ஜனனி

பிறந்த குழந்தையை காண வருபவர்களால்
அறை நிரப்பப்பட்டிருந்தது.
எவர் அறியக்கூடும்
அதனையையும் தாண்டி
குழந்தையைக் காணவந்த
மலடி என்று அழைக்கப்பட்டவளின்
கண்ணீர் வலிகளை.

Loading

சமூக ஊடகங்கள்

மகா மாயா

‘ஏன் இப்பொழுது மழை
அடிக்கடி பெய்வதில்லை’ என்கிறாய்.
வினாக்களோடு என் விழிகள் உயர்வடைகின்றன.
‘காகிதக்கப்பல் செய்யக் கற்றுக் கொண்டேன்.
விடுவதற்கு நீர் வேண்டும்’ என்று
விழி நீரை இறைக்கிறாய்.
வெப்ப சலனத்தில் இடம் மாறுகின்றன
சந்தோஷ நீர் ஓடைகள் வாழ்வின் முழுமைக்கும்.

Loading

சமூக ஊடகங்கள்

குருஷேத்ரம்

திருமணங்கள் சொர்கத்தில்
நிச்சயிக்கப் பட்டாலும்,
பிரிவுகள் மட்டும்
பூமியில் நிச்சயிக்கப்படுகின்றன.

Loading

சமூக ஊடகங்கள்

படைப்பின் பயணம்

ஆதியில் விசித்திரங்களை ஈனும் பூமியில்
நான் விழுந்த போது
எனக்கு சிறகுகள் இருந்தன.
அப்போது நீர்ப் பரப்பு சலனமற்று இருந்தது.
சில பறவைகளுக்கு சிறகுகள் இருந்தன
பல பறவைகளுக்கு சிறகுகளில் முட்களும் இருந்தன.
பல பறவைகள் சிறகுகள் அற்று.
ஏன் இந்த நிகழ்வுகள் என்றேன் அவைகளிடம்.
மாயையின் தோற்றம் படா இடங்களில் சிறகுகள் இருக்கும்;
சந்தோஷ வாழ்வுடன் கோபங்களை வீசியவைகளுக்கும்,
கோபத்தில் தடித்த வார்த்தைகளை வீசியவைகளுக்கும்,
சிறகுகளில் முட்கள் இருக்கும்;
வாழ்வினை கொண்டாடத் தெரியாதவைகளுக்கு
சிறகுகள் அற்று இருக்கும்
என்றும் பகர்ந்தன.
பதிலின் வசிகரத்தில் ‘எனக்கு என்ன ஆகும்’
என்று வினா ஒன்று எழுப்பினேன்
‘விடை தேடுதல் தான் வாழ்வு’ என்று கூறி
அவ்விடம் விட்டு அகன்றன.
தொலை தூரத்தில்
மேகக் கூட்டங்களின் சாயைகள் நீரினில்.
அப்போதும் நீர்ப் பரப்பு சலனமற்று இருந்தது.

Loading

சமூக ஊடகங்கள்

அணையா அடுப்பு

விடுதலையை விரும்பா இறக்கைகள்,
காற்று அடித்தால் தான் காசு சிலருக்கு,
எதிர் வழியில் தான் காசு பலருக்கு,
வீசும் காற்று எங்கும் வெம்மைகள்
வயிற்றின் வலி  நீக்கும் பொருட்டு.

Loading

சமூக ஊடகங்கள்

யாத்திரை

மகள்
பாதி உறக்கத்தில்
விட்டுச் சென்ற
இரவு நேர கதைகளுக்காக
‘ம்’ சொல்ல காத்திருக்கின்றன
பொம்மைகள்.

Image – Internet

Loading

சமூக ஊடகங்கள்

முள் இடரல்

பிரளயத்தின் முடிவினில்
தட்டப்பட்டன
தாசி வீட்டின் கதவுகள்.

Loading

சமூக ஊடகங்கள்

மறு உரு

ஆதியில் அன்றொரு நாள்.
எனக்கான குழந்தையாக நீ.
ஒரு பெயரிட்டு என்னை அழைக்கிறாயே,
வேறு பெயர்கள் இல்லையா என்கிறாய்.
ஸ்ரீ மாதா,
ஸ்ரீ மஹாராக்ஞீ
ஸ்ரீ மத்ஸிம்ஹாசனேச்வரீ

..
கோவிந்த ரூபினி.
..
..
மகா பைரவ பூஜிதாய
..
அம்மா,அப்பாவ பாரேன்,
பேசிகிட்டு இருந்தார்,
மயங்கி விழுந்துட்டாரு.

Loading

சமூக ஊடகங்கள்

காத்திருத்தலின் வலி

மகளின் எச்சிலால் ஆன
ஈர தலையனைகள்
நினைவூட்டுகின்றன,
நானும் ஓரு குழந்தையின்
சராசரி தந்தை என்று.

Loading

சமூக ஊடகங்கள்

பாலை திரிந்து?

பட்டுப்போய் இருக்கிறது
பட்டு நெய்பவர்களின் வாழ்வு.

Image : internet

Loading

சமூக ஊடகங்கள்

அழகியல்

என் உதடுகள் உச்சரிக்கும் வரை
அறியவில்லை
உன் பெயர் இத்தனை அழகாய் இருக்கும் என்று.

Loading

சமூக ஊடகங்கள்

விலை

எல்லா விலை உயர்ந்த
உணவிற்கு பின்னாலும் இருக்கின்றன,
பல மனிதர்களின் வறுமையும் பசியும்.

Loading

சமூக ஊடகங்கள்

ஜீ(வ)வீத நதி

பனிபூத்த பவழமல்லி,
கரை புரளும் காவிரி,
நதியினில் ஒரு ஒட்டம்,
நிலாச் சோறு,
காற்றினில் கரையும் கீதங்கள்,
ஆசிரியர்களின் அரவணைப்புகள்,
தோளில் கை போட்டுக்கொள்ளும் தோழமை;
பரிகாச சிரிப்புகள்
மறுநாளின் தொடக்கம் வரை நீளும்,
அனைத்தும் தாண்டி குரல் ஒலிக்கும்
‘கோட் எரர் அடிக்குது,
கிளையன்ட் கத்ரான்
என்னான்னு பாருங்க’.

Loading

சமூக ஊடகங்கள்

கலைடாஸ்கோப்

களைப்போடு வீட்டிற்குள் நான்.
இரண்டு முறை சுற்றி வந்து
காற்றில் கைகளை மூடி
‘என்ன இருக்கிறது தெரியுமா’ என்று
என் கைகளை விரிக்க சொல்கிறாய்.
வினாக்களோடு விடுபடுகின்றன கைகள்.
பெரிய வண்ணத்துப் பூச்சியும்,
சில சிறிய வண்ணத்துப் பூச்சிக் கூட்டமும் என்கிறாய்.
வண்ணத்துப் பூச்சிகளின் இடமாறுதலில் தெரிகிறது,
நான் தொலைத்து விட்ட குழந்தைப் பருவங்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

வைராக்கியம்

எல்லா வைராக்கியங்களுக்கு பின்னும்
இருக்கின்றன,
வலி மிகுந்த வறுமைகள்.

Loading

சமூக ஊடகங்கள்

வாடிவாசல்

தொலைதூர மனிதர்களிடம் நட்பு,
தொட்டுவிடும் தூர மனிதர்களிடம் விரோதம்
வாழ்தல் தாண்டி
வசதிகளை கொடுத்த வாழ்வு,
வரப்புக்களை உயர்த்தி இருக்கிறது.
ஓட்டம் கொண்ட குதிரை
ஓர் இடத்தில் நிலைபெறாமாலா செல்லும்?

Loading

சமூக ஊடகங்கள்

அமிர்தம்

நட்சத்திர ஹோட்டலின் வருமானம்
முதல் பக்கங்களில்
பட்டினியின் சாவு குறித்த விவரங்கள்
எவரும் அணுகமுடியா பக்கங்களில்.

Loading

சமூக ஊடகங்கள்

மயானச் சாலை

பாதையினில்
எழுதப் பட்டிருந்தது
மயானச் சாலை

Loading

சமூக ஊடகங்கள்

பிராப்தம்

காகிதத்தின் பக்கங்களை
கவிதைகளால் நிரப்ப துவங்குகையில்,
முன் பக்கங்களை,
முன் எப்போதும் சந்தித்திராத
கரையான்கள்
அறிக்……——
……..க………….
…துவ………..
ங்கி………
…….இரு…….
ந்தன.

Loading

சமூக ஊடகங்கள்

மஹா பலி

தான் புதைத்த
தலைகளின் மேல் கட்டிடம் எழுப்பி
தலையாட்டி களிப்போடிருந்து
‘தானே எல்லாம்’ எனும் பொழுதுகளில்
சாய்ந்தது தன் தலை.

Loading

சமூக ஊடகங்கள்