சிருக்கிறேங்க‘, ஜகத்பதி. வார்த்தைகளில் நிதானமான கத்தி சொருகல்.
ஏன் நீங்க வேலைக்கு போகலையா‘, அவன்
சர்டிபிகேட் எல்லாம் பஸ்ல தொலைஞ்சு போச்சுங்க‘, ஜகத்பதி. கத்தி இன்னும் எடுக்கப்படாமல் ரத்தம்.
சாப்பிடீங்களா
டீயும் பன்னும் சாப்டேன்‘ – ஜகத்பதி.
சார் ராத்திரி சாப்பாடு பத்தி கேட்டேன்
அதெல்லாம் சாப்டா ராத்திரி வயத்தை கலக்கும் சார்‘- ஜகத்பதி. மெல்லிய இளம் சூடான மைசூர் பாகினை தட்டினில் கொட்டி, கத்தியால் நறுவிசாக நறுக்கப்பட்டதைப் போல் வார்த்தைகள்.
காலையும் மதியமும்?’
ஒரு நாளைக்கு 80ரூ வருமானம் வரும் சார். காலைக் கடனுக்கு 5ரூ சார். குளியலும் காலைக்கடனும் அப்படீன்னா 10ரூ சார். அதுல எப்படி எல்லா வேளையும் சாப்பிட முடியும்‘  – ஜகத்பதி. வார்த்தைகளில் துப்பாக்கி சூடு குறிபார்த்து.
இங்க எறங்கிங்க
ரொம்ப நன்றி சார்‘, ஜகத்பதி
இன்று காலை.
ஜகத்பதியை இறக்கி விட்ட இடத்தின் வழியாக செல்ல நேர்ந்தது. அப்போது பிளாட்பாரத்தில் மலம் கழிக்கப் பட்டிருந்தது.

புகைப்பட உதவி :  R.s.s.KClicks

Loading

சமூக ஊடகங்கள்

படைப்புகளின் வழியே பயணம்

நினைவுகளை திரும்பி பார்க்க வைத்த தீபக்கிற்கு நன்றி.

எனக்கான பயணம் பல மனிதர்களால் பக்குவப்படுத்தப் பட்டிருக்கிறது என்பதே நிஜம்.

எனது 8ம் வகுப்பு என்று நினைவுபாரதி பற்றிய கட்டுரையில்என்று புதுக்கவிதை பாடி இருப்பார் என்று எழுதி இருந்தேன். எனது ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

அந்த கால கட்டங்களில் பட்டினத்தார் பாடல்களை எனது தாத்தா கற்று தந்து இருந்தார்கள்.

எனது 10ம் வகுப்பில் பாடம் கற்றுத் தந்த திரு. ரங்க ராஜன் அவர்கள் ஒருமுறை பிரபந்தம் ஓதினார்கள். (பச்சைமா மலை போல் மேனி..)

எனது 11 மற்றும 12 வகுப்புகளில் கம்பன் கவி இசைச் செல்வர் புலவர் திரு இராம பத்திரன் அவர்கள் தமிழ் குறித்து மிக அழகாக விளக்கங்களையும், வழிவங்களையும் கற்றுத் தந்தார்கள்.

எனது கல்லூரிக் காலம் என்னை மிகவும் செதுக்கியது.
மதிய இடைவேளைக்குப் பிறகு, கரும்பலகையில் நிச்சயமாக ஒரு கவிதை இடம் பெற்றிருக்கும். அப்போது எழுதப்பட்டவை கவிதை அல்ல என்றும் ஒரு கவிதைக்கான கட்டுமான அமைப்புகள் இல்லை என்றும் இப்போது தோன்றுகிறது.

ஒரு முறை திரு. வீரமணி அவர்கள் எங்கள் கல்லூரிஆண்டு விழாவிற்கு வந்திருந்தார்கள். அப்போது கல்லூரி புத்தகத்தில் எனது கவிதை இடம் பெற்றிருந்தது. (தன் எதிர் காலம் கணிக்கத் தெரியா ஜோதிடன் மற்றவர்களுக்காக மரத்தடியில்). அவர்கள் அக் கவிதையினை மிகவும் பாராட்டினார்கள்.

தோழிஉன்னுடைய கவிதைகளில் நிறைய பிழைகள் உள்ளன. அதுமட்டும் அல்ல அதில் செறிவு இல்லை. பக்தி இலக்கியம் படித்துப்பார். புரியும். (இது இன்று வரை தொடர்கிறது)

சுமார் 10 வருட காலம் படைப்பு என்று ஒருவரி கூட எழுதாமல், படித்தல் மட்டும் தொடந்தது
உத்தேச வாசிப்புகள்
அசோகமித்திரன்,இந்திரா பார்த்தசாரதி,எஸ். வைத்தீஸ்வரன் எஸ்.ராமகிருஷ்ணன்((பெரும்பாலான படைப்புகள்)) .நா.சு,கரிச்சான் குஞ்சு, கலாப்ரியா,கல்யாண்ஜி, கி ராஜநாராயணன், கு. அழகிரிசாமி கு..ரா, சா.கந்தசாமி, சி.சு. செல்லப்பா சுஜாதா சுந்தர ராமசாமி,ஜெயகாந்தன்,ஞானக்கூத்தன்,தி. ஜானகிராமன்,தேவதச்சன்,.பிச்சமூர்த்தி, நகுலன்,பிரபஞ்சன் பிரமிள்,புதுமைப்பித்தன்,மகாகவி பாரதியார் மனுஷ்யபுத்திரன்,மாலன்,ராஜ மார்த்தாண்டன்,,லா.. ராமாமிருதம்((பெரும்பாலான படைப்புகள்))வண்ணதாசன் வண்ணநிலவன் வல்லிக்கண்ணன் விக்ரமாதித்யன் நம்பி ,வெங்கட் சாமினாதன், பாலகுமாரன்((பெரும்பாலான படைப்புகள்)), இந்திரா சௌந்தர்ராஜன், ராஜேஷ் குமார், ராஜேந்திர குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா மற்றும் பலர்
மனைவி : உங்களுக்கு கவிதை எழுத தெரியுமா?
சுந்தர்: சிறிதளவு எழுதுவேன்.
மனைவி : உங்கள் கவிதைகளை தாருங்கள், நான் பத்திரிக்கைகளுக்கு அனுப்புகிறேன்.
எனது தோழன் மற்றும் உறவினர் சரவணன் : அண்ணே, நீங்க கவிதை எல்லாம் நல்லா எழுதுறீங்க, இதை ஒரு ப்ளாக் ஆரம்பித்து அதில் போடலாம் அண்ணே. வேணும்ணா, புகைப் படமும் சேத்துக்குங்க.

எழுத ஆரம்பித்த பின் பார்வையாளர்கள் சுமார் 3000. CBCக்கு பின் சுமார் 15000
இங்கு (CBC) பலருடைய எழுத்துக்களைக்(தமிழ் மட்டும்) கண்டு பிரமித்து போயிருக்கிறேன். பிரசன்னா, மதி, ரவி PS , முத்து, கோபால கிருஷ்ணன், கணேஷ், தீபாஐயர், காயு வெங்கட்வெகு சிலரை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன்.

இவை எல்லாவற்றிற்கும் மேல் எனது குருநாதருக்கு மிகவும் கடமைப்பட்டவன்


எனக்கான எல்லாப் படைப்புகளும் இன்னும் நிறைய கற்க வேண்டும் என்ற உந்துதலையே ஏற்படுத்துகின்றன. அதனால்தான் படைப்புகளின் வழியே பயணம் தொடர்கிறது.

புகைப்பட உதவி : SLKumar

Loading

சமூக ஊடகங்கள்

அபயாம்பிகை சதகம்

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன், பெற்றோர் செய்த புண்ணியத்தால் ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு  கிருஷ்ணசாமி என்று பெயர் இட்டனர்.

சிறு வயதிலே பெற்றோரை இழந்தார் கிருஷ்ணசாமி.

ஒரு முறை அவரது அழுகுரல் கேட்டு அம்பிகை வந்தாள். அமுது ஊட்டினாள். ஆறுதல் படுத்தினாள். அவ்விடம் அகன்றாள்.

ஒருமுறை கோவிலில் தன் சன்னதிக்கு அழைத்து சென்று மறைந்தாள்.

ஒரு முறை அர்த்த ஜாம வழிபாட்டை முடித்து வரும் போது, கால் இடறி விழுந்தார். விழும் போது ‘அம்மா அம்மா’ என்று அலறினார்.

அன்று முதல் அர்த்த ஜாம வழிபாடு முடிந்த உடன், யாரும் இல்லாமல் கைவிளக்கு மட்டும் தொடந்து வந்து கொண்டிருந்தது. இதனை கண்ட ஊர் மக்கள் ஆச்சரியப்பட்டனர்.

தன் நிலை குறித்து வருந்தி ‘உன்னை எப்படிப் பாடுவது’ என்று புலம்பினார்.
‘நீ பாடு, பாட்டு தன்னால் வரும் ‘ என்று உத்திரவிடுகிறாள் அம்பிகை.
உள்ளம் உருகி பாடிய பாடல்களே ‘அவயாம்பிகை சதகம்’. மொத்தம் 100 பாடல்கள்.

இவருக்கு திருமணம் நடைபெற்றது, ஆனால் இல்லறம் ஆன்மீகம் சார்ந்த சாக்த வழிபாடாகவே இருந்தது. ஊர் மக்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒரு அர்த்த ஜாம வழிபாட்டிற்குப் பின் ஜோதியில் கலந்தார்.

கனிந்து கனிந்துன் றனைப்பாடிக் கசிந்தே இருகண் புனல்பெருகக்
காது உபயம் உனதருளாம் கதையைக் கேட்க உனதடியார்
இனந்தான் உறவாய் மனம்புதைய எந்த நாளும் அவர் இருந்த
இடத்தை இருதாள் சுற்றிவர இரவும் பகலும் நினதருளை
நினைந்த படியே சிந்தைசெயும் நெறியை உதவி எனைக்காப்பாய்
நித்யா னந்தப் பழம் பொருளே நிமலி அமலை புகழ்விமலி
வனைந்த சடலத் தொழில்உனது அடிக்கே இதமாய் அருள்புரிவாய்
மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத்தாயே.


பச்சை முழுப்பொன் னிறமுடனே பளிங்கு பவள முடன்நீலம்
பருத்த மேக முடன்ஆறாய்ப் பரவி யிருக்கும் பசுங்கிளியே
அச்ச மறவே அதன்மீதில் அருண வுதய ரவிகோடி
அகண் டாகார ரூபமதாய் அமர்ந்த சிவமோ கனமாதே
செச்சை யதன்மேல் அணிச்சிலம்புஞ் சிறுகிண் கிணித்தண் டைகளொலிக்கச்
சிவனோ டிருக்குங் கொலுமுகத்தைச் சிறியேன் காண அருள்புரிவாய்
வச்ச உனது பொருள்எனக்கு வரத்தாற் கருத்தில் உரைத்தருள்வாய்
மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத் தாயே

பாடல்கள் மிக அழகான தமிழில் இருக்கின்றன. சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் என்பதால் மிகப் பெரிய விளக்க உரைகள் தேவை இல்லை. ஆனால் அப்பாட்டின் கருத்துக்கள் மிக ஆழமானவை.

பாடல்கள் அனைத்தும் ‘மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத் தாயே’ என்றே முடிகின்றன.

உலக அன்னையின் அனுபவங்களை உணர்ந்தவர்கள் எவ்வாறு மீள முடியும்.

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – 11 – பற்றுக் கணக்கு

சொந்த ஊர் பற்றி நினைத்தாலே சுகம் எனில் அதைப்பற்றி எழுத வேண்டும் எனில்
மற்ற ஊர்களுக்கு இல்லாத ஒரு பெருமை மாயூரத்திற்கு உண்டு. அதுஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமாஎன்பதே. இது மாயூர மனிதர்களுக்கே உண்டான கர்வம். காவேரி தண்ணீர், கும்ப கோணம் வெத்திலை, புகையிலை மற்றும் மிகச் சிறந்த அக்கப்போர்கள்
அப்போதுஎனக்கு சிறுவயது.(இப்போது மட்டும் என்ன. இப்போதும் அப்படித்தான்)
தாத்தா ஸ்ரீராம் சைக்கிள் கம்பெனியில் கணக்குபிள்ளையாக  வேலை பார்த்து வந்தார். சிறு வயதில் இருந்தே அவருக்கு மாலை டிபன் உண்ணும் பழக்கம் உண்டு.
தாத்தாவுக்கு மயூரா லாட்ஜில் கணக்கு உண்டு. தினமும் சாப்பிட்டு விட்டு அவரே தனது நோட்டில் எழுதி விடுவார்கள். மாதம் பிறந்ததும் கணக்கு செட்டில் ஆகி விடும்.
அப்போதுமணிகூண்டுபக்கத்தில் வரும் போது சாம்பார் வாசனை வரும்.(சுமார் 200 மீட்டர் தூரம்). பெரும் வியாதிஸ்தர்கள் உள்ளே வரக்கூடாதுஎன்று பலகை வேறு
இன்னைக்குசாயங்காலம் பூரி சாப்பிட்டேன். நல்லா இருந்துது. நாளைக்கு உன்னையும் அழச்சிகிட்டு போரேன். இதழ்கள் புன்னகைக்கும்தும்பைப்பூவினைப்போன்ற ஒரு புன் சிரிப்பு. அப்பா எத்தனை பளீர்
ஆயி (தற்போது வழக்கு ஒழிந்து கொண்டிருக்கும் ஒரு அருமையான சொல்அம்மா என்ற பதத்தில் வரும் பாட்டி)
ஆயி : உங்களுக்கு இதே வேல, புள்ளைகள் கிட்ட இத வந்து சொல்லிகிட்டு.
யாரும் அற்ற ஒரு மதிய வேளையில் தாத்தா இறந்து போனார்கள்.
அவருக்குப் பின்  அவருடைய பெட்டியினை(எத்தனை பொக்கிஷம்) திறந்தோம். ஒரு சில பேப்பர்கள், சில பேனாக்கள் இத்யாதிகள். கூடவே மயூரா லாட்ஜ் கணக்கு பேப்பர்.
அன்றைய தேதியில் ரூ 80 பாக்கி இருந்தது.
ஒரு மாலைப் பொழுதின் பின்   பொழுதினில் நானும் எனது தந்தையும் மயூரா லாட்ஜ் சென்றோம்.
கல்லாவில்ஒரு அழகாக ஒரு மனிதர். வெள்ளை சட்டை, விபூதி மற்றும் குங்குமம்.( அப்பா எத்தனை அழகு)
முதலாளி: என்ன வேணும்?
அப்பாநான் தங்கவேல் பையன். அப்பா தவறிட்டாங்க. அவங்க கணக்கு எழுதி வைத்திருந்தார்கள். ரூ 80 பாக்கி இருக்கிறது. அத குடுக்க வந்தோம்.
தீர்க்கமான ஒரு பார்வை. வினாடி மௌனம்.
முதலாளிஅவர் எனது நீண்ட கால வாடிக்கையாளர். அதோட மட்டும் இல்ல அவர் எனது நண்பரும் கூட. மீக நீண்ட நாள் பழக்கம் உண்டு. இன்னைக்கு வரைக்கும் அவர் கணக்கில் தவறே வந்தது இல்லை. அந்த நல்ல மனிதருக்காக நானே அந்த செலவை ஏத்துக்கிறேன். நீங்க கொடுக்க வேண்டாம்.
உண்ட பிறகு வீசி எறியும் உணவுப் பண்டங்களின் உறைகளில் சில உணவுத் துகள்கள் ஒட்டியிருக்கும். அப்படித்தான் காலம் வீசி எறிந்த நிகழ்வுகளில் இன்னும் நினைவுகள் ஒட்டி இருக்கின்றன.

புகைப்பட உதவி :  Mahendiran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

2038 – Moon & high speed internet



(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)


News : Moon to get high-speed internet

1,
ஹலோ, கஷ்டமர் கேரா(எவனோ நம்ம ஊர் காரன் தான்), எங்க area 3 பேர் இருக்கோம். Net connection சரியா வரலை. எப்ப சரி பண்ணுவிங்க.
2.
ஹலோ, கஸ்டமர் கேரா, நீங்க speed 662 mbps சொன்னீங்க, ஆனா 661.99231521 தான் வருது. எப்ப சரி பண்ணுவீங்க
3.
நண்பர் 1 : எங்க வீட்ட internet connection சரியாவே வரல. ஆகல. FB update செஞ்சா 0.002313sec delay ஆகுது. எப்ப சரி பண்ணுவீங்க
4,
கஸ்டமர்சார் எங்க இருக்கீங்க, எப்ப வந்து சர்வீஸ் பண்ணுவீங்க.
என்சினியர்: சார், இதோ moon ஆர்பிட் கிட்ட வந்துட்டோம். இன்னும் 0.29323 வினாடியில்வந்துடுவோம்.
கஸ்டமர் நண்பரிடம் : இவிங்க இப்பத்தான் moon ஆர்பிட் கிட்ட வந்து இருக்காங்க. எப்ப சரி பண்ணி நாம எப்ப படம் பாக்குறது.
5.
Sales engineer Managerரிடம். சார், நாம மோசம் போயிட்டோம். Opposite party  ‘எங்களிடம் broad band connection வாங்குபவர்களுக்கு ஒரு குடம் தண்ணீர் இலவசம்’ board னு போட்டு இருக்கான் சார்’. அதான் சார் அவ்வளவு கூட்டம்.

Loading

சமூக ஊடகங்கள்

அரைஞாண் கயிறு அணிவது ஏன்?

அரைஞாண் கயிறு அணிவது ஏன்?

ஆன்மீகம்எல்லாரும் கட்டும் போது உனக்கு மட்டும் என்ன கேள்வி?

அறிவியல் :
1. பொதுவாக ஆண்களுக்கு குடல் இறக்கம் ஏற்படும். இதை தடுப்பதில் அரைஞாண் கயிற்றின் பங்கு மிக அதிகம்.

2. ஆண்களுக்கு  கால மாற்றத்தால் பொதுவாக விதைப் பைகள் இறக்கம் ஏற்படும். அரைஞாண்  கயிறு கட்டி கோமணம் () லங்கோடு கட்டும் போது இது தடுக்கப்படுகிறது. இதனாலே மலட்டுத் தன்மை என்பது போன தலைமுறையில் மிகக் குறைவாகவே இருந்தது.

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

கர்மத்தை அனுஷ்டிப்பதால் ஒருவன் சொர்க்கத்தையும், ஞானத்தை அனுஷ்டிப்பதால்  ஒருவன் மோட்சத்தையும் அடைய முடியும்.
இதை போதிப்பதில் உண்டாகும் வேறுபாடுகளூம் பிரிவுகளும் என்ன?

கர்மத்தை போதிப்பது வேதம்
ஞானத்தை போதிப்பது வேதாந்தம்
வியாசரின் சிஷ்யரான ஜைமினி செய்தது கர்ம சூத்திரம். இது கர்மம் என்பது பிரதானம். அதை மறுத்து வியாசர் செய்தது வேதாந்த சூத்திரம். இது ஞானம் என்பது பிரதானம்.
வியாசரது சூத்திரத்திற்கு பலர் விளக்கம் தந்திருக்கிறார்கள். ஸ்ரீகண்டாச்சாரியார், சங்கராச்சாரியார், பண்டிதாச்சாரியார், இராமானுஜாச்சாரியார் மற்றும் மத்துவச்சாரியார்.
இவர்களில் முதல் மூவரும் சிவனை சிவபிரமானம் உள்ளவர்கள். மற்றவர்கள் விஷ்ணு பிரமானம் உள்ளவர்கள்.
இவர்களின் விளக்கங்கள்
ஸ்ரீகண்டாச்சாரியார்சமவாதி
சங்கராச்சாரியார்விவர்த்தவாதி
பண்டிதாச்சாரியார்ஐக்கியவாதி
இராமானுஜாச்சாரியார்  – விசிஷ்ட்டாத்துவைதி
மத்துவச்சாரியார்துவைதி
இதில் முதல் மூவரும் பதி, பாச விசாரணையில் பேதப்பட்டாலும் சிவனைப் பரம்பொருள் என்று கொண்டதால் அவர்கள் சைவர்கள் என்று பேசப் படுகிறார்கள். என்றாலும் ஸ்ரீகண்டாச்சாரியார் ஸ்வாமிகளே சைவச்சாரியார் என பிரசித்தி பெற்றிருக்கிறார்கள்.
இது தவிர ஆயுர் வேதம், அர்த்த வேதம், தனுர் வேதம் மற்றும் காந்தர்வ வேதம் என்ற வகைகளும் உண்டு. இவைகள் கர்ம காண்டங்களோடு கூடி பயன் தரத் தக்கவை ஆகும்.

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – 10 – மாலைப் பொழுதின் மயக்கத்திலே

பல ஆயிரம் முறை கேட்ட பிறகும் மாறாமல் இருக்கிறது அந்தக் குரலில் உள் ஒலிந்திருக்கும் வலிகள், அழுத்தங்கள், காயங்கள், சொல்லொண்ணா துயரங்கள்.
பெண்ணுக்கான மன வலிகள் எப்போழுதும் தனித்தே இருக்கின்றன.
ஒரு அழகிய வீணையின் இசையுடன் பாடல் ஆரம்பமாகிறது.
கண்ணதாசன்வரிகள் ஆரம்பம் ஆகின்றன.
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி (மாலைப்பொழுதின்)
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி
மாலைப் பொழுது பெரும்பாலும் மயக்கம் தருவதாகவே இருக்கும். நாளுக்கான முடிவின் தொடக்கம் அல்லவா. அப்போது கனவு காணுவதாக தோழியிடம் உரைக்கிறாள். அச்சம், நாணம் போன்ற குணங்கள் சேர்ந்து தன் மனதில் தன்மையை மாற்றி வார்த்தைகள் அற்றுச் செய்து விடுகிறதாக உரைக்கிறாள்.
இன்பம் சில நாள் துன்பம் சில நாள்
என்றவர்யார் தோழி
இன்பம் கனவில் துன்பம் எதிரில்
காண்பதுஏன் தோழி
இன்பமும்துன்பமும்கலந்தே வாழ்வு. அதைப் போன்றே வாழ்வு அமைகிறது என்று என்னிடன் உரைத்தவர் யார்?. கவிஞனின் கற்பனை இங்கு மிக அழகாக விளக்க்கப் பட்டிருக்கிறது. இன்பம் நிஜமற்ற கனவிலும், துன்பம் நிதர்சமான உண்மையிலும் தான் காண்பதாக உரைக்கிறாள்.
மணம் முடித்தவர் போல் அருகினிலேஓர்
வடிவு கண்டேன் தோழி
மங்கை என் கையில் குங்குமம் தந்தார்
மாலையிட்டார் தோழி
வழி மறந்தே நான் வந்தவர் நெஞ்சில்
சாய்ந்துவிட்டேன்தோழி
அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே
மறந்து விட்டார் தோழி
தனக்கான காந்தர்வ விவாகம்நடந்து விட்டதை தெரிவுக்கிறாள். அவர் என்னை மணம் முடித்தது போல் அவரின் வடிவம் கண்டேன். மங்கையான என்னிடம் குங்குமம் தந்தார், மாலையிட்டார்.இவைகள் பெரும்பாலும் கணவர்கள் செய்யும் காரியம் என்பதால் அதைக் குறிப்பிடுகிறாள். இதனால் நான் செல்லும் (வாழ்க்கை) வழியை மறந்துவிட்டேன்அவரிடம்அடைக்கலம்ஆனேன். அப்போது மறவேன் மறவேன்  என்று கூறி மறைந்து விட்டார் என்கிறாள். (வார்த்தைகள் இரு முறை கூறப்படும் போது அது சத்தியம் ஆகிறது, இவ்வாறு சத்யம் செய்து மறந்து விட்டதைக் குறிப்பிடுகிறாள் தலைவி)
கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன்
கணவர் என்றார் தோழி
கணவர் என்றால்அவர்
கனவு முடிந்ததும்
பிரிந்ததுஏன் தோழி
இளமையெல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவும்அறியாமல்முடிவும்தெரியாமல்
மயங்குதுஎதிர் காலம்
மயங்குதுஎதிர் காலம் ((துக்கடா)இசைஞானிக்கு பிடித்த வரிகள்
இப்படி கனவு வாழ்வில் வந்தது யார் என்று கேட்கிறாள். அனைத்து பதில்களும் உரைக்கப் படுகின்றன.
கொஞ்சு தமிழின் அழகியல் விளையாடத் துவங்குகிறது. இளைமை வெறும் கனவாகவே இருக்கிறது அதுவும் மறைந்திருக்கிறது. அறிவு தெளிவு அறியாமல் இருக்கிறது. முடிவும் எடுக்கவும் முடியாமல் இருக்கிறது. இவ்வாறான நிலையில் எதிர் காலம் மயக்கம் தருவதாக இருக்கிறது என்பதை உரைக்கிறாள்.
இடை இடையே வரும் வரும் இசை அந்த வலிகளை இன்னும் அதிகப்படுத்துகிறது.
(தத்துவார்தகமாக பார்த்தால் ஜீவாத்மா, பரமார்த்தாவை அடையத் துடித்தலை வெளிப்படுத்தும் வார்த்தைகளாக கொள்ளலாம்)
இப்பாடலைக் கேட்டு ஈரத் தலையனையுடன் உறங்கிய பல பெண்களை எனக்குத் தெரியும்.

யாருமற்றஇரவில் தனிமையில் இப்பாடலை ஒருமுறை கேட்டுப்பாருங்கள். மனதில் வலிகள் எல்லாம் ஒரு பாடலாக உருப்பெற்றிருப்பதை அறியலாம்.
இப்பாடல்புகைவண்டிப் பயணத்தில்யாசம் விரும்பி கேட்டுச் செல்லும் கண்கள் அற்றவனில் பாத்திரத்தில் உருளும் ஒற்றை நாணயமாய் வரிகள் உறுத்துவதை உணரமுடியும்.
ஏனெனில்வலிகள் அனைவருக்கும் பொதுவானவை தானே.

Loading

சமூக ஊடகங்கள்

2038 – Galaxy and Universe

2038 – Galaxy and Universe

(இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.
இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)






1
வீட்ல ரொம்ப கஸ்டம்மா, 2 கேலக்சி சுத்தம் பண்ணித்தரேன், 50 ரூ சேத்துக்குடும்மா

2
2014 – The most current estimates guess that there are 400 billion galaxies in the Universe

ரெண்டு காப்பி டம்ளர் தான் சுத்தம் பண்ணமுடியும். நான் இன்னும் 500 மில்லியன் கேலக்சி போய் பாத்திரம் கழுவணும்.

3
2014 – A Dying Galaxy Near the Milky Way
என்னெடி  இந்த மாசம் இன்னும் $500000 சேத்து கேட்கிறே.
என்னம்மா செய்யறது, போன மாசம் ஒரு கேலக்சி செத்துப்போச்சி, அந்த வேலை போயிடிச்சி.
4
அம்மா, 5:01:0.000035 மேல வேலை செய்ய முடியாது
ஏண்டி,
எம் புள்ளைங்களை கேலக்சி Zoo க்கு கூட்டிகிட்டு போகணும்.
5
2014 – Luminosity – the amount of energy that it puts out (luminosity = brightness x 12.57­ x (distance)2­). Conversely, if you know a star’s luminosity, you can calculate its distance.
அம்மா, அந்த கேலக்சி வெளிச்சத்த கொஞ்சம் கொற அம்மா, கண்ண கூசுது.

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

வேதசிவாகமவியல்
பதியினது உபதேசம் பற்றி விளக்கும் வகையில் இருக்கும் உபதேசங்கள். இது உலகத்தின் இயல்புகளையும், ஆன்மாக்களையும் அது பற்றி நிற்கும் பாசத்தை பற்றியும் விளக்கும்பிறகு அப்பாச இயல்பில் இருந்து விலகுவதற்கான வழியையும் கூறும்.
 
இவைகள் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்று வகைப்படுத்தப்படுகிறது. (இவற்றிற்கான விளக்கங்களுக்கு நாம் செல்லவில்லை)
 
இவ்வேதங்கள் இரண்டு காண்டங்கள் உடையது. கர்ம காண்டம் மற்றும் ஞான காண்டம்.
 
இவற்றுள் கர்ம காண்டம்(செய்த வினையின் விளைவு) அவற்றை மாற்ற ஜோதிடம் போன்ற புண்ணிய கர்மங்களை அறிந்து சொர்க்கத்தை விரும்பி செய்யப்படுவது)
 
ஞானகாண்டம்உலகம், உடல், உயிர் போன்ற நிலையாமைத் தத்துவங்களை கண்டு, தன்பற்று நீங்கி முக்தி அடைதலுக்கு உரிய உண்மை ஞானத்தை உணர்த்துவது.

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

இவ்வாறு அந்த ஈஸ்வரன் சர்வ சுதந்திரத்துடன் இருக்கிறார். இதனை விளக்குவோம்.

சுதந்திரம் என்பது தன்னாலும் பிறராலும் தனக்கும் தடை இல்லாமல் இருத்தல். சீவன்கள் கன்மானுபவம் கூடி அதை அனுபவிக்க உரியவர்கள். வரம்பிற்கு உட்பட்ட அறிவு தொழில் உடையவர்கள். இவ்வாறு அவர்களுக்கு விதிக்கப்பட்டவைகளை முடித்தும், அவைகளை கெடும்படியாக தடுத்தும் செய்வதால் தனக்கு மேல் கர்த்தா இல்லாமல் அவர் சுதந்த்ரத்துடன் செயல்படுகிறார்.



அவ்வாறு செயல்படும் ஆன்மாக்கள் தனது குற்றம் நீங்கி குணப்படுதல் நிகழும். இதனை விளக்குவோம்.

சித்துப் பொருளாகிய ஆன்மாக்கள் தனது குற்றத்தை தானே நீக்குதல் ஆகா. தனுக் கரணங்களைக் கொடுத்து ஈஸ்வரன் தனது குற்றங்களை உணர வைக்கிறான். இவ்வாறு சிவாகமங்களை அறியும் ஆன்மாக்கள் அதிலிருந்து குற்றம் விலகி சுகிக்கும்.

இத்துடன் சித்தியல் நிறைவு பெறுகிறது.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!