
ஏதோ ஒரு கணத்தில்
நிகழ்த்து விடுகிறது கவிதைக்கான நிகழ்வு
கவிஞனுக்கான் முகவரியில்
காணக் கிடைக்கின்றன
நீண்ட தாடியும், நீளமான முடியும்
உலர்ந்த தேகமும், உறுதியான மனமும்
மானம் மிகுந்த கவிஞன்
விளிக்கிறது வெளி உலகம்
மானம் கெட்ட உனக்கு என்ன வாழ்வு
விளிக்கிறது உள் உலகம்
வலிகளற்ற கவிஞன் யார்?