அழுகையின் ஒலிகள்
சந்தோஷ ஆலாபனைகள்
தொடரும் என் ஜன்மங்கள்
உடையும் கவிதைகள்
ஆத்ம நிவேதனம்
விடியல் தேடி
ஓவியனின் கனவுகள்
வண்ணம் தீட்ட
துவங்கிய தருணத்தில்
வரிசையாக மனிதர்கள்.
சிகையை சீர் படுத்த சொன்னான் ஒருவன்.
முகத்தை சீர் படுத்த சொன்னான் ஒருவன்.
கண்கள் கலக்கமுற்றிருப்பதாக
சீர் படுத்த சொன்னான் ஒருவன்.
ஆடையை சீர் படுத்த சொன்னான் ஒருவன்.
நடையை சீர் படுத்த சொன்னான் ஒருவன்.
மற்றவர்களுக்கா வரைந்து
முடித்த ஓவியத்தில்
முழுமை பெறாமல் ஓவியமும்
ஓவியனின் கனவுகளும்.
வறுமையும் வலியும்
பழைய வாசனைகள்
வாழ்விற்குப் பிறகுமான வலிகள்
தகிக்கும் தனிமைகள்
சாசுவதம்
மானச தவம்
ஒரு வசந்த காலத்தின்
தொடக்கத்தில் ஒரு பயணம்.
நினைவு அடுக்குகளை
பிரித்துக் காட்டும் வாய்ப்பு உனக்கும்
காணும் வாய்ப்பு எனக்கும்.
இது சிறு வயது அடுக்குகள்,
இது பதினென் பிராயத்தின் அடுக்குகள்,
இது உறவுகளின் அடுக்குகள்,
இது அலுவலகத்தின் அடுக்குகள்
என்று அடுக்கிக் கொண்டே சென்றாய்.
எங்கே
காதல் அடுக்குகளைக் காணோம் என்றேன்.
மவுனப் புன்னகை வீசி பின் சொன்னாய்
தனித்து இருப்பதை பிரிக்க முடியும்.
கலந்து இருப்பதை அல்ல என்றாய்.
ஆண் என்பதன் அடையாளம் துறந்து
அழுகை ஒலி.
திருமஞ்சனம்
சுத்தத்தின் பொருட்டு
நீராடல் நதிகளில்.
பார்த்தல் நிகழ்ந்தது
வகை வகையான மீன்களிடம்.
இயற்கையின் பொருட்டு
மீன் ஓன்று கையினை கடித்தது.
எதிர்ப்புகள் அற்ற நிலையில்
மற்ற மீன்களும்.
சில மீன்கள் கால்களை கடித்தன.
சில மீன்கள் முதுகினை கடித்தன.
சில மீன்கள் முடியினையும் கடித்தன.
எதுவும் அற்ற பொழுதுகளில்
எலும்புகளின் தோற்றம்.
ருசியின் பொருட்டு
அவற்றையும் உண்டன சில மீன்கள்.
அம்புகள் தைத்து தேரின் அடியில்
கிடக்கும் கர்ணனாய் நான்.
ஈரம் படிந்த இதயம் மட்டும்
இன்னமும் இருப்பதை
நீ உணர்த்தினாய்.
கரை ஓதுங்கியது எதுவோ?
இராவணண்
இராவணண் பற்றி சில செய்திகள். அவன் மிகப் பெரிய சிவ பக்தன் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அவனது கொடி முத்திரை என்ன தெரியுமா? வீணை. அரக்கனாக இருந்தும் மிகப் பெரிய/கடினமான இசைக் கருவியை தன் கொடியாக உடையவன். அவனுக்கு பத்து தலை என்பது உருவமாகப் படுகிறது. பத்து விஷயங்களை ஓரே நேரத்தில் செய்பவர்களை தசாவதானி என்று அழைப்பார்கள். அப்படிதான் தோன்றுகிறது. வரலாற்றுப் பதிவுகளில் சில சதாவதானிகள்(நூறு விஷயங்களை ஓரே நேரத்தில் செய்பவர்கள்) இருக்கிறார்கள்.
மீண்டும் தியானிப்போம்.
முமுஷு
காரணங்களின்றி காத்திருப்பு
வரும் புகைவண்டிக்காக.
நடை மேடையின் கடைவரை
ஒடிச் சென்று திரும்பும்
குழந்தைகள் கூட்டம்.
வருபவரை வரவேற்கவும்
வந்தவரை அனுப்பவும்
கண்ணிருடன் காத்திருக்கவும் கூட்டம்.
பெருத்த ஒலியுடன் வண்டியின் வருகையும்
பின்னொரு வியாபாரமும் தானாக நிகழும்.
விருப்பமுடன் உணவு உண்ணுதலும்
நீர் பிடித்து உண்ணுதலும் நிகழும்.
காலத்தின் கணக்கதனில்
வண்ணம் மாறும்.
வந்த தடம் அற்று வண்டி புகைவண்டி
புறப்பட்டுச் செல்லும்.
காலத்தின் சாட்சியாக
ஆல இலைகள் காற்றில் ஆடும்.
2052
காளிங்க நர்த்தனம்
கண்ணன்
வினாயகரைப் பற்றி எழுத வேண்டும் என்ற தோன்றியது. பின் வினாயகரால் எழுத்தப்பட்ட மகாபாரத்தில் இருந்து தொடங்க எண்ணம்.
கண்ணனை கடவுளாக காண்பதை விட மிகப் பெரிய திட்ட வல்லுனராகவே நான் காண்கிறேன். இது கதை, இது நிஜம் என்பதல்ல நோக்கம். பஞ்ச இந்திரியங்கள். ஒரு மனம். ஒரு ஆத்மா இவற்றின் உருவகமாகத்தான் பஞ்ச பாண்டவர்கள். கிருஷ்ணை மற்றும் கண்ணன்.
96 வகைத் தத்துவத்திற்கும்(சைவ சித்தாந்தக் கருத்துப்படி), 4 வகை செயல்களான மனம், சித்தம்,புத்தி மற்றும் அகங்காரம் ஆக 100. இவற்றின் உருவகமாக துரியோதனாதிகள்.
மீண்டும் தியானிப்போம்.