மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம்

மரபணு மாற்றம்_R.S.S.K Clicks

மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – முன்னுரை
ஒரு தேசத்தை வேரோடு அழிக்க பல முறைகள் உள்ளன. அவற்றின் கலாச்சாரம் அழித்தல், இடங்களை அழித்தல் போன்ற பல முறைகள் உள்ளன. அவற்றின் முதன்மையானதும், முக்கியமானதாகவும் இருப்பது உணவு முறைகளை மாற்றுவது.
மாறிவரும் மக்கட்தொகைக்கு ஏற்ப உணவுப் பெருக்கம் என்பது தவிர்க்க இயலாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் உணவினை முன்வைத்து அரசும் பன்னாட்டு அரசியல் வாதிகள்(நிறுவனங்கள்) நடத்தும் கூத்துக்கள் எண்ணில் அடங்காதவை.
மரபணு மாற்றத்தின் நோக்கம் பூச்சிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாத்தல், நோய் எதிர்ப்பு, ஊட்டச் சத்து மிக்க பயிர்கள், கெடாதத் தன்மை, விளைச்சல் அதிகரிப்பு, அதிக உற்பத்தி தரும் விதைகள், பழுதடையா மரக்கறிகள், புதிய வகை உயிரினங்கள் செயற்கை உடல் உறுப்புகள்  செயற்கை இன்சுலீன் எனப் பல பொய்யான காரணங்களை பட்டியல் இடப்பட்டாலும், ‘எத்தனை உயிர் அழிந்தாலும் எனது நோக்கம் பணம் சம்பாதிப்பதுஎனும்உயரியநோக்கம் இதன் பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு வித்திடுகிறது.
 
இதனால் ஏற்படும் வலியை, கஷ்டங்களை, பாதிப்புகளை உணர்ந்த நாடுகளான இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, பிரான்சு, ஜெர்மனி, அயர்லாந்து, ரொமேனியா, போலந்து மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகள் அங்கு மாற்றுப் பயிர்களுக்கு தடை விதித்து விட்டன.
 
மாற்றங்கள் பயிர், காய்கறிகள், பழங்கள் எனப் பலவகைப்பட்டன.
 
  • பயன்படுத்தப்படும் வழி முறைகள்
  • கவலைகள்உடல் நலம் சார்ந்து
  • கவலைகள்சூழலியல் சார்ந்து
  • கவலைகள்பொருளாதாரம் சார்ந்து
  • கவலைகள்சோதனை எலிகளாகும் இந்தியர்கள்
 
ஆகிய தலைப்பு குறித்து எழுத உள்ளேன்.

புகைப்படம் : R.s.s.K Clicks
 
 

Loading

சமூக ஊடகங்கள்

பௌர்ணமி நாட்கள்

பௌர்ணமி நாட்கள்_Swathi

மகளால் வரையப்படும்
கிறுக்கல்களால் அழகு பெறுகின்றன
நாட்களும்.
 

புகைப்படம் :  Swathika Senthil

Loading

சமூக ஊடகங்கள்

IT – தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள் – 4

தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள்_KP

 
தான் வாழ பிறரை கெடுக்கும் மனிதர்கள் (அனைத்து நிலைகளிலும்)
 
தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் பெரும்பாலும் மிகப் பெரிய திட்ட நோக்கம், இலக்கங்கள் இல்லாமல் தொடங்கப்படுகின்றன.(சிவாஜி  : பார்த்த வேலை – Software Solution Architect).
 
அவைகள் தொடங்கப்படும் காலங்கட்டங்களில் அந்த இடங்களில் அங்கு என்ன மாதிரியான மனிதர்களும், படிப்புகளும் இருக்கின்றன. அவைகள் எப்படி பயன்பாடு இருக்கும் போன்ற விஷயங்களை நினைப்பது இல்லை.
 
நுட்பம் – 1
 
.ம் – B.C.A படித்த ஒருவன் மென்பொருள் துறையில் நுழைவதாக வைத்துக் கொள்வோம். மேலும் அந்த நிறுவனத்தில் 10 வருடம் அந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் கொள்வோம். இக்கால கட்டங்களில் அவனுக்கு அந்த நிறுவனத்தில் அனைத்து விஷயங்களும் தெரிந்து விடும்.
 
10 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு Master Degree படித்த ஒருவன் அங்கு வரும்போது வரும் நபருக்கு அவன் அடிப்படை விஷயங்களை எதுவும் சொல்லித் தரமாட்டான். (எவனாக இருப்பினும் சொல்லித் தரமாட்டான் என்பது வேறு கதை.) இது matter of survival  என்பதை முன்வைத்தது.
 
நுட்பம் – 2
 
நிறுவனத்தில் மேல் மட்டக் குழு விரிவாக்கம் பற்றி பேச கூடும்.
நம்ம நிறுவனத்தினை எப்படி விரிவுபடுத்தலாம். நல்ல idea குடுத்தா உங்களுக்கு promotion.
சார், நான் என்ன சொல்ல வரேன்னா, நம்ம Mr.X இருக்கானே, அவன் குடுக்ற வேலையை மட்டும் செய்யறான். அவன கழட்டி விட்டா 12 லட்சம் மிச்ச மாகும். அவனுக்கு பதிலா 2 லட்சத்தில 4 பேர வேலைக்கு எடுத்துக்கலாம். நம்ம Mr.Y க்கு புரொமோஷன்னு சொல்லி அவனுக்கு 3 லட்சம் கொடுத்தா 11 லட்சத்தில எல்லாம் முடிச்சிடும் சார்.
நுட்பம் – 3
 
தற்போதைய காலங்கட்டங்களில் (பொதுவாக) 32 – 35 வயது என்பது மனிதர்கள் வாழத்துவங்கும் காலம். எல்லா நிறுவனங்களுக்கும் இது தெரியும். எல்லோரும் அங்குதான் கை வைக்கிறார்கள். ‘புடிச்சா வேலை பாருங்க, புடிக்கலைன்னா, பேப்பர் போட்டுட்டு போக வேண்டியது தானே’ இவ்வாறு மன அழுத்தம் உண்டாக்கி வெளியே தள்ளப்படும் வகைகளும் உண்டு..
நுட்பம் – 4
 
இருக்கும் இடங்களில் மிகச் சிறந்த நட்புக்கள் (வேறு என்ன சொல்ல) உண்டாவது உண்டு.
எனக்கு ஏதாவது புமோஷனுக்கு ஏற்பாடு செய்ய மாட்டீங்களா?
கவலைய விடு டியர், நம்ம Mr. X இருக்கான்ல, அவனை ‘வேலையே செய்யாதவன்’னு சொல்லி அடுத்த மாசம் தூக்றோம். அப்புறம் நீ தான் Team Leader.
அவர் 10 வருஷமா இங்க இருக்காறே?
நீ ஏன் அதப் பத்தி கவலைப்பட்ற. இப்ப ஏதாவது Treat  உண்டா?
நுட்பம் – 5
 
ஒரு நிறுவனத்தில் இருந்து ஒருவரை வெளியே தள்ள பல காரணங்களைத் தேடுவார்கள்
·      Proper in time (out time பற்றி கவலை இல்லை). சத்தியமாகச் சொல்கிறேன்.
·      வேலைகளை குறித்த காலத்தில் முடித்துக் கொடுக்கும் திறமை
·      வேலை விடுப்பு எடுத்த நாட்கள்
·      எதிர் பால் மக்களுடன் கொஞ்சம் முன்னுக்கு பின்னாக இருத்தல்
·      மற்றவர்களும் பழகும் தன்மை
மேற் கூறியவைகள் எவையும் இல்லை எனில் 10 வருடங்களுக்கு பிறகுவேலையே செய்யவில்லைஎன்று உண்மையை கண்டறிதல்.
நுட்பம் – 6
 
மச்சான்(பாசக்கார பய புள்ளங்க), அவன எப்டி வேலை விட்டு விரட்டுரதுன்னு தெரியலடா?
டேய், நம்ம கிட்ட 6 மாசத்துக்கு எல்லாருக்கும் work load details இருக்கு. DB ல work load hours ஐ குறைச்சி போடு. 2 வாரத்து milestone ஐ 1 வார milestone ஆ போடு. இத தவிர daily milestone தினமும் 2 போடு. ஓடியே போய்டுவான். 
சூப்பர் ஐடியா மச்சான். வா ஒரு பீர் சாப்டு இன்னும் பேசுவோம்.
 
இங்கு பிரதானமாக இருப்பது ‘வேலை செய்யவில்லை’ என்பதை கண்டுபிடிப்பது தான்.

அடுத்த பதிவு :பொருளாதார சீர்திருத்தம்/முன்னேற்றம்  முன்வைத்துதொடரும்…

 
புகைபடம் : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

திசை அறிதல்

திசை அறிதல்_KP

பாதங்களின் நிழல் பற்றி
நடந்து செல்லும் பாதைகளில்
தடம் பதியாது பறந்து செல்கிறது

பறவையின் நிழல் ஒன்று.

புகைப்படம் :  Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

IT – தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள் – 3

தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள்_KP
கற்பித்தல் குறைபாடுகள்
சமீபத்தில் எனது நண்பர் (பேராசிரியர்ஒருவரை சந்திக்கச்  சென்றிருந்தேன்.   அப்போது  எனது நண்பரை சந்திக்க மாணவர் ஒருவர் வந்திருந்தார்.
சரிடாநான் உனக்கு சொல்லித் தரேன்புக்ஸ் எல்லாம் எடுத்துகிட்டு வா.
இல்லஎங்களுக்கு புக்ஸ் கொடுக்கலஸ்லைடு தான்.
எத்தனை page?
22 page.
ஒரு யூனிட்க்கா?
இல்ல சார்மொத்த சிலபஸ்ம் அவ்வளவுதான்.
என்னடா சொல்ற?
ஆமாம் சார்.
(அது என்ன subject  என்பதை கடைசியில் சொல்கிறேன்.)
படிப்பதற்கு 5 Text book  3 reference book என்பது இருந்தெல்லாம் லெமுரியா கண்டத்தோடு வழக்கொழிந்து போனது.
2000 ஆரம்ப காலகட்டங்களில் யூனிட்டையும் படித்து(ம்க்கும்) 122 பக்கத்திற்கு as per Anna University syllabus   என்று வெளியிடுவார்கள்.
இப்போது அதுவும் போயிற்றுஒரு subject க்கு 22 slide என படித்து வருபவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?
கற்றல் குறைபாடுகள் – 1
 
டேய், நாளைக்கு cycle test டா. இன்னும் ஒண்ணும் படிக்கவே இல்ல. என்ன பண்றதுடா?
டேய், விடுடா, objective type தானே, 4 answer ல ஏதோ ஒண்ண click  பண்ண வேண்டியது தானே
கற்றல் குறைபாடுகள் – 2
டேய், attendance கம்மியா வரும் போல இருக்கு.  பயமா இருக்கு டா.
விடுடா, compensatory course போட்டுக்கலாம்.
கற்றுத்தருபவர்களிடமும் கற்பவர்களிடம் இருக்கும் குறைபாடுகள் ஏராளமானவை. இரண்டுமே ஜாடிக்கு ஏத்த மூடி போல் மிக அழகாக பொருந்துகின்றன.
சமீபத்திய ஒரு கட்டுரையின் படி (Economic times), இந்த வருடத்தில் campus interview   வழியாக மிகப் பெரிய நிறுவனங்கள் 30000 ஆட்களை மட்டுமே எடுக்க இருக்கின்றன. (சென்ற வருடம் 35000).
இதற்கு காரணம் automation and artificial intelligence என்று வேறு ஒரு கட்டுரையும் வந்திருந்தது.

அந்த Subject : Relational Database Management System

தான் வாழ பிறரை கெடுக்கும் மனிதர்கள் (அனைத்து நிலைகளிலும்) – அடுத்த பதிவு
தொடரும்…

புகைப்படம் : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

ஆட்சி சிதம்பரமா? மதுரையா?

ஆட்சி சிதம்பரமா மதுரையா
பொதுவாக வீடுகளில் ஆண் ஆதிக்கமாபெண் ஆதிக்கமா என்பதற்காக  விளையாட்டாக கேட்கப்படும் கேள்வி இதுஇது சரியானது அல்ல.
வைத்திய சாஸ்திர நூல்களுக்கு ஏற்றவாறு நாடிகளின் எண்ணிக்கை 72,000 ல்  இருந்து 3,00,0000 வரை விரிவடைகின்றன.
அவற்றில் முதன்மை பெறும் நாடிகள் இடகலைபிங்கலைசுழுமுனை, சிங்குவை,புருடன்காந்தாரிஅசனிஅலம்பருடன்சங்குனிகுரு ஆகும்அதிலும் குறிப்பாக  இடகலைபிங்கலை ஆகிய நாடிகள் முக்கியம் பெறுகின்றன.
மூக்கின் இடது நாசியில் வழியே நடைபெறும் சுவாசம் இடகலையும்(சந்திரகலை)
வலது நாசியில் நடைபெறும் சுவாசம் பிங்கலையும்(சூரிய கலை) பாம்பு குறீயீடாகவே குறிக்கப்படுகின்றன.
இந்த சுவாசஓட்டம் 4 நாழிக்கு (சுமார் 1 1/2 மணி நேரம்) ஒரு முறை மாறும். அதாவது ஒரு நாளில் 15 முறை (15*4 = 60 நாழிகை)
 
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்குக்
கூற்றை உதைக்குங் குறியதுவாம் (திருமந்திரம்)
வலப்புற நாடி செல்லும் போது சில வேலைகளையும், இடப்புற நாடி செல்லும் போது சில வேலைகளையும் செய்ய வேண்டும். அப்போது அவைகள் முழுமை பெறும்.
சிதம்பரம் சூரிய நாடியை முதன்மையாய் உடையத் தலம். இதை உணர்த்தவே நடராஜரின் வலது பாதம் ஊன்றி இடது பாதம் தூக்கி ஆடும் வடிவமுடன் அமைந்திருக்கும்.
மதுரை சந்திர நாடியை முதன்மையாய் உடையத் தலம்இதை உணர்த்தவே நடராஜரின் இடது பாதம் ஊன்றி வலது பாதம் தூக்கி ஆடும் வடிவமுடன் அமைந்திருக்கும்.
அதிக விபரம் வேண்டுவோர் குரு முகமாக அறிக.
புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

பயணித்தல் – இலக்கு நோக்கி

பயணித்தல் - இலக்கு நோக்கி

மனித சஞ்சாரம் அற்ற
காடுடொன்றில் தனித்து பயணிக்கிறேன்.
சிறு மழை பெற்ற பின்னொரு பொழுதாய்
மண்ணில் வாசம்
உச்சரிக்கப்படும் ஒரு நாமம் ஒன்று
பெண்ணாகி என் எதிரே.
இனம் கண்டது எப்படி என்கிறேன்.
மூலத்தின் பிரதி
எப்படி மூலத்தில் இருந்து விலகலாம் என்கிறாள்.
என் காலடி ஓசையுடன் சேர்ந்தே
ஒலிக்கின்றன தண்டையின் ஒலிகள்.
பாதங்கள் பாதைகளில்
பயணிக்கின்றன.
விளையாட்டாய் ஆரம்பிக்கிறது
வார்த்தை விளையாட்டுக்கள்.
‘பிரம்மம் என்ன செய்து கொண்டிருக்கிறது’ என்கிறேன்
‘பிரம்மமாய் இருக்கிறது’ என்கிறாள்.

ஆதி நாளின் சூன்யத்தில் உடல்.


புகைப்படம் : பாலா அவர்கள்
 

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவக்கரை

274

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருவக்கரை
·   வராகநதியான சங்கராபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மிகப்பழமையான கோயில்
·   சதுர அடிப்பாகத்தின் மீது அமைந்த வட்டமான ஆவுடையாரில் மூன்று திருமுகங்களுடன் கம்பீரமாக கிழக்கு நோக்கி திருக்காட்சி தரும் மூலவர்.
·   வக்கிரனை அழிக்க, காளி இறைவனை (சந்திரசேகரரை) வழிபட்டு அவனுடன் போர்புரிந்து வெற்றி பெற்ற தலம்
·   ராஜகோபுரத்தின் இடப்பக்கம் வக்கிரகாளி அம்மன் சந்நிதி
·   காளியம்மன் சந்நிதி எதிரில் வக்ராசூரன் வழிபட்ட வக்கிரலிங்கம்(ஆத்மலிங்கம் , கண்டலிங்கம் )
·   நடராசர், வக்கிர தாண்வம் எனும் இடுப்புக்குமேல் வரை வளைத்து தூக்கிய திருவடியுடன் கால் மாறியாடும் திருக்கோல காட்சி அமைப்பு
·   உள்பிரகாரத்தில் குண்டலி மாமுனிவர் சமாதி மீது சிவலிங்கம் உடைய சந்நிதி.
·   குண்டலினி முனிவர் வம்சத்தில் வந்த வக்கிராசுரன்  (வக்கிரன்) வழிபட்ட தலம்;  வல் + கரை – வலிய கரை, வற்கரை
·   வக்ராசூரனின் தங்கை துன்முகியை காளி சம்ஹாரம் செய்யும் போது வயிற்றில் குழந்தை இருந்த காரணத்தால் கருவில் உள்ள குழந்தையை குண்டலமாக ஆக்கிய் காதில் அணிந்திருக்கும் காட்சி.
·   சனிஸ்வரனின் காக வாகனம்  தென்திசை நோக்கி
·   கால மாற்றத்தால் பூமியில் புதைந்த மரங்கள், பட்டைகள், கிளைகள் கல்லாக கல்மரங்களாக  மாறிக் காட்சியளிக்கின்றன
·   கருவறை , நந்தி , கொடிமரம் , ராஜகோபுரம் ஆகியவை ஒரே நேர்க் கோட்டில் இல்லாமல் அமைந்துள்ளது
தலம்
திருவக்கரை
பிற பெயர்கள்
வக்ராபுரி, குண்டலிவனம் , துக்ரபுரி , வக்ரபுரிப்பட்டினம், பிறை சூடிய எம்பெருமான், ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்)
இறைவன்
சந்திரசேகரேசுவரர், சந்திர மௌலீசுவரர்
இறைவி
அமிர்தேசுவரி, வடிவாம்பிகை
தல விருட்சம்
வில்வம்
தீர்த்தம்
சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், பிரம்மா தீர்த்தம்,புண்ணிபுனல் தீர்த்தம்
விழாக்கள்
மாவட்டம்
விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை
அருள்மிகு சந்திரசேகரர் வக்ரகாளியம்மன் திருக்கோவில்
திருவக்கரை
வானூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
PIN – 604304
தொலைபேசி :  +91 – 413 – 2688949 , 2680870
வழிபட்டவர்கள்
வக்கிராசுரன்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர், திரு அருணகிரிநாதர்
நிர்வாகம்
இந்துசமய அறநிலையத்துறை
இருப்பிடம்
சென்னை – திண்டிவனம் – கூட்டேரிப்பட்டு – மயிலம் – பெரும்பாக்கம் – திருவக்கரை
சென்னை – பாண்டிச்சேரி – திருச்சிற்றம்பலம் கூட்ரோடு – பெரும்பாக்கம் – திருவக்கரை
விழுப்புரம் – முண்டியம்பாக்கம் – திருக்கனூர் – திருவக்கரை
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 271 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில்  30    வது தலம்.
சந்திர மௌலீசுவரர்
சந்திர மௌலீசுவரர்
அமிர்தேசுவரி
அமிர்தேசுவரி
புகைப்படம் : தினமலர்
 
பாடியவர்           திருஞானசம்பந்தர்         
திருமுறை         3                     
பதிக எண்          060        
திருமுறை எண்    8         
பாடல்

இலங்கையர் மன்னனாகி எழில்பெற்றஇ ராவணனைக்
கலங்கவோர் கால்விரலாற் கதிர்பொன்முடி பத்தலற
நலங்கெழு சிந்தையனாய் அருள்போற்றலு நன்களித்த
வலங்கெழு மூவிலைவேல் உடையானிடம் வக்கரையே.
பொருள்
அழகு பொருந்திய இலங்கை மன்னனான இராவணன் கலங்குமாறு, ஒளி வீசுகின்ற பொன்னாலான திருமுடிகளணிந்த அவன் தலைகள் பத்திலும் தன் காற்பெருவிரலை ஊன்றி, அலறுமாறு செய்தவன். பின் அவனது ஆணவ செருக்கு நீங்கி, நல்ல சிந்தனையோடு ஈசனைப் போற்றி துதிக்க, ஈசன் அவனுக்கு வீரவாளும், நீண்ட ஆயுளும் கொடுத்து அருள் புரிந்தான். அத்தகைய பெருமான் வலக்கையில் மூவிலைவேல்(சூலம்) ஏந்தி வீற்றிருந்து அருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும்.
கருத்து
·   மாயா மலங்களில் ஆணவ மலம் நீங்குமாறு செய்பவன் ஈசன். ஆணவத்தை விலக்கி உயிர்களுக்கு அருள் புரிபவன் என்பது துணிபு.
·   தன்னை அணுகியவர்களுக்கு வெற்றியும் அதனை அனுபவிக்கும் ஆயுளையும் தருபவன் ஈசன்
பாடியவர்           திருஞானசம்பந்தர்         
திருமுறை         3                     
பதிக எண்          060        
திருமுறை எண்    9         
பாடல்
காமனை யீடழித்திட் டவன்காதலி சென்றிரப்பச்
சேமமே உன்றனக்கென் றருள்செய்தவன் தேவர்பிரான்
சாமவெண் டாமரைமேல் அயனுந்தர ணியளந்த
வாமன னும்மறியா வகையானிடம் வக்கரையே.
பொருள்
அழகிய வலிய தேகத்தை உடைய மன்மதனை எரித்துச் சாம்பலாக்கிப் பின்னர் அவன் மனைவி ரதி இரந்து வேண்டிப் பிரார்த்திக்க சிவபெருமான் மன்மதனை உயிர்ப்பித்து அவள் கண்ணுக்கு மட்டும் புலப்படும்படி அருள்புரிந்தான். வெண்டாமரையில் வீற்றிருந்து சாமகானம் பாடுகின்ற பிரமனும், உலகையளந்த வாமனனான திருமாலும் அறியாவண்ணம் நீண்ட சோதியாக நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும்
கருத்து
·         ஈடு அழித்திட்டுவலிமைக்கு இடமாகிய உடம்பை அழித்து. (ஆணவம் முன்வைத்து)
·         உன்தனக்குச் சேமமேஉன் கண்ணுக்கு மட்டும் புலப்படுவான்
Reference
திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ
     தொழிவ துனைச்சிறி …… துரையாதே
(இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
 
 
 

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 2

உமாமகேஸ்வரஸம்வாதம்
(
இந் நிகழ்வுகள் மகாபாரதம் அனுசாஸன பர்வத்தில் இடம் பெற்றுள்ளவை
தொடக்கம் 204 அத்யாயம்.
கூடி இருக்கும் ரிஷிகள் கிருஷ்ணரை பார்த்து ‘உலகில் ஆச்சரியமானது ஒன்றை நீங்கள் கண்டிருந்தாலும்கேட்டிருந்தாலும் அதை உரைக்க வேண்டும்‘ என்றனர்.
நான் மானிட வடிவத்தில் இருப்பதால் எதுவும் உரைப்பதிற்கு இல்லைஅதனால் என் அறிவும் வரையறைக்கு உட்பட்டது என்றார்.
எனவே ரிஷிகள் அனைவரும் நாரதரே உக்கிரமான தவம் உடையவர்கிருஷ்ணருக்கு அன்பானவர்பழைய சரித்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் என்று நிச்சயித்து அவரை அணுகினார்கள்
அவர் உமா மகேஷ்வர ஸம்வாதம் குறித்து சொல்லத் தொடங்கினார்.
)

        உமை :  வேறு வாகனங்கள் இருக்கையில் நீங்கள் ஏன் ரிஷபத்தை வாகனமாக கொண்டுள்ளீர்கள்?
சிவன்  : முன் சிருஷ்டியில் பசுக்கள் வெள்ளை நிறமுடையனவாக இருந்தன. அப்போது உலக நன்மைக்காக ஒற்றைக்காலில் நின்று தவம் செய்து கொண்டு இருந்தேன். அப்போது அந்த பசுக்கள் நான் இருந்த இடம் வந்து அந்த இடத்தை இடித்தன. அதனால் கோபம் கொண்டு அப்பசுக்களை எரித்துவிட்டேன். அதில் இந்த ரிஷபம் தன் தவறை உணர்ந்து என்னிடம் வேண்டிக் கொண்டது.
 
அது முதல் பசுக்கள் அடக்க உள்ளவைகளாகவும், பல நிறமுடையவைகளாகவும் ஆயின. சாபம் விலக்கப்பட்டதால் இப் பசு மாத்திரம் வெள்ளை நிறமுடையதாகவும், எனக்கு வாகனமாகவும் ஆனது.அதனால் தேவர்கள் என்னை பசுபதியாகச் செய்தனர்.
உமை :  மங்களகரமான வீடுகளும், அதில்  அழகிய விலங்குகளும் பிராணிகளும் இருக்கையில் நீர் ஏன் மயிர்களாலும், எலும்புகளாலும் அருவருக்கத்தக்க மண்டை ஓடுகள் நிரம்பியதும் , நரிகளும் கழுகளும் சேர்ந்திருக்கும் பிணப்புகையினால் மூடப்பட்டதுமான மிகக் கொடிய பயங்கரமான மயானத்தில் சந்தோஷமாக இருக்கீறீர்? அது எதனால் என்று எனக்கு சொல்லக் கடவீர்.
சிவன்  : முன்னொரு யுகத்தில் வெகு சுத்தமான இடத்தை நான் தேடி அடைந்த போது சுத்தமான இடம் கிடைக்கவில்லை. அப்போது பூதசிருஷ்டி உண்டானது. கொடிய கோரப்பற்களை உடைய பிசாசுகளும், பிற உயிர்களை கொன்று உண்ணும் பூதங்களும் உலகம் எங்கும் திரிந்தன. இவ்வாறு பிராணிகள் இல்லாததால் உலகை இப் பூதங்களிடம் இருந்து காப்பதற்காக பிரம்ம தேவர் இப் பூத, பிசாசங்களை அழிக்குமாறு வேண்டிக் கொண்டார். பிராணிகளின் நன்மைக்காக நான் இதை ஏற்றிக் கொண்டேன்.
 
இம் மயானத்தை விட பரிசுத்தமான இடம் வேறு எதுவும் இல்லை. மனித சஞ்சாரம் இல்லாததால் இம் மயானம் மிகப் புனிதமானது. எனவே பூதங்களை மயானத்தில் நிறுத்தினேன். அவைகளை விட்டுப் பிரிய மனம் இல்லை. எனவே தவம் செய்பவர்களும், மோட்சத்தை விரும்புவர்களும் பரிசுத்தமான இம் மயானத்தை விரும்புகிறார்கள். வீரர்களில் இடமாக இருப்பதால இதை நான் எனது இடமாகக் கொண்டேன்.
 
காலைப் பொழுதிலும், அந்தி சந்தியிலும், ருத்ர தேவதையான திருவாதிரை நட்சத்திரத்திலும் தீர்க்க ஆயுளை விரும்புவர்கள் செல்லக் கூடாது. இன்னும் என்ன கேட்க விரும்புகிறாய்?
உமை :  உமது நிறம் செம்மட்டை நிறமானதும் விகாரமும் பயங்கரமானதும் சாம்பல் பூசப்பட்டதாகவும் விகாரமான கண்கள் உடையதாகவும் கூரான கோரைப்பற்கள் உடையதாகவும் ஜடை உடையதாகவும் புலியின் தோல் உடுத்தியதாகவும் உமது நிறம் செம்மட்டை நிறமானதும் விகாரமும் பயங்கரமானதும் சாம்பல் பூசப்பட்டதாகவும் விகாரமான கண்கள் உடையதாகவும் கூரான கோரைப்பற்கள் உடையதாகவும் ஜடை உடையதாகவும் புலியின் தோல் உடுத்தியதாகவும் இருப்பது ஏன்?
 
தொடரும்..
                           
                               *வாருணை  – மதிமண்டலத்தில் ஊறும் அமுதம்
               புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

2038 – ஒலியியல் வழியில் மூளையின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தும் திறன்

2038
(SOUND WAVES TO CONTROL BRAIN CELLS)
·         Scientists have developed a new way to selectively activate brain, heart, muscle and other cells using ultrasonic sound waves.
·         This is a new, additional tool to manipulate neurons and other cells in the body.
·         By shining a focused laser on the cells, they can selectively open these channels, either activating or silencing the target neurons.
·         In contrast to light, low-frequency ultrasound can travel through the body without any scattering. This could be a big advantage when you want to stimulate a region deep in the brain without affecting other regions
Ref :
http://zeenews.india.com/news/science/indian-american-scientist-uses-sound-waves-to-control-brain-cells_1798152.html
http://www.salk.edu/news-release/in-first-salk-scientists-use-sound-waves-to-control-brain-cells/
              (இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)
1.
ஒரு சோதனைக்கு உங்க கணவர் எங்களுக்கு தேவைப்படுறார்ஒரு வார காலத்திற்கு கூட்டிகிட்டு போகலாமா?
சோத்த போட்டா எங்க வேணும்னாலும் வரும் அந்த நாயிஇதுக்கு கேள்வி எதுக்குமூளையே கிடையாது   அதுக்குஅதுகிட்ட என்ன சோதனை பண்ணப்போறீங்களோ?
2.
சார், நம்ம படத்துல பல புதுமைகள் செய்திருக்கோம் சார்.
கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம்.
அதாவது சார், நீங்க கதப்படி செவ்வாய் கிரகத்தில இருக்கீங்க, உங்களால எதிரி ராக்கெட்ட கன்ட்ரோல் பண்ணமுடியல, அதனால நாங்க இங்க இருந்து உங்கள கன்ட்ரோல் பண்ணி எதிரி ராக்கெட் ஒயர்  எல்லாத்தையும் பிச்சி,எதிரிராக்கெட்ட சிதைச்சிடுறோம். படப் பேர்சோனாலஜிஸ்டும், வெடித்து சிதறும் சில ராக்கெட்டுகளும்’, சுருக்கமா S-VSSR. உங்களுக்கு 9ம் எண் நல்லா இருக்கும் அப்படீங்கறதால படப்பேர் கூட 18 ல வச்சி இருக்கோம் சார்.
3.
அன்பார்ந்த வாக்காளப் பெருங்குடி மக்களே, ஒலியியல் வழியில் மூளையின் செயல்பாடுகள் கட்டுப்படுத்துவதற்காக உபகரணங்களுக்கு வாரத்தில் 2 நாட்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பதை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளோம்.
4
ரொம்ப சந்தோஷம், வெளியிலே இருந்துஉங்களை யாரோ கண்ட்ரோல் செய்து உங்களை கொல செய்ய வச்சிருக்காங்க’ன்னு சொல்லி, கேச திருப்பி உங்களுக்கு விடுதலை வாங்கி கொடுத்து விட்டேன். எனக்கு பீஸ் எப்ப கொடுப்பீங்க?
என்னா சார் இது, போன தடவ வந்தப்பவே வெளியில் இருந்து கண்ட்ரோல் செய்து உங்க பீஸை வாங்கி கிட்டீங்களே, ஞாபகம் இல்லையா? (யாருகிட்ட )
5.
இந்த ப்ராடெக்ட் தான் பெஸ்ட்ன்னு எப்படி  விளம்பரம் ரெடி பண்றது?
எங்க ப்ராடெக்ட்  பயன்படுத்தி உங்கள் மனைவியை கூட கண்ட்ரோல் செய்யலாம்அப்படீன்னு விளம்பரம் செய்ங்க. அப்புறம் பாருங்க, கூட்டத்த. இதெல்லாம் தெரியாம நீங்க எப்படி தான் விளம்பர  கம்பெனியில வேல பாக்றீங்களோ தெரியல?

Loading

சமூக ஊடகங்கள்

பயன் இயல்

பயன் இயல்

தேனீர் அருந்துதல் என்பது
அத்தனை எளிதானது அல்ல.
‘ஒரு கோப்பைத் தேனீர்’ எனும்
புத்தக வாசிப்பினை உங்களுக்கு தந்திருக்கலாம்;
நினைவுகளில் மூழ்கி இருக்கையில்
தேனீர் பற்றி இருக்கும் சிகரெட்
விரல்களை சுட்ட தருணங்களை
உங்களுக்கு தந்திருக்கலாம்;
தொலைபேசியில் சிரித்துப் பேசியபடி
சந்தோஷங்களை உங்களுக்கு
தந்த தருணமாக இருந்திருக்கலாம்;
யாசிப்பின் மொழி அறிந்து
பெற்ற பெரும் செல்வத்தில்
பசியினை அறுக்க பருகும்
தருணமாக இருந்திருக்கலாம்;
தன்னிடம் இருக்கும் சில சில்லறைகளை ஈந்து
மீதமிருக்கும் சில்லறைகளில்
பிஸ்கோத்து வாங்கி,  நாயிக்குஅளித்து
தானும் அதுவும் ஒன்றாக அமர்ந்து உண்ணும்
தருணமாக இருந்திருக்கலாம்;
மனிதர்களால் விலக்கப்பட்டு
வலிகளின் அடிநாதம் அறிந்து
பிறிதொரு நாளில்
பருகும் கடைசி பாகமாகவும் இருக்கலாம்.
தேனீர் அருந்துதல் என்பது
அத்தனை எளிதானது அல்ல.

புகைப்படம் :  Ram N

 
 

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருஅச்சிறுபாக்கம்

274
தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் –
இறைவன் சுயம்பு மூர்த்தி, சதுரமான ஆவுடையார்
இரண்டு மூலவர்கள் சந்நிதி (அரசரை ஆட்கொண்ட இறைவனுன் உமையாட்சீஸ்வரர், திரிநேத்ரதாரி  முனிவரை ஆட்கொண்ட இறைவன் ஆட்சீஸ்வரர் சந்நிதி)
வித்யுந்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்களின் கோட்டைகளான பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றை தகர்க்க பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்ட இடம். அந்த நேரத்தில் வினாயகரை மறந்தால் அச்சு முறிந்து, பின் தவறை உணர்ந்து அவரை வழிபட வினாயகர் அச்சினை சரிசெய்த இடம்
சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் துவார பாலகர்கள்
அகத்தியருக்கு திருமணக் காட்சி அளித்தத் தலம்
அச்சுமுறி விநாயகர்”  கோவிலுக்கு வெளியே தனி சந்நிதியில் மேற்கு நோக்கி அமர்ந்த காட்சி
பிரமகபால மாலையுடன் பைரவர் காட்சி
திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலம்,திருநாவுக்கரசரின் ஷேத்திரக் கோவையால் குறிப்பிடப்பட்ட தலம்
சரக்கோன்றை மரத்தடியில் பாண்டிய மன்னன் ஒருவனுக்கு ஈசன் காட்சி அளித்தத் தலம்
சித்தர்களின் அருளாணைப்படி பழனிச்சாமி முதலியார் என்பரால் அமைக்கப்பட்ட ஆறுமுகவேலவரின் திருக்கரத்தில் உள்ள வெள்ளியால் செய்யப்பட்ட பழனி ஆண்டவர் சத்ருசங்காரச் சக்கரம்  பொறிக்கப்பட்ட வேலாயுதம்
தலம்
அச்சிறுபாக்கம்
பிற பெயர்கள்
அச்சுஇறுபாகம்
இறைவன்
ஆட்சிபுரீஸ்வரர், உமைஆட்சீஸ்வரர், எமையாட்சீசர் (அச்சேஸ்வரர், அச்சு கொண்டருளிய தேவர்), பார்க்கபுரீஸ்வரர், ஆட்சீஸ்வரர், ஆட்சிகொண்டநாதர், ஸ்திரவாசபுரீஸ்வரர், முல்லைக்கானமுடையார்
இறைவி
இளம்கிளி அம்மை, உமையாம்பிகை, சுந்தரநாயகி, பாலாம்பிகை, மெல்லியலாள், அதிசுந்தரமின்னாள்.
தல விருட்சம்
சரக்கொன்றை
தீர்த்தம்
தேவ தீர்த்தம், சூரிய தீர்த்தம், சங்கு தீர்த்தம், சிம்ம தீர்த்தம்
விழாக்கள்
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
அருள்மிகு ஆட்சீஸ்வரர் சுவாமி திருக்கோவில்
அச்சிறுபாக்கம் அஞ்சல்
மதுராந்தகம் வட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN – 603301
வழிபட்டவர்கள்
கண்வ முனிவர், கௌதம முனிவர், திரிநேத்ரதாரி முனிவர்
பாடியவர்கள்
அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் – 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
மேல்மருவத்தூரில் இருந்து 4 கி.மி
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 271 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் 29  வது தலம்.
ஆட்சீஸ்வரர்
ஆட்சீஸ்வரர்
 
இளங்கிளி அம்மை
 
இளங்கிளி அம்மை
புகைப்படம் : தினமலர்

பாடியவர்           திருஞானசம்பந்தர்         
திருமுறை         1                     
பதிக எண்          077        
திருமுறை எண்    8         
பாடல்
 
கச்சுமொள்வாளுங் கட்டியவுடையர் கதிர்முடிசுடர்விடக் கவரியுங்குடையும்
பிச்சமும்பிறவும் பெண்ணணங்காய பிறைநுதலவர்தமைப் பெரியவர்பேணப்
பச்சமும்வலியுங் கருதியவரக்கன் பருவரையெடுத்ததிண் டோள்களையடர்வித்
தச்சமுமருளுங் கொடுத்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

பொருள்
இத்தலத்து இறைவன், இறைவர் ஒளி பொருந்திய வாளைக் கச்சிலே பொருத்தி இடையில் ஆடையாகக் கட்டியுள்ளவர், ஒளி பொருந்திய முடி சுடர்விடக்கவரி, குடை, பீலிக்குஞ்சம் முதலியவற்றோடு பெண்களைக் கவரும் பிறை மதியை முடியிற்சூடி விளங்குபவர்.பெருமை உடைய அடியவர் தம்மை விரும்பி வழிபடுமாறு, தம் அன்பு வலிமை ஆகியவற்றைக் கருதித்தன்னைப் பெரியவனாக எண்ணிப் பெரிய கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் தோள்களை அடர்த்து அவனுக்குத் தம்பால் அன்பையும் அருளையும் கொடுத்த எம் அடிகள் ஆவார். அப்படிப்பட்ட இறைவன் அச்சிறுபாக்கத்தில் உறையிம் ஆட்சிபுரிஸ்வரர் ஆவார்
பாடியவர்           திருஞானசம்பந்தர்         
திருமுறை         1                     
பதிக எண்          077        
திருமுறை எண்    9  
பாடல்
நோற்றலாரேனும் வேட்டலாரேனு நுகர்புகர்சாந்தமொ டேந்தியமாலைக்
கூற்றலாரேனு மின்னவாறென்று மெய்தலாகாததொ ரியல்பினையுடையார்
தோற்றலார்மாலு நான்முகமுடைய தோன்றலுமடியொடு முடியுறத்தங்கள்
ஆற்றலாற்காணா ராயவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.
பொருள்
அச்சிறுபாக்கத்தில் உறையும் ஆட்சீஸ்வரர் தவம் செய்பவராக இல்லாவிட்டாலும், பிறரிடத்தில் அன்பு செய்பவராக இல்லாவிட்டாலும், வாசனை தரும் சந்தனமுடன் கையினில் மாலை ஆகிய முறைகளில் வழிபாடு செய்யாதவராக இருப்பினும் இவர் இவ்வாறானவர் எனப் பொருள் கொள்ளார். அறியமுடியாத தன்மையும் அடைய முடியாத அருமையும் உடைய இயல்பினராய் மாலும் நான்முகனும் பன்றியும் அன்னமுமாய்த் தோன்றி அடியையும் முடியையும் தங்கள் ஆற்றலால் காண இயலாதவாறு உயர்ந்து நின்றவர் எம்அடிகள்.
கருத்து
 
·         தவம் செய்வதும், மாலைகளுடன் பூசை செய்தலும் எதிர் எதிர் நிகழ்வுகள், ஒன்று புறப்பூசை, மற்றொன்று அகப்பூசை. இறைவன் இரண்டையும் கடந்தவர்.
·         நோற்றலார் – தவஞ்செய்யாதவர். வேட்டலார் – யாகஞ் செய்யாதவர்கள்

Loading

சமூக ஊடகங்கள்

IT – தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள் – 2

தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள்_KP

தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள் – செயற்கையாக உருவாக்கப்படவை.
 

வாழ்வின்அனைத்து விஷயங்களும் (சந்தோஷம் துக்கம் உட்பட)  பொருளாதாரம் சார்ந்து இருப்பதே வாழ்வின் முக்கியமான வலி.

தேசத்தில்சில நிறுவனங்கள் ஏமாற்றம் செய்யும்தற்பொழுது பெரும்பாலான ஒன்றாக கூடி ஏமாற்றும் வேலையை செய்கின்றன. அதன் பொருட்டே accelerated depreciation.
<< 
Accelerated depreciation is a depreciation method whereby an asset loses book value at a faster rate than the traditional straight-line method. Generally, this method allows greater deductions in the earlier years of an asset and is used to minimize taxable income.
>> 
ஒரு நிறுவனம் ஏன் இதை மேற்கொள்கிறது?
இதன் மூலம் (உண்மை நிலை தவிர்த்து) நிறுவனத்தின் சொத்து மதிப்பு குறைத்துக் காட்டப்படுகிறது.
மேலும் இது வரிகளையும்  வருமானங்களையும் கருத்தில் கொண்டு இவ்வழி பாதுகாப்பு செய்கிறது..
இதம் மூலம் அதிக தேய்மான செலவுகள், குறைவான நிகர லாபம் தருகின்றன. உதாரணத்திற்கு 20 வருடங்களுக்கு கணக்கு காட்டி தேய்மானம் குறிப்பிடபட வேண்டிய நிறுவனங்கள் 10 வருடத்தில் அதை கணக்கில் காட்டி விடுகின்றன.

Subsequently, the government put out a draft roadmap that sought to rationalize exemptions such as those given to aid scientific expenditure, capital expenditure and the benefits of accelerated depreciation—mainly benefitting sectors like infrastructure and information technology and those who undertake research and development activities in India. [1]

2013 – 2014 ம் ஆண்டில் வரிகளின் இழப்பு தோராயமாக 57,793 கோடி. இது 2014 – 2015ம் ஆண்டில் 62,399 கோடியாகஉயர்ந்துள்ளது[2]

கடந்த 5 வருட காலங்களில்  மிகப் பெரிய நிகர லாபம் ஈட்டிய அனைத்து நிறுவங்களும் தங்களது வரவு செலவு கணக்கில் மிகப் பெரிய நஷ்டம் சந்தித்ததாகவே குறிப்பிடுகின்றன. இது இந்தியாவில் உள்ள பெரும்பாலான இந்திய தொழில் நுட்பம் சார்ந்த நிறுவங்களுக்கும்  இது பொருந்தும்.
அதாவது10 ஆண்டுகளில் பெறவேண்டிய பணம் முழுவதையும் 5 ஆண்டுகளில் சம்பாதித்து 5ம் ஆண்டு முடிவில் தாங்க முடியா நிதி நிலைமை காரணமாக மூடி விடுவதாக கூறுகின்றன நிறுவனங்கள். (அதாவது மூடிய பின் வந்த லாபத்தை கொண்டு வேறு நிறுவனம் ஆரம்பித்து விடுவார்கள். )

குறிப்புரை இணையங்கள்

 
புகைப்படம் : Karthik Pasupathi
 

Loading

சமூக ஊடகங்கள்

ப்ரியங்கரீ

ப்ரியங்கரீ_Pawan
பஞ்ச பூதக் கவிதைகள் – பெண் தெய்வங்கள் – முன்வைத்து – நீர்
யாரும் அற்ற தனிமை என்பதே இல்லை
நினைவுகள் இருக்கும் வரை
என அறிந்தே
குப்பைக் காட்டினில்
தனித்திருக்கிறேன்.
கண் முன்னே மெல்லிய ஆடை ஒன்று
பற்றி எரிகிறது.
கண்கள் வியப்புறுகின்றன.
என்னைத் தெரியவில்லையா
என்கிறது அந்த ஆடை.
‘உன்னில் என்னைக் கண்டிருந்தாய்
காலமாற்றத்தில்
நீயும் நானும் விலகினோம்’ என்கிறது.
வாக்கியத்தின் முடிவில்
மற்றொரு ஆடை பற்றி எரிகிறது.
மீண்டும் கண்கள் வியப்புறுகின்றன.
என்னைத் தெரியவில்லையா
என்கிறது அந்த ஆடையும்.
ஆடைகளும், காகிதங்களும்
குப்பைகளும் பெரும் தீ உண்டாக்கி
பற்றி எரியத் துவங்குகின்றன.
ஜுவாலையின் விளிம்புகள்
தேகம் தீண்டுகின்றன.
‘எரிவது நானா, ஆடையா, பிற பொருள்களா’
கேள்விகள் எழுகின்றன.
எழும் கேள்வினை உறுதி செய்ய
பெரு மழை ஒன்று
பூமியினை நனைக்கிறது.
யார் நீஎன்கிறேன்.
பிரளயங்களுக்கு உரித்தானவள் என்கிறாள்அவள்
பின்னொரு பொழுதுகளில்
நீரில் கரைந்திருந்தது மற்றொரு உடல்.
 
புகைப்படம் : இணையம்
ப்ரியங்கரீ – அன்பு செய்பவள். 

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 1

உமாமகேஸ்வரஸம்வாதம்
(

இந் நிகழ்வுகள் மகாபாரதம் அனுசாஸன பர்வத்தில் இடம் பெற்றுள்ளவை
தொடக்கம் 204 அத்யாயம்.
கூடி இருக்கும் ரிஷிகள் கிருஷ்ணரை பார்த்து ‘உலகில் ஆச்சரியமானது ஒன்றை நீங்கள் கண்டிருந்தாலும்கேட்டிருந்தாலும் அதை உரைக்க வேண்டும்‘ என்றனர்.
நான் மானிட வடிவத்தில் இருப்பதால் எதுவும் உரைப்பதிற்கு இல்லைஅதனால் என் அறிவும் வரையறைக்கு உட்பட்டது என்றார்.
எனவே ரிஷிகள் அனைவரும் நாரதரே உக்கிரமான தவம் உடையவர்கிருஷ்ணருக்கு அன்பானவர்பழைய சரித்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் என்று நிச்சயித்து அவரை அணுகினார்கள்

அவர் உமா மகேஷ்வர ஸம்வாதம் குறித்து சொல்லத் தொடங்கினார்.

)

உமை : பகவானே உமது கீழ்திசை முகம் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறதே, வடக்கு மற்றும் மேற்கு திசை முகங்கள் பார்க்க அழகாக இருக்கிறது, தென் திசை முகம் ஜடைகளால் மூடப்பட்டு பயங்கரமாக இருக்கிறது அது ஏன்?
சிவன்    : கிழக்கில் உள்ள முகம் எப்பொழுதும் தவம் செய்து கொண்டிருக்கும்; தென் திசை முகம் பிரஜைகளை(உயிர்களை) சம்ஹாரம் செய்யும். மேற்கு திசை முகம் எப்பொழுதும் ஜனங்களின் காரியங்களை கவனித்துக் கொண்டிருக்கும். வட திசை முகம் எப்பொழுதும் வேதம் ஓதிக் கொண்டிருக்கும். இதன் காரணமாகவே வெவ்வேறு திசை முகங்கள் வெவ்வேறு விதமாக இருக்கிறது. இன்னும் என்ன கேட்க விரும்புகிறாய்?
உமை :    உமது கழுத்து மயில் போன்று கரு நீலம் உடையாதாக இருப்பது எதனால்?  
சிவன்  : முன்னொரு யுகத்தில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த பொழுது எல்லா உலகங்களையும் அழிக்கும் விஷம் உண்டாயிற்று. தேவர்கள் முதலானவர்கள் அதைக் கண்டு அஞ்சினர். லோகத்தின் நன்மைக்காக அந்த விஷத்தை நான் அருந்தினேன். அதனானே தான் என் கழுத்து நீல நிறமானது, அதனாலே எனக்கு நீல கண்டன் என்ற பெயர் ஏற்பட்டது. இன்னும் என்ன கேட்க விரும்புகிறாய்?
உமை அனேக ஆயுதங்கள் இருக்க நீர் ஏன் பினாகத்தை வைத்து கொள்ள கருதுவது ஏன்?
சிவன்  : முன்னொரு காலத்தில் கண்வர் என்னும் மகரிஷி ஒருவர் இருந்தார். கடுமையாக தவம் செய்ததன் காரணமாக அவர் தலையில் நாளடைவில் புற்று உண்டானது.அதிலிருந்து மூங்கில் முளைத்தது.  அதனை பொறுத்துக் கொண்டு அவர் தனது தவத்தினை தொடர்ந்து செய்து வந்தார். தவத்தினால் பூஜிக்கப்பட்ட பிரம்ம தேவர் அவருக்கு வரம் அளித்து பின் அந்த மூங்கிலை எடுத்து வில்லாக செய்தார். என்னிடத்திலும் விஷ்ணுவிடத்திலும் சாமர்த்தியம் இருப்பதை அறிந்து இரண்டு வில் செய்து எங்களிடம் அளித்தார். பினாகம் என்பது என் வில். சார்ங்கம் என்பது விஷ்ணுவின் வில். அவ்வாறு செய்தது போக மீதமிருந்த மூங்கிலையும் வில்லாக செய்தார். அதுவே காண்டீவம். குற்றம் அற்றவளே, இந்த ஆயுதங்களின் வரலாற்றை உனக்குச் சொன்னேன், இன்னும் என்ன கேட்க விரும்புகிறாய்?
உமை வேறு வாகனங்கள் இருக்கையில் நீங்கள் ஏன் ரிஷபத்தை வாகனமாக கொண்டுள்ளீர்கள்?
தொடரும்
*வாருணை  – மதிமண்டலத்தில் ஊறும் அமுதம்
புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

வினை ஒறுத்தல்

ஊன் எங்கும் ஆரத் தழுவி இருக்கின்றன
தழும்புகள்
கண்ணுக்கு தெரியா காலமொன்றில்
ஒன்று தான் இருந்தது.
காலமாற்றத்தில் பெருகிப் போனது.
ஆடை ஒன்றை அணிகிறேன்
ஆடைகள் பல்கி பெருகுகின்றன.
பிறிதொரு நாளில்
காயங்கள்

முற்றுப் பெருகின்றன
நான் நிர்வாணமாகிறேன்.

வினை ஒறுத்தல் –  வினை அனைத்தையும் அழித்தல்
புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

IT – தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள்

தகவல் தொழில் நுட்பம் – தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள்
 
தகவல் தொழில் நுட்பம் அதன் தனித் தன்மையை இழந்து வருவது அனைவரும் அறிந்ததே.
பொருளாதார போட்டிகள்
உலகெங்கிலும் பொருளாதார முரண்பாடுகளாலும், உலகமயமாக்கல் காரணமாகவும் வளர்ச்சி பெற்றது தகவல் நுட்பத் துறை. மேல் மட்டத்தில் இருக்கும் தலைவர்களாலும், போட்டி காரணமாகவும்   வியாபார நெறிமுறைகள் அனைத்தும் களைந்து போட்டி ஆரம்பம் ஆகிறது.
உதாரணமாக தொடர்ந்து 5 வருடங்களாக ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்துடன்    வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கலாம். அதில் 10% அதிகரித்து ஒவ்வொரு வருடமும் வியாபாரம் நடக்கும்.
புதியதாக சந்தையில் நுழையும் ஒரு நிறுவனம் வியாபாரம் பெருகுவதற்காக முன் குறிப்பிட்ட நிறுவனத்துடன் மிக குறைவான விலை குறிப்பிட்டு வியாபாரத்தில் பங்கெடுக்கும்.
இதில் இரண்டு பொருளாதார பாதகங்கள்
·         முதல் நிறுவனம் தனது 5 வருட வியாபார வாழ்வினை இழந்திருக்கிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் அதில் வேலை பார்ப்பவர்கள்,
·         இரண்டாவதாக புதியதாக சந்தையில் நுழைந்த நிறுவனம் இதில் ஏற்படும் குறைக்கப்பட்ட பண பரிமாற்ற அளவிற்காக இருக்கும் தனது ஆட்களிடம் மிக அதிக வேலை பளுவினை அதிகரிக்கும்.
உதாரணத்திற்கு கீழ் கணக்கினை எடுத்துக் கொள்வோம்.
முதல் நிறுவனம் வியாபாரம்
முதல் வருடம்          110000
இரண்டாம் வருடம்       121000
மூன்றாம் வருடம்        133100
நான்காம் வருடம்         146410
ஐந்தாம் வருடம்         161051
ஐந்தாவது வருடத்தில் இரண்டாவது நிறுவனம் தனது வியாபாரம் ஆரம்பிப்பதாக கொள்வோம்.
‘சார், நீங்க நம்ம கம்பெனிக்கு 100000 குடுங்க, உடனே வியாபார ஒப்பந்தம் போட்டு விடலாம்’ என்பார்கள்.
இவ்வாறான பொருளாதார போட்டிகள் இரு நிறுவனங்களில் இருந்தும் ஆட்களை குறைத்து பெரும்பாலானவர்களை வீட்டுக்கு அனுப்புகின்றன.
மற்ற துறைகளில் இது இல்லையா என்பவர்களுக்கு – தகவல் தொழில் நுட்ப துறை சார்ந்த பொருளாதார போட்டிகள் கைப்புண் கண்ணாடியாக இருக்கின்றன.
தொடரும்…
புகைப்படம் : Karthik Pasupathi

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும்

( நீண்ட கால விருப்பம் இது. இது குறித்து எழுத நினைக்கும் போதெல்லாம் இதன் எல்லை அற்ற விரிவு என்னை மௌனமாக்கி விடும். காரணங்கள் அற்று ஒரு உந்துதலில் இதை எழுத ஆரம்பித்திருக்கிறேன். இதனை எழுத எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் நீக்க மற நிறைந்திருக்கும் சிவனும், சக்தியும், சிவனுக்கு நிகரா இருப்பினும் என்றும் தன்னை தன்னை வெளிப்படுத்தாது அருள் காட்டும் எனது குருவருளும் துணை செய்யட்டும் )
இந் நிகழ்வுகள் மகாபாரதம் அனுசாஸன பர்வத்தில் இடம் பெற்றுள்ளவை
தொடக்கம் 204 அத்யாயம்.
கூடி இருக்கும் ரிஷிகள் கிருஷ்ணரை பார்த்துஉலகில் ஆச்சரியமானது ஒன்றை நீங்கள் கண்டிருந்தாலும், கேட்டிருந்தாலும் அதை உரைக்க வேண்டும்என்றனர்.
நான் மானிட வடிவத்தில் இருப்பதால் எதுவும் உரைப்பதிற்கு இல்லை, அதனால் என் அறிவும் வரையறைக்கு உட்பட்டது என்றார்.
எனவே ரிஷிகள் அனைவரும் நாரதரே உக்கிரமான தவம் உடையவர், கிருஷ்ணருக்கு அன்பானவர், பழைய சரித்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் என்று நிச்சயித்து அவரை அணுகினார்கள்.
அவர் உமா மகேஷ்வர ஸம்வாதம் குறித்து சொல்லத் தொடங்கினார்.
ஒரு முறை அனைத்தும் அறிந்த தேவி, விளையாட்டாக சிவனின் கண்களை மூடினார். உலகத்தினை நிறைவு செய்யும் பிரளம் போன்ற நிகழ்வு உண்டானது. எனவே சிவனிடத்தில் இருந்து பிரளயாக்கினிக்கு நிகரான ஒளி நிரம்பிய மூன்றாவது கண் உண்டானது.
அந்த ஒளி இமயமலையை எரித்துவிட்டது. இதனால் உமை துயருற்றாள். சிவன் குளிர்ந்த மனத்துடன் மீண்டும் இமயமலையை முன்போல் தோற்றுவித்தார்.
உமை : பகவானே, இது எனக்கு மிகவும் ஆச்சரியம் ஊட்டுவதாக இருக்கிறது. அக்கினி என்பிதாவான இமயமலையை எரித்து விட்டது, மீண்டும் நீங்கள் பார்த்தவுடன் அது முன்போல் ஆனது. அது எவ்வாறு?
சிவன் : நானே எல்லா உலகங்களுக்கும் முதல்வன் என்றறி. எல்லா உலகங்களும் விஷ்ணுவுக்கு எப்படியோ அப்படியே எனக்கும் உட்பட்டவை. விஷ்ணு படைப்பவர், நான் காப்பவன். சிறுமி ஆகிய நீ இதை அறியாமல் என் கண்களை மூடினாய்.சந்திர சூரியர்கள் இல்லாமையால் உலகம் இருளில் மூழ்கியது. எனவே உலகை காக்க மூன்றாவது கண்ணை தோற்றுவித்தேன்.
(யோக மார்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் மூன்றாவது நேத்ரம் எத்தனை முக்கியமானது என்று அறிவார்கள். இது குறித்து குருமுகமாக அறிக.)
உமை : பகவானே உமது கீழ்திசை முகம் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறதே, வடக்கு மற்றும் மேற்கு திசை முகங்கள் பார்க்க அழகாக இருக்கிறது, தென் திசை முகம் ஜடைகளால் மூடப்பட்டு பயங்கரமாக இருக்கிறது அது ஏன்?
தொடரும்
*வாருணை  – மதிமண்டலத்தில் ஊறும் அமுதம்
புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 25/25 கங்காதர மூர்த்தி

·         வாமதேவ முகத்தில் இருந்து தோன்றிய வடிவம்
·         பாவங்கள் விலக்கும் மூர்த்தம்
·         பகீரதனின் வேண்டுகோளை ஏற்று விண்ணுலகிலிருந்து பூமிக்கு வந்த இமவானின் மூத்தமகளாகக் கருதப் படும் கங்கையை தன் சடைக் கற்றையில் தரித்துள்ள சிவனின் வடிவம்
வடிவம்
·         யோகபட்டம்
·         ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்த கோலம்
·         விரிசடையில் ஆமை, மீன், முதலை போன்ற உயிரினங்களோடு கங்கையின் திருமுகம் கரங்கள் மான், மழு, சின் முத்திரை, கீழ்க் கை வரத முத்திரை
·         வேறு வடிவம் – கங்காதரமூர்த்தி நான்கு கரங்கள் (சதுர்புஜம்), நின்ற நிலையில் (ஸ்தானகநிலை) மூன்று பங்கங்களுடன் (திரிபங்க நிலையில்) முன் வலது கை அபய கர கீழ்நோக்கி, பின் வலது கை அக்கமாலை, பின் இடது கை சடாமுடியின் சடையை பிடித்தவாறு. இடது புறம் கங்கை மண்டியிட்டு வணங்கிய நிலையில் சிவனின் சடை முடியை நோக்கி வருவது போன்ற வடிவம். கந்தஹாரம் வாஸ்த்ரா யக்ஞோபவீதம், கேயூரம், கங்கணம் அணிந்திருக்கும்.
வேறு பெயர்கள்
·         கங்கைப் புனலுடையான்
·         கங்கையைப் பெற்றவன்
·         கங்கையைக் கறந்தான்
·         புனலுடையான்
·         கங்கையை அங்கே வாழவைத்த கள்வன்
வடிவம் அமையப் பெற்ற கோயில்கள்
·         காஞ்சி கைலாசநாதர் கோயில்
·         மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோயில்
·         புதுக்கோட்டை கோகர்ணேஸ்வரர் கோயில்
·         திருச்சி  உச்சிப் பிள்ளையார் கோயில்
பிற குறிப்புகள்
·         இது யோக மார்கத்தில் இறை வழிப்பாடு செய்வதைக் குறிக்கும். துரியாதீதத்தில் இருந்து அருள் ஆற்றல் பெறுவதை குறிப்பிடுகின்ற வடிவம்.
·         மகாபாரதத்தில் பகீரதனின் கதை விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

(வேறு குறிப்புகள் இருந்தால் தெரியப்படுத்தவும்)
 
புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

தீப்புகு விட்டில்

பாரம் கடந்த இரவொன்றை
இருவர் கடந்தனர்
அவனுக்கான பயணம் கிழக்கானது
அவளுக்கான பயணம் மேற்கானது.
வரும் காலங்களின் திட்டங்களோடு அவன்;
கடந்த காலங்களின் அசைவுகளோடு அவள்.
குளிர் இடத்தில் வளரும் போன்சாய்
மரங்களின் இலைகளை வருடியபடி அவன்.
மாற்றம் கொண்ட
குளிர் இடத்தில் வளரும் பாம்பூ
செடிகளின் இலைகளை வருடியபடி அவள்.
நாளொன்றின் முடிவில்
பாரம் கடந்த பகலொன்றை
இருவரும் கடந்தனர்.
பின்னொரு பொழுதுகளில்

இருள் தனித்து இருந்தது.

* தீப்புகு விட்டில் – நெருப்பில் புகுந்த விட்டில் பூச்சி  – திருவாசகம் / நீத்தல் விண்ணப்பம்
புகைப்படம் : Jothi Vel Moorthi 

Loading

சமூக ஊடகங்கள்