Category: கவிதை
எச்சில் படிந்த நினைவுகள்
முன்னுரை
அனாகத நாதம்
அரூபநதி
தினம் தினம் தீபாவளி
கார்காலம்
மீளா உறக்கம்
காசுக் கடவுள்
கொண்டாடுதல்
வினைகளின் வழியே
பிறந்து பார்,
வேறு என்ன இருக்கிறது?
புழுதி நிறைந்த தெருக்களில்
விளையாடு,
வேறு என்ன இருக்கிறது?
உறவுகளோடு சொந்தம்
கொண்டாடு,
வேறு என்ன இருக்கிறது?
கற்றல் தவிர்த்து
அனைத்து விஷயங்களையும் செய்,
வேறு என்ன இருக்கிறது?
பெரு மிருகங்களால்
துரத்தப்படும் சிறு மிருகமாய்
வேலை தேடு,
வேறு என்ன இருக்கிறது?
தனிமை விலக்க
தவறா மணம் செய்,
வேறு என்ன இருக்கிறது?
மனைவியின் வார்த்தைகளால்
வலி கொள்,
வேறு என்ன இருக்கிறது?
குளிரில், ஊன் முழுவதும்
புண்ணாகி குரைத்துச்
செல்லும் நாயினைப் பார்,
வேறு என்ன இருக்கிறது?
தவறாது தமிழ் இலக்கியம் படித்து
தவித்துப் போ,
வேறு என்ன இருக்கிறது?
மகிழ்வின் விளைவாய்
மகிழும் குழந்தை கொள்,
வேறு என்ன இருக்கிறது?
பெருங்குரலுடன் கரைந்து
செல்லும் காகத்தினை உணர்,
வேறு என்ன இருக்கிறது?
கனவுகளில் வாழ்வினை நடத்து
வேறு என்ன இருக்கிறது?
ஒட்டு பீடியும் ஊறுகாயும் கொள்,
வேறு என்ன இருக்கிறது?
மனிதர்களால் விலக்கப்படு,
வேறு என்ன இருக்கிறது?
தடம் மாறாது தனித்துச் செல்லும்
பறவைக் கூட்டங்களை காண்,
வேறு என்ன இருக்கிறது?
தனிமைகளுடன் தனித்திரு,
வேறு என்ன இருக்கிறது?
யாருமற்ற இரவில்
தடயங்கள் அற்று
மரணம் அறிந்து மரித்துப் போ.
வேறு என்ன இருக்கிறது
வாழ்வினை கொண்டாடுதல் தவிர?
Photo : Devadhai Thozhan (a) Mahendran Thiru
பகுபடுதல்
நெடுமரங்கள்
தனித்த அறையில்
தகிக்கும் தனிமையில்
இருக்கும் ஒருவனை
சந்திக்க நேர்ந்தது.
யாவரும் கண்டு உணர முடியா
செடிகளும் மரங்களும் அவனிடத்தில்.
அவன் கண்களில், காதுகளில்,
மூச்சுக் குழல்களில், செவிகளில்.
அவைகள் தாண்டி
மேனி முழுவதும்.
காரணம் அறிய விரும்பி
கேள்விகளைத் தொடுத்தேன்.
பிறந்து காலமுதல்
அவைகள் தன்னிடத்தில் இருப்பதாக உரைத்தான்.
தோன்றி மறையும் இயல்பு
அவைகளுக்கு உண்டு என்று உரைத்தான்.
இயல்பான தனிமைகளில்
எதிர்பாரா அளவு பரவும் என்று உரைத்தான்.
பேச்சுக்களில் அவைகள்
விருட்சங்களாக ஆவதும் உண்டு என்றும்
அவைகள் இயல்பெனவும் உரைத்தான்.
பேச்சுக்களின் முடிவில்
சில மரங்கள் என்னுள்ளும் வேறூன்றி இருந்தன.