
வாழ்வின் தொடக்கதில்
வாழ்க்கைக்கான வண்ணம் எல்லாம்.
சமாதானதிற்கான நிறம்
வெண்மை
சக்திக்கான நிறம்
சிகப்பு
பசுமை நிறம் பச்சை
உயிரின் மூலமறிதலில்
உண்மையான நிறம் நீலம்
என்றார்கள்.
நாளொடும் பொழுதொடும்
நகர்ந்தன
என் வண்ணம் எல்லாம்.
அழகாய் சமுகம்
கொடுத்திருகிறது எனக்கு நிறம்
நிறமற்றவன் என்று.