2038 – Love-Anti-Love Pill

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.
சார் எனக்கு 10 மாத்திர வேணும். ஏன்னா நான் அழகா இருக்கேன்னு(அட பிக்காளிப் பயலே..) பல பேர்  சொல்லி இருக்காங்க. நான் 1st year Aero – Z படிக்கிறேன். Areo – B ரெண்டு பொண்ணுங்க, Mechanical – AZ    ஒருபொண்ணு, 2nd year CSE AZ    ஒருபொண்ணு, 3 year ECE- C ல ரெண்டு பொண்ணுங்க, Final year IT ல ரெண்டு பொண்ணுங்க, Passed out CSE – H ல மூணு பொண்ணுங்க அழகா இருக்காங்க. அவங்களுக்கு குடுக்கணும்
2.
Pre KG Students.
1 : டேய் மச்சான் எனக்கு 5 anti love tablet சொல்லுடா.
2 : ஏண்டா என்னடா ஆச்சு.
1 : பின்ன என்னடா நயந்தாரா, சமந்தா, அஞ்சலி யாருமே திரும்பி கூட பாக்க மாட்டேங்கிறாங்க.
3.
Love/Anti-Love Pill கண்டுபிடித்தவனும் ஒரு நாள் காதலில் தோற்றிருப்பான்.
இப்படிக்கு Love/Anti-Love Pill வாங்க காசில்லாமல் தத்துவம் பேசுவோர் சங்கம்
4.
Lover : டேய் இன்னாடா பேஜார் பண்ர. ரொம்ப பேஸ்ன 8 anti love pill போட்டு உட்டு போய்டே இருப்பேன்.
5.

இந்த மிஷின் புது கண்டுபிடிப்பு சார். Love  சினிமா பாட்டு எழுத 5 tablet சார். அதே மாதிரி anti Love  சினிமா பாட்டு எழுத 5 tablet சார். ரொம்ப சிம்பிள் சார்.

புகைப்படம் : SLKumar

Loading

சமூக ஊடகங்கள்

2038 – DNA

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)
DNA library

உங்க library-ல  எவ்வளவு samples இருக்கு
20000
அடச்சே, என்னவோ 1000000 இருக்குற மாதிரி பேசறயே.

* * * *  
* * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * 

You really can change your DNA
மச்சான் கவலப் படாத இதெல்லாம் ஒரு பொண்ணா, விடு. என் ஃப்ரண்டு ஒரு டாக்டர், அவன்ட போவோம். ஒரே ஒரு DNA change தான். அப்புறம் அந்த பொண்ண மறந்துடலாம்.

* * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * *
DNA doesn’t lie
டேய் ஏண்டா, டென்சனா இருக்கே,
என் பொண்டாட்டி ஊருக்கு போய்டான்னு சந்தோஷமா இருந்தேன். அவ வந்த உடனே DNA டெஸ்ட் பண்ணுணுமாம். நான் சந்தோஷமா இருந்து தெரிஞ்சுடுமா?

 * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * *
மச்சான், நீ உண்மையான டாக்டர் தானே?
அதுல உனக்கு என்னடா சந்தேகம்.
நீ சொன்னேன் தானே அந்த 23க்கும் 24க்கும் இடையில இருக்கிறDNA- மாத்தி வச்சேன். அதுக்கு அப்புறம் கோவப்பட மாட்டேன்னு சொன்ன. ஆன அப்படி நடக்லயே.
எதுக்கும் எண்கணித மேதைக்கிட ஒரு வார்த்தை கேட்டுடுவோமா?

* * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * *

யோவ், சொன்னா கேளுயா, நீ வேல இல்லாதவன். உனக்கு 20 வயது வேற ஆயிடுத்து.  உனக்கு எப்படி DNA insurance பண்ணமுடியும்.

Image : Internet

Loading

சமூக ஊடகங்கள்

குப்பாச வாழ்க்கை

அவசர அவசரமாக பொத்தேரி புகை வண்டி நிலையத்தில் இருந்து கிண்டிக்கு பயணச் சீட்டுப் பெற்றேன். அடுத்த வண்டி 12.36 என்று எழுதி இருந்தது. கடிகாரத்தில் மணி பார்த்தேன்.
12.53. அப்பாடா புகைவண்டி சீக்கிரம் வந்துவிடும்  என்று அவசர அவசரமாக ஒடினேன்.
1.23க்கு புகைவண்டி வந்தது.
ஒரு நிகழ்வினை எதிர்பார்ப்புகள் இல்லாமல் பதிவு செய்ய எண்ணம் உண்டானது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பயணம் செய்பவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.
குழந்தைகள்பெரும்பாலும் பெரியவர்கள் ஏதாவது சொல்லிவிடுவார்கள் என்று பயத்துடன் பயணிக்கிறார்கள்.
கல்லூரிமாணவர்கள்அவர்கள்உலகத்தில்அவர்கள்
வயதானவர்கள்கவலைகளோடுபயணிக்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பெரும்பாலானவர்கள் இரண்டு  mobile  வைத்திருக்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கல்லூரிவயதுக்காரர்கள்  பெரும்பாலும் Temple run  விளையாடுகிறார்கள் அல்லது FB பார்க்கிறார்கள்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் நடுத்தர வயது உடையவர்கள் ‘நீ என்ன அப்பா டக்கரா’ வகையரா பாட்டுக்களைக் கேட்கிறார்கள். புகைவண்டி இரைச்சலை தாண்டி பாட்டு வெளியே கேட்கிறது.
 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இன்னைக்கு புதன் கிழகை வேற பார்ட்டி இல்ல. 12.5 லட்சத்துக்கு கேக்கிறான். திங்க கிழமை ரிஜிஸ்ட்ரேஷன் வச்சிக்கலாம்.பார்ட்டிய முடிச்சிடு.எனது பக்கத்து இருக்கைக் காரர். (நேரே போய் சொல்லி வந்திருக்கலாம்)
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
திருநங்கைகளின் கைத்தட்டல் ஓசை ஒரே விதமாக இருக்கிறது. பணம் கொடுப்பவர்களை மனமாற வாழ்த்துக்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பெரும்பாலான பொருள் ஏற்பவர்கள்(பிச்சைக்காரகள் என்று அழைக்க மனம் விழையவில்லை) பாத்திரம் ஒற்றை நாணயம் மட்டும் கொண்டிருக்கிறது. சிலர் பாடி பொருள் கேட்கிறார்கள். சிலர் ஏதுவும் பேசாமல் கேட்கிறார்கள். அவர்களின் பாத்திரம் நிரம்புவதே இல்லை. அதுவே மிகப் பெரிய வலி உண்டாக்குகிறது
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பெண்மணிகளே வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம். மாதம் Rs.30000 என்ற விளம்பரம் பெரும்பாலான இடங்களில் தென்படுகிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மிக அதிகமாக கசங்கிய ஆடைகளை உடையவர்கள் நுழைவு வாயில் அருகிலே அமர்ந்து விடுகிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பூர்விகா மொபைல் விளம்பரத்தில் இருக்கும் ஸ்ரீதிவ்யாவை சிலர் ஓரக் கண்ணால் பார்க்கிறார்கள். சிலர் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இரண்டு பேர் இருக்கையில் மற்றும் ஒருவர் நகர்ந்து கொள்ளச் சொல்லி இடம் கேட்டால் தி. நகரில் இருக்கும் பத்து க்ரௌண்ட் இடம் கேட்டது போல் முறைக்கிறார்கள்.
* * * * *
சில குழுக்கள் புகைவண்டியில் கதவருகே நின்று selfie எடுத்துக் கொண்டிருக்கிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மச்சான் அந்த மஞ்ச கலர் மைனாவ பார்தா த்ரிஷா மாதிரி இல்ல.
போடா டேய், த்ரிஷா எல்லாம் பாட்டி அவள போய் கம்பேர் பண்ரியே. சொல்லுவது ஆசை அஜித்(ஹா ஹா)
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தாய்மை உடையவர்கள் மிக அதிக கனமான இதயத்துடன் பயணிக்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கனத்த மௌனத்துடனே பெரும்பாலான பயணம் தொடர்கிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இலக்கை அடைந்த பின் வேறொரு பயணத்திகு தயாராகி விடுகிறார்கள்.
குப்பாசவாழ்க்கைநிலைஅற்றவாழ்வு
நன்றி : கந்தர் அலங்காரம்
புகைப்படஉதவி : Karthik Pasupathi

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – 11 – பற்றுக் கணக்கு

சொந்த ஊர் பற்றி நினைத்தாலே சுகம் எனில் அதைப்பற்றி எழுத வேண்டும் எனில்
மற்ற ஊர்களுக்கு இல்லாத ஒரு பெருமை மாயூரத்திற்கு உண்டு. அதுஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமாஎன்பதே. இது மாயூர மனிதர்களுக்கே உண்டான கர்வம். காவேரி தண்ணீர், கும்ப கோணம் வெத்திலை, புகையிலை மற்றும் மிகச் சிறந்த அக்கப்போர்கள்
அப்போதுஎனக்கு சிறுவயது.(இப்போது மட்டும் என்ன. இப்போதும் அப்படித்தான்)
தாத்தா ஸ்ரீராம் சைக்கிள் கம்பெனியில் கணக்குபிள்ளையாக  வேலை பார்த்து வந்தார். சிறு வயதில் இருந்தே அவருக்கு மாலை டிபன் உண்ணும் பழக்கம் உண்டு.
தாத்தாவுக்கு மயூரா லாட்ஜில் கணக்கு உண்டு. தினமும் சாப்பிட்டு விட்டு அவரே தனது நோட்டில் எழுதி விடுவார்கள். மாதம் பிறந்ததும் கணக்கு செட்டில் ஆகி விடும்.
அப்போதுமணிகூண்டுபக்கத்தில் வரும் போது சாம்பார் வாசனை வரும்.(சுமார் 200 மீட்டர் தூரம்). பெரும் வியாதிஸ்தர்கள் உள்ளே வரக்கூடாதுஎன்று பலகை வேறு
இன்னைக்குசாயங்காலம் பூரி சாப்பிட்டேன். நல்லா இருந்துது. நாளைக்கு உன்னையும் அழச்சிகிட்டு போரேன். இதழ்கள் புன்னகைக்கும்தும்பைப்பூவினைப்போன்ற ஒரு புன் சிரிப்பு. அப்பா எத்தனை பளீர்
ஆயி (தற்போது வழக்கு ஒழிந்து கொண்டிருக்கும் ஒரு அருமையான சொல்அம்மா என்ற பதத்தில் வரும் பாட்டி)
ஆயி : உங்களுக்கு இதே வேல, புள்ளைகள் கிட்ட இத வந்து சொல்லிகிட்டு.
யாரும் அற்ற ஒரு மதிய வேளையில் தாத்தா இறந்து போனார்கள்.
அவருக்குப் பின்  அவருடைய பெட்டியினை(எத்தனை பொக்கிஷம்) திறந்தோம். ஒரு சில பேப்பர்கள், சில பேனாக்கள் இத்யாதிகள். கூடவே மயூரா லாட்ஜ் கணக்கு பேப்பர்.
அன்றைய தேதியில் ரூ 80 பாக்கி இருந்தது.
ஒரு மாலைப் பொழுதின் பின்   பொழுதினில் நானும் எனது தந்தையும் மயூரா லாட்ஜ் சென்றோம்.
கல்லாவில்ஒரு அழகாக ஒரு மனிதர். வெள்ளை சட்டை, விபூதி மற்றும் குங்குமம்.( அப்பா எத்தனை அழகு)
முதலாளி: என்ன வேணும்?
அப்பாநான் தங்கவேல் பையன். அப்பா தவறிட்டாங்க. அவங்க கணக்கு எழுதி வைத்திருந்தார்கள். ரூ 80 பாக்கி இருக்கிறது. அத குடுக்க வந்தோம்.
தீர்க்கமான ஒரு பார்வை. வினாடி மௌனம்.
முதலாளிஅவர் எனது நீண்ட கால வாடிக்கையாளர். அதோட மட்டும் இல்ல அவர் எனது நண்பரும் கூட. மீக நீண்ட நாள் பழக்கம் உண்டு. இன்னைக்கு வரைக்கும் அவர் கணக்கில் தவறே வந்தது இல்லை. அந்த நல்ல மனிதருக்காக நானே அந்த செலவை ஏத்துக்கிறேன். நீங்க கொடுக்க வேண்டாம்.
உண்ட பிறகு வீசி எறியும் உணவுப் பண்டங்களின் உறைகளில் சில உணவுத் துகள்கள் ஒட்டியிருக்கும். அப்படித்தான் காலம் வீசி எறிந்த நிகழ்வுகளில் இன்னும் நினைவுகள் ஒட்டி இருக்கின்றன.

புகைப்பட உதவி :  Mahendiran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

2038 – Moon & high speed internet



(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)


News : Moon to get high-speed internet

1,
ஹலோ, கஷ்டமர் கேரா(எவனோ நம்ம ஊர் காரன் தான்), எங்க area 3 பேர் இருக்கோம். Net connection சரியா வரலை. எப்ப சரி பண்ணுவிங்க.
2.
ஹலோ, கஸ்டமர் கேரா, நீங்க speed 662 mbps சொன்னீங்க, ஆனா 661.99231521 தான் வருது. எப்ப சரி பண்ணுவீங்க
3.
நண்பர் 1 : எங்க வீட்ட internet connection சரியாவே வரல. ஆகல. FB update செஞ்சா 0.002313sec delay ஆகுது. எப்ப சரி பண்ணுவீங்க
4,
கஸ்டமர்சார் எங்க இருக்கீங்க, எப்ப வந்து சர்வீஸ் பண்ணுவீங்க.
என்சினியர்: சார், இதோ moon ஆர்பிட் கிட்ட வந்துட்டோம். இன்னும் 0.29323 வினாடியில்வந்துடுவோம்.
கஸ்டமர் நண்பரிடம் : இவிங்க இப்பத்தான் moon ஆர்பிட் கிட்ட வந்து இருக்காங்க. எப்ப சரி பண்ணி நாம எப்ப படம் பாக்குறது.
5.
Sales engineer Managerரிடம். சார், நாம மோசம் போயிட்டோம். Opposite party  ‘எங்களிடம் broad band connection வாங்குபவர்களுக்கு ஒரு குடம் தண்ணீர் இலவசம்’ board னு போட்டு இருக்கான் சார்’. அதான் சார் அவ்வளவு கூட்டம்.

Loading

சமூக ஊடகங்கள்

2038 – Galaxy and Universe

2038 – Galaxy and Universe

(இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.
இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)






1
வீட்ல ரொம்ப கஸ்டம்மா, 2 கேலக்சி சுத்தம் பண்ணித்தரேன், 50 ரூ சேத்துக்குடும்மா

2
2014 – The most current estimates guess that there are 400 billion galaxies in the Universe

ரெண்டு காப்பி டம்ளர் தான் சுத்தம் பண்ணமுடியும். நான் இன்னும் 500 மில்லியன் கேலக்சி போய் பாத்திரம் கழுவணும்.

3
2014 – A Dying Galaxy Near the Milky Way
என்னெடி  இந்த மாசம் இன்னும் $500000 சேத்து கேட்கிறே.
என்னம்மா செய்யறது, போன மாசம் ஒரு கேலக்சி செத்துப்போச்சி, அந்த வேலை போயிடிச்சி.
4
அம்மா, 5:01:0.000035 மேல வேலை செய்ய முடியாது
ஏண்டி,
எம் புள்ளைங்களை கேலக்சி Zoo க்கு கூட்டிகிட்டு போகணும்.
5
2014 – Luminosity – the amount of energy that it puts out (luminosity = brightness x 12.57­ x (distance)2­). Conversely, if you know a star’s luminosity, you can calculate its distance.
அம்மா, அந்த கேலக்சி வெளிச்சத்த கொஞ்சம் கொற அம்மா, கண்ண கூசுது.

Loading

சமூக ஊடகங்கள்

2038- Quantum physics

2038- Quantum physics 

(It’s all a fantasy. It is not intended to hurt anyone. It could (not) happen.)

1.
2014 – In quantum theory of cognition, memories are created by the act of remembering.
2038 – Remembering is very old method. Unaku evalavu venum sollu. 50 terra byte Rs. 50/- only.
2.
2014 -Quantum Cloud Simulates Magnetic Monopole
2038 – Sir, seekiram solluga, unga veetu vasthu padi NorthEast (Sani moola- Moolaila theeya vaika) than best. Advance seekiram pay pannunga sir. Lion(pavigala line or lion)  nikuthula.
3.
2014 -Quantum cryptography for mobile phones
2038 – Nanum 25 yearsa try pannikitu iruken. But en husband-oda password mattum kandu pudikida mudiyala sir
4. 
2014 -Electron Mass Measured to Record-Breaking Precision. The electron has 0.000548579909067 of an atomic mass unit
2038 – Yei rumba pesuna monjiya pethuduvan, enga thalaivar vijayoda son. Avaru massu theriyuma.
 5.

2014 –  Hunt for an ‘unidentified electron object’ – Researchers have developed a new mathematical framework  capable of describing motions in superfluids.
2038 – Sir, ithey vechi Renganathan stla shopping pona en pondatiya kandu pudika mudiyuma sir.

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 9

போராட்டங்களில் முடிவு மௌனத்தில் நிறைவு பெறுகிறது.
———————————————————————————————- 
சந்நியாசிகள் உருவாவதில்லை. உருவாக்கப் படுகிறார்கள்.
———————————————————————————————- 
இரு பெண் குழந்தையின் தகப்பனின் கண்களில் ஒரு கர்வம் இருக்கத்தான் செய்கிறது. முன்று பெண் குழந்தைகளை கொண்டிருப்பவனின் கண்களில் கர்வமும், கவலையும் தெரிகிறது.
———————————————————————————————- 
பேருந்து நிலையத்தில் மனைவியிடம் பணம் பெறும் கணவனின் கண்கள் எப்போதும் மண் நோக்கியே இருக்கின்றன. கண்கள் நீர் கோத்தே இருக்கின்றன.
—————————————————————————————————————————————————————- 
நேசித்தல் இயல்பாகும் வரையினில் வலிகள் இருக்கும்.
—————————————————————————————————————————————————————-
யாரும் அற்ற பேருந்து நிழற் குடையில் உறங்கும் மனிதனின் சந்தோஷங்கள் நிலையானவையா?
—————————————————————————————————————————————————————-
தனது மகனை முத்தமிடும் தாயின் கண்கள் எப்போதும் பனித்திருக்கின்றன.
—————————————————————————————————————————————————————-
பெண்ணைத் துறக்கும் எந்த ஆணிற்கும், தன் பெண்ணைத் துறத்தல் அரிதாகவே இருக்கிறது.
—————————————————————————————————————————————————————-
காரினில் முன்னிருக்கையில் தாயில் மடியில் அமர்ந்து வாயில் விரல் வைத்து செல்லும் குழந்தையின் கனவுகளும் ஏக்கங்களும் என்று நிஜமாகும்?
—————————————————————————————————————————————————————-திருமண கோலத்தில் இருப்பவர்களைப் பார்த்து மற்றவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்று இப்போழுது 
தான்  தெரிகிறது. (டேய், போடா, போடா)

