சாசுவதம்

புகைப்படத்தின் மீது நாட்டம்
கொண்டவனாக இருந்த பொழுதுகளில்
உன்னைப் படம் எடுக்க விரும்பினேன்.
நிச்சயமற்ற ஒன்றை
நிச்சயப்படுத்தவா இப்புகைப்படம் என்றாய்.
அன்று முதல்
பிடித்துப் போனது உன்னையும்
பிடிக்காமல் போனது புகைப்படத்தையும்.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *