வார்த்தைகளில் பொருள் ஏற்றி விளையாடும் பொழுதுகள் உனக்கும் எனக்கும் புதியவை அல்ல. ‘என்னைப் பிடிக்குமா’ என்கிறாய். ‘மிகவும் பிடிக்கு’ம் என்கிறேன். ‘எனக்காக உன் பெயரை மாற்றிக் கொள்வா’யா என்கிறாய். ‘மாற்றங்கள் அற்றது என் வார்த்தைகள்’ என்கிறேன். ‘நேசித்தலில் மறத்தல் ஒரு பகுதி தானே’ என்கிறாய். ‘உன் பெயர் மறக்கப்படும் நாளில் என் பெயர் பிணம்’ என்கிறேன். கார்காலக் குறிப்புகள் உன் கண்களில்.
இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.
இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம். (நானும் எவ்வளவு நாள் தான் நல்லவனாவே நடிக்கிறது.)
சினிமா ——- 1. சின்ன பட்ஜெட்ல படம் எடுக்கணும். இப்ப மினிமம் பட்ஜெட்னா ஆயிரம் கோடிதான். 2. கமலின் அடுத்த படைப்பு, சதாவதாரம். 2008ல் தசாவதரம் எடுத்தார். தற்போது சதாவதாரம். 100 முக்கிய வேடங்களில். 3. பிரசன்னா ஸ்னேகா – பிரிவுக்குக் காரணம் என்ன? பிரசன்னா ஸ்னேகா மகன் மற்றும் மகள் தீபாவளிக்கு வீட்டுக்கு வந்து ஊருக்கு சென்றார்கள். ஸ்னேகா அவர்களுடன் சென்றுள்ளார். பிரிவு ஏற்படாமல் இருக்க எங்களிடம் மொபைல் வாங்குங்கள்.
வாழ்வாங்கு வாழ்ந்தாலும் வடக்கில் வைத்து உறங்குதல் கூடாது?
ஆன்மீகம்– கைலாச மலை வடக்கில் இருக்கிறது. அதனால் வடக்கில் தலை வைத்து உறங்கக் கூடாது.
அறிவியல் – உடல் முழுவதும், தலை முதல் கால் வரை ஒரு காந்த சக்தி எப்பொழுதும் எல்லோருக்கும் ஓடிக் கொண்டிருக்கும். தலையை வடக்காகவும், பாதங்களை தெற்காகவும் வைத்து அது இயங்குகிறது. வடக்கில் தலை வைத்து உறங்கும் போது, வட புலமும், வட புலமும் அருகினில் வரும். தொடர் உறக்கத்தின் காரணமாக தலைவலி மற்றும் அதிக மன நோய்கள் ஏற்படும்.
சுவற்றின் கூரையினில் ஒட்டியிருக்கும் நட்சத்திரங்களைப் பார்த்தபடி எனக்கு குளிர்காலம் மிகவும் பிடிக்கும் என்கிறாய். வியப்பினால் விழிகள் விரிவடைகின்றன எனக்கு ‘ஒரு போர்வையினில் செல்ல அப்பாவைக் கட்டிக் கொண்டு தூங்கலாம் அல்லவா’ என்கிறாய். அன்று நீட்சிமை கொண்டது எனக்கான இரவு.
பிறந்த குழந்தையை காண வருபவர்களால் அறை நிரப்பப்பட்டிருந்தது. எவர் அறியக்கூடும் அதனையையும் தாண்டி குழந்தையைக் காணவந்த மலடி என்று அழைக்கப்பட்டவளின் கண்ணீர் வலிகளை.
ஆன்மீகம் மஹாலக்ஷ்மி சம்மந்தப்பட்டது. அதனால் தெய்வத்திற்கு மரியாதை தர வேண்டும்.
அறிவியல்
1. The Density for Gold is – 19.3 g. The electrical conductivity of silver at 293°K is 62.9e6 (1/Ωcm); the conductivity of gold is only 48.7e6 (1/Ωcm) (in both cases, e is being used as the ten’s exponent). That means Silver is a better conductivity than Gold.
2. புவி ஈர்ப்பு ஆற்றலுக்கு எதிராக செயல்பட தங்கத்திற்கு ஆற்றல் குறைவு. அது உடலில் மாறுதல்களை ஏற்படுத்தும்.
‘ஏன் இப்பொழுது மழை அடிக்கடி பெய்வதில்லை’ என்கிறாய். வினாக்களோடு என் விழிகள் உயர்வடைகின்றன. ‘காகிதக்கப்பல் செய்யக் கற்றுக் கொண்டேன். விடுவதற்கு நீர் வேண்டும்’ என்று விழி நீரை இறைக்கிறாய். வெப்ப சலனத்தில் இடம் மாறுகின்றன சந்தோஷ நீர் ஓடைகள் வாழ்வின் முழுமைக்கும்.
பரிகாரங்களுக்காக கோயிலை வலம் வருதல் வழக்கமாக இருப்பது ஏன்?
ஆன்மீகம் – எல்லா கோவில்களுக்கும் ஒவ்வொரு விதமான ஆற்றல் இருக்கும். அவைகள் நம்மீது படும் போது நம்மில் செயல் இழந்து இருக்கும் ஆற்றல் வலிமை பெறும்.
அறிவியல் – 1. பழமையான கோவில்களின் சுற்றளவுகள் மிகவும் பெரியவை. நடந்து செல்லுதல் அல்லது வலம் வருதல் என்பது இரத்த ஓட்டதை அதிகப்படுத்தும். 2. முழுமையான சுவாசம் நடைபெறும். அதனால் இதயத் துடிப்புகள் சீராகும்.
3.புதிய மனிதர்களை/பழைய நண்பர்களை சந்திப்பதால் மன நிலையில் மிகப் பெரிய மாறுதல் நிகழும்.
ஆதியில் விசித்திரங்களை ஈனும் பூமியில் நான் விழுந்த போது எனக்கு சிறகுகள் இருந்தன. அப்போது நீர்ப் பரப்பு சலனமற்று இருந்தது. சில பறவைகளுக்கு சிறகுகள் இருந்தன பல பறவைகளுக்கு சிறகுகளில் முட்களும் இருந்தன. பல பறவைகள் சிறகுகள் அற்று. ஏன் இந்த நிகழ்வுகள் என்றேன் அவைகளிடம். மாயையின் தோற்றம் படா இடங்களில் சிறகுகள் இருக்கும்; சந்தோஷ வாழ்வுடன் கோபங்களை வீசியவைகளுக்கும், கோபத்தில் தடித்த வார்த்தைகளை வீசியவைகளுக்கும், சிறகுகளில் முட்கள் இருக்கும்; வாழ்வினை கொண்டாடத் தெரியாதவைகளுக்கு சிறகுகள் அற்று இருக்கும் என்றும் பகர்ந்தன. பதிலின் வசிகரத்தில் ‘எனக்கு என்ன ஆகும்’ என்று வினா ஒன்று எழுப்பினேன் ‘விடை தேடுதல் தான் வாழ்வு’ என்று கூறி அவ்விடம் விட்டு அகன்றன. தொலை தூரத்தில் மேகக் கூட்டங்களின் சாயைகள் நீரினில். அப்போதும் நீர்ப் பரப்பு சலனமற்று இருந்தது.
விடுதலையை விரும்பா இறக்கைகள், காற்று அடித்தால் தான் காசு சிலருக்கு, எதிர் வழியில் தான் காசு பலருக்கு, வீசும் காற்று எங்கும் வெம்மைகள் வயிற்றின் வலி நீக்கும் பொருட்டு.
காதலில் பல வகைகள் உண்டு. பக்தி இலக்கியங்கள் அதனை பெரிதும் பின்பற்றுகின்றன. தன்னை தலைவியாகவும், இறைவனை தலைவியாகவும் இந்த இலக்கிய காதல்கள் போற்றுகின்றன.
திருநாவுக்கரசரின் பின்வரும் பாடல் அதனை நன்கு விளக்குகிறது.
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.
கேட்டு, கண்டு, உணர்தல் அங்கே நிகழ்கிறது. காட்சிகள் விரிகின்றன. தோழியினடத்தில் கேட்கிறாள்.
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் – முதலில் அவனது பெயர் என்ன என்று கேட்கிறாள். மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் – அவனது உருவ அமைப்புப் பற்றி கேட்கிறாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் – அவனது சொந்த ஊர் பற்றி கேட்கிறாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் – பின் அவன் பொருட்டு பைத்தியமாகிறாள்.
இவ்வடிவத்தில் முக்கியமானதொரு விஷயம் ‘கேட்கிறாள்’.’கேட்கிறாள்’ என்ற நிலை தன்னை இழந்த நிலை. காதும் மனமும் வேறு வேறு வேலையைச் செய்கின்றன். காதல் எத்தனை விஷயங்களை செய்கிறது என்ற பட்டியல்.
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அன்னையையும், மற்ற எல்லாவற்றையும் விலக்குகிறாள். ‘நீத்தாள்’ – மீண்டும் திரும்ப முடியாத நிலை. (உ.ம் நீத்தார் விண்ணப்பம் – மாணிக்கவாசகர். அன்னையை எவ்விதத்திலும் விலக்க முடியாது என்பது துணிபு. ஆதிசங்கரர், பட்டினத்தார்)
எல்லா இடங்களுக்கும்/வீடுகளூக்கும் என்று சில ஆசாரங்கள் இருக்கின்றன. இங்கே ஆசாரங்கள் என்பது பழக்க வழக்கங்கள். அதை விட்டு விலகினாள். தன்னை மறந்து விடுகிறாள். தன் பெயரையும் மறந்து விடுகிறாள். இரண்டும் வெவ்வேறு நிலைகள். முதல் வகை குறுகிய காலம் குறித்தது. இரண்டாவது நீண்ட காலம் குறித்தது.
அவனது தாளை சரணடைந்தாள். வாருங்கள் நமது பொக்கிஷங்களை பேணிக்காப்போம்.
ஆதியில் அன்றொரு நாள். எனக்கான குழந்தையாக நீ. ஒரு பெயரிட்டு என்னை அழைக்கிறாயே, வேறு பெயர்கள் இல்லையா என்கிறாய். ஸ்ரீ மாதா, ஸ்ரீ மஹாராக்ஞீ ஸ்ரீ மத்ஸிம்ஹாசனேச்வரீ
.. கோவிந்த ரூபினி. .. .. மகா பைரவ பூஜிதாய .. அம்மா,அப்பாவ பாரேன், பேசிகிட்டு இருந்தார், மயங்கி விழுந்துட்டாரு.
சைவ சித்தாந்தம் பற்றிய சில கருத்துக்களை பகிர இருக்கிறேன்.
சைவ சித்தாந்தம் மிகப்பெரிய ஒரு கடல். இது பற்றி தெரிந்து கொள்ளவும்/தெளிந்து கொள்ளவும் கூடிய ஒரு முன்னுரை மட்டுமே இப்பதிவுகளும் இதன் தொடர்ச்சியான பதிவுகளும்.
த்வைதம் – இருமைப்பற்றி பேசும் அத்வைதம் – -ஒருமைப்பற்றி பேசும் விசிஷ்டாத்வதம் – இருமை ஒன்றாதல் பற்றி பேசும் சைவம் – மூன்றும் அதன் செயல்பாடுகளும் (பதி, பசு, பாசம்) பற்றி பேசும்
பதி – இறைவன் பசு – உயிர்கள் பாசம் – இறைவனுக்கும் உயிர்களுக்கும் உள்ள தொடர்பு.
ஆதி சங்கரர் கருத்துப்படி அறுவகை சமயமாக இருந்தாலும் (காணாபத்தியம் – கணபதி முதன்மை, கௌமாரம் – முருகன் முதன்மை, சௌரம் – சூரியன் சைவம் – சிவன் முதன்மை, வைஷ்ணவம் – விஷ்ணு முதன்மை, சாக்தம்- அம்பாள் முதன்மை ) சைவம் காலங்களுக்கு முற்பட்டது.
இவைத்தவிர பைரவர், வீரபத்திரர் – என அனைத்தையும் சேர்த்து பேசப்படும் தொகுதி – பதி.