அலைகள் அற்ற கடல்

பெரு நீர்ப்பரப்பின் மேல் பறத்து
மீனைக் கொத்திச் சென்றபின்னும்
அமைதியாக இருக்கிறது நீர்ப்பரப்பு.

Click by : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

தரிசனம்

யாரும் அற்ற நிலவொளி

மீண்டும் ஒரு வாய்ப்பு நமக்காக,
நமக்காக மட்டும்.
சுற்றி ஒலிக்கின்றன வண்டின் ஒலிகள்.
‘சந்தோஷத்தின் கால அளவு பெரிதா,
வலியுடன் கூடிய காயங்களின் 
கால அளவுகள்  பெரிதா’ என்கிறேன்.
‘காலடித் தடம் படா இடங்கள் உண்டு
காயம் படா இதயங்கள் உண்டா’ என்கிறாய்.
நிலையற்று போகிறது நினைவுகள்.
எங்கிருந்தோ ஒலிக்கிறது ஒரு குரல்.
‘எவ்வளவு நேரமா டீவீ பொட்டில
பொம்பளய பாப்பீங்க’


Click by : Karthik Pasupathi

Loading

சமூக ஊடகங்கள்

தேடல் விதி

இறந்த உடல் மீது
எதைத் தேட முற்படுகின்றன
ஈக்கள்?



Click by : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

எச்சில் படிந்த நினைவுகள்

மழைகளோடு அடங்கி விடுகின்றன
தவளைகளில் ஒலிகள்,
பிரிதொரு பொழுதுகளில்
துவங்கி விடுகின்றன
மனதில் ஒலிகள்.

Loading

சமூக ஊடகங்கள்

முன்னுரை

இறந்த பின்னும்
பயணிக்கின்றன
வண்டிகளில் மீன்கள்.













Click by :  Ramaswamy Nallaperumal 

Loading

சமூக ஊடகங்கள்

அனாகத நாதம்

மிகச் சிறந்த ஒலிகள் எல்லாம்
அடங்கி விடுகின்றன
சிறு கொலுசுகளின் ஒலிகளில்.

*அனாகத நாதம் – மனிதனுடைய முயற்சியின்றி இயற்கையிலேயே கேட்கப்படும் நாதம்

Click by : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

சலனம்

எல்லா இரவிற்குள்ளும் இருக்கின்றன
பல அழுகை ஒலிகள்.

Click by : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

அரூபநதி

கனவு
கனவுக்குள் கனவு.
நனவு,
நனவுக்குள் கனவு.
கனவு நனைவான பொழுதுகளில்
கனவு கலைந்திருந்தது.


Click by : Bragadeesh 

Loading

சமூக ஊடகங்கள்

தினம் தினம் தீபாவளி

வெடிக்கும் பட்டாசில் தெரிகிறது
அதைச் செய்பவர்களில்
வேதனைகள்.

















Photo by : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

கார்காலம்

‘குடை பிடிக்க
கற்றுக் கொண்டேன்
எப்பொழுது மழைவரும் என்கிறாய்’
தகப்பனின் மனதறியா இருக்குமோ
மழை மேகங்கள்.








Photo : Karthik Pasupathi

Loading

சமூக ஊடகங்கள்

மீளா உறக்கம்

எல்லா படைப்புகளும்
முற்றுப் பெறுகின்றன
அதனதன் மீளா உறக்கத்தில்.

Loading

சமூக ஊடகங்கள்

காசுக் கடவுள்

காசுக் கடவுளை
பொம்மைகளாக்கி
விற்ற பின்னும்
கனவாகவும்
கனமாகவும் இருக்கிறது
விற்பவர்களின் வாழ்வு.

Loading

சமூக ஊடகங்கள்

கொண்டாடுதல்

வினைகளின் வழியே
பிறந்து பார்,
வேறு என்ன இருக்கிறது?
புழுதி நிறைந்த தெருக்களில்
விளையாடு,
வேறு என்ன இருக்கிறது?
உறவுகளோடு சொந்தம்
கொண்டாடு,
வேறு என்ன இருக்கிறது?
கற்றல் தவிர்த்து
அனைத்து விஷயங்களையும் செய்,
வேறு என்ன இருக்கிறது?
பெரு மிருகங்களால்
துரத்தப்படும் சிறு மிருகமாய்
வேலை தேடு,
வேறு என்ன இருக்கிறது?
தனிமை விலக்க
தவறா மணம் செய்,
வேறு என்ன இருக்கிறது?
மனைவியின் வார்த்தைகளால்
வலி கொள்,
வேறு என்ன இருக்கிறது?
குளிரில், ஊன் முழுவதும்
புண்ணாகி குரைத்துச்
செல்லும் நாயினைப் பார்,
வேறு என்ன இருக்கிறது?
தவறாது தமிழ் இலக்கியம் படித்து
தவித்துப் போ,
வேறு என்ன இருக்கிறது?
மகிழ்வின் விளைவாய்
மகிழும் குழந்தை கொள்,
வேறு என்ன இருக்கிறது?
பெருங்குரலுடன் கரைந்து
செல்லும் காகத்தினை உணர்,
வேறு என்ன இருக்கிறது?
கனவுகளில் வாழ்வினை நடத்து
வேறு என்ன இருக்கிறது?
ஒட்டு பீடியும் ஊறுகாயும் கொள்,
வேறு என்ன இருக்கிறது?
மனிதர்களால் விலக்கப்படு,
வேறு என்ன இருக்கிறது?
தடம் மாறாது தனித்துச் செல்லும்
பறவைக் கூட்டங்களை காண்,
வேறு என்ன இருக்கிறது?
தனிமைகளுடன் தனித்திரு,
வேறு என்ன இருக்கிறது?
யாருமற்ற இரவில்
தடயங்கள் அற்று
மரணம் அறிந்து மரித்துப் போ.
வேறு என்ன இருக்கிறது
வாழ்வினை கொண்டாடுதல் தவிர?

Photo : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

பகுபடுதல்

ஒவ்வொரு நரையும்
உணர்த்துகின்றன
பகுக்கபட்ட வைராக்கியங்கள்
வீழ்ச்சி அடைவதை.











Photo : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

நெடுமரங்கள்

தனித்த அறையில்
தகிக்கும் தனிமையில்
இருக்கும் ஒருவனை
சந்திக்க  நேர்ந்தது.
யாவரும் கண்டு உணர முடியா
செடிகளும் மரங்களும் அவனிடத்தில்.
அவன் கண்களில், காதுகளில்,
மூச்சுக் குழல்களில், செவிகளில்.
அவைகள் தாண்டி
மேனி முழுவதும்.
காரணம் அறிய விரும்பி
கேள்விகளைத் தொடுத்தேன்.
பிறந்து காலமுதல்
அவைகள் தன்னிடத்தில் இருப்பதாக உரைத்தான்.
தோன்றி மறையும் இயல்பு
அவைகளுக்கு உண்டு என்று உரைத்தான்.
இயல்பான தனிமைகளில்
எதிர்பாரா அளவு பரவும் என்று உரைத்தான்.
பேச்சுக்களில் அவைகள்
விருட்சங்களாக ஆவதும் உண்டு என்றும்
அவைகள் இயல்பெனவும் உரைத்தான்.
பேச்சுக்களின் முடிவில்
சில மரங்கள் என்னுள்ளும் வேறூன்றி இருந்தன.

Photo : Vinod Velayudhan

Loading

சமூக ஊடகங்கள்

கரைதல்

கம்பி வழி வழிந்தோடும்
நீரினில் கரைகின்றன
கடந்த கால நினைவுகள்.

Loading

சமூக ஊடகங்கள்

காலத் தத்துவம்

தேடித்தான் வருகிறோம்,
தேடலில் மாற்றம் கொள்கின்றன தேவைகள்;
மாற்றத்தில் மறைகிறது தேடல்,
தேடல் கொள்ளும்
ஆட்டம் மட்டும் தொடர்கின்றது.

Loading

சமூக ஊடகங்கள்

மாயை சூழ் உலகு

யாருமற்ற பொழுதுகளில்
அலைகள் மட்டும்.
அருகருகே நீயும் நானும்.
அலைந்து கொண்டிருக்கிறது காற்று.
வாழ்வினை வெற்றி கொண்டவனாக
‘என்ன வேண்டும்’ என்கிறேன்.
‘துளிர்த்தல் இயல்பெனில்
உதிர்த்தலை என் சொல்வாய்’
என்கிறாய்.
சொல்லின் முடிவில்
இறக்கிறது ஒரு மாயப்பிரபஞ்சம்.

Photo : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

கரைந்து செல்லும் காலம்

நீ என்னை உதறி தள்ளிய வினாடியில்
உன் கூந்தலில் இருந்து
ஒற்றை ரோஜாவினை விட்டுச் சென்றாய்.
புகைப்படமற்று
வாசனை இழக்காமல்
பத்திரமாக இருக்கிறது
அலமாரிப் பெட்டியில்
அந்தப் பூவும் நினைவுகளும்.
அப்போது முதல்
எதிர்காலம் இறந்தகாலமாகி இருந்தது.

Photo : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

ஒரு பாதி கனவு நீயடி..

எவ்வித இசையும் இன்றி நெஞ்சினில் கத்தி வைப்பது போல் ஆரம்பமாகிறது பாடல். நீ என்பதே நான் தானடி..,

ஒரு வாகனம் நகர ஆரம்பமாவதில் கவிதைகள் (மன்னிக்கவும்) பாடல் ஆரம்பமாகிறது.

ஊடல் பற்றிய நிகழ்வுகள் பல திரைப்படங்களில் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. ஆனாலும் இது தனியாக தெரிகிறது.

ஊடல் கொண்ட வேளை. கணவன் தன் நினைவு இன்றி தலைவாருகிறான். மனைவி சீப்பினை எடுத்ததால் அவளுக்கு  மிகக் கோபம். கோபத்தில் கண்களை மூடிக் கொள்கிறான்.

மனைவியை சந்திக்க நோயாளியாக நுழைகிறான். மெல்லிய புன்னகை இருவருக்கும்.

சிறு பயணத்தில் சில தீண்டல்கள்,

வாழ்த்து அட்டைகள், தன்னை தருவதாக முடிகிறது.

மனைவி கணனி கற்றுத்தருகிறாள். தன்னை அறியாமல் தீண்டிவிடுகிறாள். கள்ளப்புன்னகை கணவனுக்கு.(விக்ரமால் மட்டுமே முடியும்).

கணவன் மனைவியின் ஊடல் மிகச் சரியாக, மிகச் சிறந்த கவிதையாக வடிவம் பெற்றிருக்கிறது.

காலம் பெயரிட்டு அழைக்கும் கவிதையில் இது நிச்சயம் இடம் பெறும். வீட்டில் இருந்து மழையை ரசிப்பது போல், யாருமற்ற இரவுகளில் மனதை அதன் வழிகளில் இட்டுச் செல்லும் பாடல்களில் இது நிச்சயம் இடம் பெறும்.

Loading

சமூக ஊடகங்கள்