
எனக்கும் கடவுளுக்குமான
எண்ண பரிமாற்றத்தில்
பதில் அளிக்க விரும்பா தருணங்களில்
புன்னகைப்பேன் என்று
உடன்பாடு உண்டானது.
நெஞ்சினில் கை வைத்து
வாலிபத்தின் சாயலில்
வாழ்ந்து காட்டுவேன் என்று
சபதமிட்ட மனிதர்கள்
மண்ணில் மறைந்து போனது
குறித்ததுவே என்ற எனது கேள்விக்கு
பதில் கிடைத்தது
மந்தஹாசப் புன்னகை.