மகேசுவரமூர்த்தங்கள் 11/25 சக்ரவரதர்

சக்ரவரதர்

சிவனின் வாமதேவ முகத்தில் இருந்து தோன்றியவர்சக்ரவரதர்.

திருமாலுக்கு சக்கரம் கொடுத்த மூர்த்தி. இவரை வழிபடுபவர்கள் அனைத்து போகங்களையும் எவ்வித இடையூரும் இன்றி துய்ப்பார்கள்.

இந்த விபரம் மட்டுமே இம்மூர்த்தி பற்றி காணப்படுகிறது.

Loading

சமூக ஊடகங்கள்

2038 – செயற்கை கண்திரை – Artificial Retina

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)


Artificial Retina Brings Light to Blind – News
1.
அந்த தென்றல் சீரியல வர வர சரியாவே தெரியல. 1288 episode 14-11-14. அன்னைக்கு பாத்தேன். அப்புறம் சரியா தெரியல. இந்த ஆப்பரேஷன் பண்ணா ஒழுங்கா தெரியுமா டாக்டர்?
2.
சார், இதெல்லாம் ரொம்ப ஓவர் சார். பொண்டாட்டி பேச்ச ‘Blind கேட்டுட்டு இந்த ஆப்பரேஷன் பின்னாடி கண்ணு தெரியுமான்னு கேட்டா எப்படி சார்?
3.
சரி சார். ஒத்துக்கிறேன்.. Argus II design consists of an external video camera. அதுக்காக வீடியோ வாடகைக்கு எல்லாம் விட முடியாது சார்.
4.
சார் இதெல்லாம் ரொம்ப ஒவர் சார். Artificial retina operation ஆன பிறகுதான் உங்க கம்பெனிக்கு ‘Vision’ என்னன்னு சொல்லுவேன் சொல்றது ரொம்ப ஓவர் சார்.
5.
இந்த ஆப்பரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு கண்ணு தெரியும் அம்மா. ஆனா உங்க புருசன் எங்க எங்க காசு வச்சி இருக்கார்னு கண்டுபிடிக்க முடியாது அம்மா.

Loading

சமூக ஊடகங்கள்

I.T என்னும் பம்மாத்து – வளர்ச்சிப் படிகள் – Stages – 3

கலர் கலரான கனவுகளுடன் உள்ளே நுழைகிறார்கள்.
 
முதல் சில வாரங்கள்
 
HR – இதுல நம்ம Company பத்துன எல்லா விஷயமும் இருக்கும். பாருங்க. வேற doubt னா கேளுங்க. We are ready to help you at any time.
 
Manager : Guys, See me a for a min. This is Mr/Mrs. Joined in our team. He/She did her degree bloaa bloaaa etc.,
 
மதிய உணவு இடைவேளையில்
Mr.x :  Hi I am …from (Native).
Mr. Y : Great ya. I am also from (native).( அவன் தான்டா உனக்கு ஆப்பு வைக்கப்போறான்.)
Mr.x :   Work load எப்டி இருக்கும்.
Mr. Y : பெருசா ஒன்னும் இருக்காது. கொஞ்சம் development  கொஞ்சம் testing. மெயில் அனுப்பிட்டு போய்டே இருக்கலாம்.
Mr.Y : Guys, Mr.x join பண்ணி one month ஆகிடுச்சி. Salary வந்துடுச்சி. So he is going to give treat. I hope he won’t mind if we order for Pizaa. Am I right Mr. X?
Mr.Y : என்ன credit கார்டு வச்சி இருக்கீங்க
Mr.x :  எதுவும்இல்ல.
Mr.Y : எதுவும் இல்லயா?
Mr.x :   இல்ல.
Mr.Y : It has its own plus and minus. என்னோட friend ஒருத்தன் credit card company workல பண்ரான். அவன்ட சொல்லி ஏற்பாடு பண்றேன். உங்க salary எவ்வளவு?? (அடுத்தவன் சம்பளம் என்னங்கறத எவ்வளவு talent ஆ கேக்ரான்)
HR “ உங்க வர அக்டோபர்ல உங்க mid year performance review
Mr.x : நான் என்ன செய்யனும்.
HR “ This is just formality. We are checking whether you are sync with what you defined in review form.
Mr.Y : நெக்ஸ்ட் வீக் லீவு போட்ராத.
Mr.x :   என்ன விஷேம்.
Mr.Y : Annual year end party. We will have drinks. Drinks சாப்டுவீங்கள்ல?( உன் தமிழ்ல தீய போட்டு கொளுத்த)
Mr.x :    occasionally

Mr.Y : அது போதும்,Hey Guys இவன் நம்ம team da.

 
 
சம்பளம் தாண்டி முதல் வருடத்தில் வாங்கிய ஷூ, வாட்ச், சர்ட், பேண்ட், பேக் இத்தியாதிகள் போக கடன் Rs. 75000/-(3 credit cards with limit of 25000 each)
புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

I.T என்னும் பம்மாத்து – வளர்ச்சிப் படிகள் – Stages – 2


ஜூலை 2014ம் ஆண்டு நிலவரப்படிதமிழ்நாட்டில்  552 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை தோராயமாக 7,50,000 பொறியியல்  மாணவர்கள் வெளிவருகிறார்கள். இதில் 1,00,000 மாணவர்கள் மட்டும் தமிழ் நாட்டில் இருந்து (550 * 180 ( மூன்று பிரிவுகள் என்று கணக்கில் கொண்டு)
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து பொறியியல் கல்லூரிகளும் மண்டலங்களுக்கு உட்பட்டு அவைகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

College – A, Dept – AA, Practical – AAA, Staff – AAAA, External – B

AAAA:  வாங்க, வாங்க B சார், நல்ல வேள, நீங்க வந்தீங்க இல்லேன்னா Practical ரொம்ப கஷ்டமா போய் இருக்கும்.
B :  ஏன் அப்படி சொல்றீங்க, என்னாச்சு?
AAAA:  போன தடவை C காலேஜ்ஜில் இருந்து ஒருத்தன் வந்தான்(மரியாதை குறைவு  கவனிக்க). என்ன என்ன எக்ஸ்பிரினென்ட், அல்காரிதம் எல்லாம் கேட்டு கொன்னுபுட்டான் சார்.  இதனால நம்ம பசங்க மார்க்கே எடுக்க முடியல. First மார்க்கே 70 தான்னா பாத்துகோங்களேன் சார். இவன்லாம் என்ன மார்க தூக்கிட்டா போகப்போறான்இன்னொரு தடவ அவன் காலேஜிக்கு எக்ஸ்டேனலா போகாமலா போயிடுவேன். அப்ப இருக்கு அந்த பசங்களுக்கு.

மாணவனை காப்பாற்றுவதாக நினைத்த நிமிடங்கள் பிரச்சனை ஆரம்பமாகிறது.

காட்சி 1 :
What is this ya? You know, In Google office every 100 meter, there is one refreshment shop is there. நம்ம காலேஜும் தான் இருக்கே. ச்சேய்
காட்சி 2 :
டேய், மச்சான் என்னடா bf ?
bf ??
அட இது கூட தெரியாதா. Breakfast அப்படீன்னு அர்த்தம். Just 2 பப்ஸ்(pups, puff.. தெளிவா சொல்லுங்கடா) அப்புறம் 1 coke. That’s all. (அட கம்மனாட்டிகளா)

காட்சி 1 ம் காட்சி 2 ம் தொடர்புடையவை.



Placement office:
சார், இந்த பையன் எப்படி செய்திருக்கிறான் சார்?
சுமாராதான் செய்திருக்கிறான் .
சார், பையன் நல்ல பையன் தான். டேய் தம்பி சாருக்கு ஒரு ஜூஸ் எடுத்துகிட்டுவா. அதனால நல்ல பையன் தான் சார், 8.4 வச்சிருக்கான் சார். இந்த டயத்ல அவனுக்கு கொஞ்சம் உடம்பு முடியாம போயிடுத்து. கொஞ்சம் பாத்து செய்ங்க சார்.

மனிதவள மேம்பாட்டு அறிக்கையின் படி (2014), சுமாராக 20% சதவீத மாண்டவர்கள் முதல் வருடத்தில் வேலையில் சேருகிறார்கள். (அதாவது 20000 மட்டுமேசென்ற வருட மாணவர்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை). அடுத்த வருடத்தில் அது 40000 ஆக ஆகிறது. அதோடு நின்றுவிடுகிறது.

அதாவது அவன் வேலைக்கு சேரும் பொழுதுகளில் 40000 இருந்து ஒருவனக தேர்ந்தெடுக்கப்படுகிறான்.

புகைப்படம் :  R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

வேதாளம் கட்டுப்பட்ட கதை

சற்றும் மனம் தளராமல் வேதாளத்தை மரத்தில் இருந்து கீழே தள்ளி தோளில் சாய்த்து நவீன விக்ரமாத்தியன் நடக்க ஆரம்பித்தான்.

நீ நல்லவன் தானே.
..
மௌனம் பதில் ஆகாது. எனக்கான பதில் அளிக்க முடியா வினாக்களில் மட்டுமே நான் உனக்கு கட்டுப்படுவேன்.
..

படைப்புகளின் தொடக்கதில் நீ இருக்கிறாய். உன்னை புகழின் ஏணியில் ஏற்றிவிட என்னால் முடியும். செய்யவா?

வாழ்வு மிகவும் ரசிக்கத் தக்கது என்பதை நீ அறிவாயா?

உணவில் பெரும் விருப்பம் கொண்டவன் நீ என்பதை நான் அறிவேன். விருப்பப்படி உணவினை வழங்கவா?

இசையினில் பெரும் ஆர்வம் கொண்டவன் நீ. இசையின் நுணுக்கங்களை கற்றுத் தரவா?

தனிமை உனக்கு பழக்கமானது. உன்னை தனிமைப்படுத்தி மகிழ்வினை உண்டாக்கவா?

உலக அனுவங்கள் அனைத்தையும் உனக்குத் தருகிறேன்.

இல்லற தர்மத்தில் இருக்கிறாய். உனக்கான கவலைகள் மற்றவர்களை விட மிக அதிகம் என்பதை நான் அறிவேன். உனக்கான விருப்பங்கள் இருப்பின் தெரிவிப்பாய். உனக்காக செய்து முடிப்பேன்.

ஞாயிறு அன்று என் மனைவி எந்த வேலையும் எனக்கு கொடுக்கக் கூடாது.

