மௌனச் சொற்கள்

பஞ்ச பூதக் கவிதைகள் – பெண் தெய்வங்கள் – முன்வைத்து – நிலம்





விடியாத இரவொன்றில்
விழி வைத்து வீதி வழி நடக்கிறேன்.
பாதம் கொண்ட பாதைகள் எல்லாம்
உறங்கிக் கொண்டிருக்கின்றன.
பாதைகள் மயானம் நோக்கி
பயணிக்கின்றன.
சன்னமாய் கொலுசின் ஒலிகள்
சலங்கைகள் ஆகின்றன.
மயானக் கொல்லை மாதேவியே
மனதில் உன்னைக் கொண்டேன்என்கிறேன்.
என்னைக்கண்டவரும் இல்லை
காலின் சிலம்பு சப்தமும் கொண்டவரில்லை
என் பெருங் கோபம் அறிவாயா என்கிறதுகாளி.
ஊழிப் பெரு முதல்வனுடன் நித்திய தாண்டவம்
உயிர் அறும் சேய்களின் முதலும் முடிவுமான வீடு நீஎன்கிறேன்.
பெரு மூச்சு  ஒன்றை விட்டு நகர்கிறது அக்காளி.
காற்றில் தேயாதிருக்கின்றன
சலங்கைகளின் ஒலிகள் மட்டும்.
புகைப்படம்  : காளியாட்டக்_கலைஞர்_சிவபால்

சமூக ஊடகங்கள்

குருஷேத்ரம்

திருமணங்கள் சொர்கத்தில்
நிச்சயிக்கப் பட்டாலும்,
பிரிவுகள் மட்டும்
பூமியில் நிச்சயிக்கப்படுகின்றன.

சமூக ஊடகங்கள்

உணர்வின் வாசனை

பல தேசம் சென்றும்
பல உணவினை ருசித்த பின்னும்
மாறாமல் இருக்கிறது
அம்மாவிடம் அடி வாங்கிய பின்
அழுத படியே
உண்ட உணர்வின் வாசனை.

சமூக ஊடகங்கள்

கடவுளைக் காணல்

மீண்டும் ஒரு முறை
எனக்கும் கடவுளுக்குமான
எண்ண பரிமாற்றம்
உன் வலியை உள் வலியை
உணர்கையின் என்னைக் காண்பாய் என்றார்.
வலி உண்டாக்கி தருணத்தை
விவரிக்க சொன்னார்.
தெருவில் நடந்து செல்பவனை
அப்பா என்று எனது மகள்
முதல் முறையாய் அழைத்ததை
செவிலித் தாய் சொன்ன போது
என்றேன்.
பதில் அளித்த தருணதில்
உண்ர்ந்தேன் கடவுளை.

சமூக ஊடகங்கள்

சந்தோஷத்தின் சாயல்


காய்கறி விற்பவளின்
இடிப்பினில் இருக்கும் குழந்தை
கைகளை ஆட்டியபடி சொன்னது
ஜிங்கிலி ஜிங்கிலி

சமூக ஊடகங்கள்

வாசனைகள்


எப்போதாவது பூக்கின்றன
குறிஞ்சிப் பூக்கள்.
தாயின் மடியினில் இருந்து
தலையசைக்கின்றன சில பூக்கள்.
கைகளை அகல விரித்து
கண்களைக் காட்டி
பயமுறுத்துகின்றன சில பூக்கள்.
முடிவில்லா பயணத்தில்
முழுநீள புன்னகையோடு சில பூக்கள்.
பூக்களின் சிந்தனையில்
பூரணமான வலி வயிற்றினில்
கருமை நிறைந்த இரவுப் பொழுதினில்
எங்கு சென்று தேடுவது
மளிகைக் கடையையும் மருந்துக் கடையையும்
எப்பொதும் பூக்கின்றன
காட்டுச் சாமந்திகள்

சமூக ஊடகங்கள்