சைவத் திருத்தலங்கள் 274 – திருஇலம்பையங்கோட்டூர்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருஇலம்பையங்கோட்டூர்
மூலவர் தீண்டாத் திருமேனி; சுயம்பு மூர்த்தி; கொன்றை மலரின் இதழைப்போன்று காட்சி
சிவலிங்கத் திருமேனி வெளிர் நிறமுடைய, செம்மண் நிறம். பெரிய ஆவுடையார்; அடிப்பாகம் பத்மம் போன்ற அமைப்பு
கோஷ்ட மூர்த்தமாக உள்ள தட்சிணாமூர்த்தி – யோக தட்சிணாமூர்த்தி. சின் முத்திரையை இதயத்தில் வைத்துள்ள அமைப்பு
தலவிநாயகர் –  குறுந்த விநாயகர், சுத்தான்னம் நைவேத்தியம்
வருடத்தில் ஏப்ரல் 2 – 7 , செப்டம்பர் 5 – 11 வரையில் சூரியன் தனது ஒளிக்கற்றையைப்பரப்பி ஈசனை பூஜிக்கிறார்.
திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு அருகில் வரும் போது , இறைவன் ஒரு சிறு பிள்ளை போலவும், பின் ஒரு முதியவர் போலவும் வழிமறித்து இக்கோயிலை உணர்த்துதல், உடன் வந்த அடியார்களளின் அறியாமை, பின் இறைவனே  வெள்ளைப் பசு வடிவில் வந்து திருஞானசம்பந்தரின் சிவியை முட்டிநிற்க, அப்போது திருஞானசம்பந்தர் வியந்து அப்பசு காட்டிய குறிப்பின் வழி செல்ல,தலத்தினருகில் வந்ததும் பசு மறைதல்.
அரம்பை வழிபட்டத் தலம் – ரம்பையங்கோட்டூர் –இலம்பையங்கோட்டூர்
இலம்பை –  நீர்ப்பரப்பின் அருகிலுள்ள பசுமையான சோலை
 
தலம்
திருஇலம்பையங்கோட்டூர்
பிற பெயர்கள்
எலுமியன்கோட்டூர், அரம்பாபுரி, அரம்பையங்கோட்டூர், இலம்பையங்கோட்டூர்
இறைவன்
அரம்பேஸ்வரர், தெய்வநாயகேஸ்வரர், சந்திரசேகரர். ரம்பாபுரிநாதர்
இறைவி
கனககுஜாம்பிகை, கோடேந்து முலையம்மை, தாயினும் நல்லாள்,
தல விருட்சம்
மல்லிகை.
தீர்த்தம்
சந்திர தீர்த்தம், மல்லிகை தீர்த்தம், ரம்பை தீர்த்தம், நாகதீர்த்தம், தாமரை தீர்த்தம், பூதகண தீர்த்தம்
விழாக்கள்
குரு பெயர்ச்சி, மகாசிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை, ஆடிப்பெருக்கு.
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 8.00 மணி வரை,
அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில்,
திருஇலம்பையங்கோட்டூர்-631 553. காஞ்சிபுரம் மாவட்டம்.
+91 -44 – 2769 2412, 09444865714, 9444429775
வழிபட்டவர்கள்
அரம்பை, சந்திரன்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர்ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள்
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 246 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   13 வது தலம்.
தெய்வநாயகேஸ்வரர்


கனககுஜாம்பிகை




பாடியவர்                திருஞானசம்பந்தர்                  
திருமுறை                1     
பதிக எண்                 76  
திருமுறை எண்           3    
பாடல்

பாலனாம் விருத்தனாம் பசுபதிதானாம்,
      பண்டுவெங்கூற்றுதைத்து  அடியவர்க்கருளும்
காலனாம்எனதுரை தனதுரையாகக், கனல் எரி
      அங்கையில் ஏந்திய கடவுள்
நீலமா மலர்ச்சுனைவண்டு பண்செய்ய, நீர்மலர்க்
      குவளைகள் தாதுவிண்டோங்கும்
ஏல நாறும் பொழில் இலம்பையங் கோட்டூர், இருக்கையாப்
      பேணி என்எழில் கொள்வதியல்பே.
பொருள்
சிவன் பாலன், முதியவர் மற்றும்  பசுபதி என்று பல வடிவங்கள் எடுத்து வந்தவன். அவன் கொடுமையான கூற்றுவனை காலால் உதைத்து அடியவர்களுக்கு அருளுபவன். அப்பெருமான எனது உரையை தனது உரையாக ஏற்றுக்கொண்டவன். எரியும் நெருப்பினை தனது கைகளில் ஏந்தியவன். பெரியதாகவும் இருக்கும்  நீல மலர்களை உடைய நீர் சுனைகளுக்கு அருகில் வண்டுகள் பாடுகின்றன. நீரில் இருக்கும் குவளை மலர்கள் மகரந்தத்தைப் பொழிகின்றன. அந்த இடம் மிக்க நறுமணம் உடையதாக இருக்கிறது. இவ்வாறான எழில்களை உடைய இலம்பையங் கோட்டுர் தலத்தில் உறையும் ஈசன் என் எழில் கொள்வது நல்லியல்பு ஆகுமா?
கருத்து
·  ஈசன், உயிர்களின் தன்மைக்கு ஏற்ப  அவர்கள் விரும்பிய  வடிவம் தாங்கி வருபவன்
பாடியவர்                திருஞானசம்பந்தர்                  
திருமுறை                1     
பதிக எண்                 76  
திருமுறை எண்           8    
பாடல்
கிளர்மழை தாங்கினான் நான்முகம் உடையோன்
கீழ்அடிமேல் முடி தேர்ந்து அளக்கில்லா
உளம்அழை எனதுரை தனதுரையாக
ஒள்ளழல் அங்கையில் ஏந்தியஒருவன்
வளமழை எனக்கழை வளர்துளி சோர
மாகணம் உழிதரு மணியணி மாலை
இளமழை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணி என்னெழில் கொள்வதியல்பே
பொருள்
மிகப் பெரியதாக கிளர்ந்து எழுந்த மழையை தன் கைகளால் தாங்கி துயர் துடைத்த திருமாலும், பிரம்மாவும் ஈசனின்  திருவடியையும்  மேல்  முடியையும் தரிசிக்க விரும்பி அதனை அடைய இயலாதவர்களாக இருந்தார்கள். அந்த ஈசன் எனது உரையை தனது உரையாக ஏற்றவன். அவன் ஒளிரும் நெருப்பினை தன் கரங்களில் ஏந்தியவன். மூங்கில் இலைகளிலிருந்து மழையெனத் துளிகள் வீழவும் மலைப்பாம்புகள் பக்கம் சார, அழகிய மணி மாலைகள் போல் தவழ் பொழில் திகழும் இலம்பையங்கோட்டூரில் உறையும் அப்பெருமான் என் எழில் கொள்வது நல்லியல்பு ஆகுமா?

புகைப்படம் : தினமலர்

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருமாகறல்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருமாகறலீஸ்வரர்
   இறைவன் நவபாஷாணத்தால் ஆன‌ சுயம்பு மூர்த்தி
   கஜ பிருஷ்ட  விமான அமைப்பு
   முருகனும், தெய்வயானையும் வெள்ளையானையில் அமர்ந்து மகாவிஷ்ணுவுக்கு காட்சி
   திருஞானசம்பந்தர் வினை தீர்க்கும் பதிகம் பாடிய தலம்
   இறைவன் மாகறலீஸ்வரர் உடும்பின் வால் போன்ற காட்சி.
   பிரம்மா தலம் எல்லையில் பலா மரம் தோற்றுவித்தது. இராஜேந்திர சோழன் அப்பழங்களை தினமும் சிதம்பரம் நடராஜருக்கு நிவேதனம் செய்தது. அந்தணன் மகன் அதனை வெட்டியது. இராஜேந்திர சோழன் அதற்காக நாடு கடத்தியது. உறுதி செய்து திரும்பும் போது பொன்னிற உடும்பைக் கண்டது. அதனை வெட்ட முயன்று மயக்கம் அடைந்த தருணம் இறைவன் வெளிப்பட்டு ஆலயம் எழுப்ப உத்தரவிட்டது.
   பைரவர்  – அர்த்தநாரி பைரவர் வடிவம்
 
தலம்
திருமாகறல்
பிற பெயர்கள்
அடைக்கலம் காத்த நாதர், மகம் வாழ்வித்தவர், உடும்பீசர், பாரத்தழும்பர், புற்றிடங்கொண்டார், நிலையிட்ட நாதர், மங்கலங்காத்தவர், பரிந்து காத்தவர், அகத்தீஸ்வரர், நிலையிட்ட நாதர், தடுத்தாட்கொண்டவர்
இறைவன்
திருமாகறலீஸ்வரர்
இறைவி
திரிபுவனநாயகி
தல விருட்சம்
எலுமிச்சை
தீர்த்தம்
அக்னி
விழாக்கள்
மாசி மாதம்  – பிரம்மோற்ஸவம்.
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை
அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில், திருமாகறல் -631 603, காஞ்சிபுரம் மாவட்டம்.
 +91- 044-27240294
வழிபட்டவர்கள்
பிரம்மா , மகாவிஷ்ணு, மாகறன், மலையன் என்னும் அசுரர்கள்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர்
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2கி.மீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 239 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   7 வது தலம்.
திருமாகறலீஸ்வரர்
 


திரிபுவனநாயகி
பாடியவர்          திருஞான சம்மந்தர்          
திருமுறை         3            
பதிக எண்         72         
திருமுறை எண்    9           
பாடல்

தூயவிரி தாமரைக ணெய்தல்கழு நீர்குவளை தோன்றமதுவுண்
பாயவரி வண்டுபல பண்முரலு மோசைபயின் மாகறலுளான்
சாயவிர லூன்றியவி ராவணன தன்மைகெட நின்றபெருமான்
ஆயபுக ழேத்துமடி யார்கள்வினை யாயினவு மகல்வதெளிதே

பொருள்
தூய்மையான  தாமரை மலர்கள், கழு மலர்கள், நெய்தல் மலர்கள், குவளை மலர்கள் போன்ற மலர்கள் மலர்ந்திருக்கின்றன. அதில் இருக்கும் தேனை பருகுவதற்காக வரிகளை உடைய வண்டுகள் பாடி வருகின்றன. இத்தகைய திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருக்கிறான். அவன் தனது கால் பெருவிரல் ஊன்றி இராவணின் வலிமையை அழித்தவன்.இவ்வாறாக வீற்றிருக்கும் பெருமானின் புகழை பாடுவதால் வினைகள் யாவும் நீங்கும் என்பது முடிவானது.
கருத்து

சாய – வலி குறையும்படி.
பாடியவர்          திருஞான சம்மந்தர்          
திருமுறை         3            
பதிக எண்         72         
திருமுறை எண்    10           
பாடல்
காலினல பைங்கழல்க ணீண்முடியின் மேலுணர்வு காமுறவினார்
மாலுமல ரானுமறி யாமையெரி யாகியுயர் மாகறலுளான்
நாலுமெரி தோலுமுரி மாமணிய நாகமொடு கூடியுடனாய்
ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி யாரையடை யாவினைகளே
பொருள்
சிவன், பைம் பொன்னால ஆன வீரக் கழல்களை அணிந்தவாறும், நீண்ட சடை முடியும் உள்ளவனாக விருப்பமுடன் காண வேண்டும் என்ற எண்ணம் கொண்ட திருமாலும், பிரம்மாவும் அறியாதவாறு நெருப்பு பிழம்பாகி இத்தலத்தில் வீற்றிருக்கிறான்.நாலிடத்தில் எரிகின்ற நெருப்பை கொண்டும், தோலை உரித்து மாணிக்கத்தை கக்கும் பாம்பை அணிந்தும், அசைந்து நடக்கும் இடபத்தை வாகனமாக உடைப அந்த சிவபெருமானின் அடியார்களை வினைகள் வந்து அடையாது.
 
புகைப்படம் : இணையம்,தினமலர்
 

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருகச்சிநெறிக்காரைக்காடு

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருகச்சிநெறிக்காரைக்காடு – காஞ்சிபுரம்
பஞ்சபூத தலங்களில் – பிருத்வி நிலம்
  7 சீடர்களுடன் தட்சிணா மூர்த்தி
  சுவாமி சற்றே சிவந்த நிறம்
  நந்தியின் கழுத்து மட்டும் தெற்கு நோக்கி
  உடல் முழுவதும் கண் கொண்ட இந்திரனின் சாபம் விலகிய முக்தி அடைந்த தலம்
  ஆலயம் இருக்கும் பகுதி காரைச் செடி காடாக இருந்ததால் காரைக்காடு
 
 
 
 
 
தலம்
திருகச்சிநெறிக்காரைக்காடு
பிற பெயர்கள்
திருக்காலிமேடு
இறைவன்
சத்யநாதர், திருக்காலீஸ்வரர், காரைத்திருநாதர், சத்தியவிரதேஸ்வரர், சத்தியநாதேஸ்வரர்.
இறைவி
பிரமராம்பிகை, காரார்குழலி
தல விருட்சம்
காரைச்செடி
தீர்த்தம்
இந்திர, சத்யவிரத தீர்த்தம்
விழாக்கள்
மார்கழி திருவாதிரை, சிவராத்திரி, அன்னாபிஷேகம்.
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7 மணி முதல் 1 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை
அருள்மிகு சத்யநாதசுவாமி திருக்கோயில்,
காஞ்சிபுரம் – 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 44 – 2723 2327, 2722 1664.
வழிபட்டவர்கள்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் – 11 பதிகங்கள்,
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 237 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   5 வது தலம்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மி
சத்யநாதர்
 
 

பாடியவர்                     திருஞானசம்பந்தர்
திருமுறை                    3ம் திருமுறை 
பதிக எண்                    65
திருமுறை எண்               8
பாடல்

ஏழ்கடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை யெழில்வரைவாய்த்
தாழ்விரலால் ஊன்றியதோர் தன்மையினார் நன்மையினார்
ஆழ்கிடங்குஞ் சூழ்வயலு மதில்புல்கி யழகமரும்
நீள்மறுகிற் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே
பொருள்
ஏழு கடல்களால் சூழப்பட்ட இலங்கை அரசனான இராவணனை, அழகிய கயிலையின் கீழ் தனது பெருவிரலால் ஊன்றி அழித்த பெருமை உடையவர். அவர் எல்லா உயிருக்கும் நன்மை செய்பவர். அப்பெருமான் ஆழ்ந்த அகழியும், அதை சுற்றி இருக்கும் வயல்களும், மதில்களும், நீண்ட அழகிய வீதிகளை உடைய திருக்கச்சிநெறிக் காட்டில் உறைகின்றார்.
கருத்து
உவர்நீர் (உப்புத் தண்ணீர்க் கடல்), நன்னீர் (நல்ல தண்ணி), பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், கருப்பஞ்சாற்றுக் கடல், தேன் கடல் என்று ஏழு வகைக் கடல்கள் குறிப்பிடப்படுகின்றன. இவை அனைத்தும் அந்த தேசம் செழுமையாக இருப்பதையே குறிக்கின்றன.
 
பரா பட்டாரிகையான அம்பிகை உறையும் மணித்வீபம் மத்தியில்
என்பர் சாக்தர்.
பாடியவர்                     திருஞானசம்பந்தர்
திருமுறை                    3ம் திருமுறை 
பதிக எண்                    65
திருமுறை எண்               9
பாடல்
 
ஊண்டானும் ஒலிகடல்நஞ் சுடைதலையிற் பலிகொள்வர் 
மாண்டார்தம் எலும்பணிவர் வரியரவோ டெழிலாமை
பூண்டாரும் ஓரிருவ ரறியாமைப் பொங்கெரியாய் 
நீண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.           
பொருள்
சிவபெருமான், மிகுந்த சப்தங்களுடன் தோன்றிய ஆலகால விஷத்தை உண்டவர். பிரமனின் தலையினை கொய்து, அதனை கபாலமாக ஏந்தியவர்; இறந்தவர்களின் எலும்புகளை மாலையாக அணிந்தவர். வரிகளை உடைய பாம்பினை அணிந்தவர்; திருமால், ப்ரம்மா இருவரும் அறிய முடியாதவாறு நீண்ட ஒளிப் பிழம்பாகி நின்றவர். அத்தகைய சிவபெருமான், கலிக்கச்சி நெடுங்காட்டில் உறைகிறார்.
 
புகைப்படம் : தினமலர்
 

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கச்சி அனேகதங்காவதம்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – கச்சிஅனேகதங்காவதேஸ்வரர்
இறைவன் சுயம்பு மூர்த்தி
விநாயகர் வல்லபையை மணமுடித்த தலம்
குபேரன், தன் முற்பிறவி புண்ணியபலனால், அருந்தமனின் மகனாப்பிறந்து, அளகைக்கு அரசனாதல்,.சுக்கிரன், அவன் மீது பொறாமை கொண்டு தொல்லைகள் கொடுத்தல், சிவன், குபேரனுக்காக சுக்கிரனை விழுங்கி அவனது கர்வத்தை அடக்குதல்
 
 
 
 
 
தலம்
அனேகதங்காவதம்
பிற பெயர்கள்
திருக்கச்சி அனேகதங்காவதம்
இறைவன்
கச்சிஅனேகதங்காவதேஸ்வரர்
இறைவி
காமாட்சி
தல விருட்சம்
தீர்த்தம்
தாணு தீர்த்தம்
விழாக்கள்
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 8.00 மணி வரை,
அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், அனேகதங்காவதம் – 631 501. காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 44 – 2722 2084
வழிபட்டவர்கள்
பாடியவர்கள்
சுந்தரர்
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2கி.மீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 237 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   4 வது தலம்.
கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் 
பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7 ம் திருமுறை 
பதிக எண்                    010
திருமுறை எண்               7
பாடல்

கட்டு மயக்கம் அறுத்தவர் கை தொழுது ஏத்தும் இடம்; கதிரோன் ஒளியால்
விட்ட இடம்; விடை ஊர்தி இடம்; குயில் பேடை தன் சேவலொடு ஆடும் இடம்;
மட்டு மயங்கி அவிழ்ந்த மலர் ஒரு மாதவியோடு மணம் புணரும்
அட்ட புயங்கப்பிரானது இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே
பொருள்
கச்சி அனேகதங்காவதம் என்னும் இவ்விடம் பல சிறப்புகளை உடையது. மும்மலங்களின் ஒன்றான மாயை(மயக்கம்) அறுத்தவர்கள் கைகளால்  தொழும் இடம் இது. கதிரவன் தனது ஒளி குன்றிய இடம். இறைவன் ரிஷப வாகனத்தை ஊர்தியாக கொண்ட இடம். குயில்கள் பேடைகளும் சேவல்களும் ஆடும் இடம். பூத்த மணம் வீசும் மலர்கள்களை உடைய தேவியுடம் அட்டமா நாகங்களை அணிந்த இறைவன் சேரும் இடம்
 
கருத்து
 
1.
கதிரவன் தனது ஒளி குன்றிய இடம். 
இறைவன் தன் பேரொளிக்கு முன் கதிரவன் ஒளி மங்கும் என்பது ஒரு கருத்து. 
அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருப்பதால் கதிரவன் ஒளி உட்புக முடியாமல் உள்ளது என்பது மற்றொரு பொருள்.
2.
குயிற் பேடை; இளவேனிற் காலத்தே ஓயாது அகவும் இயல்புடையது
3.
அட்டமா நாகங்களை – அட்டமா சித்தி
பாடல்
புல்லி இடம்; “தொழுது உய்தும் என்னாதவர் தம் புரம் மூன்றும் பொடிப்படுத்த
வில்லி இடம்; விரவாது உயிர் உண்ணும் வெங்காலனைக் கால் கொடு வீந்து அவியக் கொல்லி இடம் குளிர் மாதவி, மவ்வல், குரா, வகுளம், குருக்கத்தி, புன்னை,
அல்லி இடைப் பெடை வண்டு உறங்கும் கலிக் கச்சி அனேகதங்காவதமே.
பொருள்
கச்சி அனேகதங்காவதம் என்னும் இவ்விடம் பல சிறப்புகளை உடையது.. வீடு பேற்றை அளிக்கின்ற இறைவனை தொழுது ‘உய்வோம்’  என்று எண்ணாமல் அவற்றை நிலைத்த பொருள் என்று கொண்டவர்  கோட்டைகளை அழித்தவன் உறையும் தலம் இது. உயிர்கள் இடத்து வினைகளின் பாரபட்சம் பாராமல் அவைகளின் உயிரை நீக்கும் காலனை அழிக்கும் படியாக தனது கால்களால் கொன்றவன்  வாழும் இடம். குளிர்ந்த வனமல்லிகை, முல்லை, குரா, மகிழ், குருக்கத்தி, புன்னை இவற்றின் மலர்களது இதழ்களில் பெண் வண்டுகள் உறங்குகின்ற, ஆரவாரத்தை யுடையது இத்தலம்

புகைப்படம் : தினமலர்

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 17/25 காலசம்ஹார மூர்த்தி

மகேசுவரமூர்த்தங்கள் 17/25 காலசம்ஹார மூர்த்தி
வடிவம்(பொது)
·   மாரினீ என்ற அம்புகள் , வில்லை இடது கையிலும் அம்புகளை வலது கையில் வைத்திருக்கும் வடிவமாக மன்மதன்.
·   சூலம் தாங்கிய திருக்கரம்
·   தேவியை அணைத்த ரூபம்
·   லிங்கத்தில் மேல் நின்று காலனை சம்ஹாரம் செய்யும் தோற்றம்
·   வலக்காலை ஊன்றி இடக்காலை உயர்த்தி எமனை எட்டி உதைக்கின்ற நிலையில் தெற்கு முகமாக தோற்றம்
·   சூலம் கீழ் நோக்கிய வடிவம்
வேறு பெயர்கள்
·         காமதகன மூர்த்தி
காலனை யுதைத்தான்

வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
·         குறுக்கை, மயிலாடுதுறை
·         நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி
·         காலகாலேஸ்வரர் கோயில், கோவில்பாளையம்,கோவை மாவட்டம்
இதரக் குறிப்புகள்
1.   ஸ்வேத கேது என்கிற அரசனுக்கும் மார்கண்டேயர் போலவே நிகழ்வு. திருநெல்வேலி திருத்தலத்தில் – கூற்றுதைத்த நெல்வேலி என்கிற பெரியபுராண பாடல் (886)
2.   கால பயத்தினை நீக்கும் இறைவனில் சக்தி ”சர்வாரிட்டவிநாசினி”

புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – ஓணகாந்தன்தளி

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – ஓணகாந்தன்தளி
அமைவிடம்பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம்
இறைவன்  – சுயம்பு மூர்த்தி
சுந்தரரும், இறைவனில் திருவடி தரிசனமும்
ஓங்கார கணபதி விக்ரகத்தில் இருந்து ‘ஓம்’ என்ற ஒலி.
அசுரர்களின் தலைவன் வாணாசுரன் என்பவனின் சேனாதிபதிகளில் ஒருவனான ஓணன்,  சுயம்புவாய் எழுந்த லிங்கம் ஒன்றிற்கு, தனது ரத்தத்தால் அபிஷேகம் செய்து, கடும் விரதமிருந்து பல வரங்களைப் பெற்ற இடம்.
மற்றொரு சேனாதிபதி காந்தனும் மற்றொரு லிங்கத்தைப் பூஜித்து சிறந்த வரங்களைப் பெற்ற இடம்.
ஜலந்தராசுரன் என்பவனும் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்ட இடம்.
அசுரர்களின் பத்தி கண்டு சுந்தரர் கோயில் எழுப்ப விருப்பம் கொண்டு இறைவனை பொன், பொருள் வேண்டி பாட, அருகில் உள்ள புளிய மரம் பொன் காய்களாக மாறிய இடம்
 
தலம்
ஓணகாந்தன்தளி
பிற பெயர்கள்
திருவோணகாந்தன் தளி
இறைவன்
ஓணகாந்தேஸ்வரர், ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர்
இறைவி
காமாட்சி
தல விருட்சம்
வன்னி மரம்/புளிய மரம்
தீர்த்தம்
ஓணகாந்த தீர்த்தம் , தான் தோன்றி தீர்த்தம்
விழாக்கள்
மகா சிவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 08.30
அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில், ஓணகாந்தன்தளி, பஞ்சுப்பேட்டை,
காஞ்சிபுரம்- 631 502.
91- 98944 43108
வழிபட்டவர்கள்
ஓணன், காந்தன், சலந்தரன்.
பாடியவர்கள்
சுந்தரர்
நிர்வாகம்
இந்து சமய அறநிலையத்துறை
இருப்பிடம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 1கி.மீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 235 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   3 வது தலம்.
ஜலந்தேஸ்வரர்
 
 
ஒணகாந்தேஸ்வரர்
 
பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7 ம் திருமுறை 
பதிக எண்                    005
திருமுறை எண்               1
பாடல்

நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு
    நித்தல் பூசனை செய்ய லுற்றார்
கையி லொன்றுங் காண மில்லைக்
    கழல டிதொழு துய்யி னல்லால்
ஐவர் கொண்டிங் காட்ட வாடி
    ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக்
குய்யு மாறொன் றருளிச் செய்யீர்
    ஓண காந்தன் தளியு ளீரே.
பொருள்
திருவோணகாந்தன் தளி என்னும் எனும் ஊரில் எழுந்தருளி இருக்கும் பெருமானே, ‘நெய், பால், தயிர்’ கொண்டு உன்னை வழிபடுபவர்களின் கைகளில் பொருள் ஒன்றும் காணப்படுவது இல்லை. ஐந்து எண்ணிக்கை பற்றி நிற்கும் புலன்களால் ஆட்பட்டு, வருத்தமுற்று அச் சுழற்சியினால் அந்த துன்ப குழியில் விழுந்து, அதில் இருந்து விடுபட முழியாமல் அழுந்திப் போகும் எனக்கு உமது கழல் அணிந்த திருவடிகளைத் தொழுது பொருள் பெற்று மட்டுமே விடுபட முடியும்.அவ்வாறு அத்துன்பத்தில் இருந்து விடுபட எனக்கு வழி ஒன்றை சொல்வீராக.
கருத்து
ஐவர்  – பஞ்ச இந்திரியங்களும் அவற்றால் செய்யப்படும் தொழில்களும்
துய்ய – தூய்மையான
தம்பிரான் தோழர் என்பதாலேயே தனது நிலையையும், தன் சார்ந்து இருப்பவர்ளின் வறுமை நிலையையும் சொல்லி பொருள் கேட்டு விழைகிறார்.
பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7 ம் திருமுறை 
பதிக எண்                    005
திருமுறை எண்               2
பாடல்
திங்கள் தங்கு சடையின் மேலோர்
திரைகள் வந்து புரள வீசும்
கங்கை யாளேல் வாய்தி றவாள்
கணப தியேல் வயிறு தாரி
அங்கை வேலோன் குமரன் பிள்ளை
தேவி யார்கோற் றட்டி யாளார்
உங்க ளுக்காட் செய்ய மாட்டோம்
ஓண காந்தன் தளியு ளீரே.
பொருள்
திருவோணகாந்தன் தளி என்னும் எனும் ஊரில் எழுந்தருளி இருக்கும் பெருமானே,  ‘நீர் பிறை இருக்குமாறு கட்டிய சடையை உடையவர், அலைகள் தோன்றும் புரளும் கங்கை, உமா தேவிக்கு அஞ்சி என்றும் வாய் திறவாதவள். மூத்த குமாரராகிய கணபதி, வயிறு ஒன்றையே பிரதானமாகக் கொண்டவர். இளைய குமாரகிய வேலை உடைய குமரன் விளையாட்டுப் பிள்ளை. உமாதேவி உம்மை விடுத்து அடியவர்களை ஆட்கொள்ள மாட்டார். ஆதலால் உங்கள் குடிக்கு அடிமைத் தொழில் செய்ய மாட்டோம்.
கருத்து
இது இறைவனின் திருமேனி வடிவங்களயும், திரு மேனியோடு இருக்கும் உமை, கணபதி மற்றும் குமரனின் வடிவம் குறித்திப் பேசுகிறது.
 
நன்றி – புகைப்படம் : தினமலர்
 

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 16/25 காமாரி

மகேசுவரமூர்த்தங்கள் 16/25 காமாரி
வடிவம்(பொது)
·   உருவத் திருமேனி
·   கிழக்கு முகமான தத்புருஷத்தில் இருந்து தோன்றிய வடிவம்
·   அழித்தல் தொழிலுக்குரியவர்
·   உமையவள் அற்று தனித்த வடிவம்
·   இடக்காலை மடித்து
·   வலக்காலைத் தொங்கவிட்டு
·   வலக்கை அபய முத்திரை
·   இடக்கையை மடக்கிய கால் மீது வைத்து அமர்ந்த நிலை
·   காமனை எரித்து தகனம் செய்ததால் காம தகன மூர்த்தி
·   யோகத்தில் வெல்ல காமதகனம் அவசியம் என்பதை சூட்சமாய் உணர்த்தும் வடிவம்
·   மன்மதன் தேவபாகன் வசந்தன் என்ற இரு நண்பர்களோடு கூடியதாகவோ அல்லது இல்லாமலோ இருப்பார்.
·   மன்மதனின் ஐந்து சரங்கள் லிம்பனி, டாபினி, வேதினி, திராவினி, மாலிநி, என்ற ஐந்து விதமாக அமைக்கலாம்.
·   சுத்தமான தங்கத்தை போல் பிரகாசித்துக் கொண்டு ஐந்து புஷ்ப பாணங்கள் கரும்பு வில்லோடு கூட மீன் கொடியோடு கூடிய மன்மதன்
·   மாரினீ என்ற அம்புகள் , வில்லை இடது கையிலும் அம்புகளை வலது கையில் வைத்திருக்கும் வடிவமாக மன்மதன்.
வேறு பெயர்கள்
 
·         காமதகன மூர்த்தி
·         சக்தி ”மோகவிக்நவிநாசினி”
·         காம அந்தக மூர்த்தி
காமனைக் காய்ந்தான்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
 
·         குறுக்கை, மயிலாடுதுறை
·         கங்கைகொண்ட சோழபுரம்
·         மீனாட்சி அம்மன் கோவில், மதுரை
·         திருவைகாவூர், சுவாமிமலை
இதரக் குறிப்புகள்
 
1.
நிலத்துளங்க மேருத் துளங்க நெடுவான்
தலத்துளங்கச் சப்பாணி கொட்டும் – கலந்துளங்கொள்
காமாரி ஈன்ற கருங்கைக் கடதடத்து
மாமாரி ஈன்ற மணி.
2.
கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி
     கயிலை யாளி காபாலி …… கழையோனி
திருப்புகழ் 577 கரிபுராரி காமாரி  (விராலிமலை)
3.
“காமாரி காமாம் கமலாஸனஸ்தாம்  – காமாக்ஷி ஸ்தோத்திரம்.  ‘மாரனை ஜெயிச்ச மஹேஸ்வரனையும் உன் சௌந்தரியம் மயங்கச் செய்கிறதே
4.
பஞ்சாட்சர சக்திகளின் சூட்சுமங்களை உணர்த்தும்  சூக்குமப்பஞ்சாட்சர தீட்சை  வரிசையில்  ய      வ     சி       ம     ந என்று அறியப்படும்.
5.
உத்தரகாமிக மஹாதந்திரத்தில் காலாரி பிரதிஷ்டை முறையில் விவரிக்கப்பட்டுள்ளது.
 
புகைப்படம் : இணைய தளம்

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 15/25 கங்காளர்

வடிவம்(பொது)
 
·   உருவத் திருமேனி
·   வாம தேவ முகத்திலிருந்து தோன்றிய வடிவம்
·   வாமனனைக் கொன்று முதுகெலும்பை தண்டமாக வைத்துக் கொண்ட வடிவம்(கங்காளம் –  முதுகு எலும்பு)
·   கங்காளம் – வாத்தியம். உடுக்கைவிட பெரியதானது. முழவை விட சிறியதானது அதே வடிவில் இருக்கும். நடுசிறுத்திருக்கும். கையால் மீட்டப்படுவது வழக்கம். நின்ற கோலம்
·   இடக்கால் பூமியில் நன்கு ஊன்றியபடி இருக்கும்;
·   வலக்கால் சற்றே வளைந்து அவர் நடந்து செல்வதைக் காட்டியபடி.
·   ஊமத்தை மலர், சர்ப்பம், பிறை ஆகியவற்றைச் சூடிய ஜடாமகுடம்.
·   மகிழ்ச்சி நிறைந்த முகம், இனிய பாடல்களை இசைத்துக் கொண்டு, புன்முறுவல் பூத்தபடி
·   முத்துப் போன்ற பற்கள் பாதி தெரியுமாறு வாய்
·   இரு காதுகளிலும் சாதாரண குண்டலங்கள் அல்லது வலக்காதில் மகரகுண்டலமும், இடக்காதில் சங்கபத்திரம்
·   நான்கு கரங்கள்
·   முன் வலக்கரம்  – பாணத்தையும்,
·   முன் இடக்கரம்உடுக்கை
·   பின் வலக்கரம் நீண்டு வளர்ப்புப் பிராணியான மானின் வாய்க்கருகே கடக ஹஸ்தம்.
·   பின் இடக்கரத்தில் கங்காளதண்டம்அதில் இறந்தோரது எலும்புகள் கட்டப்பட்டிருக்கும்மயில் இறகாலும் கொடியாலும் அது அலங்கரிக்கப்பட்டிருக்கும்படுக்கை வாட்டில் இக்கங்காள தண்டமானது இடது தோளில் வைத்து, அதன் ஒரு முனையைப் பின் இடக்கையில் பற்றி இருப்பார்
·   ஆடைபுலியாடை
·   அரையில் கச்சமும், அதில தங்கத்தாலமைந்த ஒரு சிறுவாள் வெள்ளிப் பிடியுடன்
·   திருவடியில் மரப் பாதுகைக ள்
·   உடலெங்கும் பாம்பு அணிகலன்களாக
·   அவரைச் சுற்றிலும் எண்ணற்ற பூதகணங்களும் பெண்டிரும் ஆடியும் பாடியும் கூடியிருப்பர்ஒரு பூதம் பெரிய பாத்திரம் ஒன்றைத் தனது தலைமீது வைத்துக் கொண்டு இடப்பக்கம் நிற்கும்பிச்சை ஏற்கும் உணவு வகைகளைச் சேமித்து வைக்கவே அப்பாத்திரத்தை அப்பூதம் சுமந்து நிற்கும்
·   கங்காளமூர்த்தியிடம் கொண்ட காமத்தால் பெண்டிர் ஆடைநெகிழ நிற்பர்எண்ணற்ற முனிவர், தேவர், கந்தருவர், சித்தர், வித்தியாதரர் ஆகியோர் இவரைச் சுற்றி நின்று கைகுவித்து அஞ்சலி செய்து கொண்டிருப்பர்.
·   இவருக்கு முன்னால் வாயு தெருவைச் சுத்தம் செய்வார்;
·   வருணன் நீர் தெளிப்பார்;
·   பிறதேவர்கள் மலர் தூவிப் போற்றுவர்;
·   முனிவர்கள் வேதம் ஓதுவர்;
·   சூரியனும், சந்திரனும் குடைபிடிப்பர்;
·   நாரதரும் தும்புருவும் தம் இசைக் கருவிகளுடன் பெருமானுக்கு உகந்த பாடல்களைப் பாடுவர்.
 
வேறு பெயர்கள்
கங்காள மூர்த்தி
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
 
·         உத்திராபசுபதீஸ்வரர், திருச்செங்காட்டங்குடி,திருவாரூர் மாவட்டம்
·         கருணாசுவாமி, வசிஷ்டேஸ்வரர் – கருந்திட்டைக்குடி (கரந்தை)
·         கங்களாஞ்சேரி , திருவிற்குடி, திருவாரூர் மாவட்டம்
·         நாகேசுவர சுவாமி கோயில், கும்பகோணம்
·         சுசீந்திரம்,
·         தென்காசி,
·         தாராசுரம்
·         விரிஞ்சிபுரம்
·         திருநெல்வேலி
இதரக் குறிப்புகள்
#
பிட்சாடனர்
கங்காளர்
அந்தகாசுர சம்ஹார மூர்த்தி
1
அருகில்
அம்மை
2
வலது மேல் கை
உடுக்கை
கீழ் வரை நீண்டிருக்கும். அதில் மானுக்கு புல் இருக்கும்
சூலம்(சில விக்கிரகங்களில் சூலத்தில் அந்தகன் சடலமாக தொங்குவது போல தோற்றம்)
3
வலது கீழ் கை
மானுக்கு புல்
உடுக்கைக்குரிய கோல்
4
இடது மேல் கை
சூலம்
சூலம் அல்லது தண்டு அதில் விஷ்ணுவின் சடலம்
மான் மழு
5
இடது கீழ் கை
கபாலம்
உடுக்கை
6
மேனி
நிர்வாணக் கோலம்
ஆடையுடன் கூடிய  கோலம்
7
காலின் கீழ்
அந்தகாசுரன்
நூல்கள்
அம்சுமத் பேதாகமம்,
காமிகாமம்,
காரணாகமம்,
சில்பரத்தினம்
1.
‘வள்ளல் கையது மேவுகங்காளமே-  திருஞானசம்பந்தர்,
‘கங்காள வேடக்கருத்தர்’ – திருநாவுக்கரசர்,
‘கங்காளம் தோள் மேலே காதலித்தான்’ – மணிவாசகர் .
2.
“குறளா யணுகி மூவடிமண் கொண்டு நெடுகி மூவுலகுந்
 திறவான் அளந்து மாவலியைச் சிறையிற் படுத்து வியந்தானை
இறவேச வட்டி வெரி நெலும்பை யெழிற் கங்காளப்படையென்ன
அறவோர் வழுத்தக் கைக்கொண்ட அங்கணாணன் திருவுருவம்”
 – காஞ்சிப்புராணம்.
3
பெருங்கடல் மூடி பிரளயம் கொண்டு பிரமனும் போய்
   இருங்கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ண களேபர மும்கொண்டு கங்காளராய்
   வருங்கடல் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே.
அப்பர் சுவாமிகள் தேவாரம்
4.
கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பே ராளர்மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழில்நுழைந்து கூர்வாயால் இறகுலர்த்திக் கூதல்நீங்கி
செங்கால்நன் வெண்குருகு பைங்கானல் இரைதேருந் திருவையாறே.
தேவாரம் – 1.130.3
5.
‘கங்காளர் தனி நாடகம் செய்தபோது அந்தகாரம் பிறண்டிட நெடும்’ – அருணகிரிநாதர் மயில் விருத்தம்
புகைப்பட உதவி : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 14/25 தட்சிணாமூர்த்தி

பல இடங்களில் கோஷ்டத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தியும், நவகிரக சன்னதிகளில் இருக்கும் குரு பகவானும் ஒன்றாகவே கருதப்படுகிறது. என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் இரண்டும் வேறு வேறானவை.
 
வடிவம்(பொது)
 
·         தட்சிணம் என்றால் தெற்கு, த-அறிவு, க்ஷ-தெளிவு, ண-ஞானம் என இம்மூன்றும் சேர்ந்து தட்சிணா மூர்த்தி
·         பஞ்சகுண சிவமூர்த்திகளில் சாந்த மூர்த்தி
·         பிரம்மாவின் குமார்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகியவர்களுக்கு குரு
·         நான்கு கைகள்
·         இருப்பிடம் – ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி
·         திருமேனி – பளிங்கு போன்ற வெண்ணிறம் – தூய்மை
·         வலதுகால்  கீழ் – ‘அபஸ்மரா’ (அறியாமையை / இருளை )என்ற அரக்கனை(முயலகன்) மிதித்த நிலையில் – அனைத்து தீமைகளையும் அடக்கி ஆளும் வலிமை
·         ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலை(36 அல்லது 96 தத்துவங்கள்) / ஒரு பாம்பு
·         அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பு
·         கீழ் இடது கையில் தர்பைப் புல் / ஓலைச்சுவடி(சிவஞான போதம்) / அமிர்தகலசம் –  அனைத்து உயிர்களுக்கும் பேரின்பம் அளிக்க வல்ல ஆற்றல்
·         கீழ் வலது கையில் ஞான முத்திரை(மும்மலங்களை விலக்கி இறைவன் திருவடி அடைதல்)
·         ஆடை – புலித்தோல் – தீயசக்திகளை அடக்கியாளும் பேராற்றல்
·         தாமரை மலர்மீது அமர்ந்த கோலம் – இதயதாமரையில் வீற்றிருத்தல்(ஓங்காரம்)
·         நெற்றிக்கண் –  காமனை எரித்தல்; புலனடக்கம் உடையராதல் – துறவின் சிறப்பு
·         ஆலமரமும் அதன் நிழலும் – மாயையும் அதன் காரியமாகிய உலகம்
·         அணிந்துள்ள பாம்பு – குண்டலினி சக்தி
·         வெள்விடை – தருமம்
·         சூழ்ந்துள்ள விலங்குகள் – பசுபதித்தன்மை
·         த்யான ரூபம்
·         ஆசனம் – மகாராஜலீலாசனம், அர்த்தபத்மாசனம், யோகாசனம், உத்குடிக்காசனம்
 
வேறு பெயர்கள்
 
தெக்கினான்
ஆலமர் செல்வன்
தெற்கு நோக்கி இருப்பதால் தென் திசைக் கடவுள்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
 
·         புளியறை,செங்கோட்டை வட்டம்,    திருநெல்வேலி மாவட்டம்
·         பட்டமங்கலம் – சிவகங்கை மாவட்டம்
·         ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில்
·         சிவதட்சிணாமூர்த்தி – காசி விஸ்வநாதர் கோயில்,மதுரை பழங்காநத்தம் பஸ்ஸ்டாண்ட்
·         திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் –  சனகாதி முனிவர்களுக்கு பதில் பிரம்மா அமர்ந்த கோலம்
·         ஈசன் தட்சிணாமூர்த்தி கோலத்தில் அன்னை உமையைத் தன் மடியில் தாங்கிய கோலம் – திருகன்னீஸ்வரர் கோயில்,திருக்கண்டலம்,சென்னை ரெட்ஹில்ஸ் – பெரியபாளையம் சாலை
·         பள்ளிகொண்டீஸ்வரர் –   தட்சிணாமூர்த்தி மனைவி தாராவுடன் , சுருட்டப்பள்ளி
·         சிவபுரி எனும் திருநெல்வாயை(திருக்கழிப்பாலை), சிதம்பரம்
·         திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில், ராஜ அலங்காரத்தில் சிம்மாசனத்தில் மனைவியுடன்
·         தாயுமான சுவாமி கோயில்,திருச்சி மலைக்கோட்டை(தர்ப்பாசனம்)
·         பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில்(கிழக்கு நோக்கி),திருப்புத்தூர்,சிவகங்கை மாவட்டம்
·         திருலோக்கி, திருப்பனந்தாள் (அஞ்சலி முத்திரை)
·         புஷ்பவனநாதர் திருக்கோயில்,(காl maaRRi vadivam), தென்திருபுவனம், திருநெல்வேலி
·         பிரணவ வியாக்ரபுரீஸ்வரர்,ஓமாப்புலியூர், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில் (சேலை அணிந்து)
·         ஐயாறப்பன் கோயில்,திருவையாறு ( கபாலமும் சூலமும் ஏந்திய வடிவம்)
·         திடியன் மலை கைலாசநாதர் கோயில்,மதுரை –  பதினான்கு சித்தர்களுடன். நந்தியின் மீது அமர்ந்த கோலம்
·         ஆதிரத்தினேஸ்வரர் கோயில்,திருவாடனை – வீராசன கோலம்
·         நந்தியுடன் தெட்சிணாமூர்த்தி – மயிலாடுதுறை வள்ளலார் கோயில்
·         திரிசூலம் கோயில், சென்னை – வீராசன கோலம்
·         தியாகராஜர் கோயில் (வெளியில்), திருவொற்றியூர்
·         தக்கோலம் (சாந்த தட்சிணாமூர்த்தி)-  உத்கடி ஆசனம்
·         வீணாதர தட்சிணாமூர்த்தி கோலம் – நாகலாபுரம் வேதநாராயணர் கோயில், திருப்பூந்துருத்தி, நஞ்சன்கூடு, காஞ்சிபுரம் கைலாசநாதர், தூத்துக்குடி கழுகாசலமூர்த்தி கோயில்
·         கல்யாணசுந்த ரேஸ்வரர்,நல்லூர் , தஞ்சை பாபநாசம் – இரட்டை தட்சிணாமூர்த்தி
·         ஆத்மநாதசுவாமி கோயில்,சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வடதிசை  –  யோகநிலை
·         ஹேமாவதி, அனந்தப்பூர்,ஆந்திரா – யோக மூர்த்தி
·         சுகபுரம், கேரளா மாநிலம்
இதரக் குறிப்புகள்
 
நூல்கள்
ஞான சூத்திரம்,
ஞானச் சுருக்கம்,
ஞான பஞ்சாட்சரம்,
அகஸ்த்திய சகலாதிகாரம்,
சாரஸ்வதீயசித்ரகர்மமசாஸ்த்திரம்,
சில்பரத்தினம்,
சிரிதத்துவநிதி,
காரணாகமம்,
அம்சுமத்பேதாகமம்,
லிங்கபுராணம்
ஆதிசங்கரர் இயற்றியது தட்சிணாமூர்த்தி அஷ்டகம்.
பல திருவுருவங்கள்
 
ஞான தட்சிணாமூர்த்தி,
வியாக்யான தட்சிணாமூர்த்தி,
சக்தி தட்சிணாமூர்த்தி,
மேதா தட்சிணாமூர்த்தி,
யோக தட்சிணாமூர்த்தி,
வீர தட்சிணாமூர்த்தி,
லட்சுமி தட்சிணாமூர்த்தி,
ராஜ தட்சிணாமூர்த்தி,
பிரம்ம தட்சிணாமூர்த்தி,
சுத்த தட்சிணாமூர்த்தி
கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.
(திருவிளையாடற் புராணம் – பாடல் – 13)
புகைப்பட உதவி : விக்கிபீடியா

Loading

சமூக ஊடகங்கள்

மேன்மை கொள் சைவ நீதி – விளங்க வைத்த சந்தானக் குரவர்கள்

‘சைவத்தின் மேற் சமயம் வேறில்லை’ என்ற மொழித் தொடரை வைத்து சைவத்தின் பெருமையையும் அதற்கு காரணமாக இருக்கும் அனைத்து பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் எம்பெருமான் ஈசனின் பெருமைகளையும் அறியலாம்.

அறியவொண்ணா பெருமைகள் உடையது சிவனின் பெயர்கள். அப்படிப்பட்ட சிவனை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்கள் சந்தானக் குரவர்கள். சிவனின் பெருமைகளை பாடல்களாக அருளியவர்கள்.சைவ சித்தாந்த சாத்திரங்கள் இவர்களால் அருளப் பெற்றதே.

குருவைக் குறிக்கும் சொல்லே குரவர். இவர்கள் நால்வர் ஆவார்.

மெய்கண்டார்,
மறைஞான சம்பந்தர்,
அருணந்தி சிவாசாரியார்,
உமாபதி சிவம்
இவர்கள் குரு சீடர் மரபு கொண்டவர்கள். திரு மடங்களை ஸ்தாபிதம் செய்து அதன் மூலம் சைவ நெறி தழைக்க பங்களித்தவர்கள்.
இவர்களது காலம் 12, 13ம் நூற்றாண்டு.
இவர்களது பெயர்களும் இவர் இயற்றிய நூல்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
·   மெய்கண்டார்சிவஞான போதம்
·   அருள்நந்தி சிவாசாரியார்சிவஞான சித்தியார், இருபா இருபது
·   கடந்தை மறைஞான சம்பந்தர்சதமணிக் கோவைசதமணிக்கோவை
·   உமாபதி சிவாச்சாரியார்சிவப்பிரகாசம், திருவருட்பயன், சங்கற்ப நிராகரணம், கோயிற்புராணம், திருமுறை கண்ட புராணம், சேக்கிழார் புராணம்

இவர்களைப்பற்றி விரிவாக எழுத உள்ளேன். திருவருள் துணை புரியட்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கச்சிமேற்றளி

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருக்கச்சிமேற்றளி
அமைவிடம்பிள்ளையார் பாளையம்
ஈசன் சுயம்பு மூர்த்தி
இரு மூலவர் சன்னதிகள்
சிவ சாரூப நிலை வேண்டி திருமால் இறைவனை நோக்கி தவமிருந்த தலம்
ஞான சம்மந்தரில் பதிகம் கேட்டு சிவபெருமான் உருகியதால் ஓத உருகீசர்
கற்றளி –  கற்களால் கட்டப்பட்ட கோயில். மேற்றளிமேற்கு திசையில் அமையப்பெற்ற கோயில்

ஞானசம்பந்தரின் பாடலைக் கேட்டு திருமால் உருகியதால் ஓத உருகீசர்கர்ப்பக்கிருகத்துள் தனி சந்நிதி

 
 
 
 
 
 
 
 
தலம்
திருமேற்றளீஸ்வரர்
பிற பெயர்கள்
திருக்கச்சிமேற்றளி, கற்றளி
இறைவன்
திருமேற்றளிநாதர்
இறைவி
திருமேற்றளிநாயகி
தல விருட்சம்
வில்வம்
தீர்த்தம்
விஷ்ணு தீர்த்தம்
விழாக்கள்
சிவராத்திரி, பங்குனி உத்திரம், கந்தசஷ்டி
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில்,
பிள்ளையார்பாளையம்-631 501
காஞ்சிபுரம்.
காஞ்சிபுரம் மாவட்டம். 09865355572, 09994585006
வழிபட்டவர்கள்
நூறு ருத்திரர்கள், சீகண்டர், வீரபத்திரர், குரோதர், மண்டலாதிபதிகள் உள்ளிட்ட 116 பேர் மற்றும்  புதன்
பாடியவர்கள்
திருநாவுக்கரசர் –  பதிகங்கள்,  ,  சுந்தரர் –  பதிகங்கள், திருஞானசம்பந்தர்
நிர்வாகம்
இந்து சமய அறநிலையத்துறை
இருப்பிடம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 1கி.மீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 234 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   2 வது தலம்.
* ஞானசம்பந்தரின்  தேவாரப் பாடல்கள் கிடைக்கவில்லை
திருமேற்றளீஸ்வரர்
பாடியவர்                     திருநாவுக்கரசு சுவாமிகள்
திருமுறை                    4ம் திருமுறை 
பதிக எண்                    43
திருமுறை எண்               10
பாடல்


தென்னவன் மலையெ டுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு
மன்னவன் விரலா லூன்ற மணிமுடி நெரிய வாயாற்
கன்னலின் கீதம் பாடக் கேட்டவர் காஞ்சி தன்னுள்
இன்னவற் கருளிச் செய்தார் இலங்குமேற் றளிய னாரே.
பொருள்
 
தெற்குப் பகுதியை ஆண்ட இராவணன், (தனது கர்வத்தால்) கயிலாய மலையைப் பெயர்த்து எடுக்க, அதனால் பார்வதி நடுக்கமுற, பார்வதியின் நடுக்கம் நீக்குவதன் பொருட்டு தனது கால் விரல்களால் கயிலாய மலையை அழுத்த, அதனால அவன் தலைகள் நெரிய, தன் தவறை உணர்ந்து கரும்பு போன்று இனிய கீதங்களைப் பாட அதனால் அவனுக்கு அருள் செய்தவர். அவர் இந்த காஞ்சித் திருத் தலத்தில் உறையும் மேற்றளியார் ஆவார்.
கருத்து

தென்னவன் –  இராவணன் ,
சேயிழை – செய்ய ( கல் ) இழை ( த்துச் செய்யப்பட்ட அணிகளைப் ) பூண்டவள் . இழை நூலிழையாகக் கொண்டு தாலி எனலும் கூடும்
மன்னவன் – என்றும் நிலையாயிருப்பவன்.(கயிலைத் தலைவன் என்றும் கொள்ளலாம்) 
நெரிய – நொறுங்க
கன்னலின் – கரும்பினைப் போலும் இனிமை பயக்கும் , 
பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7 ம் திருமுறை 
பதிக எண்                    021
திருமுறை எண்               9
பாடல்
 
நிலையா நின்னடியே நினைந் தேன்நி னைதலுமே
தலைவா நின்னினையப் பணித் தாய்ச லமொழிந்தேன்
சிலையார் மாமதில்சூழ் திருமேற்ற ளிஉறையும்
மலையே உன்னையல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே.
பொருள்
பெரிய மதில்கள் சூழ்ந்த கச்சித் திருமேற்றளியில் உறையும் மலை போன்றவனே,  அடியேன் உனது திருவடிகளையே நிலையான பொருளாக உணர்ந்தேன். அவ்வாறு உணர்ந்த பிறகு அதில் இருந்து என்றும் மாறாமல் தொடந்து இருக்க திருவருள் செய்தாய். அதனால் எனது துன்பங்கள் ஒழிந்தவன் ஆனேன். ஆகவே அடியேன், உன்னை விடுத்து பிற தெய்வங்களை மனம் மகிழ்ந்து புகழ மாட்டேன்.
கருத்து
நிலையா நின்னடியே – (திருமாலாலும்) அடைய முடியா திருவடி (இது என் கருத்து)
சலமொழிந்தேன் – கடலைப் போன்ற பல பிறவி நீங்கினேன். (சலதி கிழிந்து – கந்தர் அலங்காரம்)

புகைப்படம் : கோலாலகிருஷ்ணன் விஜயகுமார்
 

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்

வடிவம்
 
·         ஞானம் செல்வம் இரண்டையும் தரும் வடிவம்
·         சங்கன் என்ற அரசன் சிவன் மீது பற்றும், பதுமன் என்ற அரசன் திருமால் மீது பற்று கொண்டு யார் பெரியவர் என்ற வாதத்தினால் அம்மையிடம் முறையிட அவர்களுக்கு இருவரும் ஒருவரே என குறிக்க எடுத்த வடிவம்.
·         சுவாத்தை மாற்றுவதால் ப்ரமத்தை அறியலாம். மேல்விவரங்களை குரு மூலமாக அறியவும்.
வலதுபிங்களை(சூரிய கலை நாடி)
இடதுஇடகலை(சந்திர கலை நாடி)
சுழுமுனைஇரு பக்கங்களிலும் காற்றை செலுத்துதல்
எண்
வலது பாதி(சிவன்)
இடது பாதி(திருமால்)
1
தலை
கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடி. பின்புறம் சிரசக்கரம் அல்லது ஒளிவட்டம்,சடாமுடி
கிரீடம்
2
திருமுகம்
நெற்றிக் கண்(அர்த்தநேத்திரன்), திருநீறு
திருநாமம்
3
காது
தாடங்கம், மகர குண்டலம், சர்ப்ப குண்டலம்
மகர குண்டலம்
4
கைகள்
·  மழு, அபய ஹஸ்தம்
·  பரசு மற்றும் நாகம்
சக்கரம், சங்கு அல்லது கதை மற்றும் ஊரு ஹஸ்தம்/(கடக முத்திரை) சங்க ஹஸ்தம். கேயூரம், கங்கணம்
5
மார்பு
ருத்ராட்சம்
திருவாபரணங்கள்
6
இடுப்பு
புலித்தோல் ஆடை
பஞ்சகச்சம்
7
திருவாட்சி
நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி
8
வண்ணம்
வெண்மை
நீலநிற மேனி
9
தோற்றம்
கோரம்
சாந்தம்
10
வாகனம்
வலது புறம் நந்தி
இடது புறம் கருடன்
கேசாதி பாதமாக விவரிக்கப்பட்டுள்ளன.  சோழர் கால வடிவமும், பல்லவர் கால/இதர வடிவமும் சில இடங்களில் வேறு வேறாக இருக்கின்றன.  
 
வேறுபெயர்கள்
 
சங்கர நாராயணர்
ஹரியர்த்தமூர்த்தி
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
 
·  சங்கரன் கோவில், திருநெல்வேலி மாவட்டம்
·  தஞ்சைப் பெரிய கோயில்
·  சங்கர நாராயண சுவாமி திருக்கோவில், தஞ்சை மேலராஜவீதி
·  கங்கை கொண்ட சோழபுரம்
·  சிதம்பரம்
·  திருஅறையணிநல்லூர் (தற்போது அரகண்டநல்லூர் )- திருக்கோவிலூருக்கு எதிர்க்கரையில் பெண்ணையாற்றின் வடகரையில் உள்ள ஒரு சிறு குன்றின் மீது திருக்கோவில்
·  திருச்செந்தூர்
·  திருப்பெருந்துறை
·  மீனாட்சி அம்மன் வசந்த மண்டபம், மதுரை
·  நாகேஸ்வரர் கோவில், கும்பகோணம்
·  குடுமியான் மலை குடவறைச் சிற்பங்கள்
·  ஹரிஹர், ஹோஸ்பெட் அருகே துங்கபத்ரா நதிக்கரை, தாவன்கெரே மாவட்டம், கர்நாடகா
·  கூடலி, சிவமோகா எனப்படும்ஷிமோகாதுங்காவும்(திருமால்) பத்ராவும்(சிவன்) சங்கமம்
இதரக் குறிப்புகள்
·  
சங்கர நாராயணர் கோயிற் கோமதியம்பிகை பிள்ளைத்தமிழ் என்றொரு நூலை முத்துவீரக் கவிராயரவர் என்பவர் இயற்றி இருக்கிறார்.
·  வாமன புராணம்
·  பேயாழ்வார் பாசுரம்
தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் சூழும்
திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து

புகைப்படம் : வலைத்தளம்

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 12/25 திரிமூர்த்தி

வடிவம்
 
·    உலகை  படைக்க எடுக்கப்பட்ட வடிவம் ஏகபாதராகத் திருவடிவம்.
·    இதயத்தில் இருந்து ஆயிரத்தில் ஒரு கூறாக ருத்திர், பின் வலப் பாகத்தில் இருந்து பிரம்மன், இடப் பாகத்தில் இருந்து விஷ்ணு.
·    சில இடங்களில் ஏகபாத மூர்த்தியும், திரிமூர்த்தியும் ஒன்றாகவே கருதப்படுகிறது. ஏகபாத மூர்த்தி என்பது சிவன் மட்டும் தனித்து ஒரு காலில் காணப்படும் வடிவம். (யோக நிலையைக் குறிப்பது) திரிமூர்த்தி என்பது பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒன்றாக ஒற்றைக்காலில் தனித்து காணப்படும் வடிவம்.
·     இம்மூர்த்திக்கான ஸ்தாபன முறைகளும், பிரதிஷ்டா முறைகளும் மிகக் கடினமாக இருக்கின்றன.
·    வர்ணம்ரக்தவர்ணம்
·    முகம்முக்கண்
·    கரங்கள்வரத அபய ஹஸ்தம் மான் மழு
·    அலங்காரம்ஜடாமகுடம்
·    பாதம்ஒன்று
·    இடுப்புபிரதேசத்திற்கு மேல் தெற்கு வடக்கு பக்கமாகிய இருஇடங்களிலும் முறையாக பாதிசரீரம் உடைய பிரம்மா விஷ்ணு
·    பிரம்மா விஷ்ணு ஒவ்வொருபாதத்துடன் கூடியதாக() அஞ்சலிஹஸ்தத்துடன்
பிரம்ம விஷ்ணுக்களின் அளவானது பெண் சரீரம் போல் சற்று வளைவாக, இரண்டு கைகளும் தொழுத நிலையில் ஒரு காலோடு கூடியவராக.  (கால் இல்லாமலும்)
 
வேறு பெயர்கள்
 
ஏகபாததிரிமூர்த்தி
ஏகபாத திரிமூர்த்தி
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
 
·   திருமறைக்காடு (வேதாரண் யம்)
·   பிச்சாண்டார் கோயில்(அ) உத்தமர் கோயில், திருச்சி
·   மண்டகப் பட்டு ஸ்ரீ திரிமூர்த்தி குகைக் கோவில்
·   தர்மராஜரதம்(அ)திரிமூர்த்தி குகை, மஹாபலிபுரம்
·   தப்பளாம்புலியூர், திருவாரூர்
·   திரு உத்தரகோசமங்கை
·   திருவக்கரை
·   ஆனைமலையடிவாரம்
·   ஒரிஸ்ஸா, சௌராஷ்டிரம், மைசூர்
·   திரியம்பகேஸ்வர்,நாசிக்
·   திருநாவாய்,திரூர் நகரிலிருந்து தெற்கே 12 கி.மீ., மலப்புறம் மாவட்டம்,கேரள மாநிலம்
·   திரிப்பிரயார் ஸ்ரீ ராமர் கோயில் –  திரிப்பிரயார் ஆற்றின் கரை,கொடுங்கல்லூர்
இதரக் குறிப்புகள்
 
·  சிவபேதம் பத்தையும் கேட்டவர்களில் திரிமூர்த்தி வடிவம் பற்றி கேட்டவர் உதாசனர்
·  அஷ்ட வித்யேச்வரர்களில் (வித்யேச்வரர்: அநந்தர், சூக்ஷ்மர், சிவோத்தமர், ஏகநேத்ரர், ஏகருத்ரர், திரிமூர்த்தி, ஸ்ரீகண்டர், சிகண்டி) திரிமூர்த்தியும் ஒருவர். இவர்கள் மாயைக்கு மேல் சுத்த வித்யைக்குக் கீழிருக்கும் புவனவாசிகள் என்கின்றன ஞானநூல்கள்.
·  நவராத்திரியின் போது இரண்டாம் நாளளில்  மூன்று வயதுள்ள பெண்ணை திரிமூர்த்தி என்ற பெயரில் பூஜை செய்ய வேண்டும். இப்பூஜை அறம், பொருள், இன்பம், தானியம் ஆகியவை கிடைக்கச் செய்யும். பெயரன், பெயர்த்தி என பரம்பரையும் நீண்ட ஆயுளும் கிடைக்கும்
·  உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் த்ரீமூர்த்தி ஸ்தாபன விதி –  அறுபத்தி ஒன்றாவது படலம்.

புகைப்படம் : வலைத்தளம்

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 11/25 சக்ரவரதர்

சக்ரவரதர்

சிவனின் வாமதேவ முகத்தில் இருந்து தோன்றியவர்சக்ரவரதர்.

திருமாலுக்கு சக்கரம் கொடுத்த மூர்த்தி. இவரை வழிபடுபவர்கள் அனைத்து போகங்களையும் எவ்வித இடையூரும் இன்றி துய்ப்பார்கள்.

இந்த விபரம் மட்டுமே இம்மூர்த்தி பற்றி காணப்படுகிறது.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – ஏகாம்பரநாதர் – காஞ்சிபுரம்

  பஞ்சபூத தலங்களில் – பிருத்வி – நிலம்
  மூல லிங்கம் மணலால் ஆனதால் இதற்கு அபிஷேகங்கள் கிடையது
  இறைவி கம்பை மாநதியில் நீர் பெருக்கெடுத்து வந்ததால் பயந்து பெருமானை இறுகத் தழுவிக்கொண்டதால் தழுவக் குழைந்தநாதர்
  சிவன் அம்பாளுக்கு அருள்புரிவதற்காக கங்கையையும், ஆலகால விஷத்தின் உஷ்ணத்தால் கருப்பு நிறமாக மாறிய மகாவிஷ்ணுவை குணப்படுத்த தலையை அலங்கரிக்கும் பிறைச்சந்திரனையும் அணிந்திருக்கிறார்
  பிரகாரத்தில் பிரம்மா பூசித்த இலிங்கம் – வெள்ளக்கம்பம், விஷ்ணு பூசித்த இலிங்கம் – கள்ளக் கம்பம், உருத்திரர் பூசித்த இலிங்கம் –  கள்ளக் கம்பம்
  108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி, இத் திருக்கோயில் உள் பிரகாரத்தில் அமைந்திருக்கிறது.
  இருகண்பார்வைகளும் மறையப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இடக்கண் பார்வையை கொடுத்தருளிய தலம்.
  திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ,கழற்சிங்க நாயனார் ஆகியோரின் அவதாரத்தலம்
  சாக்கிய நாயனார் முக்தியடைந்த தலம்
  தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி
  ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட சகஸ்ரலிங்கம் மற்றும் அஷ்டோத்ர (108) லிங்கங்கள் பிரகாரத்தில்
  கச்சியப்ப சிவாச்சாரியார்  “கந்த புராணத்தை’ இயற்றிய தலம்.
  கச்சி மயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னால் உள்ளது.
  172 அடி உயரமுள்ள இராஜகோபுரம்
 
இத்தலத்தைப்பற்றிய நூல்கள்
·திருவாவடுதுறை ஆதீனத்து மாதவச்சிவஞானயோகிகள் – காஞ்சிப்புராணம்,
·கச்சியப்பமுனிவர்  – காஞ்சிப்புராணம்,
·கச்சியப்பமுனிவர் – கச்சி ஆனந் தருத்திரேசர் வண்டுவிடுதூது,
·இரட்டையர்கள் –  ஏகாம்பர நாதர் உலா
·பட்டினத்துப்பிள்ளையார் – திருவேகம்ப முடையார் திருவந்தாதி,
·மாதவச்சிவஞான யோகிகள் – ஆனந்தருத்திரேசர் பதிகம், திருவேகம்பர், ஆனந்தக்களிப்பு, திரு ஏகம்பர் (யமக) அந்தாதி
சிறப்பு செய்யும் நூல்கள்
மணிமேகலை,  
தக்கயாகப் பரணி
மத்தவிலாசப்பிரகசனம் 
தண்டியலங்காரம்
பன்னிரு திருமுறைகள்
 
தலம்
ஏகாம்பரநாதர் – காஞ்சிபுரம்
பிற பெயர்கள்
திருக்கச்சியேகம்பம்
இறைவன்
ஏகாம்பரநாதர், தழுவக் குழைந்தநாதர், ஏகாம்பரேஸ்வரர், திருவேகம்பர்
இறைவி
ஏலவார்குழலி
தல விருட்சம்
மாமரம்
தீர்த்தம்
சிவகங்கை தீர்த்தம், கம்பாநதி
விழாக்கள்
பங்குனி உத்திரம், ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை,  ஆவணி மூலம், நவராத்திரி, சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம்
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை
அருள்மிகு காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்-631501.
+91- 44-2722 2084.
வழிபட்டவர்கள்
உமையம்மை, பிரம்மா, திருமால், ருத்திரர்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் – 4 பதிகங்கள், திருநாவுக்கரசர் – 7 பதிகங்கள்,  ,  சுந்தரர் – 1 பதிகங்கள், மாணிக்கவாசர் *
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 233 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   1 வது தலம்.
*சில நூல்களிலும் வலைத்தளங்களிலும் மாணிக்கவாசகர் பாடியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாணிக்க வாசகரின் பாடல் வரிகளில் இத்தலம் பற்றிய குறிப்பு உள்ளதே தவிர தனி பாடல் இல்லை.
 
 
ஏலவார் குழலம்மை உடனாகிய  ஏகாம்பரேஸ்வரர் 
 
 
 
பாடியவர்                     திருஞானசம்பந்தர்
திருமுறை                    2 ம் திருமுறை 
பதிக எண்                   12
திருமுறை எண்              8
பாடல்

தூயானைத் தூயவா யம்மறை யோதிய
வாயானை வாளரக் கன்வலி வாட்டிய
தீயானைத் தீதில்கச் சித்திரு வேகம்பம்
மேயானை மேவுவா ரென்றலை மேலாரே.
பொருள்
தூயவன். தூயனவாகிய மறைகளை ஒதிய வாயினன். ஒளி பொருந்திய வாளினை உடைய இராவணனின் வலிமையை அடர்த்த, தீயேந்தியவன். குற்றமற்ற திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளியிருப்பவன். அவனை அடைந்து துதிப்பவர் என் தலைமேல் கொள்ளத்தக்கவர்.
கருத்து
 
சர்வஞ்ஞத்வம் குற்றம் அற்றவனும், அனைத்தையும் இயக்கும் வல்லமை உடையவன் என்ற சைவசித்தாந்த கருத்து சிந்திக்கக்கூடியது.
ரென்றலை மேலாரே – என்னால் வணங்கப்படுவர்கள் எனும் பொருளில்
 
 
பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7 ம் திருமுறை 
பதிக எண்                    61
திருமுறை எண்               1
பாடல்
 
ஆலந் தானுகந் தமுதுசெய் தானை
ஆதி யைஅம ரர்தொழு தேத்தும்
சீலந் தான்பெரி தும்முடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
பொருள்
பாற்கடல் கடையும் பொழுது அதில் வந்த நஞ்சினை விரும்பி உண்டவனும் அமுதத்தை தேவர்களுக்கு அளித்தவனும், எல்லோருக்கும் முதல்வனாக இருப்பவனும், தேவர்களால் துதிக்கப்படும் பெருமை உடையவனும், நினைப்பவர்கள் நினைவில் உள்ளவனும், நீண்ட கூந்தலை உடைய உமையால் தினமும் துதிக்கப்படுபவனும், காலங்களுக்கு முடிவானவனாகவும் ஆகிய எம்மானை காண அடியேன் கண் பெற்றவாறே.
கருத்து
‘வியப்பு’ என்பது சொல்லெச்சம்
‘சீலம்’ என்பது  குணம்
 
புகைப்படம் : தினமலர்
 

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 10/25 அர்த்தநாரீஸ்வரர்

வடிவம்
 
சிவனின் உருவத் திருமேனி
சிவனும் சக்தியும் இணைந்த வடிவம்
வலது புறம்சிவன்
இடது புறம்பார்வதி
வலது புறம்சிவன்
இடது புறம்பார்வதி
தலை
கரண்ட மகுடம்
நெற்றி
அரைத்திலகம்
கைகள்
அபயமும், பரசும் அல்லது
வரதமும், சூலமும் அல்லது
மழுவும், அபயமும் அல்லது
சூலமும் அக்கமாலையும் அல்லது
ஒரு கை இடபத்தின் தலையின் மீது ஊன்றியவாறும், மற்றொன்று அபயம் தாங்கியவாறு
இரண்டு கரங்கள் மட்டுமே தரித்திருந்தால் சிவனின் பாகத்தில் வரதம் அல்லது கபாலம்
சிவன் வலது புறம் மூன்று கரங்கள் பெற்றிருந்தால் இடது புறம் தேவி ஒரு கரம் மட்டும் –  கண்ணாடி, கிளி, நீலோத்பலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று.
கரங்களில் கேயூரம், கங்கனம்.
அர்த்தநாரீஸ்வரர் படிமம் இரண்டு கரங்கள் மட்டுமே தரித்திருந்தால் இடது கை தொங்கவிட்டவாறு  அல்லது இடபத்தின் மீது தொட்டவாறு இருக்கும்.  
மேலாடை
புலித்தோலாடை
இரத்தினங்களினாலான ஆபரணங்கள் 
நாகயக்ஞோபவீதம், நாகத்தினாலான சர்ப்பமேகலை
கோலம்
சற்று வளைந்து தேவியின் உயரத்திற்கேற்ப பத்மாசனத்தில் நின்றவாறு இருக்கும்
பத்மாசனத்தில் நின்ற கோலம்
தோற்றம்
கோரம்
சாந்தமான தோற்றம்
வண்ணம்
சிவப்பு வண்ண மேனி
கிளிப்பச்சை அல்லது அடர்ந்த நிறம்
 
இதரக் குறிப்புகள்
 
வடமொழியில் அர்த்தநாரீஸ்வர துதி என்று ஒன்று உள்ளது.
விளக்க நூல்கள் – அம்சுமத் பேதாகமம், காமிக்காகமம், சுப்ரபேதாகமம், சில்பரத்னம், காரணாகமம்
புகைப்படம் : வலைத்தளம்

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

வியாசர் வேதாந்தம் – வகைகள்.

துவைதம், அத்துவைதம் மற்றும் விசிட்டாத்துவைதம்
கபிலர் முதல் வியாசர் வரையில் சாத்திரம் செய்ததற்கு  முதல் நூல் எது?. அதன் சிறப்புகள் என்ன?

வேதாகமங்கள்
வேதாகமங்களில் அனைத்தும் அடங்கும். இவைகள் எது ஒன்றிலும் அடங்கா.
இதனை வலியுறுத்தும் ‘அரனடிக்கீழ் அடங்கும்’ என்ற மெய் உபதேசதின் பொருள் என்ன?

அரனடி என்பது சிவசக்தியினை குறிப்பதாகும். சிவசக்தி சிவத்தில் அடங்கும். சிவம் எதிலும் அடங்காது. ஏனெனில் எல்லா பொருள்களும் சிவத்தில் அடங்கும்.

இத்துடன் வேதசிவாகவியல் முற்றுப் பெறுகிறது.

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 9/25 சக்திதரமூர்த்தி

 
ஜனனம், மரணம் ஆகியவற்றில் உழலக்கூடிய மனிதர்கள் மட்டும் தேவர்கள் ஆகியவர்களுக்கு முக்தியை அளிக்கும் பொருட்டு, தனது வாம பாகத்தில் இருந்து உமா தேவியாரை தோற்றுவித்த மூர்த்தி  என்ற குறிப்பு மட்டுமே காணப்படுகிறது.
இது போக மூர்த்தி 

(இம் மூர்த்தி பற்றிய குறிப்புகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள். தெரிந்து தெளிவடைகிறேன்.)

 

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

வைசேஷிகம் – சிறு விளக்கம்

·   ஆன்மா வின் தன்மைகளை கூறல்
·   ஆன்மா அழிவற்றதாக என்றும் உள்ளது.
·   அது அருவமாக இருக்கும்
·   அது ஜீவான்மா, பரமான்மா என்று இருவகையாகப் பிரியும்.
·   பரமான்மா  – பிறப்பிலி
·   ஜீவான்மாபல் வேறு பிறப்புக்கள் எடுக்கும்.
·   புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப  மனத்தில் தன்மையால் ஞானம் கிடைக்கும்.
·   இயல்புகளை அறியும் ஞானத்தால் கர்மம் நசிக்கும்.
·   அவ்வாறு நசிக்க ஞானமின்றி செயல் அற்று இருப்பதே முக்தி.
·   வேதம் ஈஸ்வரனால் செய்யப்பட்டது. 
மீமாம்சை  – சிறு விளக்கம்
·   வேதங்களில் சொல்லப்பட்டவைகளே அனுட்டிபவர்கள் சொர்கத்தை சேருவார்கள்
·   வேதம் சுயம்பு
·   பிரபஞ்சம்  நித்யம் அஃதாவது என்றும் உள்ளது.
·   ஆன்மாக்கள் பல உண்டு.
·   ஆன்மாக்களுக்கு செய்த கர்மத்திற்கு ஏற்ப அதற்கான பலன்களை அனுபவிப்பதால் அதைத் தர ஈஸ்வரன் என்ற ஒருவன் தேவையில்லை
வேதாந்தம் – சிறு விளக்கம்
·   உபநிஷத்துக்களில் சொல்லப்படும் (பரம) ஆன்மா இந்த உலகப்படைப்பிற்கான காரணம்
·   இதுவே உலகத்தை வழி நடத்துகிறது
·   (ஜீவ) ஆன்மா தனது பந்தத்தை அறுக்க இதுவே உபாயம்.
·   அந்த பந்தம் நீங்காததற்கு காரணத்தை விளக்கும்
·   பந்தம் நீங்கியப்பின் அடையும் புருடன் இது என்று கூறும்


ஆறு தத்துவ சாத்திரங்களையும் படைத்தவர்கள் யார் யார்?
சாங்கியம் – கபிலர்
பாதஞ்சலம் – பதஞ்சலி
நியாயம் – அக்ஷபாதர்
வைசேஷிகம் – கணாதர்
மீமாம்சை – ஜைமினி
வேதாந்தம் – வியாசர்




Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

சாங்கியம்சிறு விளக்கம்

·   தேகாதி பிரபஞ்சத்திற்கு காரணமானதும், அருவமாகவும், என்றும் உள்ளதாகவும், எல்லா பொருள்களிலும் நீக்கமற நிறைந்தும் ஜடமாகவும் உடைய மாயை உண்டு என உணர்தல்.
·   அதனோடு தொடர்புடைய ஆன்மா உண்டு என்றும் அறிதல்.
·   ஆன்மாவுக்கு அஞ்ஞானத்தால் சுக துக்ககங்கள் உண்டு என்றும், அதை பிரித்து உணரும் பகுத்தறிவதாலே அஞ்ஞானம் நீங்கி ஆன்மா முக்தி அடையும் என்றும் உணர்தல்.
·   பல பிறவிகளுக்குப் பின் முக்தி உண்டு என உணர்தல்,
·   ஈஸ்வரனை தத்துவ விசாரணை மூலமாக அறிய இயலா நிலையில் ஈஸ்வரன் என்று ஒருவன் இல்லை என்று கூறுவது.
பாதஞ்சலம் –  சிறு விளக்கம்

சாங்கிய கருத்துக்களை ஏற்பது. அதோடு மட்டுமல்லாமல் அதற்கு மேல் படைத்தல், அழித்தல் ஆகிய தொழில்களை செய்யவும், உண்மை ஞானத்தை உபதேசிப்பவனாகவும் உடைய ஈஸ்வரன் ஒருவன் உண்டு எனவும், அவனை யோக முறையினால் காண இயலும் என்றும் விளக்குவது.
நியாயம் –  சிறு விளக்கம்
தர்கத்தின் வாயிலாக ஜடப் பொருள்களையும் சித்துப்  பொருள்களையும் தனித்தனியே நித்தியப் பொருள்களாக அறிதல். ஜடத்தில் இருந்து சித்தினை பிரித்து அறிந்து முக்தி என்றும் கூறுதல் . சித்து மனம் என்றும் அது அணுவினை விட சிறியது என்றும் கூறும்.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!