காதலுடன் காதல்…

எல்லா வீட்டிலும் ஒரு எலி எப்பொழுதும் மாட்டிவிடுகிறது – என் வீடு தவிர்த்து. (இன்னைக்கு ஒரு புது மெனு செய்திருக்கிறேன் ) 
——————————————————————————————-
கைகள் உணவினை தயார் படுத்திக் கொண்டிருக்கும்.
சாப்பாடு நல்லா இருக்கா??
???
வாய தொறந்து சொன்னாத்தான் சாப்பாடு செய்ய ஆசயா இருக்கும்.

??
சாப்பாடு நல்லா இருக்கு(மாறுதலுக்காக – வேறு வழி)
நம்ம வூட்ட தவிர எல்லா வீட்டு சாப்பாடும் நல்லா இருக்கும். அப்படி இருக்கு நாக்கு. இது பக்கத்து வீட்டு சாம்பார்.

பெண்களுக்கான உலகில் என்றைக்கும் ஆண்களுக்கு அனுமதி இல்லை.

——————————————————————————————-
நிகழ்வு 1 – அன்னம் ப்ராணனுக்கு சமம். அன்னமே உயிருக்கு ஆதாரம். (வேதம் – புத்தகம்)
நிகழ்வு 2 – 4 வாய் சாப்பாடுக்கு 40 ரூசி கேக்குதா
 
(சம்பவங்கள் யாவும் கற்பனையே )
——————————————————————————————————————————————————————-
மனைவி : உங்களுக்குன்னு ஒரு முடிவு வச்சிருங்க, யாருக்காகவும் எப்பவும் அத மாத்தாதீங்க.
மனைவி (வேறுவகை) : உங்களுக்குன்னு ஒரு முடிவு வச்சிருக்கீங்க, அத மாத்திக்கலன்னா என்னா வேல அது.

என்னலே நடக்குது.

——————————————————————————————————————————————————————-
மனைவி – எப்பவோ ஒரு நாளைக்கு சத்யவான் சாவித்ரி படம் போடரான் டிவில. நிம்மதியா படம் பாக்க விடுறீங்களா? 
——————————————————————————————————————————————————————-
ஒரு விஷயம் இருவிதமான நிகழ்வுகளில் (எதிர்மறையாய்)
மனைவி – ஏன் கத்ரிங்க. கொஞ்சம் அமைதியா இருங்க.
மனைவி – எது சொன்னாலும் பேசாம இருந்தா என்ன அர்த்தம்.

என்ன கொடும சார் இது? 

——————————————————————————————————————————————————————
Click by : Gayu Venkat

Loading

சமூக ஊடகங்கள்

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 1

கந்தர் அலங்காரம்

நிலைலையாமைத் தத்துவம்

1.
வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே. 18

விளக்கம்
வடிவேலோனை வாழ்த்தி – வடிவேலனை வாழ்த்தி
வறியவர்கென்றும் – வறியவர்களுக்கு
நொய்யிற் பிளவேனும் – மிகக் குறைந்த அளவு
பகர்மின்கள் – பகிராதவர்கள்
வெய்யிற்கு ஒதுங்க உதவா – உதவாது என்பது துணிபு.
இவ் வுடம்பின் வெறு நிழல் போல் – இந்த உடம்பின் நிழல்
கையிற் பொருளும் உதவாது – கையில் இருக்கும் பொருள் உதவாது
காணும் கடை வழிக்கே – இவைகள் கடை நாள் வரையினில் உதவாது.

பொருள்
வடிவேலனை வாழ்த்தி, வறியவர்களுக்கு மிகக் குறைந்த அளவு பகிராதவர்கள் பொருள்கள்,கடைசி நாள் வரையினில் இந்த உடம்பின் நிழல் வெய்யிற்கு ஒதுங்க உதவாது போல உதவாது.

கருத்து
நொய்யிற் பிளவேனும் – அரிசி உடைபடும் போது அதில் கிடைக்கும் மிக சிறிய அளவு உணவு நொய்.  அதில் மிக சிறிய அளவு கூட கொடுக்காதவர்கள். (யாவருக்கும் உண்ணும் போது ஒரு கைப்பிடி என்ற திருமந்திரம் இங்கு நினைவு கூறத் தக்கது.
காணும் கடை வழிக்கே – காதற்ற ஊசியும்….. வாரது காணும் கடை வழிக்கே  என்ற பட்டினத்தாரின் பாடல் நினைவு கூறத் தக்கது.

2.

கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலயத்தே
வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோய்
ஊழிற் பெருவலி யுண்ணவொட் டாதுங்க ளத்தமெல்லாம்
ஆழப் புதைத்துவைத் தால் வருமோநும் மடிப்பிறகே. 20

விளக்கம்
கோழிக் கொடியன் – அடி பணியாமல்
குவலயத்தே வாழ நினைக்கும் மதியிலி காள் – இந்த உலகத்தில் வாழ நினைக்கும் அறிவு அற்றவர்களே
வல்வினை நோய் – வினையாகிய நோய்
ஊழிப் பெருவலி – ஊழ் வினையில் காரணமான பெரும் வலி
அத்தம் – செல்வம் எல்லாம்
ஆழப் புதைத்து – ஆழப் புதைத்து வைத்தால்

பொருள்
கோழிக் கொடியை கொடியாக கொண்டிருக்கும் அவனது தாளினைப் பணியாமல்  இந்த உலகத்தில் வாழ நினைக்கும் அறிவு அற்றவர்களே, வினையாகிய நோய்யும், ஊழ் வினையில் காரணமான பெரும் வலியும் சேர்ந்து வருகையில் ஆழப் புதைத்து வைத்த செல்வம் அடுத்த பிறவியிலும் வருமோ(வராது என்பது துணிபு).

கருத்து
இறைவனை தலைவனாகவும், உயிர்களை தலைவியாகவும் வைத்துப் பாடுதல் மரபு. எனவே கோழிக் கொடியன் (சேவல் ஆண் – கோழி பெண்).
வல்வினை நோய் –  நோய் வலி தரக்கூடியது. அஃது ஒத்தே வினைகளும். மிக அதிக வினைகளின் காரணமாக வல்வினை
ஊழிப் பெருவலி – ஊழிப் பெருவலி  யாவுள என்ற குறள் இங்கு நினைவு கூறத் தக்கது.
அத்தம் – அத்தம் எல்லாம் குழைக்கும் என்ற அபிராமி அந்தாதி நினைவு கூறத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும்

கந்தர் அலங்காரம்

கந்தனை, முருகனை, வடிவேலனை, சண்முகனை, கார்த்திகேயனை எப்படி பெயரிட்டு அழைத்தாலும் அழகு என்று பொருள் வரும் கடவுளை பாடல் வரிகளால் அழகு செய்து அலங்காரம் செய்யும் வரிகள்.

காப்புச் செய்யுளையும் சேர்த்து 108 பாடல்கள்.

கீழ் கண்ட தலைப்புகளில், தலைப்புக்கு 2 பாடல் என்று எழுத உள்ளேன்.

நிலைலையாமைத் தத்துவம்
தன் நிலை குறித்து புலம்பல்
சிவன்/பெருமாளின் மருமகன்
கம்பீரம்
தத்துவம்
காட்சி

நிலைலையாமைத் தத்துவம் தொடக்க நிலை
நிலைலையாமைத் தத்துவம் என்பது தன் நிலை குறித்து புலம்பல் ஏற்படுத்தும்.
அது சிவன்/பெருமாளின் சிந்தனைகளை ஏற்படுத்தும்.
சிந்தனைகள் கம்பீரம் ஏற்படுத்தும்
அதன் மூலம் தத்துவம் பிறக்கும்
காட்சி நல்கும்.

திருவருள் முன்னின்று நிற்கட்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

மார்கழிக் கோலம்

மார்கழிக் கோலம் எதற்கு.

ஆன்மீகம்
மார்கழி மாதம் பீடு உடைய மாதம். சைவத்திலும், வைணவத்திலும் அது பற்றி மிகவும் சிறப்பாக சொல்லப் பட்டிருக்கிறது. தேவர்களின் துவக்க நாள். அதனால் அதைக் கொண்டாடுகிறோம்.

அறிவியல்
1. மார்கழி மாதத்தில் அதிக அளவு ஆக்ஸிஜன் விடியற் காலையில் வெளிப்படும். அதை சுவாசிப்பதால் உடற் பிணிகள் நீங்கும்.

2. இறை வழிபாட்டிற்கு செல்வதால் மற்றவர்களோடு கலந்து பழக வாய்ப்பு வரும். இதனால் நீண்ட நாள் மனக் கசப்புகள் விலகும்.

3. இந்தக் காலங்களில் சிறு சிறு விலங்குகளுக்கு இரை தேடுதல் கடினம். அதை எளிமையாக்கும் வழி. (பூசணிப் பூ – கோல நடுவில்)

Click by : Gayu Venkat

Loading

சமூக ஊடகங்கள்

மற்று நான் பெற்றது..

வடதிருமுல்லைவாயில் எழுதப்பட்ட சுந்தரர் தேவாரம்.

செய்த சபதம் மறந்து சங்கிலி நாச்சியாரை விட்டு திருவொற்றியூர் எல்லையைக் கடந்ததால் சுந்தரர் இரு கண்களையும் இழக்கிறார். காஞ்சிபுரம் செல்லும் வழியில் வடதிருமுல்லைவாயில் வருகிறார்.

இத்திருத் தலத்தில் 10+1 பாடல்கள் பாடுகிறார்.

அனைத்துப் பாடல்களும்  அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே என்று முடிகின்றன.

இதில் ஒரு பாடல் மட்டும் இப்போது.

மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார்? வள்ளலே! கள்ளமே பேசிக்
குற்றமே செயினும், குணம் எனக் கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன்;
செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லை வாயிலாய்! அடியேன்
பற்று இலேன்; உற்ற படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .

இப்பாடல் சாதாரண மனிதனை வைத்து எழுதப் பட்டதாகவே தோன்றுகிறது.

மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார் – எனக்கு கிடைக்கப் பெற்றது யாருக்கு கிடைக்கும்.

வள்ளலே – பெறுபவரின் நிலை அறியாமல் விரும்பிய அனைத்தையும் கொடுக்கக் கூடியவன்.

கள்ளமே பேசிக் குற்றமே செயினும் – என் உள்ளம் கள்ளத் தன்மை உடையது, குற்றம் புரியக் கூடியது.

குணம் எனக் கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன் – இது எனது பிறவிக் குணம். ஆதலால் இன்னும் பல தீமைகள் புரிந்தேன்.

செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லை வாயிலாய் – செருக்கு கொண்டவர்களின் கர்வத்தை திரிபுர தகனமாக(மும் மல காரியம்) செய்தவனே

அடியேன் பற்று இலேன் – பற்றுவதற்கு எதுவும் இல்லாதவன்.

என்னுடைய துயரத்தை களைவாய்.

Loading

சமூக ஊடகங்கள்

சிவவாக்கியர்

தத்துவங்கள் அனைத்தும் நிலையாமை என்ற நிலையில்  உருவாகின்றன.

சிவவாக்கியரின் கீழ்க் கண்ட பாடல் அதை விளக்குகிறது.

பாடல்

வடிவுகண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன் நந்தினால்
விடுவனோ அவனை முன்னை வெட்ட வேண்டும் என்பனே;
நாடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல்லுடல்
சுடலை மட்டும் கொண்டு போய்த் தோட்டிகைக் கொடுப்பரே!

விளக்கம்

அழகிய வடிவம் கொண்ட தான் விரும்பும் ஒரு பெண்ணை மற்றொருவன் விரும்புகிறான் என்றால் அவனை விடுவேனா, அவனை    வெட்டி விடுவேன் என்று கூறுபவன் இருக்கிறான். அவன் எமன் வாயிலில் விழும் போது நாற்றம் கொண்ட இந்த உடல் மண்ணில்  விழும். அதன் பிறகு இந்த உடலை மயானத்தில் இருக்கும் வெட்டியானிடம் கொடுத்து விடுவார்கள்.

இதில் பல கருத்துக்கள் அடங்கி உள்ளன.

அழகிய வடிவம் கொண்ட பெண்ணை விரும்புதல் – இயற்கை. அது காமத்துடன் கூடிய மாயையின் காரியம்.

விரும்புவனை வெட்டிவிடுவேன் – ஆணவம்

இறப்பு தீர்மானிக்கப்பட்டது. எனவே அதில் ஆணவம் கொள்ள எதுவும் இல்லை.

எனவே மும்மல காரியம் கொண்டவனுக்கு முக்தி இல்லை. நிலையற்ற எண்ணம் விடுத்து அஃதாவது மும்மலம் நீக்கி இறைவனை நாடச் சொல்கிறது இப்பாடல்.

Loading

சமூக ஊடகங்கள்

வியாபாரம்

மேற்கு மாம்பலத்தில் பரபரப்பான பகுதியில் ஒரு மாலை வேளை.

ரெண்டு எளநி என்ன வில?
60 ரூவா சார்.

ரெண்டு சேப்பு எளநி குடுங்க.
இந்தாங்க சார்.

‘ரொம்ப வருசமா கட வச்சிருக்கீங்ல போல’

‘ஆமாம் தம்பி’.

‘எளநி ரொம்ப நல்லா இருந்துதுங்க, இந்தாங்க பணம்’

‘இதுல 70ரூவா இருக்கு தம்பி’

‘நல்லா இருந்துன்னு நாந்தான் சேத்துக் குடுத்தேன்’

‘வேண்டாம் தம்பி. யாரும் யார் காசயும் புடுக்க முடியாது சார். கடவுள் புண்ணியத்துல யாவாரம் நல்லா போவுதுங்க. பையன் சிங்கப்பூர்ல இருக்கான். பொண்ணு TCSல வேல பாக்குது. எனக்குதான் தம்பி எங்கயும் போவ புடிக்கல. அதனால இத செஞ்சிகிட்டு இருக்கேன். தம்பி நீங்க கம்புட்டர் கம்பெனியிலா வேல செய்ரீங்க’

‘ஆமாம்’

‘நீங்க தான் தம்பி பாவம், ஒங்களுக்கு மாசத்துக்கு ஒரு தபா தான் சம்பளம். ஆனா பாருங்க எங்களுக்கு தினம் சம்பளம், செலவுனாக்க கூட காசு புரட்டிக்கலாம் பாருங்க’

குடித்த இளநீரின் துவர்ப்பில் இன்னமும் இருக்கின்றன அதற்கான அனுபவமும் தர்மத்துடன் கூடிய வியாபார நோக்கமும்.

 
Click by : RamaSwamy N

Loading

சமூக ஊடகங்கள்

சாக்த வழிபாடும் விஜய தசமியும்

சாக்த வழிபாட்டின் (தேவியை – அம்பாளை) மிக மிக முக்கியமான பண்டிகையாக இந்த நவராத்ரி கொண்டாடப்படுகிறது.

மற்ற வழிபாடுகள் போலவே சாக்த வழிபாட்டிலும் பல வழிமுறைகளும் பல நிலைகளும் உண்டு. (உ.ம் வாரகி உபாசனை முறைகள், ஸ்ரீவித்யா உபாசனை முறைகள்).

புரட்டாசி மாதம் வளர்பிறை முதலாவதாக ஒன்பது நாட்களை நவராத்திகளாக கொண்டாடுகிறோம்.

அரக்கர்களை வென்று வாகை சூடிய நாள் என்பதால் விஜய தசமிக்கு சிறப்பு.

வனவாசம் முடிந்து, அஞ்ஞாத வாசம் (மறைந்திருந்த காலமும் முடிந்து)  தங்களது படைக்கருவிகள் அனைத்தையும் வன்னி மரத்திலிந்து அர்ஜுனனும் மற்றவர்களும் எடுத்தது விஜய தசமி அன்று.

இவ்விடத்தில் அர்ஜுனன் துர்க்கையை உபாசனை செய்கிறான்.

மகா பாரதப் போரில் வெல்ல துர்க்கையை உபாசனை செய்யுமாறு கிருஷ்ணன் பணிக்கிறான். அப்போதும் அர்ஜுனன் துர்க்கையை உபாசனை செய்கிறான்.

இரண்டுமே ஒரு தெய்வத்தை பற்றியது என்றாலும் வெவ்வேறு மந்திரங்கள்.

பல ரிஷிகளும் முனிவர்களும் சாக்க வழிபாட்டிற்குப் பிறகே உன்னத நிலையை அடைந்திருக்கிறார்கள்.

லலிதா சகஸ்ரநாமமும் ஸ்ரீ மாதா என்றே துவங்குகிறது.

அன்னையின் கருணை அளப்பரியது.

Loading

சமூக ஊடகங்கள்

கடவுட் கொள்கை – வாதங்கள் – 4

துக்கடா..
நண்பன் 1 : நான் இன்றைக்கு உன்னிடம் விவாதிக்க வந்திருக்கிறேன்.
நண்பன் 2 : எதைப் பற்றி?
நண்பன் 1 : கடவுள் உண்டா இல்லையா என்று?.
நண்பன் 2 : சரிடா. உன் பெயர் என்ன.
நண்பன் 1 : கணபதி.
நண்பன் 2 : ஆங்கிலத்தில் எப்படி எழுதுவாய்.
நண்பன் 1 :  ganappathi
நண்பன் 2 : பேர் ஏண்டா 37ல வரமாதிரி வச்சிருக்க.
நண்பன் 1 : நான் உங்கிட்ட அப்புறமா பேசறேன்.

*****
திருமந்திரம்

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்துள் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்துள் மறைந்து பார்முதல் பூதம்.

ஒரு அழகான யானை இருகிறது. சில நேரம் கழித்து அது யானை அல்ல சிலை என்ற உணர்வு வருகிறது. அது எதனால் செய்யப்பட்டிருக்கிறது என்பது மறைந்துவிடுகிறது. அழகான யானை என்பதே நினைவில் நிற்கிறது. அதைப்போலவே தனித்தன்மையான ஒப்புவுயர்வு அற்ற என்ற பொருள்படும் பரம் என்பதை பூதங்கள்(பஞ்சேந்திரியங்கள்)  மறைத்துவிடுகின்றன. அவைகளுக்குள்ளும் பரம் என்பது நிறைந்திருகிறது.

முடிவுரை 1 :
கண்டவர், விண்டிலர்..
விண்டவர் கண்டிலர்.
முடிவுரை 2:
இறை அனுபவம் அறியக் கூடியது அல்ல. உணரக் கூடியது.

கடவுட் கொள்கை – வாதங்கள்-3 
கடவுட் கொள்கை – வாதங்கள்-2
கடவுட் கொள்கை – வாதங்கள்-1

Loading

சமூக ஊடகங்கள்

கடவுட் கொள்கை – வாதங்கள்-3

கதை – 1
முன்னொருகாலத்தில் ஒரு ஆசிரமம் இருந்தது. அதில் ஒரு குருவும் சில சீடர்களும் இருந்தார்கள்.
பயிற்சிக்காலம் முடிந்தது.

குரு         : உங்கள் பயிற்சி முடிந்தது.
மாணவன் : உங்களை விட்டுப் பிரிவது வருத்தம் தருவதாக இருக்கிறது.

குரு         : காலம் எல்லாவற்றையும் மாற்றும் வல்லமை உடையது.
மாணவன் : ……

குரு         : இன்று இரவு உங்களுக்கு ஒரு வாழைப் பழம் தருவேன். அதை யாருக்கும் தெரியாமல் உண்டுவிட்டால் உங்கள் அனைத்து பயிற்சிகளும் முடிவுற்று விடும்.

குரு         : நீ எங்கு உண்டாய்.
மாணவன்  : கிணற்றடியில், அப்போது யாரும் இல்லை.

குரு         : நீ எங்கு உண்டாய்.
மாணவன் : மரத்தடியினில் அப்போது யாரும் இல்லை.

குரு         : நீ எங்கு உண்டாய்.
மாணவன் : ஆற்றங்கரை அருகினில். அப்போது யாரும் இல்லை.

குரு         : நீ எங்கு உண்டாய்.
மாணவன் : உண்ணவில்லை.

குரு         : ஏன்?

மாணவன் : நீங்கள் யாருக்கும் தெரியாமல் உண்ணச் சொன்னீர்கள். கடவுள் எல்லா இடங்களிலும் இருப்பவர் என்றும் நீங்கள் தானே பயிற்றுவித்தீர்கள். அப்படி இருக்க நான் எப்படி யாருக்கும் தெரியாமல் உண்ணமுடியும்.
குரு         : நீயே என் பிரதான சீடன்.

எனது தோழமை குறிப்பிட்டதைப் போல் இருப்பு/இல்லை என்பதை பல வழிகளில் விளக்க முற்படலாம்.

ஓளி என்பது இருளின் மறைவு
வெப்பம் என்பது குளிரின் மறைவு

2907 –
உளன் அலன் எனில் அவன் உருவம் இவ் வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் வருவுகள்
உளன் என விலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமை யொடு ஒழிவிலன் பரந்தே

அவன் இருக்கிறான் என்றாலும், இல்லை என்றாலும்  அனைத்தும் ‘அவன்’ என்ற ஒன்றில் அடங்கி இருக்கிறது. அஃதாவது ஸ்தூலமாகவும், சூட்சமாகவும் இருக்கிறான் என்பதே பொருள். இஃது அவனது குணம் ஆகும்.

பலவித வேதங்களும், வேதாந்தங்களும் ஒரு பொருளையே குறிப்பிடுகின்றன்.(உ.ம். ப்ரம்மம், புருடன்)

இதை சிறிது விளக்க முற்படுவோம்.

நாடக்காட்சி ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. அதில் சில அழுகைக் காட்சிகள் வருகின்றன. மனதை உருக்குவதாக இருப்பின் நாமும் அழுகிறோம். எனில் காட்சி மற்றும் பிம்பம் என்ற வேறுபாடு அன்றி மனம் ஒரு நிலை கொள்கிறது.

சாந்தி மந்திர கூற்றுப்படி அவர் நம் இருவரையும் காக்கட்டும்.

மீண்டும் தொடர்வோம்.

கடவுட் கொள்கை – வாதங்கள் -2
கடவுட் கொள்கை – வாதங்கள் -1 

Loading

சமூக ஊடகங்கள்

கடவுட் கொள்கை – வாதங்கள்-2

இக்கட்டுரையின் படி இரு பிரிவுகள் மட்டும் விவரிக்கப்படுகின்றன. கடவுள் மற்றும் கடவுள் மறுப்புக் கொள்கை.

இதில் முக்கியமாக உலகாதாயம் (சார்வாகம்) மட்டும் விவாதப் பொருளாகக் கொள்ளப்படுகிறது. ஏனைய பிரிவுகளான ஆசீவகம், பௌத்தம் மற்றும் சமணம் ஆகியவை விவாதத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இதுவும் தவிர வேத தரிசனங்களான நியாயம் ,வைசேடிகம் , சாங்கியம்,யோகம்,மீமாம்சை (பூர்வ மீமாம்சை),வேதாந்தம் (உத்தர மீமாம்சை) ஆகியவைகளைப் பற்றிய விவாதங்களும் இதில் இல்லை.

மனிதன் 1 : நீ யார்?
மனிதன் 2 : மனிதன்
மனிதன் 1 : நீ எந்த கொள்கையை உடையவன்.
மனிதன் 2 : கடவுள் மறுப்புக் கொள்கை என்பதே என் நோக்கம்.
மனிதன் 1 : எதை வைத்து இக் கொள்கையை கூறுகிறாய்.
மனிதன் 2 : கடவுள் யாவருக்கும் பொது தானே.
மனிதன் 1 : ஆமாம்.
மனிதன் 2 : அப்படி எனில் நீ கண்ட கடவுளை நானும் காண வேண்டும் தானே.
மனிதன் 1 : மௌனம்…
மனிதன் 2 : என்ன பதில் இல்லையா?
மனிதன் 1 : டெல்லி சென்றிருக்கிறாயா?
மனிதன் 2 : இல்லை.
மனிதன் 1 : நீ போகவே இல்லை. கண்ணால் கண்டதும் இல்லை. ஆனால் டெல்லி என்றொரு இடம் இருப்பதை எப்படி நம்புகிறாய்.
மனிதன் 2 : மௌனம்…
மனிதன் 1 : யோசித்து பதில் அளி. அவசரம் இல்லை.

*************************************************************
குழந்தை : என்ன அப்பா இந்த புத்தகம்.
தந்தை    : இது முப்பரிமாண புகைப்படங்கள் கொண்ட புத்தகம்.
குழந்தை : அப்படீன்னா,
தந்தை    : இந்த புகைப்படத்தை எல்லாம் உற்று கவனித்தால் ஒரு படம் தெரியும்.
குழந்தை : எப்படி
தந்தை    : இந்த படத்தை கண்ணுக்கு சிறிது தூரத்தில் வைத்துக் கொள். உற்று கவனி.
குழந்தை : சரி.
தந்தை    : என்ன தெரிகிறது?
குழந்தை : மேஜையும் அதில் பூச்செண்டும்.
தந்தை    : மிகச் சரி.
நண்பர்    : என்னடா ஒன்னும் தெரியல.
தந்தை    : நீதானட, கண்ணால் காண்பது மெய் என்று சொன்னாய். அப்புறம் ஏன் உனக்கு தெரியல.

கடவுட் கொள்கை – வாதங்கள்-1

இதன் தொடர்ச்சி இன்னும் சில நாட்களில்..

Loading

சமூக ஊடகங்கள்

கடவுட் கொள்கை – வாதங்கள்-1

தமிழ் இரண்டாம் பாடம்

மதிப்பெண்கள் – 10*1 = 10

கடவுள் கொள்கை குறித்து கட்டுரை ஒன்று வரைக.

முன்னுரை : கடவுள் கொள்கை குறித்த சில விஷயங்கள் இங்கு குறிக்கப் படுகின்றன.

நிகழ்வு/கதை –  1
முடித் திருத்தும் நிலையம்.
முடி திருத்துபவர் – கடவுள் இல்லை என்பதே என்கருத்து.
வாடிக்கையாளர் – ஏன்?
முடி திருத்துபவர் – ஏன் இத்தனை விஷயங்களையும் பார்த்து சும்மா இருக்கார்.
வாடிக்கையாளர் – மௌனம்.
முடி திருத்துபவர் –  உங்கள் மௌனமே கடவும் இல்லை என்பதை நிருபிக்கிறது.
வாடிக்கையாளர் – நான் ஒன்று கேட்கட்டுமா?
முடி திருத்துபவர் – சரி.
வாடிக்கையாளர் – இந்த ஊரில் முடி திருத்துபவரே இல்லை என நினைக்கிறேன்.
முடி திருத்துபவர் – எப்படி அதான் நான் இருக்கிறேனே.
வாடிக்கையாளர் – அப்படி எனில் ஏன் பல பேர் அடர்ந்த முடியோடும், தாடியோடும் அலைகிறார்கள்.

நிகழ்வு/கதை –  2
இராமகிருஷ்ண பரமஹம்சர் : வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.
பார்வையாளர் : கடவுள் இருக்கிறாரா?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : இருக்கிறார்.
பார்வையாளர் : அப்படி எனில் நான் எப்படி பார்ப்பது?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : சரி நீயார்?
பார்வையாளர் : நான் மருத்துவன்.
இராமகிருஷ்ண பரமஹம்சர் : சரிவா, அறுவை சிகிச்சை செய்ய செல்லலாம்.
பார்வையாளர் : அது எப்படி முடியும். அதற்கு படிக்க வேண்டும், பயிற்சி வேண்டும்.
இராமகிருஷ்ண பரமஹம்சர் : அறுவை சிகிச்சை செய்ய பயிற்சி வேண்டும் எனில், கடவுளை காணவும் பயிற்சி வேண்டும்.

இதன் தொடர்ச்சி இன்னும் சில நாட்களில்..

Loading

சமூக ஊடகங்கள்

வினாயகர் சிலையை கரைப்பு ஏன்?

வினாயகர் சிலையை கரைப்பு ஏன்?

ஆன்மீகம் – முன்பெல்லாம் பெரும்பாலான சிலைகள் குளம் சார்ந்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்டு களிமண்ணால் செய்யப்பட்டன. வேதிப் பொருள்களால் செய்யப்பட்டவை அல்ல.  ப்ரம்மத்திலிந்து தோன்றியவை மீண்டும் ப்ரம்மத்தில் என்பதே அடிப்படை.

அறிவியல் :
1. வினாயகர் சிலையுடன் சேர்த்து பூக்கள் மற்ற பொருள்களையும் குளத்தில் இடுவார்கள். அவைகள் மீன்களுக்கு உணவாகும். மீன்கள் இனப் பெருக்க காலம் மற்றும் வளர்ச்சி அடையும் காலம் இம் மாதம். எனவே பொருள்கள் குளத்தில் இடப்படும்.

2. மீண்டும் குளத்தில் அவை சேர்க்கப்படுவதால் மண் அரிப்பு தடுக்கப்படும்.

மற்றவை :
1. அந்த அந்த பகுதி மக்கள் சிறு வியாபாரம் செய்து பலன் அடைவார்கள்.
2. பால கங்காதர திலகர் சுதந்திர போராட்டத்தில் மக்களை ஒன்று சேர்ப்பதற்காக இவ் விழாவினை சிறப்பாக கொண்டாடத் துவங்கினார்.

Loading

சமூக ஊடகங்கள்

குடிப் பிறப்பு

நான்மணிக்கடிகை  – நான்கு விஷயங்களை சொல்லும். அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து மிக நுட்பமானப் பொருளைத் தரும். நான்கு வித மலர்கள் ஒரு மாலை போல்.

கள்ளி வயிற்று இன் அகில் பிறக்கும்;   மான் வயிற்று ஒள் அரிதாரம் பிறக்கும்; பெருங் கடலுள் பல் விலைய முத்தும் பிறக்கும்;
அறிவார் யார், நல் ஆள் பிறக்கும் குடி?

பொருள் அனைவரும் அறிந்ததே.

கள்ளி போனற செடியில் வாசனை மிகுந்த அகில் பிறக்கும். வாசனை திரவியங்கள் மானின் வயிற்றில் இருந்து பிறக்கும். விலை உயர்ந்த முத்துக்கள் கடலில் இருந்து கிடைக்கும்.நல்ல மனிதர்களின் குடிப் பிறப்பினை எவர் அறியக் கூடும்.

எனவே மனித வாழ்வே மகத்துவம், குடிப் பிறப்பு அன்று.

Loading

சமூக ஊடகங்கள்

2038 – இயந்திர மனிதன்,செயற்கை அறிவு, நரம்புகளின் வலைப்பின்னல்

இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.

இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.

1.
அப்பா ரோபோ : என்னடா, 100 மில்லியன் pages ஒரு செகன்டபடிக்கிற. 2*2 = 4ன்னு தெரியாதா?
2.
 ரோபோ  1 : என்னட்ராபிக்டா இது. இதுக்கு முதல்லஒரு ப்ரொக்ராம் எழுதனும்.
3.
காதலித்தபெண் கைவிட்டதால் ஆண் ரோபோ தற்கொலை.
4.
  ரோபோ  gen xyz – எங்கவீட்ட ஒரு பழைய மாடல்ரோபோ இருக்கு. 2013 மாடல் சார். அத  mercy killing  பண்ண என்ன procedure?
5.
தொகுப்பாளர்  ரோபோ  – யார்பேசிறீங்க.
மனிதன் :  நான் 1993ல்இருந்து உங்க குரல கேக்கிறேன். நீங்க, 12 May 1994 வியாழக்கிழமை கட்டிகிட்டு வந்த பச்ச கலர்பூப் போட்ட சுடிதாரும் சின்னபொட்டும் சூப்பர்ங்க. 14 May 1995 ம் தேதி ரிலீஸ்  ஆன மோக முள் படத்திலிருந்து பாட்டு போடுங்க.
ரோபோ X : மனுஷங்க data  பாத்துமயக்கம் போட்டுடுத்து சார்.
6.
  ரோபோ 1 : நமக்காவது டெய்லி 50 யூனிட் கரண்ட் வேணும். அவனுக்கு 1யூனிட் போதும். அவன்ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறான்.
7
  ரோபோ 1 : ஏன்டா ஓடிவர?
  ரோபோ 2 : என் பொண்டாட்டி ரொம்பகொடும காரியா இருக்காடா. டெய்லி1 யூனிட் கரண்ட் கூட குடுக்கமாட்டேங்கிறாடா?

Loading

சமூக ஊடகங்கள்

இறைவழிபாட்டில் வாசனை மலர்களும் வாசனைப் பொருள்களும்

இறைவழிபாட்டில் வாசனை மலர்களையும், மணம் மிக்க பொருள்களையும் சேர்ப்பது ஏன்?

ஆன்மீகம் –  இறைவனுக்கு உகந்தது. அதனால் மகிழ்வு ஏற்படுகிறது.

அறிவியல் – மணம் மிக்க பொருள்கள் உடலினில் மாறுதல் ஏற்படுத்தும். அவைகளை உணரும் போது நீண்ட சுவாசம் நிகழும். அது இதயத்தின் அனைத்து பகுதிகளிலிலும் நீண்ட காற்றினை செலுத்தும். சுவாசம் சீராவதால் உடல் நிலையில் மாறுதல் ஏற்படும்.

முன் காலத்தில் வாசனைப் பொருள்கள் அனைத்தும் இயற்கையானவை. அதன் மூலப் பொருள்கள் உடலில் மாறுதல்களை ஏற்படுத்தும்.

Loading

சமூக ஊடகங்கள்

அசையா வானவில்

சில பாடல்கள் மழையைத் தூவிச் செல்லும், சில பாடல்கள் வெய்யிலை இறைத்துச் செல்லும்.

சில வானவில்லை விட்டுச் செல்லும்.

அப்படிப்பட்ட பாடல் தான் பட்டாகத்தி பைரவன் படத்தில் வரும் – எங்கெங்கோ செல்லும்’ என்ற பாடல்.

மெல்லிய இசையுடன் ஆரம்பிக்கிறது பாடல்.

கவிதைக்கான முழுவடிவமும் இப்பாடலில்.

நான் காண்பது உன் கோலமே, அங்கும் இங்கும் எங்கும்
என் நெஞ்சிலே உன் எண்ணமே அன்றும் இன்றும் என்றும்

கல்லானவன் பூவாகிறேன் கண்ணே உன்னை எண்ணி
பூவாசமும் பொன் மஞ்சமும்

எதற்காக வாழ்ந்தேன் உனக்காக வாழ்வேன்.

ஒரு மழைக்கால ஃபில்டர் காபி போல,
அழகிய பனிக்காலையில் பூத்திருக்கும் பூக்களின் மேல் பனித்துளி போல,
பவழ மல்லியின் வாசம் போல,
கரை புரளும் காவிரி போல,
விழாக் கால இசை வாசிப்புகள் போல,
கவிதையில் வாசிப்பு அனுபவம் போல

எத்தனை சொன்னாலும் அதனுள் பொருந்துவதாக அமையும் இசையும் வரிகளும்.

அசையா வானவில் என்னுள் இன்றும்.

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

குற்றமற்ற ஒன்றும், இயக்க வல்லமை உடையதும், முற்றும் உணர்ந்த ஒருவன் இருக்க வேண்டும். அவனால் மட்டுமே குற்றம் உடைய ஆன்மாக்களை சரி செய்ய முடியும். (தேர்வு எழுதுவனை கண்காணிக்கும் கண்காணிப்பாளர் போல்). அந்த நிலைக்குப் பெயர் சர்வஞ்ஞத்வம்.

எல்லா பொருள்களை அறிவிக்கவும் அதனை அசைவிக்கவும் அவனால் முடியும் எனவே அவன் சர்வவியாபகன்.

பசுவாகிய தன்னை கட்டுப்படுத்த வேறு ஒரு பதி வேண்டும். அவன் எல்லா காலங்களிலும் (பிரளய காலம் உட்பட) எல்லா காலத்திலும் இருப்பதால் நித்யதத்துவம் உடையவன்.

Loading

சமூக ஊடகங்கள்

பெண் – இளமை துறத்தல்

வந்த சிவனடியார் அமுது உண்டு சென்றார்.

பரம தத்தன் பசியோடு வீடு திரும்பினான். புனிதவதியார் அமுது படைத்தார். அதோடு மாங்கனியையும் படைத்தார்.

மிகுந்த பசியோடு இருந்ததால் அவன் சொன்னான் ‘இன்னொன்றை எடுத்து வந்து இடுக’.  கணவன் மனைவி இருவருக்கும் இரட்டைகள் என்பது பொதுவானது. (இன்பத்திலும் துன்பத்திலும், வாழ்விலும் தாழ்விலும் – திருமண மந்திரம்). இது விடுத்து அவன் தான் மட்டும் உண்ண  நினைத்தது  தவறானது.

புனிதவதியார் திகைத்தார். இறைவனிடம் சென்று வேண்டினார். மற்றொன்று கிடைத்தது. அதனை அவனிடம் கொடுத்தார் புனிதவதியார். இது வரை அறையா சுவையாக இருந்தது. காரணம் வினவினான் பரம தத்தன்.

நடந்ததை விளக்கிச்சொன்னார் புனிதவதியார்.

பரம தத்தன் நம்பவில்லை. அவன் கூறினான். ‘அப்படி எனில் மற்றொன்றை இடுக’.

புனிதவதியார் இறைவனிடம் வேண்டினார். மற்றொன்று கிடைத்தது.

அதைக் கொண்டுவந்து பரம தத்தனின் கைகளில் அதை இட்டதும் அவன் அதை வாங்கினான். வாங்கியதை உணர்ந்ததும் அது மறைந்து விட்டது. பரம தத்தன் திகைத்தான். அவன் சொன்னது ‘மற்றொன்றை இடுக’ என்றுதானே அன்றி அதை தான் உண்ண வேண்டும் என்று சொல்லவில்லை. எனவே இட்ட உடன் மறைந்து விட்டது.

பரம தத்தன் தெய்வத்திற்கு தீங்கு இழைத்து விட்டதாக நினைத்தான். எனவே வியாபார நிமித்தமாக கடல் மார்க்கமாக பயணம் தொடந்தான்.

நம் பயணமும் கடல் மார்க்கமாக தொடர்கிறது.

Loading

சமூக ஊடகங்கள்

2038- ரியல் எஸ்டேட்

1.
சென்னைக்கு மிக அருகில் சுமார் 700 கி.மி (கன்யா குமரியில் இருந்து 10 கி.மி தூரத்தில்) இடம் விற்பனைக்கு

2.
எங்களிடம் திண்டிவனத்திற்கு அருகில் 100 பிளாட் வாங்குபவர்களுக்கு, 1கிராம் தங்கம் இலவசம்.

3.
எங்களிடம் இன்றே அடுக்கு மாடி குடியிருப்புகள் புக் செய்யுங்கள். சரியாக 2063ல் உங்களிடம் வீடு ஒப்படைக்கப்படும்.

4.
இங்க பாருங்க, இது எங்க நாய் கட்டி வைக்கும் இடம். அடுத்த நாய் வாங்குற வரைக்கும் அத வாடகைக்கு விடறோம். வாடகை – 1,00,000/- 100 மாசம் அட்வான்ஸ். புடிக்கலன்னா சொல்லிடுங்க, அடுத்த பார்டி வெயிட்டிங்.

5.
எங்களிடம் அடுக்கு மாடி குடியிருப்பு வாங்குபவர்களுக்கு முதல் மாதம் தினமும் 1லி தண்ணீர் இலவசம்.

Loading

சமூக ஊடகங்கள்