வாழ்க்கைக் கனவுகள்

எவர் அறியக்கூடும்,
கண்ணுக்கு தெரியும்
உடைந்த பொம்மைகளின்
பின்னால் இருக்கும்
பெற்றவர்களின்
நிறைவேறாமல்
உடைந்த கனவுகள்.

Loading

சமூக ஊடகங்கள்

தொடரும் நினைவுகளும் பாடலும்

விழியில் விழுந்து – இந்த பாடலை பல ஆயிரம் முறை கேட்டிருப்பேன். ஆனாலும் ஒவ்வொரு முறையும் புதுமையாகத்தான் இருக்கிறது. காட்சியா, இசையா, பாடலை பாடிய சசிரேகாவா அல்லது வரிகளா தெரியவில்லை. என் சிறு பிராயத்தின் வரிகள் என்பதாலா. எனக்கு மட்டும் சொந்தம் உந்தன்… என்ற வார்தைகளின் தொகுப்பா. கோடையில் குளிரினையும், குளிரினில் ஒரு வெம்மையையும் தரும் இந்த பாடலை உங்களுக்கு பிடிக்குமா?

பார்க்க ரசிக்க
http://www.youtube.com/watch?v=H3cs6IXfqQ8

Loading

சமூக ஊடகங்கள்

அடைப்புக்குறிக்குள் அடைபடா அனுபவங்கள்

வீசிச் செல்லும் பனிக்காற்று வழிச் செல்லும் எல்லா செடிகளிலும் தன் இருப்பை உறுதிப்படுத்தி செல்லும். தடையங்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கும். நினைவு ஓடையில் வரும் சில நினைவுக் குறிப்புகள் மட்டும் இங்கே. 

Loading

சமூக ஊடகங்கள்

பிறந்தநாள் பரிசு

உன் பிறந்த நாளில்
என்ன தருவாய் என்கிறாய்.
கண்ணீரின் கனம் அடக்கி
எது வேண்டுமானாலும்  
என்பதை மாற்றி
முத்தம் என்கிறேன்.
பரவாயில்லை என்று வார்த்தைகளை
சிந்துகிறாய்.
வார்த்தைகளின் முடிவில்
அடங்கிய கனம் தாளாமல்
இதயத்திற்குள் இமயம்.

Loading

சமூக ஊடகங்கள்

கர்ணனின் பசி

கர்ணனாய் வேஷமிட்டாலும்
காயந்து கிடக்கிறது
பசி அறுக்க முடியா
பாழும் வயிறு.

Loading

சமூக ஊடகங்கள்

அழுகையின் ஒலிகள்

என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா
விலை உயர்ந்த காரினில்
செல்பவர்களின் சந்தோஷ ஒலி தாண்டி
ஓலிக்கும்
ஏழைகளின் கண்ணீரின்
அழுகை ஒலிகளை

Loading

சமூக ஊடகங்கள்

சந்தோஷ ஆலாபனைகள்

என்றாவது உற்று கவனித்திருக்கிறீர்களா
கோரஸாக பாடுபவர்களின்
சந்தோஷ குரல் தாண்டி
கண்ணுக்குள் அடைபட்டுக்கிடக்கும்
கண்ணீரின் வலிகளை.

Loading

சமூக ஊடகங்கள்

தொடரும் என் ஜன்மங்கள்

ஒரு விடியலுக்கான
முன் இரவினின் கண் விழித்து
பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்லி
உனக்காக வீடும் காரும் வாங்கி
தருகிறேன் ஆனால் சில வருடம் கழித்து
என்று கூறி புன்னகைக்கிறாய்.
இமைகளில் பட்டுத் தெரிக்கும்
நீரினில் கரைகின்றன
தொடரும் என் ஜன்மங்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

உடையும் கவிதைகள்

நிச்சயிக்கப்பட்ட பாதையில்
பயணம் என்றாலும்
நித்தமும் உடைகின்றன
கனவுகளும் கவிதைகளும்.

Loading

சமூக ஊடகங்கள்

ஆத்ம நிவேதனம்

உறங்க துவங்கும்
வினாடியில்
பிஞ்சு விரல்களால் என் மேல் எழுதி
என்ன எழுதினேன் என்கிறாய்.
சொர்க்கம் என்றேன்.
நீ விழித்த விழிப்பில்
பல ஜன்மங்களை நிறைவாக வாழ்ந்த
தந்தைகளின் வரிசையில்
முதன்மையாக நான்.

Loading

சமூக ஊடகங்கள்

விடியல் தேடி

வினாக்களோடு விடிகின்றன
விடியல்கள்.
விடைகளோடு முடிகின்றன
கவிதைகள்.

Loading

சமூக ஊடகங்கள்

ஓவியனின் கனவுகள்

வண்ணம் தீட்ட
துவங்கிய தருணத்தில்
வரிசையாக மனிதர்கள்.
சிகையை சீர் படுத்த சொன்னான் ஒருவன்.
முகத்தை சீர்  படுத்த சொன்னான் ஒருவன்.
கண்கள் கலக்கமுற்றிருப்பதாக
சீர்  படுத்த சொன்னான் ஒருவன்.
ஆடையை சீர்  படுத்த சொன்னான் ஒருவன்.
நடையை சீர்  படுத்த சொன்னான் ஒருவன்.
மற்றவர்களுக்கா வரைந்து
முடித்த ஓவியத்தில்
முழுமை பெறாமல் ஓவியமும்
ஓவியனின் கனவுகளும்.

Loading

சமூக ஊடகங்கள்

வறுமையும் வலியும்

என்றாவது உணர்ந்து
இருக்கிறீர்களா
பொருளற்று நண்பனை
சந்தித்த குசேலனின்
ஆழ்ந்த  மன வலிகளை.

Loading

சமூக ஊடகங்கள்

பழைய வாசனைகள்

மகள் மறைத்து
வைத்து விளையாடும்
புத்தக மயிலிறகின் விளையாட்டில்
தோன்றி மறைகின்றன
நான் தொலைத்து விட்ட
குழந்தைப்பருவங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

வாழ்விற்குப் பிறகுமான வலிகள்

காலனே,
கொஞ்சம் காலம் கடந்து வா.
புதைப்பதற்கு இடமும் அற்று
எரிப்பதற்கு மின்சாரமும் அற்ற
தேசத்தில் வாழ்கிறோம்.
மானம் கெட்ட தேசத்தில்
வாழ்வு மட்டும் அல்ல
மரணத்திற்கும் பின்னும் வலிதான்.

Loading

சமூக ஊடகங்கள்

தகிக்கும் தனிமைகள்

எவர் அறியக்கூடும்
மற்றவர்களை தன்னிடம்
அணுகவிடாமல்
தடுத்த வீடுகள்
கால மாற்றத்தால்
தனித்திருப்பதையும்
தவித்திருப்பதையும்.

Loading

சமூக ஊடகங்கள்

சாசுவதம்

புகைப்படத்தின் மீது நாட்டம்
கொண்டவனாக இருந்த பொழுதுகளில்
உன்னைப் படம் எடுக்க விரும்பினேன்.
நிச்சயமற்ற ஒன்றை
நிச்சயப்படுத்தவா இப்புகைப்படம் என்றாய்.
அன்று முதல்
பிடித்துப் போனது உன்னையும்
பிடிக்காமல் போனது புகைப்படத்தையும்.

Loading

சமூக ஊடகங்கள்

மானச தவம்

ஒரு வசந்த காலத்தின்
தொடக்கத்தில் ஒரு பயணம்.
நினைவு அடுக்குகளை
பிரித்துக் காட்டும் வாய்ப்பு உனக்கும்
காணும் வாய்ப்பு எனக்கும்.
இது சிறு வயது அடுக்குகள்,
இது பதினென் பிராயத்தின் அடுக்குகள்,
இது உறவுகளின் அடுக்குகள்,
இது அலுவலகத்தின் அடுக்குகள்
என்று அடுக்கிக் கொண்டே சென்றாய்.
எங்கே
காதல் அடுக்குகளைக் காணோம் என்றேன்.
மவுனப் புன்னகை வீசி பின் சொன்னாய்
தனித்து இருப்பதை பிரிக்க முடியும்.
கலந்து இருப்பதை அல்ல என்றாய்.
ஆண் என்பதன் அடையாளம் துறந்து
அழுகை ஒலி.

Loading

சமூக ஊடகங்கள்

திருமஞ்சனம்

சுத்தத்தின் பொருட்டு
நீராடல் நதிகளில்.
பார்த்தல் நிகழ்ந்தது
வகை வகையான மீன்களிடம்.
இயற்கையின் பொருட்டு
மீன் ஓன்று கையினை கடித்தது.
எதிர்ப்புகள் அற்ற நிலையில்
மற்ற மீன்களும்.
சில மீன்கள் கால்களை கடித்தன.
சில மீன்கள் முதுகினை கடித்தன.
சில மீன்கள் முடியினையும் கடித்தன.
எதுவும் அற்ற பொழுதுகளில்
எலும்புகளின் தோற்றம்.
ருசியின் பொருட்டு
அவற்றையும் உண்டன சில மீன்கள்.
அம்புகள் தைத்து தேரின் அடியில்
கிடக்கும் கர்ணனாய் நான்.
ஈரம் படிந்த இதயம் மட்டும்
இன்னமும் இருப்பதை
நீ உணர்த்தினாய்.
கரை ஓதுங்கியது எதுவோ?

Loading

சமூக ஊடகங்கள்

இராவணண்

இராவணண் பற்றி சில செய்திகள். அவன் மிகப் பெரிய சிவ பக்தன் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அவனது கொடி முத்திரை என்ன தெரியுமா? வீணை. அரக்கனாக இருந்தும் மிகப் பெரிய/கடினமான இசைக் கருவியை தன் கொடியாக உடையவன். அவனுக்கு பத்து தலை என்பது உருவமாகப் படுகிறது. பத்து விஷயங்களை ஓரே நேரத்தில் செய்பவர்களை தசாவதானி என்று அழைப்பார்கள். அப்படிதான் தோன்றுகிறது. வரலாற்றுப் பதிவுகளில் சில சதாவதானிகள்(நூறு விஷயங்களை ஓரே நேரத்தில் செய்பவர்கள்) இருக்கிறார்கள்.

மீண்டும் தியானிப்போம்.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!