உன்னை இடையறாது நினைத்து, உன்னைப் பற்றி அறிந்து, அதன் உட்பொருளை பொருள் மாறாது உரைக்கும் அடியார்கள் தங்கள் தலை உச்சியாக இருப்பவனே, இடுப்பில் ஆடுகின்ற பாம்பைக் கட்டியுள்ளவனே, எல்லா வகையிலும் முதலும் முடிவும் ஆனவனே, சிறந்த முல்லை நிலத்தையும், சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள `அவினாசி` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, காலனையும், முதலையையும், இக்குளக்கரையில் பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணையிட்டருள்.
விளக்கஉரை
`காலனை முதலையிடத்தும், முதலையைக் கரையிடத்தும் தரச்சொல்லு ` என்ற பொருளில் சுந்தரர் இவ்வாறு இப்பாடலை அருளிச்செய்து முடிக்குமுன்பே, நீரில்லா மடுவில் நீர் நிறைந்திட முதலை அங்கு வந்து, சுந்தரரிடம் ஐந்து வயது பாலகனாக உண்ட சிறுவனை பத்து வயதுப் பையனாகவே உயிருடன் உமிழ்ந்துவிட்டுச் சென்றது வரலாறு
உள்குதல் – உள்ளுதல், நினைதல், ஆராய்தல், நன்கு மதித்தல், மீண்டும் நினைத்தல், இடைவிடாது நினைத்தல்
‘உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே’ எனும் பொருளில் பல இடங்களில் விளக்கப்பட்டுளது. இறைவன் புகழ் சொல்லை விரும்பாதவன் எனும் பொருளிலும், உரைப்பார், உரைப்பவை உரைப்பார், உள்கி உரைப்பவை உரைப்பார் எனும் பொருளிலும் இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தங்கள் உச்சியாய் – யோக தொடர்புள்ளவர்கள் குரு மூலமாக அறிக
இறக்கும் நிலையை நீக்கி என்னை ஆட்கொண்ட தலைவனே, திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, எனது துன்பத்தைச் சிறிதும் பொறாமல் அதை நீக்குதலுக்கு தகுதியானவன் நீயே அன்றோ! ஆதலினால் எமனுக்கு ஏவலராய் உள்ள தூதர்கள் வந்து எனக்கு துன்புறும் செயல்களைச் செய்யினும், யான் உன்னை அன்றி வேறொருவரைத் துணையாக அறியமாட்டேன்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
தத்புருட மந்திரத்தால் செய்யும் தொழில் என்ன? திரோபவம் எனும் மறைத்தல்
தீ ஏந்திய கையை கொண்டு, திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளி உள்ளவனே, நிலம், நீர், தீ, காற்று, நீண்டவானம் எனும் ஆகாயம் என்னும் ஐந்துமாகி உள்ளவனே, தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் மற்றும் மாயோன் ஆகிய திருமால் இருவரும் போற்றி நின்ற பொழுதில் நெருப்பாகி தோன்றியவனே, கற்பகத் தரு போன்றவனே, அடியேனையும், `அஞ்சதே` என்று சொல்லி அருள் புரிவாயாக.
விளக்கஉரை
இத்தலத்தில் இறைவர் ‘கற்பகநாதர்’ ஆதலின் ‘கற்பகமே` எனும் சொற்றொடர். ஆறாம் திருமுறையில் ‘கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே’ என்றும் பாங்கோடு வைத்து சிந்திக்கத் தக்கது.
அஞ்சலென்னே என்பதை `அஞ்சாதி` என்று சொல்லி அருள் புரிவாயாக என்று சில இடங்களில் விளக்கப்பட்டுளது. ‘அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன …அஞ்சாதி யாதி அகம்புக லாமே’ எனும் திருமந்திரப் பாடலின் படி அஞ்செழுத்து சிவன் இருப்பிடம் இத்தலம் ஆகவே அஞ்செழுத்தாக சிவன் இத்தலத்தில் உறைகின்றான் என்றும் பொருள் தோன்றும். கற்றறிந்தோர் பொருள் கொண்டு உய்க.
இறைவன்சுயம்புமூர்த்தி. லிங்கத் திருமேனியராக சிறிய ஆவுடையாருடன் கிழக்கு நோக்கிபடி, அம்பாள் சிவனாரின் வலப்புறம் தனிச் சன்னதியில் நின்ற கோலம் – கிழக்கு நோக்கி திருக்காட்சி
அகத்தியர் பூஜித்த ஆதிஜோதிர்லிங்கம் – இத்திருகோயிலின் எதிரே உள்ளமலையின் கீழ்பகுதியில் (மலை வேறு பெயர்கள் – ஜோதிகிரி, ரத்னகிரி, புஷ்பகிரி, ஔஷதகிரி) (கங்கை, உபமன்யுமுனி, வியாக்ரபாதர், அக்னிவழிபட்டது.-2கிமீதூரம்).
கைகளில் தாமரையும் , நீலோத்பலமும் ஏந்தியுள்ள வடிவில் அம்பாள்
திரைக்குப்பின் சுவாமியும் அம்மனும் இருப்பதால் நந்தி நேர் எதிர்திசையில், நேரான தலையுடன் கூடிய அமைப்பு
திருமால், பிரம்மசாரியாக வந்து (மாணி – பிரம்மசாரி) மகாபலியிடம் மூன்றடி மண்கேட்டு அவனையழித்த பழிதீர வழிபட்ட தலம்
சிவனார் கருவறை முன்பு எப்போதும் திரை (காரணம் 1 ) – தேவர்களுக்கு ஞானத்தைப் புகட்டவும், அவர்களது அஞ்ஞானத்தை நீக்கவும் சதாசர்வகாலமும் பார்வதியுடன் இணைந்திருப்பதாலும், கர்ப்பகிரகமே இங்கு பள்ளியறையாக இருப்பதாலும் தனிபள்ளியறை இல்லாமல் – அவர்களுக்கு காவல்புரிவதற்காக 11 ருத்ரர்களில் ஒருவரான ”பீமருத்ரர்” திரைச்சீலை வடிவில்
சிவனார் கருவறை முன்பு எப்போதும் திரை (காரணம் 2 ) – மகாவிஷ்ணு மாணி எனப்படும் பிரம்மச்சாரியாக வழிபடுவதற்கு காவலாக பீமருத்ரர் திரையாகஇருப்பது
வழிபாட்டில் முதல்மரியாதை பீமருத்ரருக்கு.
வாமனாவதார வரலாறு சிற்பங்களுடன் கூடிய மூலவர் கருவறைவாயில்
பஞ்சாட்சரம்பொறிக்கப்பட்டுள்ள நடராஜர் திருமேனி
வடநாட்டு ருத்ராட்ச வணிகனாகிய அத்ரியிடம் திருடர்கள் கொள்ளையடிக்கமுற்பட, இறைவன், அத்ரியை திருடர்களிடமிருந்து காத்து உதவிபுரிந்தத் தலம். எனவே இத்தலம் ‘உதவி ‘, இறைவன் ‘உதவிநாயகர்’, இறைவி ‘உதவிநாயகி ‘
கோஷ்டதுர்க்கைமகிஷன்இல்லாமல்கதையுடன்திருக்காட்சி
நாகத்தை கையில் ஏந்திய தோற்றத்துடன் தட்சிணாமூர்த்தி
சூரியனால் உண்டாக்கப்பட்டு அவரே வழிபாடு செய்த கோயில்
சோழர்காலக் கட்டமைப்பிலான கோயில்
தலம்
திருமாணிக்குழி
பிற பெயர்கள்
வாமனபுரி , இந்திரலோகம் , பீமசங்கர ஷேத்திரம்
இறைவன்
வாமனபுரீஸ்வரர், உதவிநாயகர், உதவி மாணிகுழி மகாதேவர், மாணிக்கவரதர்,
இறைவி
அம்புஜாட்சி, உதவிநாயகி, மாணிக்கவல்லி
தல விருட்சம்
கொன்றை
தீர்த்தம்
ஸ்வேத தீர்த்தம் (சரஸ்வதியின் அம்சமாக) , கெடில நதி (லட்சுமிதேவியின் அம்சமாக), தென்பெண்ணை (பாகிரதி அம்சமாக )
காலை 7.30 மணி முதல் 11 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரைஅருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோவில்
திருமாணிகுழி அஞ்சல், வழி திருவகீந்திரபுரம்
கடலூர் வட்டம், கடலூர் மாவட்டம். PIN – 60740104142-274485, 04142-224328, 99420-94516, 93626-38728, நடராஜன் : 8940730140
வழிபட்டவர்கள்
திரிசங்கு மகாராஜா , அரிச்சந்திரன்,
பாடியவர்கள்
அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
திருத்தலம்
1. கடலூர் – பண்ருட்டி சாலையில் திருவகீந்திரபுரம் – > சுந்தரர்பாடியை -> சாத்தாங்குப்பம் -> கெடிலநதிப்பாலத்தைக் கடந்து சென்று -> திருத்தலம்
2. கடலூர் – குமணங்குளம் சாலை வழியாக
3. கடலூர் – நடுவீரப்பட்டி சாலை வழியாக
கடலூரில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவு
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 207 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 17 வது தலம்
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 3
பதிக எண் 77
திருமுறை எண் 6
திருமாணிகுழி எனும் திருத்தலமானது, சந்தன மரங்கள், கரிய அகில் கட்டைகள் இவற்றைச் சுமந்து மலையிலிருந்து வந்து விழுந்து, குளங்களில் பூத்துள்ள சிறந்த மலர்களையும் தாங்கிக் கொண்டு வரும் கெடில நதியின் மோதும் நீரானது பாயும் வயல்களில் நறுமணம் கமழ்வதுடன் கூடியதும், மலரும் நிலையிலுள்ள (அஃதாவது மொட்டான) மலர்களைக் கொண்டு சிவவழிபாடு செய்த பிரம்மச்சாரியான மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த காலனின் உயிர் நீங்குமாறு காலால் உதைத்த நீல கண்டனான சிவபெருமான் வீற்றிருந்து அருளும் தலமும் ஆகும்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 3
பதிக எண் 77
திருமுறை எண் 9
திருமாணிகுழி எனும் திருத்தலமானது, பிரமனும், திருமாலும் இறைவனின் அடிமுடி தேடியும் உணராவகை நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்ற சிவபெருமான் தம் சடைமுடியில் வெண்தாமரை இதழ் போன்ற பிறைச்சந்திரனையும், ஊமத்தை, கொன்றை ஆகியவற்றையும் அணிந்து விளங்குவதும், மகரந்தப்பொடிகள் நிறைந்த மல்லிகை, குருந்து, மாதவி, செருந்தி, குரவம், புன்னை என்று மணம் கமழும் மலர்கள் நிறைந்த தலமும் ஆகும்.
காலை 7 மணி முதல் 10 மணி வரை
மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரைஅருள்மிகு பஞ்சநாதீஸ்வரர் திருக்கோவில்
திருவாண்டார் கோவில் அஞ்சல்
வழி கண்டமங்கலம், புதுச்சேரி – 605102
வழிபட்டவர்கள்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர், ,அருணகிரிநாதர், வள்ளலார்
நிர்வாகம்
தொல் பொருள் ஆய்வுத் துறை
இருப்பிடம்
விழுப்புரம் – பாண்டிச்சேரி ரயில் பாதையில் உள்ள சின்னபாபு சமுத்திரம் ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மி. தொலைவு
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 206 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 16 வது தலம்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 87
திருமுறை எண் 1
சுடும் தன்மை மிக அதிகமாக இருக்கும் தீபமாலையை அணிபவரும், ஒளி பொருந்திய சூலத்தினை உடையவரும், கொடிய மழு ஆயுதம் ஒன்றைக் கையில் உடையவரும், காளை மேல் ஊர்ந்து வருபவரும், மிக்க பசி காமம் கவலை பிணி ஆகியன இல்லாதவரும், நீர் வளம் மிக்க வடுகூர் எனும் தலத்தில் உறையும் இறைவர் ஆவார்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 87
திருமுறை எண் 8
அதிர்வுகளைத் தரும் பறையும், வேய் குழல் போலப் பல வண்டுகள் ஒலிக்கும் சோலைகளை உடைய வடுகூரில் ஆடும் அடிகளானவர், இளம்பிறை மற்றும் பெருகும் கங்கை நீர் ஆகியன பிரியாத திருமுடியை உடையவர். வேதங்களில் உள்ள சந்தங்கள் பலவற்றையும் பாடிக்கொண்டு இடுகாட்டில் உறைபவர்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
சுந்தரர் இத்தலத்திற்கு வரும்போது தென்பெண்ணையாறு குறுக்கிடவே, கரையில் இருந்தே சிவனை வேண்டி பதிகம் பாடிய போது வயதான தம்பதியர் உருவில் வந்த சிவபெருமானும், பார்வதியும் சுந்தரரை படகில் ஏற்றிக்கொண்டு மறு கரைக்கு அழைத்து வந்து கரையில் இறங்கிய பிறகு இறைவன் சுந்தரர் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து கொண்டப் பின், “நீங்கள் தேடுபவர் மேலே இருக்கிறார்” என்று அசரீரி வாக்குக்கு இணங்க, சுந்தரருக்கு சிவன், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தந்து தவநெறி உபதேசம் செய்த தலம்
சந்தானக் குரவர்களில் ஒருவரான அருணந்திசிவாச்சாரியார் முக்தித் தலம்). (சமாதிக்கோயில் கோயிலுக்கு நேரெதிரில்). (புரட்டாசி மாத பூர நட்சத்திரம் – அருணந்திசிவாச்சாரியார் குருபூஜை)
சுந்தரரை சிவனார் கிழவனார் வடிவில் தோன்றி ஆட்கொண்ட இடம் கிழப்பாக்கம். இத்தலத்திற்கு அருகாமையில்.
காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு சிஷ்டகுருநாதர் திருக்கோவில்
திருத்துறையூர் அஞ்சல், பண்ருட்டி வட்டம்
கடலூர் மாவட்டம். 607205
04142-248498, 94448-07393
ஈசன் நஞ்சுண்ட காலத்தில் அது அவரை துன்புறுத்தாமலிருக்க உமையம்மை இத்தலத்தில் பசு வெண்ணெயால் கோட்டை கட்டி அதில் பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவிலிருந்து தவம் செய்த காரணத்தால் இத்தலம் வெண்ணெய்நல்லூர்
மறைகளும் , தாருகாவனத்து முனிவர்களும் தவஞ்செய்து அருள்பெற்ற தலம்
சுந்தரர், இறைவனை ‘பித்தன்’ என்று வசைவு பொழிய, காரணங்களை விளக்கியப்பின் இறைவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு “பித்தனென்றே பாடுவாயென” மொழிய, சுந்தரமூர்த்தி சுவாமிகள் ‘பித்தாபிறைசூடீ’ எனப் முதல் தேவாரப்பதிகம் பாடி ஆட்கொள்ளப்பட்டு அருள்வாழ்வு பெற்ற தலம்
கோவில் உள்ளே – சுந்தரர் வழக்கு நடந்த ‘வழக்கு தீர்த்த மண்டபம்’
சிவனார் முதியவர் வடிவில் வந்து சுந்தரரை தடுத்தாட்கொள்ள வந்த போது அணிந்திருந்த பாதுகைகள் இன்றும் இக்கோயிலில் பாதுகாப்பாக இருக்கின்றன.
இத்தலத்திற்கு மிக அருகில் சுந்தரரின் திருமணம் நின்ற இடமான மணம் தவிர்ந்த புத்தூர் (மணப்பந்தூர்)
சடையப்ப வள்ளல் வாழ்ந்த தலம். அவர், கம்பரைக் கொண்டு ராமாயணம் பாடுவித்தத் தலம்.
அர்ஜுனனுக்கு குழந்தைவரம் அளித்த விஜயலிங்க சிவனாருக்கு சந்நிதி
நவக்கிரகங்கள் வழிபட்ட ஜோதிலிங்கம் தனிச்சன்னதி
இந்திரன் வழிபட்ட சுந்தரலிங்கர் சந்நிதி
மகாவிஷ்ணு வழிபட்ட சங்கரலிங்கர் சந்நிதி
அர்ஜுனன் தனது பாவங்களைப் போக்கிக்கொண்ட தலம்
சைவசமய சந்தனாசாரியராகிய மெய்கண்டதேவர் வாழ்ந்து உபதேசம் பெற்ற தலம்(அருள் செய்த மூர்த்தி பொல்லாப் பிள்ளையார்)
தண்டுத்தீர்த்தம்,(சிவனாற்கேணி), பெண்ணை நதி தீர்த்தம், நீலி தீர்த்தம், சிவகங்கா தீர்த்தம், காம தீர்த்தம், அருட்டுறைத் தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், வைகுண்ட தீர்த்தம், வேத தீர்த்தம்
விழாக்கள்
பங்குனி உத்திரம் , ஆடி சுவாதி, ஆருத்ரா தரிசனம் , ஆவணி மூல புட்டு உற்சவம் , கந்தசஷ்டி
மாவட்டம்
விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரைஅருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோவில்
திருவெண்ணைநல்லூர் அஞ்சல்
திருக்கோயிலூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
PIN – 607203
04153-234548, 99942-70882, 93456-60711, 94424-22197 ( மெய்கண்டார் கோயில்)
வழிபட்டவர்கள்
நவக்கிரகங்கள், இந்திரன், மகாவிஷ்ணு,அர்ஜுனன்
பாடியவர்கள்
சுந்தரர், அருணகிரிநாதர்
நிர்வாகம்
இருப்பிடம்
திருக்கோவிலூரில் இருந்து தென்கிழக்கே சுமார் 20 கி.மி. தொலைவு, விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ தொலைவு
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 200 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 14 வது தலம்.
பாடியவர் சுந்தரர்
திருமுறை ஏழாம்
பதிக எண் 1
திருமுறை எண் 1
பித்தனே, சந்திர பிறையைக் தலையில் சூடிய பெருமை உடையவனே, அருளாலனே, பெண்ணையாற்றின் தென் கரையில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் சார்ந்ததான `அருட்டுறை` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்து அருளினாய்; அதனால், எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகிய என்னை, இப்பொழுது, `உனக்கு அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேச வைத்தது பொருந்துமோ!
பாடியவர் சுந்தரர்
திருமுறை ஏழாம்
பதிக எண் 1
திருமுறை எண் 4
இடபத்தை ஊர்தியாக உடையவனே, ஒளி நிறைந்த பெண்ணையாற்றின் தென் கரையில் உள்ள உள்ள திருவெண்ணெய்நல்லூர் சார்ந்ததான `அருட்டுறை` என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! அவ்வாறான பொருந்தாமையை அகற்றி என்னை நீ தெளிவித்து அருளியதால், இனி நான் இறக்கவும், மீளப் பிறக்கவும், இவ்வுலகில் வாழ்ந்து மூப்படைந்து வருந்தவும் ஆன துன்பங்களை அறுத்தேன். நெறி கெட்டவனாகி பொய்ம்மைகள் பலவற்றையே பேசுவேனாகிய என்னை நீ வெறுக்காமல் ஏற்றறு அருள்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
மூன்று நிலைகளை உடைய கோபுரம். கொடிமரம் அற்று 2 பலிபீடம் மற்றும் நந்தி
ஈசனுக்கும் அன்னைக்கும் நடுவில் கணபதி குழந்தை வடிவில். மேல் இரு கைகளில் லட்டும் பலாச்சுளையும். கீழ் இரு கைகளில் அபய முத்திரையும் கரும்பும்
முருகர் ‘கலியுகராமப் பிள்ளையார்’ என்று போற்றப்படுகிறார்.
அகத்தியர் வழிபட்ட லிங்கம் அகத்தீஸ்வரர். அகத்தியருக்கு தனி சிலையும் இங்குள்ளது.
கயிலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு சிவ ரகசியத்தை உபதேசிக்கும் போது அதை சுகப்பிரம்ம முனிவர் ஒட்டு கேட்டதால் அவரை பூமியில் பிறக்கும் படி சபித்தார். சாப விமோசனம் நீங்க அந்த சாப விமோசனம் நீங்க வேதவியாசருக்கு மகனாகப்பிறந்து பெண்ணை நதியின் தென்பகுதியில் அமைந்துள்ள இத்தலத்தில் இறைவனை பூஜித்து பூலோக வாழ்வு நீங்கப் பெற்றார்.
சுகப்பிரம்ம மகரிஷி வழிபட்டதால் இத்தலத்தில் எப்போதும் கிளிகள் பறந்து கொண்டே இருக்கின்றன.
சுந்தரர் பாடியுள்ள 39 வைப்புத் தலங்களுக்கு நிகரானது என்று அவரது பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தானச்சாரியர்களில் ஒருவரான மறைஞானசம்பந்தர் அவதாரத் தலம். இவருக்கு அருள் செய்த விநாயகர் இருப்பிடம் வயல்வெளியில் தனிக்கோயிலில்
மாசி மாதம் 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு மருதீஸ்வரர் திருக்கோவில்,
மருதீஸ்வரர் தேவஸ்தானம்
டி.எடையார் அஞ்சல், திருக்கோவிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம், PIN – 607203
94424-23919, 98847-77078, 04146-216045, 04146-206515
வழிபட்டவர்கள்
சுகமுனிவர் , பிரம்மன் , அகத்தியர் , சுந்தரர் , மறைஞான சம்பந்தர்
பாடியவர்கள்
சுந்தரர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
திருக்கோயிலூரில் இருந்து சுமார் 13 கிமீ தொலைவில் அமைந்துள்ள சித்தலிங்க மடத்தை அடுத்து அமைந்துள்ளது இத்தலம் .
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 203 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 13 வது தலம்.
ஞானாம்பிகை உடனாகிய மருதீஸ்வரர்
புகைப்படங்கள் : தினமலர்
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 31
திருமுறை எண் 8
அரை + அணி – பாறை + அழகு – பாறையில் அழகாக அமர்ந்திருப்பவர்
தனிச்சன்னிதியில், திருஞானசம்பந்தர் தாளமேந்தி நின்ற கோலத்தில்
சமணர்கள் இக்கோயில் கதவை அடைத்து திருஞானசம்பந்தரை நுழைய விடாமல் தடுத்த போது, அவர் பதிகம் பாடி கதவை திறந்த தலம்.
சம்பந்தர் சிவனாரை தரிசிக்க வசதியாக பிரதோஷ நந்தி வலதுபுறமாகவும், அதிகார நந்தி இடதுபுறமாகவும் சற்று சாய்ந்த அமைப்பு
சம்பந்தர் இங்கிருந்தே திருவண்ணாமலையை தரிசித்த தலம். (அடையாளமாக கொடிமரத்தின் அருகே 3 அடி உயர பீடத்தில் சம்பந்தரின் பாதம் )
ரமண மகரிஷியை திருவண்ணாமலைக்கு வருமாறு அம்பாள் ஆணையிட்ட தலம்
திருக்கோயிலூர் ஸ்ரீஞானானந்த சுவாமி இங்குள்ள கோபுரத்தில் அமர்ந்து தவஞ்செய்து அருள்பெற்ற தலம்
சனீஸ்வரர், காகத்தின் மீது காலை ஊன்றிய கோலம் , நின்ற கோலம் என இரு வடிவங்களில் காட்சி
பீமன் குளம் – கோயிலுக்கு வெளியில் பாறைகளுக்கு இடையில்
மூர்த்தங்கள் அற்று ராஜகோபுரத்தின் அடிவாயிலில் குடைவரைக்கோயில்களாக ஐந்து அறைகள்
மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி சன்னதி – ஸ்ரீதேவி கையில் முத்திரை பதித்த தண்டம் , இடப்புறத்தில் பெண், வலப்புறத்தில் விலங்கு முகம் கொண்ட ஆண்.
தலம்
திருஅறையணிநல்லூர்
பிற பெயர்கள்
அறையணி நல்லூர், அரகண்ட நல்லூர்
இறைவன்
அதுல்யநாதேஸ்வரர், ஒப்பிலாமணீஸ்வரர் , அறையணிநாதர்
இறைவி
சௌந்தர்ய கனகாம்பிகை , அருள் நாயகி , அழகிய பொன்னம்மை
தல விருட்சம்
வில்வமரம்
தீர்த்தம்
தென்பெண்ணையாறு
விழாக்கள்
வைகாசியில் 1௦ நாட்கள் பிரம்மோற்சவம், மகாசிவராத்திரி , திருக்கார்த்திகை தீபம்
மாவட்டம்
விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரைஅருள்மிகு ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரர் திருக்கோவில்
ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரர் கோவில் தேவஸ்தானம்
அரகண்டநல்லூர் அஞ்சல்,
திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம், PIN – 605752
04153-224745, 93456-60711, 99651-44849
தீப்போல விளங்கும் செம்மேனி உடைவயனே! தேவர்களால் தொழப்பெறும் தேவனாக நீயே ஆனவன்! கொன்றை மலர் அணிந்தவனே! அனலைக் கையில் ஏந்தியவனே! அறையணிநல்லூரை அடைந்து வழிபடுபவரின் பழவினைகளைத் தீர்ப்பவனே! கொடிய காலனைக் அழித்தவனே! ஒலிக்கும் கழலணிந்தவனே! பரமனே உன் திருவடிகளைப் பணிகின்றேன்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
அட்ட வீரட்டத் தலங்களில் இரண்டாவது தலம். சிவனார் அந்தகாசூரனை சம்ஹாரம் செய்த வீரச்செயல் புரிந்த தலம்.
