சைவத் திருத்தலங்கள் 274 – திருமுருகன்பூண்டி

தல வரலாறு(சுருக்கம்) /  சிறப்புகள் – திருமுருகன்பூண்டி

  • முருகநாதசுவாமி சுயம்பு மூர்த்தி
  • சிவன் மற்றும் அம்பாள் இருவரும் மேற்கு நோக்கி திருக்காட்சி. மூலவர் மற்றும் அம்பாள் பீடங்களின் கோமுகமும் வடக்கு நோக்கிய வித்தியாசமான அமைப்பு
  • சூரசம்ஹாரத்தால் உண்டான பாவங்கள் நீங்க முருகப்பெருமான் சிவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டத் தலம்
  • சண்முகநாதர் கையில் வேல் இல்லாமலும், வாகனமான மயிலும் இல்லாமலும் திருக்காட்சி
  • சேரமான் பெருமானின் சிறப்பு விருந்தினராக சென்று பொன்னும் பொருளுடன் திரும்பியபோது கூப்பிடு விநாயகர் கோவிலில் இரவைக் கழித்த சுந்தரரிடமிருந்த பரிசுப் பொருட்களைத் தன் பூதகணங்களை வேடுவர் வடிவில் அனுப்பிக் கொள்ளையடிக்கச் செய்ததால், உதவியை நாடிய சுந்தரரருக்கு சிவன் தான் குடிகொண்டிருந்த இடத்தைச் சுட்டிக் காட்டி உதவினார் விநாயகர்; சுந்தரரரும் அங்கு சென்று  சிவனைத் திட்டிப் பாட அவரது பாடலில் மகிழ்ந்த சிவன் அவரது பொருட்களைத் திருப்பியளித்து ஆசி வழங்கிய தலம்.
  • சிவனார் இருக்குமிடத்தை சுந்தரருக்கு உணர்த்திய ‘கூப்பிடு விநாயகர்’ தனியாக பாறைமேல் திருக்காட்சி (அவிநாசியில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவு)
  • வில்கையில் ஏந்தியபடி வேட்டுவன் கோலத்தில் நிற்கும் சிவபெருமான் சிற்பமும், இதற்கு எதிரில் சுந்தரர் கவலையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும் இரு சிற்பங்கள்; பரிசுப்பொருள்களை பறிகொடுத்த நிலை மற்ரும் பறிகொடுத்த பொருள்களை மீண்டும்  பெற்றநிலை என  இந்த இருநிலைகளைக் காட்டும் வகையில் சுந்தரரின் இந்த இரண்டு சிற்பங்கள்
  • இங்குள்ள தல விருட்டமான மாதவி மரம் எனும் குருக்கத்தி மரம் துர்வாசர் மேலுலகில் இருந்து எடுத்துவந்தது
  • பிரம்மதாண்டவம் என போற்றப்படும் நடராஜரின் தாண்டவ வடிவம்
  • பிரம்மஹத்தி தோஷத்தை போக்கவல்ல தலம்.
  • தலபுராணத்தின் படி பிரம்மஹத்தி தற்போது கோயிலின் வெளியே உள்ள வேம்படி முருகர் சந்நிதியின் அருகே உள்ள சதுரகல்லாக உள்ளது
  • கோயிலுக்கு வெளியே உள்ள பிள்ளையார் கோயிலின் எதிரில் உள்ள பாறையில் உள்ள சிறுகுழியில் 12 வருஷங்களுக்கு ஒருமுறை நீர் பொங்குவது சிறப்பு
  • மாலாதரன் எனும் வேடமன்னன் வழிபட்ட பைரவர் சந்நிதி
  • தலபுராணம் செட்டிப்பாளையம் வாசுதேவ முதலியார் பாடப்பட்டது

 

 

ஓவியம் : Vishnu Ram
தலம் திருமுருகப்பூண்டி
பிற பெயர்கள் மாதவிவனம் , முல்லைவனம் , கந்தமாபுரி
இறைவன் முருகநாதேஸ்வரர், முருகநாதசுவாமி
இறைவி முயங்குபூண் முலையம்மை, ஆலிங்கபூஷணஸ்தனாம்பிகை , ஆவுடை நாயகி , மங்களாம்பிகை
தல விருட்சம் குருக்கத்தி மரம் , வில்வமரம்
தீர்த்தம் சண்முக தீர்த்தம் , பிரம்ம தீர்த்தம் மற்றும் ஞான தீர்த்தம்
விழாக்கள் தை மாதத்தில் வேடுபரி உற்சவம், மாசி மாதத்தில் 13 நாட்கள் பிரம்மோற்சவம், மகா சிவராத்திரி , திருக்கார்த்திகை , மார்கழி ஆருத்ரா தரிசனம் , ஐப்பசி அன்னாபிஷேகம் , கந்தசஷ்டி , தைப்பூசம் , நவராத்திரி , வைகாசி விசாகம்
மாவட்டம் திருப்பூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை ௦6:௦௦ முதல் 12:3௦ வரை
மாலை ௦4:௦௦ முதல் ௦8:௦௦ வரைஅருள்மிகு திருமுருகன்நாதசுவாமி திருக்கோயில்,
திருமுருகன்பூண்டி – 641652. திருப்பூர் மாவட்டம்.
04296-273507, 94434-59074
வழிபட்டவர்கள் அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர்
பாடியவர்கள் சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர் திருப்புகழ்
நிர்வாகம்
இருப்பிடம் அவினாசியில் இருந்து சுமார் 5 கிமீ தொலைவு, திருப்பூரில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் வழியில் சுமார் 8 கிமீ தொலைவு, கோயம்புத்தூரில் இருந்து சுமார் 43 கிமீ தொலைவு
இதர குறிப்புகள்

 

பாடியவர்          சுந்தரர்
திருமுறை        7
பதிக எண்         49
திருமுறை எண் 5

பாடல்

தயங்கு தோலை உடுத்துச் சங்கர
   சாம வேதமோதி
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும்
   மார்க்க மொன்றறியீர்
முயங்கு பூண்முலை மங்கை யாளொடு
   முருகன்பூண்டி மாநகர்வாய்
இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில்
   எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே

பொருள்

எம்பெருமான் நீரே!  நீர்  விளங்குகின்ற தோலை உடுத்தி,  சாம வேதத்தைப் பாடிக்கொண்டு, அப்பாட்டினால் மயங்கி ஊரில் உள்ளவர்கள் இடுகின்ற பிச்சையை ஏற்று உண்பதற்கு வழி ஒன்றும் அறியவில்லையா? பல இடங்களுக்குச் செல்ல வலிமையும் உடையீர் என்றால், தழுவுகின்ற  அணிகளை அணிந்த தனங்களையுடைய தேவியோடும்  இம் முருகன்பூண்டி மாநகரிடத்து இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்?

 

பாடியவர்          சுந்தரர்
திருமுறை        7
பதிக எண்         49
திருமுறை எண் 6

பாடல்

விட்டி சைப்பன கொக்க ரைகொடு
   கொட்டி தத்தளகம்
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு
   குடமுழா நீர்மகிழ்வீர்
மொட்ட லர்ந்து மணங் கமழ்முரு
   கன்பூண்டி மாநகர்வாய்
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர்
   எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே

பொருள்

எம்பெருமான் நீரே!, நீர் கொட்டிப் பாடுதற்கு உரிய  தாள அறுதிக்கு ஏற்ப விட்டு விட்டு ஒலிக்கின்ற  ‘கொக்கரை , கொடு கொட்டி , தத்தளகம் , துந்துமி , குடமுழா’ என்னும் வாத்திய கருவிகள் ஆகிய இவற்றை விரும்புவராய் உள்ளீர்; அதுமட்டும் அல்லாமல்  ஊரில் இருப்பவர்கள் இட்ட பிச்சையை ஏற்று உண்பீர்;  பலவகை அரும்புகள் அலர்ந்து மணம் கமழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகரிடத்து இங்கு எதன்பொருட்டு இருக்கின்றீர்?

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 6 (2018)

பாடல்

மத்த யானை யேறி மன்னர்
   சூழ வருவீர்காள்
செத்த போதில் ஆரு மில்லை
   சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா
   வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள்பாடி
   யென்ப தடைவோமே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

மத்தகம் என பொருள்படும் யானையின் உச்சிப் பகுதியின் மீது ஏறி சிற்றரசர்கள் சூழ உலா வருகின்ற பேரரசர்களே, நீங்கள் இறக்கும் காலத்தில் அப்போது உம்மோடு துணையாய் எந்த சிற்றரசர்களும் வரமாட்டார்கள். இதனை உங்கள் மனத்தில் நன்கு பதிய வைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு வைத்தபிறகு மனத்தை அந்நிலையினின்றும் வேறுபடுத்தி, மீண்டும் இந்த வாழ்க்கையை உறுதியதாக நினைக்க வேண்டா. என் நெஞ்சீரே, நீரும் வாரும்  அவர்களுடன்  யாவர்க்கும் தந்தையாராகிய இறைவரது திருக்கோயிலாகிய ‘திருஎதிர்கொள்பாடி’  எனப்படுவதாகிய திருத்தலம் சென்று அடைவோம்.

விளக்க உரை

  • தம் நெஞ்சிற்கும், அரசர்க்கும்  அறிவுறுத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 11 (2018)

பாடல்

மகத்தில் புக்கது ஓர் சனி எனக்கு ஆனாய்; மைந்தனே! மணியே! மணவாளா!
அகத்தில் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால், “அழையேல், போ, குருடா!” எனத் தரியேன்;
முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்கேன்? முக்கணா! முறையோ? மறை ஓதீ!
உகைக்கும் தண் கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே!

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

வேதங்களை அருளிச் செய்தவனே, விலைமதிப்புடைய பொருள்களை கரையிடத்துக் கொண்டு வந்து சேர்க்கும் குளிர்ச்சியும் அருளும் நிறைந்தும்  கடல் அலைகள் வந்தும் உலவுகின்ற ஒற்றியூர்என்னும் ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே, என்றும் வலிமையாய் உள்ளவனே, மணி போன்றவனே, அழகுடையவனே, நீ எனக்கு, ‘மகம்என்னும் விண்மீன் கீழ் வந்த, ‘சனிஎன்னும் கோள் போன்றவன் ஆயினேன் ஆதலால் எனது குருட்டுத் தன்மை பற்றி காரியம் சொல்ல   அகத்தில் உள்ள பெண்டுகளை அழைத்தால் கண்ணிலியே நீ என்ன அறிவாய்போஎன்று சொல்வதை நான் பொறுக்கமாட்டேன்; மூன்று கண்களையுடையவனே, முகத்தில் கண் இல்லாமல் நான் எவ்வாறு வாழ்வேன்இது முறையோ!

விளக்க உரை

  • சுந்தரர், உலகியர் முன்வைத்து தம் மனைவியர் இங்குக் கூறியது போலக் கூறியது
  • சனிக்கிர சஞ்சாரம் மக நட்சத்திரத்தில் வரும்போது, நாட்டிற்கும், மக்களுக்கும் தீங்குவரும் என்பது ஜோதிட சாத்திரம்.
  • நீ மூன்று கண்களோடு இருக்கிறாய், நான் கண்கள் இழந்து துன்புறுகிறேன் என்பதைக் குறிப்பிடுகிறார்; துன்பம் அதிகம் உடையவர் என்பதாலும், இறைவனை இவ்வாறு வைது கூறினும் அவன் தன் அடியார்கள் இடத்தில் அனைத்தையும் பொறுக்கும் அருளாலன் என்பதையும் விளக்க இப்பாடல்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 21 (2018)

பாடல்

தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி
   சித்திரப் பந்தர் சிக்கென இயற்றச்
சுருண்ட செஞ்சடை யாய்அது தன்னைச்
   சோழ னாக்கிய தொடர்ச்சிகண் டடியேன்
புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம்
   போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி
அரண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
   ஆவ டுதுறை ஆதிஎம் மானே

தேவாரம் – ஏழாம்  திருமுறை – சுந்தரர்

பதவுரை

சுருண்ட, சிவந்த சடையை கொண்டு திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள ஆதி ஆகிய எங்கள் முதற்கடவுளே, தெளிவுபெற்ற சிலந்தி ஒன்று,  தனது வாயினின்று உண்டாகும் நூலால் உறுதியான அழகிய பந்தல்  ஆக்க முற்பட்ட அச் சிலந்தியை, சோழனாய்ப் பிறக்கச் செய்த திருவருளை அறிந்து, அடியேன் பழவினையாகிய சஞ்சிதம் தொலையப் பெற்றாரையும் வந்து பற்றும் வன்மையுடைய ஆகிய ஆகாமியம்  எனவும் எதிர்வினை எனவும் ஆகிய இனிச் செய்யப்படும் வினை குறித்து  அஞ்சி, உனது அழகிய மலர்போன்ற திருவடியில் விழுந்து புரண்டு, `போற்றி! போற்றி!` என்று துதித்து,  உன்னை வந்து அடைந்தேன்!  என்னை ஏற்று கொண்டு அருள்.

விளக்க உரை

  • சிலந்திக்குச் செய்த திருவருளை எடுத்து இயம்பும் பாடல்.
  • சிலந்தி,  கோச்செங்கட் சோழ நாயனார் ஆக பிறந்து வந்த வரலாற்றை பெரிய புராணத்துள் கண்டு உணர்க.
  • தெருளுதல் – உணர்வுறுதல், தெளிதல், விளங்குதல், பூப்படைதல்

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 17 (2018)

பாடல்

தன்னில் ஆசறு சித்தமும் இன்றித்
   தவம்மு யன்றவ மாயின பேசிப்
பின்ன லார்சடை கட்டிஎன் பணிந்தாற்
   பெரிதும் நீந்துவ தரிதது நிற்க
முன்னெ லாம்முழு முதலென்று வானோர்
   மூர்த்தி யாகிய முதலவன் றன்னைச்
செந்நெ லார்வயல் திருத்தினை நகருட்
   சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

மனமே, தன்னிடத்துக் குற்றமின்றி நிற்கும் மனத்தை அடையாமல், தவத்தொழிலைச் செய்து,  பயனில்லாத சொற்களைப் பேசி  பின்னுதல் உடைய  சடைகளைச் சேர்த்துக் கட்டிக்கொண்டும், எலும்பினை அணிந்து கொள்ளுதலாகிய வேடத்தைப் பூண்டு கொண்டு மட்டுமே  மக்கள்  பிறவியாகிய கடலை முற்றிலும் கடந்துவிடுதல்என்பது  இயலாது; ஆதலின், அந்நிலையில் இருந்து வேறுபட்டு  நிற்க  நீ  தேவர்களுக்குத் தேவனாய் உள்ளவனும் பெருந்தேவனாகியும் ஆனவனும் கொண்டு  செந்நெற் பயிர்கள் நிறைந்த வயல்களையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற  நன்மையின் மேல் எல்லையாய் உள்ள பெருமானை  அணுகச் சென்று  இவனே  தொன்மையான முழுமுதற் கடவுள் என்று துணிந்து அடைவாயாக.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி – 4 (2018)

பாடல்

ஊனைப் பெருக்கி உன்னை நினையா தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்
கானக் கொன்றை கமழ மலருங் கடிநா றுடையாய் கச்சூராய்
மானைப் புரையு மடமென் னோக்கி மடவா ளஞ்ச மறைத்திட்ட
ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய் ஆலக் கோயில் அம்மானே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

காட்டில் புதியதாக மலர்ந்திருக்கும் கொன்றை மலரின் வீசுதலை உடையவனே, மான் போன்ற மெல்லிய பார்வை உடைய உமை அஞ்சும்படி பெரியதான யானைத் தோலைப் போர்த்தியவனே, ஞானக்கண்ணாய் விளங்குபவனே ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, கீழ்மை நிலையில் இருக்கும் யான் அதுபற்றி உணர்வு எதுவும் இல்லாமல் உடம்பு வளர்க்கும் காரணம் பற்றி உன்னை நினையாது ஒழிந்தேன்.

விளக்க உரை

  • செடியேன் உணர்வில்லேன் – செடி போன்றவைகள் ஓரறிவு உயிர்கள். எனவே உன்னை நினைத்தல் என்பது பற்றி உண்ர்வு கூட இல்லை.
  • குறை உடைய உயிர்களின் நிலை அறிய அவைகளின் அனைத்து வினைகளைப் பற்றியும் அறிய அறிவு வேண்டும். அதனை காண ஞானக் கண் அவசியமாகிறது. உயிரின் வினைகளைக் களைபவன் என்பதனால் அவன் ஞானக் கண் உடையவனாகிறான்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 31 (2018)

பாடல்

தங்கிய மாதவத்தின் தழல்
வேள்வியி னின்றெழுந்த
சிங்கமும் நீள்புலியுஞ் செழு
மால்கரி யோடலறப்
பொங்கிய போர்புரிந்து பிளந்
தீருரி போர்த்ததென்னே
செங்கயல் பாய்கழனித் திரு
நாகேச் சரத்தானே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

செங்கயல் எனும் ஒரு மீன்வகையான கயல்மீன்கள் துள்ளுகின்ற வயல்களை உடைய திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, மாற்றம் இல்லாத, நிலையான பெரிய தவத்தினால், வேள்வித் தீயினியில்  இருந்து தோன்றிய சிங்கமும், மிகப் பெரியதான புலியும், திருமாலின் நிறம் ஒத்த பருத்த பெரிய யானையும் கதறி ஒடும்படி செய்தும், அழியும்படி செய்வதுமான மிக்க போரைச் செய்து கிழித்து, அவற்றினின் தோலை உரித்தும், அத்தோலைப் போர்த்தியும் செய்தற்குக் காரணம் யாது?

விளக்க உரை

  • ‘உன்னை உணரும் உணர்வில்லாதோர்க்கும் உணர்வு உண்டாக்குதல்’ என்பது பற்றிய பாடல்.
  • தவம் – தாருகாவன முனிவர்களுடையது. அட்ட வீரட்டான செயல்களில் ஒன்றான இவ்வரலாற்றினை வழுவூர் திருத்தல பெருமை கொண்டு அறிக.
  • போர்த்தல் – மறைத்தல் என்னும் பொருளில்

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கேதீஸ்வரம்

 

தல வரலாறு(சுருக்கம்) / சிறப்புகள் – திருக்கேதீஸ்வரம்

  • காலம் – கி.மு.6 ம் நூற்றாண்டு
  • பஞ்ச ஈச்சரங்களில் ஒன்று. இலங்கையின் நான்கு திசைகளிலும் காவல் காத்ததாகக் கூறப்படும் நான்கு ஈச்சரங்கள் – 1. நகுலேச்சரம், 2. திருக்கோணேச்சரம், 3. திருக்கேதீச்சரம், 4. தொண்டேச்சரம்
  • கேது ஈசனை வழிபாட்டு அருள்பெற்ற தலம் திருக்கேதீஸ்வரம். கேது+ஈச்சரம்=கேதீச்சரம் (திருக்கேதிச்சரம்) 1
  • சூரபதுமனின் வழியில் வந்த துவட்டா, பிள்ளைப் பேறின்றித் திருக்கேதீச்சரத்தில் உள்ள பாலாவித் தீர்த்ததில் நீராடிக் கேதீச்சரத்தானை வழிபட்டு திருவருள் கைகூடி பிள்ளைப் பேறு பெற்றத் தலம். துவட்டா உருவாக்கியதால்  துவட்டா, காலப் போக்கில் பெருநகரமாய் ஆனதால் மாதுவட்டா
  • மாந்தை என வழங்கப்பட்ட தமிழ்ப்பெயரின் பாளி மொழிபெயர்ப்பே மகாசித்தா..மகா – பெரிய, , தித்தா – இறங்குதுறை அல்லது துறைமுகம். பெரிய துறைமுகம்
  • இராமர் சிவபக்தனான இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட  பிரமகத்தி தோஷம் போக்க வெள்ளிலிங்கம் செய்து வழிபட்டத் தலம்
  • நாகர்கள் வழிபாடு செய்த திருத்தலமானதால் நாகநாதர்
  • பஞ்சபாண்டவர்களுள் ஒருவராகிய அர்ஜுனன், தீர்த்தியாத்திரையின் போது தென்னகத்தலங்களை வழிபட்டபின்னர் வழிபட்டத்தலம்.
  • உலகிலேயே மிகபெரிய வடிவிலான சோமாஸ்கந்தர் மூர்த்தம் உள்ள தலம்
  • ‘பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர் கேதீச்சர மேவினார் கேதாரத்தார்..’ என்று திருநாவுக்கரசரால் பாடப்பெற்றத் திருத்தலம் (திருவீழிமிழலைப்பதிகம் – ஆறாம் திருமுறை)
  • ‘..நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்..’ என்று அகநானூறிலும், ‘…புன்னாகச்சோலை புனற்றெங்கு சூழ் மாந்தை…’ என்று முத்தொள்ளாயிரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளத் தலம்.
  • ‘ஆர்கலிசூழ் தென்னிலங்கை அழகமர் மண்டோதரிக்குப் பேரருள் இன்பமளித்த பெருந்துறை மேயபிரான்’ எனும் குயிற்பத்தில்(திருவாசகம்) உள்ள பெருந்துறை என்று மாந்தை நகரம் குறித்த வரிகள்.
  • கோயிலுக்கு அருகினில் உள்ள மடங்கள் – சம்மந்தர் மடம், சுந்தரர் மடம், மலேசியா மடம், அடியார் மடம், சிவபூஜை மடம், நாவலர் மடம்

 

1 – தக்ஷிண கைலாச மான்மியம் எனும் வரலாற்று நூல்

 

தலம் திருக்கேதீஸ்வரம்
பிற பெயர்கள் திருக்கேதீஸ்வரம், மகாதீர்த்தம், மகாதுவட்டாபுரம், மாந்தை
இறைவன் திருக்கேதீஸ்வரர், நாகநாதர்
இறைவி கௌரியம்மை
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் பாலாவி
விழாக்கள் சிவராத்திரி, பௌர்ணமி, பிரதோஷம்
மாவட்டம் மன்னார் மாவட்டம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 7.00 மணி முதல் 1.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு திருக்கேதீஸ்வரர் திருக்கோயில், மாதோட்ட நகரம், மன்னார் மாவட்டம், இலங்கை
வழிபட்டவர்கள் அகத்தியர், பிருகு மகரிஷி, மண்டோதரி, மயன்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர்  1 பதிகம் (2ம் திருமுறை – 107வது பதிகம்), சுந்தரர் 1 பதிகம் (7ம் திருமுறை – 80வது பதிகம்)
நிர்வாகம்
இருப்பிடம் இலங்கை
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 227 வது தலம்
ஈழ நாட்டுத் தலங்களில் 2 வது தலம்.

