ஆடிப் பெருக்கு

ஆடிப் பெருக்கு

தமிழ் மாதம் ஆடியில் வரும் 18ம் தேதி ஆடிப் பெருக்கு.

வீட்டில் வயதானவர்களுடன்(பெரும் பாலும் – பாட்டி) ஒரு குட்டிக் குழந்தைகள் அவர்கள் உலகங்களுடன் செல்வார்கள்.

மயிலாடுதுறை – சுடுகாட்டுத்துறை, முங்கில் பாலம்(இப்போது இல்லை) துறை – 2, படித்துறை விஸ்வநாதர் துறை(கூட்டம் குறைவுதான்), மற்றும் லாகடம்.

காவிரி நதிக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இது நிகழும்.

டேய் பசங்களா, கொஞ்சம் ஆட்டம் போடாதீங்கடா, தண்ணீ கலங்கிடும்( அப்பவே 2 ஆள் ஆழத்துக்கு தண்ணி)

நீங்க வேணும்ணா வேற துறைக்கு போய் சாமி கும்பிடுங்க .

எப்படியா இருந்தாலும் வீட்டுக்குத்தான வருவ, அப்ப பேசிக்கிறேன்.

கடந்த வருடத்தில் திருமணமான தம்பதியரின் மாலைகள் வீட்டில் ஏதோ ஒரு இடத்தில் மாட்டி வைக்கப் பட்டிருக்கும். அதை வயதானவர்கள் ஆற்றில் விட எடுத்து வருவார்கள்

டேய், பசங்களா, இந்த மாலை எல்லாம் நடு ஆத்துல விடுங்கடா பாப்போம். – பாட்டிகள்,
‘ஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்’ –  இது கூட்டம்.

படைக்கப்பட இருக்கும் பொருளில் ஒரு மஞ்சள் கயிரு இருக்கும்.
‘டேய் கயரு கட்டிக்க வாங்கடா’
கடைசியாக வரேன், (யார் அதிக நேரம் நீரில் இருப்பவர்களே வென்றவர்கள்)

டேய் கம்னேட்டி(நான் அறிந்த வரையில் இது கும்பகோணம் மற்றும் அவை சார்ந்த பகுதி மக்கள் திட்டும் பாஷை) சீக்கிரம் கரை ஏறுடா, தலையில தண்ணி கொட்டுது.

அப்போதுதான் சப்பரம் ஞாபகம் வரும். (சிறிய வடிவ தேர். உள்ளே சாமி படம் ஒட்டப் பட்டிருக்கும்). அலங்காரம் முடிந்து அது வீடு வரையில் இழுத்து வரப் படும். கூடவே நண்பர்கள் கூட்டம்.

கலர் அன்னங்கள் – படையல் வீட்டில், மறுபடியும் விளையாட்டு தொடரும் – இது வீதிகளில்.

காவிரியினில் நீர் உண்டோ இல்லையோ, நினைவுகளில்….

Loading

சமூக ஊடகங்கள்

2038 – கடவுள் மறுப்புக் கொள்கை

1.
நாங்கள் கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள். அதனால் ஏற்கவில்லை என்பதே என் கருத்து.(பெயர் – Saaraavanaakumaar)

2.
தெய்வம் என்பது பொய். (வீடுகளில் பூஜை அறை வீடு மாதிரி இருக்கும்)

3.
எண் கணிதம் என்பது பொய். இந்த காலத்தில இத நம்ப முடியுமா.(கார் நம்பர் 5ன்னு இருக்கணும்.  எல்லா எழுத்தையும்  கூட்டினாலும் 5 வரணும்

4.
நான் அடுத்த வருஷம் அமெரிக்கா போலாம்னு இருக்கேன்.
இந்த தேதி நல்லா இருக்கும் சார்.
என்னா சார் நீங்க, தேய் பிறை சதுர்த்திய நாள் குறிக்கிறீங்க. 6ம் தேதியும், சஷ்டியும் வரமாதிரி குறிச்சி குடுங்க.

5.
உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் கடவுள் மறுப்பு பத்தி எழுதினத்துக்கு 50 பேர் பாராட்டியிருக்காங்க.

Loading

சமூக ஊடகங்கள்

இறைவழிபாட்டில் வாசனை மலர்களும் வாசனைப் பொருள்களும்

இறைவழிபாட்டில் வாசனை மலர்களையும், மணம் மிக்க பொருள்களையும் சேர்ப்பது ஏன்?

ஆன்மீகம் –  இறைவனுக்கு உகந்தது. அதனால் மகிழ்வு ஏற்படுகிறது.

அறிவியல் – மணம் மிக்க பொருள்கள் உடலினில் மாறுதல் ஏற்படுத்தும். அவைகளை உணரும் போது நீண்ட சுவாசம் நிகழும். அது இதயத்தின் அனைத்து பகுதிகளிலிலும் நீண்ட காற்றினை செலுத்தும். சுவாசம் சீராவதால் உடல் நிலையில் மாறுதல் ஏற்படும்.

முன் காலத்தில் வாசனைப் பொருள்கள் அனைத்தும் இயற்கையானவை. அதன் மூலப் பொருள்கள் உடலில் மாறுதல்களை ஏற்படுத்தும்.

Loading

சமூக ஊடகங்கள்

அசையா வானவில்

சில பாடல்கள் மழையைத் தூவிச் செல்லும், சில பாடல்கள் வெய்யிலை இறைத்துச் செல்லும்.

சில வானவில்லை விட்டுச் செல்லும்.

அப்படிப்பட்ட பாடல் தான் பட்டாகத்தி பைரவன் படத்தில் வரும் – எங்கெங்கோ செல்லும்’ என்ற பாடல்.

மெல்லிய இசையுடன் ஆரம்பிக்கிறது பாடல்.

கவிதைக்கான முழுவடிவமும் இப்பாடலில்.

நான் காண்பது உன் கோலமே, அங்கும் இங்கும் எங்கும்
என் நெஞ்சிலே உன் எண்ணமே அன்றும் இன்றும் என்றும்

கல்லானவன் பூவாகிறேன் கண்ணே உன்னை எண்ணி
பூவாசமும் பொன் மஞ்சமும்

எதற்காக வாழ்ந்தேன் உனக்காக வாழ்வேன்.

ஒரு மழைக்கால ஃபில்டர் காபி போல,
அழகிய பனிக்காலையில் பூத்திருக்கும் பூக்களின் மேல் பனித்துளி போல,
பவழ மல்லியின் வாசம் போல,
கரை புரளும் காவிரி போல,
விழாக் கால இசை வாசிப்புகள் போல,
கவிதையில் வாசிப்பு அனுபவம் போல

எத்தனை சொன்னாலும் அதனுள் பொருந்துவதாக அமையும் இசையும் வரிகளும்.

அசையா வானவில் என்னுள் இன்றும்.

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

குற்றமற்ற ஒன்றும், இயக்க வல்லமை உடையதும், முற்றும் உணர்ந்த ஒருவன் இருக்க வேண்டும். அவனால் மட்டுமே குற்றம் உடைய ஆன்மாக்களை சரி செய்ய முடியும். (தேர்வு எழுதுவனை கண்காணிக்கும் கண்காணிப்பாளர் போல்). அந்த நிலைக்குப் பெயர் சர்வஞ்ஞத்வம்.

எல்லா பொருள்களை அறிவிக்கவும் அதனை அசைவிக்கவும் அவனால் முடியும் எனவே அவன் சர்வவியாபகன்.

பசுவாகிய தன்னை கட்டுப்படுத்த வேறு ஒரு பதி வேண்டும். அவன் எல்லா காலங்களிலும் (பிரளய காலம் உட்பட) எல்லா காலத்திலும் இருப்பதால் நித்யதத்துவம் உடையவன்.

Loading

சமூக ஊடகங்கள்

2038 – போக்குவரத்து

1.
இன்னைக்கு ரொம்ப நல்ல நாள்.
ஏன்?
பீச்ல இருந்து தாம்பரம் வரைக்கும் வண்டில ஒரு அவர்ல வந்துட்டேன்.

2.
திருவான்மீயூர் – ஒவ்வொரு வீட்டிற்கும் 10 கார் 20 டூவீலர் இருக்கிறது by RTO. (தற்போது – 2 கார், 3 டூவீலர்)

3.
வாகன விற்பனை குறைவால் எல்லா வாகனமும் உற்பத்தி 0.25 அவருக்கு  நிறுத்தி வைப்பு.(தற்போது 1 வாரம்)

4.
எல்லாரும் 10000 ரூ நோட்டா கொடுத்தா என்ன செய்யறது. ரூ 1000மா கொடுங்க.

5.
உங்க வண்டிய 125வது மாடியில பார்க் பண்ணுங்க, ஒரு நிமிஷத்திற்கு ரூ. 100/-

Loading

சமூக ஊடகங்கள்

பெண் – இளமை துறத்தல்

வந்த சிவனடியார் அமுது உண்டு சென்றார்.

பரம தத்தன் பசியோடு வீடு திரும்பினான். புனிதவதியார் அமுது படைத்தார். அதோடு மாங்கனியையும் படைத்தார்.

மிகுந்த பசியோடு இருந்ததால் அவன் சொன்னான் ‘இன்னொன்றை எடுத்து வந்து இடுக’.  கணவன் மனைவி இருவருக்கும் இரட்டைகள் என்பது பொதுவானது. (இன்பத்திலும் துன்பத்திலும், வாழ்விலும் தாழ்விலும் – திருமண மந்திரம்). இது விடுத்து அவன் தான் மட்டும் உண்ண  நினைத்தது  தவறானது.

புனிதவதியார் திகைத்தார். இறைவனிடம் சென்று வேண்டினார். மற்றொன்று கிடைத்தது. அதனை அவனிடம் கொடுத்தார் புனிதவதியார். இது வரை அறையா சுவையாக இருந்தது. காரணம் வினவினான் பரம தத்தன்.

நடந்ததை விளக்கிச்சொன்னார் புனிதவதியார்.

பரம தத்தன் நம்பவில்லை. அவன் கூறினான். ‘அப்படி எனில் மற்றொன்றை இடுக’.

புனிதவதியார் இறைவனிடம் வேண்டினார். மற்றொன்று கிடைத்தது.

அதைக் கொண்டுவந்து பரம தத்தனின் கைகளில் அதை இட்டதும் அவன் அதை வாங்கினான். வாங்கியதை உணர்ந்ததும் அது மறைந்து விட்டது. பரம தத்தன் திகைத்தான். அவன் சொன்னது ‘மற்றொன்றை இடுக’ என்றுதானே அன்றி அதை தான் உண்ண வேண்டும் என்று சொல்லவில்லை. எனவே இட்ட உடன் மறைந்து விட்டது.

பரம தத்தன் தெய்வத்திற்கு தீங்கு இழைத்து விட்டதாக நினைத்தான். எனவே வியாபார நிமித்தமாக கடல் மார்க்கமாக பயணம் தொடந்தான்.

நம் பயணமும் கடல் மார்க்கமாக தொடர்கிறது.

Loading

சமூக ஊடகங்கள்

2038- ரியல் எஸ்டேட்

1.
சென்னைக்கு மிக அருகில் சுமார் 700 கி.மி (கன்யா குமரியில் இருந்து 10 கி.மி தூரத்தில்) இடம் விற்பனைக்கு

2.
எங்களிடம் திண்டிவனத்திற்கு அருகில் 100 பிளாட் வாங்குபவர்களுக்கு, 1கிராம் தங்கம் இலவசம்.

3.
எங்களிடம் இன்றே அடுக்கு மாடி குடியிருப்புகள் புக் செய்யுங்கள். சரியாக 2063ல் உங்களிடம் வீடு ஒப்படைக்கப்படும்.

4.
இங்க பாருங்க, இது எங்க நாய் கட்டி வைக்கும் இடம். அடுத்த நாய் வாங்குற வரைக்கும் அத வாடகைக்கு விடறோம். வாடகை – 1,00,000/- 100 மாசம் அட்வான்ஸ். புடிக்கலன்னா சொல்லிடுங்க, அடுத்த பார்டி வெயிட்டிங்.

5.
எங்களிடம் அடுக்கு மாடி குடியிருப்பு வாங்குபவர்களுக்கு முதல் மாதம் தினமும் 1லி தண்ணீர் இலவசம்.

Loading

சமூக ஊடகங்கள்

வெறும் தரையில் படுத்து உறங்கக் கூடாது. ஏன்?

வெறும் தரையில் படுத்து உறங்கக் கூடாது. ஏன்?
ஆன்மீகம் – பூதம் தூக்கிப் போய்விடும்(குழந்தைகளுக்காக).
அறிவியல் – புறச் சுழ்நிலைகளால் தரையின் வெப்ப நிலை அதிகமாக இருக்கும். நம் உடல் வெப்ப நிலையோடு ஒப்பிடும்போது இது மிக அதிகம். இதனால் இரத்த ஓட்டம் தடைபடும் மற்றும் குன்றிவிடும். (உ.ம் – சூடான தோசைக் கல்லில் நீர் தெளித்தல்). இதனால் இரத்தம் மற்றும் வெப்பம் சம்மந்தமான வியாதிகள் வரும்.
(கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன் –  தலைவர்  சூப்பர் ஸ்டார்)
Photo : Internet

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

ஆன்மா குற்றங்கள் உடையது என்று கண்டோம்.
சுதந்திரமின்மை கொண்டது ஆன்மா. நினைத்தபடி ஒரு காரியத்தை முடியாமல் இருப்பதைக் கொண்டு இதை அறியலாம். 
பொருள் மீது ஆசை கொள்ளுதல் என்பது அதிருப்தியை உண்டாக்கும். பக்குவமற்ற ஆன்மாக்கள் இச்சை கொண்டு உழலுவதால் அது அதிருப்தி உடையது என அறியலாம்.
தன்னை அறிதல் இயற்கை. தன்னை அறியும் அறிவு இருந்தும் தன்னை அறியும் சக்தி இல்லாமையால் ஆன்மா செயற்கை உணர்வு உடையது.
பிறப்புகள் பலவகைப்படும்.தாவரம்,நீர்வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மனிதர் மற்றும் தேவர். (புல்லாகி புழுவாகி என்ற மணிவாசக் பெருமானின் வரிகள் நினைவு கூறத்தக்கவை. 
பஞ்ச பூதங்களின் வயப்பட்டு(பிருதிவி, அப்பு, தேயு,வாயு மற்றும் ஆகாயம்) ஆன்மா குற்றங்களை உடையது. எனவே குற்றமற்ற வேறு ஒன்று அதை இயக்க வேண்டும்.  அதன் பொருட்டே ஆன்மாக்களின் பிறப்பு.

Loading

சமூக ஊடகங்கள்

சோம்பல் தவிர்

மஹாபாரதம் – சாந்தி பர்வத்தில் வரும் கதை – தற்கால வடிவங்களுடன்.

குட்டி –  அம்மா, ஒரு கத சொல்லேன்.

அம்மா – ‘ஒரு ஊர்ல ஒரு ஒட்டகம் இருந்துச்சா’

குட்டி – ‘ம்’

அம்மா – ‘அது சாமிகிட்ட தவம் இருந்து ஒரு வரம் வாங்கிச்சாம்’

குட்டி – ‘என்னான்னு’

அம்மா – ‘நான் நகந்து போகாம சாப்பிடனும், அதுக்கு என் கழுத்து அவ்வ்வ்வ்வ்வ்வ்ளவு நீளமா வளரனும்’

குட்டி – ‘அது எப்படி’

அம்மா – ‘அது தான் கதயே. சாமியும் வரம் குடுத்துட்டாராம்’

குட்டி – ‘ரொம்ப ஜாலி இல்ல’

அம்மா – ‘கதய கேளு. அதுக்கு அப்புறம், அது ஒரு குகையில இருந்து நகராமலே எல்லா மரத்திலேருந்தும் எல்லா இலையையும் சாப்டுச்சாம்’.

குட்டி – ‘ம்’

அம்மா – ‘அதனால அது ரொம்ப குண்டாயிடுச்சாம்’

குட்டி – ‘நம்ம ஆகாஷ் மாதிரி. ஹா ஹா’

அம்மா – ‘அப்ப ஒரு பெரிய வெள்ளம் வந்துச்சாம். அதனால அதால நகர முடியலியாம்.

குட்டி – ‘ம்’

அம்மா – ‘அப்ப வெள்ளத்துல ஒரு நரி வந்துச்சாம். அதுக்கு ரொம்ம பசியாம். அது இந்த ஒட்டகத்தை   சாப்டுடுச்சாம்’

குட்டி – ‘ஏன் ஒட்டகம் ஓடலையா’

அம்மா – ‘சோம்பேறியா ஒரே இடத்துல இருந்ததால அதால ஓட முடியல. அதனால சோம்பேறியா இருக்கக்கூடாது. ஏய் எங்க ஒடற’

குட்டி – ‘விளயாடப் போறேன். நீதான சொன்ன சோம்பேறியா இருக்கக்கூடாதுன்னு’

Loading

சமூக ஊடகங்கள்

பெண் – இளமை துறத்தல்

காரைக்கால் அம்மையார்

இவர் காரைக்காலில் பிறந்தவர். இயற்பெயர் – புனிதவதி. வணிகர் மரபினை சார்ந்தவர்.

இளமை முதலே சிவ பக்தியில் சிறந்தவராக விளங்கினார். சிவ பத்தர்களை சிவனாகவே எண்ணி வணங்குவார்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரமதத்தன் என்பவருக்கு புனிதவதியை மணம் செய்து வைத்தார் அவர் தந்தையார்.

தந்தையாருக்கு புனிதவதியை கணவன் வீட்டிற்கு அனுப்ப மனம் இல்லை. எனவே காரைக்காலில் பரமதத்தன் தனது வியாபாரத்தை தொடர்ந்தார்.

பரமதத்தனை சந்திக்க வந்தவர்கள் அவனிடம் இரண்டு மாம்பழங்களை கொடுத்துச் சென்றனர்.(இதில் பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. இவைகள் இரட்டை என்ற கருத்துக்கு வலிமை சேர்க்கின்றன.கணவன் – மனைவி, பரமாத்மா – ஜீவாத்மா)

பரமதத்தன்  வேறு ஆள் மூலமாக அந்தப் பழங்களை புனிதவதியிடம் கொடுத்து அனுப்பினான்.புனிதவதி மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்தார்.

ஐந்தொழில் புரிவோன் நாடகத்திற்கு தயாரானார்.

அப்போது வாயிலில் குரல் கேட்டது. ‘சிவாயா நம’

காரைக்கால் அம்மையார்,’திரு அமுது(சோறு) தயாராக இருக்கிறது. கறிஅமுது இன்னும் தயாராகவில்லை, சற்று பொருத்திருங்கள்’

சிவனடியார் – ‘மிக்க பசியாக இருக்கிறது. இருப்பதைப் படையுங்கள்’.

எனவே அமுது படையல் பரமதத்தன்  அனுப்பிய ஒரு மாங்கனியோடு நிகழ்தது.

