சொர்க்க வாசல்
வல்லமை தாராயோ
நீண்ட நெடும் தூக்கதிற்கு
தயாரய் மனமும் உடலும்.
எதிர்படும் தலைவலிகள்
என்றைக்குமான தொடர்ச்சியாய்.
வலி பெரியதா, மருந்திடவா
என்கிறாய்.
வலியினை நீக்கும் மருந்தாய்
விரல்களும் உன் வார்தைகளும்.
இன்னும் இருக்கும் வலியை
உரைக்கிறேன் உன்னிடத்தில்.
அடுத்தவங்கள பாடா படுத்தினா
வலி எப்படி போவும்.
வார்தைகளின் முடிவில்
முடிவில்லா பயணம்.
விதிகளை மதித்தல்
பின் நோக்கிய நினைவுகள்
மவுனம் அறிதல்
நாத்திக நம்பிக்கை
அழுகையின் ஊற்றுக்கண்
வீச்சங்கள்
மழை ஒய்விற்கான பின் ஒரு பொழுதுகளில்
நீண்ட தெருக்களில் நெடும் பயணம் உன்னோடு.
இலைகளின் எச்சில்களாய்
எச்சங்களாய் மழைத்துளிகள்.
தரையினில் இருந்து
மேலே எழும்பி
இலைகளின் ஈரத்தை
உதிர்த்து விட்டு
காதலை சொல்லத் துணிகிறேன்.
மாறுதல் கொள்ளும் உடல் மீது
ஏன் இந்த மயக்கம் என்கிறாய்.
உதிர்ந்து விட்ட உயிர்ச் சொல்லின்
முடிவில் துவங்கிய வீச்சங்கள்
வேரிலிருந்து விழுதுகள் வரை.
வாழ்வின் முறைகள்
மிருக பலி
நிலாப் பார்த்தல்
காட்சியும் சாட்சியும்
தேவதையின் அருகில்
புனரபி ஜனனம் புனரபி மரணம்
உன்னை அறிந்த பொழுதுகள்
காலத்தின் சாட்ஷி
ஒரு சிறந்த கணத்தில்
நிலம் பெறப்பட்டது.
கட்டிடம் உருவானது
கணப் பொழுதுகளில்.
அனைத்து பொழுதுகளிலும்
உறவினர் கூட்டம்.
களித்த பொழுதுகளையும்
கவிதை பொழுதுகளையும்
சந்தித்தது அவ்வீடு.
கால மாற்றத்தில்
கரைந்தன காரை சுவர்கள்.
நீண்ட நெடும் பயணத்திற்கு பிறகு
வீட்டின் சுவாசம்
அண்டப் பெருவெளியில்.
காலத்தின் சாட்ஷியாக
கனவுகளையும் கவிதைகளையும்
சுமந்து அவ்வீடு.
கொப்பு விட்ட குரங்கு
நீண்ட நாட்களுக்குப் பின்
நண்பர்களுடன் சந்திப்பு நிகழ்ந்தது.
வாழ்க்கை குறித்த எண்ணங்கள்.
நல்ல உணவிற்காக வாழ்கிறேன்
என்றான் ஒருவன்.
போகங்களை அனுபவிற்பதற்காக வாழ்கிறேன்
என்றான் ஒருவன்.
பொருள் ஈட்ட வாழ்கிறேன்
என்றான் ஒருவன்.
கற்று தெளிவதற்காக வாழ்கிறேன்
என்றான் ஒருவன்.
இறப்பதற்காக வாழ்கிறேன்
என்றான் ஒருவன்.
பதில் பெற்ற பொழுதுகளில்
கொப்பு விட்ட குரங்காய் மனமும் நானும்.