வியாபாரம்

மேற்கு மாம்பலத்தில் பரபரப்பான பகுதியில் ஒரு மாலை வேளை.

ரெண்டு எளநி என்ன வில?
60 ரூவா சார்.

ரெண்டு சேப்பு எளநி குடுங்க.
இந்தாங்க சார்.

‘ரொம்ப வருசமா கட வச்சிருக்கீங்ல போல’

‘ஆமாம் தம்பி’.

‘எளநி ரொம்ப நல்லா இருந்துதுங்க, இந்தாங்க பணம்’

‘இதுல 70ரூவா இருக்கு தம்பி’

‘நல்லா இருந்துன்னு நாந்தான் சேத்துக் குடுத்தேன்’

‘வேண்டாம் தம்பி. யாரும் யார் காசயும் புடுக்க முடியாது சார். கடவுள் புண்ணியத்துல யாவாரம் நல்லா போவுதுங்க. பையன் சிங்கப்பூர்ல இருக்கான். பொண்ணு TCSல வேல பாக்குது. எனக்குதான் தம்பி எங்கயும் போவ புடிக்கல. அதனால இத செஞ்சிகிட்டு இருக்கேன். தம்பி நீங்க கம்புட்டர் கம்பெனியிலா வேல செய்ரீங்க’

‘ஆமாம்’

‘நீங்க தான் தம்பி பாவம், ஒங்களுக்கு மாசத்துக்கு ஒரு தபா தான் சம்பளம். ஆனா பாருங்க எங்களுக்கு தினம் சம்பளம், செலவுனாக்க கூட காசு புரட்டிக்கலாம் பாருங்க’

குடித்த இளநீரின் துவர்ப்பில் இன்னமும் இருக்கின்றன அதற்கான அனுபவமும் தர்மத்துடன் கூடிய வியாபார நோக்கமும்.

 
Click by : RamaSwamy N

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

2 thoughts on “வியாபாரம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *