லீலாவினோதினி

உணவுப் பரிமாற்றத்தில்
நடக்கிறது ஒரு உணர்வு பரிமாறம்.
‘ஒங்க அப்பன் பாட்டு எழுதறேன்னு
திரிறான். ஒழுங்கா திங்கச் சொல்லு’
என்கிறாள் உன் அன்னை.
‘அப்படீன்னா பாபா ப்ளாக்ஷீப் கூட தெரியுமா’
என்கிறாய்.
தொட்டுவிடம் தூரத்தில் சொர்க்கம்.

Loading

சமூக ஊடகங்கள்

ஞானம் பிறந்த கதை

முழு நிலவில் குளுமையின்
அருகருகினில் நீயும் நானும்.
பேச்சுகள் திசைமாறி
கனவுகள் பற்றிச் செல்கிறது.
என் கனவு முழுவதும்
நாய்கள் என்று உரைக்கிறேன்.
விதவிதமான நாய்களும்
தோற்றங்களும் என்கிறேன்.
முழுவதுமாய் விளக்கச் சொல்கிறாய்.
சில நாட்களில்
அவைகள் என்னிடம் விளையாடுகின்றன.
சில நாட்களில்
பற்கள் விரிய கோபம் கொள்கின்றன.
சில நாட்களில்
காலை நேரத்து நாய்களாக என்னிடம் விளையாடுகின்றன.
சில நாட்களில்
தேடிய முகம் கண்ட மகிழ்ச்சியோடு ஓடி வருகின்றன.
சில நாட்களில்
இருப்பினை தவிர்த்துவிடுகின்றன என்று உரைத்து.
இதைத் தவிர்க்க வழி கேட்கிறேன்.
‘விழித்திரு’ என்கிறாய்.
ஞானத்திறவு கோலாய் உன் வாக்கு.

Loading

சமூக ஊடகங்கள்

சாயை

வாழ்வு,
விடை தேடும் வினாக்களோடு
விடிகிறது.
விடையளிக்கப் பட்ட கவிதைகளோடு
முடிகிறது.

Loading

சமூக ஊடகங்கள்

தபஸ்

வார்த்தைகளில் பொருள் ஏற்றி
விளையாடும் பொழுதுகள்
உனக்கும் எனக்கும் புதியவை அல்ல.
‘என்னைப் பிடிக்குமா’ என்கிறாய்.
‘மிகவும் பிடிக்கு’ம் என்கிறேன்.
‘எனக்காக உன்
பெயரை மாற்றிக் கொள்வா’யா என்கிறாய்.
‘மாற்றங்கள் அற்றது என் வார்த்தைகள்’ என்கிறேன்.
‘நேசித்தலில் மறத்தல்
ஒரு பகுதி தானே’ என்கிறாய்.
‘உன் பெயர் மறக்கப்படும்
நாளில் என் பெயர் பிணம்’ என்கிறேன்.
கார்காலக் குறிப்புகள் உன் கண்களில்.

Loading

சமூக ஊடகங்கள்

இரவுகளின் நீட்சிமை

சுவற்றின் கூரையினில் ஒட்டியிருக்கும்
நட்சத்திரங்களைப் பார்த்தபடி
எனக்கு குளிர்காலம் மிகவும் பிடிக்கும் என்கிறாய்.
வியப்பினால் விழிகள் விரிவடைகின்றன எனக்கு
‘ஒரு போர்வையினில் செல்ல அப்பாவைக்
கட்டிக் கொண்டு தூங்கலாம் அல்லவா’
என்கிறாய்.
அன்று நீட்சிமை கொண்டது எனக்கான இரவு.

Loading

சமூக ஊடகங்கள்

ஜனனி

பிறந்த குழந்தையை காண வருபவர்களால்
அறை நிரப்பப்பட்டிருந்தது.
எவர் அறியக்கூடும்
அதனையையும் தாண்டி
குழந்தையைக் காணவந்த
மலடி என்று அழைக்கப்பட்டவளின்
கண்ணீர் வலிகளை.

Loading

சமூக ஊடகங்கள்

மகா மாயா

‘ஏன் இப்பொழுது மழை
அடிக்கடி பெய்வதில்லை’ என்கிறாய்.
வினாக்களோடு என் விழிகள் உயர்வடைகின்றன.
‘காகிதக்கப்பல் செய்யக் கற்றுக் கொண்டேன்.
விடுவதற்கு நீர் வேண்டும்’ என்று
விழி நீரை இறைக்கிறாய்.
வெப்ப சலனத்தில் இடம் மாறுகின்றன
சந்தோஷ நீர் ஓடைகள் வாழ்வின் முழுமைக்கும்.

