வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 10

உமாமகேஸ்வரஸம்வாதம்

உமை
சில மனிதர்கள் பிறந்தது முதல் மற்றும் சிலர் பிறந்த பின்னர் ஏதோ ஒரு காரணத்தால் பல், கழுத்து கன்னம் ஆகியவற்றில் நோயுள்ளவர்களாகவும் முகத்தில் அதிக வியாதி உடையவர்களாகவும் காணப்படுகின்றனரே அது ஏன்?

சிவன்
நாவினால் மிக்க கடும் சொற்களையும், மற்றவர்களிடத்திலும், பெரியவர்களிடத்திலும் பொய்யையும், கொடும் பழியைச் சொல்லுகிறவர்களாகவும், கோபம் கொண்டவர்களாகவும், தன்னுடைய காரியத்திற்காக பொய்யை மிகுதியாக சொல்லுகிறவர்களாகவும் இருக்கும் மனிதர்களுக்கு நாவினால் பிணிகள் உண்டாகின்றன. கெடுதலை கேட்பவருக்கும், பிறர் செவிகளை கெடுப்பவருக்கும் பலவைகயான காது நோய்களை அடைகின்றனர். பல் நோய், தலை நோய், காது நோய் அனைத்தும் வினையின் பயனே.

உமை
மனிதர்களிலே சிலர் மார்பு நோய், பக்க சூலை, வயிற்று நோய் மற்றும் உள்ள கொடிய சூலை நோயினால் பீடிக்கப்பட்டு துன்பப்படுகின்றனரே, அது ஏன்?

சிவன்
எந்த மனிதர்கள் முன் ஜென்மங்களில் காமக் குரோதம் கொண்டவர்களாகவும், பிறருக்கு அளிக்காமல் தானே ஆகாரத்தினை உண்பவர்களாகவும், நம்பியவர்களுக்கு உண்ணத்தகாத உணவுகளையும் விஷத்தையும் கொடுத்தும் ஆசாரங்களை விட்டவர்களாகவும் இருப்பவர்கள் பின் ஏதாவது ஒரு முறை மனித பிறப்பு எடுக்கும் போது பலவிதமான பிணிகளால் துயர் பெறுகின்றனர். அவர்கள் இப்படி ஆவதற்கு காரணத்தை முன்னமே செய்து கொண்டனர்.

உமை
மனிதர்கள் கல்லடைப்பு, மது மேகம் போன்ற ஆண் உறுப்பு சார்ந்த வியாதிகளால் துயருருகின்றனரே, அது ஏன்?

சிவன்
எந்த மனிதர்கள் முன் ஜென்மங்களில் காமத்தினால் பிறன் மனைவிகளை சேர்ந்தும், விருப்பம் இல்லாத விதவைப் பெண்களுடன் பலவந்தமாக சேர்ந்தும், அழகினால் கர்வப்பட்டும் இருக்கும் மனிதர்கள் மரணமடைந்து பின்னொரு பிறவியில் மனித பிறவி எடுத்து ஆண் உறுப்பு சார்ந்த வியாதிகளால் துயருருகின்றனர்

உமை
சில மனிதர்கள் இளைத்தவர்களாக காணப்படுகின்றனரே, அது ஏன்?

சிவன்
எந்த மனிதர்கள் முன் ஜென்மங்களில் மாமிச உணவை மிக விருப்பி உண்டும், தனக்கு மட்டும் சுவை உள்ள உணவை விரும்பியும், மற்றவர்கள் புசிப்பதை கெடுப்பவர்களாகவும், அயலார் சுகங்களில் பொறாமை கொண்டவர்களாகவும் அதனால் துயரம் உடையவர்களாகவும் இருந்த மனிதர்கள் பின் ஜென்மத்தில் தேக சார்ந்த வியாதி உள்ளவர்களாக நரம்பு தளர்ச்சி உடையவராக இருத்து தீவிர பலனை அனுபவிக்கின்றனர்.

உமை
சில மனிதர்கள் தொண்டை நோய் உடையவர்களாக இருந்து துன்பப்படுகின்றனரே, அது ஏன்?

தொடரும்..

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 9

உமாமகேஸ்வரஸம்வாதம்

ஓவியம் : இணையம்

உமை

சில மனிதர்கள் வீடு , மனைவி மற்றும் குழந்தைகளோடும், ஆடை ஆபரணங்களோடும், சிறந்த புத்தியோடும், அதிகாரங்களோடும், அழகு ஆரோக்கியம் போன்றவைகளோடும் மனதிற்கு இனிய போகங்கள் நிரம்பியவர்களாக வியாதி இல்லாமல் சுற்றத்தாருடன் இடையூறு இல்லாமல் தினம் தோறும் மகிழ்ந்திருக்கின்றனரே, அது எந்த கர்மத்தின் பலன்?

சிவன்

முன் ஜென்மத்தில் செல்வம் உள்ளவர்களாக இருந்தும்   கல்வியும் நல்ல ஒழுக்கம் உள்ளவர்களாகவும், தானத்திலும் கல்வியில் விருப்பம் உள்ளவர்களாகவும், எப்பொழுதும் பிறருக்கு விருப்பமானதை அறிந்து அதை தருபவர்களாகவும், சத்தியத்தையும், பொறுமையையும் விடாதவர்களாகவும், பொருளாசை, பெண்ணாசை இல்லாதவர்களாகவும், சரியானவர்களுக்கு முறையாக தானம் செய்பவர்களாகவும், விரதங்களை செய்பவர்களாகவும் பிறர் துன்பத்தை தன் துன்பம் போல் நினைத்து அதனை விலக்க நினைப்பவர்களாகவும், இனிய ஒழுக்கம் உள்ளவர்களாகவும், தேவர்களை எக்காலத்திலும் பூஜிப்பவர்களாகவும் இருப்பவர்கள் மறு ஜென்மத்தில் அப்புண்ணீயங்களை அனுபவிக்க மேற்கூறியவாறு பிறக்கிறார்கள். அழகு, பொருள், தைரியம், ஆயுள், சுகம் அதிகாரம், தேகபலம் மற்றும் கல்வி அனைத்தும் ஆகிய எல்லா நலங்களும் தானத்தால் உண்டாகும். எல்லாம் தவத்தாலும் தானத்தாலும் உண்டாகும் என்பதை நீ அறிந்து கொள்.

உமை

மனிதர்களில் சிலர் செல்வம் அற்றவர்களாகவும், மிகத் துயரம் உள்ளவர்களாகவும், கொடுப்பதை அனுபவிக்க இயலாதவர்களாகவும், ஆதி ஆத்மிகம், ஆதி பௌதீகம், ஆதிதெய்வீகம் ஆகிய பயம் உள்ளவர்களாகவும், பிணியாலும் பசியாலும் வருந்துபவர்களாகவும், கெட்ட மனைவியால் அவமதிக்கப்படுபவர்களாகவும். எப்பொழுதும் இடையூற்றை அனுபவிப்பர்களாகவும் காணப்படுகின்றனரே அது ஏன்?

சிவன்

மனிதர்களில் சிலர் செல்வம் அற்றவர்களாகவும், மிகத் துயரம் உள்ளவர்களாகவும், கொடுப்பதை அனுபவிக்க இயலாதவர்களாகவும், ஆதிஆத்மிகம் (மற்ற உயிர்களால் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள்), ஆதிபௌதீகம் இயற்கையினால் நான் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் (நீர், நிலம், காற்று, ஆகாயம் தீ),  ஆதிதெய்வீகம் (நாம் செய்த வினைகளை இறையின் துணை கொண்டு அதை அனுபவித்தல்) ஆகிய பயம் உள்ளவர்களாகவும், பிணியாலும் பசியாலும் வருந்துபவர்களாகவும், கெட்ட மனைவியால் அவமதிக்கப்படுபவர்களாகவும். எப்பொழுதும் இடையூற்றை அனுபவிப்பர்களாகவும் காணப்படுகின்றனர். தாம் செய்த நல்வினையும் தீவினையும் முறையே சுகம் துக்கம் முதலியவற்றை உண்டாக்குகின்றன.

உமை

பிறவிக் குருடரும், பிறந்தபின் கண் போனவரும் உலகின் காணப்படுகின்றனரே அது ஏன்?

சிவன்

எந்த மனிதர்கள் காமத்தினால் பிறர் வீடுகளில் அலைந்து கொண்டும், பிறர் மனைவிகளை கெட்ட எண்ணங்களுடன் பார்த்துக் கொண்டும், கோபமும் ஆசையும் கொண்டவர்களாக மற்ற மனிதர்களின் கண்களை கெடுத்தும், பொருள்கள் பற்றி நன்கு அறிந்தும் அது மற்றி மாற்றுக் கருத்து உரைப்பவர்களாக இருக்கும் மனிதர்கள் இறந்தபின் யமனால் தண்டிக்கப்பட்டு வெகு காலம் நரகத்தில் இருந்து மானிட ஜென்மத்தை அடையும் போது பிறவிக் குருடர்களாகவும், பிறந்தபின் கண் கெட்டவர்களாகவும் கண் நோய் உடையவர்களாகவும் பிறக்கின்றனர். அதில் சந்தேகமில்லை.

உமை

சில மனிதர்கள் பிறந்தது முதல் மற்றும் சிலர் பிறந்த பின்னர் ஏதோ ஒரு காரணத்தால் பல், கழுத்து கன்னம் ஆகியவற்றில் நோயுள்ளவர்களாகவும் முகத்தில் அதிக வியாதி உடையவர்களாகவும் காணப்படுகின்றனரே அது ஏன்?

தொடரும்…

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 8

உமாமகேஸ்வரஸம்வாதம்

உமை 

மானிடர்களில் சிலர் கல்வியும் ஆத்ம ஞானமும் புத்திக் கூர்மையும் பேசும் திறமை ஆகியவை பெற்றிருந்தும் ஒழுங்காக முயற்சி செய்தும் தரித்திர்களாக காணப்படுகின்றனரே அது ஏன்?

சிவன்

எந்த மனிதர்கள் முன் ஜென்மங்களில் கல்வி அறிவு பெற்றிருந்தும் யாருக்கும் ஆதரவு தராமல் இருந்தும், அன்ன தானம் செய்யாமலும் தம் காரியங்களை மட்டும் பெரிதாக எண்ணி அதை பாராட்டிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் மறு ஜென்மங்களில் அறிவும் புத்திக் கூர்மையுடன் இருந்தும் வறியவராகவே இருக்கிறனர். விதையாதது முளையாது

உமை 

மிக்க செல்வம் உள்ள மனிதர்களும், உலகின் கல்வி அறிவும்,பகுத்தறிவும், புத்தி கூர்மையும், மன உறுதி இல்லாத வீணர்களாகவே காணப்படுகின்றனர், அது ஏன்?

சிவன்

முன் ஜென்மங்களில் கல்வி அறிவு அற்றவர்களாக இருந்தும், பகுத்தறிவு அற்றவர்களாக இருந்தும், ஏழைகளுக்கு உதவி செய்து  தானம் தருமங்களை செய்பவர்கள் அடுத்து வரும் பிறப்புகளில் அதை அப்படியே அனுபவிக்கின்றனர். மனிதன் கற்றவனாக இருந்தாலும், கல்லாதவனாக இருந்தாலும் தானத்தின் பலனை அடைகிறான்.தானமானது கல்வி அறிவு பார்ப்பது இல்லை. எப்படியும் அதன் பலனை தந்து விடும்.

உமை 

மனிதர்களில் சிலர் புத்தி கூர்மை உள்ளவர்களாகவும், கேட்டதை மறவாதவர்களாகவும், வார்த்தைகளை தெளிவாக உச்சரிப்பவர்களாகவும் இருக்கின்றனரே அது ஏன்?

சிவன்

ஞானத்திற்காக குருவிற்கு நன்றாக பணிவிடை செய்து அந்த குருவிடம் இருந்து முறைப்படி வித்தைகளை கற்றுக் கொண்டு பிறருக்கும் அம்முறை தவறாமல் அதை கற்பித்தும், தன்னுடைய ஞானத்தினால் கர்வப்படாமல் மனம், வாக்கு ஆகியவற்றால் அடக்கமுள்ளவர்களாகி  கலைகள் நிலை பெறும் முயற்சியை செய்து கொண்டு இருக்கிறார்களோ அவர்கள் மரணமடைந்து அடுத்துவரும் பிறப்புகளில் புத்தி கூர்மை உள்ளவர்களாகவும், கேட்டதை மறவாதவர்களாகவும், வார்த்தைகளை தெளிவாக உச்சரிப்பவர்களாகவும் இருக்கின்றனர்

உமை 

சில மனிதர்கள் பல வகையிலும் முயற்சி செய்தும் கேள்வியும், கல்வியும் புத்தி கூர்மையும் இல்லாதவர்களாக இருக்கின்றனரே, அது ஏன்?

சிவன்

எந்த மனிதர்கள் பூர்வ ஜென்மங்களில் கல்வியினால் கர்வம் கொண்டும், தற்புகழ்ச்சி செய்து கொண்டும், ஞானம் அடைந்ததால் தான் என்ற அகங்காரத்துடன் மதி கெட்டவர்களாகி எப்பொழுது பிறரை விட தனக்கு அதிகம் வித்தை தெரியும் என சொல்லிக் கொண்டும், பிறரை இகழ்ந்தும் அவர்கள் மேல் பொறாமை கொண்டும் அப்படிப்பட்டவர்கள் அநேக ஜன்மங்களுக்குப் பின் மானிட தேகம் எடுக்கும் போது பல வகையிலும் முயற்சி செய்தும் கேள்வியும், கல்வியும் புத்தி கூர்மையும் இல்லாதவர்களாக இருக்கின்றனர்

உமை 

சில மனிதர்கள் வீடு , மனைவி மற்றும் குழந்தைகளோடும், ஆடை ஆபரணங்களோடும், சிறந்த புத்தியோடும், அதிகாரங்களோடும், அழகு ஆரோக்கியம் போன்றவைகளோடும் மனதிற்கு இனிய போகங்கள் நிரம்பியவர்களாக வியாதி இல்லாமல் சுற்றத்தாருடன் இடையூறு இல்லாமல் தினம் தோறும் மகிழ்ந்திருக்கின்றனரே, அது எந்த கர்மத்தின் பலன்?

தொடரும்..

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 7

உமாமகேஸ்வரஸம்வாதம்

உமை :
மனிதர்களில் சிலர் அழகு உள்ளவர்களாகவும், லட்சணங்களுடன் கூடிய அவயங்கள் உடையவர்களாகவும், பார்வைக்கு இனியவர்களாகவும் காணப்படுகின்றனர் அது ஏன்?

சிவன் :
எந்த மனிதர்கள் முன் ஜென்மங்களில் இனிமையாக பேசுபவர்களாகவும், அசைவ உணவுகளை விடுத்து தர்மத்திற்காக அலங்காரங்களையும் வஸ்திரங்களையும் தானம் செய்து கொண்டும், பூமியை சுத்தப்படுத்திக் கொண்டும் இருக்கிறார்களோ அவர்கள் மறு ஜென்மத்தில் ஆசைபடத்தக்க அழகுள்ளவர்களாக பிறக்கிறார்கள்.

உமை :
மனிதர்களில் சிலர் விகார ரூபமுள்ளவர்களாக இருக்கிறார்களே அது ஏன்?

சிவன் :
மனிதர்கள் முன் ஜென்மத்தில் அழகிய வடிவம் பெற்றிருந்து அதன் காரணமாக கர்வமும் தான் மேல் எனும் எண்ணமுடையவர்களாகவும், அழகில்லாதவர்களை நகைத்தும், அவர்களை மனம் வருந்தச் செய்தும், மாமிசங்களை விருப்பப்பட்டு உண்டும், பொறாமை அனாச்சாரம் முதலிய நடவடிக்கைகளோடு இருந்தவர்கள் தண்டிக்கப்பட்டு மானிட ஜென்மம் அடையும் போது விகாரமுள்ளவர்களாகி அழகில்லாமல் விகார ரூபமுள்ளவர்களாக பிறக்கிறார்கள்.

உமை :
சிலர் அழகும் ஐஸ்வர்யமும் இல்லாமல் இருந்தாலும் மனதை கவரும் தன்மை உடையவர்களாகவும் பெண்களால் விரும்பப்படுபவர்களாகவும் இருப்பது ஏன்?

சிவன் :
எவர்கள் முந்தைய ஜென்மங்களில் இனிய சுபாவம் உள்ளவர்களாகவும், தன் மனைவியிடத்தில் திருப்தி உள்ளவர்களாகவும், அவர்களை விட்டு விலகாததன் பொருட்டு மன உறுதி உள்ளவர்களாகவும், மற்றவர்கள் வேண்டியபோது பானம், அன்னம் போன்றவற்றை கொடுப்பவர்களாகவும் சிறந்த நடத்தையோடு இருப்பவர்களாகவும் இருக்கிறார்களோ அவர்கள் மறுஜென்மத்தில் அழகுடையவர்களாக பிறக்கிறார்கள்.

உமை :
மனிதர்களில் செல்வம் போன்றவற்றை பெற்றிருந்தும் இன்னாதவர்களாக இருக்கின்றனரே அது ஏன்?

சிவன் :
முன் ஜென்மத்தில் எண்ணம், சொல் மற்றும் செயல் ஆகியவற்றால் பிறரை துன்புறுத்தியும், யாரையும் காப்பாற்றாமலும் இருக்கிறார்களோ அவர்கள் செல்வம் போன்றவற்றை பெற்றிருந்தும் இன்னாதவர்களாக இருக்கின்றனர்.

உமை :
மானிடர்களில் சிலர் கல்வியும் ஆத்ம ஞானமும் புத்திக் கூர்மையும் பேசும் திறமை ஆகியவை பெற்றிருந்தும் ஒழுங்காக முயற்சி செய்தும் தரித்திர்களாக காணப்படுகின்றனரே அது ஏன்?

தொடரும்..

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 6

(

இந் நிகழ்வுகள் மகாபாரதம் அனுசாஸன பர்வத்தில் இடம் பெற்றுள்ளவை

தொடக்கம் 204 அத்யாயம்.

கூடி இருக்கும் ரிஷிகள் கிருஷ்ணரை பார்த்து ‘உலகில் ஆச்சரியமானது ஒன்றை நீங்கள் கண்டிருந்தாலும், கேட்டிருந்தாலும் அதை உரைக்க வேண்டும்’ என்றனர்.

‘நான் மானிட வடிவத்தில் இருப்பதால் எதுவும் உரைப்பதிற்கு இல்லை, அதனால் என் அறிவும் வரையறைக்கு உட்பட்டது என்றார்.

எனவே ரிஷிகள் அனைவரும் நாரதரே உக்கிரமான தவம் உடையவர், கிருஷ்ணருக்கு அன்பானவர், பழைய சரித்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் என்று நிச்சயித்து அவரை அணுகினார்கள்

அவர் உமா மகேஷ்வர ஸம்வாதம் குறித்து சொல்லத் தொடங்கினார்.

)

உமை : 

மூன்று விதமான மனிதர்கள் எப்போதும் காணப்படுகிறார்கள். சிலர் எவ்வித முயற்சியும் இன்றி உயர்ந்த அதிகாரத்தையும் செல்வத்தையும் அடைகின்றனர். சிலர் முயற்சி செய்து பாக்கியங்களை அடைகின்றனர். சிலர் எவ்வித முயற்சி செய்தும் ஒன்றையும் அடையாமல் இருக்கின்றனர். அது ஏன்?

சிவன் : 

உலகில் எந்த மனிதர்கள் தானத்தையும் தர்மத்தையும் முக்கியமாக நினைத்து தாமே தேடிப் போய் தானம் முதலியவைகளை வாங்கச் செய்கிறார்களோ அவர்கள் அடுத்து வரும் பிறவிகளில் முயற்சி இல்லாமலே அதன் பலன்களை அனுபவிக்கின்றனர்.

எந்த எந்த காலங்களில் யாசிக்கும் போது தானம் அளிக்கப்பட்டதோ அதன் பலனை அடுத்துவரும் பிறப்பில் சிறிது சிரமப்பட்டு முயற்சிக்குப் பின் அந்த அந்த காலகட்டங்களில் பெறுகின்றனர்.

மனிதர்கள் கெட்ட எண்ணம் கொண்டவர்களாக யாசிப்பவர்களுக்கு எவ்வகையிலும் எந்த ஒன்றையும் கொடாமல் கோபிக்கின்றனரோ அவர்கள் மறு பிறப்பில் எவ்வித முயற்சி செய்தும் ஒன்றையும் அடையாமல் இருக்கின்றனர்.

விதை விதைக்காமல்  முளை  முளைப்பதில்லை. அது போலவே தான தர்ம பலன்களும். மனிதன் எதை எதைக் கொடுக்கிறானோ அதை அதை மட்டுமே அடைகிறான்.

உமை : 

‘சிலர் வயது முதிர்ந்து, தேகங்கள் தளர்ச்சி அடைந்த பின் அனுபவிக்க தகாத காலத்தில் செல்வங்களையும் போக பாக்கியங்களையும் அடைகின்றனர், எது ஏன்?

சிவன் : 

சிலர், செல்வம் பெற்றிருந்தும் தர்ம காரியங்களை வெகு நாட்கள் மறந்திருந்து, தனது உயிருக்கு முடிவுக்காலம் வரும்போது பிணியால் துன்பப்படும் போது தானங்களை கொடுக்கவும் தர்மங்களை செய்யவும் தொடங்குகின்றனர். அவர்கள் மறு ஜென்மங்களில் கஷ்டப்படுபவர்களாகப் பிறந்து இளமை கடந்தப்பின் முதுமை அடைந்து முன் பிறவிகளில் செய்த தான தர்ம பலன்களை அனுபவிக்கின்றனர். இவ்வாறாக அவர்களுக்கு செல்வங்களும் போக பாக்கியங்களும்அவரவர்களின் கர்மம் காலம் கடந்து வருகிறது.

உமை : 

சிலர் போக பாக்கியம் பெற்றிருந்தும் அவற்றை அனுபவிக்க இயலாதவர்களாக இருக்கிறார்களே அது ஏன்?

சிவன் : 

எவர்கள் வியாதியால் பீடிக்கப்பட்டு, பிழைப்பதில் எண்ணம் விட்டப் பிறகு தான தர்மம் செய்ய ஆரம்பிக்கிறார்களோ, அவர்கள் அடுத்துவரும் பிறவிகளில் அதன் பலங்களை அடைந்து நோய்வாய் பட்டவர்களாக அனுபவிக்க இயலாதவர்களாக ஆகின்றனர்

உமை : 

மனிதர்களில் சிலர் அழகு உள்ளவர்களாகவும், லட்சணங்களுடன் கூடிய அவயங்கள் உடையவர்களாகவும், பார்வைக்கு இனியவர்களாகவும் காணப்படுகின்றனர் அது ஏன்?

தொடரும்

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 5

உமாமகேஸ்வரஸம்வாதம்

(

இந் நிகழ்வுகள் மகாபாரதம் அனுசாஸன பர்வத்தில் இடம் பெற்றுள்ளவை

தொடக்கம் 204 அத்யாயம்.

கூடி இருக்கும் ரிஷிகள் கிருஷ்ணரை பார்த்து ‘உலகில் ஆச்சரியமானது ஒன்றை நீங்கள் கண்டிருந்தாலும், கேட்டிருந்தாலும் அதை உரைக்க வேண்டும்’ என்றனர்.

‘நான் மானிட வடிவத்தில் இருப்பதால் எதுவும் உரைப்பதிற்கு இல்லை, அதனால் என் அறிவும் வரையறைக்கு உட்பட்டது என்றார்.

எனவே ரிஷிகள் அனைவரும் நாரதரே உக்கிரமான தவம் உடையவர், கிருஷ்ணருக்கு அன்பானவர், பழைய சரித்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் என்று நிச்சயித்து அவரை அணுகினார்கள்

அவர் உமா மகேஷ்வர ஸம்வாதம் குறித்து சொல்லத் தொடங்கினார்.

)

உமை : 

மூன்று விதமான மனிதர்கள் எப்போதும் காணப்படுகிறார்கள்.  எவ்வித  முயற்சியும் இன்றி உயர்ந்த அதிகாரத்தையும் செல்வத்தையும் அடைந்து அனுபவிக்கின்றனர், சிலர் முயற்சி செய்து உயர் நிலைகளை அடைகின்றனர்.  மற்றவர்கள் எந்த முயற்சி செய்தாலும் ஒன்றையும் அடைய இயலாதவராக  இருக்கின்றனர், அது ஏன்?

சிவன் : 

பிரம்மாவிடத்தில் விருப்பு வெறுப்புகள் இன்மையால் அவர் உலகில் உள்ள மனிதர்களை சரி சமமாகவே படைத்தார். கால வித்யாசத்தினால் மாறு பாடு அடைந்தார்கள். எனவே அவர்கள் பிரம்மாவிடம் சென்று காரணம் அறிய விரும்பினார்கள்.அப்போது பிரம்ம தேவர், ‘என்னை குற்றம் சொல்லாதீர்கள்,உங்கள் கர்மத்தை நினையுங்கள்.உங்கள் நல்லதும், தீயதும் உங்களால் தீர்மானிக்கப்படுகிறது. தானே தன் வினைப்பயன்களை அனுபவிக்கவேண்டும். மற்றொருவர் அனுபவிக்க தகாது’ என்று வாக்குரைத்தார்.  ஆகவே உமையே முன் ஜன்மங்களில் தர்மம் செய்தவர்கள் அதன் தொடர்ச்சியாக உயர்ந்த அதிகாரத்தையும் செல்வத்தையும் அடைந்து அனுபவிக்கின்றனர். மற்றவர்களின் தூண்டுதலால் தர்மம் செய்பவர்கள் அடுத்துவரும் பிறப்புகளில்  முயற்சி செய்து உயர் நிலைகளை அடைகின்றனர். செல்வத்தாலும், பதவிகளாலும் செருக்கு கொண்டு தம்மை மட்டுமே நினைப்பவர்கள் அடுத்துவரும் பிறப்புகளில் எந்த முயற்சி செய்தாலும் ஒன்றையும் அடைய இயலாதவராக  இருக்கின்றனர் என்றார்.

உமை : 

‘மனிதர்களில் சிலர் மிக்க செல்வம் மற்றும் வசதிகள் இருந்தும் அதை அனுபவிக்க இயலாதவர்களாக இருக்கிறார்களே அது ஏன்? என்றாள்

சிவன் : 

தர்மம் செய்தால் கூட தன் விருப்பமின்றி சிரத்தை இல்லாமல் செய்பவர்கள் அடுத்துவரும் பிறவிகளில் மிக்க செல்வம் மற்றும் வசதிகள் இருந்தும் அதை அனுபவிக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள்.

உமை : 

சில மனிதர்கள் தனம் இல்லாமல் இருந்தாலும் சுகப்படுபவர்களாகவே இருக்கின்றனரே, அது ஏன்? என்றாள்.

சிவன் : 

எவர்கள் தர்மத்தில் விருப்பமும் தயையும் உள்ளவர்களாகி பிறர் துன்பத்தை அறிந்து தமது வறுமையிலும் பிறர்க்கு உதவி செய்கிறார்களோ அவர்கள் அடுத்து வரும் பிறப்புகளில்தனம் இல்லாமல் இருந்தாலும் சுகப்படுபவர்களாகவே இருக்கின்றனர்.

உமை : 

மூன்று விதமான மனிதர்கள் எப்போதும் காணப்படுகிறார்கள். சிலர் எவ்வித முயற்சியும் இன்றி உயர்ந்த அதிகாரத்தையும் செல்வத்தையும் அடைகின்றனர். சிலர் முயற்சி செய்து பாக்கியங்களை அடைகின்றனர். சிலர் எவ்வித முயற்சி செய்தும் ஒன்றையும் அடையாமல் இருக்கின்றனர். அது ஏன்? என்றாள்.

தொடரும்

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 4

உமாமகேஸ்வரஸம்வாதம்

உமை :  நான்கு வகையான வழிமுறைகளானபிரம்மச்சாரியன், கிரகஸ்தன், வான பிரஸ்தன் மற்றும் சந்நியாசி இவர்களின் கடமைகளை கூறுங்கள்.

 

சிவன் :எல்லா வகையிலும் கிரகஸ்தர ஆஸ்ரமமே முதன்மையானதும்  முக்கியமானதும்ஆகும். நீராடுதல், தன் மனைவியோடு திருப்தியாக இருந்தல், தானம்,யாகம் போன்றவை விட்டப்போகாமல் காத்தல், விருந்தினர்களை உபசரித்தல், மனம் வாக்கு செயல் ஆகிய எல்லாவற்றாலும் ஒன்றாக இருத்தல், பெரும்  துன்பங்களையும் ஏற்றுக் கொள்ளுதல்  ஆகியவை முக்கிய தர்மங்கள்.

மனவுறுதியுடன் காட்டில் இருந்தல், நல்ல பழங்களை உண்ணுதல், தரையில் படுத்தல்,  சடை தரித்தல், தோல் ஆடை அணிதல், தேவர்களையும் விருந்தினர்களையும்  உபசரித்தல் ஆகியவை வானபிரஸ்தனின் முக்கிய கடமைகள்.

வீட்டை விட்டு வெளியே வசித்தல், பொருள் இல்லாமல் இருத்தல், பொருளீட்ட முயற்சிக்காமலும் இருத்தல், கள்ளமில்லாமல் இருத்தல், எங்கும்  யாசித்து  உணவு பெறுதல், எந்த தேசம் சென்றாலும் தியானத்தை கைவிடாமல் இருந்தல். பொறுமை தயையுடன்  இருந்தல், எப்பொழுதும் தத்துவ ஞானத்தில் பற்று  கொண்டு இருத்தல் போன்றவை  சந்நியாசியின் தர்மங்கள்.

 

உமை :  இந்த ரிஷிகள் தவம் இயற்றுதலை முதன்மையாகக் கொண்டுள்ளனர்.  அது குறித்து விளக்க வேண்டும்.

 

சிவன் : கிரகஸ்தனாக இருந்து நன் மக்களைப் பெறுவதால் பித்ரு கடன் நீங்கும்.  உறுதியுடன் மனதை அடக்கி மனைவியுடன் வானப்ரஸ்தத்தில்  வசிக்க வேண்டும். சாஸ்திரத்தில் சொல்லப்பட்டவாறு(தன் குருவின் வழி – என்று நான் பொருள் கொள்கிறேன்) தீஷை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறந்த புண்ணிய நதிகளில் நீராட வேண்டும். மனம் சலியாமல் அனுட்டானம் செய்ய வேண்டும்.  விருந்தினர்களை  அன்புடன் வரவேற்று, இருக்கை அளித்து அவர்களுக்கு  அன்னம் இடவேண்டும். இது வான பிரஸ்தனின் கடமைகள்.

வனத்தை ஆச்சாரியன் போல் கருதி வசிக்க வேண்டும்.விரதங்களையும்(உணவினை விலக்குதல்), உபவாசக்களையும்(இறை நினைவோடு இருத்தல்) மிகுதியாக கொள்ளவேண்டும். ரிஷிகளில் சிலர் மனைவிகளோடு இருக்கிறார்கள். அவர்கள் விந்திய மலைச் சாரலிலும், நதிக் கரையிலும் வசிக்கிறார்கள். அவர்களும் தவ  சீலர்களே. கொல்லாதிருத்தல், தீங்கு செய்யாதிருத்தல், பிற உயிர்கள் இடத்தில் அன்போடு இருத்தல், தன் மனைவியோடு மட்டும் சேர்ந்து இருத்தல்  ஆகியவைகளும் இவர்களது தர்மத்தில் அடக்கம்.

 

உமை :  மூன்று விதமான மனிதர்கள் எப்போதும் காணப்படுகிறார்கள். எவ்வித  முயற்சியும் இன்றி உயர்ந்த அதிகாரத்தையும் செல்வத்தையும் அடைந்து அனுபவிக்கின்றனர், சிலர் முயற்சி செய்து உயர் நிலைகளை அடைகின்றனர்.  மற்றவர்கள் எந்த முயற்சி செய்தாலும் ஒன்றையும் அடைய இயலாதவராக  இருக்கின்றனர், அது ஏன்?

 

தொடரும்..

 

*வாருணை  – மதிமண்டலத்தில் ஊறும் அமுதம்

 

புகைப்படம் : இணையம்

 

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 3

உமாமகேஸ்வரஸம்வாதம்
உமை :  உமது நிறம் செம்மட்டை நிறமானதும் விகாரமும் பயங்கரமானதும் சாம்பல் பூசப்பட்டதாகவும் விகாரமான கண்கள் உடையதாகவும் கூரான  கோரைப்பற்கள் உடையதாகவும் ஜடை உடையதாகவும் புலியின் தோல் உடுத்தியதாகவும் உமது நிறம் செம்மட்டை நிறமானதும் விகாரமும் பயங்கரமானதும் சாம்பல் பூசப்பட்டதாகவும் விகாரமான கண்கள் உடையதாகவும் கூரான கோரைப்பற்கள் உடையதாகவும் ஜடை உடையதாகவும் புலியின் தோல் உடுத்தியதாகவும் இருப்பது ஏன்?
 
சிவன் :  உலகில் குளிர்ச்சி, வெம்மை போன்று இருமைகள் இருப்பதால், அதைச் சார்ந்த உயிர்கள் சந்திரன் போன்று குளிர்வும், சூரியன் போன்று வெம்மையும் உடையதாக இருக்கின்றன. விஷ்ணுவானவர் குளிர் பொருந்திய வடிவம் உடையவராக இருக்கிறார். நான் வெம்மை பொருந்திய வடிவில் நிலையாக இருக்கிறேன். உக்கிர வடிவமும், சிவந்த கண்களும், சூலமும் கொண்ட இந்த தேகத்தால் எப்பொழுதும் உலகினைக் காக்கிறேன். இந்த ரூபம் உலகின் நன்மைக்காக ஏற்படுத்தப்பட்டது. வேறு வடிவம் கொண்டால் உலகின் இயக்கங்களில் தடுமாற்றம் உண்டாகும். அதன் பொருட்டே இவ்வடிவம்.
 
உமை :  நீங்கள் சந்திரனை பிறையாக அணியக் காரணம் என்ன?
 
சிவன் :தட்ச யாகத்தின் பொருட்டு கோபமுற்று இருந்தேன். அதனால் தேவர்கள் என்னால் துரத்தப்பட்டார்கள். என்னால் உதைக்கப்பட்டும் கூட சந்திரன் என்னிடத்தில் நல்வார்த்தை பேசி என்னிடம் வேண்டிக் கொண்டான். அன்று முதல் சந்திரனை என் தலையில் அணிந்து கொண்டேன்.
 
இதன் பிறகு பல விதமான துதிகளால் ரிஷிகளும், முனிவர்களும் ஈசனையும், உமா தேவியையும் துதித்தனர்.
 
உமை :  நான்கு வகையான வழிமுறைகளான பிரம்மச்சாரியன், கிரகஸ்தன், வான பிரஸ்தன் மற்றும் சந்நியாசி இவர்களின் கடமைகளை கூறுங்கள்.

உமை :   இந்த ரிஷிகள் தவம் இயற்றுதலை முதன்மையாகக் கொண்டுள்ளனர். அது குறித்து விளக்க வேண்டும்.
தொடரும்..

              *வாருணை  – மதிமண்டலத்தில் ஊறும் அமுதம்
               புகைப்படம் : இணையம்
 

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 2

உமாமகேஸ்வரஸம்வாதம்
(
இந் நிகழ்வுகள் மகாபாரதம் அனுசாஸன பர்வத்தில் இடம் பெற்றுள்ளவை
தொடக்கம் 204 அத்யாயம்.
கூடி இருக்கும் ரிஷிகள் கிருஷ்ணரை பார்த்து ‘உலகில் ஆச்சரியமானது ஒன்றை நீங்கள் கண்டிருந்தாலும்கேட்டிருந்தாலும் அதை உரைக்க வேண்டும்‘ என்றனர்.
நான் மானிட வடிவத்தில் இருப்பதால் எதுவும் உரைப்பதிற்கு இல்லைஅதனால் என் அறிவும் வரையறைக்கு உட்பட்டது என்றார்.
எனவே ரிஷிகள் அனைவரும் நாரதரே உக்கிரமான தவம் உடையவர்கிருஷ்ணருக்கு அன்பானவர்பழைய சரித்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் என்று நிச்சயித்து அவரை அணுகினார்கள்
அவர் உமா மகேஷ்வர ஸம்வாதம் குறித்து சொல்லத் தொடங்கினார்.
)

        உமை :  வேறு வாகனங்கள் இருக்கையில் நீங்கள் ஏன் ரிஷபத்தை வாகனமாக கொண்டுள்ளீர்கள்?
சிவன்  : முன் சிருஷ்டியில் பசுக்கள் வெள்ளை நிறமுடையனவாக இருந்தன. அப்போது உலக நன்மைக்காக ஒற்றைக்காலில் நின்று தவம் செய்து கொண்டு இருந்தேன். அப்போது அந்த பசுக்கள் நான் இருந்த இடம் வந்து அந்த இடத்தை இடித்தன. அதனால் கோபம் கொண்டு அப்பசுக்களை எரித்துவிட்டேன். அதில் இந்த ரிஷபம் தன் தவறை உணர்ந்து என்னிடம் வேண்டிக் கொண்டது.
 
அது முதல் பசுக்கள் அடக்க உள்ளவைகளாகவும், பல நிறமுடையவைகளாகவும் ஆயின. சாபம் விலக்கப்பட்டதால் இப் பசு மாத்திரம் வெள்ளை நிறமுடையதாகவும், எனக்கு வாகனமாகவும் ஆனது.அதனால் தேவர்கள் என்னை பசுபதியாகச் செய்தனர்.
உமை :  மங்களகரமான வீடுகளும், அதில்  அழகிய விலங்குகளும் பிராணிகளும் இருக்கையில் நீர் ஏன் மயிர்களாலும், எலும்புகளாலும் அருவருக்கத்தக்க மண்டை ஓடுகள் நிரம்பியதும் , நரிகளும் கழுகளும் சேர்ந்திருக்கும் பிணப்புகையினால் மூடப்பட்டதுமான மிகக் கொடிய பயங்கரமான மயானத்தில் சந்தோஷமாக இருக்கீறீர்? அது எதனால் என்று எனக்கு சொல்லக் கடவீர்.
சிவன்  : முன்னொரு யுகத்தில் வெகு சுத்தமான இடத்தை நான் தேடி அடைந்த போது சுத்தமான இடம் கிடைக்கவில்லை. அப்போது பூதசிருஷ்டி உண்டானது. கொடிய கோரப்பற்களை உடைய பிசாசுகளும், பிற உயிர்களை கொன்று உண்ணும் பூதங்களும் உலகம் எங்கும் திரிந்தன. இவ்வாறு பிராணிகள் இல்லாததால் உலகை இப் பூதங்களிடம் இருந்து காப்பதற்காக பிரம்ம தேவர் இப் பூத, பிசாசங்களை அழிக்குமாறு வேண்டிக் கொண்டார். பிராணிகளின் நன்மைக்காக நான் இதை ஏற்றிக் கொண்டேன்.
 
இம் மயானத்தை விட பரிசுத்தமான இடம் வேறு எதுவும் இல்லை. மனித சஞ்சாரம் இல்லாததால் இம் மயானம் மிகப் புனிதமானது. எனவே பூதங்களை மயானத்தில் நிறுத்தினேன். அவைகளை விட்டுப் பிரிய மனம் இல்லை. எனவே தவம் செய்பவர்களும், மோட்சத்தை விரும்புவர்களும் பரிசுத்தமான இம் மயானத்தை விரும்புகிறார்கள். வீரர்களில் இடமாக இருப்பதால இதை நான் எனது இடமாகக் கொண்டேன்.
 
காலைப் பொழுதிலும், அந்தி சந்தியிலும், ருத்ர தேவதையான திருவாதிரை நட்சத்திரத்திலும் தீர்க்க ஆயுளை விரும்புவர்கள் செல்லக் கூடாது. இன்னும் என்ன கேட்க விரும்புகிறாய்?
உமை :  உமது நிறம் செம்மட்டை நிறமானதும் விகாரமும் பயங்கரமானதும் சாம்பல் பூசப்பட்டதாகவும் விகாரமான கண்கள் உடையதாகவும் கூரான கோரைப்பற்கள் உடையதாகவும் ஜடை உடையதாகவும் புலியின் தோல் உடுத்தியதாகவும் உமது நிறம் செம்மட்டை நிறமானதும் விகாரமும் பயங்கரமானதும் சாம்பல் பூசப்பட்டதாகவும் விகாரமான கண்கள் உடையதாகவும் கூரான கோரைப்பற்கள் உடையதாகவும் ஜடை உடையதாகவும் புலியின் தோல் உடுத்தியதாகவும் இருப்பது ஏன்?
 
தொடரும்..
                           
                               *வாருணை  – மதிமண்டலத்தில் ஊறும் அமுதம்
               புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 1

உமாமகேஸ்வரஸம்வாதம்
(

இந் நிகழ்வுகள் மகாபாரதம் அனுசாஸன பர்வத்தில் இடம் பெற்றுள்ளவை
தொடக்கம் 204 அத்யாயம்.
கூடி இருக்கும் ரிஷிகள் கிருஷ்ணரை பார்த்து ‘உலகில் ஆச்சரியமானது ஒன்றை நீங்கள் கண்டிருந்தாலும்கேட்டிருந்தாலும் அதை உரைக்க வேண்டும்‘ என்றனர்.
நான் மானிட வடிவத்தில் இருப்பதால் எதுவும் உரைப்பதிற்கு இல்லைஅதனால் என் அறிவும் வரையறைக்கு உட்பட்டது என்றார்.
எனவே ரிஷிகள் அனைவரும் நாரதரே உக்கிரமான தவம் உடையவர்கிருஷ்ணருக்கு அன்பானவர்பழைய சரித்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் என்று நிச்சயித்து அவரை அணுகினார்கள்

அவர் உமா மகேஷ்வர ஸம்வாதம் குறித்து சொல்லத் தொடங்கினார்.

)

உமை : பகவானே உமது கீழ்திசை முகம் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறதே, வடக்கு மற்றும் மேற்கு திசை முகங்கள் பார்க்க அழகாக இருக்கிறது, தென் திசை முகம் ஜடைகளால் மூடப்பட்டு பயங்கரமாக இருக்கிறது அது ஏன்?
சிவன்    : கிழக்கில் உள்ள முகம் எப்பொழுதும் தவம் செய்து கொண்டிருக்கும்; தென் திசை முகம் பிரஜைகளை(உயிர்களை) சம்ஹாரம் செய்யும். மேற்கு திசை முகம் எப்பொழுதும் ஜனங்களின் காரியங்களை கவனித்துக் கொண்டிருக்கும். வட திசை முகம் எப்பொழுதும் வேதம் ஓதிக் கொண்டிருக்கும். இதன் காரணமாகவே வெவ்வேறு திசை முகங்கள் வெவ்வேறு விதமாக இருக்கிறது. இன்னும் என்ன கேட்க விரும்புகிறாய்?
உமை :    உமது கழுத்து மயில் போன்று கரு நீலம் உடையாதாக இருப்பது எதனால்?  
சிவன்  : முன்னொரு யுகத்தில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த பொழுது எல்லா உலகங்களையும் அழிக்கும் விஷம் உண்டாயிற்று. தேவர்கள் முதலானவர்கள் அதைக் கண்டு அஞ்சினர். லோகத்தின் நன்மைக்காக அந்த விஷத்தை நான் அருந்தினேன். அதனானே தான் என் கழுத்து நீல நிறமானது, அதனாலே எனக்கு நீல கண்டன் என்ற பெயர் ஏற்பட்டது. இன்னும் என்ன கேட்க விரும்புகிறாய்?
உமை அனேக ஆயுதங்கள் இருக்க நீர் ஏன் பினாகத்தை வைத்து கொள்ள கருதுவது ஏன்?
சிவன்  : முன்னொரு காலத்தில் கண்வர் என்னும் மகரிஷி ஒருவர் இருந்தார். கடுமையாக தவம் செய்ததன் காரணமாக அவர் தலையில் நாளடைவில் புற்று உண்டானது.அதிலிருந்து மூங்கில் முளைத்தது.  அதனை பொறுத்துக் கொண்டு அவர் தனது தவத்தினை தொடர்ந்து செய்து வந்தார். தவத்தினால் பூஜிக்கப்பட்ட பிரம்ம தேவர் அவருக்கு வரம் அளித்து பின் அந்த மூங்கிலை எடுத்து வில்லாக செய்தார். என்னிடத்திலும் விஷ்ணுவிடத்திலும் சாமர்த்தியம் இருப்பதை அறிந்து இரண்டு வில் செய்து எங்களிடம் அளித்தார். பினாகம் என்பது என் வில். சார்ங்கம் என்பது விஷ்ணுவின் வில். அவ்வாறு செய்தது போக மீதமிருந்த மூங்கிலையும் வில்லாக செய்தார். அதுவே காண்டீவம். குற்றம் அற்றவளே, இந்த ஆயுதங்களின் வரலாற்றை உனக்குச் சொன்னேன், இன்னும் என்ன கேட்க விரும்புகிறாய்?
உமை வேறு வாகனங்கள் இருக்கையில் நீங்கள் ஏன் ரிஷபத்தை வாகனமாக கொண்டுள்ளீர்கள்?
தொடரும்
*வாருணை  – மதிமண்டலத்தில் ஊறும் அமுதம்
புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும்

( நீண்ட கால விருப்பம் இது. இது குறித்து எழுத நினைக்கும் போதெல்லாம் இதன் எல்லை அற்ற விரிவு என்னை மௌனமாக்கி விடும். காரணங்கள் அற்று ஒரு உந்துதலில் இதை எழுத ஆரம்பித்திருக்கிறேன். இதனை எழுத எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் நீக்க மற நிறைந்திருக்கும் சிவனும், சக்தியும், சிவனுக்கு நிகரா இருப்பினும் என்றும் தன்னை தன்னை வெளிப்படுத்தாது அருள் காட்டும் எனது குருவருளும் துணை செய்யட்டும் )
இந் நிகழ்வுகள் மகாபாரதம் அனுசாஸன பர்வத்தில் இடம் பெற்றுள்ளவை
தொடக்கம் 204 அத்யாயம்.
கூடி இருக்கும் ரிஷிகள் கிருஷ்ணரை பார்த்துஉலகில் ஆச்சரியமானது ஒன்றை நீங்கள் கண்டிருந்தாலும், கேட்டிருந்தாலும் அதை உரைக்க வேண்டும்என்றனர்.
நான் மானிட வடிவத்தில் இருப்பதால் எதுவும் உரைப்பதிற்கு இல்லை, அதனால் என் அறிவும் வரையறைக்கு உட்பட்டது என்றார்.
எனவே ரிஷிகள் அனைவரும் நாரதரே உக்கிரமான தவம் உடையவர், கிருஷ்ணருக்கு அன்பானவர், பழைய சரித்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் என்று நிச்சயித்து அவரை அணுகினார்கள்.
அவர் உமா மகேஷ்வர ஸம்வாதம் குறித்து சொல்லத் தொடங்கினார்.
ஒரு முறை அனைத்தும் அறிந்த தேவி, விளையாட்டாக சிவனின் கண்களை மூடினார். உலகத்தினை நிறைவு செய்யும் பிரளம் போன்ற நிகழ்வு உண்டானது. எனவே சிவனிடத்தில் இருந்து பிரளயாக்கினிக்கு நிகரான ஒளி நிரம்பிய மூன்றாவது கண் உண்டானது.
அந்த ஒளி இமயமலையை எரித்துவிட்டது. இதனால் உமை துயருற்றாள். சிவன் குளிர்ந்த மனத்துடன் மீண்டும் இமயமலையை முன்போல் தோற்றுவித்தார்.
உமை : பகவானே, இது எனக்கு மிகவும் ஆச்சரியம் ஊட்டுவதாக இருக்கிறது. அக்கினி என்பிதாவான இமயமலையை எரித்து விட்டது, மீண்டும் நீங்கள் பார்த்தவுடன் அது முன்போல் ஆனது. அது எவ்வாறு?
சிவன் : நானே எல்லா உலகங்களுக்கும் முதல்வன் என்றறி. எல்லா உலகங்களும் விஷ்ணுவுக்கு எப்படியோ அப்படியே எனக்கும் உட்பட்டவை. விஷ்ணு படைப்பவர், நான் காப்பவன். சிறுமி ஆகிய நீ இதை அறியாமல் என் கண்களை மூடினாய்.சந்திர சூரியர்கள் இல்லாமையால் உலகம் இருளில் மூழ்கியது. எனவே உலகை காக்க மூன்றாவது கண்ணை தோற்றுவித்தேன்.
(யோக மார்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் மூன்றாவது நேத்ரம் எத்தனை முக்கியமானது என்று அறிவார்கள். இது குறித்து குருமுகமாக அறிக.)
உமை : பகவானே உமது கீழ்திசை முகம் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறதே, வடக்கு மற்றும் மேற்கு திசை முகங்கள் பார்க்க அழகாக இருக்கிறது, தென் திசை முகம் ஜடைகளால் மூடப்பட்டு பயங்கரமாக இருக்கிறது அது ஏன்?
தொடரும்
*வாருணை  – மதிமண்டலத்தில் ஊறும் அமுதம்
புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்