நாடக முடிவு

வினாக்கள் பல திசைகளில்
விடைகள் மட்டும்
சூன்யத்தில்

Click by : Karthik Pasupathiy

Loading

சமூக ஊடகங்கள்

மகிழம்பூக்கள்

மகள் கைப்பிடித்துச் செல்லும்
ஒவ்வொரு நடையிலும்
தெரிகிறது
வாழ்வின் அருமைகள்


Photo & Click by : Prakash Thiagarajan

Loading

சமூக ஊடகங்கள்

அக்லிஷ்டா

வீடு பேறு அடையக் காத்திருக்கின்றன
தெய்வங்கள்
வீதிகளில்














அக்லிஷ்டாஉலக இன்பத்தில் இருந்து நாம் மீள உதவுகிறவை.

பதஞ்சலி யோக சூத்திரம் – 5


Click by Vinod VV

Loading

சமூக ஊடகங்கள்

பிம்பங்களின் ஜனனம்

படர்ந்து செல்லும் காற்று
மரங்களில் பட்டு
மழையாய் மாறி
இலைகளின் வழியே
வ……
       ழி……
   ய……
த்…… 
துவங்குகையில்
வாழ்வு இனிக்கத் துவங்குகிறது.










Click by : Vinod Velayudhan

Loading

சமூக ஊடகங்கள்

நவகண்டம்

 எல்லைகள் அற்ற ஒரு தருணத்தில்
நிகழ்ந்தது உன்னுடனான சந்திப்பு.
அகிலின் நறுமணம் எங்கும்.
நிகழ்வுகளை நியாப்படுத்தி,
இழப்பதற்கு எதுவும் இல்லை
ஏன் என்று விளக்கம் கேட்கிறேன்..
எதுவும் அற்றவனுக்கு
வாய்க்கிறது ப்ரபஞ்சமும்
வாழ்வும் என்கிறாய்.
நிர்வாணம் கொள்கின்றன
நினைவுகளும் நிஜங்களும்.
நவகண்டம்தன்னைத்தான் பலியிட்டுக் கொள்ளுதல்
 
Click by : Bragadeesh

Loading

சமூக ஊடகங்கள்

மண் கவுச்சி

நான் வாசனையாக இருக்கிறேனா
என்று கேட்டுவிட்டு மகள் சென்ற பின்னும்
குறையாமல் இருக்கிறது
வாசனைகளும் நினைவுகளும்.

Click by : SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

பிரபஞ்ச இயக்கம்

ஏரி சலனமற்று இருந்தது
காற்றில் ஆடி சில காகிதங்கள் அதன் அருகில்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
சில சிறுவர்கள் கல் எறிந்து தவளை கண்டார்கள்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
மரங்கள் இலைகளை உதிர்த்தன ஏரியில்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
உவகை பொங்க மழைத்துளி ஈன்றது வானம்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
சிறு குழந்தைகள் கைகளை நனைத்தன.
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
பெரும் மாற்றங்களுக்குப் பின் பிணம் ஒன்று மிதந்தது
அப்போதும்
ஏரி நிரம்பி சலனமற்று இருந்தது.

Click by : Vinod Velayudhan

Loading

சமூக ஊடகங்கள்

சுழியம்

வெறுமையாய் இருக்கிறது
உண்டியல்
செய்பவன் வாழ்வும்
விற்பவன் வாழ்வும்

*சுழியம்-Zero



Click by : Bragadeesh Prasanna

Loading

சமூக ஊடகங்கள்

சஞ்சிதம்

அறுவடைக்குப் பின்னும்
தனித்து கிடக்கின்றன
பொம்மைகள்.

*சஞ்சிதம் – எஞ்சியது.


Click by : Harish Kumar

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் விழுதுகள்

உடைந்து கிடக்கும்
ஒவ்வொரு பொருளும்
ஒன்றை நினைவு படுத்துகின்றன.
எரியும் நெருப்புகள் அனைத்தும்
ஒன்றை நினைவு படுத்துகின்றன.
அறைக்கும் அசையும் காற்றுகள் அனைத்தும்
ஒன்றை நினைவு படுத்துகின்றன
நீரும், நீர்த் துடிப்பும்
ஒன்றை நினைவு படுத்துகின்றன.
கூடும் நீல மேகங்களும்
ஒன்றை நினைவு படுத்துகின்றன.
ஒன்றிலும் நிலைபெறாமலும்
ஒன்றாமலும் மனம் மட்டும்.

Click by : Ramaswamy Nallaperumal (Ramaswamy N)

Loading

சமூக ஊடகங்கள்

வாலி

அழகியல்கள் வலிமை பெறுகின்றன
குழந்தைகளால் உடைபடும்
நிசப்தங்களால்.

Click by : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

நடுகல்

இலை பறிக்கப் படுகையில்
அதன் வலிகளை
என்றாவது உணர்ந்திருக்குமா
அதன் விழுதுகள்.

நடுகல்* – வீரச் சாவு அடைந்தவர்களுக்கு மதிப்பு கொடுத்து எடுக்கப்படும் நினைவுக் கல்.
Click by : Bragadeesh

Loading

சமூக ஊடகங்கள்

காலப் பயணம்

குளிர் பேருந்தில்
கண்ணாடி அருகே
உட்புறத்தில் பயணிக்கும்
ஈக்களின்
சேருமிடம் எதுவாக இருக்கக் கூடும்.

Click by : SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

சாரல்

மழை மிகவும் பிடிக்கும் என்கிறாய்.
ஏன் என்கிறேன்.
‘ஒற்றை குடை பிடித்து
உன் தோளில் சாய்ந்து
மழையில் நனையலாம் அல்லவா’ என்கிறாய்.
வெகு அருகில் தட்டான் பூச்சிகளின் ஒலிகள்.

Loading

சமூக ஊடகங்கள்

வீடு பேறு – 2

பறவைகள் பறந்த பின்னும்
இருக்கின்றன
வெறும் கூடுகள்.

வீடு பேறு * – முக்தி
Click by : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

வீடுபேறு

வெட்டப் படுவதற்காக
செல்லும் போதும்
இலைகளைத் தின்கின்றன ஆடுகள்.

Click by : SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

வளியும் வலியும்

வெடிக்கும் பலூன் சப்தம்
கைக் கொட்டிச் சிரிக்கும் குழந்தைகள்,
கலைகின்றன கனவுகள்.


Click by Ram (a) Ramaswamy Nallaperumal

Loading

சமூக ஊடகங்கள்

கடலோடு கலத்தல்

விட்டுச் சென்ற பின்னும்
இருக்கின்றன
பழைய வீட்டின் வாசனைகள்.

Click by : Santhosh Kumar VG

Loading

சமூக ஊடகங்கள்

அலைகள் அற்ற கடல்

பெரு நீர்ப்பரப்பின் மேல் பறத்து
மீனைக் கொத்திச் சென்றபின்னும்
அமைதியாக இருக்கிறது நீர்ப்பரப்பு.

Click by : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

தரிசனம்

யாரும் அற்ற நிலவொளி

மீண்டும் ஒரு வாய்ப்பு நமக்காக,
நமக்காக மட்டும்.
சுற்றி ஒலிக்கின்றன வண்டின் ஒலிகள்.
‘சந்தோஷத்தின் கால அளவு பெரிதா,
வலியுடன் கூடிய காயங்களின் 
கால அளவுகள்  பெரிதா’ என்கிறேன்.
‘காலடித் தடம் படா இடங்கள் உண்டு
காயம் படா இதயங்கள் உண்டா’ என்கிறாய்.
நிலையற்று போகிறது நினைவுகள்.
எங்கிருந்தோ ஒலிக்கிறது ஒரு குரல்.
‘எவ்வளவு நேரமா டீவீ பொட்டில
பொம்பளய பாப்பீங்க’


Click by : Karthik Pasupathi

Loading

சமூக ஊடகங்கள்