Loading

சமூக ஊடகங்கள்

படைப்பின் பயணம்

ஆதியில் விசித்திரங்களை ஈனும் பூமியில்
நான் விழுந்த போது
எனக்கு சிறகுகள் இருந்தன.
அப்போது நீர்ப் பரப்பு சலனமற்று இருந்தது.
சில பறவைகளுக்கு சிறகுகள் இருந்தன
பல பறவைகளுக்கு சிறகுகளில் முட்களும் இருந்தன.
பல பறவைகள் சிறகுகள் அற்று.
ஏன் இந்த நிகழ்வுகள் என்றேன் அவைகளிடம்.
மாயையின் தோற்றம் படா இடங்களில் சிறகுகள் இருக்கும்;
சந்தோஷ வாழ்வுடன் கோபங்களை வீசியவைகளுக்கும்,
கோபத்தில் தடித்த வார்த்தைகளை வீசியவைகளுக்கும்,
சிறகுகளில் முட்கள் இருக்கும்;
வாழ்வினை கொண்டாடத் தெரியாதவைகளுக்கு
சிறகுகள் அற்று இருக்கும்
என்றும் பகர்ந்தன.
பதிலின் வசிகரத்தில் ‘எனக்கு என்ன ஆகும்’
என்று வினா ஒன்று எழுப்பினேன்
‘விடை தேடுதல் தான் வாழ்வு’ என்று கூறி
அவ்விடம் விட்டு அகன்றன.
தொலை தூரத்தில்
மேகக் கூட்டங்களின் சாயைகள் நீரினில்.
அப்போதும் நீர்ப் பரப்பு சலனமற்று இருந்தது.

Loading

சமூக ஊடகங்கள்

அணையா அடுப்பு

விடுதலையை விரும்பா இறக்கைகள்,
காற்று அடித்தால் தான் காசு சிலருக்கு,
எதிர் வழியில் தான் காசு பலருக்கு,
வீசும் காற்று எங்கும் வெம்மைகள்
வயிற்றின் வலி  நீக்கும் பொருட்டு.

Loading

சமூக ஊடகங்கள்

யாத்திரை

மகள்
பாதி உறக்கத்தில்
விட்டுச் சென்ற
இரவு நேர கதைகளுக்காக
‘ம்’ சொல்ல காத்திருக்கின்றன
பொம்மைகள்.

Image – Internet

Loading

சமூக ஊடகங்கள்

முள் இடரல்

பிரளயத்தின் முடிவினில்
தட்டப்பட்டன
தாசி வீட்டின் கதவுகள்.

Loading

சமூக ஊடகங்கள்

வைராக்கியம்

எல்லா வைராக்கியங்களுக்கு பின்னும்
இருக்கின்றன,
வலி மிகுந்த வறுமைகள்.

Loading

சமூக ஊடகங்கள்

மழை பெய்யும் காலம்

மழையினின் நனைந்து
வீட்டிற்குள் நுழைகிறேன்.
‘குடை எடுத்து போகமாட்டாயா’
என்று  கூறி
எனக்கே எனக்காக
வீட்டிற்குள் குடை பிடிக்கிறாய்.
மழை இடம் மாறி கண்ணுக்குள்.

Loading

சமூக ஊடகங்கள்

வாடிவாசல்

தொலைதூர மனிதர்களிடம் நட்பு,
தொட்டுவிடும் தூர மனிதர்களிடம் விரோதம்
வாழ்தல் தாண்டி
வசதிகளை கொடுத்த வாழ்வு,
வரப்புக்களை உயர்த்தி இருக்கிறது.
ஓட்டம் கொண்ட குதிரை
ஓர் இடத்தில் நிலைபெறாமாலா செல்லும்?

Loading

சமூக ஊடகங்கள்

ஆவாஹனம்

நாளின் முடிவுப் பொழுதினில்
தனித்து நீயும் நானும்.
அறை எங்கும் நறுமணம்.
‘எனக்கான..’ எனத்துவங்குயில்
‘அனைத்தும் அறிவோம்’ என்கிறாய்.
ஆரத்தழுவுதலில்
கனத்திருந்த இதயம் கரைந்து போகிறது.
உனக்கான முத்த மழைகள்
கண்களை நீரினில் கரைத்துவிடுகின்றன.
மீண்டும் வார்த்தைகளைக் கோர்த்து
வாக்கியமாக்க துவங்குகிறேன்.
எல்லைகள் அற்ற பிரணவ ஓலி
எனக்குள் எனக்காக.

Loading

சமூக ஊடகங்கள்

அமிர்தம்

நட்சத்திர ஹோட்டலின் வருமானம்
முதல் பக்கங்களில்
பட்டினியின் சாவு குறித்த விவரங்கள்
எவரும் அணுகமுடியா பக்கங்களில்.

Loading

சமூக ஊடகங்கள்

மயானச் சாலை

பாதையினில்
எழுதப் பட்டிருந்தது
மயானச் சாலை

Loading

சமூக ஊடகங்கள்

பிராப்தம்

காகிதத்தின் பக்கங்களை
கவிதைகளால் நிரப்ப துவங்குகையில்,
முன் பக்கங்களை,
முன் எப்போதும் சந்தித்திராத
கரையான்கள்
அறிக்……——
……..க………….
…துவ………..
ங்கி………
…….இரு…….
ந்தன.

Loading

சமூக ஊடகங்கள்

மஹா பலி

தான் புதைத்த
தலைகளின் மேல் கட்டிடம் எழுப்பி
தலையாட்டி களிப்போடிருந்து
‘தானே எல்லாம்’ எனும் பொழுதுகளில்
சாய்ந்தது தன் தலை.

Loading

சமூக ஊடகங்கள்

உபாதி

நீண்ட நாட்களுக்குப் பின்
கடவுளுடன் நெருக்கம்.
வாழ்விற்கான மாறுதலுக்கு வழி என்ன என்றேன்.
மறுதலித்தலே வாழ்வினை மாற்றும் என்றார்.
மனைவியிடம் தொடங்கலாமா என்றேன்.
‘விதி வசப்பட்டவர்கள் மாந்தர்கள்,
நீயும் விலக்கல்ல’
என்று கூறி அவ்விடம் அகன்றார்.

Loading

சமூக ஊடகங்கள்