 

 

 

பாடியவர்            திருஞானசம்பந்தர்
திருமுறை          2
பதிக எண்           107
திருமுறை எண்  8

பாடல்

தென்னி லங்கையர் குலபதி மலைநலிந் தெடுத்தவன் முடிதிண்தோள்
தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த தலைவனார் கடல்வாயப்
பொன்னி லங்கிய முத்துமா மணிகளும் பொருந்திய மாதோட்டத்
துன்னி யன்பொடு அடியவ ரிறைஞ்சுகே தீச்சரத் துள்ளாரே

பொருள்

தென்னிலங்கை குலத்தலைவனாகவும்  மன்னனாகவும் ஆன இராவணன் கயிலைமலையை நெருக்கி எடுத்தபோது அவன் முடி,வலிமை வாய்ந்த தோள்கள் ஆகியனவற்றை நெரித்து அவன் தலைக்கனம் அழித்துப் பின் அவனது பாடல்கேட்டு அவனுக்கு  அருள் செய்த தலைவனான ஈசன், பொன், முத்து, மாணிக்கம், மணிகள் நிறைந்த மாதோட்ட நன்னகரில் அன்போடு அன்பர்கள் தியானித்து வழிபடும் கேதீச்சரத்தில் உள்ளார்.

 

 

 

 

பாடியவர்              சுந்தரர்
திருமுறை            7
பதிக எண்             80
திருமுறை எண்    8

பாடல்

அட்டன்னழ காகவ்வரை
தன்மேலர வார்த்து
மட்டுண்டுவண் டாலும்பொழில்
மாதோட்டநன் னகரில்
பட்டவ்வரி நுதலாளொடு
பாலாவியின் கரைமேல்
சிட்டன்நமை யாள்வான்திருக்
கேதீச்சரத் தானே

பொருள்

அட்ட மூர்த்தங்களாகிய நிலம், நீர், தீ, காற்று, வானம், சூரியன், சந்திரன் மற்றும் ஆன்மா ஆகிய எண் பொருள்களாக  நிற்பவனாகிய  திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தனது இடுப்பில் பாம்பினை கட்டிக்கொண்டு, வண்டுகள் தேனை உண்டு ஆரவாரம் செய்கின்ற சோலைகளையுடைய ‘மாதோட்டம்’ என்னும் நல்ல நகரத்தில், பட்டத்தை அணிந்த அழகிய நெற்றியை உடையவளோடு , பாலாவி ஆற்றின் கரைமேல் மேலானவனாயும், நம்மை ஆளுபவனாயும் இருக்கின்றான்.

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருஆமாத்தூர்

தல வரலாறு(சுருக்கம் )/ சிறப்புகள் – திருஆமாத்தூர்

  • மூலவர், சற்று இடப்புறம் சாய்ந்து காணப்படும்  சுயம்பு மூர்த்தி
  • ஆதி காலத்தில் பசுக்கள் கொம்பு இல்லாமல் படைக்கப்பட்டதால் தெய்வப் பசுவாகிய காமதேனுவும் மற்ற ஆனிரைகளும் தங்களை அழிக்க வரும் மிருகங்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கொம்புகள் வேண்டும் என்று நந்திதேவரிடம் முறையிட, அவர் வன்னி வனத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் அபிராமேஸ்வரர் என்ற பெயருடன் விளங்கும் சிவபெருமானை வணங்கி வழிபடும்படி கூறியபடி பசுக்கள் பல நாள் தவம் செய்து கொம்புகள் பெற்றத் தலம். (திரு+ஆ+மத்தூர்)
  • பசு பூஜை செய்ததின் அடையாளமாக சுயம்பு லிங்கத்தின் மேல் சந்திர பிறை போல் வளைந்த பசுவின் கால் குளம்பின் அமைப்புடம் கூடிய சுவடு
  • அகழி அமைப்பு கொண்ட கருவறை
  • பூதம் தாங்குவது போன்ற அமைப்புள்ள கோமுகம்
  • அன்னையவள் அபயகரம் ஒன்றும், தொடைமீது வைத்த மற்றொரு கரமுமாக மற்ற இரண்டில் தாமரையும் நீலோற்பலமுங் கொண்டு நான்கு கரங்களுடன் கூடிய திருக் காட்சி
  • அன்னையின் சாபத்தால் பிருங்கி முனிவர் வன்னிமர தலவிருட்சமாக ஆனத் தலம்
  • அண்ணன் தனது தம்பியை ஏமாற்றி சொத்து அபகரித்து பொய் சத்தியம் செய்து கர்வ மேலிட்டால் அன்னையை பற்றி தவறாக பேச கரும்பாம்பு கடித்து இறந்த சம்பவம் முன்னிட்டு அம்பாளின் மார்பில் பாம்பின் வால் சிற்பம்
  • இராமாயணத்தில் வாலியைக் கொல்வதற்கு முன் இராமபிரானும், சுக்ரீவனும் அனுமன் சான்றாக நட்பு கொண்டபோது, இந்த வட்டப் பாறை முன் உடன்பாடு செய்துகொண்ட வட்டப் பாறை அம்மன் சன்னதி.
  • சீதையைத் தேடி வந்த ராமன் வழியில் அகத்திய முனிவரைச் சந்தித்த போது அவரது வழிகாட்டுதலின் படி ஈஸ்வரனை வழிபட்டு ராவணனை வென்று சீதையை மீட்டு சீதையுடன் திரும்பியபோது, மீண்டும் இங்கு வந்து, தனது அம்பினால் ‘தண்ட தீர்த்த’த்தை உருவாக்கி அபிஷேக ஆராதனை செய்த தலம்
  • தல விநாயகர் – மால் துயர் தீர்த்த விநாயகர்
  • விநாயகர், பூசை செய்யும் அமைப்பில் கையில் மலருடன் சந்நிதியில் திருக்காட்சி
  • தற்கால நிகழ்வு – நான்கு திருக்கரங்களுடன் கூடிய வலம்புரி விநாயகர் சிலை, தனது இடக் கை ஒன்றில் அமிர்தக் கலசம் தாங்கி தாமரை மலரில் அமர்ந்த நிலையில் காட்சி அமைப்பு
  • முருகன் சூரபதுமனை அழிக்கும்முன் ஈசனையும், அம்மையையும் வழிபட்ட தலம்
  • தீர்த்தம் – மதங்க முனிவரால் உருவாக்கப் பெற்றது
  • ஊருக்கு வெளியே ஓடிக் கொண்டிருந்த பம்பை நதி, இரட்டைப் புலவர்கள் கலம்பகம் பாடியதால், நதி திசை மாறி ஊருக்குள் வந்து திருக்கோயிலைச் சுற்றி ஓடும் அமைப்பு
  • நிலாவு புகழ் திருவோத்தூர் திரு ஆமாத்தூர் நிறைநீர்..‘ என்று திருவேகம்பர் திருவந்தாதியில் பட்டினத்தடிகளால் குறிப்பிடப்பட்ட தலம்.
  • …அன்னமலி வயல் தடங்கள் சூழ்ந்த திரு ஆமாத்தூர்‘ என்று சேக்கிழாரால் வர்ணிக்கப்பட்ட தலம்
  • மேலக்கோபுரவாயில் கல்லில் செதுக்கப்பட்ட ஜேஷ்டாதேவி உருவம் (அழிந்த நிலையில்)
  • இத் தலத்திற்கு அருகில் நின்ற நிலையில் கையில் தண்டூன்றிய கோலத்தோடு, தலை மாலையுடனும் கோவணத்தொடும் காட்சிதருகின்ற வண்ணச்சரபம் அருள்மிகு தண்டபாணி சுவாமிகளின் சமாதி

 

 

தலம் திருஆமாத்தூர்
பிற பெயர்கள் திருவாமாத்தூர், கோமாதபுரம்
இறைவன் அபிராமேஸ்வரர், அழகியநாதர்
இறைவி முக்தாம்பிகை,  அழகியநாயகி
தல விருட்சம் வன்னி, கொன்றை
தீர்த்தம் ஆம்பலம் பூம்பொய்கை ( குளம் ) , தண்ட தீர்த்தம் ( கிணறு ) , பம்பையாறு
விழாக்கள் பங்குனியில் பிரம்மோற்சவம், மகாசிவராத்திரி, நவராத்திரி
மாவட்டம் விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரைஅருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோவில்
திருவாமாத்தூர் அஞ்சல், விழுப்புரம் வட்டம்
விழுப்புரம் மாவட்டம். PIN – 60540204146-223319, 04146-223379, 98430-66252
வழிபட்டவர்கள் விநாயகர், பார்வதி, அனுமன், சீதை, லட்சுமணர், நாரதர், அகத்தியர், வசிஷ்டர், துர்வாசர், பிருங்கி முனிவர், பராசரர், விஸ்வாமித்திரர், வியாசர், ரோமரிஷி, மதங்கமுனிவர், அஷ்டவசுக்கள், கோடிமுனிவர், அருணகிரிநாதர்
பாடியவர்கள் • திருஞானசம்பந்தர் 2 பதிகங்கள் (2ம் திருமுறை – 44 வது பதிகம், 2ம் திருமுறை – 50 வது பதிகம்),

• திருஞானசம்பந்தர் 2 பதிகங்கள் (2ம் திருமுறை – 44 வது பதிகம், 2ம் திருமுறை – 50 வது பதிகம்),

• திருநாவுக்கரசர் 2 பதிகங்கள் (5ம் திருமுறை – 44 வது பதிகம், 6ம் திருமுறை – 9 வது பதிகம்),

• சுந்தரர் 1 பதிகம்,

• பட்டினத்தார்

நிர்வாகம்
இருப்பிடம் விழுப்புரத்தில் இருந்து சுமார் 8 கிமீ தொலைவு
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 211 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 21 வது தலம்.

 

 

பாடியவர்           திருஞானசம்பந்தர்
திருமுறை          2
பதிக எண்           44
திருமுறை எண்  1

பாடல்

துன்னம்பெய் கோவணமுந் தோலு முடையாடை
பின்னஞ் சடைமேலோர் பிள்ளை மதிசூடி
அன்னஞ்சேர் தண்கான லாமாத்தூ ரம்மான்றன்
பொன்னங் கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே

பொருள்

தைத்த கோவணத்தையும், யானைத் தோலையும்  ஆடையாக கொண்டு பின்னல் கொண்ட சடைமீது இளம் பிறையைச் சூடி, அன்னங்கள் வாழும் குளிர்ந்த சோலைகளைக் கொண்டுள்ள திருஆமாத்தூரில் விளங்கும் இறைவனின் பொன் போன்ற அழகிய திருவடிகளைப் பரவாதவர் பொலிவு பொலிவாகுமா?

 

 

 

 

 

 

 

பாடியவர்           திருநாவுக்கரசர்
திருமுறை         5
பதிக எண்          44
திருமுறை எண் 1

பாடல்

சந்தி யானைச் சமாதிசெய் வார்தங்கள்
புந்தி யானைப்புத் தேளிர் தொழப்படும்
அந்தி யானை ஆமாத்தூ ரழகனைச்
சிந்தி யாதவர் தீவினை யாளரே

பொருள்

காலை மாலை ஆகிய சந்தி பொழுதுகளில் வணங்கப் படுவானும், யோகநெறி உட்பட்டு தலைப்படுவாருடைய மனதில் உறைபவனும், தேவர்களால் தொழப்படுவானும், அந்தி வானத்தைப்போன்ற செம்மேனி உடையவனும் (அழகிய தீயின் உருவினன்) ஆகிய ஆமாத்தூர் அழகனைச் சிந்திக்காதவர்கள் தீவினையாளர்களே  ஆவார்கள்.

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 14 (2018)

 

பாடல்

தண்டேர்மழுப் படையான்மழ

   விடையான்எழு கடல்நஞ்

சுண்டேபுரம் எரியச்சிலை

   வளைத்தான்இமை யவர்க்காத்

திண்டேர்மிசை நின்றான்அவன்

   உறையுந்திருச் சுழியல்

தொண்டேசெய வல்லாரவர்

   நல்லார்துயர் இலரே

 

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

 

பதவுரை

மழுப்படையைத் தண்டு போல கொண்டு ஏந்தியவனும், இளமையான இடபத்தை உடையவனும், தேவர்களுக்காக கடலில் எழுந்த நஞ்சினை உண்டு அவர்களை காத்தவனும், திரிபுரங்கள் எரியும்படி வில்லை வளைத்துத் வலிமையானதும் உறுதியானதுமான தேரின்மேல் நின்றவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருச்சுழியலில் சென்று அவனுக்குத் தொண்டு செய்ய வல்லவர்கள், இன்பம் உடையவரும் துன்பம் இல்லாதவரும் ஆவார்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 27 (2018)

பாடல்

உரைப்பார் உரைப்பவை உள்க வல்லார் தங்கள் உச்சியாய்
அரைக்காடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே
காரைக்கால் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

உன்னை இடையறாது நினைத்து, உன்னைப் பற்றி அறிந்து, அதன் உட்பொருளை பொருள் மாறாது உரைக்கும் அடியார்கள் தங்கள் தலை உச்சியாக இருப்பவனே, இடுப்பில் ஆடுகின்ற பாம்பைக் கட்டியுள்ளவனே, எல்லா வகையிலும் முதலும் முடிவும் ஆனவனே, சிறந்த முல்லை நிலத்தையும், சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள `அவினாசி` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, காலனையும், முதலையையும், இக்குளக்கரையில் பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணையிட்டருள்.

விளக்க உரை

  • `காலனை முதலையிடத்தும், முதலையைக் கரையிடத்தும் தரச்சொல்லு ` என்ற பொருளில் சுந்தரர் இவ்வாறு இப்பாடலை அருளிச்செய்து முடிக்குமுன்பே, நீரில்லா மடுவில் நீர் நிறைந்திட முதலை அங்கு வந்து, சுந்தரரிடம் ஐந்து வயது பாலகனாக உண்ட சிறுவனை  பத்து வயதுப் பையனாகவே உயிருடன் உமிழ்ந்துவிட்டுச் சென்றது வரலாறு
  • உள்குதல் – உள்ளுதல், நினைதல், ஆராய்தல், நன்கு மதித்தல், மீண்டும் நினைத்தல், இடைவிடாது நினைத்தல்
  • ‘உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே’ எனும் பொருளில் பல இடங்களில் விளக்கப்பட்டுளது. இறைவன் புகழ் சொல்லை விரும்பாதவன் எனும் பொருளிலும், உரைப்பார், உரைப்பவை உரைப்பார், உள்கி உரைப்பவை உரைப்பார் எனும் பொருளிலும் இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
  • தங்கள் உச்சியாய் – யோக தொடர்புள்ளவர்கள் குரு மூலமாக அறிக

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 19 (2018)

பாடல்

போந்தனை தரியாமே நமன்றமர் புகுந்தென்னை
நோந்தனை செய்தாலும் நுன்னல தறியேன்நான்
சாந்தனை வருமேலுந் தவிர்த்தென்னை யாட்கொண்ட
வேந்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

 பதவுரை

இறக்கும் நிலையை  நீக்கி என்னை ஆட்கொண்ட தலைவனே, திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, எனது துன்பத்தைச் சிறிதும் பொறாமல் அதை நீக்குதலுக்கு தகுதியானவன் நீயே அன்றோ! ஆதலினால் எமனுக்கு ஏவலராய் உள்ள தூதர்கள் வந்து எனக்கு துன்புறும் செயல்களைச் செய்யினும், யான் உன்னை அன்றி வேறொருவரைத் துணையாக அறியமாட்டேன்.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

தத்புருட மந்திரத்தால் செய்யும் தொழில் என்ன?
திரோபவம் எனும் மறைத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 10 (2018)

பாடல்

நிலனே நீர்வளிதீ நெடுவானக மாகிநின்ற
புலனே புண்டரிகத் தயன்மாலவன் போற்றிசெய்யும்
கனலே கற்பகமே திருக்கற்குடி மன்னிநின்ற
அனல்சேர் கையினனே அடியேனையும் அஞ்சலென்னே.

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

தீ ஏந்திய கையை கொண்டு, திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளி உள்ளவனே, நிலம், நீர், தீ, காற்று, நீண்டவானம் எனும் ஆகாயம் என்னும் ஐந்துமாகி உள்ளவனே, தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் மற்றும் மாயோன் ஆகிய திருமால் இருவரும் போற்றி நின்ற பொழுதில் நெருப்பாகி தோன்றியவனே, கற்பகத் தரு போன்றவனே, அடியேனையும், `அஞ்சதே` என்று சொல்லி அருள் புரிவாயாக.

விளக்க உரை

  • இத்தலத்தில் இறைவர்  ‘கற்பகநாதர்’  ஆதலின்  ‘கற்பகமே` எனும் சொற்றொடர். ஆறாம்  திருமுறையில் ‘கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே’ என்றும் பாங்கோடு வைத்து சிந்திக்கத் தக்கது.
  • அஞ்சலென்னே என்பதை `அஞ்சாதி` என்று சொல்லி அருள் புரிவாயாக என்று சில இடங்களில் விளக்கப்பட்டுளது.  ‘அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன …அஞ்சாதி யாதி அகம்புக லாமே’  எனும் திருமந்திரப் பாடலின் படி அஞ்செழுத்து சிவன் இருப்பிடம் இத்தலம் ஆகவே அஞ்செழுத்தாக சிவன் இத்தலத்தில் உறைகின்றான் என்றும் பொருள் தோன்றும். கற்றறிந்தோர் பொருள் கொண்டு உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருத்துறையூர்

 தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருத்துறையூர்

  • சுந்தரர் இத்தலத்திற்கு வரும்போது தென்பெண்ணையாறு குறுக்கிடவே, கரையில் இருந்தே சிவனை வேண்டி பதிகம் பாடிய போது வயதான தம்பதியர் உருவில் வந்த சிவபெருமானும், பார்வதியும் சுந்தரரை படகில் ஏற்றிக்கொண்டு மறு கரைக்கு அழைத்து வந்து கரையில் இறங்கிய பிறகு இறைவன் சுந்தரர் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து கொண்டப் பின், “நீங்கள் தேடுபவர் மேலே இருக்கிறார்” என்று அசரீரி வாக்குக்கு இணங்க, சுந்தரருக்கு சிவன், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தந்து தவநெறி உபதேசம் செய்த தலம்
  • சந்தானக் குரவர்களில் ஒருவரான அருணந்திசிவாச்சாரியார் முக்தித் தலம்). (சமாதிக்கோயில் கோயிலுக்கு நேரெதிரில்). (புரட்டாசி மாத பூர நட்சத்திரம் – அருணந்திசிவாச்சாரியார் குருபூஜை)
  • சுந்தரரை சிவனார் கிழவனார் வடிவில் தோன்றி ஆட்கொண்ட இடம் கிழப்பாக்கம். இத்தலத்திற்கு அருகாமையில்.
  • சிவன், சுந்தரருக்கு திருவடி சூட்டி குருவடிவுடன் எழுந்தருளி அருமறைகளை உபதேசித்த தலம்.
  • சித்திரைமாத முதல் வாரம் சூரிய வழிபாடு
  • அம்பாள் சந்நிதி எதிரில் உள்ள தல மரத்தின் அருகில் அகத்தியர் வழிபட்ட லிங்கத்திருமேனி.
  • அஷ்டபுஜ மகாகாளியம்மன் திருக்கோயில் – மாமன்னர் விக்ரமாதித்தன் மற்றும் மகாகவி காளிதாசர் ஆகியோருக்கு அருள்புரிந்த அம்மன் அமையப்பெற்றத் தலம்
  • சிற்ப சிறப்புகள்
  1. உற்சவத்திருமேனிகளுள் சாட்டை பிடித்த நிலையில் காட்சி தரும் குதிரைச்சொக்கர் வடிவம்
  2. கருவறை முன்மண்டப தூணில் சுந்தரர் ஓடத்தில் இத்தலம் வந்தடைந்த வரலாறு சிற்பம்
  3. தட்சிணாமூர்த்தி சந்நிதிக்குப் பக்கத்தில் உமாமகேஸ்வரர் சுந்தரருக்கு காட்சி தந்த சிற்பம்

 

தலம் திருத்துறையூர்
பிற பெயர்கள் திருத்தளூர்
இறைவன் சிஷ்டகுருநாதேஸ்வரர்,பசுபதீஸ்வரர், தவநெறியப்பர்
இறைவி சிவலோகநாயகி, பூங்கோதைநாயகி
தல விருட்சம் கொன்றை மரம்
தீர்த்தம் சூரிய தீர்த்தம்
விழாக்கள் வைகாசி விசாகம், மாசிமகம், பங்குனி உத்திரம், திருவாதிரை, நவராத்திரி, மகாசிவராத்திரி, கார்த்திகை தீபம், கந்தசஷ்டி, ஐப்பசி அன்னாபிஷேகம்
மாவட்டம் கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு சிஷ்டகுருநாதர் திருக்கோவில்
திருத்துறையூர் அஞ்சல், பண்ருட்டி வட்டம்
கடலூர் மாவட்டம். 607205
04142-248498, 94448-07393
வழிபட்டவர்கள் நாரதர், வசிஷ்டர், அகத்தியர், சூரியன், ராமர், சீதை, திருமால், பிரம்மன், பீமன்
பாடியவர்கள் சுந்தரர், அருணகிரிநாதர்
நிர்வாகம்
இருப்பிடம் பண்ருட்டியில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவு
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 205 வது தலம்

நடு நாட்டுத் தலங்களில்  15    வது தலம்.

பாடியவர்           சுந்தரர்
திருமுறை         ஏழு
பதிக எண்          13
திருமுறை எண் 2             

பாடல்

மத்தம்மத யானையின் வெண்மருப் புந்தி
முத்தங்கொணர்ந் தெற்றிஓர் பெண்ணை வடபால்
பத்தர்பயின் றேத்திப் பரவுந் துறையூர்
அத்தாஉனை வேண்டிக்கொள் வேன்தவ நெறியே

பொருள்

மயக்கங்கொண்ட மதயானைகளின் தந்தங்களைத் தள்ளிக்கொண்டுவந்தும், அழகிய முத்துக்களைக் கரையில் எறிவதும் ஆகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண் உள்ளதும், அடியவர் பலகாலமும் வந்து தொழுது வழிபடுகின்ற திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தந்தையே! உன்னிடத்தில் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.

பாடியவர்           சுந்தரர்
திருமுறை         ஏழு
பதிக எண்          13
திருமுறை எண் 6        

பாடல்

மட்டார்மலர்க் கொன்றையும் வன்னியுஞ் சாடி
மொட்டாரக்கொணர்ந் தெற்றிஓர் பெண்ணை வடபால்
கொட்டாட்டொடு பாட்டொலி ஓவாத் துறையூர்ச்
சிட்டாஉனை வேண்டிக்கொள் வேன்தவ நெறியே.

பொருள்

தேன் நிறைந்த மலர்களை உடைய கொன்றை மரம், வன்னி மரம் இவைகளை முறித்து, அவற்றின் அரும்புகளோடு நிரம்பக் கொணர்ந்து எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரையில், வாத்திய முழக்கமும், ஆடலும், பாடலும் நீங்காது விளங்குகின்ற திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள மேலானவனே, உன்பால் அடியேன் தவ நெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவெண்ணைநல்லுர்

ஓவியம் : இணையம்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருவெண்ணைநல்லுர்

  • ஈசன் நஞ்சுண்ட காலத்தில் அது அவரை துன்புறுத்தாமலிருக்க உமையம்மை இத்தலத்தில் பசு வெண்ணெயால் கோட்டை கட்டி அதில் பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவிலிருந்து தவம் செய்த காரணத்தால் இத்தலம் வெண்ணெய்நல்லூர்
  • மறைகளும் , தாருகாவனத்து முனிவர்களும் தவஞ்செய்து அருள்பெற்ற தலம்
  • சுந்தரர், இறைவனை ‘பித்தன்’ என்று வசைவு பொழிய, காரணங்களை விளக்கியப்பின் இறைவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு “பித்தனென்றே பாடுவாயென” மொழிய, சுந்தரமூர்த்தி சுவாமிகள் ‘பித்தாபிறைசூடீ’ எனப் முதல் தேவாரப்பதிகம் பாடி ஆட்கொள்ளப்பட்டு அருள்வாழ்வு பெற்ற தலம்
  • கோவில் உள்ளே – சுந்தரர் வழக்கு நடந்த ‘வழக்கு தீர்த்த மண்டபம்’
  • சிவனார் முதியவர் வடிவில் வந்து சுந்தரரை தடுத்தாட்கொள்ள வந்த போது அணிந்திருந்த பாதுகைகள் இன்றும் இக்கோயிலில் பாதுகாப்பாக இருக்கின்றன.
  • இத்தலத்திற்கு மிக அருகில் சுந்தரரின் திருமணம் நின்ற இடமான மணம் தவிர்ந்த புத்தூர் (மணப்பந்தூர்)
  • சடையப்ப வள்ளல் வாழ்ந்த தலம். அவர், கம்பரைக் கொண்டு ராமாயணம் பாடுவித்தத் தலம்.
  • அர்ஜுனனுக்கு குழந்தைவரம் அளித்த விஜயலிங்க சிவனாருக்கு சந்நிதி
  • நவக்கிரகங்கள் வழிபட்ட ஜோதிலிங்கம் தனிச்சன்னதி
  • இந்திரன் வழிபட்ட சுந்தரலிங்கர் சந்நிதி
  • மகாவிஷ்ணு வழிபட்ட சங்கரலிங்கர் சந்நிதி
  • அர்ஜுனன் தனது பாவங்களைப் போக்கிக்கொண்ட தலம்
  • சைவசமய சந்தனாசாரியராகிய மெய்கண்டதேவர் வாழ்ந்து உபதேசம் பெற்ற தலம்(அருள் செய்த மூர்த்தி பொல்லாப் பிள்ளையார்)
  • ஐப்பசி சுவாதியில் மெய்கண்டார் குருபூஜை (வடக்கு வீதியின் கோடி)

 

தலம் திருவெண்ணைநல்லுர்
பிற பெயர்கள் திருவருள்துறை, திருவருட்டுறை, திருவெண்ணெய்நல்லூர்
இறைவன் கிருபாபுரீஸ்வரர் ( வேணுபுரீஸ்வரர், அருட்டுறைநாதர், தடுத்தாட்கொண்டநாதர், அருட்கொண்டநாதர், ஆட்கொண்டநாதர் )
இறைவி மங்களாம்பிகை ( வேற்கண்ணியம்மை )
தல விருட்சம் மூங்கில்

தீர்த்தம்

தண்டுத்தீர்த்தம்,(சிவனாற்கேணி), பெண்ணை நதி தீர்த்தம், நீலி தீர்த்தம், சிவகங்கா தீர்த்தம், காம தீர்த்தம், அருட்டுறைத் தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், வைகுண்ட தீர்த்தம், வேத தீர்த்தம்

விழாக்கள் பங்குனி உத்திரம் , ஆடி சுவாதி, ஆருத்ரா தரிசனம் , ஆவணி மூல புட்டு உற்சவம் , கந்தசஷ்டி
மாவட்டம் விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரைஅருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோவில்
திருவெண்ணைநல்லூர் அஞ்சல்
திருக்கோயிலூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
PIN – 607203
04153-234548, 99942-70882, 93456-60711, 94424-22197 ( மெய்கண்டார் கோயில்)
வழிபட்டவர்கள் நவக்கிரகங்கள், இந்திரன், மகாவிஷ்ணு,அர்ஜுனன்
பாடியவர்கள் சுந்தரர், அருணகிரிநாதர்
நிர்வாகம்
இருப்பிடம்

திருக்கோவிலூரில் இருந்து தென்கிழக்கே சுமார் 20 கி.மி. தொலைவு, விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ தொலைவு

இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 200 வது தலம்

நடு நாட்டுத் தலங்களில் 14  வது தலம்.

 

பாடியவர்          சுந்தரர்
திருமுறை        ஏழாம்
பதிக எண்          1
திருமுறை எண் 1

பாடல்

பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாய்இனி அல்லேனென லாமே.

பொருள்

பித்தனே, சந்திர பிறையைக் தலையில் சூடிய பெருமை உடையவனே, அருளாலனே, பெண்ணையாற்றின் தென் கரையில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் சார்ந்ததான `அருட்டுறை` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்து அருளினாய்; அதனால், எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகிய என்னை, இப்பொழுது, `உனக்கு அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேச வைத்தது பொருந்துமோ!

 

பாடியவர்          சுந்தரர்
திருமுறை        ஏழாம்
பதிக எண்          1
திருமுறை எண் 4

பாடல்

முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீ
கொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீ
செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அடிகேள்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே.

பொருள்

இடபத்தை ஊர்தியாக உடையவனே, ஒளி நிறைந்த பெண்ணையாற்றின் தென் கரையில் உள்ள  உள்ள திருவெண்ணெய்நல்லூர் சார்ந்ததான `அருட்டுறை` என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! அவ்வாறான பொருந்தாமையை அகற்றி என்னை நீ தெளிவித்து அருளியதால், இனி நான் இறக்கவும், மீளப் பிறக்கவும், இவ்வுலகில் வாழ்ந்து மூப்படைந்து வருந்தவும் ஆன துன்பங்களை அறுத்தேன். நெறி கெட்டவனாகி பொய்ம்மைகள் பலவற்றையே பேசுவேனாகிய என்னை நீ வெறுக்காமல் ஏற்றறு அருள்.

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவிடையாறு

274

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருவிடையாறு

 

  • மூன்று நிலைகளை உடைய கோபுரம். கொடிமரம் அற்று 2 பலிபீடம் மற்றும் நந்தி
  • ஈசனுக்கும் அன்னைக்கும் நடுவில் கணபதி குழந்தை வடிவில். மேல் இரு கைகளில் லட்டும் பலாச்சுளையும். கீழ் இரு கைகளில் அபய முத்திரையும் கரும்பும்
  • முருகர் ‘கலியுகராமப் பிள்ளையார்’ என்று போற்றப்படுகிறார்.
  • அகத்தியர் வழிபட்ட லிங்கம் அகத்தீஸ்வரர். அகத்தியருக்கு தனி சிலையும் இங்குள்ளது.
  • கயிலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு சிவ ரகசியத்தை உபதேசிக்கும் போது அதை சுகப்பிரம்ம முனிவர் ஒட்டு கேட்டதால் அவரை  பூமியில் பிறக்கும் படி சபித்தார். சாப விமோசனம் நீங்க அந்த சாப விமோசனம் நீங்க வேதவியாசருக்கு மகனாகப்பிறந்து பெண்ணை நதியின் தென்பகுதியில் அமைந்துள்ள இத்தலத்தில் இறைவனை பூஜித்து பூலோக வாழ்வு நீங்கப் பெற்றார்.
  • சுகப்பிரம்ம மகரிஷி வழிபட்டதால் இத்தலத்தில் எப்போதும் கிளிகள் பறந்து கொண்டே இருக்கின்றன.
  • சுந்தரர் பாடியுள்ள 39 வைப்புத் தலங்களுக்கு நிகரானது என்று அவரது பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • சந்தானச்சாரியர்களில் ஒருவரான மறைஞானசம்பந்தர் அவதாரத் தலம். இவருக்கு அருள் செய்த விநாயகர் இருப்பிடம் வயல்வெளியில் தனிக்கோயிலில்
  • மாசி மாதம் 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.

 

தலம் திருவிடையாறு
பிற பெயர்கள் திரு இடையாறு, T. எடையார்
இறைவன் மருதீஸ்வரர், இடையாற்றீசர், இடையாற்றுநாதர், கிருபாபுரீஸ்வரர்
இறைவி ஞானாம்பிகை, சிற்றிடை நாயகி
தல விருட்சம் மருதமரம்
தீர்த்தம் சிற்றிடை தீர்த்தம்
விழாக்கள் தைமாதம் ஆற்றுத்திருவிழா
மாவட்டம் விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு மருதீஸ்வரர் திருக்கோவில்,
மருதீஸ்வரர் தேவஸ்தானம்
டி.எடையார் அஞ்சல், திருக்கோவிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம், PIN – 607203
94424-23919, 98847-77078, 04146-216045, 04146-206515
வழிபட்டவர்கள் சுகமுனிவர் , பிரம்மன் , அகத்தியர் , சுந்தரர் , மறைஞான சம்பந்தர்
பாடியவர்கள் சுந்தரர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம் திருக்கோயிலூரில் இருந்து சுமார் 13 கிமீ தொலைவில் அமைந்துள்ள சித்தலிங்க மடத்தை அடுத்து அமைந்துள்ளது இத்தலம் .
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 203 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 13 வது தலம்.

ஞானாம்பிகை உடனாகிய மருதீஸ்வரர்

                             மருதீஸ்வரர் ஞானாம்பிகை

புகைப்படங்கள் : தினமலர்

பாடியவர்            சுந்தரர்
திருமுறை          7
பதிக எண்           31
திருமுறை எண்  8

பாடல்

தேச னூர்வினை தேயநின் றான்திரு வாக்கூர்
பாச னூர்பர மேட்டி பவித்திர பாவ
நாச னூர்நனி பள்ளிநள் ளாற்றை யமர்ந்த
ஈச னூரெய்த மானிடை யாறிடை மருதே.

பொருள்

ஒளிவடிவினனும், உயிர்களின் தீவினைகள் குறையுமாறு செய்து நிற்பவனும், திருவருளாகிய தொடர்பினை உடையவனும், மேலிடத்தில் இருப்பவனும், தூயவனும், பாவத்தைப் போக்குபவனும், `நள்ளாறு` என்னும் தலத்தை விரும்பி இருக்கின்ற முதல்வனும், யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள்  ` ஆக்கூர், நனிபள்ளி, இடையாறு, இடைமருது` என்னும் இவைகளே.

கருத்து

தேசனூர் , பாசனூர் , நாசனூர் , ஈசனூர் ` என்பன வைப்புத் தலங்களின் பெயர்கள் என்பாரும் உளர்.

 

 

பாடியவர்            சுந்தரர்
திருமுறை          7
பதிக எண்           31
திருமுறை எண்  9

பாடல்

தேச னூர்வினை தேயநின் றான்திரு வாக்கூர்
பாச னூர்பர மேட்டி பவித்திர பாவ
நாச னூர்நனி பள்ளிநள் ளாற்றை யமர்ந்த
ஈச னூரெய்த மானிடை யாறிடை மருதே.

பொருள்

எல்லா உயிர்கட்கும் பேறாகின்றவனும், பிறையை அணிந்த சடையை உடையவனும், (மாயையை விளக்கி ஞானத்தை) தெளியப்படுபவனும், திருமகளுக்குத் தலைவனாகிய திருமாலை ஒரு பாகத்தில் உடையவனும், இடபத்தை உடையவனும், யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் பெருவேளூர், குரங்காடுதுறை, கோவலூர், இடையாறு, இடைமருது` என்னும் இவைகளே.

 

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கோவிலூர்

274

தல வரலாறு(சுருக்கம்) /  சிறப்புகள் – திருக்கோவிலூர்

 

  • அட்ட வீரட்டத் தலங்களில் இரண்டாவது தலம். சிவனார் அந்தகாசூரனை சம்ஹாரம் செய்த வீரச்செயல் புரிந்த தலம்.
  • அந்தாகசூரன் எனும் அசுரனை அழிக்க ஈசனால் 64 பைரவர்கள் மற்றும் 64 பைரவிகள் தோற்றுவிக்கப்பட்ட தலம்
  • முருகர் தெய்வீகன் என்ற இளவரசனாக பச்சைக்குதிரையோடு குகமுனிவரின் யாகத்தீயில் தோன்றி காரண்டன் வல்லூரன் என்ற இரு அசுரர்களை சம்ஹரித்து மக்களின் துயர்போக்கி பாரியின் மகள்களான அங்கவை , சங்கவையை மணந்த தலம்
  • முருகர் அசுரனைக் கொன்ற பாவம் தீர சிவனாரை வழிபட்ட தலம்
  • சுக்கிரன் சாப விமோசனம் பெற்ற தலம்
  • வாஸ்து சாந்தி என்ற ஐதீகம் தோன்றிய தலம்
  • அம்பாள் திரிபுர பைரவி அவதாரத்தலம்
  • சப்தமாதர்கள் அவதாரத்தலம்
  • ஔவையார் விநாயகர் அகவல் பாடியருளிய தலம்
  • ஔவையாரை சுந்தரருக்கு முன்பு கயிலாயத்தில் சேர்ப்பித்த கணபதியான பெரியானைக்கணபதிக்கு உள்பிரகாரத்தில் சந்நிதி
  • பைரவர் வாகனம் இல்லாமல் திருக்காட்சி
  • கோயிலுக்கு அருகின் ஸ்ரீமத் ஞானியார் சுவாமி மடலாயம்
  • அருகினில் குகை நமச்சிவாயர் சமாதி, சுவாமி ஞானானந்தகிரி சுவாமிகளின் தபோவனம், ஸ்ரீ ரகோத்தமசுவாமி பிருந்தாவனம்
  • மெய்ப்பொருள் நாயனார் அரசாண்ட தலம். (ஆலய நுழைவுவாயில் உட்புற மண்டபத்தூணில் மெய்ப்பொருள்நாயனார் சிற்பம்)
  • கபிலர் பாரிவள்ளலின் மகள்களை திருமுடிக்காரிக்குத் திருமணம் செய்வித்து , பின் வடக்கிருந்து உயிர்நீத்த தலம். ஆற்றின் நடுவில் கபிலர் குகை.
  • ராஜராஜ சோழன் பிறந்த தலம்.
  • குந்தவை நாச்சியார் திருப்பணிகள் செய்துள்ள தலம்.
  • பாடல் பெற்ற தலமான அறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) இங்கிருந்து சுமார் 3 கி.மி. தொலைவு.

 

தலம் திருக்கோவிலூர்
பிற பெயர்கள் அந்தகபுரம், மலையமான் நாடு , கீழையூர், கோவலூர் வீரட்டம், திருக்கோவலூர்
இறைவன் வீரட்டேஸ்வரர், அந்தகாந்தர்
இறைவி சிவானந்தவல்லி, பெரியநாயகி , பிருஹன்நாயகி
தல விருட்சம் வில்வமரம் , சரக்கொன்றை
தீர்த்தம் தென்பெண்ணையாறு, தட்சிண பிணாகினி மற்றும் ருத்ர , கபில , கண்ணுவ , ராம , பரசுராம , யம , பிதிர் , சப்தஇருடியர் , சூரிய , அக்னி  தீர்த்தங்கள்
விழாக்கள் சித்திரையில் வசந்தோற்சவம், ஆனித்திருமஞ்சனம்,ஆடி வெள்ளிக்கிழமைகள், ஐப்பசி அன்னாபிஷேகம் , கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்,சஷ்டியில் லட்சார்ச்சனை, ஆருத்ரா தரிசனம், மார்கழியில் மாணிக்கவாசகர் திருவிழா, நவராத்திரி, மகாசிவராத்திரி, சூரசம்ஹாரம்
மாவட்டம் விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரைஅருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோவில்
கீழையூர், திருக்கோவிலூர் அஞ்சல்
திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம், PIN – 60575704153-253532 , +91-93448-79787 , +91-94862-80030 , +91-98426-23020 , +91-98423-10031 , +91-93456-60711
வழிபட்டவர்கள் விநாயகர், முருகர், ராமர், பரசுராமர், கிருஷ்ணன், காளி, ஏகாதச ருத்ரர், இந்திரன், யமன், காமதேனு, சூரியன், குரு, கண்வர், ரோமசமுனிவர், கபிலர், மிருகண்டு முனிவர், பதஞ்சலி, வியாக்ரபாதர், காமன், குபேரன், வாணாசூரன், சப்தரிஷிகள், ஆதிசேஷன்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர் 1 பதிகம், திருநாவுக்கரசர் 1 பதிகம் சுந்தரர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம் திருவண்ணாமலையில் இருந்து சுமார் 37 கிமீ, விழுப்புரத்தில் இருந்து சுமார் 37 கிமீ
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 201 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 11 வது தலம்.

அருள்மிகு பெரியநாயகி  உடனாகிய வீரட்டேஸ்வரர்

                                    வீரட்டேஸ்வரர்         பெரியநாயகி

புகைப்படங்கள் : தினமலர்

 

பாடியவர்             திருஞானசம்பந்தர்
திருமுறை          1
பதிக எண்            46
திருமுறை எண்  8

 

பாடல்

கல்லார் வரையரக்கன் றடந்தோள் கவின்வாட
ஒல்லை யடர்த்தவனுக் கருள்செய் ததிகையுள்
பல்லார் பகுவாய நகுவெண் டலைசூடி
வில்லா லெயிலெய்தா னாடும்வீரட் டானத்தே.

பொருள்

கயிலை மலையை பெயர்த்து எடுத்த இராவணனின் பெரிய தோள்களின் அழகு வாடுமாறும் அவனை வருந்துமாறும் செய்து பின் அவனுக்கு அருள் பல செய்தும், முப்புரங்களை வில்லால் எய்து அழித்தும், தனது பெருவீரத்தைப் புலப்படுத்திய பற்கள் பொருந்திய பிளந்தவாயை உடைய வெள்ளிய தலைமாலையைச் சூடிய இறைவன் இத்திருவதிகை வீரட்டானத்தே ஆடுவான்.

கருத்து

கல்லார் வரை – கயிலையை
கவின் – அழகு
ஒல்லை – விரைவாக
காலந் தாழ்க்க அடர்ப்பின் அவனிறந்தேபடுவான் என்னுங் கருணையால்.
பல் ஆர் பகுவாய – பற்கள் பொருந்திய பிளவுபட்ட வாயையுடைய.

 

பாடியவர்           சுந்தரர்
திருமுறை         7
பதிக எண்           17
திருமுறை எண்  10         

பாடல்

மிடுக்குண்டென் றோடியோர் வெற்பெடுத்
   தான்வலி யைநெரித்தார்
அடக்கங்கொண் டாவணங் காட்டிநல்
   வெண்ணெயூர் ஆளுங்கொண்டார்
தடுக்கஒண் ணாததோர் வேழத்
   தினையுரித் திட்டுமையை
நடுக்கங்கண் டார்க்கிடம் ஆவது
   நந்திரு நாவலூரே.

பொருள்

தனக்கு வலிமை உண்டு என்று செருக்கி கயிலை மலையைப் பெயர்த்தவனாகிய இராவணனது வலிமையை நெரித்து அவன் கர்வத்தை அழித்தவரும், மூல ஆவணத்தை மறைவாக வைத்திருந்து அதனை நடுவுநிலையாளர் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் மிகவும் அடக்கமாக  இருந்து அதை பிறரிடம் காட்டி என்னை அடிமையும் கொண்டவரும், தடுக்க இயலாத வலிமையுடைய யானை ஒன்றினை உரித்து உமையையும் நடுங்கச் செய்தவருமாகிய இறைவற்கு இடமாயிருப்பது நமது திருநாவலூரேயாகும்.

கருத்து

நடுக்கங் கண்டார் – அஞ்சுவித்தார்

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

 

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருமுதுகுன்றம்

274

  • ஆதியில் பிரம்மதேவர் இந்த மண்ணுலகைப் படைக்க விரும்பியபோது சிவபெருமானை துதிக்க அவர் தானே ஒரு மலையாகத் தோன்றி அருள் செய்தார். எனவே பழமலை.
  • சுந்தரர் ஈசனிடம் பொன்பெற்று இங்குள்ள மணிமுத்தாற்றில் இட்டு அதை திருவாரூர்க் கமலாலய தீர்த்தத்தில் எடுத்துக்கொண்டத் தலம்.
  • 4 புறமும் 7 நிலைகளையுடைய பெரிய கோபுரங்கள் சுமார் 26 அடி உயரமுள்ள மதிற்சுவர்கள், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோவில்.
  • பாதாள விநாயகர் – முதல் வெளிப் பிரகாரத்தில் சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ள கிழக்கு நோக்கிய விநாயகர் சந்நிதி.
  • மூன்றாம் பிரகாரத்தில் காலபைரவர் மூர்த்தம் காசியில் இருப்பது பொன்ற வடிவமைப்பு
  • சைவ சமயத்தில் உள்ள 28 ஆகமங்களை, 28 லிங்கங்களாக முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளத் தலம். 28 ஆகமங்களுக்குரிய பெயர்களான, காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவாயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர், ரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் எனவே இக்கோயில் ஆகமக்கோயில்.
  • ஆதி காலத்தில் இக்கோவிலுக்கு திருப்பணி செய்த விபசித்து முனிவர் திருப்பணி வேலை செய்தவர்களுக்கு இந்த வன்னிமரத்தின் இலைகளைப் பறித்து கூலியாக கொடுக்க அவை அத்தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ப பொற்காசுகளாக மாறிய தலம்.
  • இத் தலத்தில் உயிர்விடும் எல்ல உயிர்களுக்கும் இறைவி தம்முடைய ஆடையினால் வீசி இளைப்பாற்ற இறைவன் பஞ்சாட்சர உபதேசத்தைப் புரிந்தருளி அந்த உயிர்களை தம்முடைய உருவமாக ஆக்கும் தலம்
  • 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குருநமசிவாயர் என்னும் மகான் கிழத்தி என்று நாயகியைப்பாட, ‘கிழத்தி எவ்வாறு சோறும் நீரும் கொண்டு வர இயலும்’ எனக் கேட்க அடுத்த பாடலில் இளமை நாயகியாய் பாடியதால் இளமை நாயகியாய் வந்து உணவளித்த தலம்.
  • சக்கரதீர்த்தம் – ஆழத்துப்பிள்ளையார் சந்நிதி அருகில் திருமால் சக்கரம் கொண்டு உருவாக்கியது
  • அனைத்தும் ஐந்தாக கொண்டு விளங்கும் தலம்.
  1. தலத்தின் ஐந்து பெயர்கள் – திருமுதுகுன்றம், விருத்தகாசி, விருத்தாசலம், நெற்குப்பை, விருத்தகிரி
  2. சிவனாரின் பஞ்ச பெயர்கள் – விருத்தகிரீஸ்வரர், விருத்தகிரிநாதர், முதுகுன்றீஸ்வரர், பழமலைநாதர், விருத்தாசலேஸ்வரர்
  3. ஐந்து கோபுரங்கள் – கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கண்டராதித்தன் கோபுரம்
  4. ஐந்து பிரகாரம் – தேரோடும் பிரகாரம், கைலாசப்பிரகாரம், வன்னியடிப் பிரகாரம், அறுபத்துமூவர் பிரகாரம், பஞ்சவர்ண பிரகாரம்
  5. ஐந்து கொடிமரங்கள். அவற்றிற்கு முன்புள்ள நந்திகள் இந்திரநந்தி, வேதநந்தி, ஆத்மநந்தி, மால்விடைநந்தி, தர்மநந்தி
  6. ஐந்து உள்மண்டபங்கள் – அர்த்தமண்டபம், இடைகழிமண்டபம், தபனமண்டபம், மகாமண்டபம், இசைமண்டபம்
  7. ஐந்து வெளிமண்டபம் – இருபதுகால் மண்டபம், தீபாராதனை மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், விபச்சித்து மண்டபம், சித்திர மண்டபம்
  8. ஐந்து வழிபாடுகள் – திருவனந்தல், காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
  9. ஐந்து தேர் – விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், பழமலைநாதர், பெரியநாயகி என பஞ்சமூர்த்திகளுக்கும் தனித்தனி தேர்
  10. பஞ்ச மூர்த்தங்கள் – விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், சிவனார், அம்பாள்
  11. பஞ்ச விநாயகர்கள் – ஆழத்து விநாயகர், மாற்றுரைத்த விநாயகர், முப்பிள்ளையார், தசபுஜகணபதி , வல்லபை கணபதி
  12. சிவனாரை தரிசித்த ஐவர் – ரோமச முனிவர், விபச்சித்து முனிவர், நாத சர்மா, அநவர்த்தினி, குமாரதேவர்.

 

தலம் திருமுதுகுன்றம்
பிற பெயர்கள் திருமுதுகுன்றம் , விருத்தகாசி , விருத்தாசலம் , நெற்குப்பை , விருத்தகிரி
இறைவன் விருத்தகிரீஸ்வரர் , பழமலைநாதர் , முதுகுந்தர்
இறைவி விருத்தாம்பிகை,  பெரிய நாயகி  , பாலாம்பிகை  இளைய நாயகி
தல விருட்சம் வன்னிமரம்
தீர்த்தம் மணிமுத்தாறு , நித்யானந்தகூபம் மற்றும் அக்னி , குபேர , சக்கர தீர்த்தங்கள்
விழாக்கள் ஆடிப்பூர திருவிழா, வைகாசி வசந்த உற்சவம், மார்கழி திருவாதிரை, மாசிமகம் 10 நாள் பிரம்மோற்ஸவம்
மாவட்டம் கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 9..00 மணி வரைஅருள்மிகு பழமலைநாதர் திருக்கோவில்
விருத்தாசலம்
விருத்தாசலம் அஞ்சல்
கடலூர் மாவட்டம் , PIN – 606001
வழிபட்டவர்கள் திருமால் , பிரம்மன் , அகத்தியர் , தேவர்கள் , விதர்க்கணன் , விபச்சித்து முனிவர் , கலிங்கன் , குமாரதேவர் , சுவேதன் , ஞானக்கூத்தர் , கச்சிராயர் , குரு நமச்சிவாயர்
பாடியவர்கள் திருநாவுக்கரசர் – 1 பதிகம், திருஞானசம்பந்தர் – 7 பதிகம், சுந்தரர் – 3 பதிகம், அருணகிரிநாதர் – 3 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம் உளுந்தூர்பேட்டையில் இருந்து சுமார் 23 கிமீ, கடலூரில் இருந்து சுமார் 60 கிமீ, பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 83 கிமீ, சிதம்பரத்தில் இருந்து சுமார் 45 கிமீ
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 199 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 9 வது தலம்.

விருத்தகிரீஸ்வரர்

விருத்தகிரீஸ்வரர்

விருத்தாம்பிகை

விருத்தாம்பிகை

புகைப்படம் : தினமலர்

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை        1
பதிக எண்          12
திருமுறை எண் 8          

 

பாடல்

செதுவாய்மைகள் கருதிவ்வரை யெடுத்ததிற லரக்கன்
கதுவாய்கள்பத் தலறீயிடக் கண்டானுறை கோயில்
மதுவாயசெங் காந்தண்மலர் நிறையக்குறை வில்லா
முதுவேய்கண்முத் துதிரும்பொழின் முதுகுன்றடை வோமே.

 

பொருள்

பொல்லா மொழிகளைக் கருதிக் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த வலிய இராவணனின் வடுவுள்ள  வாய்கள் பத்தும் அலறும்படி கால்விரலால் ஊன்றிய அடர்த்த சிவபிரானது கோயில் விளங்குவதும், தேன் நிறைந்த இடம் உடைய செங்காந்தள் மலர்களாகிய கைகள் நிறையும்படி முதிய மூங்கில்கள் குறைவின்றி முத்துக்களை உதிர்க்கும் பொழில்களால் சூழப்பட்டதுமாகிய திருமுதுகுன்றை நாம் அடைவோம்.

 

கருத்து

செதுவாய்மைகள் கருதி – பொல்லாச் சொல்லை எண்ணி
கதுவாய்கள் – வடுவுள்ளவாய்

 

 

பாடியவர்          சுந்தரர்
திருமுறை        7
பதிக எண்          25
திருமுறை எண் 1          

பாடல்

பொன்செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கசைத்தீர்
முன்செய்த மூவெயிலும் மெரித்தீர்முது குன்றமர்ந்தீர்
மின்செய்த நுண்ணிடையாள் பரவையிவள் தன்முகப்பே
என்செய்த வாறடிகேள் அடியேன்இட் டளங்கெடவே.

பொருள்

பொன்னைப்போலும் திருமேனியை உடையவரே, புலியினது தோலை இடுப்பில் அணிந்தவரே, நன்கு செய்யப்பட்ட மூன்று மதில்களையும் முன்பு எரித்தவரே, திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவரே, அடிகளே, மின்னல் போலும் நுண்ணிய இடையை யுடையவளும், `பரவை` என்னும் பெயரினளுமாகிய இவள் முன்னே, அடியேனது துன்பங் கெடுதற்கு நீவிர் என் செய்தவாறு!

கருத்து

இட்டளம் – துன்பம் . ` இட்டளங்கெட என்செய்தவாறு  – , ` துன்பத்தை நீக்குகின்றீர் என்று நினைத்து முயல்கின்ற எனக்கு , நீர் துன்பத்தை ஆக்கினீர் ` என்றபடி

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

 

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருநாவலூர்

274

தல வரலாறு(சுருக்கம்) / சிறப்புகள் – திருநாவலூர்

  • மூலவர் சற்று உயரமான பாணத்துடன் சிறிய கருவறையில் கிழக்கு நோக்கி திருக்காட்சி
  • பார்வதி சிவனாரை வழிபட்டு அவரை மணந்துகொண்ட தலம்.
  • உமையன்னை உடன் வந்த சூலினி என்ற சக்தி தனது  சூலாயுதத்தால் நிலத்தில் ஊன்றி உண்டாக்கப்பட்ட தீர்த்தம். பாதாளகங்கை வெளிப்பட்டது சாம்பூநத தீர்த்தம். முருகப்பெருமான் தனது வேற்படையால் ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார். இதுவே சக்தி பில தீர்த்தமாகும். சாம்பூநத தீர்த்தமும் விநாயகர் அளித்த மலர்களையும் பயன்படுத்தி மகாசிவராத்திரியன்று முதலிரண்டு ஜாமங்களில் அபிஷேக ஆராதனைகள், பில தீர்த்த நீர் கொண்டு அடுத்த இரண்டு காலங்களிலும் உமை பூஜை செய்த தலம்.
  • சடையனாரும் , இசைஞானியாரும் (சுந்தரரின் தாய்) வாழ்ந்து முக்திபெற்ற தலம்
  • சுந்தரர் பிறந்த தலம்
  • இரு மனைவியர் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் சூழ, எதிரில் வெள்ளையானை நிற்க, சுந்தரர் கையில் தாளமேந்தி திருக்காட்சி
  • கோயிலுக்குப் பக்கத்தில் சுந்தரர் மடாலயத்தில் சுந்தரர் கையில் செண்டுடன் காட்சி
  • சுந்தரரை ஆட்கொள்ள சிவனார் முதியவர் வேடத்தில் வந்தபோது அணிந்திருந்த பாதுகைகள் – இப்பொழுதும் பாதுகாப்புடன். குருபூசை நாள் : ஆடி – சுவாதி.
  • சுக்கிரன் வழிபட்ட தலம்
  • சூரியன் திசைமாறி மூலவரை பார்த்தவாறு அமைப்பு. சுக்கிரனுக்கு எதிரில் அவர் வழிபட்ட சுக்கிரலிங்கம்
  • தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் ரிஷபத்தின் முன்னால் நின்று வலக்கையை ரிஷபத்தின் மீது ஊன்றி, மறுகையில் சுவடியேந்தி நிற்கும் கோலத்தில் காட்சி
  • திருமால் ஈசனை வழிபட்டு நரசிம்ம அவதாரம் எடுக்கும் ஆற்றலை பெற்ற தலம்
  • திருமாலின் யோக அக்னி தாக்கி, ஆதி சேஷன் விஷம் வெளிப்பட கருமை நிறமாக மாறிய கருடன். பின் அவர் சாம்பூநத தீர்த்தத்தில் நீராடி அவரது மேனியில் கருமை நீங்கி வெண்ணிறமும் புத்தொளியும் ஏற்பட்ட தலம். இதனால் கருடனுக்கு காலாந்தகன் என்றும் பெயர்
  • பங்குனிமாதம் 23 – 27 நாட்களில் சூரிய ஈசனின் மேல்வழிபாடு
  • கிருதயுகத்தில் திருமாலும், திரேதாயுகத்தில் சண்டிகேஸ்வரரும், திரேதாயுகத்தில்  சண்டிகேஸ்வரரும், துவாபரயுகத்தில் பிரம்மனும், கலியுகத்தில் சுந்தரரும் வழிப்பட்ட தலம்
  • திரேதாயுகத்தில் வன்னிவனமாக விளங்கிய இப்பகுதியில் ஒரு பசு இங்கு தோன்றியிருந்த லிங்கத்தின் மீது பரிவு கொன்டு ஆறு காலம் பாலாபிஷேகம் செய்து பூசித்தது. புலியால் கொல்லப்பட இருந்த பசுவை காப்பாற்றியதால் ஈசனார் பசுபதி
  • கருவறை சுவற்றில் சண்டிகேஸ்வரர் வாழ்க்கை வரலாற்றுச் சிற்பங்கள்
தலம் திருநாவலூர்
பிற பெயர்கள் ஜம்புநாதபுரி , திருநாமநல்லூர்
இறைவன் பக்தஜனேஸ்வரர், திருநாவலேஸ்வரர் , ஜம்புநாதேஸ்வரர்
இறைவி மனோன்மணியம்மை, நாவலாம்பிகை , சுந்தரநாயகி , சுந்தராம்பிகை
தல விருட்சம் நாவல் மரம்
தீர்த்தம் கோமுகி தீர்த்தம் , கருட நதி
விழாக்கள் ஆவணி உத்திர நட்சத்திர நாளில் சுந்தரர் ஜனனவிழா, ஆடி சுவாதி நட்சத்திரத்தன்று சுந்தரர் குருபூஜை, சித்திரைத்தேர்விழா, தமிழ்புத்தாண்டு பஞ்சமூர்த்திகள் மற்றும் சுந்தரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், ஆடிப்பூரம்,
மாவட்டம் விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு பக்த ஜனேஸ்வரர் திருக்கோவில்
திருநாவலூர் அஞ்சல்
உளுந்தூர்பேட்டை வட்டம்
விழுப்புரம் மாவட்டம் – 607204
முத்துசாமி சிவம் : 94433 82945
செந்தில் குருக்கள் : 9486150809
வழிபட்டவர்கள் பிரம்மன் , சண்டிகேஸ்வரர் , இந்திரன் , அஷ்டதிக்பாலகர்கள் , சூரியன் , சப்தரிஷிகள்
பாடியவர்கள் சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர்
நிர்வாகம்
இருப்பிடம் உளுந்தூர்பேட்டையில் இருந்து சுமார் 14 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம்
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 198 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 8 வது தலம்.

பக்தஜனேஸ்வரர்

பக்தஜனேஸ்வரர்

மனோன்மணியம்மை

மனோன்மணியம்மை

புகைப்படங்கள் : தினமலர்

பாடியவர்           சுந்தரர்
திருமுறை          7ம் திருமுறை
பதிக எண்           17
திருமுறை எண்  5

பாடல்

உம்பரார் கோனைத்திண் தோள்முரித்தார்உரித் தார்களிற்றைச்
செம்பொனார் தீவண்ணர் தூவண்ணநீற்றர்ஓர் ஆவணத்தால்
எம்பிரா னார்வெண்ணெய் நல்லூரில்வைத்தெனை ஆளுங்கொண்ட
நம்பிரா னார்க்கிடம் ஆவதுநந்திரு நாவலூரே.

பொருள்

தேவர்கட்கு அரசனாகிய இந்திரனைத் தோள் முரித்தவரும், யானையை உரித்தவரும், சிவந்த பொன்போன்றதும் , நெருப்புப்போன்றதும் ஆகிய நிறத்தை உடையவரும் , தூய வெள்ளை நிறத்தையுடைய நீற்றை அணிந்தவரும், என்போலும் அடியவர்கட்குத் தலைவரும், ஓர் ஆவணத்தினால் என்னைத் திருவெண்ணெய் நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்ட நம் அனைவர்க்கும் தலைவரும் ஆகிய இறைவருக்கு இடமாயிருப்பது நமது திருநாவலூரேயாகும்.

பாடியவர்           சுந்தரர்
திருமுறை          7ம் திருமுறை
பதிக எண்           17
திருமுறை எண்  10

பாடல்

மிடுக்குண்டென் றோடியோர் வெற்பெடுத்தான்வலி யைநெரித்தார்
அடக்கங்கொண் டாவணங் காட்டிநல்வெண்ணெயூர் ஆளுங்கொண்டார்
தடுக்கஒண் ணாததோர் வேழத்தினையுரித் திட்டுமையை
நடுக்கங்கண் டார்க்கிடம் ஆவதுநந்திரு நாவலூரே.

பொருள்

தனக்கு வலிமை உண்டு என்று செருக்கி விரைந்து சென்று கயிலை மலையைப் பெயர்த்தவனாகிய இராவணனது வலிமையை நெரித்து அழித்தவரும், மூல ஆவணத்தை மறைவாக வைத்திருந்து அதனை நடுவுநிலையாளர் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் காட்டி என்னை அடிமையும் கொண்டவரும், தடுக்க வொண்ணாத வலிமையுடைய யானை ஒன்றினை உரித்து உமையையும் நடுங்கச் செய்தவருமாகிய இறைவற்கு இடமாயிருப்பது நமது திருநாவலூரேயாகும்.

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவதிகை

274

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருவதிகை

  • வீரம் வெளிப்பட்ட அட்ட வீரட்டானத் தலங்களில் மூன்றாவது தலம். சிவனார் திரிபுர தகனம் செய்தருளிய தலம்
  • 16 பட்டைகளுடன் கூடிய சுயம்பு லிங்கம். இவருக்குப் பின்னால் கருவறைச் சுவற்றில் பார்வதி, சிவன் கல்யாணத் திருக்கோலம் காட்சி
  • திருஞானசம்பந்தருக்கு சிவனார் திருநடனக்காட்சி காட்டிய தலம்
  • திருநாவுக்கரசரின் தமக்கையாரான திலகவதியார் சிவத்தொண்டு செய்த தலம்
  • சூலை நோய் நீங்கப்பெற்று ‘திருநாவுக்கரசர்’ என்று சிவபெருமான் சூட்டிய திருநாமத்துடன் தேவாரப்பாடல் பாட ஆரம்பித்த தலம்
  • இத்தலத்தை மிதிக்க அஞ்சிய சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில்(தற்போதைய பெயர் – சித்தாண்டிமடம், சித்தாத்த மடம், கோடாலம்பாக்கம் ) தங்கி, திருவடி தீட்சை பெற்ற தலம்.
  • சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான ‘உண்மை விளக்கம்’ நூலை அருளிய மனவாசகங்கடந்தார் அவதரித்த தலம்
  • உள் சுற்றின் தென்மேற்கே பல்லவர் காலத்தைச் சார்ந்த பஞ்சமுக லிங்கம். மூன்று திக்குகளை நோக்கி நான்கு முகங்கள் உள்ளன. ஒரு முகம் (அதோ முகம்) மேல் நோக்கியது.
  • வாயில் நுழைவிடத்தில் 108 கரண நடன சிற்பங்கள்.
  • தேர் வடிவ திருக்கோயில் அமைப்பு

 

தலம் திருவதிகை
பிற பெயர்கள் அதிகாபுரி , திருஅதிகை வீரட்டானம், அதிரைய மங்கலம், அதிராஜமங்கலியாபுரம்
இறைவன் வீரட்டேஸ்வரர் வீரட்டநாதர் , அதிகைநாதர், ஸ்ரீ சம்ஹார மூர்த்தி, திருக்கெடிலவாணர்
இறைவி திரிபுரசுந்தரி
தல விருட்சம் சரக்கொன்றை
தீர்த்தம் கெடிலநதி, சக்கரதீர்த்தம்
விழாக்கள் வைகாசி விசாகம் – 10 நாள்கள் பிரம்மோற்சவம், சித்திரைச்சதயம் – 10 நாள்கள் அப்பர் திருவிழா, பங்குனி-சித்திரை மாதங்களில் நாள் வசந்தோற்சவம்,ஆடிப்பூர உற்சவம் 10 நாட்கள் ,மாணிக்கவாசகர் உற்சவம் , மார்கழி திருவாதிரை , மகா சிவராத்திரி , கார்த்திகை சோமவார சங்காபிஷேகங்கள் , பங்குனி உத்திரம் , திலகவதியார் குருபூஜை
மாவட்டம் கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரைஅருள்மிகு அதிகை வீரட்டேஸ்வரர் திருக்கோவில்
திருவதிகை
பண்ருட்டி அஞ்சல்
கடலூர் மாவட்டம்
PIN – 607106

04142-240317, 04142-240246, 94439-88779, 94427-80111, 98419-62089

வழிபட்டவர்கள் திருமால் , பிரம்மன் , திரிபுர அசுரர்களான வித்யுன்மாலி-தாருகாக்ஷன்-கமலாக்ஷன் , கருடன் , பாண்டவர் , திருமூலர் , திலகவதியார் , மகேந்திரவர்மன் , சப்தரிஷிகள் , வாயு , வருணன் , யமன்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர் 1 பதிகம்,,திருநாவுக்கரசர் 16 பதிகங்கள், சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர்
நிர்வாகம்
இருப்பிடம் பண்ருட்டியில் இருந்து  சுமார் 2 கி.மி. தொலைவு
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 197 வது தலம்

நடு நாட்டுத் தலங்களில்  7   வது தலம்.

திரிபுரசுந்தரி உடனாகிய வீரட்டேஸ்வரர்

Isan

புகைப்படம் : இணையம்

பாடியவர்          திருநாவுக்கரசர்
திருமுறை        4
பதிக எண்         26
திருமுறை எண் 9         

பாடல்

பிணிவிடா ஆக்கை பெற்றேன்
பெற்றமொன் றேறு வானே
பணிவிடா இடும்பை யென்னும்
பாசனத் தழுந்து கின்றேன்
துணிவிலேன் தூய னல்லேன்
தூமலர்ப் பாதங் காண்பான்
அணியனாய் அறிய மாட்டேன்
அதிகைவீ ரட்ட னாரே

பொருள்

அதிகைப்பெருமானே! நோய்கள் விடுத்து நீங்காத இம்மனித உடலைப் பெற்றேன்,செயற்படாதொழியாத துன்பம் நல்கும் நல்வினை தீவினையாகிய சுற்றத் தொடர்பை நெருக்கமாகக் கொண்டு, அவற்றை அடியோடு நீக்குவதற்குத் தேவையான தூய்மையும் மன உறுதியும் இல்லாதேனாய், அத்தூய்மை துணிவு என்பன வற்றை நல்கும் உன்னுடைய தூய மலர் போன்ற திருவடிகளைக் காணும் வகையில் உன்னை அறியமாட்டாதவனாய் உள்ளேன்.

 

கருத்து

பிணிவிடா ஆக்கை – பிணியானவை விடாத உடலை.
இடும்பை – இருள்சேர் இருவினையாலும் எய்தும் துன்பம்.
தூயன் – கட்டு நீங்கினேன்.
அறியமாட்டேன் – உணரமாட்டேன்

 

பாடியவர்          சுந்தரர்
திருமுறை        7
பதிக எண்         38
திருமுறை எண் 1      

பாடல்

தம்மானை அறியாத சாதியார் உளரே
சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்
கைம்மாவின் உரியானைக் கரிகாட்டில் ஆடல்
உடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்து
எம்மான்தன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடும்என்னும்
ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்
எம்மானை எறிகெடில வடவீரட் டானத்து
உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே.

பொருள்

உலகில் தம் தலைவனை உருவம் அறியாதவர் உளரோ? இல்லை. அப்படியிருக்க நீலகண்டனாகிய அப்பெருமான் தனது திருவடியை என் தலைமேல் வைத்து, சடைமேல் பிறையை உடையவனும், விடை ஏறுபவனும், யானைத் தோலைப் போர்ப்பவனும் கரிந்த காட்டில் ஆடுபவனும் எம் தலைவனும் ஆகிய, கெடில நதியின் வடகரையிலுள்ள திருவீரட்டானத்தில் விரும்பியிருக்கின்ற பெருமானை, அவன் அதனைச் செய்வதையும் யான் அறியாமல் இகழ்வேன் ஆயினேன் போலும். என்னே என் அறியாமை ! இனி அவ்வாறு நேராது போலும்.

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்