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 8

நம் குழந்தைகள் நம் முன்னே வளர்தல் தான் உலகின் மிகப் பெரிய அதிசயம்.
——————————————————————————————————————————————————————-
மறுத்தலில் மகிழ்வுறுபவன் மயானம்அடையான்.
——————————————————————————————————————————————————————-
மிகக் குறைந்த தூரம் ஷேர் ஆட்டோவில் பயணிக்கும் மிக வயதானவனில் அருகில் அமரும் இளம்   பெண்கள், யாரும் அறியாமல் ஒரு இதழ் வழி புன்னகையை வயதானவனிடம் ஏற்படுத்துகிறார்கள்.
——————————————————————————————————————————————————————-
விளக்கில் இருந்து எடுத்த பின்னும் நூல் திரியில் இருக்கும் எண்ணை தீரும் வரை அது எரியும்.  அதுபோல்  ஆன்மாக்கள் பக்குவம் பெறாமல் ஆசைகள் இருக்கும் வரை பழைய வாசனையின் காரணமாக பிறப்பு தொடர்ந்து கொண்டிருக்கும்.
——————————————————————————————————————————————————————-
சிறு மழையில்தாயின் குடையில் வராமல் தலையை குடைக்குள் வைத்து கைகளை மழையில்   நனைந்து செல்லும் சிறார்களில் சந்தோஷங்கள் வலிமையானவை.
——————————————————————————————————————————————————————-
மனைவி :  இன்னைக்கு லீவுஇன்னைக்கு முக்கியமா…. என்னங்க பேசாம இருக்கீங்க.
கணவன் : கையால் சைகை காட்டி – மௌனம் (எப்புடி)
மனைவி :  எல்லா நாளும் அப்படித் தான் பேசாம இருக்கீங்கஇது என்ன புதுசா (எப்புடி
——————————————————————————————————————————————————————-வாசிப்புக்கு உரிய கைகள் யாசித்தலே வாழ்வின் மகத்தான வலிகளில் ஒன்று.
——————————————————————————————————————————————————————-புகைவண்டியில் பயணிக்கும் போது பொருள் வேண்டி பாடும் கண்கள் அற்றவனின் ‘முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்‘ என்ற பாடல் அதிக வலி உண்டாக்குகிறது.
——————————————————————————————————————————————————————-
தனது முதல் நரையைகாணும்ஆணின்மனவலிகள் அதிகமானவை. பெண்ணின் மனவலிகள் அதைவிடஅதிகமானவை.
——————————————————————————————————————————————————————-மனைவியின்பயண்பாட்டிற்குஏற்றவாறு கணவன் நேசிக்கப்படுகிறான்.

Loading

சமூக ஊடகங்கள்

2038 – Galaxy and Universe


1.
Sir, Black hole concepts are very old and brown hole concepts was died 2014. Let us discuss about VIBGYOR holes.

2.
Galaxy Broker –  Do not worry sir. This is Dead galaxy. We are providing this galaxy at very less price Rs. 10/-

3.
Galaxy Broker – ‘Namba payalgal’ identified new galaxy with 300 sextillion stars. (3 followed by 23 zeros). If you want we can show this and you could visit any time.

4.
Husband – Though I am a scientist, I could understand Dark matter. But I am unable to find Rs.5/- from kitchen

5.
Galaxy Broker – He is ‘Namba payal’. He only identified Dart flow with 700 galaxy cluster. You could choose any galaxy for rent.

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 7

என்னதான்“iPhone 5s ” வைத்திருந்தாலும், 10 பைபேலன்ஸ் இல்லாவிட்டால் பேசமுடியுமா?
இப்படிக்கு நோக்கியா 1100 வைத்துiphone 5s க்குஆசைப்படுவோர் சங்கம்.
——————————————————————————-







தந்தை:
மனைவியிடம் பெற்ற காயங்கள் மருந்தாய் உருமாற்றம் கொள்கின்றன மகளால்.
——————————————————————————————————————————————————————-
வறுமை உடையவனை பெரும்பசிகள்வந்துசேர்கின்றன.
——————————————————————————————————————————————————————-
அன்பினைப் பெறுவதில் மிருகங்கள் விரும்புகின்றன. அதில் விலக்கம் கொள்ளும் மிகப்பெரியமிருகம் மனிதன்மட்டுமே.
——————————————————————————————————————————————————————-
எனக்கு 5 ரூ பொம்மைக் கார் வாங்கித் தந்தால்ஒவ்வொரு கன்னத்திற்கும் 10 முத்தம் தருவேன் என்ற மகளின் வார்த்தைகளில் மகிழ்வு கூடி தந்தையின் வாழ்வு நிலை பெறுகிறது.
——————————————————————————————————————————————————————-
நேசிப்பதை விட நேசமாய் இருப்பதாய் காட்டும் காலங்கள் அதிகமாக இருக்கின்றன.
——————————————————————————————————————————————————————-
வானவூர்தி பார்த்து கைஅசைக்கும் ஒருகுழந்தையின் மகிழ்வு, மிகஅதிகமாக சந்தோஷம் கொண்டமனிதனின் மகிழ்வினை விடஅதிகம்.
——————————————————————————————————————————————————————-
தந்தையின் கண்கள்பார்த்துப் பேசும்சிறுபெண்குழந்தையின் கண்கள்ஆயிரம்கவிதைகளைச் சொல்கின்றன. பதில்பேசும்தந்தையின் கண்கள்இன்னும் பல்ஆயிரம்கவிதைகளைச் சொல்கின்றன.
——————————————————————————————————————————————————————-
வாழ்வு நிச்சயமாக மாறாமல் இருக்கிறது.ம் 31ம் தேதி இரவு வங்கிக் கணக்கும், 1ம் தேதி தேதி இரவு வங்கிக் கணக்கும்.
——————————————————————————————————————————————————————-
காதலிநீங்க இப்படிபேசினா, இனிமேபேச்சநிறுத்திடுவேன்.
காதலன்சரி, இனிமேஇப்படிபேசல.(இது தெரிஞ்சிருந்தா, 3 வருஷத்திற்கு முன்னமே உன்சகவாசத்தை கட்பண்ணியிருப்பேனே. வடபோச்சே.)

சத்யமாக ஒட்டு கேட்டது

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 6

மனிதர்களை விட வீடுகள் அதிகமாக வலிகளைஉள்வாங்குகின்றன.
——————————————————————————-விடுமுறை தினத்தில் எழுப்பப்படும் குழந்தைகளின் ‘5 மினிட்ஸ் ப்ளிஸ்‘ என்ற வார்த்தைகள் நூறு   ஆயிரம் சிறகசைப்புகளை தோற்றுவிக்கிறது.
—————————————————————————————————————————————————————–
ஒவ்வொரு பனித்திருக்கும்  கண்களும் உணர்த்துகின்றன தனதுப்ராத்தனையை இறைவன்ஏற்றுக் கொண்டதை.
—————————————————————————————————————————————————————–
இருக்கை முன்அமர்த்து செல்லும் 3 வயதுபெண்குழந்தைவெவ்வேஎன்றுபழிப்பு காட்டுவதில் பயணம்முடிந்து விடுகிறது. நினைவுகள் மட்டும் தொடர்கிறது.
—————————————————————————————————————————————————————–
உதிரும் சொற்களை விட உலரா கண்ணீரும், அதன் சார்ந்த மௌனமும் பெரும் காயம் ஏற்படுத்துகின்றன.
—————————————————————————————————————————————————————–
காலைநேரத்தில் வெற்றுகாகிதத்தை விரட்டி சிறுநாயின்சந்தோஷம் மனிதசந்தோஷங்களை விடமிகஅதிகமாக தெரிகிறது.
—————————————————————————————————————————————————————–
பேருந்தில் பயணம்செல்பவர்களை விடஅவர்களின் கனவுகள் அதிகமாக இருக்கின்றன. அக்கனவுகள் முதல்இழப்பைவிடஅதிகவலியுடன் இருக்கின்றன.
—————————————————————————————————————————————————————–
வித்தை தெரிந்த வீரன் மரணத்தின் போது மட்டும் போராடுவதில்லைமரணம் வரும் வரை   போராடுவான்நான் வீரன்
—————————————————————————————————————————————————————–
தனி மனித வாழ்வு எப்போதும் பிறரால் தீர்மானிக்கப் படுகிறது. உ.ம் பேருந்தில் ஜன்னல் அருகில் இருப்பவன் நமக்கும் சேர்த்து முடிவு செய்கிறான் நமக்கு காற்று வேண்டுமா இல்லையா என்று.
—————————————————————————————————————————————————————–

மறுதலித்தலும் நிராகரிக்கப்படுவதும் வீட்டில் இருந்து தொடங்கப்பட வேண்டும். ஏன்எனில்அவைகள்உலகங்களால் கற்றுக் கற்றுத்தரும் போதுவலிகள்அதிகமாக இருக்கும்.

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – 6 – உன் கண்ணில் நீர் வழிந்தால்..

படம் :வியட்நாம் வீடு
இன்றைக்குஇருப்பதுபோல் மிகப் பெரிய காட்சி அமைப்புகள் இல்லாமல் கவிதையும் இசை சார்ந்த வடிவங்களும் கொண்ட ஒரு பாடல்.
ஒரு நிஜமான கணவன் மனைவியின் வாழ்வுகள் பதிவு செய்யப்பட்ட பாடல். பாரதியின் சாயலில் கண்ணம்மா என்று அழைத்தலும் உண்டு.
மிகவும்கைத் தேர்ந்த மருத்துவரின் கத்தி நோயாளின் காயத்தை சுற்றி அறுப்பது போல், இசையின் முன்னறிவிப்பு இன்றி TMSன் குரலில் பாடல் ஆரம்பம் ஆகிறது.
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவை அன்றோ கண்ணம்மா
என்னுயிர்நின்னதன்றோ..
தலைவனின்நிலை கண்டு கலங்குகிறாள் தலைவி. மண் நோக்கிய அழுகை. (தலைவன் கண்டு விடுவானோ என்ன? ).
திருமண நிகழ்வு தொடங்குகிறது. அக்னி வலம் வருதல் தொடர்கிறது.
வார்த்தகளின் ஆரம்பங்களில் நிகழ்காலம்.
தலைவன் அமர்ந்திருக்கிறான். தலைவி அவன் காலடியில்.
உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கைஒளிமயமானதடி
தலைவி கண்ணில் மகிழ்வுடன் கூடிய கண்ணீர். (நவ ரசங்களையும் காட்டிய நாயகி அல்லவா)
பொன்னை மணந்ததினால்
உலகில் புகழும் வளர்ந்ததடி
கம்பீரத்துடன் கூடிய தலையாட்டல் (ஒரு சூரியன், ஒரு சிவாஜி)
தலைவியின்அழுகையினைதுண்டால்துடைத்துவிடுகிறான்.
மரமும் அதன் வேர்களாக குழந்தைகளும். கண நேரத்தில் வேர்கள் மறைகின்றன. மாபெரும் வலியினை உள் வாங்கி தலைவன். நிலை குலைந்து விழுகிறான் தலைவன். தாங்கிப் பிடிக்கிறாள் தலைவி.
தலைவனும்தலைவியும்ஊஞ்சலில்.
கால சுமைதாங்கி போலே
மார்பில்எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் விம்மல் தணியுமடி
ஆலம் விழுதினை போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
என் வேரென நீ இருந்தாய் ‍‍
அதில் வீழ்ந்து விடாதிருந்தேன்.
பார்வை அற்றவர்களின் பாத்திரத்தில் உருளும் ஒற்றை நாணயமாய் காட்சிகளும், பாடல் வரிகளும்.
காட்சி மாறுகிறது.
தலைவி மடியினில் தலைவன். தலை கோதுகிறாள். காட்சி மாறுகிறது.
காலம் மாறி இருக்கிறது. தலைவி மடியினில் தலைவன். தலை கோதுகிறாள்.
முள்ளில்படுக்கையிட்டு
இமையை மூடவிடாதிருக்கும்
பிள்ளை குலமடியோ
என்னை பேதைமை செய்ததடி
பேருக்குபிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
பேருக்குபிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
தலையை நிமிர்ந்து பார்க்கிறான் தலைவன்.

என் தேவையை யார் அறிவார்
வினாக்குறி தலைவி கண்களில்.
என் தேவையை யார் அறிவார் உன்னை போல்
தெய்வம்ஒன்றே அறியும்
தலைவி தலைவனின் கைகளை கன்னத்தில் வைத்துக் கொள்கிறாள்.
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் வரையில் தில்லானா மோகனாம்பாள் படத்தில் இருவருக்கும் போட்டி இல்லை. இப்பாடலே அப்படம் முழுவதையும் காட்டி விடுகிறது.

காலம் கடந்து கணவன் மனைவி அன்னியோனத்தை காட்டும் மிக அழகான பாடல்

இன்னமும் நீர் வழிந்து கொண்டிருப்பதே பாடலின் வெற்றிக்கு சாட்சி.

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 5

எதிர்பாராமல் குழந்தைகளால் பெறப்படும் முத்தங்களால் சில கனவுகள் கலைகின்றன. பல கனவுகள் உருவாகின்றன.
——————————————————————————————
கொடுக்கும் கைகளை விட அதிக வலிமை வாய்ந்தவை இரக்கும் கைகள் அதைவிட வலிமை வாய்ந்தது வயிறு.
——————————————————————————————
தன்கோபங்கள் உடைந்து மகிழ்வு பிறக்கும் நேரம்அலாதியானது.வாழ்வினில் என்னஇருக்கிறது தன்கோபம்உடைத்தல் தவிர.
——————————————————————————————
பேருந்தில் பயணம் செய்பவர்களை விட புகைவண்டியில் பயணம் செய்பவர்களின் கண்களில் வெறுமை மிக அதிகமாக தெரிகிறது.
——————————————————————————————————————————————————————-
அடபிக்காளிப் பயலுகளா, மாட்டுப் பொங்கல்னா மாட்டுக்கு படைக்கிற பொங்கல்டா, மாட்டைவெட்டிபொங்கல் படைக்கறது இல்லடா
——————————————————————————————————————————————————————-
கர்வம்கொள்வதில் பெண்கள் முதன்மையானவர்களாக இருக்கிறார்கள். எப்பொழுதும் கர்வத்தை மறைக்கமுடியவில்லை. தனதுமகனிடம் முத்தம் பெறுவதில் தனிகர்வம்தெரிகிறது.
——————————————————————————————————————————————————————-
த்யானம்தனதுமகளும்பேசிச்செல்லும் ஒவ்வொரு தகப்பனும் உணர்கிறான் இறைவனின் அருகாமையை.
——————————————————————————————————————————————————————-
எல்லாநாளும்  SMS அனுப்புறவன் ஃப்ரெண்ட் இல்ல, வருஷபொறப்புக்கும் ஃப்ரெண்ட்ஷிப்டேக்கும்  அனுப்புறவன் தான்ஃப்ரெண்ட்.
அப்பன்காசில்  SMS அனுப்புவோர் சங்கம்
——————————————————————————————————————————————————————-
இன்னைக்கு புதுவருஷம்பொறந்திருக்கு. இன்னைக்கு எங்கயும் வெளியில போகவேண்டாம். இந்தவருஷத்தில் இருந்தாவது சொல்லாமலே எல்லாவேலையும் நீங்களே செய்ங்க.
Mr.X : எனக்கு மட்டும் தான்லீவேகிடையாது போல. அதுசரிஅடிமைகளுக்கு ஏதுசுயசிந்தைகளும்/சிந்தனைகளும்.
நிகழ்ச்சி இத்துடன் நிறைவுபெறுகிறது.
——————————————————————————————————————————————————————-
ஏங்கஇன்னைக்கு லீவுதானே,கொஞ்சம் கடைக்கு போய்காய்கறி வாங்கிகிட்டு வாங்க,பசங்கள டிராயிங் கிளாஸ்ல விட்டுட்டு வாங்க,பாட்டு கிளாஸ்லயும் விட்டுஅழைச்சிகிட்டு வாங்க, T.Vம்மிக்ஸியும் ரிப்பேரா இருக்கு அதசரிபண்ணனும், காஸ்அடுப்பு ஒரேஅழுக்கா இருக்கு, அதகொஞ்சம் தொடச்சி தாங்க.
ஏங்கஇந்தவெண்டைக்காய வாங்கிட்டு வந்தீங்க, நல்லாவே இல்ல, அப்புறம் இன்னைக்கு இன்னும் வேலஇருக்கு, ப்ரெண்ட்ஸ் வராங்கன்னு ஊர்சுத்தபோயீடாதீங்க, இப்பஎன்னாசெஞ்சிகிழிச்சிட்டீங்க, பாட்டுவேண்டிகிடக்கு
மனைவி: என்னான்னே தெரிலங்க, ஒரேதலவலியா இருக்கு.

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – 5 பூந்தளிர் ஆட

இது என் பதினெண் வயதுகளில் ஒலிக்கத் துவங்கிய பாடல்.
படம் : பன்னீர் புஷ்பங்கள்.
புகைவண்டி நகர்தலும் பேச்சுக்கள் ஆரம்பம் ஆவதும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன.
பூந்தளிர் ஆட
பொன்மலர் சூட
சிந்தும் பனி வாடை காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்
இனி நாளும் சுப காலங்கள்
வாடைக்காற்று வீசத் துவங்குகிறது. நண்பர்கள் வட்டம் மெதுவாக வேடிக்கைப் பார்க்கிறது. கைகளில் இருப்பதை விளையாட்டாய் பேசிக் கொண்டே விளையாடத் துவங்குகிறாள் தலைவி. மரத்தில் தலைவன். மிதி வண்டி அருகினில் நாயகி.

உணவு படைக்கப்படும் இடத்தில் இருவரும் எழுதிக் கொண்டே இருக்கிறார்கள்.புன்னகை இருவருக்கும்.
வாகனத்தில் வருகையில் கை அசைக்கும் காட்டுப் பூப் போல இசை நகர்ந்து கொண்டிருக்கிறது.
நாயகி வாசிக்கத் துவங்குகிறாள். நாயகன் தானும் வாசிக்க முற்படுகிறான். பல முறைகள் நிகழ்கிறது.
காதலை ஏற்றும் காலையின் காற்றும்
நீரை தொட்டு பாடும் பாட்டும் காதில் பட்டதே
வாலிப நாளில் வாசனை பூவின்
வாடை பட்டு வாடும் நெஞ்சில் எண்ணம் சுட்டதே
கோடிகள் ஆசை கூடிய போது
கூடும் நெஞ்சிலேகோலம் இட்டதே
தேடிடுதே பெண் காற்றின் ராகம்
புகைவண்டி நகர்தலும் பேச்சுக்கள் ஆரம்பம் ஆவதும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன.
  
தலைவி தேடுகிறாள்தோற்றுப் போகிறாள்தலைவன் ‘கொக்கு‘ காண்பிக்கிறான்.
பூமலர் தூவும் பூ மரம் யாவும்
ம் ம் ம்
போதை கொண்டு பூமி தன்னை பூஜை செய்யுதே
அ..அ..அ
பூ விரலாலும் பொன் இதழாலும்
ம் ம் ம்
பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் சொல்லுதே
பூமழை தூவும் புண்ணிய மேகம்
பொன்னை அள்ளுதே எண்ணம் மிஞ்சுதே
ஏங்கிடுதே என் ஆசை எண்ணம்
  
புகை வண்டியில் பயணம் தொடர்கிறது, விளையாட்டு விளையாட்டு என நகர்ந்து கொண்டிருக்கிறது(கூடவே வாழ்வும்)

நாயகி நேரம் கழித்து ஓடி வருகிறாள். தலைவனிடம் கோபம் மட்டுமே இருக்கிறது. தலைவி கை குலுக்கி கோபத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கிறாள். தலைவன் முரண்படுகிறான். பிறகு கோபம் மறைகிறது இருவருக்கும்.
இருவரும் மீன் பிடிக்கிறார்கள். தூண்டிலில் மீன் சிக்குகிறது. ஒரு சிறிய பயமுறுத்தல் தொடங்குகிறது.
சைக்கிளில் பயணம் தொடர்கிறது. கதிரவன் சாட்ஷியாக இருக்கிறான்.

பள்ளிக் கூட வாழ்வியல் அழகாகப் படைக்கப் பட்டிருக்கிறது. 

காலம் உறைத்துவிட்ட தளிர்கள் இன்னும் இளமையாய், இனிமையாய்.

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 4

ஏங்க, இன்னைக்கு லீவுதான, கொஞ்சம் கடைக்கி போய்மளிகைசாமான்வாங்கிவந்திடுங்க,உங்கடிரஸ்எல்லாம் அயர்ன்கொடுத்து வாங்கிவச்சிருங்க, காலைலசாப்டமாட்டீங்க தானே(நான் எங்க சொன்னேன்), ஒரேதடவையாமதியம்சாப்டுக்கலாம், ரேஷன்போய்ட்டு வந்துடுங்க, பசங்கசட்டைஎல்லாம் வாஷிங்மிஷின்ல போட்டுதொவச்சி அயன்பண்ணிடுங்க, என்வண்டிக்கு பெட்ரோல் போட்டுகாத்துஅடிச்சிட்டு வந்துடுங்க., நேந்துநீங்ககாயவச்சதுணிஎல்லாம் மாடிலகாயுதுஅதெல்லாம் எடுத்து வந்துடுங்க, இன்னைக்கு(ம்) டீவிஉங்களுக்கு கிடையாது. இப்பவேகண்ணகட்டுதே…..
மாலை: என்னன்னே தெரில, இன்னைக்கு ஒரேடயர்டாஇருக்கு.
அடிப்பாவி நான்பேசவேண்டிய வசனத்தை எல்லாம் இவபேசறாளே
——————————————————————————————————————————————————————-
யாரும்அற்றபொழுதுகளில் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டேதோழமைகளுடன் மனம்விட்டுசிரித்துப் பேசும்வாய்ப்பு எப்பொழுதாவது தான்வாய்க்கிறது.
——————————————————————————————————————————————————————-
மனிதன்கர்வம்அழித்தலில் மருத்துவ மனைகளில் பங்குமகத்தானது.
——————————————————————————————————————————————————————-
தனதுமகளைபிறந்தஉடன்தீண்டும் தந்தையின் கண்கள்எவரும்அறியாமல் எப்போதும் பனித்திருக்கின்றன. அதுஆயுட்காலம்முழுவதும் தொடர்கிறது.
——————————————————————————————————————————————————————-
திருமணம் ஆனஉடன்மனைவியுடன் வெளியில் செல்கையில்இந்தாம்மா மல்லிகை பூ5 முழம்கொடுஎன்றுகடையில் கேட்பவனிடம் ஒருபுன்னகை கலந்தவெட்கம் தெரிகிறது.
——————————————————————————————————————————————————————-
யாருமற்ற இரவில்கணவனைஒருகண்ணால் கண்டுவிட்டு, மகனுக்கு போர்வைபோர்த்தி, அவனின்தலைகோதிகன்னத்தில் முத்தமிட்டு ஒருநிண்டபெருமூச்சுடன் உறங்கஒருதாயால்மட்டுமே முடிகிறது.
——————————————————————————————————————————————————————-
தன்மனைவியுடன் கைகோர்த்து நடக்கும் வாய்ப்பு ஒருசிலபுண்ணியவான்களுக்கே கிடைக்கிறது.
——————————————————————————————————————————————————————-
 வேலைக்கு செல்லும் பெண்ணைப் பார்த்துஅவளுக்கு என்னஎனும்பொழுதுகளில் அவளதுகண்களில் தெரிகிறது உயிரின் வலிகள்.
——————————————————————————————————————————————————————-
மனிதமனதின்பெரும்பாரம்குறைத்தலில் இறைமைக்கு அடுத்தநிலையில் குளியல் அறைகள்.
——————————————————————————————————————————————————————-
மிகஅதிகசந்தோஷத்தையும், மிகஅதிகவலியையும் கொடுத்து இதயத்தை ஈரமாக்கும் நிகழ்வு தந்தைக்குதன்மகள்ருதுவாகும் போது.

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 3

ஒவ்வொரு மழையும் கழுவிவிடுகிறது சிலபழையநினைவுகளை. உருவாக்கிறது சிலபுதுநினைவுகளை.
——————————————————————————-
நிகழ்காலநிகழ்வுகள்
கடந்தகாலங்களில்
அபத்தமாகின்றன.
——————————————————————————-
மறுக்கப்படுவதின் வலிஅறிந்தவர்களே மன்னித்தலுக்கு தயாராகிறார்கள்.
——————————————————————————-
நெருப்பில் இடப்படும் நெய், நெருப்பினை அதிகப்படுத்துவது போல், ஒவ்வொரு இருளும் பலநட்புகளை உறுதிப்படுத்துகின்றன.
—————————————————————————————————————————————————————–
ஆற்று நீராய் வழியும் அனைத்து வலிகளும் அடங்கிவிடுகின்றன ஒருமெய்த்தீண்டலில்.
—————————————————————————————————————————————————————–
வீரன்வாள்எடுத்தபிறகுஎதிரிஎன்றும், புல்லுருவி என்றும் பார்ப்பதில்லை. இலக்குஇரத்தம் பார்த்தலுடன் கூடியவெற்றிமட்டுமே.
—————————————————————————————————————————————————————–
அழுக்கு ஆடைகளுடன் இருப்பவனைச் சுற்றிஇருக்கும் நாய்கள் அழகானவைகள். அவைகளுக்கு பொரையைகொடுத்து விட்டுஅதில்மகிழ்ச்சி அடையும் அவனதுகண்களும் அழகானது
—————————————————————————————————————————————————————–
இரு சக்கர வாகனத்தில், மனைவிமற்றும் இருகுழந்தைகளுடன் செல்பவனின் கண்களில் ஒருகர்வம்இருக்கத்தான் செய்கிறது.
—————————————————————————————————————————————————————–
முன் வாகனத்தில் செல்லும் பெண்ணின் கைப்பட்டு சரிசெய்யப்படும் அவளதுகூந்தலில் கரைகின்றன பலமனங்கள்.
—————————————————————————————————————————————————————–

வாக்கியங்கள் முழுமை பெறுகின்றன ஒருமுற்றுப் புள்ளியில்.

