மாயை சூழ் உலகு

யாருமற்ற பொழுதுகளில்
அலைகள் மட்டும்.
அருகருகே நீயும் நானும்.
அலைந்து கொண்டிருக்கிறது காற்று.
வாழ்வினை வெற்றி கொண்டவனாக
‘என்ன வேண்டும்’ என்கிறேன்.
‘துளிர்த்தல் இயல்பெனில்
உதிர்த்தலை என் சொல்வாய்’
என்கிறாய்.
சொல்லின் முடிவில்
இறக்கிறது ஒரு மாயப்பிரபஞ்சம்.

Photo : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *