வறுமையும் வலியும்

என்றாவது உணர்ந்து
இருக்கிறீர்களா
பொருளற்று நண்பனை
சந்தித்த குசேலனின்
ஆழ்ந்த  மன வலிகளை.

Loading

சமூக ஊடகங்கள்

வாழ்விற்குப் பிறகுமான வலிகள்

காலனே,
கொஞ்சம் காலம் கடந்து வா.
புதைப்பதற்கு இடமும் அற்று
எரிப்பதற்கு மின்சாரமும் அற்ற
தேசத்தில் வாழ்கிறோம்.
மானம் கெட்ட தேசத்தில்
வாழ்வு மட்டும் அல்ல
மரணத்திற்கும் பின்னும் வலிதான்.

Loading

சமூக ஊடகங்கள்

தகிக்கும் தனிமைகள்

எவர் அறியக்கூடும்
மற்றவர்களை தன்னிடம்
அணுகவிடாமல்
தடுத்த வீடுகள்
கால மாற்றத்தால்
தனித்திருப்பதையும்
தவித்திருப்பதையும்.

Loading

சமூக ஊடகங்கள்

சாசுவதம்

புகைப்படத்தின் மீது நாட்டம்
கொண்டவனாக இருந்த பொழுதுகளில்
உன்னைப் படம் எடுக்க விரும்பினேன்.
நிச்சயமற்ற ஒன்றை
நிச்சயப்படுத்தவா இப்புகைப்படம் என்றாய்.
அன்று முதல்
பிடித்துப் போனது உன்னையும்
பிடிக்காமல் போனது புகைப்படத்தையும்.

Loading

சமூக ஊடகங்கள்

மானச தவம்

ஒரு வசந்த காலத்தின்
தொடக்கத்தில் ஒரு பயணம்.
நினைவு அடுக்குகளை
பிரித்துக் காட்டும் வாய்ப்பு உனக்கும்
காணும் வாய்ப்பு எனக்கும்.
இது சிறு வயது அடுக்குகள்,
இது பதினென் பிராயத்தின் அடுக்குகள்,
இது உறவுகளின் அடுக்குகள்,
இது அலுவலகத்தின் அடுக்குகள்
என்று அடுக்கிக் கொண்டே சென்றாய்.
எங்கே
காதல் அடுக்குகளைக் காணோம் என்றேன்.
மவுனப் புன்னகை வீசி பின் சொன்னாய்
தனித்து இருப்பதை பிரிக்க முடியும்.
கலந்து இருப்பதை அல்ல என்றாய்.
ஆண் என்பதன் அடையாளம் துறந்து
அழுகை ஒலி.

Loading

சமூக ஊடகங்கள்

திருமஞ்சனம்

சுத்தத்தின் பொருட்டு
நீராடல் நதிகளில்.
பார்த்தல் நிகழ்ந்தது
வகை வகையான மீன்களிடம்.
இயற்கையின் பொருட்டு
மீன் ஓன்று கையினை கடித்தது.
எதிர்ப்புகள் அற்ற நிலையில்
மற்ற மீன்களும்.
சில மீன்கள் கால்களை கடித்தன.
சில மீன்கள் முதுகினை கடித்தன.
சில மீன்கள் முடியினையும் கடித்தன.
எதுவும் அற்ற பொழுதுகளில்
எலும்புகளின் தோற்றம்.
ருசியின் பொருட்டு
அவற்றையும் உண்டன சில மீன்கள்.
அம்புகள் தைத்து தேரின் அடியில்
கிடக்கும் கர்ணனாய் நான்.
ஈரம் படிந்த இதயம் மட்டும்
இன்னமும் இருப்பதை
நீ உணர்த்தினாய்.
கரை ஓதுங்கியது எதுவோ?

Loading

சமூக ஊடகங்கள்

முமுஷு

காரணங்களின்றி காத்திருப்பு
வரும் புகைவண்டிக்காக.
நடை மேடையின் கடைவரை
ஒடிச் சென்று திரும்பும்
குழந்தைகள் கூட்டம்.
வருபவரை வரவேற்கவும்
வந்தவரை அனுப்பவும்
கண்ணிருடன் காத்திருக்கவும் கூட்டம்.
பெருத்த ஒலியுடன் வண்டியின் வருகையும்
பின்னொரு வியாபாரமும் தானாக நிகழும்.
விருப்பமுடன் உணவு உண்ணுதலும்
நீர் பிடித்து உண்ணுதலும் நிகழும்.
காலத்தின் கணக்கதனில்
வண்ணம் மாறும்.
வந்த தடம் அற்று வண்டி புகைவண்டி
புறப்பட்டுச் செல்லும்.
காலத்தின் சாட்சியாக
ஆல இலைகள் காற்றில் ஆடும்.

Loading

சமூக ஊடகங்கள்

விதிகளை மதித்தல்

மோதிய வாகனத்தில்
எழுதப் பட்டிருந்தது
சாலை விதிகளை மதிப்போம்.

Loading

சமூக ஊடகங்கள்

பின் நோக்கிய நினைவுகள்

வீடு மாற்றத்தின் பொருட்டு
எல்லா பொருள்களையும்
வாகனத்தில் ஏற்றிய பின்னும்
ஏற்ற முடியாமல் திணறுகின்றன
அந்த வீட்டின் நினைவுகள்.

Loading

சமூக ஊடகங்கள்

மவுனம் அறிதல்

பேச்சுகள் பெருகிய பொழுதுகளில்
பெரும் துக்கத்தில்
மவுனம் வேண்டி மனம்.
குருவினிடத்தில் கோரிக்கைகள்.
மவுனம்  அறியவும்  அடையவும்
மணம் புரிதலே சிறந்தவழி
என்று கூறிப் புன்னைகைத்தார்.

Loading

சமூக ஊடகங்கள்

நாத்திக நம்பிக்கை

நாத்திகத்தில் நம்பிக்கை இருப்பினும்
கிளி ஜோதிடம் பாருங்கள்.
எவர் அறியக்கூடும்
வீசி விடும் நெல் மணிகள்
ஒர் உயிரின், பசியின் ஒர் துளி
ஆற்றுவதை.

Loading

சமூக ஊடகங்கள்

அழுகையின் ஊற்றுக்கண்

எங்கேனும் உற்று கவனித்திருக்கிறீர்களா
திருமணத்தில் சந்தோஷ ஒலிகளைத் தாண்டி
மனதிற்குள் அழுகைகளை
அடக்கி வைத்திருக்கும்
மணப்பெண்ணின் தந்தையின் வலிகளை.

Loading

சமூக ஊடகங்கள்

அறை கூவல்கள்

வாழ்வின் முக்கியங்கள்
மறைக்கப் பட்டு
ஒத்திகை அறையில்
கூத்து கலைஞர்களின் குரல்கள்
ம் ஆடுங்க
ஏற்பது இகழ்ச்சி

Loading

சமூக ஊடகங்கள்

கால மாற்றம்

எவர் அறியக் கூடும்
தான் கதா நாயகனாகவும்
கால மாற்றத்தில்
தானே தந்தையாகவும்
நடித்த படங்களை
மற்றொருவரின் வரவேற்பறையில்
காண நேர்கையில் ஏற்படுத்தும்
மன வலிகளை.

Loading

சமூக ஊடகங்கள்

கவிதையின் தோற்றம்

ஒரு முறை கடவுளை
சந்திக்கையினில்
லட்சிய கவிதைகள்
எப்பொழுது வாய்க்கும் என்றேன்.
காதலித்துப் பார்
கவிதை வரும் என்றார்.
மறுதலித்து மற்ற
வழியினைக் கேட்டேன்.
கணவனாகிப் பார்.
லட்சம் கவிதைகள் வரும் என்றார்.
எழுதப் படாத கவிதைகள்
எண்ணிலி என்றும் பகன்றார்.

Loading

சமூக ஊடகங்கள்

ரோஜா வாசம்

காய்ந்த நினைவோடைகள்
கணப் பொழுதினில்.
இருளின் துணை கொண்டு
நீ என்னை பயமுறுத்திய தருணங்கள்
இன்னமும் வெளிச்சங்களாய்.
ஒற்றை இரவினில் நீ
உதிர்த்து போன ரோஜா வாசம்
அறை எங்கும் சிதறிக் கிடக்கிறது.
நீர் அடித்து நீர் விலகாது.
நீ வீசிச் சென்ற நீரின் துளிகள்
காயாமல் இருக்கிறது
நெஞ்சுக்குள் நினைவுகளாய்.

Loading

சமூக ஊடகங்கள்

தொடரும் நினைவுகள்

என்னுள்ளே எட்டிப் பார்த்தத்
என்றொ கடந்த அனுபவ மேகங்கள்
வழிந்தொடும் ஆறு
அதனுள் குதித்தாடிய நினைவுகள்,
வாய்க்கால் தாண்டி வயல்,
பனியுடன் கூடிய பஜனைப் பாடல்கள்,
பாடல்களை தொடரும்
பட்டாம் பூச்சிகள்
அனைத்தும் தாண்டி….
ஒங்கி ஒலிக்கும்
என்றைக்குமான ஒரு குரல்
‘லீவு நாள்னா இதுதான் வேலை’

Loading

சமூக ஊடகங்கள்

இடமும் பொருளும்


பதில் தேடி புறப்பட்ட
தருணங்களில் எதிர்ப்பட்டார்
என்றைக்குமான கடவுள்.
என்ன வினாக்களோடு பயணம்
என்றார்.
வலிமையானது
காதலா, பசியா என்று
கண்டு உணரப்
புறப்பட்டிருக்கிறேன் என்றேன்.
நீண்ட நெடும் பயணத்திற்கு
பிறகான வழி திரும்புகையில்
ஒன்றில் இடம் பெற வேண்டிய
பெயர் மற்றொன்றில்.


Loading

சமூக ஊடகங்கள்

நரகம் எனில்


கடவுளை உணரத்துவங்கிய
தருணங்களில்
இருமைக்கான வினா எழந்தது.
நரகம் எனில் என்னவென்றென்.
மனைவியின் வார்த்தைகளை
மறுதலித்துப் பார்.
உணர்வாய் பொருள் அதனை
என்று உரைத்து
புன்னகைத்தார்.

Loading

சமூக ஊடகங்கள்

கடை வலி

ஒன்றிற்கும் உதவாது
என்று நினைத்து
பூட்டப்பட்ட
கடைசி தருணங்களில்
உணர்ந்திருப்பார்களா
கதவுகளின் கடைசி வலி

Loading

சமூக ஊடகங்கள்