கலைடாஸ்கோப்

களைப்போடு வீட்டிற்குள் நான்.
இரண்டு முறை சுற்றி வந்து
காற்றில் கைகளை மூடி
‘என்ன இருக்கிறது தெரியுமா’ என்று
என் கைகளை விரிக்க சொல்கிறாய்.
வினாக்களோடு விடுபடுகின்றன கைகள்.
பெரிய வண்ணத்துப் பூச்சியும்,
சில சிறிய வண்ணத்துப் பூச்சிக் கூட்டமும் என்கிறாய்.
வண்ணத்துப் பூச்சிகளின் இடமாறுதலில் தெரிகிறது,
நான் தொலைத்து விட்ட குழந்தைப் பருவங்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

ப்ரேமரூபா

யாருமற்ற இரவில்
வெற்றுப் புள்ளியாய் நீ.
மனம் காட்டி மோனமிட்டிருக்கிறாய்.
உன் கண்ணசைப்பில்
கைக்குழந்தையாகிறேன்.
என் காதலைச் சொல்ல துணிகிறேன்.
‘ஸ்துலத்தையா, சூட்சமத்தையா’ என்கிறய்.
விழி அருவி மடைதாண்டி
பெரும் சப்தத்தோடு விரைந்து செல்கிறது.
இராவணன் இராமனான பொழுதினை ஒத்து
தன்னை இழத்தல் நிகழ்கிறது.
ஊழிப் பெருங்காற்றின் ஓலிகள் என் காதினில்.
“கிழத்துக்கு இழுக்குது,
இருக்கிற காசை அழிக்கிறத்துக்குன்னு வந்திருக்கிறான்
செத்தாலும் நிம்மதியாய் இருப்பேன்,
போய் டாக்டர கூட்டிகிட்டு வாடா”.

Loading

சமூக ஊடகங்கள்

வைராக்கியம்

எல்லா வைராக்கியங்களுக்கு பின்னும்
இருக்கின்றன,
வலி மிகுந்த வறுமைகள்.

Loading

சமூக ஊடகங்கள்

மழை பெய்யும் காலம்

மழையினின் நனைந்து
வீட்டிற்குள் நுழைகிறேன்.
‘குடை எடுத்து போகமாட்டாயா’
என்று  கூறி
எனக்கே எனக்காக
வீட்டிற்குள் குடை பிடிக்கிறாய்.
மழை இடம் மாறி கண்ணுக்குள்.

Loading

சமூக ஊடகங்கள்

சருகின் சலனம்

எனது பள்ளி விடுமுறை நாளுக்கு தாத்தா-பாட்டி வீட்டிற்கு செல்வது வழக்கம்.

‘டேய்’ – அம்மா

‘ம்’- நான்

‘சினிமாவுக்கு போலாமா’-அம்மா

‘ம்’- நான்

‘போய் தாத்தாகிட்ட கேளு’ -அம்மா

‘தாத்தா,சினிமாவுக்கு போவட்டுமா’ – நான்

‘பத்திரமா போய்ட்டு வாங்க’ – தாத்தா.

மணி 6 நெருங்கிக் கொண்டிருந்தது.

‘சீக்கிரம் கிளம்புமா’

‘இருடா, மாவு அறைச்சிட்டு வந்திடுறேன்’

‘சீக்கிரம் சீக்கிரம் ‘

ஊருக்கு வெளியே 2 கி.மி-ல் தியேட்டர். தொலை தூரத்தில் பாடல்.
‘மருத மலை மாமணியே’–

‘டேய், சீக்கிரம் வாடா, மருத மலை பாட்டு போட்டுட்டான், டிக்கட் கொடுக்க ஆரம்பிச்சிட்டான்’.

கூட்டம் வேகமாக செல்ல ஆரம்பிக்கும்.
இறை உணர்வோடு தொழில் தொடக்கம். அதே சமயம் மற்றவர்களுக்கு ஓரு  Communication method.

நினைவுகளோடு மூழ்கி TV பார்க்க ஆரம்பித்தேன்.
‘மருத மலை மாமணியே  – பாடல்’

‘பழைய பாட்டை நிறுத்தி தொலைங்க, சகிக்கல’ – மகன்.

காலம் மாற்றத்தில் உதிராத சருகுகள் எவை.

Loading

சமூக ஊடகங்கள்

வாடிவாசல்

தொலைதூர மனிதர்களிடம் நட்பு,
தொட்டுவிடும் தூர மனிதர்களிடம் விரோதம்
வாழ்தல் தாண்டி
வசதிகளை கொடுத்த வாழ்வு,
வரப்புக்களை உயர்த்தி இருக்கிறது.
ஓட்டம் கொண்ட குதிரை
ஓர் இடத்தில் நிலைபெறாமாலா செல்லும்?

Loading

சமூக ஊடகங்கள்

ஆவாஹனம்

நாளின் முடிவுப் பொழுதினில்
தனித்து நீயும் நானும்.
அறை எங்கும் நறுமணம்.
‘எனக்கான..’ எனத்துவங்குயில்
‘அனைத்தும் அறிவோம்’ என்கிறாய்.
ஆரத்தழுவுதலில்
கனத்திருந்த இதயம் கரைந்து போகிறது.
உனக்கான முத்த மழைகள்
கண்களை நீரினில் கரைத்துவிடுகின்றன.
மீண்டும் வார்த்தைகளைக் கோர்த்து
வாக்கியமாக்க துவங்குகிறேன்.
எல்லைகள் அற்ற பிரணவ ஓலி
எனக்குள் எனக்காக.

Loading

சமூக ஊடகங்கள்

அட்சய திருதியை

மீண்டும் ஓரு வியாபாரத்திற்கு தயாராகி விட்டோம்.

அனைவரும் வியாபார உத்திகளை மாற்ற ஆரம்பித்து இருக்கிறார்கள்.

நள்ளிரவு 12 மணி முதல் வியாபாரம்.

அனைத்து நிகழ்வுகளும் கலியில் மாற்றப்படும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

வைகாசி மாதம் அம்மாவாசைக்கு பிறகான மூன்றாவது நாள் – திருதியை.
அன்று தொடங்கப்படும் காரியங்கள் விருத்தி அடையும். (உ.ம் தானம், தருமம்,பசுவிற்கு உணவிடுதல்)

(தானம் – தனக்கு சமமானவர்களுக்கு கொடுப்பது,தருமம் – தன்னைவிட தாழ்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு கொடுப்பது. )

வாசலில் வரிசையில் நிற்பது, கடன் வாங்கி நகை வாங்குவது அனைத்தையும் விட்டொழியுங்கள்.

வாருங்கள், வாழ்க்கை வாழ்தலில் இல்லை. உண்மையை உணர்தலில் இருக்கிறது.

Loading

சமூக ஊடகங்கள்

அமிர்தம்

நட்சத்திர ஹோட்டலின் வருமானம்
முதல் பக்கங்களில்
பட்டினியின் சாவு குறித்த விவரங்கள்
எவரும் அணுகமுடியா பக்கங்களில்.

Loading

சமூக ஊடகங்கள்

மயானச் சாலை

பாதையினில்
எழுதப் பட்டிருந்தது
மயானச் சாலை

Loading

சமூக ஊடகங்கள்

கிரகணம்

கிரகணத்திற்கு சில மணி நேரத்திற்கு (3 – 4 நேரம்) முன் உணவு உட் கொள்ளவேண்டும்.

கிரகண காலத்தில் உணவு செரித்தல் குறைவாகக் கூடும்.

மேலும் கிரகண காலத்தில் கண்ணுக்கு தெரியாத புழுதிப் படலம் எற்படும். அது உணவுகளில் மீது படியும். அது மிகப் பெரிய உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

கிரகணத்திற்கு பின் வீட்டினை சுத்தப்படுத்துதல் இதன் பொருட்டே.

Loading

சமூக ஊடகங்கள்

பிராப்தம்

காகிதத்தின் பக்கங்களை
கவிதைகளால் நிரப்ப துவங்குகையில்,
முன் பக்கங்களை,
முன் எப்போதும் சந்தித்திராத
கரையான்கள்
அறிக்……——
……..க………….
…துவ………..
ங்கி………
…….இரு…….
ந்தன.

Loading

சமூக ஊடகங்கள்

மஹா பலி

தான் புதைத்த
தலைகளின் மேல் கட்டிடம் எழுப்பி
தலையாட்டி களிப்போடிருந்து
‘தானே எல்லாம்’ எனும் பொழுதுகளில்
சாய்ந்தது தன் தலை.

Loading

சமூக ஊடகங்கள்

உபாதி

நீண்ட நாட்களுக்குப் பின்
கடவுளுடன் நெருக்கம்.
வாழ்விற்கான மாறுதலுக்கு வழி என்ன என்றேன்.
மறுதலித்தலே வாழ்வினை மாற்றும் என்றார்.
மனைவியிடம் தொடங்கலாமா என்றேன்.
‘விதி வசப்பட்டவர்கள் மாந்தர்கள்,
நீயும் விலக்கல்ல’
என்று கூறி அவ்விடம் அகன்றார்.

Loading

சமூக ஊடகங்கள்

லோபாமுத்ரா

எல்லா அப்பாக்களுக்கும் தெரிந்துவிடுகிறது
மனைவியின் வார்த்தைகளை மறுதலித்தாலும்
மகளின் வார்த்தைகளை மறுக்க முடியாமல்
திணறுவதையும் அதன் பொருட்டான
சந்தோஷ தோல்விகளும்.

Loading

சமூக ஊடகங்கள்

மரம் அழிந்த கதை

ஆதியில், மனிதர்கள் அற்ற இடத்தினில்
ஒரு மரம் இருந்தது.
வளரத்துவங்குகையில்
அது பேசத்தொடங்கியது.
அதன் பாஷைகள்
புரியாதனவாக இருந்தன.
ஒரு குழந்தையை அழைத்து
தன் மேல் கல் எறியச் சொன்னது.
புரிந்த குழந்தை கல் எறிந்து சிரித்தது.
‘அங்க ஒரு மரம் இருக்குடா,
கல் எறிந்தால் பேசும்டா’ என்றது தனது நண்பர்களிடம்.
குழந்தைகளின் வருகையினால்
தலைகீழ் மாற்றம் அவ்விடத்தில்.
கால மாற்றத்தில்
பயணத்திற்கு இடையூராக இருப்பதாக
பயணம் செய்பவன் ஒரு நாள் சொன்னான்.
விழுதுகள் வேரிலிந்து அறுக்கப்பட்டன.
பல காலம் கடந்த பிறகு
சில குழந்தைகள் பேசிக்கொண்டன.
‘எங்க முப்பாட்டன் காலத்துல
அங்க ஒரு மரம் இருந்தது.
எங்க அப்பன் அதை அழிச்சிட்டான்டா ‘

Loading

சமூக ஊடகங்கள்

துறவு

உணவு பரிமாற்றத்தில்
தனக்கான பங்கு குறைகையில்,
ஒற்றை வார்த்தைகள்
உயிர் பெறுகின்றன
எல்லா அம்மாக்களிடமும்
“பசிக்கலடா”.

Loading

சமூக ஊடகங்கள்

விடுமுறை

உனக்கான பள்ளி                    விடுமுறை நாட்களில்
முத்தங்கள் இன்றி
காய்ந்து கிடக்கின்றன                     எனது கன்னங்கள்,
காயாமல் கிடக்கின்றன                  எனது நினைவுகள்.

Loading

சமூக ஊடகங்கள்

லயம்

எனக்கான கடை நாள் வலிகளை
கண்ணீருடன் விவரிக்கிறேன்.
நித்தியமானவனுக்கு
நித்தம் வலி ஏனோ
என்று விரல் பிடித்து
தலையினைக் கோதி
முத்தம் பதிக்கிறாய்.
எங்கிருந்தோ ஒலிக்கிறது ஒரு குரல்.
கிழம் பாயில படுத்து
அழுது அழுது
உயிரை எடுக்குது.

போய் சேர்ந்தாலும் நிம்மதியா இருப்பேன்.
தூரத்தில் நாய்களின் அழுகை ஒலி.

Loading

சமூக ஊடகங்கள்

எங்கே எதிர்காலம்?

நண்பன் ஒருவனை சந்திக்கச் சென்றிருந்தேன். வீட்டில் தொலைக்காட்சி அலறிக் கொண்டிருந்தது.

தொகுப்பாளர் ஊர் ஊராக சென்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்.

தொகுப்பாளர் : இராவணன் தவறு செய்வதாக சொல்லி அவனிடம் இருந்து விலகி வந்த தம்பியின் பெயர் என்ன?
பதில் : …
தொகுப்பாளர் : விஜய் சினிமா துறைக்கு வந்து இருபது வருடம் ஆகிறது. அவர் நடித்த முதல் படம் எது?
பதில் : நாளைய தீர்ப்பு.
தொகுப்பாளர் :  மிக அருமையான பதில்
பார்வையாளர்கள் மத்தியில் மிக்க சந்தோஷம்.

கண்ணிர் விட்டா வளர்த்தோம் இப்பயிரை கண்ணீரால் காத்தோம்

Loading

சமூக ஊடகங்கள்