Category: கவிதை
மகிழம்பூக்கள்
அக்லிஷ்டா
பிம்பங்களின் ஜனனம்
நவகண்டம்
மண் கவுச்சி
பிரபஞ்ச இயக்கம்
ஏரி சலனமற்று இருந்தது
காற்றில் ஆடி சில காகிதங்கள் அதன் அருகில்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
சில சிறுவர்கள் கல் எறிந்து தவளை கண்டார்கள்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
மரங்கள் இலைகளை உதிர்த்தன ஏரியில்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
உவகை பொங்க மழைத்துளி ஈன்றது வானம்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
சிறு குழந்தைகள் கைகளை நனைத்தன.
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
பெரும் மாற்றங்களுக்குப் பின் பிணம் ஒன்று மிதந்தது
அப்போதும்
ஏரி நிரம்பி சலனமற்று இருந்தது.
சுழியம்
சஞ்சிதம்
காற்றில் ஆடும் விழுதுகள்
உடைந்து கிடக்கும்
ஒவ்வொரு பொருளும்
ஒன்றை நினைவு படுத்துகின்றன.
எரியும் நெருப்புகள் அனைத்தும்
ஒன்றை நினைவு படுத்துகின்றன.
அறைக்கும் அசையும் காற்றுகள் அனைத்தும்
ஒன்றை நினைவு படுத்துகின்றன
நீரும், நீர்த் துடிப்பும்
ஒன்றை நினைவு படுத்துகின்றன.
கூடும் நீல மேகங்களும்
ஒன்றை நினைவு படுத்துகின்றன.
ஒன்றிலும் நிலைபெறாமலும்
ஒன்றாமலும் மனம் மட்டும்.
Click by : Ramaswamy Nallaperumal (Ramaswamy N)
வாலி
நடுகல்
காலப் பயணம்
சாரல்
வீடு பேறு – 2
வீடுபேறு
வளியும் வலியும்
கடலோடு கலத்தல்
அலைகள் அற்ற கடல்
தரிசனம்
யாரும் அற்ற நிலவொளி
Click by : Karthik Pasupathi