மகேசுவரமூர்த்தங்கள் 1/25 சோமாஸ்கந்தர்

 
வடிவம்
இறைவனான சிவனுக்கும், இறைவியாகிய பார்வதிக்கும் இடையே முருகப் பெருமான் வீற்றிருக்கும் திருக்கோலத்தை குறிப்பிடுவதே இது
அடர்ந்த திருக்கோலம். இடது கால் மடித்து, வலது கால் தொங்கவிட்டு.
நான்கு திருக்கரங்கள்
பின் இரு திருக்கரங்களில் மான், மழு.
முன் இரு திருக்கரங்களில் அபய முத்திரை, வரத முத்திரை
அம்பிகைஎதிர் மறை கால் மடித்து
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
  • திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்
  • காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்
  • குமரக்கோட்டம்
  • காமாட்சியம்மன் கோயில்
  • தென்காசி காசி விஸ்வநாதர் கோயில்
  • திருக்கேதீஸ்வரம்இலங்கை
  • திருக்கருகாவூர்
  • திருக்கள்ளில்
சிறப்புகள்
இல்லற வாழ்வினையும் அதன் சிறப்புகளையும் மக்கட்பேறு முதலியவற்றை குறிக்கும்.
இதரக் குறிப்புகள்
சிறு தொண்டருக்கு இவ்வடிவ காட்சி
1.
ஏவலார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும்
பாலன் ஆகிய குமரவேள் நடுவுறும் பான்மை
ஞால மேலுறும் இரவோடு பகலுக்கும் நடுவே
மாலை யானதொன்று அழிவின்றி வைகுமாறதொக்கும்
 – கந்தபுராணம்
2.
தம்மேனி வெண்பொடியால் தண்ணளியால் ஆரூரர்
செம்மேனி கங்கைத் திருநதியேஅம்மேனி
மானே யமுனை; அந்த வாணி நதியும் குமரன்
தானே குடைவேம் தனித்து
திருவாரூர் நான்மணிமாலைகுமர குருபர சுவாமிகள்
 
Image : Internet

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *