![]()
Author: அரிஷ்டநேமி
நனைதல்
சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்
![]()
நெருப்பினை சுமத்தல்
பெருங்குரலுடன் முழுவதுமான
கரு நெருப்பினை சுமந்து ஒருவன்.
என்னை அவனிடத்திலிருந்து விலகச் சொன்னான்.
‘பேசினால் மற்றவர்களையும்
அது பற்றும் என்றும்’ சொன்னான்
பிறந்தது முதல்
நெருப்பினை சுமந்திருப்படதாகச் சொன்னான்.
பிறந்த நாளில் அதன் நிறம் மஞ்சளாக
இருந்தாகவும் ,
நாள்களின் வளர்ச்சியில்
பல நெருப்புகள் சேர்ந்ததாகவும்
அது சிகப்புடன் கூடிய நீலமாகவும்
தற்போது ஒளி குறைந்து
கருமையானது என்றும் உரைத்தான்.
உரைத்த பொருள் உணர்வதற்குள்
பரவியது என்மேலும் என்னுள்ளும்.
![]()
சோம்பல் தவிர்
மஹாபாரதம் – சாந்தி பர்வத்தில் வரும் கதை – தற்கால வடிவங்களுடன்.
குட்டி – அம்மா, ஒரு கத சொல்லேன்.
அம்மா – ‘ஒரு ஊர்ல ஒரு ஒட்டகம் இருந்துச்சா’
குட்டி – ‘ம்’
அம்மா – ‘அது சாமிகிட்ட தவம் இருந்து ஒரு வரம் வாங்கிச்சாம்’
குட்டி – ‘என்னான்னு’
அம்மா – ‘நான் நகந்து போகாம சாப்பிடனும், அதுக்கு என் கழுத்து அவ்வ்வ்வ்வ்வ்வ்ளவு நீளமா வளரனும்’
குட்டி – ‘அது எப்படி’
அம்மா – ‘அது தான் கதயே. சாமியும் வரம் குடுத்துட்டாராம்’
குட்டி – ‘ரொம்ப ஜாலி இல்ல’
அம்மா – ‘கதய கேளு. அதுக்கு அப்புறம், அது ஒரு குகையில இருந்து நகராமலே எல்லா மரத்திலேருந்தும் எல்லா இலையையும் சாப்டுச்சாம்’.
குட்டி – ‘ம்’
அம்மா – ‘அதனால அது ரொம்ப குண்டாயிடுச்சாம்’
குட்டி – ‘நம்ம ஆகாஷ் மாதிரி. ஹா ஹா’
அம்மா – ‘அப்ப ஒரு பெரிய வெள்ளம் வந்துச்சாம். அதனால அதால நகர முடியலியாம்.
குட்டி – ‘ம்’
அம்மா – ‘அப்ப வெள்ளத்துல ஒரு நரி வந்துச்சாம். அதுக்கு ரொம்ம பசியாம். அது இந்த ஒட்டகத்தை சாப்டுடுச்சாம்’
குட்டி – ‘ஏன் ஒட்டகம் ஓடலையா’
அம்மா – ‘சோம்பேறியா ஒரே இடத்துல இருந்ததால அதால ஓட முடியல. அதனால சோம்பேறியா இருக்கக்கூடாது. ஏய் எங்க ஒடற’
குட்டி – ‘விளயாடப் போறேன். நீதான சொன்ன சோம்பேறியா இருக்கக்கூடாதுன்னு’
![]()
பெண் – இளமை துறத்தல்
காரைக்கால் அம்மையார்
இவர் காரைக்காலில் பிறந்தவர். இயற்பெயர் – புனிதவதி. வணிகர் மரபினை சார்ந்தவர்.
இளமை முதலே சிவ பக்தியில் சிறந்தவராக விளங்கினார். சிவ பத்தர்களை சிவனாகவே எண்ணி வணங்குவார்.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரமதத்தன் என்பவருக்கு புனிதவதியை மணம் செய்து வைத்தார் அவர் தந்தையார்.
தந்தையாருக்கு புனிதவதியை கணவன் வீட்டிற்கு அனுப்ப மனம் இல்லை. எனவே காரைக்காலில் பரமதத்தன் தனது வியாபாரத்தை தொடர்ந்தார்.
பரமதத்தனை சந்திக்க வந்தவர்கள் அவனிடம் இரண்டு மாம்பழங்களை கொடுத்துச் சென்றனர்.(இதில் பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. இவைகள் இரட்டை என்ற கருத்துக்கு வலிமை சேர்க்கின்றன.கணவன் – மனைவி, பரமாத்மா – ஜீவாத்மா)
பரமதத்தன் வேறு ஆள் மூலமாக அந்தப் பழங்களை புனிதவதியிடம் கொடுத்து அனுப்பினான்.புனிதவதி மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்தார்.
ஐந்தொழில் புரிவோன் நாடகத்திற்கு தயாரானார்.
அப்போது வாயிலில் குரல் கேட்டது. ‘சிவாயா நம’
காரைக்கால் அம்மையார்,’திரு அமுது(சோறு) தயாராக இருக்கிறது. கறிஅமுது இன்னும் தயாராகவில்லை, சற்று பொருத்திருங்கள்’
சிவனடியார் – ‘மிக்க பசியாக இருக்கிறது. இருப்பதைப் படையுங்கள்’.
எனவே அமுது படையல் பரமதத்தன் அனுப்பிய ஒரு மாங்கனியோடு நிகழ்தது.
காத்திருங்கள்.. நாயகனின் நாடகத்திற்கு..
![]()
நிரந்தரா
யாருமற்ற இரவு
ஓளி நிரம்பியதாகவும்,
புகை நிரம்பியதாகவும்,
இருக்கிறது.
எனக்கான பேச்சுகள்
தொடர் அருவியாக.
மௌனத்தின் சாட்சியாக நீ.
விடை பெறுதலுக்கான
ஆயத்தங்களைச் செய்கிறாய்.
கனத்துப் போகிறது இதயம்.
‘என்றைக்கு வருவாய்’ என்கிறேன்.
‘என்றும் எங்கும் இருப்பவள் நான்,
வருவதும் போவதும் உன் நினைவுகள் தான்’ என்கிறாய்.
இன்னும் கனத்துப் போகிறது.
![]()
யானை காடு திரும்பிய கதை
அடர்ந்த பெருங்காட்டிலிந்து
கனத்த சரீரத்துடன்
பெரும் யானை ஒன்று
பிளிரி ஓடிவந்தது.
ஓட்டத்திற்காண காரணம் கேட்டேன்.
‘காட்டில் உணவு இல்லை’ என்றும்
‘வற்றிய நீர் நிலைகளும்
தனக்கானவை அல்ல’ என்றும் கூறியது.
பெரு நிலத்தில்
வேளா வேளைக்கு உணவு என்றும்,
தன் குளியளுக்கு பிற ஆள் எனவும்,
வித விதமான மனிதர்கள் தினமும் எனவும்,
வாழ்க்கை வசீகரமானது எனவும்
பகன்றது.
காலத்தின் சுழற்சிதனில்
அதன் கடைநாளில்
சந்திக்கும் வாய்ப்பு நிகழ்ந்தது.
மனிதத் தேவையில்
விலங்குகளின் தேவைகள்
வெகுதூரம் என்று கூறி
காட்டை நோக்கிப் புறப்பட்டது.
![]()
வார்த்தைகளின் ரசவாதம்
அக்னி
![]()
சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்
சைவ சித்தாந்தம் மிகப் பெரியது என்பதால் இனி இத்தொகுப்புகள் – ‘சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்’ என்ற தலைப்பில் வரும்.
ஆன்மாக்கள் நித்தியமனவைகளாக இருக்கின்றன. தேகம் அழிவதால் அது அநித்தியம். கர்ம வினைகளின் காரணமாக பல பிறப்புகள் எடுக்கும், ஆத்மா மாற்றம் மட்டுமே கொள்கிறது. அது அழிவதில்லை. பல பிறப்புகளுக்கு காரணமாக மட்டும் அமைகிறது.
காமம், குரோதம், லோப மோக மதம் மாற்சரியம் இவற்றின் காரணமாக (அக்காரணிகள்) ஆன்மா குற்றங்களை உடையாதாக இருக்கிறது.
காமம்: பற்றினால் உண்டாகும் பாசம்
குரோதம்: கோபம்
லோபம்: பேராசை
மதம்: மிகு கோபம்/வெறி பிடித்த நிலைமை.
மாத்ஸர்யம்: பொறாமை
மேற் கூரிய காரணங்களால் ஆன்மா, மலத்தால் சூழப்பட்டிருக்கிறது.
‘செம்புல பெயல் நீர் போல்’ என்பது வாசகமாகும். அது போல் ஆன்மா வினைகளின் காரணமாக அதன் வடிவம் பெறுகிறது. இது ஆன்மாவிற்கு இயற்கை உணர்வு இல்லை என்பதை உணர்த்துகிறது.
![]()
2038 – ஊடகம்
இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.
இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.
1.
ரஜினி முதன் முதலில் குடித்த சிகிரெட் – எங்களது புத்தகத்தில் மட்டும்.
2.
இன்றைய நிலவரம்
தங்கம் விலை
வெள்ளி விலை
பெட்ரோல் விலை
டீசல் விலை
கற்பழிப்புகள்
கொலை – 9632871(சென்னை மட்டும். சிறுவர்கள் கணக்கில் சேர்க்கப் படவில்லை).
நீக்கப் பட்ட அமைச்சர்கள் – 3
சேர்க்கப் பட்ட அமைச்சர்கள் – 51
3.
பெட்ரோல் வரலாறு காணா விலை ஏற்றம் – 0.01 பைசா. பெட்ரோல் பங்குகளில் அடிதடி. 100 பேர் சாவு.
4.
உலக அழகி கர்ப்பம். வியாபாரம் நஷ்டம் 1000 கோடி.(தற்போது 50 கோடி)
5.
இங்கு வெளியாகி இருக்கும் கூப்பனை வெட்டி வந்து எங்களிடம் கொடுத்தால், ஒன்றுக்கு ஒன்று கார் ஃப்ரி(நீங்கள் விரும்பும் மாடல்).
![]()
தாடகை
‘எங்கு சென்றாய் என்னை
தவிர்த்தும் தன்னித்தும் விட்டு’
என்கிறேன்.
தவிர்த்தல் உன்நிலை அன்றி
எனதில்லை என்கிறாய்.
வார்த்தைகள் ரசவாதம் கொள்கின்றன.
உதடுகள் முணுமுணுக் தொடங்குகின்றன
அங்கம் ஹரே:புனகபூஷன
மாச்ரயந்தீ *
எங்கிருந்தோ வருகிறது
நெருப்பின் கங்குகள்
‘செட்டியார் கடைக்குப் போய்
நோட்ல எழுதிட்டு
சேமியா வாங்கிகிட்டு வர சொல்லு உங்கபன’.
![]()
பெண் – இளமை துறத்தல்
நான் அறிந்த வரையில் (மிக மிக சிறிய அளவு) பக்தி இலக்கிய காலத்திலிருந்து தற்காலம் வரை இரண்டு பெண்கள் தனது இளமையை துறந்திருக்கிறார்கள். (பல ஆண்கள் விரும்பி இருக்கிறார்கள். உ.ம் யயாதி – புரு – மஹாபாரதம்)
1. ஔவையார்,
2. காரைக்கால் அம்மையார்.
இருவருக்குமே இளமையின் மீது ஏன் அந்த வெறுப்பு ஏற்பட்டது?
1.சமூகம்
2.பொருளாதாரம்
3.வீடு
4.இறைமை குறித்த சிந்தனைகள்
5.காரைக்கால் அம்மையாருக்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்து வரும் திருநீல கண்ட நாயனார் முலமாக வெளிப்பட்ட /பதிவு செய்யப்பட்ட ‘இளமை மீதூற இன்பத்துறையில் எளியன் ஆனார்’ என்ற எண்ணங்களின் துறத்தலா?
6.துறக்கப்பட்ட விஷயத்தில் இருந்த வலிகள்/காயங்கள்/வடுக்கள்.
7.இலக்கு நோக்கிய பயணம்.
நோக்கம் இருவருக்கும் ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது.
காரைக்கால் அம்மையார் – என் சிறுவயதில் சொல்லப்பட்ட கதை இது. இந்த பிரமிப்பு மற்றும் வலிகள் இன்றும் தொடர்கிறது.
ஒரு சராசரி ஆண் எப்படி வாழ்க்கையை நடத்தினான், இறையருளால் ‘அம்மா’ என்று அழைக்கப்பட்ட பெண் எப்படி அடைய முடியா இலக்கை அடைந்தாள் என்பது மிக நீண்ட வரலாறு.
காலத்தினை கருத்தில் கொண்டு காரைக்கால் அம்மையார் சரிதத்தை எழுத இருக்கிறேன். தவறு இருப்பின் தெளியப் படுத்துங்கள்.
Photo – Shivam
![]()
திருமணத்தின் விலை
2038 – மருத்துவம்
இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.
இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.
1.
சார், லைன்ல வாங்க சார். நாங்களும் எங்க சொந்தக்காரன்களை ‘கருணைக் கொலை’ செய்யத்தான் நிக்கிறோம். எங்க டோக்கன் நம்பர் – 9876231. எப்படியும் கிடைச்சிடும். கவலைப்படாதீங்க.
உங்களுக்கு மாமியார், எனக்கு என் பொண்டாட்டி சார்.
2.
சார், மேடம் இங்க பாருங்க, இந்த இதயத்தை வாங்குங்க சார். லைப் டைம் வாரண்டி சார் – கடைகளில்.
3.
அதிசயம். டாக்டர்கள் சாதனை. கருவில் இருக்கும் 3 மாத குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை.
4.
இங்கு மனித மூளையின் பதிவுகள் 10 நிமிடத்தில் பிரதி எடுத்துத் தரப்படும்.
5.
![]()
வளையல் காப்பு
வளையல் காப்பு அணிவிப்பது எதனால்?
ஆன்மீகம் – குலத்தை வளர்க்க வரும் குழந்தையை வரவேற்க தயாராகிறோம்.
அறிவியல் – குழந்தையின் வளர்ச்சி (உயிர்) 5ம் மாதத்தில் தொடங்குகிறது. அது முதல் தாயில் உணவினை உண்டு தாயின் எண்ணங்களை சுவாசிக்க துவங்குகிறது. (உ.ம் – அபிமன்யு) அதிக வளையல்கள் சப்தம் எழுப்பக்கூடியவை. அவை தாயிக்கு சந்தோஷம் அளிக்கும். எனவே குழந்தை நல்ல மன வளர்ச்சியோடு பிறக்கும்.
![]()
தொடரும் தொடர்கதைகள்
வீட்டினை சுத்தம் செய்வதாக செயல்கள்,
என்றைக்கோ மறந்து போன பேனா,
இது அவனிடம் இருந்து பெறப்பட்டது
கூடவே நினைவுத் தொடர்கள்;
இந்த பேப்பரை தான் இத்தனை நாள் தேடினேன்,
கூடவே நினைவுத் தொடர்கள்;
நீண்ட நாட்களாக படிக்க இருந்த புத்தகம்
இன்று கிடைத்திருக்கிறது
கூடவே நினைவுத் தொடர்கள்;
என்றைக்கோ எடுத்த போட்டோ
இப்பொழுது இங்கு இருக்கிறது
கூடவே நினைவுத் தொடர்கள்;
பல நாட்களுக்கு முன் பார்த்த
சினிமா டிக்கட்
கூடவே நினைவுத் தொடர்கள்
சுத்ததின் முடிவில் எல்லா பொருள்களும்
அதனதன் இடத்தில் அப்படியே
சில நினைவுக் குறிப்புகளுடன்.
![]()
2038 – சமூகம்
2038 – சமூகம்
1.
என்னப்பா, உனக்கு குழந்தை பிறக்க போவுதாமே, அதுக்கு முனைவர் பட்டம் படிக்கிறத்துக்கு பணம் கட்டி வச்சிட்டியா?
2.
சார் பின்னால வாங்க சார். அப்ளிகேஷன் வாங்க நான் போன வருஷத்திலிருந்து நிக்கிறேன். குறுக்க வராதிங்க சார்.
3.
எங்க பள்ளில PRE K.G ரொம்ப ஈசியா இடம் கிடைச்சிடும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒன்னு தான். உங்க பேர்ல தி. நிகர்ல இருக்கிற 10 கிரவுண்ட நிலத்தை எங்களுக்கு கொடுத்துடுங்க.
4.
ஏங்க, இப்பவாது பொண்டாட்டி பேச்சை கேளுங்க. அடுத்த வருஷம் நமக்கு குழந்தை பிறந்திடும். இப்ப பணத்தை பேங்கல போட்டாதான் அவன் 58 வயசுக்கு அது கிடைக்கும்.
5.
6மாத குழந்தை. என்ன அந்த ஸ்கூல போடாத. நல்ல ஸ்கூல போடு.
![]()
மொட்டை அடித்தல்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொட்டை அடிப்பது எதற்கு?
ஆன்மீகம் – தலையான பொருள் முடி. எனவே அதைத் தருகிறோம்.
அறிவியல் – வெட்டப்படும் முடிகளே அதிகம் வளரும். வியர்வை மற்றும் அழுக்கு காரணமாக மயிர் கால்கள் இடையில் அழுக்கு சேரும். மொட்டை அடிக்கும் போது இதை பெரும்பாலும் கண்டிருக்கலாம். தொடர்ச்சியாக இதை நீக்குவதால் தலை சார்ந்த வியாதிகள் வரும் வாய்ப்பு குறையும்.
![]()



















