பொது வலி


கட்சிக் கொடி ஏந்தி
கடைசியாக நின்று
கத்துகையில்
கல்லான மனதுக்குள்
கண்ணீர் மழை
ஏழையாக இருப்பதை அறிகிறதா
பாழும் வயிறு

Loading

சமூக ஊடகங்கள்

இடம்


சுடுகாட்டுச் சுவற்றில்
எழுதப்பட்டிருந்தது
பிறப்பினை பதிவு செய்யவும்

Loading

சமூக ஊடகங்கள்

காவல் தெய்வங்கள்


காக்கதான் தெய்வங்கள் எனில்
எனது திருமணத்தின் போது
எங்கே சென்றிருந்தன?

Loading

சமூக ஊடகங்கள்

வலி


பள்ளிக் கட்டணம்
கட்ட கடைசி நாள்
மகள் சொல்கையில் வலித்தது
கவிஞனாய் இருப்பதின் வலி

Loading

சமூக ஊடகங்கள்

அமுத தாரகைகள்


உங்கள் வீடு
உடைக்க படுகையில்
ஓரு கல்லாவது எடுத்து வையுங்கள்
பிறிதொரு சந்ததி
உங்கள் வீட்டை உடைக்கையில்
வலியை உணர்த்த உதவும்

Loading

சமூக ஊடகங்கள்

இடமும் பொருளும்

ஊடல் கொண்டு நீ
உணவு பரிமாறிய வேளையில்
ஓற்றைக் கேசம்

Loading

சமூக ஊடகங்கள்

மகளின் விளையாட்டு


துப்பாக்கி காட்டி
துரத்தியபோது
வலிப்பதாய் நடித்து
கீழே விழுந்தேன்

துப்பாக்கியை என் கையில் கொடுத்து
உன்னை சுடச் சொன்னாய்
விழுந்தது என் உயிர்

Loading

சமூக ஊடகங்கள்

கவிதையின் கருப்பொருள்கள்


எல்லா நிலைகளிலும்
வெளிப்படுகின்றன கவிதைகள்.
எண்ண ஓட்டத்திலும்
எதிர் கொள்ளும் வெற்றியிலும்
கவிதைக்கான கருப்பொருள்கள்.
வெற்றியிலும் பாராட்டிலும்
வெறுமைக்கான நிமிடங்களிலும்
சந்தோஷத்தின் சாயல் காட்டும்
சக தர்மினியிடமும்
உணர்வுகளை உள்வாங்க
துவங்கிய வேலைகளில்
உள்ளிருந்து ஒலிக்கிறது குரல்
நாலு காசு சம்பாதிக்க வக்கிலைனாலும்
நாற்பது பக்கம் எழுதுவாரு உங்கப்பாரு.

Loading

சமூக ஊடகங்கள்

மிதிபடுதல்


மயான வீதியில்
மிதிபடுகின்றன
பூக்களும், நினைவுகளும்

Loading

சமூக ஊடகங்கள்

வீடு


இறந்தவன் வீட்டினில்
மணி அடித்தது
சுவர் கடிகாரம்

Loading

சமூக ஊடகங்கள்

சந்தோஷத்தின் சாயல்


காய்கறி விற்பவளின்
இடிப்பினில் இருக்கும் குழந்தை
கைகளை ஆட்டியபடி சொன்னது
ஜிங்கிலி ஜிங்கிலி

Loading

சமூக ஊடகங்கள்

செய்தி


குடுகுடுப்பைகாரனின்
கையினில் இருக்கும் கைப்பேசி
யாருக்கு செய்தி சொல்ல?

Loading

சமூக ஊடகங்கள்

தலை நிமிர்ந்த மிருகங்கள்


உற்ற பொருள் தேடி
உரெல்லாம் பயணம்
விதை துளிர்க்க துவங்குகையில்
உறுமாறும் வெறுமை
துளிர்தல் தாண்டி துளைத்தல் நிகழும்
ம்ண்ணின் கீழ் வேர்களாய்
துளிர்தவை பரவுதலில்
பரவசம் ஏற்படுத்தும்
அதையும் தாண்டி அனைத்தும் மாறும்
பூக்களாய் கனிகளாய்
காலத்தின் மாற்றத்தால்
நிலைப்புகள் நீக்கம் கொள்ளும்
விழ்ந்து கிடக்கும் பொருள் தேடி
விரையும் காகங்கள்
கவிதையும் கவிதை சார்ந்த இடமும்
பசியோடு ஆயினும்
கவிஞன் என்னும் கர்வத்தோடு
தலை நிமிர்ந்து நிற்கும் மிருகங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

இருக்கும் இடம்


குப்பை பொறுக்குபவள்
கூந்தல் நிறைய
மல்லிகைப் பூக்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

வாசனைகள்


எப்போதாவது பூக்கின்றன
குறிஞ்சிப் பூக்கள்.
தாயின் மடியினில் இருந்து
தலையசைக்கின்றன சில பூக்கள்.
கைகளை அகல விரித்து
கண்களைக் காட்டி
பயமுறுத்துகின்றன சில பூக்கள்.
முடிவில்லா பயணத்தில்
முழுநீள புன்னகையோடு சில பூக்கள்.
பூக்களின் சிந்தனையில்
பூரணமான வலி வயிற்றினில்
கருமை நிறைந்த இரவுப் பொழுதினில்
எங்கு சென்று தேடுவது
மளிகைக் கடையையும் மருந்துக் கடையையும்
எப்பொதும் பூக்கின்றன
காட்டுச் சாமந்திகள்

Loading

சமூக ஊடகங்கள்

ஒரு மாதிரி


சூழ்ந்து செல்லும் ஆறு,
சுழன்று வீசும் காற்று,
கண்களுக்கு இனிய பசுமை,
காதுகளுக்கு இனிய ஒலிகள்,
மனதுக்கு இனிய வாசம்
சந்தோஷத்தின் சாயலில் ஏற்றுக் கொண்ட போது
ஒரு மாதிரி என்றார்கள்.
கால சுழற்சியில் மாறின காட்சிகள்
மூடின கண்கள், சாயல் அற்ற நினைவுகள்
சதா சர்வ காலமும் ஏகாந்ததில் திளைப்பு
இப்பொழுதும் கூறுகிறார்கள் ஒரு மாதிரி
எப்படிதான் வாழ்வது என்ற கேள்விக்கு
எவருமே விடையளிக்கவில்லை.

Loading

சமூக ஊடகங்கள்

கவிஞன்

ஏதோ ஒரு கணத்தில்
நிகழ்த்து விடுகிறது கவிதைக்கான நிகழ்வு
கவிஞனுக்கான் முகவரியில்
காணக் கிடைக்கின்றன
நீண்ட தாடியும், நீளமான முடியும்
உலர்ந்த தேகமும், உறுதியான மனமும்
மானம் மிகுந்த கவிஞன்
விளிக்கிறது வெளி உலகம்
மானம் கெட்ட உனக்கு என்ன வாழ்வு
விளிக்கிறது உள் உலகம்
வலிகளற்ற கவிஞன் யார்?

Loading

சமூக ஊடகங்கள்

கலைஞன்


ஏதோ ஒரு கணத்தில்
வந்து விடுகிறது
வயிற்றுக்கும் கைகளுக்குமான போட்டி
மயிர் நீப்பீன் உயிர் வாழா கவரிமான்
மானம் கெட்ட வயிற்றுக்கு தெரிகிறதா என்ன
வயிற்றுக்கான வலிகளில்
கைநீட்டி யாசகம் கேட்க எத்தனிக்கையில்
எதிர்படுகின்றன வார்த்தைகள்
அவன் பிறவிக் கலைஞன்
பிழைப்புக்காக கை ஏந்துவானா?
அடை மழை வந்து நனைக்கிறது
வயிற்று நெருப்பின் வலிகளை.

Loading

சமூக ஊடகங்கள்

ஐயனார்


யாருமற்ற இடத்தில் ஐயனார்
கைவிடப்பட்ட வயதான மனிதர்களின்
வலியும், வலி சார்ந்த நினைவுகளுடன்

Loading

சமூக ஊடகங்கள்

பொம்மைகள்


அறை நிறைய பொம்மைகள் கொட்டிகிடந்தன
குழந்தை சொன்னது
எனக்கு விளையாட பொம்மைகளே இல்லை என்று

Loading

சமூக ஊடகங்கள்