சைவத் திருத்தலங்கள் 274 – திருக்குற்றாலம்


தல வரலாறு(சுருக்கம்) /  சிறப்புகள் – திருக்குற்றாலம்

  • பஞ்சசபைத் தலங்களில் இத்தலம் சித்திரசபைத் தலம்
  • கோயில் மலையடிவாரத்தில் சங்கு வடிவில் அமையப் பெற்ற திருத்தலம்
  • திருமால் வடிவில் இருந்த மூல மூர்த்தியை அகத்தியர் சிவலிங்கத் திருமேனியராக மாற்றி வழிபட்டத் தலம் (கந்தபுராணம் திருக்குற்றாலப் படலம்)
  • அகத்தியரின் ஐந்து கைவிரல்கள் பதிந்த அடையாளங்களுடன் மிகச்சிறிய மூலவர்  திருமேனி; கிழக்கு நோக்கி திருக்காட்சி
  • அகத்தியரால் திருமால் திருமேனியை சிவலிங்கத் திருமேனியாகவும் , ஸ்ரீதேவி திருவடிவை குழல்வாய் மொழியம்மையாகவும் , பூதேவியை பராசக்தியாகவும் மாற்றி அமைக்கப்பட்ட வடிவங்கள்
  • அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதும், அம்பாளுக்கான சக்திபீடங்களில் ஒன்றானதும் ஆன இத்தலம் பராசக்தி பீடம். (அம்பாள் திருவடிவம் ஏதும் இல்லாமல் மகாமேரு வடிவம் மட்டும்)
  • ஒன்பது சக்திகளின் அம்சமாக உள்ளதும், பூமாதேவியை அம்பிகையாக மாற்றியதால் தரணிபீடம் என்றும் போற்றப்படும் பராசக்தி பீடம்; இந்த அம்மை உக்கிரமாக இருப்பதால் இவருக்கு எதிரே காமகோடீஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்யப்பட்ட அமைப்பு
  • அகத்தியர் சிவபார்வதி திருமணக் காட்சி கண்ட திருத்தலம்
  • மலை உச்சியில் செண்பக அருவி , செண்பகதேவி கோயில் ஆகியன அமையப் பெற்றது
  • அருகில் தேனருவி, புலியருவி, பழைய அருவி, ஐந்தருவி முதலான பல அருவிகள் அமையப் பெற்றத் திருத்தலம்
  • நுழைவுவாயிலின் ஒரு புறத்தில் அம்பல விநாயகர்
  • உட்பிரகாரத்தில் அதிகாரநந்தி, சூரியன், கும்பமுனி, அருட்சத்தியர்கள், விநாயகர் முதலான தெய்வங்களுக்கு தனித்தனி சந்நிதிகள்
  • முருகர் கையில் வில்லேந்திய கோலத்தில் திருக்காட்சி; அருகிலுள்ள வள்ளி தெய்வயானை இருவரும் ஒருவரை பார்த்தபடியான காட்சி அமைப்பு
  • பழைய ஆதி குறும்பலா மரத்தின் கட்டைகள்(தலமரம்) பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள திருத்தலம்
  • பிற சன்னதிகள் – அறுபத்து மூவர், நன்னகரப்பெருமாள், உலகாம்பாள் சமேத பாபவிநாசர், காந்திமதியம்மை சமேத நெல்லையப்பர், நாறும்புநாதர், சங்கரலிங்கநாதர், ஒப்பனை அம்பாள் சமேத பால்வண்ணநாதர், சொக்கலிங்கர், அறம் வளர்த்த நாயகி சமேத மதுநாதேஸ்வரர், ஐயனார், சோழலிங்கம், அகத்தியர், வாசுகி, மகாலிங்கம், சகஸ்ரலிங்கம்
  • தொலைந்த பொருள்கள் கிடைக்க தனிச்சன்னதியில் அர்ஜுனன் பூஜித்த சிவலிங்கத்திருமேனி. இந்த சந்நிதிக்கு அருகிலிருந்து இந்த சிவலிங்கத்திருமேனி , விநாயகர் , குற்றாலநாதர் விமானம், திரிகூடமலை, குற்றால அருவி ஆகிய ஐந்தையும் ஒருங்கே தரிசிக்கும் படியான அமைப்பு
  • பிரகாரத்தில் சிவனார் அம்மையை மணந்து கொண்ட கோலத்தில் திருக்காட்சி. (மணக்கோலநாதர் சந்நிதி )
  • குற்றால அருவி விழும் பாறையில் செதுக்கப்பட்டுள்ள பல சிவலிங்க வடிவங்கள் கொண்ட அமைப்பு
  • அகத்தியர் சந்நிதி எதிரில் அவரது சீடரான சிவாலய முனிவருக்கு தனி சந்நிதி
  • சித்திரசபா மண்டபத்தில் குறவஞ்சி சிலைகள் கொண்ட அமைப்பு
  • சபாமண்டபம் கீழே கல்பீடமாகவும், மேலே முன்மண்டபம் மரத்தாலும் அமைக்கப்பட்டு, விமானம் செப்புத்தகடுகளால் வேயப்பட்டும் ஆன அமைப்பு
  • சித்திரசபையின் வெளிச்சுவற்றில் வண்ணத்தில் வரையப்பட்டுள்ள ஊர்த்துவதாண்டவம், பத்திரகாளி, முருகர், சூரபத்மன், சிங்கமுகன், தாரகன், மன்மதன், ரதி முதலானோரின் உருவங்கள்
  • முன்மண்டபத்தின் உட்புற கூரையில் தனிச்சிறப்பானதும், அழகானதும் ஆன கொடுங்கைகள்
  • சித்திரசபையின் உள்ளே சிவகாமியம்மையுடனான நடராஜர் திருஉருவம் சுற்றிலும் தேவர்கள் தொழுதவாறு இருக்கும் வண்ணம் அற்புத ஓவியம்; உட்சுவற்றில் துர்கையம்மனின் பல்வேறு வடிவங்கள், வீரபத்ரர், கஜேந்திர மோட்சம், திருவிளையாடல் புராண வரலாறுகள், குற்றாலநாதர் அகத்தியருக்கு திருக்காட்சி, அறுபத்து மூவர் உருவங்கள், பத்மநாபரின் கிடந்த கோலம், இரணிய சம்ஹாரம், பைரவரின் பல்வேறு வடிவங்கள், சனைச்சரன் முதலானோரின் வண்ண ஓவியங்கள்
  • பங்குனியில் பிரம்மோற்சவத்தின் போது முதல்நாள் பிரம்மாவாகவும், இரண்டாம்நாள் திருமாலாகவும், மூன்றாம் நாள் ருத்ரமூர்த்தியாகவும், நான்காம்நாள் ஈஸ்வரராகவும், ஐந்தாம்நாள் சதாசிவமூர்த்தியாகவும், ஆறாம்நாள் வெள்ளிமயில் வாகனாரூடராகவும் திருக்கோலம் கொண்டு பவனி வருவது சிறப்பான நிகழ்வு
  • தாண்டவ வடிவத்தில் காட்டப்படும் தீபாராதனை(மார்கழி திருவாதிரை)
  • லிங்க வடிவில் இருக்கும் பலாச்சுளைகள் (தலமரம்)
  • நான்கு வேதங்கள் நான்கு வாயிலாகவும் மற்றும் சிவனாரின் நடனம் காண பிலவேந்தன் வந்த வழி ஒரு வாயிலாகவும் என ஐந்து வாயில்கள் கொண்டு விளங்கும் தலம்
  • தினமும் அர்த்தஜாம பூஜையின்போது சிவனாருக்கு சுக்கு, மிளகு, கடுக்காய் முதலானவை சேர்த்து தயாரித்து படைக்கப்படும் குடுனி நைவேத்தியம் எனப்படும் கஷாய நைவத்தியம்
  • ஆகமம் –  மகுடாகம முறைப்படிப் பூஜைகள்
  • குறு ஆல் எனப்படும் ஒருவகை ஆலமரமரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் (பலாமரத்தில் ஒருவகையான மரம் குறும்பலா மரம்)

 

தலம்

திருக்குற்றாலம்

பிற பெயர்கள்

திரிகூடாசலம் , திரிகூடமலை, பிதுர் கண்டம் தீர்த்த புரம், சிவத்துரோகம் தீர்த்த புரம், மதுவுண்டான் உயிர் மீட்ட புரம், பவர்க்க மீட்ட புரம், வசந்தப் பேரூர், முதுகங்கை வந்த புரம், செண்பகாரணிய புரம், முக்தி வேலி, நதிமுன்றில் மாநகரம், திருநகரம், நன்னகரம், ஞானப்பாக்கம், வேடன் வலஞ்செய்த புரம், யானை பூசித்த புரம், வேத சக்தி பீட புரம், சிவ முகுந்த பிரம புரம், முனிக்கு உருகும் பேரூர், தேவகூட புரம், திரிகூடபுரம், புடார்ச்சுனபுரம், குறும்பலா விசேட புரம், வம்பார்குன்றம்

இறைவன்

குற்றாலநாதர் குறும்பலாநாதர், திரிகூடாசலபதி, திரிகூடாசலேஸ்வரர்

இறைவி

குழல்வாய்மொழி, வேணுவாக்குவாகினி

தல விருட்சம்

குறும்பலாமரம் , குத்தால மரம் 

தீர்த்தம்

வட அருவி, சிவமது கங்கை , சித்ராநதி

விழாக்கள்

தைமகம் – தெப்போற்சவம், மார்கழித் திருவாதிரை, சித்திரை விஷு உற்சவங்கள், பங்குனியில் பிரம்மோற்சவம் (எட்டாம் நாள் நடராஜர் கோயிலில் இருந்து இச்சபைக்கு பச்சை சார்த்தி எழுந்தருளி அருள்பாலிக்கும் சிறப்பான நிகழ்வு), ஆடி அமாவாசையில் லட்சதீப உற்சவம் (பத்ரதீப திருவிழா), நவராத்திரி, ஐப்பசி பூரம் – திருக்கல்யாண உற்சவம்

மாவட்டம்

திருநெல்வேலி

திறந்திருக்கும் நேரம் / முகவரி

காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை

அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில்
குற்றாலம் – அஞ்சல் – 627 802
04633-283138, 04633-210138
வழிபட்டவர்கள் பட்டினத்தார்

பாடியவர்கள்

திருஞானசம்பந்தர் 1 பதிகம் (1ம் திருமுறை – 99 வது பதிகம்),  அருணகிரிநாதர், திருக்குற்றாலத் தலபுராணம் மற்றும் குறவஞ்சி – மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயர்

நிர்வாகம்

இந்து அறநிலையத்துறை

இருப்பிடம்

திருநெல்வேலியில் இருந்து சுமார் 6௦ கிமீ தொலைவு, தென்காசியில் இருந்து சுமார் 6 கிமீ தொலைவு

இதர குறிப்புகள்

தேவாரத் தலங்களில் 227  வது தலம்

பாண்டியநாட்டுத் தலங்களில் இத்தலம் 13 வது தலம்

குழல்வாய்மொழி உடனாகிய குற்றாலநாதர்

புகைப்படங்கள் : இணையம்

பாடியவர்           திருஞானசம்பந்தர்
திருமுறை           1
பதிக எண்           99
திருமுறை எண் 3

பாடல்

செல்வமல்கு செண்பகம்வேங்கை சென்றேறிக்
கொல்லைமுல்லை மெல்லரும்பீனுங் குற்றாலம்
வில்லினொல்க மும்மதிலெய்து வினைபோக
நல்கும்நம்பா னன்னகர்போலுந் நமரங்காள்

பொருள்

நம்மவர்களே! செல்வம் நிறைந்ததும், செண்பகம் வேங்கை ஆகிய மரங்களில் தாவிப் படர்ந்து முல்லைக் கொடி அரும்புகளை  ஈனுவதுமாகியதும், வில்லின் நாண் அசைய அதில் இருந்து தொடுத்த கணையை விடுத்து மும்மதில்களையும் எய்து அழித்துத் தன்னை வழிபடும் அன்பர்களின் வினையால் தோன்றிய  குற்றங்கள் தீர அருள் புரியும் சிவபிரான் எழுந்தருளியுள்ளதும் ஆன திருத்தலம் நன்னகர் எனும் குற்றாலம் ஆகும்.

 

பாடியவர் திருநாவுக்கரசர்
திருமுறை 4
பதிக எண் 009
திருமுறை எண் 3

பாடல்

உற்றா ராருளரோ – உயிர்
கொண்டு போம் போழுது
குற்றாலத்துறை கூத்தனல் லானமக்
குற்றா ராருளரோ

பொருள்

கூற்றுவன் எனும் எமன் நம் உயிரைக் பற்றிக்கொண்டு போகும் பொழுது, குற்றாலத்தில் விரும்பித் தங்கியிருக்கும் கூத்தப் பிரானைத் தவிர நமக்கு வேண்டியவர் என்று யாவர் உளர்?

 

 (இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

சமூக ஊடகங்கள்

மகார ப்ரியை – சக்தி பீடங்கள் – 2 – காமாக்யா கோவில்

மகாரம் – சக்திச் சுடர் – அஜபா மந்திரம்
நூல் திருமந்திரம்
பாடல் எண் : 957
தந்திரம் : 4ம் தந்திரம்
பாடல்
அவ்வொடு சவ்வென்ற தரனுற்ற மந்திரம்
அவ்வொடு சவ்வென்றது ஆரும் அறிகிலர்
அவ்வொடு சவ்வென்றது ஆரும் அறிந்தபின்
அவ்வொடு சவ்வும் அனாதியும் ஆமே. திருமந்திரம்957
பொருள்
அகரமும் சகரமும் அரனுக்குரிய (சிவனுக்குரிய) மந்திரமாகும். சிவனை `ஔ` என்றும், `சௌ` என்றும் கூறிப் பொருந்தும் மந்திரமே `அம்` என்றும், `சம்` என்றும் கூறப்பெறும். இது மறை பொருளாகும்,இதன் பொருளை எவரும் அறியவில்லை. இவை இரண்டுடனும்  மகாரமும் சேரும் போது அது சிவசக்தி ரூபமாகிறது. இதுவே ஹம்ச மந்திரம் எனும் அஜபா ஆகும். இவ்வாறாக ஹம் எனும் ஆன்மாவும், சம் எனும் சிவனும் அநாதி நித்ய பொருள்.
 
சக்தி பீடங்கள் – 2 – காமாக்யா கோவில் 
 kaamak10_eegarai
புகைப்படம் :  eegarai
 
எண்
குறிப்பு
விளக்கம்
1
தலம்
காமாக்யா கோவில்
2
தலம் பிற பெயர்கள்
காமரூபம், ஹரிக்ஷேத்திரம், பிரக்ஜோதிஷபுரம், காமகிரி, காமயோனி மண்டலம், மஹாமாயா ஸ்தானம், நீலாச்சலம், நீல் பர்வதம், காமாக்யா தேவி கோவில், மஹிசமர்த்தினி கோவில், துர்கா மந்திர், நானி மந்திர், கரவிப்பூர் தேவி மந்திர்
3
தேவியின் பெயர்
காமாக்யா கோவில்
4
தேவியின் பிற பெயர்கள்
திரிபுர பைரவி, அமிர்தா, காமா, காமதா, மங்கள கௌரி, காமரூபிணி, யோனிமண்டல வாஸினி, மஹாகாளி, மஹாமாயா, காமரூபா தேவி, காமேஸ்வரி, நீல பார்வதி
5
உடல் பகுதி
யோனி
6
பீடம்
காமகிரிப் பீடம்
7
பைரவர்
உமாநந்தர்
8
இருப்பிடம்
நீலாச்சல் குன்று, குவகாத்தி நகர்,அசாம் மாநிலம்
9
வழித்தடம்
கவுஹாத்தி நகர மையத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள நீலாச்சல் மலை உச்சியில் இந்த கோயில் உள்ளது.
10
வடிவம்
11
விழாக்கள்
அம்புபச்சி மேளா,துர்க்கா பூஜா,மானஷா பூஜா
12
இதரக் குறிப்புகள்
  
புராணத் தொடர்பு
 
· பத்து தச மகா வித்யா தேவிகளின் கோவில்கள் அடங்கிய தொகுதியில் காமாக்கியா பிரதான கோவிலாகும். திரிபுரசுந்தரி, மாதங்கி, கமலா தேவியரின் கோவில்கள் காமாக்கியா கோவிலினுள் அமைந்துள்ளன. ஏனைய காளி, தாரா,  புவனேஸ்வரி, பைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி ஏழு தேவியருக்கும் தனித்தனிக் கோவில்களாக காமாக்கியா கோவிலுக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ளன.
· தேவிக்கு தனியே உருவச்சிலை எதுவும் இல்லை. ஆலயத்தில் உள்ள ஒரு குகையில் யோனி முத்திரை பதித்த ஒரு கல்பீடமே அம்பிகையாக வழிபடப்படுகிறது.
·  சிவனால் சம்ஹாரம் செய்யப்பட்ட மன்மதன் மீண்டும் தனது ரூபத்தை மீண்டும் பெற்ற இடம்
· வராஹ அவதாரமெடுத்து ஹிரண்யாக்ஷணை ஸம்ஹாரம் செய்து, நீருக்குள் முழுகியிருந்த பூலோகத்தைத் தம்முடைய நெற்றிப் பல் நுனியில் கொத்தி எடுத்துக் கொண்டு வந்தபோது அவருடைய பல் பட்ட இடம்
·   நரகாசுர யுத்தம் நடந்த இடம்
·   பஞ்ச பாண்டவர்களால் வழிபாடு செய்யப்பட்ட தேவி (ஆயுதங்களை காக்க வழிபாடு செய்யப்பட்டது- விராட பருவம், வெற்றிக்காக பிராத்தனை செய்யப்பட்டது மற்றொருமுறை)
·   தொடர்புடைய நூல்கள் – தந்திர சூடாமணி – தந்திர நூல்கள்,காளிகா புராணம்,வேத வியாசரின் தேவி பாகவத புராணம்
இத்திருக்கோயில் பற்றி மேலும் தகவல் தெரிந்தால் தெரியப்படுத்தவும்.
 

சமூக ஊடகங்கள்

மகார ப்ரியை – சக்தி பீடங்கள் – 1 – ஹிங்குலாஜ் மாதா

மகாரம் – சக்திச் சுடர் – வாலை சூட்சம்
ஆமப்பா சிவயோகம் செய்வதற்கு
அப்பனே அகாரமுடன் உகாரஞ் சொன்னேன்
தாம்ப்பா மகார மென்ற வாலை தன்னை
தாரணியில் ஆர றிவார் சங்கை மார்க்கம்
காமப்பால் கொண்ட சிவகெங்கை யான்
கன்னி மனோன் மணியின் நாதமென்றும்
நாமப்பா சொல்லுகின்றோம் செந்தேனென்றும்
நாதாந்த நாதமென்றும் காரமாமே  
 
அகத்தியர் அந்தரங்க தீஷா விதி
சிவயோகம் போன்ற கடுமையான யோகமுறை மார்கங்கள் செய்யும் போது விலங்குகள் மற்றும் மனிதர்களால் தொல்லைகள் ஏற்பட வாய்புண்டு. இதற்காக சித்தர்கள் நெற்றியில் வசிய திலகம் அணிவார்கள். அப்படிப்பட்ட சிவயோகம் செய்ய அகார விளக்கமும் உகார விளக்கமும் சொன்னேன். மகாரம் என்ற வாலையை இந்த பூமியில் யார் அறிவார். (சிவயோக முறைக்கு விளக்கம் உண்டு, வாலை முறைக்கு விளக்கம் இல்லை என்பது மறைபொருள் – எனவே எளிதில் அறியப்பட முடியாதது. குருமுகமாகத் தான் அறிய வேண்டும் என்பதும் மற்றொரு பொருள்). அமுத தாரணை அறிய மகார மென்ற வாலையை அறிய வேண்டும். அவ்வாறு அறிய நீர் வேண்டும். அதுவே சிவ கெங்கைத் தீர்த்தம். இதுவே கன்னி மனோன்மணித் தாயாரின் நாதமென்றும், செந்தேன் என்றும், நாதாந்த நாதமென்றும் நாம் உரைக்கின்றோம்.- 
ஹிங்குலாஜ் மாதா
புகைப்படம் : தினமணி

எண்
குறிப்பு
விளக்கம்
1
தேவியின் பெயர்
ஹிங்குளா / சர்ச்சிகா / கோத்தரி / மஹாலக்ஷ்மி / கோடரீ
2
உடல் பகுதி
ப்ரம்மராந்தரம் (தலையின் ஒரு பகுதி அல்லது உச்சந்தலைப் பகுதி) அல்லது சகஸ்ராரம் (செந்தூரம் வைக்கும் நெற்றிப் பகுதி
3
பைரவர்
பீமலோசன பைரவர் அல்லது சிவபாரி பைரவர்
4
இருப்பிடம்
பாகிஸ்தான் – பலூசிஸ்தான் – லாஸ் பெலா  அருகில் – ஹிங்கோல் ஆற்றங்கரை – ஹிங்குளாஜ் மலைக்குகை – ஹிங்குலாஜ் மாதா சக்தி பீடக் கோவில்
5
வழித்தடம்
பாகிஸ்தான் – கராச்சி –  குவெட்டா (quetta) சாலையில் 120 கி.மீஜீரோ பாய்ண்ட்-மேற்கு நோக்கி லியாரி (lyari) டவுன்- பௌஜி கேம்ப் (fauji camp) அஸப்புரா சரை (asha pura sarai)
6
வடிவம்
புராணத் தொடர்பு
·   ஹிங்குலி –  முன் வகிட்டுக் குங்குமப் பொட்டு (அல்லது) செந்தூரம்
·   ராமன்,சீதை மற்றும்ம் இலக்குவன் ஆகியோர்கள் தங்கள் வனவாசத்தின் போது தரிசித்த தலம்
 
புராணம் – 1
 
தற்போதைய சிந்துப் பகுதியை ரத்னசேன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் பரசுராமர் காலத்தைத் சார்ந்தவன். அவனுக்கு ஐந்து மனைவிகள்  அவர்களின் பெயர்கள் சந்திரமுகி, பத்மினி, பத்மா, சுகுமாரி மற்றும் குசாவதி என்பனவாகும். அவர்களின் மகன்கள் முறையே ஜெய்சேன், பிந்துமான், விஷால், சந்திரசால் மற்றும் பரத் ஆகியோராவர். பரசுராமர் இம்மன்னனின் சமகாலத்தவர். எனவே பரசுராமரின் சபதம் (உலகின் அனைத்து சத்திரியர்களையும் அழிப்பேன்) முடிக்கும் காரணமாக இங்கு அவர் வருவது குறித்து அனைவரும் கவலை உற்றனர்.
 
அதனால் சரஸ்வதி நதிக்கரையில் ஆஸ்ரமம் அமைத்து வாழ்ந்திருந்த ததீசி முனிவரிடம் இவர்கள் அனைவரும் அடைக்கலம் புகுந்தனர்.ரிஷிகளின் ஆஸ்ரம எல்லைக்குள் போரிடக் கூடாதென்று விதியிருந்ததால் பரசுராமர் அங்கு செல்லவில்லை
 
மன்னன் ஆஸ்ரம எல்லை அறியாது வெளியே சென்றுவிட பரசுராமர் அவனைக் கொன்றார். அவனது மனைவிகள் மன்னனுடன் உடன்கட்டை ஏறினார்கள். ததீசி முனிவர் சேய்களை பாதுகாத்து, அந்த ஐவருக்கும் பிராமணர் போல் வேடமிட்டு வேதங்கள் மந்திரங்கள் முதலிய பல பயிற்சிகளை அளித்திருந்தார். அதனால் பரசுராமர் அவர்களை அடையாளம் காணாது கொல்லாமம் விட்டுச் சென்றார்.
 
ததீசி முனிவர் அனைவருக்கும் அவர்கள் பாதுகாப்பிற்காக ஹிங்குலா தேவி மந்திரத்தை உபதேசித்தார்.
 
தன் தம்பிகளுடன் நாட்டிற்கு திரும்பிச் சென்ற ஜெய்சேன் ஹிங்குலா தேவி மந்திரத்தை பாராயணம் செய்து தேவியின் அனுக்ரகம் பெற்று ஆட்சி செய்தான். இதனால் அவனை அடையாளம் கண்ட பரசுராமர் அவனை அழிக்க எண்ணி விரைந்தார். ஹிங்குலா தேவி ஜெய்சேன் பற்றிநல்லுள்ளம் படைத்தவனென்றும் அவன் தன் பக்தனென்றும்கூறி பரசுராமரைத் தடுத்தாள். அதனால் பரசுராமர் கோபம் தணிந்து தேவியை வணங்கித் திரும்பிச் சென்றார். அதனால் ஜெய்சேன்ப்ரம்மகுல க்ஷத்ரியன்ஆனான். ஹிங்குலா தேவி ப்ரம்மகுல க்ஷத்ரியர்களின் குலதெய்வமானாள்
 
புராணம் – 2
 
முன்னொரு காலத்தில் கோயில் பகுதியில் ஹிங்கோலி என்ற ஒரு பிரிவினரை  விச்சதர் என்ற மன்னன் ஆட்சி செய்தான். அவனுக்கு ஹிங்குல் மற்றும் சுந்தரன் என்ற இரு மகன்கள் இருந்தனர்.

இளவரசன் சுந்தரன் அண்டை நாட்டின் மீது படையெடுத்து அந்நாட்டு மக்கள் பலரைக் கொன்று பெரும் செல்வத்தைக் கொள்ளை அடித்தால் அப்பகுதி மக்கள் சிவனிடம் தங்கள் குறைகளை முறையிட்டதால் சிவன் விநாயகனை அனுப்பி சுந்தரனை சம்ஹாரம் செய்ய வைத்தார்.
 
ஹிங்குல் தன் சகோதரன் இறப்பிற்கு பழிவாங்க நினைத்து பல வருடங்கள் தவம் செய்து மூவுலகத்திலும் உள்ள எந்த உயிர்களாலும் தனக்கு மரணம் நிகழக் கூடாதென்றும் சூரிய ஒளி புக இயலாத இடத்தில்தான் தன் உயிர் போக வேண்டுமென்றும் வரம் பெற்றான். pin அனைவரையும் கொடுமைப்படுத்தி பெண்களின் கற்பையும் சூறையாடினான். அதனால் ஹிங்கோலி மக்கள் பவானி மாதாவின் மீது பக்தி செலுத்தி, வழிபட்டு, அரசனின் தவறான எண்ணத்திலிருந்து தங்களைக் காக்க தேவியிடம் உதவி கோரிப் ப்ரார்த்தித்தனர்.
 
ஒரு நாள் தேவியானவள் அவனை காட்டிற்கு அழைத்து வந்து தோன்றி, மறைந்து, மீண்டும் தன் எட்டுக் கரங்களிலும் வாள், சூலம் போன்ற ஆயுதங்கள் ஏந்தி சிவந்த கோபமான கண்களுடன் இருள் சூழ்ந்திருந்த தோன்றிளாள்.
 
தனது இறுதி கணம் அறிந்து தேவியிடம் மன்னிப்பு வேண்டி பின் ஒரு, சிலை அமைத்து தன் பெயரிலே வழங்க வேண்டும் என்றும், யார் இவ்விடத்தில் தேவியை உண்மையான பக்தியுடன் வணங்குகிறார்களோ அவருக்கு மீண்டும் பிறவாத வரமருள வேண்டுமெனவும் , மனந்திருந்தி நல்லெண்ணத்துடன் இங்கு வருவோர் நல்லவரோ கெட்டவரோ நீ அவர்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டினான்.அவனை அழித்த அன்னை அவ்விடத்திலேயே என்றும் நீங்காது அமர்ந்தாள்.
 
புராணம் – 3
 
கிராமம் ஒன்றில் மூன்று சகோதரர்கள்  ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையைச் செய்து வந்தனர். ஒருவன் துணி தைப்பவன். ஒருவன் போர்வீரன்மற்றொருவன் பொற்கொல்லன்  (சோனி ஸொனி) இருந்தனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் அன்னையை பூஜித்து அவளின் ஆசி பெற்று தம் வேலையைச் செய்து அவரவர் சம்பாதித்ததை வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்தனர்.
 
போர் வீரனால் மட்டும் அதிகம் சம்பாதிக்க முடியவில்லை. அதனால் அவன் மனமுடைந்து அன்றிரவு ஹிங்குலாஜ் மாதா கோவிலுக்குச் சென்று தன்னை ஏன் பிடிக்கவில்லை என்று தாயிடம் முறையிட்டு அழுது புலம்ப ‘யாருக்கு என் கையிலுள்ள குங்குமத்தை முதலில் வைக்கிறேனோ அவனே எனக்கு மிகவும் பிடித்தமான பக்தன்’ என்று சொன்னாள்.
 மறுநாள் காலை அவர்கள் வீட்டு வாசலில் தேவி தோன்றினாள்.
 
துணி தைப்பவன் கைகால் அலம்பச் சென்றான். பொற்கொல்லன் பூப்பறிக்கச் சென்றான். தேவி போர்வீரனை நோக்கி வந்து குங்குமத்தை அவன் நெற்றியில் வைத்தாள். பின் பொற்கொல்லனுக்கும், துணி தைப்பவனுக்கும் குங்குமம் வைத்தாள்.

(இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

சமூக ஊடகங்கள்

மகார ப்ரியை – சக்தி பீடங்கள் – 51- முன்னுரை

எங்கும் உளபொருளாய், ஓங்கார வடிவமாய், குலத் தெய்வமாக இருக்கும் கணபதியை வணங்குகிறேன்.
 
விழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்என்பதாய், சிவனின் மைந்தனுமாய், சிவனுக்கு உபதேசம் ஈந்தவனுமாகிய குமரவேலின் திருத் தாளினை பணிகிறேன்.
 
சகல உயிர்களிலும், சகல காலங்களிலும் சதா சர்வ காலமும் உறைந்திருக்கும் ஈசனும், எண்ணமும் சொல்லும் மாறாது என்றும் ஈசனிடம் உறைந்திருக்கும் என் தாயும், அகில நாயகியுமான கருணை நாயகியின் திருவடியினைப் பற்றுகிறேன்.
 
என் தாழ் நிலை அறிந்தும், வினாடிக்கும் குறைவான நேரமும் அகலாது என்னை சேய் போல் காத்து, என்னின் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்து, எக்காலத்திலும் நிறை பொருளாக என்னுள் இருந்து என்னை இயக்கும் எனது குருநாதரின் திருத்தாள் திருவடிகளைப் பணிகிறேன்.
 
‘சக்தி உரை செய் சக்தி எமக்கில்லை’ என்பதால் இது குறித்து பலநாட்களாக எழுதாமல் இருந்தேன். ‘உயிர் உறை குருநாதன்’ உத்திரவின் படியே இத் தொடரை துவங்குகிறேன்.

மிகப் பெரிய சக்தியை தன்னுள் இருக்கும் இறை சக்தி மகாரமாக இருக்கிறது. பிரணவ எழுத்துக்களில் மகாரம் முடிவு என்று கொண்டாலும், முழு மந்திர சக்தியினை வெளிப்படுத்தும் எழுத்தாகவே மகாரம் இருக்கிறது.
 
ஓம் மகார ரூபாய நம என்பதும் மகாரப் ப்ரியை என்பதும் ஒரு பொருளில் வருகிறது. திருமந்திரத்திலும் மகார எழுத்தின் தன்மையும் விளக்கங்களும் மிக நீண்டதாகவே காணப்படுகிறது.
 
அகரம், உகரம், மகரம், விந்து, நாதம் என்னும் ஐந்துங் கூடிப் பிரணவமாகும்; இவை சூக்கும பஞ்சாக்கரம் எனவும் பெறும்;

அகார வுகார மகங்காரம் புத்தி
மகார மனஞ்சித்தம் விந்துப்பகாதிவற்றை
நாம முளவடிவா நாடிற் பிரணவமாம்
போதங் கடற்றிரையே போன்று”  – சிவஞானபோத வெண்பா
இவ்வாறு பிரணவப் பொருளின் நாயகமாக இருப்பது மகாரமே.

மகாரத்தின் போது(அதாவது மகார உச்சரிப்பில்  ம்பீஜம்கும்பகம்எளிதில் கைவரப் பெறும்.இதில் பூரண கும்பகமும், கேவல கும்பகமும் எளிதில் கைகூடும்.

தந்தையால் அவமானப்படுத்தப்பட்ட தாட்சாயிணி  யாகம் அழியுமாறு சாபம் விடுத்தாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார்..  இது தந்தை தந்த உடல் என்று நினைந்து தீயினில் தனது உடலை எரித்தாள். தாட்சாயிணியின் மரணத்திற்குப் பிறகு சிவன் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். அது நிலைபெறாமல் நிகழ்ந்து கொண்டிருந்தது. அதை நிறுத்துவதன் பொருட்டு திருமால் தனது சக்ராயுதத்தால் தாட்சாயணியின் இறந்த உடலை 51 துண்டுகளாக வெட்டினார். இவ்வாறு உடல் விழுந்த பகுதிகள் சக்தி பீடங்களாயின. 
இவற்றில் ஐம்பத்தியொரு சக்தி பீடங்கள் அட்சர சக்தி பீடங்கள் என்று கூறப்படுகின்றன. ஐம்பத்தியொரு அட்சரங்கள் பற்றி எல்லா சித்தர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன்று இல்லை
அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே.
எனும் திருமந்திரம் பாடலுக்கு ஏற்ப அவளை வணங்காத சித்தர்கள் இல்லை.
இந்த பீட நிர்ணயமும் அதற்கான தோத்திர முறைகளையும் பற்றி சிவபெருமான் தேவியிடம் கேட்க, தேவியே தனக்குரிய சக்தி பீடங்கள் பற்றிக் கூறுவதாக அமைந்துள்ளது.
இக்காரணங்கள் பற்றியே மகார ப்ரியைசக்தி பீடங்கள் எனும் இக்கட்டுரைகள்.

சமூக ஊடகங்கள்