கொப்பு விட்ட குரங்கு

நீண்ட நாட்களுக்குப் பின்
நண்பர்களுடன் சந்திப்பு நிகழ்ந்தது.
வாழ்க்கை குறித்த எண்ணங்கள்.
நல்ல உணவிற்காக வாழ்கிறேன்
என்றான் ஒருவன்.
போகங்களை அனுபவிற்பதற்காக வாழ்கிறேன்
என்றான் ஒருவன்.
பொருள் ஈட்ட வாழ்கிறேன்
என்றான் ஒருவன்.
கற்று தெளிவதற்காக வாழ்கிறேன்
என்றான் ஒருவன்.
இறப்பதற்காக வாழ்கிறேன்
என்றான் ஒருவன்.
பதில் பெற்ற பொழுதுகளில்
கொப்பு விட்ட குரங்காய் மனமும் நானும்.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *