Category: சிந்தனை
மகேசுவரமூர்த்தங்கள் 1/25 சோமாஸ்கந்தர்
- திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்
- காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்
- குமரக்கோட்டம்
- காமாட்சியம்மன் கோயில்
- தென்காசி காசி விஸ்வநாதர் கோயில்
- திருக்கேதீஸ்வரம் – இலங்கை
- திருக்கருகாவூர்
- திருக்கள்ளில்
மகேசுவரமூர்த்தங்கள் – முன்னுரை
- சோமாஸ்கந்தர்
- நடராஜர்
- ரிஷபாரூடர்
- கல்யாணசுந்தரர்
- சந்திரசேகரர்
- பிட்சாடனர்
- லிங்கோற்பவர்
- சுகாசனர்
- சக்திதரமூர்த்தி
- அர்த்தநாரீஸ்வரர்
- சக்ரவரதர்
- திரிமூர்த்தி
- ஹரிஹர்த்தர்
- தட்சிணாமூர்த்தி
- கங்காளர்
- காமாரி
- காலசம்ஹார மூர்த்தி
- சலந்தாரி
- திரிபுராரி
- சரபமூர்த்தி
- நீலகண்டர்
- திரிபாதர்
- ஏகபாதர்
- பைரவர்
- கங்காதர மூர்த்தி
சைவத் திருத்தலங்கள் 274 – திருவிற்கோலம்
தலம்
|
கூவம்
|
பிற பெயர்கள்
|
கூவரம், திருவிற்கோலம், கூபாக்னபுரி
|
இறைவன்
|
திரிபுராந்தகர், சோமாஸ்கந்தர், புராந்தகேசுவரர்
|
இறைவி
|
திரிபுராந்த நாயகி, புராந்தரியம்மை
|
தல விருட்சம்
|
தனியாக ஏதுமில்லை. நைமிசாரண்ய ஷேத்திரம்
|
தீர்த்தம்
|
அக்னி, அச்சிறுகேணி மற்றும் கூபாக்கினி தீர்த்தம்
|
விழாக்கள்
|
· சித்திரை – பிரம்மோற்ஸவம்
· ஆடி – பூ பாவாடை திருவிழா
· சிவராத்திரி
· ஆருத்ரா தரிசனம்
|
மாவட்டம்
|
திருவள்ளுர்
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை
அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில்,
கூவம் – . பேரம்பாக்கம் வழி,திருவள்ளூர் மாவட்டம்.
|
பாடியவர்கள்
|
திரு ஞான சம்பந்தர், கூவப்புராணம்
|
நிர்வாகம்
|
திரு ராஜேந்திரன் – 93818-65515
|
இருப்பிடம்
|
சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து 9 கி,மீ தூரத்தில் உள்ளது
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 14 வது தலம்.
|
கொந்துலா மலர்ப்பொழிற் கூக மேவினான்
அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை
சிந்துவான் உறைவிடம் திருவிற் கோலமே
வரியர வொடுமதி சடையில் வைத்தவன்
தெரியலன் உறைவிடம் திருவிற் கோலமே
புகைப்பட உதவி : தினமலர்
அபயாம்பிகை சதகம்
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன், பெற்றோர் செய்த புண்ணியத்தால் ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு கிருஷ்ணசாமி என்று பெயர் இட்டனர்.
சிறு வயதிலே பெற்றோரை இழந்தார் கிருஷ்ணசாமி.
ஒரு முறை அவரது அழுகுரல் கேட்டு அம்பிகை வந்தாள். அமுது ஊட்டினாள். ஆறுதல் படுத்தினாள். அவ்விடம் அகன்றாள்.
ஒருமுறை கோவிலில் தன் சன்னதிக்கு அழைத்து சென்று மறைந்தாள்.
ஒரு முறை அர்த்த ஜாம வழிபாட்டை முடித்து வரும் போது, கால் இடறி விழுந்தார். விழும் போது ‘அம்மா அம்மா’ என்று அலறினார்.
அன்று முதல் அர்த்த ஜாம வழிபாடு முடிந்த உடன், யாரும் இல்லாமல் கைவிளக்கு மட்டும் தொடந்து வந்து கொண்டிருந்தது. இதனை கண்ட ஊர் மக்கள் ஆச்சரியப்பட்டனர்.
தன் நிலை குறித்து வருந்தி ‘உன்னை எப்படிப் பாடுவது’ என்று புலம்பினார்.
‘நீ பாடு, பாட்டு தன்னால் வரும் ‘ என்று உத்திரவிடுகிறாள் அம்பிகை.
உள்ளம் உருகி பாடிய பாடல்களே ‘அவயாம்பிகை சதகம்’. மொத்தம் 100 பாடல்கள்.
இவருக்கு திருமணம் நடைபெற்றது, ஆனால் இல்லறம் ஆன்மீகம் சார்ந்த சாக்த வழிபாடாகவே இருந்தது. ஊர் மக்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஒரு அர்த்த ஜாம வழிபாட்டிற்குப் பின் ஜோதியில் கலந்தார்.
கனிந்து கனிந்துன் றனைப்பாடிக் கசிந்தே இருகண் புனல்பெருகக்
காது உபயம் உனதருளாம் கதையைக் கேட்க உனதடியார்
இனந்தான் உறவாய் மனம்புதைய எந்த நாளும் அவர் இருந்த
இடத்தை இருதாள் சுற்றிவர இரவும் பகலும் நினதருளை
நினைந்த படியே சிந்தைசெயும் நெறியை உதவி எனைக்காப்பாய்
நித்யா னந்தப் பழம் பொருளே நிமலி அமலை புகழ்விமலி
வனைந்த சடலத் தொழில்உனது அடிக்கே இதமாய் அருள்புரிவாய்
மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத்தாயே.
பச்சை முழுப்பொன் னிறமுடனே பளிங்கு பவள முடன்நீலம்
பருத்த மேக முடன்ஆறாய்ப் பரவி யிருக்கும் பசுங்கிளியே
அச்ச மறவே அதன்மீதில் அருண வுதய ரவிகோடி
அகண் டாகார ரூபமதாய் அமர்ந்த சிவமோ கனமாதே
செச்சை யதன்மேல் அணிச்சிலம்புஞ் சிறுகிண் கிணித்தண் டைகளொலிக்கச்
சிவனோ டிருக்குங் கொலுமுகத்தைச் சிறியேன் காண அருள்புரிவாய்
வச்ச உனது பொருள்எனக்கு வரத்தாற் கருத்தில் உரைத்தருள்வாய்
மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத் தாயே
பாடல்கள் மிக அழகான தமிழில் இருக்கின்றன. சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் என்பதால் மிகப் பெரிய விளக்க உரைகள் தேவை இல்லை. ஆனால் அப்பாட்டின் கருத்துக்கள் மிக ஆழமானவை.
பாடல்கள் அனைத்தும் ‘மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத் தாயே’ என்றே முடிகின்றன.
உலக அன்னையின் அனுபவங்களை உணர்ந்தவர்கள் எவ்வாறு மீள முடியும்.
அரைஞாண் கயிறு அணிவது ஏன்?
சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்
சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்
சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்
சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்
சைவத் திருத்தலங்கள் 274 – சிறு குறிப்பு
நகர மறுக்கும் நினைவுகள் – 3 ஆச்சார்ய தேவோ பவ:
முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 6
முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 5
முருகன் குறித்த பொருள் பேசப்படும் போது எழும் தத்துவம் குறித்தவை இவ்விரண்டு பாடல்களும்
பாடல்
போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்பும் உள்ளும்
வாக்கும் வடிவும் முடிவும் இல்லாதது ஒன்று வந்துவந்து
தாக்கும் மனோலயம்தானே தரும் எனைத் தன் வசத்தே
ஆக்கும் அறுமுகவா சொல்ல ஒணாது இந்த ஆனந்தமே. – 73
பொருள்
ஆறு திருமுகங்களை உடைய திருமுருகனே, போதல், வருதல், இரவு, பகல், புறம், உள், வாக்கு, வடிவம், இறுதி ஆகிய எதும் இல்லா ஒன்று(ப்ரம்மம்) என்னிடம் வந்து வந்து என்னைச் சேர்ந்து, மனோ லயம் தானே தந்து என்னை தன் வசத்தே ஆக்குகிறது. இப்படிப்பட்ட ஆனந்தத்தை விவரிக்க இயலாது.
கருத்து
· மனிதன் முதலிய பிறவிகளுக்கே இருமைகள் உண்டு. இருமைகள் இல்லாதவன் முருகப் பெருமான் –
o போதல், வருதல்
o இரவு, பகல்
o புறம், உள்
· வாக்கும் வடிவும் – எண்ணங்களே வாக்காகவும் பின் அவைகள் வடிவமும் கொள்கின்றன என்பது துணிபு.இவைகள் இல்லாத ஒன்று – இவைகள் அனைத்தில் இருந்தும் விலகி இருப்பவன் (முருகன்)
· வந்து வந்து தாக்கும் – இறைமை நம்மை (விரும்பி) அழைத்துச் செல்கிறது.
· இது மனதினை லயப் படுத்துகிறது. – ஜப கோடி த்யானம், த்யான கோடி லயம் என்ற தியாகராஜ சுவாமிகளின் வரிகள் நினைவு கூறத் தக்கது.
· எனைத் தன் வசத்தே ஆக்கும் – இறைமையே நம்மை வசப்படுத்துகிறது
2.
பாடல்
தடக்கொற்ற வேள்மயி லேயிடர் தீரத் தனிவிடில்ந
ணவடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக்
கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்
திடர்க்கப் புறத்துத் திசைக்கப் புறத்துந் திரிகுவையே. 96
பொருள்
முருகனது மயிலே, உலகியல் துன்பம் நீங்க உன்னை தனியாக விடுவாராயின், வட திசையில் இருக்கும் மேரு மலையைத் தாண்டி, உனது தோகையினால் சுழன்று, கடல், சூரியன், தங்கச் சக்கரம் ஆகியவைகளைக் கடந்து, திசைகளைக் கடந்து உலவுவாயாக.
கருத்து
மயில் என்பது குறீயீடாக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. த்யான மார்க்க அனுபவங்கள் கூறப் பட்டிருப்பதால், குரு முகமாக அறிக.
காற்றில் ஆடும் சருகுகள் – 2
யாசிக்கையில், கைகளைவிட கண்கள் கனமாக இருக்கின்றன.
—————————————————————————————————
தனது பெண், முதல் முறை மூக்குத்தி அணியும் அழகை கண்டு ரசிக்கும் தாயின் கண்கள் சிறப்பானவை. இருவரையும் ரசிக்கும் தகப்பனின் கண்கள் அதை விட அழகானவை.
—————————————————————————————————
ப்ரம்மா – இவன் தமிழனாக பிறக்கட்டும்.
சித்திர குப்தன் – இவன் நிறைய தவறுகள் செய்திருக்கிறான். இவனை எப்படி தண்டிப்பது?
ப்ரம்மா – இவனை …. க்கு கணவணாக்கி விடு.
உயிர் – அது மட்டும் வேண்டாம், வேற எந்த தண்டனையும் கொடுங்கள். செத்தான்டா சேகர்.
இச்சா மரணம் – பீஷ்மர்
முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 3
நகர மறுக்கும் நினைவுகள் – 1
போகிப் பண்டிகை
போகிப் பண்டிகை
பொது – பழைய பொருள்களை மற்றும் தேவை அற்ற பொருள்களை எரித்து சுத்தம் செய்யும் பண்டிகை
ஆன்மீகம் – பொருள்களை எரித்து சுத்தம் செய்யும் பண்டிகை அல்ல. அது ஒரு உருவகம். தன்னில் இருக்கும் தேவை அற்ற நினைவுகளை, மன கசப்புகளை, கோபங்களை, வருத்தங்களை இன்னும் பிற விஷயங்களை நீக்கி ஒரு புதிய தொடக்கத்திற்கான தொடக்கம் காட்டும் பண்டிகை.
புகை இல்லா போகிக் கொண்டாடி ஒரு வளரும் சமுதாயத்திற்கு வழி காட்டுவோம்.
Click by: Gayu Venkat
முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 2
கந்தர் அலங்காரம்
தன் நிலை குறித்து புலம்பல்
1.
விளக்கம்
தோலால் சுவர் வைத்து – சுவர்கள் தோலால் எழுப்பப்பட்டிருக்கின்றன.
நாலாறு காலில் சுமத்தி – அவைகள் கால்களின் மேல் சுமத்தப்பட்டிருக்கின்றன.
இருகாலால் எழுப்பி – அவைகள் இருகாலால் எழுப்பபட்டிருக்கின்றன.
வளை முதுகோட்டி – அவற்றின் முதுகு வளைந்திருக்கிறது.
கைநாற்றி – கைகள் நாற்றப்பட்டிருக்கின்றன
நரம்பால் ஆக்கை இட்டு – அவைகள் நரம்பால் இணைக்கப்பட்டிருக்கின்றன.
தசை கொண்டு மேய்ந்த அகம் பிரிந்தால் – அவற்றின் மேற்கூரை தசையால் ஆக்கப்பட்டிருக்கிறது.
வேலால் கிரி துளைத்தோன் – முருகன்
அடித் தாளின்றி – பாதங்கள்
பொருள்
உடலின் இயல்புகளும் அவற்றின் அமைப்புகளும் விளக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட உடலில் உயிர் நீங்கும் போது முருகனின் அடித்தாள் அன்றி வேறு துணையில்லை.
கருத்து
நாலாறு காலில் சுமத்தி – அவைகள் கால்களின் மேல் சுமத்தப்பட்டிருக்கின்றன.
1.
4+6 = 10 (தச வாயுக்கள் என்றஒரு கருத்து உண்டு.உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற்காற்று,ஒலிக்காற்று,நிரவுக்காற்று,விழிக்காற்று,இமைக்காற்று,தும்மல்காற்று,கொட்டாவிக்காற்று,வீங்கல்காற்று)
2.
சந்திரநாடி ,சூரியநாடி,நடுமூச்சு நாடி,உள்நாக்கு நரம்புநாடி,வலக்கண் நரம்புநாடி,இடக்கண் நரம்புநாடி,வலச்செவி நரம்புநாடி,இடதுசெவி நரம்புநாடி,கருவாய் நரம்புநாடி,மலவாய் நரம்புநாடி என்று பத்து வித நாடிக்களை குறிப்பது உண்டு.
அதுவும் தவிர கீழ்கண்ட கருத்தும் உள்ளது.
3. ஆறு ஆதாரங்களும் (மூலாதாரம், ஸ்வாதிஸ்டானம் ,மணிப்பூரகம் ,அனாகதம்,விசுத்தி , ஆக்ஞை ) அவற்றுடன் சேர்த்து அந்தக்கரணங்கள் 4ம் சேர்த்து(மனம், புத்தி, சித்தம் மற்றும் அகங்காரம்) 10 என்பாரும் உளர்.
உயிர் பிரியும் நேரத்தில் உற்ற துணையாக இருப்பது அவனது திருப்பாதங்களே என்கிறார் அருணகிரியார்.
நாற்றுதல் – நடுதல் என்ற பொருளில் வந்துள்ளது
2.
விளக்கம்
கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன் – வினைகளின் வழியாக வரும் உடலை நீக்கி உயர் பதம் பெற ஒரு வழியையும் காண்கிலேன்.
நதிதினை யன்னபொய் வாழ்விலன் பாய் – வாழ்வு நதியினை ஒத்து இருக்கிறது.
நரம் பாற்பொதிந்த பொதிதனை – உடல் நரம்பால் ஆக்கப்பட்டிருக்கிறது.
திண்டாடு மாறெனைப் போதவிட்ட – என்னை திண்டாடுமாறு விட்ட
விதிதனை நொந்துநொந்து – இது விதியினால் நிகழ்த்தப்பட்டது அதனால் மனம் நொந்துவிடுகிறது.
என்மனம் வேகின்றதே – இதனால் என் மனம் வேகின்றது.
கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன் கந்த வேல்முருகா
நதிதினை யன்னபொய் வாழ்விலன் பாய்நரம் பாற்பொதிந்த
பொதிதனை யுங்கொண்டு திண்டாடு மாறெனைப் போதவிட்ட
விதிதனை நொந்துநொந் திங்கேயென் றன்மனம் வேகின்றதே. 98
பொருள்
(கதி – நற்கதி) முக்தி பெறுவதற்கு உரிய ஒரு மார்கத்தையும் நான் அறியவில்லை. இவ்வாழ்வு நதியினை ஒத்து பொய் வாழ்வாய் இருக்கிறது. நரம்பால் ஆக்கப்பட்டிருக்கிறது. அதனால் உடல் கட்டப்பட்டிருக்கிறது. விதி வசப்பட்டு நிலையற்றவாழ்வால் மனம் நொந்து என் மனம் வேகின்றது.
கருத்து
தத்துவார்தமாக சொல்லும் போது நதியினை ஒரு குறியீடாக பயன்படுத்துவார்கள். காரணம் நதி பருவ காலங்களுக்கு உட்பட்டு தனது போக்கில் சென்று கொண்டிருக்கும். அது போல வினையின் காரணமாக உயிர்கள் பிறப்பெடுத்துக் கொண்டிருக்கும்.
அனைத்தும் வினையின் காரணமாக விதியாக உருவாகிறது. ‘என் செயல் யாதொன்றும் இல்லை’ என்ற பட்டினத்தாரின் வரிகள் நினைவு கூறத் தக்கது.
வேகின்றது என்ற பதம் இன்னும் முழுமை அடையவில்லை என்பதைக் குறிக்கிறது. இது அருணகிரியாருக்காக எழுதப்பட்டதல்ல. இது சாதாரண மக்களுக்காக எழுதப்பட்டது.