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 1


புழுதி எழுப்பி செல்லும் வாகனமாக ஒவ்வொரு மழைத்துளியும்எழுப்பிச் செல்கிறது சில நினைவுகளை

—————————————————————

நாணயத்தின் இரு பக்கங்கள்
அவள்சனியன் புடிச்ச எலி இன்னைக்காவதுமாட்டுச்சே, கொண்டு போய் எங்கயாவது விட்டுட்டு வாங்க
அவன்புண்ணியம் செய்ததால தான அது தப்பிக்கிறது.
அவள்கால நேரத்துல என்ன தானா சிரிப்பு வேண்டி கிடக்கு?
—————————————————————
பெரும்பாலான பெண்களுக்கு தெரிந்து விடுகிறது
உள் அழுகையை மறைத்து ஆனந்தமாய் சிரிப்பதாய் காட்ட
—————————————————————
ஆண்களின் மன வலிகளைவிட பெண்களின் மன அழுத்தங்கள் அதிகமாக இருக்குமோ?
.ம்மாலை பொழுதின் மயக்கத்திலே .. சொன்னது நீதானா, சொல் சொல் என் உயிரே..
——————————————————————————————————————————————————————-
புதுத் தாலியை விட மின்னுகிறது புது மணப் பெண்ணின் கண்கள் 
——————————————————————————————————————————————————————-
ஊமைப் பெண் பேச வேண்டுமா, அவளுக்கு திருமணம் செய்து வைத்து பாருங்கள். மாற்றம் தெரியும்
——————————————————————————————————————————————————————-
நான் ரசித்த காதல் காட்சி

அன்றலர்ந்த தாமரை போல் முகம்.வட்ட வடிவமாய் தாழம்பூ குங்குமம். சிறியதாய் வைர மூக்குத்தி. மாம்பழ நிறப் புடவை. தலைவன் கைப்பிடிக்கிறாள் தலைவி. ‘மேடும் பள்ளமுமா இருக்கோன்னோ, பாத்து வாங்கோன்னா‘. (70+ பாட்டி + 80+தாத்தா). கரம் பற்றுகையில் தெரிகிறது காதல்

——————————————————————————————————————————————————————-
நிஜங்களில் வாழ்வதை விட கற்பனையில் வாழ்வது கடினமாக இருக்கிறது.
——————————————————————————————————————————————————————-
அடிமை : தலைவா, தலைவா மக்கள் எல்லாம் படிக்க ஆரம்பிச்சிட்டாங்க. என்ன செய்யறது.
சாத்தான் : இது ஒரு மேட்டரே இல்ல. எல்லாருக்கும் கல்யாணம் செய்து வச்சிடலாம்.
——————————————————————————————————————————————————————-
தாய்மை கொண்டிருக்கும் பெண்ணின் கண்கள் கன்னியாக்குமரி அம்மனின் மூக்குத்தியை விட பிரகாசமாக மின்னுகின்றன
——————————————————————————————————————————————————————-

Click by : SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

நேசங்களை மாற்றிய தேசம்

சற்று நேரம் கழித்து அலுவலகத்தில்நுழைந்தேன்.
என்னாசார் லேட்?’
நண்பர்போன் பண்ணார், யாருக்காவது ஒரு சாப்பாடு வாங்கிகுடுக்கச் சொன்னார், அதான் கோயிலுக்கு எதித்தாப்பலஒரு அம்மா இருந்திச்சி. அதுகிட்டகொடுத்து வந்தேன். ஆனா என்ன வேடிக்கைன்னாஅது பிச்சகாரி மாதிரியே தெரியல, ஹின்டு படிக்குது
அந்த டாக்டர் அம்மாவா

எனக்குதலை சுற்றியது.
என்னங்கசொல்றீங்க
மேட்டர்தெரியாதா, அது ‘GH’Professor‘. இப்பவும் சீனியர் டாக்டர் எல்லாம்வந்து ‘consultation’னு வராங்க. பசங்கஎல்லாம் காச வாங்கி அதவிரட்டி விட்டாங்க, அட போங்கடான்னு அந்தஅம்மாவும் வெளில வந்திருச்சி . இப்பமழை பெய்யுதுன்னு பெசன்ட் நகர்bus depot படுத்துக்கிடக்குது.
காலம் கனக்கச் செய்யும் பொழுதுகளில் கண்களிலும் ஈரம்.
Click by : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

நடத்தலும் பறத்தலும்

காலையில் இருந்து பரபரப்பு இருவருக்கும்(மனைவிக்கும் எனக்கும்) தொற்றிக் கொண்டது.

‘ஏங்க அவனை கொஞ்சம் எழுப்புங்க’

‘இன்னும் 10 நிமிஷம் தூங்கட்டும்’

‘இன்னைக்கு தான் 2 மாசத்துக்கு பிறகு ஸ்கூல் தொரக்குது. 2 மாசமா தூங்கி தூங்கி காலைல எழுந்திருக்கி மாட்டான் இதுல பூஸ்ட் குடிச்சி காலைல சாப்பிடனும் வேற.

‘இரு எழுப்புறேன்’

‘எனக்கு என்னவோ கவலையா இருக்குங்க, அவன் அவ்வளவு சீக்கிரமா

எழுந்திரிக்கமாட்டான்’

‘இரு எழுப்புறேன்’

‘இருங்க, அடுப்புல கொஞ்சம் வென்னீர் போடுங்க, யூனிபார்ம் எடுத்து வைச்சிருக்குறேன். அத கொஞ்சம் அயன் பண்ணுங்க, ஷூவ எடுத்து வைங்க, சாக்ஸ் நல்லா இருக்கா பாருங்க ஸ்கூல் ரெசிப்ட் எடுத்து வச்சிருங்க, கொஞ்சம் பாட்டில்ல தண்ணி ஊத்தி வச்சிருங்க, ஸ்னக்ஸ் ஏதாவது இந்த டப்பால எடுத்து வச்சிருங்க’

எனக்கு தலை சுற்றியது.

‘எனக்கு ஒரே டென்ஷான இருக்குங்க, அவன் எப்படி கிளம்புவான்னு’

‘கவலப் படாத, நான் எழுப்புறேன்’

‘யேய், தம்பி எழுந்திரிடா’

சிறிய பால்பாயின்ட் பேனாவை கழட்டும் போது வெளியே விழும் ஸ்பிங் போல் கட்டிலில் இருந்து எழுந்தான்.

‘ஏன்டா’

‘இன்னைக்கு ஸ்கூல் தொறக்குதுல்ல, என் ப்ரெண்ஸ் எல்லாரையும் பாக்குணும் இல்ல அதான்’

வாழ்க்கை வழி எங்கும் விசித்திரங்களை விதைத்துச் செல்கிறது. விடை எழுதும் முன்னே வாசித்தல் விசித்திரமே.

Click by : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்