ஜீ(வ)வீத நதி

பனிபூத்த பவழமல்லி,
கரை புரளும் காவிரி,
நதியினில் ஒரு ஒட்டம்,
நிலாச் சோறு,
காற்றினில் கரையும் கீதங்கள்,
ஆசிரியர்களின் அரவணைப்புகள்,
தோளில் கை போட்டுக்கொள்ளும் தோழமை;
பரிகாச சிரிப்புகள்
மறுநாளின் தொடக்கம் வரை நீளும்,
அனைத்தும் தாண்டி குரல் ஒலிக்கும்
‘கோட் எரர் அடிக்குது,
கிளையன்ட் கத்ரான்
என்னான்னு பாருங்க’.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *