முன்னேற்றம்

என்ன செய்து கொண்டிருக்கிறது
உடல்
இறப்பு நோக்கி முன்னேறுவது தவிர.









Click by : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 9

போராட்டங்களில் முடிவு மௌனத்தில் நிறைவு பெறுகிறது.
———————————————————————————————- 
சந்நியாசிகள் உருவாவதில்லை. உருவாக்கப் படுகிறார்கள்.
———————————————————————————————- 
இரு பெண் குழந்தையின் தகப்பனின் கண்களில் ஒரு கர்வம் இருக்கத்தான் செய்கிறது. முன்று பெண் குழந்தைகளை கொண்டிருப்பவனின் கண்களில் கர்வமும், கவலையும் தெரிகிறது.
———————————————————————————————- 
பேருந்து நிலையத்தில் மனைவியிடம் பணம் பெறும் கணவனின் கண்கள் எப்போதும் மண் நோக்கியே இருக்கின்றன. கண்கள் நீர் கோத்தே இருக்கின்றன.
—————————————————————————————————————————————————————- 
நேசித்தல் இயல்பாகும் வரையினில் வலிகள் இருக்கும்.
—————————————————————————————————————————————————————-
யாரும் அற்ற பேருந்து நிழற் குடையில் உறங்கும் மனிதனின் சந்தோஷங்கள் நிலையானவையா?
—————————————————————————————————————————————————————-
தனது மகனை முத்தமிடும் தாயின் கண்கள் எப்போதும் பனித்திருக்கின்றன.
—————————————————————————————————————————————————————-
பெண்ணைத் துறக்கும் எந்த ஆணிற்கும், தன் பெண்ணைத் துறத்தல் அரிதாகவே இருக்கிறது.
—————————————————————————————————————————————————————-
காரினில் முன்னிருக்கையில் தாயில் மடியில் அமர்ந்து வாயில் விரல் வைத்து செல்லும் குழந்தையின் கனவுகளும் ஏக்கங்களும் என்று நிஜமாகும்?
—————————————————————————————————————————————————————-திருமண கோலத்தில் இருப்பவர்களைப் பார்த்து மற்றவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்று இப்போழுது 
தான்  தெரிகிறது. (டேய், போடா, போடா)

Loading

சமூக ஊடகங்கள்

புன்னகைக் பூக்கள்

கர்வம் கொண்டு
கனவு காண்பவனைக்
கண்டு சிரிக்கின்றன மயானங்கள்.











Click by : RssK Clicks

Loading

சமூக ஊடகங்கள்

காயம் படிந்த காயங்கள்

மௌனித்திருக்கும்
மனித உடல் எங்கும்
புலப்படா காயங்கள்.











Click by : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

தொடுவானம்

முந்திச் செல்லும் மழையினில்
நனைந்தபடி நானும்,
சிறு குடை பிடித்த படி நீயும்.
வாகனங்கள் ஒலி எழுப்பி
கரைகின்றன.
யாரும் அற்ற பொழுதுகளில்
குடைக்குள் இருந்து திரும்பிப்பார்த்து
புன்னைக்கிறாய்.
காலங்களும் உறைந்து நிற்கின்றன.
பிறிதொரு மழை நாளில்
மழை நீருடன் உன் நினைவுகளும்.

Click by : SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – 9 – கொடியிலே மல்லிகைப்பூ

படம் :  கடலோரக் கவிதைகள்
விடியற்காலையில் எழும் சிதம்பரம்கோயில் மணி ஓசையாய் வரிகள் ஆரம்பமாகின்றன். (ஒரு வெண்கலக் குரலுக்கு சொந்தக்காரர்ஜெயச்சந்திரன்)
அன்பினைப் பகிர்தல் மட்டுமே அடிப்படையாக அமைக்கப்பட்ட காட்சி அமைப்புகள்.

மிகச் சிறிய குழந்தையின் தீண்டல் நம் வலிகளை எல்லாம் தீர்ப்பது போல் இப் பாடல் நம் வலிகளை தீர்க்கிறது.

தலைவன் தலைவி இருவரும் கடல் சூழ் பாறை அருகினில். தவைவனுக்கு முள் குத்திவிட்டது. தலைவி எடுத்து விடுகிறாள். பாடல் ஆரம்பமாகிறது. பின் புறத்தில் காலைச் சூரியன்.
கொடியிலேமல்லிகைப்பூ மணக்குதேமானே
எடுக்கவாதொடுக்கவாதுடிக்கிறேன் நானே
ஒரு ஆடு காண்பிக்கப்படுகிறது. தலைவி அதைத் துரத்துகிறாள். கைகளில் எடுக்கிறாள். தட்டாமாலை சுற்றுகிறாள். கடல் அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றன.
பறிக்கச்சொல்லித்தூண்டுதேபவழமல்லித் தோட்டம்
நெருங்கவிடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம்
தலைவி வீட்டுக்குள் நடை பழகுகிறாள். அவள் பார்ப்பது ஏசு பிரான் படம்.
கொடியிலேமல்லிகைப்பூ மணக்குதேமானே
கொடுக்கவாதடுக்கவாதவிக்கிறேன் நானே
தலைவி நினைத்துப் பார்க்கிறாள். தலைவன் புத்தகங்களுடன். அவளுக்குள் புன்னகை.
வித விதமான புகைப்படங்களுக்கு தலைவி முகம் காட்டுகிறாள்.
பின்புறத்தில் கடல் அலைந்து கொண்டிருக்கிறது.
கடற்கரைமணலில்‘ ABCD’ எழுதப்பட்டிருக்கிறது. எதிர் எதிர் திசைகளில் இருவரும். இசைக்கு ஏற்றவாறு கடல் அலை வேகமாக பாய்கிறது.
மெதுவாகநடக்க ஆரம்பிக்கிறாள். மனம் நிச்சயமில்லாமல் இருக்கிறது. கனவுக்குள் இருக்கிறாள்.
மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம்இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்.
தலைவன் பல் விளக்குகிறான்கையில் நீர்ப்பாத்திரம். கொப்பளிபதற்கு பதிலாக அருந்துகிறான்.
நித்தம்நித்தம்உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
இது மீண்டும் நிகழ்கிறது. அன்னை வேடிக்கைப் பார்க்கிறாள். ஆச்சரியப்படுகிறாள்.
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்.
தலைவி மிகப் பெரிய இடத்தில் நடந்து வருகிறாள்
பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல
மேற்கே சூரியன வந்து விடுகிறது.
சொல்லத்தானே தெம்பு இல்ல இன்பதுன்பம் யாரால
தலைவி பாறை மேல் அமர்ந்திருக்கிறாள். மீன் பிடித்து வரவா என்கிறான் தலைவன். வேண்டாம் என்று மறுத்து விடுகிறாள் தலைவிஅதைக் கேட்காமல் கடலுக்குள் ஓடிச் செல்கிறான்.
மிகப் பெரிய அலையில் தலைவன் விழுகிறான்.
தலைவி திகைக்கிறாள். மீண்டும் அலைகள் மட்டும் வருகின்றன. தலைவனைக் காணோம்.
பறக்கும்திசையேதுஇந்தப் பறவை அறியாது
உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது
விழிகள்நாலா புறமும் அலைகின்றன. தலைவனைக் காண்வில்லை.
தலைவன் பிடித்துவந்த மீனைவைத்து பின்னால் இருந்து பயமுறுத்துகிறான்.
பாறையிலேபூ முளைச்சு பார்த்தவங்க யாரு
தலைவன் கேள்வி கேட்கிறான்.’பயந்துட்டியா
காட்டி அசைகிறது.
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு
இருவரும்சிரித்துமகிழ்கிறார்கள்.
காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
மீண்டும்நிஜங்களுக்கு காட்சி வருகிறது. வீட்டில் அனைவரும் சாப்பாட்டிற்கு தயாராக இருக்கிறார்கள்.

தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே.
கணத்தில்காட்சி மாறுகிறது. சில வினாடிகளுக்கு காட்சி தொடர்கிறது.
மனித மனங்களின் விசித்திரங்களில் ஒன்று அலைப்பார்த்தல். அதை உருவமாக ஆக்கி செய்திருக்கும் காட்சி அமைப்பு மிக ஆச்சரியம்.
அதனால் தான் மல்லைகையின் வாசம் மனதையும் விட்டு அகலாமல்

Loading

சமூக ஊடகங்கள்

கரையில் நீந்தும் மீன்கள்

மனிதர்களோடு
மூடப்படுகின்றன
அவற்றின் கதவுகள்







Click by : R.S.S.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

மினுமினுப்புகள்

தெருவில் பார்த்துவிட்டு
புழக்கடைக்கு திரும்பிய பின்னும்
தெரிகிறது நட்சத்திரங்கள்.









* பல நேரங்களில் வீட்டின் வாசலில் நட்சத்திரங்களை எண்ணிவிட்டு கொல்லைப் புறத்தில் வந்து சரிபார்த்திருக்கிறேன். மாற்றி அமைக்கப்பட்ட நிகழ்வுகளில் கடந்த காலங்களில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட நினைவுகள்.

Click by R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

வாழ்வின் அர்த்தங்கள்

மகளின் உறக்கத்தில்
தகப்பனை தலையணைக்குள் தேடுகையில் வாழ்வு முற்றுப் பெறுகிறது.








Click by : Vinod V

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 8

நம் குழந்தைகள் நம் முன்னே வளர்தல் தான் உலகின் மிகப் பெரிய அதிசயம்.
——————————————————————————————————————————————————————-
மறுத்தலில் மகிழ்வுறுபவன் மயானம்அடையான்.
——————————————————————————————————————————————————————-
மிகக் குறைந்த தூரம் ஷேர் ஆட்டோவில் பயணிக்கும் மிக வயதானவனில் அருகில் அமரும் இளம்   பெண்கள், யாரும் அறியாமல் ஒரு இதழ் வழி புன்னகையை வயதானவனிடம் ஏற்படுத்துகிறார்கள்.
——————————————————————————————————————————————————————-
விளக்கில் இருந்து எடுத்த பின்னும் நூல் திரியில் இருக்கும் எண்ணை தீரும் வரை அது எரியும்.  அதுபோல்  ஆன்மாக்கள் பக்குவம் பெறாமல் ஆசைகள் இருக்கும் வரை பழைய வாசனையின் காரணமாக பிறப்பு தொடர்ந்து கொண்டிருக்கும்.
——————————————————————————————————————————————————————-
சிறு மழையில்தாயின் குடையில் வராமல் தலையை குடைக்குள் வைத்து கைகளை மழையில்   நனைந்து செல்லும் சிறார்களில் சந்தோஷங்கள் வலிமையானவை.
——————————————————————————————————————————————————————-
மனைவி :  இன்னைக்கு லீவுஇன்னைக்கு முக்கியமா…. என்னங்க பேசாம இருக்கீங்க.
கணவன் : கையால் சைகை காட்டி – மௌனம் (எப்புடி)
மனைவி :  எல்லா நாளும் அப்படித் தான் பேசாம இருக்கீங்கஇது என்ன புதுசா (எப்புடி
——————————————————————————————————————————————————————-வாசிப்புக்கு உரிய கைகள் யாசித்தலே வாழ்வின் மகத்தான வலிகளில் ஒன்று.
——————————————————————————————————————————————————————-புகைவண்டியில் பயணிக்கும் போது பொருள் வேண்டி பாடும் கண்கள் அற்றவனின் ‘முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்‘ என்ற பாடல் அதிக வலி உண்டாக்குகிறது.
——————————————————————————————————————————————————————-
தனது முதல் நரையைகாணும்ஆணின்மனவலிகள் அதிகமானவை. பெண்ணின் மனவலிகள் அதைவிடஅதிகமானவை.
——————————————————————————————————————————————————————-மனைவியின்பயண்பாட்டிற்குஏற்றவாறு கணவன் நேசிக்கப்படுகிறான்.

Loading

சமூக ஊடகங்கள்

நாற்றம்

மலராமல் இருக்கிறது
மலர் விற்பவர்களில்
வாழ்வு

நாற்றம்*மணம்




Click by : R.S.S.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 7

என்னதான்“iPhone 5s ” வைத்திருந்தாலும், 10 பைபேலன்ஸ் இல்லாவிட்டால் பேசமுடியுமா?
இப்படிக்கு நோக்கியா 1100 வைத்துiphone 5s க்குஆசைப்படுவோர் சங்கம்.
——————————————————————————-







தந்தை:
மனைவியிடம் பெற்ற காயங்கள் மருந்தாய் உருமாற்றம் கொள்கின்றன மகளால்.
——————————————————————————————————————————————————————-
வறுமை உடையவனை பெரும்பசிகள்வந்துசேர்கின்றன.
——————————————————————————————————————————————————————-
அன்பினைப் பெறுவதில் மிருகங்கள் விரும்புகின்றன. அதில் விலக்கம் கொள்ளும் மிகப்பெரியமிருகம் மனிதன்மட்டுமே.
——————————————————————————————————————————————————————-
எனக்கு 5 ரூ பொம்மைக் கார் வாங்கித் தந்தால்ஒவ்வொரு கன்னத்திற்கும் 10 முத்தம் தருவேன் என்ற மகளின் வார்த்தைகளில் மகிழ்வு கூடி தந்தையின் வாழ்வு நிலை பெறுகிறது.
——————————————————————————————————————————————————————-
நேசிப்பதை விட நேசமாய் இருப்பதாய் காட்டும் காலங்கள் அதிகமாக இருக்கின்றன.
——————————————————————————————————————————————————————-
வானவூர்தி பார்த்து கைஅசைக்கும் ஒருகுழந்தையின் மகிழ்வு, மிகஅதிகமாக சந்தோஷம் கொண்டமனிதனின் மகிழ்வினை விடஅதிகம்.
——————————————————————————————————————————————————————-
தந்தையின் கண்கள்பார்த்துப் பேசும்சிறுபெண்குழந்தையின் கண்கள்ஆயிரம்கவிதைகளைச் சொல்கின்றன. பதில்பேசும்தந்தையின் கண்கள்இன்னும் பல்ஆயிரம்கவிதைகளைச் சொல்கின்றன.
——————————————————————————————————————————————————————-
வாழ்வு நிச்சயமாக மாறாமல் இருக்கிறது.ம் 31ம் தேதி இரவு வங்கிக் கணக்கும், 1ம் தேதி தேதி இரவு வங்கிக் கணக்கும்.
——————————————————————————————————————————————————————-
காதலிநீங்க இப்படிபேசினா, இனிமேபேச்சநிறுத்திடுவேன்.
காதலன்சரி, இனிமேஇப்படிபேசல.(இது தெரிஞ்சிருந்தா, 3 வருஷத்திற்கு முன்னமே உன்சகவாசத்தை கட்பண்ணியிருப்பேனே. வடபோச்சே.)

சத்யமாக ஒட்டு கேட்டது

Loading

சமூக ஊடகங்கள்

மீதமிருக்கும் பிரபஞ்சம்

ஆற்றில் வழிந்தோடும் நீரை
கைகளில் அள்ளிய பிறகும்
மீதமிருக்கிறது பிரபஞ்சம்.











Click by : VG Santhosh Kumar

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 6

மனிதர்களை விட வீடுகள் அதிகமாக வலிகளைஉள்வாங்குகின்றன.
——————————————————————————-விடுமுறை தினத்தில் எழுப்பப்படும் குழந்தைகளின் ‘5 மினிட்ஸ் ப்ளிஸ்‘ என்ற வார்த்தைகள் நூறு   ஆயிரம் சிறகசைப்புகளை தோற்றுவிக்கிறது.
—————————————————————————————————————————————————————–
ஒவ்வொரு பனித்திருக்கும்  கண்களும் உணர்த்துகின்றன தனதுப்ராத்தனையை இறைவன்ஏற்றுக் கொண்டதை.
—————————————————————————————————————————————————————–
இருக்கை முன்அமர்த்து செல்லும் 3 வயதுபெண்குழந்தைவெவ்வேஎன்றுபழிப்பு காட்டுவதில் பயணம்முடிந்து விடுகிறது. நினைவுகள் மட்டும் தொடர்கிறது.
—————————————————————————————————————————————————————–
உதிரும் சொற்களை விட உலரா கண்ணீரும், அதன் சார்ந்த மௌனமும் பெரும் காயம் ஏற்படுத்துகின்றன.
—————————————————————————————————————————————————————–
காலைநேரத்தில் வெற்றுகாகிதத்தை விரட்டி சிறுநாயின்சந்தோஷம் மனிதசந்தோஷங்களை விடமிகஅதிகமாக தெரிகிறது.
—————————————————————————————————————————————————————–
பேருந்தில் பயணம்செல்பவர்களை விடஅவர்களின் கனவுகள் அதிகமாக இருக்கின்றன. அக்கனவுகள் முதல்இழப்பைவிடஅதிகவலியுடன் இருக்கின்றன.
—————————————————————————————————————————————————————–
வித்தை தெரிந்த வீரன் மரணத்தின் போது மட்டும் போராடுவதில்லைமரணம் வரும் வரை   போராடுவான்நான் வீரன்
—————————————————————————————————————————————————————–
தனி மனித வாழ்வு எப்போதும் பிறரால் தீர்மானிக்கப் படுகிறது. உ.ம் பேருந்தில் ஜன்னல் அருகில் இருப்பவன் நமக்கும் சேர்த்து முடிவு செய்கிறான் நமக்கு காற்று வேண்டுமா இல்லையா என்று.
—————————————————————————————————————————————————————–

மறுதலித்தலும் நிராகரிக்கப்படுவதும் வீட்டில் இருந்து தொடங்கப்பட வேண்டும். ஏன்எனில்அவைகள்உலகங்களால் கற்றுக் கற்றுத்தரும் போதுவலிகள்அதிகமாக இருக்கும்.

Loading

சமூக ஊடகங்கள்

ஆதி நிகழ்வுகள்

விளக்க முடியா காலத்தில்
சொற்களின் பரிச்சயமும்
அதன் பயன்பாடுகளும்
உண்டானது.
விசித்திரம் அறியும் முன்னே
கொட்டிக்கிடக்கும் எழுத்துகள்
குவிந்து தோன்றின.
வார்த்தைகளின் அடுக்குதலை
அறிவித்தான் ஒருவன்.
கலைந்த எழுத்துக்களைக்
கவிதை ஆக்க கற்றுத் தந்தான் மற்றொருவன்.
சுழலும் கலைடாஸ் கோப்பாய்
வார்த்தைகளின் ருசியில்
வண்ணங்களின் வார்ப்புகள்.
வாள் வித்தை காட்ட
வயிறு ஒடுங்கிய ஒருவனை விரும்பி தேர்ந்தேடுத்தேன்.
வித்தைகளுக்கு முன்பான ஒரு தருணத்தில்
விரும்பி கற்றுத் தந்தான் மௌனத்தை.
காலடித் தடயங்களை
அழித்துச் செல்லும் கடல் அலைகளாய் மனம்.
பிறகு சொற்கள் அற்று, வார்த்தைகள் அற்று

மௌனத்தின் பாஷைகள் மட்டும்.


Click by : Bragadeesh Prasanna.

Loading

சமூக ஊடகங்கள்

கர்ணன்

தட்டில் விழும் சிறு சில்லறையினை எடுத்து
இது எத்தனை ரூபா அம்மா
எனும் கண்கள் அற்ற சிறு குழந்தைகளின்
வார்த்தைகளிலும் வழிந்தோடுகிறது வலிகள்.













Click by : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – 6 – உன் கண்ணில் நீர் வழிந்தால்..

படம் :வியட்நாம் வீடு
இன்றைக்குஇருப்பதுபோல் மிகப் பெரிய காட்சி அமைப்புகள் இல்லாமல் கவிதையும் இசை சார்ந்த வடிவங்களும் கொண்ட ஒரு பாடல்.
ஒரு நிஜமான கணவன் மனைவியின் வாழ்வுகள் பதிவு செய்யப்பட்ட பாடல். பாரதியின் சாயலில் கண்ணம்மா என்று அழைத்தலும் உண்டு.
மிகவும்கைத் தேர்ந்த மருத்துவரின் கத்தி நோயாளின் காயத்தை சுற்றி அறுப்பது போல், இசையின் முன்னறிவிப்பு இன்றி TMSன் குரலில் பாடல் ஆரம்பம் ஆகிறது.
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவை அன்றோ கண்ணம்மா
என்னுயிர்நின்னதன்றோ..
தலைவனின்நிலை கண்டு கலங்குகிறாள் தலைவி. மண் நோக்கிய அழுகை. (தலைவன் கண்டு விடுவானோ என்ன? ).
திருமண நிகழ்வு தொடங்குகிறது. அக்னி வலம் வருதல் தொடர்கிறது.
வார்த்தகளின் ஆரம்பங்களில் நிகழ்காலம்.
தலைவன் அமர்ந்திருக்கிறான். தலைவி அவன் காலடியில்.
உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கைஒளிமயமானதடி
தலைவி கண்ணில் மகிழ்வுடன் கூடிய கண்ணீர். (நவ ரசங்களையும் காட்டிய நாயகி அல்லவா)
பொன்னை மணந்ததினால்
உலகில் புகழும் வளர்ந்ததடி
கம்பீரத்துடன் கூடிய தலையாட்டல் (ஒரு சூரியன், ஒரு சிவாஜி)
தலைவியின்அழுகையினைதுண்டால்துடைத்துவிடுகிறான்.
மரமும் அதன் வேர்களாக குழந்தைகளும். கண நேரத்தில் வேர்கள் மறைகின்றன. மாபெரும் வலியினை உள் வாங்கி தலைவன். நிலை குலைந்து விழுகிறான் தலைவன். தாங்கிப் பிடிக்கிறாள் தலைவி.
தலைவனும்தலைவியும்ஊஞ்சலில்.
கால சுமைதாங்கி போலே
மார்பில்எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் விம்மல் தணியுமடி
ஆலம் விழுதினை போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
என் வேரென நீ இருந்தாய் ‍‍
அதில் வீழ்ந்து விடாதிருந்தேன்.
பார்வை அற்றவர்களின் பாத்திரத்தில் உருளும் ஒற்றை நாணயமாய் காட்சிகளும், பாடல் வரிகளும்.
காட்சி மாறுகிறது.
தலைவி மடியினில் தலைவன். தலை கோதுகிறாள். காட்சி மாறுகிறது.
காலம் மாறி இருக்கிறது. தலைவி மடியினில் தலைவன். தலை கோதுகிறாள்.
முள்ளில்படுக்கையிட்டு
இமையை மூடவிடாதிருக்கும்
பிள்ளை குலமடியோ
என்னை பேதைமை செய்ததடி
பேருக்குபிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
பேருக்குபிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
தலையை நிமிர்ந்து பார்க்கிறான் தலைவன்.

என் தேவையை யார் அறிவார்
வினாக்குறி தலைவி கண்களில்.
என் தேவையை யார் அறிவார் உன்னை போல்
தெய்வம்ஒன்றே அறியும்
தலைவி தலைவனின் கைகளை கன்னத்தில் வைத்துக் கொள்கிறாள்.
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் வரையில் தில்லானா மோகனாம்பாள் படத்தில் இருவருக்கும் போட்டி இல்லை. இப்பாடலே அப்படம் முழுவதையும் காட்டி விடுகிறது.

காலம் கடந்து கணவன் மனைவி அன்னியோனத்தை காட்டும் மிக அழகான பாடல்

இன்னமும் நீர் வழிந்து கொண்டிருப்பதே பாடலின் வெற்றிக்கு சாட்சி.

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 5

எதிர்பாராமல் குழந்தைகளால் பெறப்படும் முத்தங்களால் சில கனவுகள் கலைகின்றன. பல கனவுகள் உருவாகின்றன.
——————————————————————————————
கொடுக்கும் கைகளை விட அதிக வலிமை வாய்ந்தவை இரக்கும் கைகள் அதைவிட வலிமை வாய்ந்தது வயிறு.
——————————————————————————————
தன்கோபங்கள் உடைந்து மகிழ்வு பிறக்கும் நேரம்அலாதியானது.வாழ்வினில் என்னஇருக்கிறது தன்கோபம்உடைத்தல் தவிர.
——————————————————————————————
பேருந்தில் பயணம் செய்பவர்களை விட புகைவண்டியில் பயணம் செய்பவர்களின் கண்களில் வெறுமை மிக அதிகமாக தெரிகிறது.
——————————————————————————————————————————————————————-
அடபிக்காளிப் பயலுகளா, மாட்டுப் பொங்கல்னா மாட்டுக்கு படைக்கிற பொங்கல்டா, மாட்டைவெட்டிபொங்கல் படைக்கறது இல்லடா
——————————————————————————————————————————————————————-
கர்வம்கொள்வதில் பெண்கள் முதன்மையானவர்களாக இருக்கிறார்கள். எப்பொழுதும் கர்வத்தை மறைக்கமுடியவில்லை. தனதுமகனிடம் முத்தம் பெறுவதில் தனிகர்வம்தெரிகிறது.
——————————————————————————————————————————————————————-
த்யானம்தனதுமகளும்பேசிச்செல்லும் ஒவ்வொரு தகப்பனும் உணர்கிறான் இறைவனின் அருகாமையை.
——————————————————————————————————————————————————————-
எல்லாநாளும்  SMS அனுப்புறவன் ஃப்ரெண்ட் இல்ல, வருஷபொறப்புக்கும் ஃப்ரெண்ட்ஷிப்டேக்கும்  அனுப்புறவன் தான்ஃப்ரெண்ட்.
அப்பன்காசில்  SMS அனுப்புவோர் சங்கம்
——————————————————————————————————————————————————————-
இன்னைக்கு புதுவருஷம்பொறந்திருக்கு. இன்னைக்கு எங்கயும் வெளியில போகவேண்டாம். இந்தவருஷத்தில் இருந்தாவது சொல்லாமலே எல்லாவேலையும் நீங்களே செய்ங்க.
Mr.X : எனக்கு மட்டும் தான்லீவேகிடையாது போல. அதுசரிஅடிமைகளுக்கு ஏதுசுயசிந்தைகளும்/சிந்தனைகளும்.
நிகழ்ச்சி இத்துடன் நிறைவுபெறுகிறது.
——————————————————————————————————————————————————————-
ஏங்கஇன்னைக்கு லீவுதானே,கொஞ்சம் கடைக்கு போய்காய்கறி வாங்கிகிட்டு வாங்க,பசங்கள டிராயிங் கிளாஸ்ல விட்டுட்டு வாங்க,பாட்டு கிளாஸ்லயும் விட்டுஅழைச்சிகிட்டு வாங்க, T.Vம்மிக்ஸியும் ரிப்பேரா இருக்கு அதசரிபண்ணனும், காஸ்அடுப்பு ஒரேஅழுக்கா இருக்கு, அதகொஞ்சம் தொடச்சி தாங்க.
ஏங்கஇந்தவெண்டைக்காய வாங்கிட்டு வந்தீங்க, நல்லாவே இல்ல, அப்புறம் இன்னைக்கு இன்னும் வேலஇருக்கு, ப்ரெண்ட்ஸ் வராங்கன்னு ஊர்சுத்தபோயீடாதீங்க, இப்பஎன்னாசெஞ்சிகிழிச்சிட்டீங்க, பாட்டுவேண்டிகிடக்கு
மனைவி: என்னான்னே தெரிலங்க, ஒரேதலவலியா இருக்கு.

Loading

சமூக ஊடகங்கள்

தான் தொலைதல்

அட ஏரோப்ளேன்என்பது மாறி,
‘இத்தானே’ என்னும் கணத்தில்
தொலைகிறது இளமைகள்.




Click by : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – 5 பூந்தளிர் ஆட

இது என் பதினெண் வயதுகளில் ஒலிக்கத் துவங்கிய பாடல்.
படம் : பன்னீர் புஷ்பங்கள்.
புகைவண்டி நகர்தலும் பேச்சுக்கள் ஆரம்பம் ஆவதும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன.
பூந்தளிர் ஆட
பொன்மலர் சூட
சிந்தும் பனி வாடை காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்
இனி நாளும் சுப காலங்கள்
வாடைக்காற்று வீசத் துவங்குகிறது. நண்பர்கள் வட்டம் மெதுவாக வேடிக்கைப் பார்க்கிறது. கைகளில் இருப்பதை விளையாட்டாய் பேசிக் கொண்டே விளையாடத் துவங்குகிறாள் தலைவி. மரத்தில் தலைவன். மிதி வண்டி அருகினில் நாயகி.

உணவு படைக்கப்படும் இடத்தில் இருவரும் எழுதிக் கொண்டே இருக்கிறார்கள்.புன்னகை இருவருக்கும்.
வாகனத்தில் வருகையில் கை அசைக்கும் காட்டுப் பூப் போல இசை நகர்ந்து கொண்டிருக்கிறது.
நாயகி வாசிக்கத் துவங்குகிறாள். நாயகன் தானும் வாசிக்க முற்படுகிறான். பல முறைகள் நிகழ்கிறது.
காதலை ஏற்றும் காலையின் காற்றும்
நீரை தொட்டு பாடும் பாட்டும் காதில் பட்டதே
வாலிப நாளில் வாசனை பூவின்
வாடை பட்டு வாடும் நெஞ்சில் எண்ணம் சுட்டதே
கோடிகள் ஆசை கூடிய போது
கூடும் நெஞ்சிலேகோலம் இட்டதே
தேடிடுதே பெண் காற்றின் ராகம்
புகைவண்டி நகர்தலும் பேச்சுக்கள் ஆரம்பம் ஆவதும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன.
  
தலைவி தேடுகிறாள்தோற்றுப் போகிறாள்தலைவன் ‘கொக்கு‘ காண்பிக்கிறான்.
பூமலர் தூவும் பூ மரம் யாவும்
ம் ம் ம்
போதை கொண்டு பூமி தன்னை பூஜை செய்யுதே
அ..அ..அ
பூ விரலாலும் பொன் இதழாலும்
ம் ம் ம்
பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் சொல்லுதே
பூமழை தூவும் புண்ணிய மேகம்
பொன்னை அள்ளுதே எண்ணம் மிஞ்சுதே
ஏங்கிடுதே என் ஆசை எண்ணம்
  
புகை வண்டியில் பயணம் தொடர்கிறது, விளையாட்டு விளையாட்டு என நகர்ந்து கொண்டிருக்கிறது(கூடவே வாழ்வும்)

நாயகி நேரம் கழித்து ஓடி வருகிறாள். தலைவனிடம் கோபம் மட்டுமே இருக்கிறது. தலைவி கை குலுக்கி கோபத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கிறாள். தலைவன் முரண்படுகிறான். பிறகு கோபம் மறைகிறது இருவருக்கும்.
இருவரும் மீன் பிடிக்கிறார்கள். தூண்டிலில் மீன் சிக்குகிறது. ஒரு சிறிய பயமுறுத்தல் தொடங்குகிறது.
சைக்கிளில் பயணம் தொடர்கிறது. கதிரவன் சாட்ஷியாக இருக்கிறான்.

பள்ளிக் கூட வாழ்வியல் அழகாகப் படைக்கப் பட்டிருக்கிறது. 

காலம் உறைத்துவிட்ட தளிர்கள் இன்னும் இளமையாய், இனிமையாய்.

Loading

சமூக ஊடகங்கள்