
பாடல்
பிறையுட் கிடந்த முயலை எறிவான்
அறைமணி வாட்கொண் டவர்தமைப் போலக்
கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார்
`நிறையறி வோம்` என்பர் நெஞ்சிலர் தாமே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – மெய்யறிவு அற்றவர்களின் மனப்பாங்கினை உரைக்கும் பாடல்.
பதவுரை
`சந்திரனிடத்து உள்ள முயலையாம் வெட்டுவோம்` என்று சொல்லி, ஒலிக்கின்ற மணிகட்டியுள்ள வாளையெடுத்து உயர உயர வீசுபவர் போல, அறிவில்லாதவர் நீல மணிபோலும் கறுத்த கண்டத்தையுடைய சிவனை அடையும் நெறியை உணர மாட்டாமலே தாமே மெய்ப்பொருளை முற்ற அறிந்த நிரம்பிய ஞானிகள் போலத் தாம் அறிந்தன சிலவற்றைக் கூறி உண்மை ஞானியரை இகழ்வர்.
விளக்க உரை
- ஞானியர்களிடத்தில் குறையாகக் காண்பவை யாவும் உண்மையில் குறை ஆகாமை என்பதை உணர்த்தும்.
#அந்தக்கரணம் #அமுதமொழி #பத்தாம்_திருமுறை #திருமந்திரம் #திருமூலர் #திருமுறை #எட்டாம்_தந்திரம் #புறங்கூறாமை