அடுத்த வினாடியில் வேதாளம் கட்டுப்பட்டது
புகைப்படம் : இணைய தளம்

Loading

சமூக ஊடகங்கள்

2038 – வங்கி – வங்கி சேவைகள்

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)
 
2038 –  வங்கி–  வங்கி சேவைகள்
1.
இந்த ஆண்டு முதல் அமுலுக்கு வருகிறது. உங்களது பணத்தினை நாங்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதால், நீங்கள் எங்களுக்கு வட்டி கட்ட வேண்டும்.
2.
பள்ளிக் கட்டணம் EMI முறையில் கட்ட எங்களது கிளைகளை அணுகவும். இதனை நீங்கள் 10 வருடங்களுக்கு பெற்றுக் கொள்ளலாம். கடைசி 20 வருடங்களின் Income Tex return file  தேவை.
3,
ஓய்வு ஊதியக் காரர்கள் தங்களது பென்சனை பெற, கடைசி 5 வருட Living certificate/evidence உங்களது வங்கி கிளைகளில் கொடுக்கவும்.
4.
வங்கிகளில் லாக்கர்  வசதி பெற எங்களது கிளை மேலாளரை அணுகவும். கடைசியாக வழங்கப்பட்ட தேதி – 10-Oct– 2014. மற்றவர்கள்காத்திருக்கிறார்கள்.
5.
உங்களுக்கு குழந்தை எப்ப பிறக்கும்?
வர வருடம் ஏப்ரல் 1ம் தேதி.
இங்க பாருங்க, இந்த ப்ளான் உங்களுக்கு நிச்சயமா சரியா வரும். இதுல நீங்க வருஷம் 1 லட்சரூபா போட்ட உங்க குழந்தை 60 வயசு ஆகும்போது இது மெச்சூர் ஆகும். அவங்க சஷ்டியப்த பூர்த்திக்கி இது கரட்டா இருக்கும். இந்த ஸ்கீம் பேரு சுரபி சஷ்டியப்த பூர்த்தி.

மற்றவை
Monal Gajjar (google it)– Previous employment – Bank employee.  Hey Hey

Loading

சமூக ஊடகங்கள்

I.T என்னும் பம்மாத்து – வளர்ச்சிப் படிகள் – Stages


இக்கட்டுரைகள் குறித்த விமர்சனங்கள் பல்வேறாக வந்த வண்ணம் உள்ளன.
வயது என்னும் நிகழ்வினைக் கொண்டும்அதனால் அடையப்படும் பதவிபதவி சார்ந்த  உயர்வுகள்   குறித்து இந்த தொகுப்பு.
என்வரையினில் வசதிக்காக 20 வயதிற்கு கீழ், 20 – 30 வயது, 30 – 40 வயது, 40க்கு மேல் என்று வயதின் வரைகளை உருவாக்கி இருக்கிறேன்இதில் பல்வேறு மாறுபட்ட   கருத்துக்கள் இருக்கலாம்.
பணியின் அடிப்படையில்  Entry level, Middle level and Higher level  என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
Entry level  – Trainee, Software Engineer etc.,
Middle level  – Project Leader, Project Manager etc.,
Higher level  – IT Consultant, Associative Director etc.,
வாழ்வின் வளச்சியில் என் தந்தை ஒரு ‘IT’ ல் வேலை பார்க்கிறார்     என்று குழந்தை கூறுவதை ஏற்று மிகவும் மகிழ்வுறுகிறோம். அங்கு தான் ஆரம்பமாகிறது வினை.
நல்லா படிச்சா மட்டும் தான் ‘IT ‘ கம்பெனிகளில் வேலை கிடைக்கும். இல்லைன்னா ஒன்னும் பண்ணமுடியாது’ இப்படித்தான் வார்தைகளின் விஷம் குழந்தைகளுக்கு ஏற்றப்படுகிறது.
‘சார், இதெல்லாம் கத. நான் எல்லாம் அப்படி இல்ல’ சொல்லுகிறவர்கள் இருக்கிறார்கள். மறுப்பவர்களின் குழந்தைகள் மிகப்பெரிய கல்விக் கூடங்களில் பயில்கிரார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
பெற்றவர்களால் தூண்டப்பட்டோதன் விருப்பத்தின் காரணமாகவோ அவர்கள் தங்களது   பள்ளிப் பருவத்திலேயே  Computer Science  தேர்ந்தெடுக்கிறார்கள்.
கல்லூரிக்கு முன் – நண்பர்கள்
மச்சான் வேற எந்த branch  ம் எடுத்துடாத. வருஷத்துக்கு 500 ரூ சம்பளம் அதிகமாகும். IT ல மட்டும் தான் வருஷத்துக்கு 1 லட்சம் increment வரும்.
இவர்கள் மிகப் பெரிய கல்விக் கூடங்களில் பயில்வதற்காக மிகப் பெரியதான தன்  வாழ்வினை இழக்கிறார்கள்.(ஒரு சிலர் தவிர்த்து)
கல்லூரி கனவினை வளர்த்து விடுகிறது.
நீங்க ஒன்னும் கவலப்படாதீங்க சார். எங்க college ல் சேர்ந்தா 100% Placement. – இத்யாதி விளம்பரங்கள்
சில கல்வி நிறுவனங்கள் கம்பெனிகளுடன் தொடர்பில் இருக்கின்றன. இதன்படி கம்பெனிகள் கல்லூரி நிறுவன மாணவர்களுக்கு ‘Offer Letter’  மட்டுமே தருகின்றன.  Not ‘appointment order’
அவர்கள் சந்தோஷமாக கல்லூரிகளில் இருக்கட்டும். சில நாட்கள் தவிர்த்து அவர்களை சந்திப்போம்.
(அதெல்லாம் இல்லை என்று உடனடியாக மறுப்பு சொல்கிறவர்கள் இருக்கக்கூடும். இங்கு   பெரும்பான்மை மட்டுமே விளக்கத்திற்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது.)

புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

I.T என்னும் பம்மாத்து

மனித வாழ்வின் காலத்தடம் படாத இடங்கள் கூட கணினியின் தடங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன என்பதே நிஜமான உண்மையாகும்.
தொழில் சார்ந்த துறைகளின் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வளரும் போது, தகவல் தொழில் நுட்பத் துறையின் வளர்ச்சி வகை தொகை இல்லா வளர்ச்சியினை சந்தித்து இருக்கிறது. இதில் பெரும்பாலும் நிறுவனங்களின் வளர்ச்சி மலை அளவிற்கும், அதில் பணிபுரியும் ஊழியர்களின் வளர்ச்சி மடு அளவிற்கும் இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.
இங்கு நான் குறிப்பிடும் அனுவபங்கள் எனக்கானவை மட்டும் அல்ல. பல அல்லல் பட்ட மனிதரிகளின் அனுபங்களும் கூட.
ஒரு நாட்டின் வளர்ச்சியினை வேறறுக்க அதன் அடிப்படை கலாச்சாரத்தை அறுத்துவிட்டால் போதும். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வருடங்களாக இருந்த ஒரு கலாச்சாரம், சில தசாப்தத்தில் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது என்பதே நிதர்சனம்.
இது குறித்து கீழ் கண்ட தலைப்புகளில் எழுத உள்ளேன்.
  1. வளர்ச்சிப் படிகள் – Stages
  2. மீட்டிங் கூத்துக்கள் – Meetings
  3. விடுமுறைகள் என்னும் நாடகங்கள் – Leave
  4. மதிப்பீடு(சுயம்/கம்பெனி) – appraisal
  5. குழுவுடன் சில நாட்கள் – Team outing
  6. மற்றவை
இவைகளின் நோக்கம் எவர் மனதையும் புண்படுத்துதல் அல்ல. நிதர்சனங்களை சுட்டிக்காட்டுவது மட்டுமே இதன் நோக்கம்.
புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 13

நினைவுகளை கலைத்தலை விட கனமான வேலை ஒன்றும் இல்லை.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
வறுமை உடையவன் மயானம் அடையான்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
சாலை ஒரங்களில் இருக்கும் மரங்களில் மிக மெல்லிய அடுக்குகளாக மணல் துகள்கள் படிந்திருப்பதைப் போல், 35+ கடக்கும் மனிதர்களிடம் மரணம் குறித்த சிந்தனை படிந்திருக்கிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பட்ட மரத்திலிந்து பறந்து செல்கின்றன பல பறவைக் கூட்டங்கள்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
உச்ச கட்ட வன்முறையின் மிகச் சிறந்த வடிவம் மௌனம்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தண்டவாளங்களின் மேல் பறந்து செல்லும் பறவைகளின் சேரும் இடம் எதுவாக இருக்கக் கூடும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
வாழ்வின் தனிமைகள் கற்றித் தருவதை விட வேறு யார் அதிகம் கற்றுத் தரமுடியும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தேடலைத் தொலைத்தவன் மயானம் அடையான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மனைவியின் முகத்தில் அதிக பிரகாசம் உண்டாக்க வேண்டுமா? ‘மணி 10 ஆயிடுத்து. ஒரே தடவையா மதியம் சாப்பிடலாமா?’ என்று சொல்லிப் பாருங்கள்.
அன்னைக்கு நிச்சயம் கறி மீன் குழம்பு வகையரா தான். 
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
உறவுகள் அற்று இருப்பவர்களுக்கே உலகம் வசமாகிறது.

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

சாங்கியம்சிறு விளக்கம்

·   தேகாதி பிரபஞ்சத்திற்கு காரணமானதும், அருவமாகவும், என்றும் உள்ளதாகவும், எல்லா பொருள்களிலும் நீக்கமற நிறைந்தும் ஜடமாகவும் உடைய மாயை உண்டு என உணர்தல்.
·   அதனோடு தொடர்புடைய ஆன்மா உண்டு என்றும் அறிதல்.
·   ஆன்மாவுக்கு அஞ்ஞானத்தால் சுக துக்ககங்கள் உண்டு என்றும், அதை பிரித்து உணரும் பகுத்தறிவதாலே அஞ்ஞானம் நீங்கி ஆன்மா முக்தி அடையும் என்றும் உணர்தல்.
·   பல பிறவிகளுக்குப் பின் முக்தி உண்டு என உணர்தல்,
·   ஈஸ்வரனை தத்துவ விசாரணை மூலமாக அறிய இயலா நிலையில் ஈஸ்வரன் என்று ஒருவன் இல்லை என்று கூறுவது.
பாதஞ்சலம் –  சிறு விளக்கம்

சாங்கிய கருத்துக்களை ஏற்பது. அதோடு மட்டுமல்லாமல் அதற்கு மேல் படைத்தல், அழித்தல் ஆகிய தொழில்களை செய்யவும், உண்மை ஞானத்தை உபதேசிப்பவனாகவும் உடைய ஈஸ்வரன் ஒருவன் உண்டு எனவும், அவனை யோக முறையினால் காண இயலும் என்றும் விளக்குவது.
நியாயம் –  சிறு விளக்கம்
தர்கத்தின் வாயிலாக ஜடப் பொருள்களையும் சித்துப்  பொருள்களையும் தனித்தனியே நித்தியப் பொருள்களாக அறிதல். ஜடத்தில் இருந்து சித்தினை பிரித்து அறிந்து முக்தி என்றும் கூறுதல் . சித்து மனம் என்றும் அது அணுவினை விட சிறியது என்றும் கூறும்.

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

புராணம் என்பது என்ன?

வேத ஆகமப் பொருளை சரித்திர வடிவில் விவரிப்பது.

புராணத்தில் விவரிக்கப்படுபவை எவை? விளக்கங்கள்

உலக் தோற்றம், உயிர் இறைவனை அடைதல், பாரம்பரியங்கள், அவற்றோடு தொர்டபுடைய கதைகள், மனுவந்தரங்கள் ஆகியவற்றை கூறும். இது சைவம் முதல் ஆக்கினேயம் வரை உள்ள பதினெட்டு ஆகும்.


சிவபுராணம்
சைவம் ,காந்தம், லிங்கம், கூர்மம், வாமனம், வராகம், பௌடிகம்
மச்சியம், மார்க்கண்டேயம், பிரமாண்டம் – 10
விஷ்ணுபுராணம்
நாரதீயம்,பாகவதம்,காரூடம்,வைணவம் – 4
பிரமபுராணம்
பிரமம், பதுமம் – 2
சூரியபுராணம்
பிரமகைவர்த்தம் – 1
அக்னிபுராணம்
ஆக்கிநேயம் – 1
உபபுராணங்கள்
உசனம்,கபிலம்,காளி,சனற்குமாரம்,சாம்பவம்,சிவதன்மம்,சௌரம்,
தூருவாசம்,நந்தி,நாரசிங்கம்,நாரதீயம்,பராசரம்,பார்க்கவம்,
ஆங்கிரம்,மாரீசம்,மானவம்,வாசிட்டலைங்கம், வாருணம் – 18


சாத்திரங்கள் எதனை உணர்த்தும்?
சிஷைவேதங்களை ஓதும் முறை
கற்பம்வேதங்களில் விதித்த கர்மங்களை அனுட்டிக்கும் முறை
சோதிடம்வேதங்களை ஒதுவதற்கான காலம்
வியாகரணம்வேதங்களின் எழுத்து, சொல், பொருள் இலக்கணம்
நிருத்தம்சொற்களின் வியாக்யாணம்
சந்தம்வேத மந்திரங்களின் சந்தங்களின் இலக்கணம்
இவை தவிர வேறு சாத்திரங்கள் இருக்கின்றனவா?

சாங்கியம், பாதஞ்சலம், நியாயம், வைசேஷிகம், மீமாம்சை மற்றும் வேதாந்தம் என ஆறு தத்துவ சாத்திரங்கள் உள்ளன.

Loading

சமூக ஊடகங்கள்

2038 – T.V Serialsssssss

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)
1.
சார், உங்களுக்கு கல்யாணம் ஆகுணும்னா நீங்க செய்ய வேண்டியது எல்லாம் ரொம்ப ஈசி. கார்த்தின்னு பேர் வச்சிங்க. காமாட்சின்னு ஹீரோயின் பேரு வைச்சிப்போம். எங்க சீரியல நடிங்க. உங்களுக்கு கல்யாணம் ஆகிடும்.
2.
என்னா அநியாயமா இருக்கு. எங்க காலத்துல 1000 எபிசோட் வந்தா பெருசா கொண்டாடுவாங்க. இப்ப என்னடான்னா, 20000 எபிசோட் மேல வர சீரியலுக்கு கூட ஒரு கொண்டாட்டமும் இல்லயே.
3.
30 நிமிடம் இடைவெளி இல்லா சீரியல் இன்றுநாசமா போறவனே, கட்டைல போறவனே போன்ற அழகு வசனங்கள்.
4.
வீட்டு பெண்மணிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு. . எவ்விதஇடஞ்சல் இன்றி சீரியல் பாருங்கள். உங்கள் வீட்டிற்கே Breakfast/Lunch/Dinners வந்து  சப்ளை செய்கிறோம்.
5.
TRB ரேட்டிங் ஏறவேமாட்டேங்குது சார், என்ன செய்யலாம் சார்?
அது பெரிய மேட்டரே இல்ல. ஒரு வெள்ளிக்கிழமை புருஷன் பொண்டாட்டியை அடிச்சு காயப்படுத்துற மாதிரி முதல் 7 நிமிஷம் காமிக்கலாம். அடுத்த 2 நிமிஷம் பொண்டாட்டி அழுவுற மாதிரி சீன் கடைசி 5 நிமிஷம் பொண்டாட்டியை சாகடிக்கிறதை லைவ்ல காமிக்கலாம்.


Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

இவ்வாறு வேதம், சிவாகமம் என்று இரண்டு நூல்கள் தேவைஇல்லை என்று கூறுதல் வேத நிந்தை ஆகுமா?

ஆகாது. ஏனெனில் இரண்டுமே ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன். சிவாகம ஞானம் அடைய வேதம் முக்கியம். வேதம் மட்டுமே தெரிவதால் ஞானம் அடைதல் தேவை இல்லை என்று கூற இயலாது. எனவே சரியை, கிரியை, யோகம்   இவற்றால் அடையப்பெறும் ஞானம் மிக முக்கியம்.
எனில்  சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய  சனகாதி முனிவர்களுக்கு ஈஸ்வரன் அருளியது வேதமா அல்லது சிவாகமமா?

முதலில் சுருக்கமான வேதத்தையும் அது குறித்து அவர்கள் தெளிவடையாமையால் பின்னர் சிவாகமத்தையும் விரிந்துரைத்தார்.
வேதம் மற்றும் சிவாகமங்களின் தோற்றத்தில் கால வேறுபாடு உண்டா? அவைகள் எப்போழுது தோன்றின?

சிவனின் ஊர்த்துவ முகமாகிய ஈசான்யத்தில் இருந்து 28 சிவாகமங்களும், மற்ற நான்கு முகங்களாகிய தத்புருஷம், அகோரம், வாம தேயம், சத்யோஜாதம் ஆகியவற்றில் இருந்து நான்கு வேதங்களும் ஒரே காலத்தில் தோன்றின.
ஆகமங்கள் ஐந்து வகைப்படும் என்றும் அவை லௌதிகம், வைதிகம், அத்தியான்மீகம், அதிமார்கம் மற்றும் மாந்திரம் எனப்படும் என்று கூறப்படுகின்றன.இவைகள் சிவாகமத்தின் பகுதியா?

மாந்திரம்சிவாகமம்
லௌதிகம்இகலோக வாழ்வு
வைதிகம்காலாந்திரம்
அத்தியான்மீகம்ஆன்ம விசாரம்
அதிமார்கம்யோகமார்க அறிவு
காமிகாதி இருபத்திஎட்டு ஆகமங்களுக்கு வேறாக அல்லது அதிகமாக வேறு சிவாகமங்கள் உண்டா?

காமிகாதிகளை முதன்மையாகக் கொண்டு குரு முதலிய இருடியர் செய்த உபாகமங்கள்(உப+ஆகமங்கள்) இருநூற்று ஏழு  ஆகும்.

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 12

விலக்கப்பட்ட மனிதர்களின் நேசிப்புகள் உண்மையானவைகள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கருப்பு மிகவும் அழகான நிறம். ராமர் கருப்பு, கிருஷ்ணர் கருப்பு, அந்த… (அட சே…) அதனால் கருப்பாக இருப்பதற்காக மகிழ்வு அடைவோம். இப்படிக்கு பெரிய fair and lovely  வாங்குவோர் சங்கம்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அஹோரிகள் அழுவதில்லை
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கனவு காண்பது கண்கள், நிஜத்தில் வாழ்வது நெஞ்சம்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
எதிரியை காயப்படுத்த மௌனத்தை விட சிறந்த ஆயுதம் இல்லை
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கருணை அற்றுச் செல்லும் காலங்களில் கனவுகளுடன் வாழ்பவன் தானே மனிதன்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
 உறக்கங்கள், மீளா உறக்கங்களை ஒத்து இருக்கின்றன.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
ஒவ்வொரு தெருக் கூத்தாடியும் நினைவு படுத்துகிறான் வாழ்வினையும், பொருள் பெறுவதும் மட்டுமே வாழ்வு   என்று.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கடக்கும் பொழுதுகளை விட கடந்த பிறகான ஒய்வுறுதல் மிக்க ஆயாசம் தருகிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தேசம் வென்றவரைவிட
தேகம் வென்றவரையே கொண்டாடுகின்றன
உலகங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

பதி, பசு, பாசம் ஆகியவை ஞானத்தால் அடையப்பெறுகின்றன எனில் சரியை, கிரியை, யோகம், எதற்கு?
ஞானம் ஆன்மாவின் குணம். இந்த ஞானம் தேகம், இந்திரியம், பிராணன் மற்றும் கரணம் இவற்றோடு கலவாத போது அது அதன் குணத்தில் இருக்கிறது. அவ்வாறு இல்லாமல் தேகம் மற்றும் முன் கூறியவற்றோடு கூடி(கண், காது, மனம், புத்தி இன்ன பிற), அதன் தன்மையை இழக்கிறது.

இவ்வாறு விஷ சுகத்தில் பட்டு கீழ்வழிக்கு இழுத்துச் செல்லும் தேகாதி இந்திரியங்களை தடுத்து பர சுக வாழ்வினில் பதித்திடச் செய்தலே சரியை, கிரியை மற்றும் யோகத்தின் பண்பாகும்.
சரியை  – தேகத்தை ஈஸ்வர விஷயத்தில் செலுத்துதல்
கிரியை –  இந்திரியங்களை செலுத்துதல்
யோகம் –  பிராணாந்தக்கரணங்களை செலுத்துதல்
ஞானம்  – ஈஸ்வரனிடத்தில் அடங்குதல்
சரியை, கிரியை, யோகம் ஆகியவைகள் முதல் நிலைகள். இவைகளை அடைந்த பின்னரே ஞானம் என்ற உயர் நிலையை அடைய முடியும்
வேதத்திலும் சிவன் பற்றிய செய்திகள் உள்ளன. சிவாகமத்திலும் சிவன் பற்றிய செய்திகள் உள்ளன. எனில் இரண்டும் ஒன்றா அல்லது வேறுபாடு உள்ளதா?
வேதம் சுருங்கச் சொல்லும். சிவாகமம் விரிவாகச் சொல்லும்.
வேதம் மற்றும் சிவாகமம் ஆகியவை ஈஸ்வரனை  குறிப்பிடுகின்றன. எனில் எதற்காக இரண்டு விஷயங்களை எடுத்துக் கொள்ளவேண்டும்? இரண்டில் ஒன்று தேவையற்றதா?

வேதம்
சிவாகமம்
புருஷாத்தங்கள்
அறம், பொருள், இன்பம், வீடு
வீடு
உலகம்
உலகர்
சத்திநிபாதர்
வீடு சொரூப விளக்கம்
இல்லை
உண்டு
நூல் வகை
மூவுலக நூல்
வீட்டு நூல்

வேதம் வழியே ஞானம் விளைகிறது. ஞானம் அடைய முதல் மூன்று நிலைகளைக் கடக்க வேண்டும். எனவே இவை இரண்டுமே தேவைப்படுகின்றன.

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 11

பள்ளி விடுமுறைக் காலங்களில் மகள்களை விட தந்தைகளே அதிகம் மகிழ்வுறுகிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தன்னாலே தான் தன் பிறப்பு என்று உணர்பவன் மயானம் அடையான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
நேசிப்பையும் நிரந்தரமின்மையையும் ஒன்றாகக் காட்டும் இடங்களே இரயில் பயணங்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அருந்து காப்பியின் கடைசித் துளிகள் நினைவுபடுத்துகின்றன அது எத்தனை மயக்கம் தரும் என்று.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
எரியும் விளக்கிறகு ஏது கர்மம்?
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
உச்ச கட்ட ஆனந்த அனுபவத்தின் வெளிப்பாடு அழுகையாகத் தான் இருக்கிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மனிதர்களின் மூடப்படா கதவுகளின் வழியே கனவுகள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கல்லறையில் காவளாளி யாருக்காக?
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
காலை நேரங்களில்  மிக அழகாக கத்திக்கொண்டு இரு கால்களால் மரத்தில் அமர்ந்து, தன் முன் கால்களால் தென்னம் குரும்பைகளை உண்ணும் அணில்கள் அழகானவையாக இருக்கின்றன. அதனால் விடியல்கள் வெளிச்சம் பெறுகின்றன.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மௌனம் பயிற்று விக்க கூடியது என்பது தாண்டி அறியக்கூடியது என்று உணர்பவன் மயானம் அடையான்.

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 4/25 கல்யாணசுந்தரர்

வடிவம்
பார்வதி தேவியை மணக்க சிவன் எடுத்த வடிவம் – திருமண நாள் –  பங்குனி உத்திரம்
போக வடிவம்
உருவத் திருமேனி
இடங்களுக்கு ஏற்றவாறு சிவன் மேற்கரங்களில் மான், மழு. கீழ் கரங்கள் உமை அம்மை கைகள் பற்றி. மற்றொரு கரம் அருளல்.
அம்மை தலை வணங்கிய கோலம்.
சில இடங்களில்  சிவன், பார்வதி அருகினில் பெருமாள்
இஃது ஈசான்யத்தால் குறிப்பிடப்படுகிறது.
வடிவம் அமையப் பெற்ற சில திருக்கோயில்கள்
திருவேள்விக்குடி,குத்தாலம்,மயிலாடுதுறை வட்டம்
திருமணஞ்சேரி, ,குத்தாலம்,மயிலாடுதுறை வட்டம்
பவநாசம், விக்கரமசிங்கபுரம், அம்பா சமுத்திரம்
திருநல்லம் (கோனேரி ராஜபுரம்), தஞ்சாவூர் மாவட்டம்
திருவெண்காடு
திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்
திருவொற்றியூர், சென்னை
திருச்சுழி, விருதுநகர்
Image : Internet
உதவி : சைவ சித்தாந்தம் மற்றும் வலைத் தளங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

சொர்க்கம் – வீடும் வீடு சார்ந்த இடமும்

அலை கழிக்கப்படும் வாழ்வின் படகுகளில் அனுதினமும் நாம் சார்ந்திருக்கும் மனிதர்கள் நம்மைக் கொண்டாடினால்….
யட்ஷன் : உலகின் ஒவ்வொருவருக்கும் மிகச் சிறந்த நண்பன் யார்?
தருமன் : அவனது மனைவி.
மகாபாரதம் : யட்ச பர்வம்
எனக்கான கனவுகளையும், கவிதைகளையும் கொண்டாடியவள் நீ.

நீ நிஜம்
நீ காற்று
நீ ஆகாயம்
நீ ஆதார ஸ்ருதி.
அபஸ்வரத்திற்கு முன்பாகவே என்னை மாற்றியவள் நீ.
உன்னை அன்றி என்னை யார் முழுமையாக மாற்றி இருக்க முடியும்.
12 வருட காலம், காதல், தனிமை, வலிமை, அழுகை, வரம். சந்தோஷம், விருப்பங்கள், வலிகள், மாற்பட்ட கருத்துக்கள், மாறாத ஒற்றுமைகள், ஒற்றுமை, அன்பு. தமிழின் அனைத்து வார்த்தைகளுக்குள்ளும் அடைபட்டுக் கிடக்கிறது நம் வாழ்வு.
உன் பாடல் நம் பாடலாகி இருக்கிறது.
என் பாடல் நம் பாடலாகி இருக்கிறது.
காலம் இன்னமும் பாடலகளை எழுதிக் கொண்டிருக்கிறது.
தேர்தெடுக்கப்பட்டவைகள் உரிமையாளருக்கு சொந்தம் எனில், நான் தேர்ந்தெடுக்கப்பட்டவன் உன் உரிமையாக.
உனக்கான கோபங்கள் குழந்தை தன்மை உடையவை என்பதை எப்போதோ உணர்ந்தவன். அதுவே உன் கோபங்களை ரசிக்கச் செய்கிறது.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். ஆம் எனக்கு வரம் கிடைத்து விட்டது.
எனக்கான அனைத்து தருணங்களிலும் நீ இருக்கிறாய் என் ஆச்சாரியனைப் போல், ஆச்சாரியனாகவும்.

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

சிவாகமம் என்பது என்ன?
ஆன்மாக்களுக்கு (மும்) மல நாசம் செய்து சிவஞானம் புகட்டி மோஷத்தை கொடுத்தல். இது பதியாகிய இறைவனிடத்தில் இருந்து வந்த கட்டளை.
சிவாகம எதனை உணர்த்தும்?
பதி, பசு மற்றும் பாசங்களின் இலக்கணத்தையும், சரியை, கிரியை, யோகம்  ஞானம்  ஆகியவற்றின் முறைமையையும், சாலோக, சாமிப, சாரூப, சாயுச்சியம்(முக்தி நிலையின் பல்வேறு நிலைகள்) ஆகிய சதுர் மூர்த்திகளையும் தெளிவாக உணர்த்தும்.
சிவாகமங்கள் எவை எவை?
சிவனின் ஐந்து திரு முகங்களில் இருந்தும் தோன்றியவையே சிவாகமங்கள். (சிவ பேதம் – 10 ஆகமங்கள், ருத்ர பேதம் – 18 ஆகமங்கள்)
காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அஜிதம், தீப்தம், சூக்ஷ்மம், சகஸ்ரம், அம்சுமான், சுப்ரபேதம், விஜயம், நிச்வாசம், ஸ்வாயம்பு, அநலம் ( ஆக்னேயம் ), வீரம், ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகபிம்பம், புரோக்கீதம், லளிதம், ஸித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேச்வரம், கிரணம், வாதுளம்.
சரியை, கிரியை, யோகம், ஞானம் – விளக்கம்
வழிபாடு முறை
நிலை
யோக உறுப்புக்கள்
வழிபட்டவர்கள்
சரியை
உடல் தொண்டு
பூசைப் பொருட்களைத் திரட்டல்
இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம்
திருநாவுக்கரசர்
கிரியை
ஒரு மூர்த்தியை வழிபடல்
புறப் பூசை
பிரத்தியாகாரம், தாரணை
திருஞானசம்பந்தர்
யோகம்
வழிபடும் மூர்த்தியை த்யானித்தல்
அகப் பூசை
தியானம்
சுந்தரர்
ஞானம்
அனுபவம்
அனுபவம்
சமாதி
மாணிக்கவாசகர்

* விளக்கம் முழுமை பெறவே வழிபட்டவர்கள் பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 10

தனது மகளை கல்லூரி அனுப்ப காத்திருக்கும் வேளையில் மகளை வாகனத்தில் இருத்தி தான் தரையில்நின்று   பேசும் தந்தையில் கண்களில்  மாறுதல் இல்லா ஒரு சந்தோஷம் தெரிகிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தேகத்தின் பணி தேகம் நீக்குதல் என்று உணர்பவன் மயானம் அடையான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அம்மா என்று அழைத்தால் எவ்வாறு தாய் மகிழ்வாளோ, அவ்வாறே நாம் குருவினை அழைக்க அவர்கள்         பிரியப்பட்டு நம்மிடம் வந்து உறைகிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
(மகா)சந்தோஷம்
மனைவி :  ஏங்க, நான் மௌன விரதம் இருக்கலாம்ன்னு இருக்கேன்.
கணவன் : நான் இப்ப பூமியிலே இல்லையே. வானத்துல இருக்கேன்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மௌனத்திருப்பவன் மயானம் அடையான்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
வினைகளை அறுப்பவனையே பெரு வலிகள் வந்து சேர்கின்றன.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பெண்கள் தங்கத்தை நேசிப்பதை விட தந்தைகள் மகள்களை நேசிக்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கர்வம் அழித்தலில் மருத்துவ மனைகளின் பங்கு மகத்தானது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கற்றல் தாண்டி அறிதலை கொள்பவன் மயானம் அடையான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மூச்சுக்காற்றில் சிக்கனம் காட்டுபவன் மயானம் அடையான்.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!