வாசம்

பாதணிகளை உதறிவிட்டு
ஓடி வந்து மடியினில் அமர்ந்து
உங்களுக்கு பிடித்தது
ரோஜா வாசமா மல்லி வாசமா
என்ற எனது மகளின் கேள்விக்கு
உன் வாசம் என்றேன்.
வியப்புடனான புன்னகையில்
கடை நாள் வரையிலான வாசம்.

Loading

சமூக ஊடகங்கள்

கவிதையின் தோற்றம்

ஒரு முறை கடவுளை
சந்திக்கையினில்
லட்சிய கவிதைகள்
எப்பொழுது வாய்க்கும் என்றேன்.
காதலித்துப் பார்
கவிதை வரும் என்றார்.
மறுதலித்து மற்ற
வழியினைக் கேட்டேன்.
கணவனாகிப் பார்.
லட்சம் கவிதைகள் வரும் என்றார்.
எழுதப் படாத கவிதைகள்
எண்ணிலி என்றும் பகன்றார்.

Loading

சமூக ஊடகங்கள்

ரோஜா வாசம்

காய்ந்த நினைவோடைகள்
கணப் பொழுதினில்.
இருளின் துணை கொண்டு
நீ என்னை பயமுறுத்திய தருணங்கள்
இன்னமும் வெளிச்சங்களாய்.
ஒற்றை இரவினில் நீ
உதிர்த்து போன ரோஜா வாசம்
அறை எங்கும் சிதறிக் கிடக்கிறது.
நீர் அடித்து நீர் விலகாது.
நீ வீசிச் சென்ற நீரின் துளிகள்
காயாமல் இருக்கிறது
நெஞ்சுக்குள் நினைவுகளாய்.

Loading

சமூக ஊடகங்கள்

தொடரும் நினைவுகள்

என்னுள்ளே எட்டிப் பார்த்தத்
என்றொ கடந்த அனுபவ மேகங்கள்
வழிந்தொடும் ஆறு
அதனுள் குதித்தாடிய நினைவுகள்,
வாய்க்கால் தாண்டி வயல்,
பனியுடன் கூடிய பஜனைப் பாடல்கள்,
பாடல்களை தொடரும்
பட்டாம் பூச்சிகள்
அனைத்தும் தாண்டி….
ஒங்கி ஒலிக்கும்
என்றைக்குமான ஒரு குரல்
‘லீவு நாள்னா இதுதான் வேலை’

Loading

சமூக ஊடகங்கள்

இடமும் பொருளும்


பதில் தேடி புறப்பட்ட
தருணங்களில் எதிர்ப்பட்டார்
என்றைக்குமான கடவுள்.
என்ன வினாக்களோடு பயணம்
என்றார்.
வலிமையானது
காதலா, பசியா என்று
கண்டு உணரப்
புறப்பட்டிருக்கிறேன் என்றேன்.
நீண்ட நெடும் பயணத்திற்கு
பிறகான வழி திரும்புகையில்
ஒன்றில் இடம் பெற வேண்டிய
பெயர் மற்றொன்றில்.


Loading

சமூக ஊடகங்கள்

நரகம் எனில்


கடவுளை உணரத்துவங்கிய
தருணங்களில்
இருமைக்கான வினா எழந்தது.
நரகம் எனில் என்னவென்றென்.
மனைவியின் வார்த்தைகளை
மறுதலித்துப் பார்.
உணர்வாய் பொருள் அதனை
என்று உரைத்து
புன்னகைத்தார்.

Loading

சமூக ஊடகங்கள்

கடை வலி

ஒன்றிற்கும் உதவாது
என்று நினைத்து
பூட்டப்பட்ட
கடைசி தருணங்களில்
உணர்ந்திருப்பார்களா
கதவுகளின் கடைசி வலி

Loading

சமூக ஊடகங்கள்

சிருஷ்டி

ஒன்று
ஒன்று கூடி
ஒன்றானது.
ஒன்று
ஒன்றுமில்லாமல்
ஒன்றானது.

Loading

சமூக ஊடகங்கள்

உணர்வின் வாசனை

பல தேசம் சென்றும்
பல உணவினை ருசித்த பின்னும்
மாறாமல் இருக்கிறது
அம்மாவிடம் அடி வாங்கிய பின்
அழுத படியே
உண்ட உணர்வின் வாசனை.

Loading

சமூக ஊடகங்கள்

மண்ணின் பசி

பசி கொண்ட மனிதனொருவன்
பல்கி பெருகின மனிதர்களிடம்
யாசகம் பெற்றான்.
பொருள் குவிந்த வேளையில்
புலப்படவே இல்லை
வாழ்வுக்கான சூத்திரங்கள்.
பசி கொண்ட பல மனிதர்களை
உண்ட பின்னும்
மாறாமல் இருக்கிறது
மண்ணின் பசி.

Loading

சமூக ஊடகங்கள்

துறவு

எனக்கான குருவினை
சந்திக்கையில் எழுந்தது கேள்வி
எப்பொழுது துறவு வாய்க்கும்.
தன்னை இழத்தல் துறவு.
தகவல் தொழில்நுட்பதில் பணிபுரிவாய்.
தானாய் வாய்க்கும் துறவு
என கூறி இடம் அகன்றார்.

Loading

சமூக ஊடகங்கள்

பிரபஞ்சமும் இயக்கமும்

மலை அளவு
செய் உதவி மறந்து
உளுந்து அளவு
உதவியின்மைக்காக
உறவுகளை சிக்கலாக்கும்
உன்னதமான மனைவி உறவை
என்ன செய்வது என்று
கடவுளிடம் கேட்டேன்.
பிரபஞ்சமும் இயக்கமும்
யாவர்க்கும் பொது என்று
பொருள் உரைத்து கரைந்தார்.

Loading

சமூக ஊடகங்கள்

தருணம்

வீதி வழியினில்
வாகனதில் செல்கையில்
ஒற்றை செருப்பினை
தவற விட்ட தருணத்தில்
குழந்தை என்ன
நினைத்திருக்க கூடும்

Loading

சமூக ஊடகங்கள்

நிஜமும் நிழலும்


எதோ ஒரு கணத்தில்
எனது குரல்
கடவுளுக்கு கேட்டிருக்க கூடும்.
இல்லை எனில் நிகழ்ந்திருக்குமா
இனிய எண்ணப் பரிமாற்றம்.
இல்லை எனில் நிகழ்ந்திருக்குமா
வேதனையற்ற சந்தோஷ சிரிப்புகள்.
இல்லை எனில் நிகழ்ந்திருக்குமா
புன்னகைப் பூக்கள்.
அனைத்தும் தாண்டி
அடுத்த அறையினில்
என் மகளின் படிப்புக் குரல்
‘கிட்டாதாயின் வெட்டன மற’


Loading

சமூக ஊடகங்கள்

சொர்க்கம்


நாத்திகம் பேசி
இருமையை மறுத்து வந்த
காலங்களில்
எங்கிருந்தோ ஓடி வந்து
கழுத்தினைக் கட்டிக் கொண்டு
கன்னத்தில் முத்தமிட்டு
சொர்க்கம் என்றால் என்ன அப்பா
என்ற எனது மகளின் கேள்விக்கு
பதில் அறிந்து புன்னகைத்தேன்.


Loading

சமூக ஊடகங்கள்

வரம்

குழந்தை வரம் கேட்டு
கோட்டம் விட்டு வெளியேறுகையில்
கைகளில் குழந்தைகளுடன்
பிச்சைக்காரி

Loading

சமூக ஊடகங்கள்

கடவுளைக் காணல்

மீண்டும் ஒரு முறை
எனக்கும் கடவுளுக்குமான
எண்ண பரிமாற்றம்
உன் வலியை உள் வலியை
உணர்கையின் என்னைக் காண்பாய் என்றார்.
வலி உண்டாக்கி தருணத்தை
விவரிக்க சொன்னார்.
தெருவில் நடந்து செல்பவனை
அப்பா என்று எனது மகள்
முதல் முறையாய் அழைத்ததை
செவிலித் தாய் சொன்ன போது
என்றேன்.
பதில் அளித்த தருணதில்
உண்ர்ந்தேன் கடவுளை.

Loading

சமூக ஊடகங்கள்

கேள்வியும் பதிலும்


எனக்கும் கடவுளுக்குமான
எண்ண பரிமாற்றத்தில்
பதில் அளிக்க விரும்பா தருணங்களில்
புன்னகைப்பேன் என்று
உடன்பாடு உண்டானது.
நெஞ்சினில் கை வைத்து
வாலிபத்தின் சாயலில்
வாழ்ந்து காட்டுவேன் என்று
சபதமிட்ட மனிதர்கள்
மண்ணில் மறைந்து போனது
குறித்ததுவே என்ற எனது கேள்விக்கு
பதில் கிடைத்தது
மந்தஹாசப் புன்னகை.


Loading

சமூக ஊடகங்கள்

வர்த்தகம்

கட்டப்பட்ட கைப்பேசி கோபுரங்களின்
எண்ணிக்கை குறித்தும்
வர்த்தகம் குறித்தும்
விரிவடைகின்றன முதன்மை செய்திகள்
எவரும் அறியா இடத்தில் செய்திகள்
தேய்ந்து வரும் தேனீக்களின்
எண்ணிக்கை குறித்து


Loading

சமூக ஊடகங்கள்

இளித்த வாயன்


வழி தவறிய நாய் குட்டியாய்
எதோ ஒரு கணத்தில் வந்து சேர்ந்தது
கிழிந்த ரூபாய் நோட்டு
உலகின் நடனம் கண்டு வியக்கும்
பொழுதுகளில்
செவிகளில் செய்தி
‘நெத்தியில எழுதி ஒட்டியிருக்கும் போல
இளித்த வாயன் என்று’

Loading

சமூக ஊடகங்கள்