Category: பசி
அறை கூவல்கள்
கால மாற்றம்
தொடரும் நினைவுகள்
உணர்வின் வாசனை
மண்ணின் பசி
வரம்
விழியருவி
கடவுளின் பரிச்சயம்
பொது வலி
வலி
சந்தோஷத்தின் சாயல்
தலை நிமிர்ந்த மிருகங்கள்

உற்ற பொருள் தேடி
உரெல்லாம் பயணம்
விதை துளிர்க்க துவங்குகையில்
உறுமாறும் வெறுமை
துளிர்தல் தாண்டி துளைத்தல் நிகழும்
ம்ண்ணின் கீழ் வேர்களாய்
துளிர்தவை பரவுதலில்
பரவசம் ஏற்படுத்தும்
அதையும் தாண்டி அனைத்தும் மாறும்
பூக்களாய் கனிகளாய்
காலத்தின் மாற்றத்தால்
நிலைப்புகள் நீக்கம் கொள்ளும்
விழ்ந்து கிடக்கும் பொருள் தேடி
விரையும் காகங்கள்
கவிதையும் கவிதை சார்ந்த இடமும்
பசியோடு ஆயினும்
கவிஞன் என்னும் கர்வத்தோடு
தலை நிமிர்ந்து நிற்கும் மிருகங்கள்
ஒரு மாதிரி

சூழ்ந்து செல்லும் ஆறு,
சுழன்று வீசும் காற்று,
கண்களுக்கு இனிய பசுமை,
காதுகளுக்கு இனிய ஒலிகள்,
மனதுக்கு இனிய வாசம்
சந்தோஷத்தின் சாயலில் ஏற்றுக் கொண்ட போது
ஒரு மாதிரி என்றார்கள்.
கால சுழற்சியில் மாறின காட்சிகள்
மூடின கண்கள், சாயல் அற்ற நினைவுகள்
சதா சர்வ காலமும் ஏகாந்ததில் திளைப்பு
இப்பொழுதும் கூறுகிறார்கள் ஒரு மாதிரி
எப்படிதான் வாழ்வது என்ற கேள்விக்கு
எவருமே விடையளிக்கவில்லை.
கவிஞன்
கலைஞன்

ஏதோ ஒரு கணத்தில்
வந்து விடுகிறது
வயிற்றுக்கும் கைகளுக்குமான போட்டி
மயிர் நீப்பீன் உயிர் வாழா கவரிமான்
மானம் கெட்ட வயிற்றுக்கு தெரிகிறதா என்ன
வயிற்றுக்கான வலிகளில்
கைநீட்டி யாசகம் கேட்க எத்தனிக்கையில்
எதிர்படுகின்றன வார்த்தைகள்
அவன் பிறவிக் கலைஞன்
பிழைப்புக்காக கை ஏந்துவானா?
அடை மழை வந்து நனைக்கிறது
வயிற்று நெருப்பின் வலிகளை.
கடவுளை விற்றல்
கடவுள் பொம்மைகளை விற்றால் தான் காசு
தெரு ஒர விற்பனை கலைஞன்
தெரு ஒர விற்பனை கலைஞன்