கர்ணனின் பசி

கர்ணனாய் வேஷமிட்டாலும்
காயந்து கிடக்கிறது
பசி அறுக்க முடியா
பாழும் வயிறு.

Loading

சமூக ஊடகங்கள்

அழுகையின் ஒலிகள்

என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா
விலை உயர்ந்த காரினில்
செல்பவர்களின் சந்தோஷ ஒலி தாண்டி
ஓலிக்கும்
ஏழைகளின் கண்ணீரின்
அழுகை ஒலிகளை

Loading

சமூக ஊடகங்கள்

சந்தோஷ ஆலாபனைகள்

என்றாவது உற்று கவனித்திருக்கிறீர்களா
கோரஸாக பாடுபவர்களின்
சந்தோஷ குரல் தாண்டி
கண்ணுக்குள் அடைபட்டுக்கிடக்கும்
கண்ணீரின் வலிகளை.

Loading

சமூக ஊடகங்கள்

தொடரும் என் ஜன்மங்கள்

ஒரு விடியலுக்கான
முன் இரவினின் கண் விழித்து
பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்லி
உனக்காக வீடும் காரும் வாங்கி
தருகிறேன் ஆனால் சில வருடம் கழித்து
என்று கூறி புன்னகைக்கிறாய்.
இமைகளில் பட்டுத் தெரிக்கும்
நீரினில் கரைகின்றன
தொடரும் என் ஜன்மங்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

உடையும் கவிதைகள்

நிச்சயிக்கப்பட்ட பாதையில்
பயணம் என்றாலும்
நித்தமும் உடைகின்றன
கனவுகளும் கவிதைகளும்.

Loading

சமூக ஊடகங்கள்

ஆத்ம நிவேதனம்

உறங்க துவங்கும்
வினாடியில்
பிஞ்சு விரல்களால் என் மேல் எழுதி
என்ன எழுதினேன் என்கிறாய்.
சொர்க்கம் என்றேன்.
நீ விழித்த விழிப்பில்
பல ஜன்மங்களை நிறைவாக வாழ்ந்த
தந்தைகளின் வரிசையில்
முதன்மையாக நான்.

Loading

சமூக ஊடகங்கள்

விடியல் தேடி

வினாக்களோடு விடிகின்றன
விடியல்கள்.
விடைகளோடு முடிகின்றன
கவிதைகள்.

Loading

சமூக ஊடகங்கள்

ஓவியனின் கனவுகள்

வண்ணம் தீட்ட
துவங்கிய தருணத்தில்
வரிசையாக மனிதர்கள்.
சிகையை சீர் படுத்த சொன்னான் ஒருவன்.
முகத்தை சீர்  படுத்த சொன்னான் ஒருவன்.
கண்கள் கலக்கமுற்றிருப்பதாக
சீர்  படுத்த சொன்னான் ஒருவன்.
ஆடையை சீர்  படுத்த சொன்னான் ஒருவன்.
நடையை சீர்  படுத்த சொன்னான் ஒருவன்.
மற்றவர்களுக்கா வரைந்து
முடித்த ஓவியத்தில்
முழுமை பெறாமல் ஓவியமும்
ஓவியனின் கனவுகளும்.

Loading

சமூக ஊடகங்கள்

வறுமையும் வலியும்

என்றாவது உணர்ந்து
இருக்கிறீர்களா
பொருளற்று நண்பனை
சந்தித்த குசேலனின்
ஆழ்ந்த  மன வலிகளை.

Loading

சமூக ஊடகங்கள்

பழைய வாசனைகள்

மகள் மறைத்து
வைத்து விளையாடும்
புத்தக மயிலிறகின் விளையாட்டில்
தோன்றி மறைகின்றன
நான் தொலைத்து விட்ட
குழந்தைப்பருவங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

வாழ்விற்குப் பிறகுமான வலிகள்

காலனே,
கொஞ்சம் காலம் கடந்து வா.
புதைப்பதற்கு இடமும் அற்று
எரிப்பதற்கு மின்சாரமும் அற்ற
தேசத்தில் வாழ்கிறோம்.
மானம் கெட்ட தேசத்தில்
வாழ்வு மட்டும் அல்ல
மரணத்திற்கும் பின்னும் வலிதான்.

Loading

சமூக ஊடகங்கள்

தகிக்கும் தனிமைகள்

எவர் அறியக்கூடும்
மற்றவர்களை தன்னிடம்
அணுகவிடாமல்
தடுத்த வீடுகள்
கால மாற்றத்தால்
தனித்திருப்பதையும்
தவித்திருப்பதையும்.

Loading

சமூக ஊடகங்கள்

சாசுவதம்

புகைப்படத்தின் மீது நாட்டம்
கொண்டவனாக இருந்த பொழுதுகளில்
உன்னைப் படம் எடுக்க விரும்பினேன்.
நிச்சயமற்ற ஒன்றை
நிச்சயப்படுத்தவா இப்புகைப்படம் என்றாய்.
அன்று முதல்
பிடித்துப் போனது உன்னையும்
பிடிக்காமல் போனது புகைப்படத்தையும்.

Loading

சமூக ஊடகங்கள்

மானச தவம்

ஒரு வசந்த காலத்தின்
தொடக்கத்தில் ஒரு பயணம்.
நினைவு அடுக்குகளை
பிரித்துக் காட்டும் வாய்ப்பு உனக்கும்
காணும் வாய்ப்பு எனக்கும்.
இது சிறு வயது அடுக்குகள்,
இது பதினென் பிராயத்தின் அடுக்குகள்,
இது உறவுகளின் அடுக்குகள்,
இது அலுவலகத்தின் அடுக்குகள்
என்று அடுக்கிக் கொண்டே சென்றாய்.
எங்கே
காதல் அடுக்குகளைக் காணோம் என்றேன்.
மவுனப் புன்னகை வீசி பின் சொன்னாய்
தனித்து இருப்பதை பிரிக்க முடியும்.
கலந்து இருப்பதை அல்ல என்றாய்.
ஆண் என்பதன் அடையாளம் துறந்து
அழுகை ஒலி.

Loading

சமூக ஊடகங்கள்

திருமஞ்சனம்

சுத்தத்தின் பொருட்டு
நீராடல் நதிகளில்.
பார்த்தல் நிகழ்ந்தது
வகை வகையான மீன்களிடம்.
இயற்கையின் பொருட்டு
மீன் ஓன்று கையினை கடித்தது.
எதிர்ப்புகள் அற்ற நிலையில்
மற்ற மீன்களும்.
சில மீன்கள் கால்களை கடித்தன.
சில மீன்கள் முதுகினை கடித்தன.
சில மீன்கள் முடியினையும் கடித்தன.
எதுவும் அற்ற பொழுதுகளில்
எலும்புகளின் தோற்றம்.
ருசியின் பொருட்டு
அவற்றையும் உண்டன சில மீன்கள்.
அம்புகள் தைத்து தேரின் அடியில்
கிடக்கும் கர்ணனாய் நான்.
ஈரம் படிந்த இதயம் மட்டும்
இன்னமும் இருப்பதை
நீ உணர்த்தினாய்.
கரை ஓதுங்கியது எதுவோ?

Loading

சமூக ஊடகங்கள்

இராவணண்

இராவணண் பற்றி சில செய்திகள். அவன் மிகப் பெரிய சிவ பக்தன் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அவனது கொடி முத்திரை என்ன தெரியுமா? வீணை. அரக்கனாக இருந்தும் மிகப் பெரிய/கடினமான இசைக் கருவியை தன் கொடியாக உடையவன். அவனுக்கு பத்து தலை என்பது உருவமாகப் படுகிறது. பத்து விஷயங்களை ஓரே நேரத்தில் செய்பவர்களை தசாவதானி என்று அழைப்பார்கள். அப்படிதான் தோன்றுகிறது. வரலாற்றுப் பதிவுகளில் சில சதாவதானிகள்(நூறு விஷயங்களை ஓரே நேரத்தில் செய்பவர்கள்) இருக்கிறார்கள்.

மீண்டும் தியானிப்போம்.

Loading

சமூக ஊடகங்கள்

முமுஷு

காரணங்களின்றி காத்திருப்பு
வரும் புகைவண்டிக்காக.
நடை மேடையின் கடைவரை
ஒடிச் சென்று திரும்பும்
குழந்தைகள் கூட்டம்.
வருபவரை வரவேற்கவும்
வந்தவரை அனுப்பவும்
கண்ணிருடன் காத்திருக்கவும் கூட்டம்.
பெருத்த ஒலியுடன் வண்டியின் வருகையும்
பின்னொரு வியாபாரமும் தானாக நிகழும்.
விருப்பமுடன் உணவு உண்ணுதலும்
நீர் பிடித்து உண்ணுதலும் நிகழும்.
காலத்தின் கணக்கதனில்
வண்ணம் மாறும்.
வந்த தடம் அற்று வண்டி புகைவண்டி
புறப்பட்டுச் செல்லும்.
காலத்தின் சாட்சியாக
ஆல இலைகள் காற்றில் ஆடும்.

Loading

சமூக ஊடகங்கள்

2052

அருங்காட்சியகத்தில்
எழுதப்பட்டிருந்தது.
நீரில் நிலா கலைத்து விடாதீர்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

காளிங்க நர்த்தனம்

கண்ணன் பற்றி மற்றொரு சிந்தனை.

கண்ணன் மடுவில் சென்று காளிங்க நர்த்தனம் செய்தான் என்று செய்திகள்.
ஆறு,
காளிங்கன் பாம்பு – 5 தலை நாகம்.

இது யோக மார்க்க உருவமாக படுகிறது.
கண்ணன் மிகப் பெரிய யோகி.
இக லோக வாழ்க்கையில் பஞ்ச இந்திரியங்களை வெல்லுவதாகப் படுகிறது.

மீண்டும் சிந்திப்போம்.

Loading

சமூக ஊடகங்கள்

கண்ணன்

வினாயகரைப் பற்றி எழுத வேண்டும் என்ற தோன்றியது. பின் வினாயகரால் எழுத்தப்பட்ட மகாபாரத்தில் இருந்து தொடங்க எண்ணம்.

கண்ணனை கடவுளாக காண்பதை விட மிகப் பெரிய திட்ட வல்லுனராகவே நான் காண்கிறேன். இது கதை, இது நிஜம் என்பதல்ல நோக்கம். பஞ்ச இந்திரியங்கள். ஒரு மனம். ஒரு ஆத்மா இவற்றின் உருவகமாகத்தான் பஞ்ச பாண்டவர்கள். கிருஷ்ணை மற்றும் கண்ணன்.

96 வகைத் தத்துவத்திற்கும்(சைவ சித்தாந்தக் கருத்துப்படி), 4 வகை செயல்களான மனம், சித்தம்,புத்தி மற்றும் அகங்காரம் ஆக 100.  இவற்றின் உருவகமாக துரியோதனாதிகள்.

மீண்டும் தியானிப்போம்.

Loading

சமூக ஊடகங்கள்