மானச தவம்

ஒரு வசந்த காலத்தின்
தொடக்கத்தில் ஒரு பயணம்.
நினைவு அடுக்குகளை
பிரித்துக் காட்டும் வாய்ப்பு உனக்கும்
காணும் வாய்ப்பு எனக்கும்.
இது சிறு வயது அடுக்குகள்,
இது பதினென் பிராயத்தின் அடுக்குகள்,
இது உறவுகளின் அடுக்குகள்,
இது அலுவலகத்தின் அடுக்குகள்
என்று அடுக்கிக் கொண்டே சென்றாய்.
எங்கே
காதல் அடுக்குகளைக் காணோம் என்றேன்.
மவுனப் புன்னகை வீசி பின் சொன்னாய்
தனித்து இருப்பதை பிரிக்க முடியும்.
கலந்து இருப்பதை அல்ல என்றாய்.
ஆண் என்பதன் அடையாளம் துறந்து
அழுகை ஒலி.

Loading

சமூக ஊடகங்கள்

திருமஞ்சனம்

சுத்தத்தின் பொருட்டு
நீராடல் நதிகளில்.
பார்த்தல் நிகழ்ந்தது
வகை வகையான மீன்களிடம்.
இயற்கையின் பொருட்டு
மீன் ஓன்று கையினை கடித்தது.
எதிர்ப்புகள் அற்ற நிலையில்
மற்ற மீன்களும்.
சில மீன்கள் கால்களை கடித்தன.
சில மீன்கள் முதுகினை கடித்தன.
சில மீன்கள் முடியினையும் கடித்தன.
எதுவும் அற்ற பொழுதுகளில்
எலும்புகளின் தோற்றம்.
ருசியின் பொருட்டு
அவற்றையும் உண்டன சில மீன்கள்.
அம்புகள் தைத்து தேரின் அடியில்
கிடக்கும் கர்ணனாய் நான்.
ஈரம் படிந்த இதயம் மட்டும்
இன்னமும் இருப்பதை
நீ உணர்த்தினாய்.
கரை ஓதுங்கியது எதுவோ?

Loading

சமூக ஊடகங்கள்

முமுஷு

காரணங்களின்றி காத்திருப்பு
வரும் புகைவண்டிக்காக.
நடை மேடையின் கடைவரை
ஒடிச் சென்று திரும்பும்
குழந்தைகள் கூட்டம்.
வருபவரை வரவேற்கவும்
வந்தவரை அனுப்பவும்
கண்ணிருடன் காத்திருக்கவும் கூட்டம்.
பெருத்த ஒலியுடன் வண்டியின் வருகையும்
பின்னொரு வியாபாரமும் தானாக நிகழும்.
விருப்பமுடன் உணவு உண்ணுதலும்
நீர் பிடித்து உண்ணுதலும் நிகழும்.
காலத்தின் கணக்கதனில்
வண்ணம் மாறும்.
வந்த தடம் அற்று வண்டி புகைவண்டி
புறப்பட்டுச் செல்லும்.
காலத்தின் சாட்சியாக
ஆல இலைகள் காற்றில் ஆடும்.

Loading

சமூக ஊடகங்கள்

வல்லமை தாராயோ

நீண்ட நெடும் தூக்கதிற்கு
தயாரய் மனமும் உடலும்.
எதிர்படும் தலைவலிகள்
என்றைக்குமான தொடர்ச்சியாய்.
வலி பெரியதா, மருந்திடவா
என்கிறாய்.
வலியினை நீக்கும் மருந்தாய்
விரல்களும் உன் வார்தைகளும்.
இன்னும் இருக்கும் வலியை
உரைக்கிறேன் உன்னிடத்தில்.
அடுத்தவங்கள பாடா படுத்தினா
வலி எப்படி போவும்.
வார்தைகளின் முடிவில்
முடிவில்லா பயணம்.

Loading

சமூக ஊடகங்கள்

கவிதையின் தோற்றம்

ஒரு முறை கடவுளை
சந்திக்கையினில்
லட்சிய கவிதைகள்
எப்பொழுது வாய்க்கும் என்றேன்.
காதலித்துப் பார்
கவிதை வரும் என்றார்.
மறுதலித்து மற்ற
வழியினைக் கேட்டேன்.
கணவனாகிப் பார்.
லட்சம் கவிதைகள் வரும் என்றார்.
எழுதப் படாத கவிதைகள்
எண்ணிலி என்றும் பகன்றார்.

Loading

சமூக ஊடகங்கள்

சிருஷ்டி

ஒன்று
ஒன்று கூடி
ஒன்றானது.
ஒன்று
ஒன்றுமில்லாமல்
ஒன்றானது.

Loading

சமூக ஊடகங்கள்

மண்ணின் பசி

பசி கொண்ட மனிதனொருவன்
பல்கி பெருகின மனிதர்களிடம்
யாசகம் பெற்றான்.
பொருள் குவிந்த வேளையில்
புலப்படவே இல்லை
வாழ்வுக்கான சூத்திரங்கள்.
பசி கொண்ட பல மனிதர்களை
உண்ட பின்னும்
மாறாமல் இருக்கிறது
மண்ணின் பசி.

Loading

சமூக ஊடகங்கள்

பிரபஞ்சமும் இயக்கமும்

மலை அளவு
செய் உதவி மறந்து
உளுந்து அளவு
உதவியின்மைக்காக
உறவுகளை சிக்கலாக்கும்
உன்னதமான மனைவி உறவை
என்ன செய்வது என்று
கடவுளிடம் கேட்டேன்.
பிரபஞ்சமும் இயக்கமும்
யாவர்க்கும் பொது என்று
பொருள் உரைத்து கரைந்தார்.

Loading

சமூக ஊடகங்கள்

வரம்

குழந்தை வரம் கேட்டு
கோட்டம் விட்டு வெளியேறுகையில்
கைகளில் குழந்தைகளுடன்
பிச்சைக்காரி

Loading

சமூக ஊடகங்கள்

கேள்வியும் பதிலும்


எனக்கும் கடவுளுக்குமான
எண்ண பரிமாற்றத்தில்
பதில் அளிக்க விரும்பா தருணங்களில்
புன்னகைப்பேன் என்று
உடன்பாடு உண்டானது.
நெஞ்சினில் கை வைத்து
வாலிபத்தின் சாயலில்
வாழ்ந்து காட்டுவேன் என்று
சபதமிட்ட மனிதர்கள்
மண்ணில் மறைந்து போனது
குறித்ததுவே என்ற எனது கேள்விக்கு
பதில் கிடைத்தது
மந்தஹாசப் புன்னகை.


Loading

சமூக ஊடகங்கள்

வலியறிந்த தருணம்

எப்பொதோ நிகழ்தது
எனக்கும் என் மகனுக்குமான போராட்டம்
வலியறிந்த தருணங்களில்
வன்மையான வார்தைகள்
செத்தொழியுங்கள்
நசிகேசன் சாபம்
அப்பனுக்கு பலித்தது
என் கண்களை மூடினேன்
அவன் கண்களுக்குள் குளம்

Loading

சமூக ஊடகங்கள்

நெருக்கம்

ஏதோ ஒரு கணத்தில்
நிகழ்ந்து விட்டது
கடவுளுக்கும் எனக்குமான நெருக்கம்
எனனை அருகினில் அழைத்து
என்ன வேண்டும்
கடவுளா, கடவுளின் தன்மையா என்றார்
எண்ணத் தொடங்கிய நிமிடங்களில்
எட்டா தூரத்தில் எல்லாம் அறிந்த ப்ரம்மம்

Loading

சமூக ஊடகங்கள்

கடவுள்

கடவுள் தரிசனத்தின் போது
தூங்கியது குழந்தை
திட்டினாள் தாய்
மறைந்தார் கடவுள்

Loading

சமூக ஊடகங்கள்

பொது வலி


கட்சிக் கொடி ஏந்தி
கடைசியாக நின்று
கத்துகையில்
கல்லான மனதுக்குள்
கண்ணீர் மழை
ஏழையாக இருப்பதை அறிகிறதா
பாழும் வயிறு

Loading

சமூக ஊடகங்கள்

ஒரு மாதிரி


சூழ்ந்து செல்லும் ஆறு,
சுழன்று வீசும் காற்று,
கண்களுக்கு இனிய பசுமை,
காதுகளுக்கு இனிய ஒலிகள்,
மனதுக்கு இனிய வாசம்
சந்தோஷத்தின் சாயலில் ஏற்றுக் கொண்ட போது
ஒரு மாதிரி என்றார்கள்.
கால சுழற்சியில் மாறின காட்சிகள்
மூடின கண்கள், சாயல் அற்ற நினைவுகள்
சதா சர்வ காலமும் ஏகாந்ததில் திளைப்பு
இப்பொழுதும் கூறுகிறார்கள் ஒரு மாதிரி
எப்படிதான் வாழ்வது என்ற கேள்விக்கு
எவருமே விடையளிக்கவில்லை.

Loading

சமூக ஊடகங்கள்

ஐயனார்


யாருமற்ற இடத்தில் ஐயனார்
கைவிடப்பட்ட வயதான மனிதர்களின்
வலியும், வலி சார்ந்த நினைவுகளுடன்

Loading

சமூக ஊடகங்கள்

கடவுளை விற்றல்

கடவுள் பொம்மைகளை விற்றால் தான் காசு
தெரு ஒர விற்பனை கலைஞன்

Loading

சமூக ஊடகங்கள்

வண்ணம்


வாழ்வின் தொடக்கதில்
வாழ்க்கைக்கான வண்ணம் எல்லாம்.
சமாதானதிற்கான நிறம்
வெண்மை
சக்திக்கான நிறம்
சிகப்பு
பசுமை நிறம் பச்சை
உயிரின் மூலமறிதலில்
உண்மையான நிறம் நீலம்
என்றார்கள்.
நாளொடும் பொழுதொடும்
நகர்ந்தன
என் வண்ணம் எல்லாம்.
அழகாய் சமுகம்
கொடுத்திருகிறது எனக்கு நிறம்
நிறமற்றவன் என்று.

Loading

சமூக ஊடகங்கள்

அகமும் புறமும்


வெயிலில் பக்தர்கள்
குளிர் அறையில் கடவுள்

Loading

சமூக ஊடகங்கள்

கடவுள்


வெளியே வெப்பத்தின் கொடுமை
இருந்தும் இருட்டறை விட்டு
வெளியே வரவில்லை எந்த கடவுளும்

Loading

சமூக ஊடகங்கள்