காத்திருங்கள்.. நாயகனின்  நாடகத்திற்கு..

Loading

சமூக ஊடகங்கள்

அக்னி

யயாதி என்றொரு மன்னன் இருந்தான். அவன் நகுஷனின் புத்திரன்.
அவன் மக்களின் சந்தோஷம் முதன்மையானது என்று ஆட்சி செய்தான்.அவனுக்கு 5 புதல்வர்கள்.
பல வருடங்கள் ஆட்சி செய்தப்பின் ரூபத்தை அழிப்பதும், மிக்க துன்பத்தை தரத்தக்கதுமான முதுமையை அடைந்தான்.
அவன் தனது புதல்வர்களை அழைத்து தான் இளமையோடு இருக்க விருப்புவதாக கூறினான். 
புதல்வர்கள் இதனால் ‘தங்களுக்கு என்ன பயன்’ என்று கேட்டார்கள்.
‘எனது முதுமையை வாங்கிக் கொள்வர்கள் அரசாட்சி செய்யலாம்’ என்றான்.
மகன்கள் விரும்பவில்லை.
பூரூ என்ற மகன் ‘தான் முதுமையை ஏற்றுக் கொள்கிறேன்’ என்றான்.
பல ஆண்டுகள் இளமையோடு இருந்து எல்லா சுகங்களையும் அனுபவித்தான். பல வருடங்களுக்குப் பின் அவனுக்கு ஞானம் வந்தது. ‘காமம் விரும்பியவைகளை அனுபவிப்பதால் தீருவது இல்லை. அது அக்கினியில் இடப்பட்ட நெய் போல் ஜ்வலிக்கிறது. எத்தனை வகையான பொருள்களை அனுபவித்தாலும் அது ஒழிவை அடைவதில்லை.எந்த காலத்திலும் எப்பொழுதும் தீமை செய்யாமல் இருக்கிறானோ அப்போது அவன் ப்ரம்மம் ஆகிறான். எப்பொழுது விருப்பு வெறுப்பு அற்று இருக்கிறானோ அப்போது அவன் ப்ரம்மம் ஆகிறான்’.
மீண்டும் பிள்ளையிடம் இருந்து மூப்பினை வாங்கிக் கொள்கிறான்.
காமியார்த்தமாக சொன்னால் – பெரும்பாலான பிள்ளைகள் தந்தை சொல் பேச்சினை கேட்பதில்லை.
ஆத்மார்த்தமாக சொன்னால் – சுகம் அனுபவித்தல் முடிவில்லாதது. தன்னைத்தான் வெல்ல வேண்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

சைவ சித்தாந்தம் மிகப் பெரியது என்பதால் இனி இத்தொகுப்புகள் – ‘சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்’ என்ற தலைப்பில் வரும்.

ஆன்மாக்கள் நித்தியமனவைகளாக இருக்கின்றன. தேகம் அழிவதால் அது அநித்தியம். கர்ம வினைகளின் காரணமாக பல பிறப்புகள் எடுக்கும், ஆத்மா மாற்றம் மட்டுமே கொள்கிறது. அது அழிவதில்லை. பல பிறப்புகளுக்கு காரணமாக மட்டும் அமைகிறது.

காமம், குரோதம், லோப மோக மதம் மாற்சரியம் இவற்றின் காரணமாக (அக்காரணிகள்) ஆன்மா குற்றங்களை உடையாதாக இருக்கிறது.

காமம்: பற்றினால் உண்டாகும் பாசம்

குரோதம்: கோபம்

லோபம்: பேராசை

மதம்: மிகு கோபம்/வெறி பிடித்த நிலைமை.

மாத்ஸர்யம்: பொறாமை

மேற் கூரிய காரணங்களால் ஆன்மா, மலத்தால் சூழப்பட்டிருக்கிறது.

‘செம்புல பெயல் நீர் போல்’ என்பது வாசகமாகும். அது போல் ஆன்மா வினைகளின் காரணமாக அதன் வடிவம் பெறுகிறது. இது ஆன்மாவிற்கு இயற்கை உணர்வு இல்லை என்பதை உணர்த்துகிறது.

Loading

சமூக ஊடகங்கள்

2038 – ஊடகம்

இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.

இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.

1.
ரஜினி முதன் முதலில் குடித்த சிகிரெட் – எங்களது புத்தகத்தில் மட்டும்.

2.
இன்றைய நிலவரம்
தங்கம் விலை
வெள்ளி விலை
பெட்ரோல் விலை
டீசல் விலை
கற்பழிப்புகள்
கொலை – 9632871(சென்னை மட்டும். சிறுவர்கள் கணக்கில் சேர்க்கப் படவில்லை).
நீக்கப் பட்ட அமைச்சர்கள் – 3
சேர்க்கப் பட்ட அமைச்சர்கள் – 51

3.
பெட்ரோல் வரலாறு காணா விலை ஏற்றம் – 0.01 பைசா. பெட்ரோல் பங்குகளில் அடிதடி. 100 பேர் சாவு.

4.
உலக அழகி கர்ப்பம். வியாபாரம் நஷ்டம் 1000 கோடி.(தற்போது 50 கோடி)

5.
இங்கு வெளியாகி இருக்கும் கூப்பனை வெட்டி வந்து எங்களிடம் கொடுத்தால், ஒன்றுக்கு ஒன்று கார் ஃப்ரி(நீங்கள் விரும்பும் மாடல்).

Loading

சமூக ஊடகங்கள்

பெண் – இளமை துறத்தல்

நான் அறிந்த வரையில் (மிக மிக சிறிய அளவு) பக்தி இலக்கிய காலத்திலிருந்து தற்காலம் வரை இரண்டு பெண்கள் தனது இளமையை துறந்திருக்கிறார்கள்.  (பல ஆண்கள் விரும்பி இருக்கிறார்கள்.  உ.ம் யயாதி – புரு – மஹாபாரதம்)

1. ஔவையார்,
2. காரைக்கால் அம்மையார்.

இருவருக்குமே இளமையின் மீது ஏன் அந்த வெறுப்பு ஏற்பட்டது?

1.சமூகம்
2.பொருளாதாரம்
3.வீடு
4.இறைமை குறித்த சிந்தனைகள்
5.காரைக்கால் அம்மையாருக்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்து வரும் திருநீல கண்ட நாயனார் முலமாக வெளிப்பட்ட /பதிவு செய்யப்பட்ட ‘இளமை மீதூற இன்பத்துறையில் எளியன் ஆனார்’ என்ற எண்ணங்களின் துறத்தலா?
6.துறக்கப்பட்ட விஷயத்தில் இருந்த வலிகள்/காயங்கள்/வடுக்கள்.
7.இலக்கு நோக்கிய பயணம்.

நோக்கம் இருவருக்கும் ஒன்றாகத்தான்  இருந்திருக்கிறது.

காரைக்கால் அம்மையார் – என் சிறுவயதில் சொல்லப்பட்ட கதை இது.  இந்த பிரமிப்பு மற்றும் வலிகள் இன்றும் தொடர்கிறது.

ஒரு சராசரி ஆண் எப்படி வாழ்க்கையை நடத்தினான்,  இறையருளால் ‘அம்மா’ என்று அழைக்கப்பட்ட பெண் எப்படி அடைய முடியா இலக்கை அடைந்தாள் என்பது மிக நீண்ட வரலாறு.

காலத்தினை கருத்தில் கொண்டு காரைக்கால் அம்மையார் சரிதத்தை எழுத இருக்கிறேன். தவறு இருப்பின் தெளியப் படுத்துங்கள்.

Photo – Shivam

Loading

சமூக ஊடகங்கள்

2038 – மருத்துவம்

இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.

இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.

1.
சார், லைன்ல வாங்க சார். நாங்களும் எங்க சொந்தக்காரன்களை ‘கருணைக் கொலை’ செய்யத்தான் நிக்கிறோம். எங்க டோக்கன் நம்பர் – 9876231. எப்படியும் கிடைச்சிடும். கவலைப்படாதீங்க.

உங்களுக்கு மாமியார், எனக்கு என் பொண்டாட்டி சார்.

2.
சார், மேடம் இங்க பாருங்க, இந்த இதயத்தை வாங்குங்க சார். லைப் டைம் வாரண்டி சார் – கடைகளில்.

3.
அதிசயம். டாக்டர்கள் சாதனை. கருவில் இருக்கும் 3 மாத குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை.

4.
இங்கு மனித மூளையின் பதிவுகள் 10 நிமிடத்தில் பிரதி எடுத்துத் தரப்படும்.

5.

Hi, This is XXX , we want sperm donors. Because my husband have zero sperm count. He candidate should be Master degree graduate from I** and height – 5ft 9 inch, body weight 72kg. You will receive one time payment of Rs. 99 Lacs

Loading

சமூக ஊடகங்கள்

வளையல் காப்பு

வளையல் காப்பு அணிவிப்பது எதனால்?

ஆன்மீகம் – குலத்தை வளர்க்க வரும் குழந்தையை வரவேற்க தயாராகிறோம்.

அறிவியல் – குழந்தையின் வளர்ச்சி (உயிர்) 5ம் மாதத்தில் தொடங்குகிறது. அது முதல் தாயில் உணவினை உண்டு தாயின் எண்ணங்களை சுவாசிக்க துவங்குகிறது. (உ.ம் –  அபிமன்யு) அதிக வளையல்கள் சப்தம் எழுப்பக்கூடியவை. அவை தாயிக்கு சந்தோஷம் அளிக்கும். எனவே குழந்தை நல்ல மன வளர்ச்சியோடு பிறக்கும்.

Loading

சமூக ஊடகங்கள்

2038 – சமூகம்

2038  – சமூகம்
1.
என்னப்பா, உனக்கு குழந்தை பிறக்க போவுதாமே, அதுக்கு முனைவர் பட்டம் படிக்கிறத்துக்கு பணம் கட்டி வச்சிட்டியா?

2.
சார் பின்னால வாங்க சார். அப்ளிகேஷன் வாங்க நான் போன வருஷத்திலிருந்து நிக்கிறேன். குறுக்க வராதிங்க சார்.

3.
எங்க பள்ளில PRE K.G ரொம்ப ஈசியா இடம் கிடைச்சிடும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒன்னு தான். உங்க பேர்ல தி. நிகர்ல இருக்கிற 10 கிரவுண்ட நிலத்தை எங்களுக்கு கொடுத்துடுங்க.

4.
ஏங்க, இப்பவாது பொண்டாட்டி பேச்சை கேளுங்க. அடுத்த வருஷம் நமக்கு குழந்தை பிறந்திடும். இப்ப பணத்தை பேங்கல போட்டாதான் அவன் 58 வயசுக்கு அது கிடைக்கும்.

5.
6மாத குழந்தை. என்ன அந்த ஸ்கூல போடாத. நல்ல ஸ்கூல போடு.

Loading

சமூக ஊடகங்கள்

மொட்டை அடித்தல்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொட்டை அடிப்பது எதற்கு?

ஆன்மீகம் – தலையான பொருள் முடி. எனவே அதைத் தருகிறோம்.

அறிவியல் – வெட்டப்படும் முடிகளே அதிகம் வளரும்.  வியர்வை மற்றும் அழுக்கு காரணமாக மயிர் கால்கள் இடையில் அழுக்கு சேரும். மொட்டை அடிக்கும் போது இதை பெரும்பாலும் கண்டிருக்கலாம். தொடர்ச்சியாக இதை நீக்குவதால் தலை சார்ந்த வியாதிகள் வரும் வாய்ப்பு குறையும்.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!