அந்தாகசூரன் எனும் அசுரனை அழிக்க ஈசனால் 64 பைரவர்கள் மற்றும் 64 பைரவிகள் தோற்றுவிக்கப்பட்ட தலம்
முருகர் தெய்வீகன் என்ற இளவரசனாக பச்சைக்குதிரையோடு குகமுனிவரின் யாகத்தீயில் தோன்றி காரண்டன் வல்லூரன் என்ற இரு அசுரர்களை சம்ஹரித்து மக்களின் துயர்போக்கி பாரியின் மகள்களான அங்கவை , சங்கவையை மணந்த தலம்
முருகர் அசுரனைக் கொன்ற பாவம் தீர சிவனாரை வழிபட்ட தலம்
சுக்கிரன் சாப விமோசனம் பெற்ற தலம்
வாஸ்து சாந்தி என்ற ஐதீகம் தோன்றிய தலம்
அம்பாள் திரிபுர பைரவி அவதாரத்தலம்
சப்தமாதர்கள் அவதாரத்தலம்
ஔவையார் விநாயகர் அகவல் பாடியருளிய தலம்
ஔவையாரை சுந்தரருக்கு முன்பு கயிலாயத்தில் சேர்ப்பித்த கணபதியான பெரியானைக்கணபதிக்கு உள்பிரகாரத்தில் சந்நிதி
பைரவர் வாகனம் இல்லாமல் திருக்காட்சி
கோயிலுக்கு அருகின் ஸ்ரீமத் ஞானியார் சுவாமி மடலாயம்
அருகினில் குகை நமச்சிவாயர் சமாதி, சுவாமி ஞானானந்தகிரி சுவாமிகளின் தபோவனம், ஸ்ரீ ரகோத்தமசுவாமி பிருந்தாவனம்
மெய்ப்பொருள் நாயனார் அரசாண்ட தலம். (ஆலய நுழைவுவாயில் உட்புற மண்டபத்தூணில் மெய்ப்பொருள்நாயனார் சிற்பம்)
கபிலர் பாரிவள்ளலின் மகள்களை திருமுடிக்காரிக்குத் திருமணம் செய்வித்து , பின் வடக்கிருந்து உயிர்நீத்த தலம். ஆற்றின் நடுவில் கபிலர் குகை.
ராஜராஜ சோழன் பிறந்த தலம்.
குந்தவை நாச்சியார் திருப்பணிகள் செய்துள்ள தலம்.
பாடல் பெற்ற தலமான அறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) இங்கிருந்து சுமார் 3 கி.மி. தொலைவு.
தலம்
திருக்கோவிலூர்
பிற பெயர்கள்
அந்தகபுரம், மலையமான் நாடு , கீழையூர், கோவலூர் வீரட்டம், திருக்கோவலூர்
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரைஅருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோவில்
கீழையூர், திருக்கோவிலூர் அஞ்சல்
திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம், PIN – 60575704153-253532 , +91-93448-79787 , +91-94862-80030 , +91-98426-23020 , +91-98423-10031 , +91-93456-60711
கயிலை மலையை பெயர்த்து எடுத்த இராவணனின் பெரிய தோள்களின் அழகு வாடுமாறும் அவனை வருந்துமாறும் செய்து பின் அவனுக்கு அருள் பல செய்தும், முப்புரங்களை வில்லால் எய்து அழித்தும், தனது பெருவீரத்தைப் புலப்படுத்திய பற்கள் பொருந்திய பிளந்தவாயை உடைய வெள்ளிய தலைமாலையைச் சூடிய இறைவன் இத்திருவதிகை வீரட்டானத்தே ஆடுவான்.
கருத்து
கல்லார் வரை – கயிலையை கவின் – அழகு ஒல்லை – விரைவாக காலந் தாழ்க்க அடர்ப்பின் அவனிறந்தேபடுவான் என்னுங் கருணையால். பல் ஆர் பகுவாய – பற்கள் பொருந்திய பிளவுபட்ட வாயையுடைய.
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 17
திருமுறை எண் 10
தனக்கு வலிமை உண்டு என்று செருக்கி கயிலை மலையைப் பெயர்த்தவனாகிய இராவணனது வலிமையை நெரித்து அவன் கர்வத்தை அழித்தவரும், மூல ஆவணத்தை மறைவாக வைத்திருந்து அதனை நடுவுநிலையாளர் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் மிகவும் அடக்கமாக இருந்து அதை பிறரிடம் காட்டி என்னை அடிமையும் கொண்டவரும், தடுக்க இயலாத வலிமையுடைய யானை ஒன்றினை உரித்து உமையையும் நடுங்கச் செய்தவருமாகிய இறைவற்கு இடமாயிருப்பது நமது திருநாவலூரேயாகும்.
கருத்து
நடுக்கங் கண்டார் – அஞ்சுவித்தார்
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
இறைவழிபாட்டை மறந்திருந்த மக்களை, ஈசன் மழையை பெய்வித்து, ஏரி குளம் ஆகியவற்றை உடைத்து நெல்லைப் பெற்றுக் கொண்டு மழையை நிறுத்தி அவர்களுக்கு பரிசாக தங்கம் நிரம்பிய குடங்களை பரிசாக அளித்தத் தலம்.
சிவன், நெல்லை அணையாக கட்டியத் தலம் ‘நெல் அணை’
திருஞான சம்பந்தர் திருத்தல யாத்திரை வரும் போது இருட்டியதால், ஈசன் அம்பாளிடம் சொல்லி அவருக்கு வழிகாட்டி அழைத்துவரப்பட்டத் தலம்.
அம்பாள் திருஞானசம்பந்தர் எதிரில் நின்று அழைத்ததால் ‘எதலவாடி’
ஆண்டுதோறும் மகாசிவராத்திரியன்று அதிகாலையில் சிவனாருக்கு சூரியவழிபாடு நடைபெறும் தலம்.
ஞானசம்பந்தர் கையில் தாளமின்றி, கை கூப்பிய நிலையில் உள்ள வடிவம், சுந்தரர், நடன சுந்தரரான வடிவம், அப்பர் பெருமானும் கை கூப்பிய நிலையில் உள்ள வடிவம்
அதிகார நந்தி இரண்டு காலகளையும் இணைத்து கை கூப்பி வணங்குவது போன்ற அமைப்பு.
தலம்
திருநெல்வெண்ணை
பிற பெயர்கள்
நெல்வெண்ணெய், ‘நெல் அணை, எதலவாடி
இறைவன்
சொர்ணகடேஸ்வரர், வெண்ணெயப்பர் , நெல்வெண்ணெய்நாதர்
இறைவி
பிருஹன்நாயகி, நீலமலர்க்கண்ணி
தல விருட்சம்
புன்னைமரம்
தீர்த்தம்
பெண்ணையாறு
விழாக்கள்
மகா சிவராத்திரி , சனிப்பெயர்ச்சி,கார்த்திகை தீபம், மாசிமகம், மார்கழி திருவாதிரை
மாவட்டம்
விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு சொர்ணகடேஸ்வரர் – நெல்வெணெயப்பர் திருக்கோயில்
நெய்வெயைகிராமம் – கூவாடு அஞ்சல்
(வழி) எறையூர் – உளுந்தூர்ப்பேட்டை வட்டம்
விழுப்புரம் மாவட்டம் – 607 20104149-209097, 04149-291786, 94862-82952
கிருஷ்ணமூர்த்தி குருக்கள் 9047785914
வழிபட்டவர்கள்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
உளுந்தூர்பேட்டையில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவு
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 200 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 10 வது தலம்.
நீலமலர்க்கண்ணி உடனாகிய சொர்ணகடேஸ்வரர்
புகைப்படங்கள் : தினமலர்
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 3
பதிக எண் 96
திருமுறை எண் 6
நெற்றிக்கண்ணை உடையவரும், திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவரும், அடியவர்கட்கருளும் பண்புடைய பிறை போன்ற நெற்றியையுடைய உமாதேவியை உடைய வருமாகிய சிவபெருமானே! அவ்வாறு பிறைபோன்ற நெற்றியுடைய உமா தேவியை உடைய உம்மை வழிபடுதலே ஞான நூல்களைக் கற்றறிந்த அறிஞர்களின் கடமையாகும்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 3
பதிக எண் 96
திருமுறை எண் 8
நெருங்கிய சோலைகள் சூழ்ந்து அழகுடன் விளங்கும் திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்ருது அருள்பவரும், அரக்கனான இராவணனை வலிகுன்றச் செய்தவருமான சிவபெருமானே! அவ்வாறு அரக்கனை வலிகுன்றச் செய்தவரான உம்மை அன்புடன் வணங்குபவர்கள் துன்பமே இல்லாதவர்கள் ஆவர்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
ஆதியில் பிரம்மதேவர் இந்த மண்ணுலகைப் படைக்க விரும்பியபோது சிவபெருமானை துதிக்க அவர் தானே ஒரு மலையாகத் தோன்றி அருள் செய்தார். எனவே பழமலை.
சுந்தரர் ஈசனிடம் பொன்பெற்று இங்குள்ள மணிமுத்தாற்றில் இட்டு அதை திருவாரூர்க் கமலாலய தீர்த்தத்தில் எடுத்துக்கொண்டத் தலம்.
4 புறமும் 7 நிலைகளையுடைய பெரிய கோபுரங்கள் சுமார் 26 அடி உயரமுள்ள மதிற்சுவர்கள், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோவில்.
பாதாள விநாயகர் – முதல் வெளிப் பிரகாரத்தில் சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ள கிழக்கு நோக்கிய விநாயகர் சந்நிதி.
மூன்றாம் பிரகாரத்தில் காலபைரவர் மூர்த்தம் காசியில் இருப்பது பொன்ற வடிவமைப்பு
சைவ சமயத்தில் உள்ள 28 ஆகமங்களை, 28 லிங்கங்களாக முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளத் தலம். 28 ஆகமங்களுக்குரிய பெயர்களான, காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவாயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர், ரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் எனவே இக்கோயில் ஆகமக்கோயில்.
ஆதி காலத்தில் இக்கோவிலுக்கு திருப்பணி செய்த விபசித்து முனிவர் திருப்பணி வேலை செய்தவர்களுக்கு இந்த வன்னிமரத்தின் இலைகளைப் பறித்து கூலியாக கொடுக்க அவை அத்தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ப பொற்காசுகளாக மாறிய தலம்.
இத் தலத்தில் உயிர்விடும் எல்ல உயிர்களுக்கும் இறைவி தம்முடைய ஆடையினால் வீசி இளைப்பாற்ற இறைவன் பஞ்சாட்சர உபதேசத்தைப் புரிந்தருளி அந்த உயிர்களை தம்முடைய உருவமாக ஆக்கும் தலம்
16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குருநமசிவாயர் என்னும் மகான் கிழத்தி என்று நாயகியைப்பாட, ‘கிழத்தி எவ்வாறு சோறும் நீரும் கொண்டு வர இயலும்’ எனக் கேட்க அடுத்த பாடலில் இளமை நாயகியாய் பாடியதால் இளமை நாயகியாய் வந்து உணவளித்த தலம்.
சக்கரதீர்த்தம் – ஆழத்துப்பிள்ளையார் சந்நிதி அருகில் திருமால் சக்கரம் கொண்டு உருவாக்கியது
அனைத்தும் ஐந்தாக கொண்டு விளங்கும் தலம்.
தலத்தின் ஐந்து பெயர்கள் – திருமுதுகுன்றம், விருத்தகாசி, விருத்தாசலம், நெற்குப்பை, விருத்தகிரி
சிவனாரின் பஞ்ச பெயர்கள் – விருத்தகிரீஸ்வரர், விருத்தகிரிநாதர், முதுகுன்றீஸ்வரர், பழமலைநாதர், விருத்தாசலேஸ்வரர்
ஐந்து கோபுரங்கள் – கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கண்டராதித்தன் கோபுரம்
விருத்தாம்பிகை, பெரிய நாயகி , பாலாம்பிகை இளைய நாயகி
தல விருட்சம்
வன்னிமரம்
தீர்த்தம்
மணிமுத்தாறு , நித்யானந்தகூபம் மற்றும் அக்னி , குபேர , சக்கர தீர்த்தங்கள்
விழாக்கள்
ஆடிப்பூர திருவிழா, வைகாசி வசந்த உற்சவம், மார்கழி திருவாதிரை, மாசிமகம் 10 நாள் பிரம்மோற்ஸவம்
மாவட்டம்
கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 9..00 மணி வரைஅருள்மிகு பழமலைநாதர் திருக்கோவில்
விருத்தாசலம்
விருத்தாசலம் அஞ்சல்
கடலூர் மாவட்டம் , PIN – 606001
உளுந்தூர்பேட்டையில் இருந்து சுமார் 23 கிமீ, கடலூரில் இருந்து சுமார் 60 கிமீ, பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 83 கிமீ, சிதம்பரத்தில் இருந்து சுமார் 45 கிமீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 199 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 9 வது தலம்.
விருத்தகிரீஸ்வரர்
விருத்தாம்பிகை
புகைப்படம் : தினமலர்
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 12
திருமுறை எண் 8
பொன்னைப்போலும் திருமேனியை உடையவரே, புலியினது தோலை இடுப்பில் அணிந்தவரே, நன்கு செய்யப்பட்ட மூன்று மதில்களையும் முன்பு எரித்தவரே, திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவரே, அடிகளே, மின்னல் போலும் நுண்ணிய இடையை யுடையவளும், `பரவை` என்னும் பெயரினளுமாகிய இவள் முன்னே, அடியேனது துன்பங் கெடுதற்கு நீவிர் என் செய்தவாறு!
கருத்து
இட்டளம் – துன்பம் . ` இட்டளங்கெட என்செய்தவாறு – , ` துன்பத்தை நீக்குகின்றீர் என்று நினைத்து முயல்கின்ற எனக்கு , நீர் துன்பத்தை ஆக்கினீர் ` என்றபடி
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
மூலவர் சற்று உயரமான பாணத்துடன் சிறிய கருவறையில் கிழக்கு நோக்கி திருக்காட்சி
பார்வதி சிவனாரை வழிபட்டு அவரை மணந்துகொண்ட தலம்.
உமையன்னை உடன் வந்த சூலினி என்ற சக்தி தனது சூலாயுதத்தால் நிலத்தில் ஊன்றி உண்டாக்கப்பட்ட தீர்த்தம். பாதாளகங்கை வெளிப்பட்டது சாம்பூநத தீர்த்தம். முருகப்பெருமான் தனது வேற்படையால் ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார். இதுவே சக்தி பில தீர்த்தமாகும். சாம்பூநத தீர்த்தமும் விநாயகர் அளித்த மலர்களையும் பயன்படுத்தி மகாசிவராத்திரியன்று முதலிரண்டு ஜாமங்களில் அபிஷேக ஆராதனைகள், பில தீர்த்த நீர் கொண்டு அடுத்த இரண்டு காலங்களிலும் உமை பூஜை செய்த தலம்.
சடையனாரும் , இசைஞானியாரும் (சுந்தரரின் தாய்) வாழ்ந்து முக்திபெற்ற தலம்
சுந்தரர் பிறந்த தலம்
இரு மனைவியர் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் சூழ, எதிரில் வெள்ளையானை நிற்க, சுந்தரர் கையில் தாளமேந்தி திருக்காட்சி
கோயிலுக்குப் பக்கத்தில் சுந்தரர் மடாலயத்தில் சுந்தரர் கையில் செண்டுடன் காட்சி
சுந்தரரை ஆட்கொள்ள சிவனார் முதியவர் வேடத்தில் வந்தபோது அணிந்திருந்த பாதுகைகள் – இப்பொழுதும் பாதுகாப்புடன். குருபூசை நாள் : ஆடி – சுவாதி.
சுக்கிரன் வழிபட்ட தலம்
சூரியன் திசைமாறி மூலவரை பார்த்தவாறு அமைப்பு. சுக்கிரனுக்கு எதிரில் அவர் வழிபட்ட சுக்கிரலிங்கம்
தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் ரிஷபத்தின் முன்னால் நின்று வலக்கையை ரிஷபத்தின் மீது ஊன்றி, மறுகையில் சுவடியேந்தி நிற்கும் கோலத்தில் காட்சி
திருமால் ஈசனை வழிபட்டு நரசிம்ம அவதாரம் எடுக்கும் ஆற்றலை பெற்ற தலம்
திருமாலின் யோக அக்னி தாக்கி, ஆதி சேஷன் விஷம் வெளிப்பட கருமை நிறமாக மாறிய கருடன். பின் அவர் சாம்பூநத தீர்த்தத்தில் நீராடி அவரது மேனியில் கருமை நீங்கி வெண்ணிறமும் புத்தொளியும் ஏற்பட்ட தலம். இதனால் கருடனுக்கு காலாந்தகன் என்றும் பெயர்
பங்குனிமாதம் 23 – 27 நாட்களில் சூரிய ஈசனின் மேல்வழிபாடு
திரேதாயுகத்தில் வன்னிவனமாக விளங்கிய இப்பகுதியில் ஒரு பசு இங்கு தோன்றியிருந்த லிங்கத்தின் மீது பரிவு கொன்டு ஆறு காலம் பாலாபிஷேகம் செய்து பூசித்தது. புலியால் கொல்லப்பட இருந்த பசுவை காப்பாற்றியதால் ஈசனார் பசுபதி
கருவறை சுவற்றில் சண்டிகேஸ்வரர் வாழ்க்கை வரலாற்றுச் சிற்பங்கள்
ஆவணி உத்திர நட்சத்திர நாளில் சுந்தரர் ஜனனவிழா, ஆடி சுவாதி நட்சத்திரத்தன்று சுந்தரர் குருபூஜை, சித்திரைத்தேர்விழா, தமிழ்புத்தாண்டு பஞ்சமூர்த்திகள் மற்றும் சுந்தரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், ஆடிப்பூரம்,
மாவட்டம்
விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு பக்த ஜனேஸ்வரர் திருக்கோவில்
திருநாவலூர் அஞ்சல்
உளுந்தூர்பேட்டை வட்டம்
விழுப்புரம் மாவட்டம் – 607204
முத்துசாமி சிவம் : 94433 82945
செந்தில் குருக்கள் : 9486150809
தேவர்கட்கு அரசனாகிய இந்திரனைத் தோள் முரித்தவரும், யானையை உரித்தவரும், சிவந்த பொன்போன்றதும் , நெருப்புப்போன்றதும் ஆகிய நிறத்தை உடையவரும் , தூய வெள்ளை நிறத்தையுடைய நீற்றை அணிந்தவரும், என்போலும் அடியவர்கட்குத் தலைவரும், ஓர் ஆவணத்தினால் என்னைத் திருவெண்ணெய் நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்ட நம் அனைவர்க்கும் தலைவரும் ஆகிய இறைவருக்கு இடமாயிருப்பது நமது திருநாவலூரேயாகும்.
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7ம் திருமுறை
பதிக எண் 17
திருமுறை எண் 10
தனக்கு வலிமை உண்டு என்று செருக்கி விரைந்து சென்று கயிலை மலையைப் பெயர்த்தவனாகிய இராவணனது வலிமையை நெரித்து அழித்தவரும், மூல ஆவணத்தை மறைவாக வைத்திருந்து அதனை நடுவுநிலையாளர் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் காட்டி என்னை அடிமையும் கொண்டவரும், தடுக்க வொண்ணாத வலிமையுடைய யானை ஒன்றினை உரித்து உமையையும் நடுங்கச் செய்தவருமாகிய இறைவற்கு இடமாயிருப்பது நமது திருநாவலூரேயாகும்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
வீரம் வெளிப்பட்ட அட்ட வீரட்டானத் தலங்களில் மூன்றாவது தலம். சிவனார் திரிபுர தகனம் செய்தருளிய தலம்
16 பட்டைகளுடன் கூடிய சுயம்பு லிங்கம். இவருக்குப் பின்னால் கருவறைச் சுவற்றில் பார்வதி, சிவன் கல்யாணத் திருக்கோலம் காட்சி
திருஞானசம்பந்தருக்கு சிவனார் திருநடனக்காட்சி காட்டிய தலம்
திருநாவுக்கரசரின் தமக்கையாரான திலகவதியார் சிவத்தொண்டு செய்த தலம்
சூலை நோய் நீங்கப்பெற்று ‘திருநாவுக்கரசர்’ என்று சிவபெருமான் சூட்டிய திருநாமத்துடன் தேவாரப்பாடல் பாட ஆரம்பித்த தலம்
இத்தலத்தை மிதிக்க அஞ்சிய சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில்(தற்போதைய பெயர் – சித்தாண்டிமடம், சித்தாத்த மடம், கோடாலம்பாக்கம் ) தங்கி, திருவடி தீட்சை பெற்ற தலம்.
சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான ‘உண்மை விளக்கம்’ நூலை அருளிய மனவாசகங்கடந்தார் அவதரித்த தலம்
உள் சுற்றின் தென்மேற்கே பல்லவர் காலத்தைச் சார்ந்த பஞ்சமுக லிங்கம். மூன்று திக்குகளை நோக்கி நான்கு முகங்கள் உள்ளன. ஒரு முகம் (அதோ முகம்) மேல் நோக்கியது.
வீரட்டேஸ்வரர் வீரட்டநாதர் , அதிகைநாதர், ஸ்ரீ சம்ஹார மூர்த்தி, திருக்கெடிலவாணர்
இறைவி
திரிபுரசுந்தரி
தல விருட்சம்
சரக்கொன்றை
தீர்த்தம்
கெடிலநதி, சக்கரதீர்த்தம்
விழாக்கள்
வைகாசி விசாகம் – 10 நாள்கள் பிரம்மோற்சவம், சித்திரைச்சதயம் – 10 நாள்கள் அப்பர் திருவிழா, பங்குனி-சித்திரை மாதங்களில் நாள் வசந்தோற்சவம்,ஆடிப்பூர உற்சவம் 10 நாட்கள் ,மாணிக்கவாசகர் உற்சவம் , மார்கழி திருவாதிரை , மகா சிவராத்திரி , கார்த்திகை சோமவார சங்காபிஷேகங்கள் , பங்குனி உத்திரம் , திலகவதியார் குருபூஜை
மாவட்டம்
கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரைஅருள்மிகு அதிகை வீரட்டேஸ்வரர் திருக்கோவில்
திருவதிகை
பண்ருட்டி அஞ்சல்
கடலூர் மாவட்டம்
PIN – 607106
அதிகைப்பெருமானே! நோய்கள் விடுத்து நீங்காத இம்மனித உடலைப் பெற்றேன்,செயற்படாதொழியாத துன்பம் நல்கும் நல்வினை தீவினையாகிய சுற்றத் தொடர்பை நெருக்கமாகக் கொண்டு, அவற்றை அடியோடு நீக்குவதற்குத் தேவையான தூய்மையும் மன உறுதியும் இல்லாதேனாய், அத்தூய்மை துணிவு என்பன வற்றை நல்கும் உன்னுடைய தூய மலர் போன்ற திருவடிகளைக் காணும் வகையில் உன்னை அறியமாட்டாதவனாய் உள்ளேன்.
உலகில் தம் தலைவனை உருவம் அறியாதவர் உளரோ? இல்லை. அப்படியிருக்க நீலகண்டனாகிய அப்பெருமான் தனது திருவடியை என் தலைமேல் வைத்து, சடைமேல் பிறையை உடையவனும், விடை ஏறுபவனும், யானைத் தோலைப் போர்ப்பவனும் கரிந்த காட்டில் ஆடுபவனும் எம் தலைவனும் ஆகிய, கெடில நதியின் வடகரையிலுள்ள திருவீரட்டானத்தில் விரும்பியிருக்கின்ற பெருமானை, அவன் அதனைச் செய்வதையும் யான் அறியாமல் இகழ்வேன் ஆயினேன் போலும். என்னே என் அறியாமை ! இனி அவ்வாறு நேராது போலும்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
அகத்திய மாமுனியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம்(லிங்கம் அகத்தியர் அமைத்த கைத்தடத்துடன்). (அகத்தியர் தாங்கமுடியாத வயிற்று வலியால் அவதிப்பட்டு தனது வேதனையை எம்பெருமானிடம் சொல்லியபடியே கடற்கரை மணலில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய முயற்சித்து, அமைக்க முடியாமல் பின் மூலிகைச் செடிகளைப் பறித்து வந்து சாறு எடுத்து அதை மணலோடு சேர்த்து உதிராத சிவலிங்கத்தை உருவாக்கி அதற்குப் பூஜைகள் செய்து வழிபட்ட ஈசன்)
மூலவர் சதுர ஆவுடையார். சற்று நீட்டுவாக்கில் அமைந்த சுற்றளவு குறைந்த பாணம்
ஈசனும் பார்வதியும் ஒன்றாக இருப்பதால் சிவனுக்கு, மஞ்சளும் குங்குமமும் வைத்து வழிபாடு
திரிபுவன சக்கரவர்த்தியின் மனைவி தியாகவல்லி திருப்பணி செய்த தலம்
ஒரு காலத்தில் மணல் மேடாக இருந்த இப்பகுதி, ‘மதுரை இராமலிங்க சிவயோகி’ யால் மணலில் புதைந்திருந்த விமான கலசமும் பின் கோயிலும் கண்டறியப்பட்ட தலம்.
ஸ்வர மூர்த்தி – தட்சிணாமூர்த்தி. தட்சிணாமூர்த்தி விக்ரகத்தைத் தட்டினால் சப்த ஸ்வரங்களின் ஓசைகள். வழக்கத்திற்கு மாறாக இடது கையில் நாகம், வலது கையில் அக்னியும் ஏந்தியவாறு திருக்காட்சி.
காலை 8.30 மணி முதல் 11.00 மணி வரை,
மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோவில்
திருச்சோபுரம்
தியாகவல்லி அஞ்சல், கடலூர் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN – 608801.
98436-70518 , 94425-85845, 94429-36922
வழிபட்டவர்கள்
அகத்தியர், காகபுஜண்டர்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர், சுந்தரர் *
நிர்வாகம்
இருப்பிடம்
கடலூர் – சிதம்பரம் சாலையில் கடலூரில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஆலப்பாக்கம் அடைந்து, அங்கிருந்து திருச்சோபுரம் செல்லும் கிளைச்சாலையில் இருந்து சுமார் 2 கிமீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 195 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 6 வது தலம்.
*சுந்தரரின் ‘திருவிடையாறு’ தலப்பதிகத்தில் – ஊர்த்தொகையில் இத்தலம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
சோபுரநாதர்
சத்யதாக்ஷி
புகைப்படம் : தினமலர்
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 51
திருமுறை எண் 8
இலங்கையில் நிலைபெற்று வாழும், வாட்போரில் வல்ல அவுணர் தலைவனாகிய இராவணனைத் தனது அழகிய கால் விரலால் நடுங்குமாறு ஊன்றிப் பின் அவன் வேண்ட மகிழ்ந்து அருள்புரிந்தவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! மேரு மலையைக் கொடியதொரு வில்லாகக் கொண்டு வலிமை பொருந்திய அரக்கர் குலங்கள் வாழ்கின்ற திரிபுரங்களாகிய ஊர்களை எரித்து அழித்தற்குக் காரணம் என்னவோ?.
கருத்து
விலங்கல் – மேருமலை.
அரக்கர் – திரிபுராதிகள்.
ஆணவம் கொண்டு தன் தவற்றை உணர்ந்து பின் அவனை மன்னித்தல் என்றவாறு
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 51
திருமுறை எண் 9
மண்ணுலகை அகழ்ந்து உண்ட திருமாலும், இனிய தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனும், முற்காலத்தே உன்னைத் தொடர்ந்து அடிமுடி காணமாட்டாராய் நின்றொழியத் திருச்சோபுரத்தில் மேவி விளங்கும் இறைவனே! தேவர்கள் விடத்தையுடைய வாசுகி என்னும் பாம்பை மந்தரம் என்னும் பெரிய மலையைச் சுற்றிக் கட்டி, விரிந்த அலைகளையுடைய கடல்நீரைக் கடைந்தபோது, அதனிடை எழுந்த நஞ்சை உண்டு மகிழ்தற்குக் காரணம் என்னையோ?
கருத்து
நாகம் – வாசுகி என்னும் பாம்பு.
மால் வரை – மந்தரமலை.
நஞ்சை உண்டு உகந்த – தேவர்கள் அஞ்சிய நஞ்சைத் தாம் உண்டு அவர்களைக் காத்தும்,
சாவாமைக்கு ஏதுவாகிய அமுதத்தை அவர்களுக்குக் கொடுத்து அளித்தும் மகிழ்ந்த.
இடந்து – தோண்டி
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
தல வரலாறு(சுருக்கம்) / சிறப்புகள் – திருத்திணை நகர்
சுயம்பு திருமேனி. சற்று கூர்மையான பாணத்துடன் கூடிய சதுர ஆவுடையார்
நடராச மூர்த்தியின் கீழே பீடத்தில் மகாவிஷ்ணு, சங்கை வாயில் வைத்து ஊதுவது போலவும், பிரம்மா பஞ்சமுக வாத்யம் வாசிப்பது போலவும் கூடிய சிறிய மூர்த்தங்கள்
இறைவன் மீது பங்குனி மாதம் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களில் சூரியன் ஒளி ஆராதனை
விவசாய தம்பதியினரான பெரியான் என்னும் பள்ளனும் அவன் மனைவியும் சிவன் மீது அதிக பக்தியுடன் தினமும் ஒரு சிவபக்தருக்கு உணவளித்து விட்டு அதன்பின்பு உண்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். இறைவன் பணியாளாக வந்து தோட்டத்தில் உழுது பின் உணவு அருந்தினார். ஒரு நாளில் பயிர்கள் அனைத்தும் வளர தானே காரணம் என உணர்த்தினார். ஒரே நாளில் தினை விளைந்ததால் தினைநகர்
சிவனுக்கு தினமும் தினையமுது உணவு படையல்
வீரசேன மன்னனின் குஷ்டநோய் நீங்கிய தலம்
தட்சிணாமூர்த்தி இரு கால்களையும் மடக்கி பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் முயலகன் இல்லாமல் நான்கு சீடர்களுடன் கூடிய திருக்காட்சி அமைப்பு.
சிவனார் நிலத்தை உழுவதற்கு பயன்படுத்திய ஏர் மற்றும் நீர் இறைத்த கலம் முதலியவை இன்றும் உள்ளன
சண்டிகேஸ்வரர் தனது மனைவியுடன் அருள்பாலிக்கும் தனிச்சந்நிதி
முன்வினைப் பயனால் ஜாம்பு(கரடி) வடிவம் பெற்ற மகரிஷி ஒருவர் இத்தீர்த்தத்தில் நீராடி, சிவனை வணங்கி சாபவிமோசனம் பெற்றாதால் தீர்த்தம் ஜாம்புவ தீர்த்தம்
தலம்
திருத்திணை நகர்
பிற பெயர்கள்
தீர்த்தனகிரி,
இறைவன்
சிவக்கொழுந்தீசர், சிவக்கொழுந்தீஸ்வரர்
இறைவி
ஒப்பிலாநாயகி கருந்தடங்கன்னி,நீலதாம்பிகை
தல விருட்சம்
கொன்றை
தீர்த்தம்
ஜாம்பவ தீர்த்தம்
விழாக்கள்
வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவம், மகாசிவராத்திரி , ஐப்பசி அன்னாபிஷேகம் , ஆருத்ரா தரிசனம்
மாவட்டம்
கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோவில்
தீர்த்தனகிரி அஞ்சல்
கடலூர் வட்டம்,கடலூர் மாவட்டம்
PIN – 608801
04142-289861 , 99653-28278 ,99653-28279 ,97864-67593 ,99422-48966 , 94434-34024
வழிபட்டவர்கள்
விஷ்ணு , பிரம்மா , ஜாம்பவான்
பாடியவர்கள்
சுந்தரர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
கடலூரில் இருந்து சுமார் 18 கிமீ தொலைவு
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 5 வது தலம்.
சிவக்கொழுந்தீஸ்வரர்
ஒப்பிலாநாயகி
புகைப்படங்கள் : தினமலர்
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 64
திருமுறை எண் 7
மனமே, தன்னிடத்துக் குற்றமின்றி நிற்கும் மனத்தை அடையாமல் தவத்தொழிலைச் செய்து பயனில்லாத சொற்களைப் பேசி பின்னுதல் பொருந்திய சடைகளைச்சேர்த்துக் கட்டிக்கொள்ளு தலுடன் எலும்பினை அணிந்து கொள்ளுதலாகிய வேடத்தைப் பூண்டு கொண்டாலே மக்கள் பிறவியாகிய கடலை முற்றக் கடந்துவிடுதல் இயலாது; ஆதலின், அந்நிலை நின்னின் வேறாய் நிற்க நீ தேவர் கட்குத் தேவனாய் உள்ள பெருந்தேவனாகிய செந்நெற் பயிர்கள் நிறைந்த வயல்களையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை அணுகச் சென்று இவனே தொன்மையாய முழுமுதற் கடவுள் என்று துணிந்து அடைவாயாக.
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 64
திருமுறை எண் 8
மனமே, அன்புள்ள சுற்றத்தாரும், மற்றும் துணையாக உள்ளாரும் ஆகிய பலருங் கண்டு, உடல்மேல் விழுந்து அழுது எழும்படி, உயிர் உடலைப் பிரிந்து அப்பாற் போய்விடும்; இது நிச்சயம். இதனை நீ அறிந்துளை என்றால், அறியாமையையுடைய வாழ்வாகிய இம்மாறுபட்ட நெறியை நீங்கி, கரிய பெரிய கண்களை யுடையவளாகிய உமையது பாகத்தை உடையவனும், உயிர்களில் நிறைந்திருப்பவனும், காலனுக்குக் காலனும், எல்லாப் பொருளையும் கடந்துள்ளவனும் ஆகிய செருந்தி (ஒரு வகைப் புல்) மரங்கள் பொன்போலும் மலர்களை மலர்கின்ற திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற, நன்மையின் மேலெல்லையாகிய பெருமானை, விரும்பி , அணுகச் சென்று அடைவாயாக.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
தனது தாயை மீனப் பெண்ணாக சபித்ததற்காக முருகன் வேதாக நூல்களை கடலில் வீசி எறிந்தார். இதனால் சாபம் பெற்ற முருகன் மதுரையில் தனபதி என்பவரின் மகனாக உருத்திரசர்மர் என்ற பெயரில் ஊமைப்பிள்ளையாக பிறந்து இத்தலம் வந்து வழிபாடு செய்து பேசும் திறன் பெற்றார்.
குமரன் வழிபட்டதால் சிவன் திருநாமம் திருக்குமாரசாமி
வியாக்ரபாதர் வழிபட்ட பஞ்ச புலியூர்களில் (பெரும்பற்றப்புலியூர், திருப்பெரும்புலியூர், ஓமாம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர், திரு எருக்கத்தம்புலியூர்) இத்தலமும் ஒன்று
63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட யாழ்ப்பாணருடைய அவதாரத்தலம். திருவுருவம் மதங்க சூளாமணியாருடன்
தேவர்களும், முனிவர்களும் இங்கு வந்து பறவையாகவும், மரங்களாகவும் மாறி ஈசனை வழிபட்டு வந்த போது ஏற்பட்ட வேடர்களின் தொந்தரவால் அவர்கள் வெள்ளெருக்காக மாறி வழிபாடு செய்யும் தலம்
அத்தம் = காடு, எருக்கத்தம் = எருக்கங்காடு. எருக்கஞ் செடிகள் நெருக்கமாக நிறைந்திருந்த காட்டில் எழுந்த ஊர் எருக்கத்தம்புலியூர்
இராஜராஜசோழ மன்னனுக்கு புத்திர பாக்கியத்தையும், அவனுடைய மகன் இராஜேந்தர சோழனுக்கு திருமண வரத்தையும் தந்தருளிய தலம்
மார்ச் மாதம் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலும் மூலவர் மீது சூரியஒளி வழிபாடு செய்யும் தலம்
இவ்வூருக்குக் கிழக்கே உள்ள கீழ்க்கோட்டூர் மணியம்பலத்தில் கருவூர்த்தேவரின் திருவிசைப்பா பாடப் பெற்றது.
காலை 6 மணி முதல் 11 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரைஅருள்மிகு திருநீலகண்டேஸ்வரர் திருக்கோவில்
ராஜேந்தரப்பட்டினம் அஞ்சல்
விருத்தாசலம் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN – 608703
04143 – 243533, +91-94440 63806.+91-93606 37784
வழிபட்டவர்கள்
வியாக்ரபாதர், உருத்திரசன்மர்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர், அருணகிரி நாதர்
நிர்வாகம்
இருப்பிடம்
ஸ்ரீமுஷ்ணம் – விருத்தாசலம் சாலையில் முஷ்ணத்தை அடுத்து அமைந்துள்ளது இத் தலம்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 194 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 4 வது தலம்.
திருக்குமாரசுவாமி
வீராமுலையம்மன்
புகைப்படங்கள் : தினமலர்
பாடியவர் திருஞான சம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 89
திருமுறை எண் 8
ஆ ஆ என்று தன்னைக் காப்பாற்றும்படி இராவணன் அலறுமாறு அவனை அடர்த்து, பின் தேவா என அவன் தவறினை உணர்ந்து வேண்ட அருளோடு நிறைந்த செல்வங்கள் பலவற்றை வழங்கியருளிய தலைவனே, எருக்கத்தம்புலியூரில் விளங்கும் சிறப்புமிக்க கோயிலில் எழுந்தருளும் தேவனே என்று போற்ற, நம் அல்லல்கள் தீர்தல் உறுதியாகும்.
பாடியவர் திருஞான சம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 89
திருமுறை எண் 9
வேதங்களை ஓதும் நான்முகனும், நெடுமாலும் காணுதற்கு அரியவனே, மழுவைக் கையில் ஏந்தியவனே, கலை நிறையாத பிறை மதியைச் சூடியவனே, முத்துக்களின் கொத்துப் போன்ற இறையோனே என்று போற்றி, எருக்கத்தம்புலியூரை இடமாகக் கொண்ட நீலகண்டனை அண்ணலை நினைந்தால், வினை கெடும்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
சங்கமத்தீர்த்தம் ( வெள்ளாறும் , மணிமுத்தாறும் கூடும் இடம் ) மற்றும் பிரம்ம , அகத்திய , கார்த்தியாயனர் தீர்த்தங்கள்
விழாக்கள்
மாசி 13 நாள் பிரம்மோற்சவம்
மாவட்டம்
கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு நர்த்தன வல்லபேஸ்வரர் திருக்கோவில்
திருக்கூடலையாற்றூர்
காவலாகுடி அஞ்சல்
காட்டுமன்னார் கோவில் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN – 608702
04144-208704 , 99422-49938
வழிபட்டவர்கள்
பாடியவர்கள்
சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர் – திருப்புகழ் 1 பாடல்
நிர்வாகம்
இருப்பிடம்
சேத்தியாதோப்பு – கும்பகோணம் பாதையில், ஸ்ரீ முஷ்ணம் போகும் பாதையில் ‘காவாலகுடி’யை அடைந்து, அடுத்துள்ள கூடலையாற்றூரை அடையலாம்.
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 193 வதுத் தலம்
நடு நாட்டுத் தலங்களில் 3 வதுத் தலம்.
நர்த்தனவல்லபேஸ்வரர்
பராசக்தி
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 85
திருமுறை எண் 8
திருப்பாற்கடலினை கடைந்த பொழுது அதில் இருந்து உண்டான எழுந்த நஞ்சினை உண்டவனும், விடையை ஊர்ந்து செல்பவனும், பால்போலும் இனிய மொழியை உடையவளாகிய உமா தேவியோடும் உடனாய கோலமே தனது உருவமாகக் கொண்டு திருக் கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற ஆல்நிழற்பெருமான், இவ் வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை அடியேன் அறியாது ஒழிந்தேன் என் அறியாமை!
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
திருநாவுக்கரசர் – சூல இடபக் குறி பொறிக்குமாறு வேண்டிப் பெற்ற தலம்.
சந்தான குரவர்கள் மெய்கண்ட தேவர், மறைஞான சம்பந்தர் ஆகியோர்பிறந்த தலம்.
ஆறாயிரம் கடந்தையர்கள் (வீரமக்கள்) வாழ்ந்ததால் ‘கடந்தை நகர்
மாகேஸ்வர பூசையில் தனது பணியாள் வந்த போது அவருக்கு பூஜை செய்ய மறுத்த மனைவியின் கரங்களை வெட்டிய கலிகம்ப நாயனார் (மீண்டும் துளிர்க்க அருளிச் செய்த பிரான்-கைவழங்கீசர் ) முக்தி பெற்றத் தலம்.
கஜபிருஷ்ட விமான அமைப்பிலான விமானம்
இத்தலத்திற்கு அருகில் உள்ள சௌந்தர சோழபுரத்தில் வாழ்ந்த சௌந்தரவல்லி என்னும் தேவரடியார், பண்டம் மாற்ற இத்தலத்திற்கு வரும்போது, கடைவீதியிலிருந்தே வழிபடுவதற்கேற்ப கட்டப்பட்டது சௌந்தரேஸ்வரர் (சிவலிங்கம்) சந்நிதி
தொலைபேசி : +91-9976995722, +91-98425-64768, 04143 – 222788.
வழிபட்டவர்கள்
ஐராவதம், இந்திரன் மற்றும் பார்வதி
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
நிர்வாகம்
இருப்பிடம்
விருத்தாசலத்தில் இருந்து சுமார் 17 கிமீ, தொழுதூரில் இருந்து சுமார் 15 கிமீ, திட்டக்குடியில் இருந்து சுமார் 15 கிமீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 192 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 2 வது தலம்.
சுடர்க்கொழுந்தீஸ்வரர்
விருத்தாம்பிகை
புகைப்படம் : தினமலர்
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 59
திருமுறை எண் 9
பாடல்
நோயும் பிணியும் அருந்துயரமும்
நுகருடைய வாழ்க்கை யொழியத்தவம்
வாயும் மனங்கருதி நின்றீரெல்லாம்
மலர்மிசைய நான்முகனும் மண்ணும்விண்ணும்
தாய அடியளந்தான் காணமாட்டாத்
தலைவர்க் கிடம்போலுந் தண்சோலைவிண்
தோயுங் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே
பொருள்
உடலை வருத்தும் நோய்களும், மனத்தை வருத்தும் கவலைகளும் அவற்றால் விளையும் துன்பங்களும் ஆகியவற்றை நுகர்தற்குரிய இவ்வாழ்க்கை நீங்கத் தவம்புரியும் எண்ணத்துடன் நிற்கும் நீவிர் அனைவீரும் தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும், மண்ணையும், விண்ணையும் அடியால் அளந்த திருமாலும் காண மாட்டாத தலைவனாகிய சிவபிரானுக்குரிய இடமாகிய விண் தோயும் சோலைகளால் சூழப்பட்ட கடந்தை நகரிலுள்ள திருத்தூங்கானை மாடப்பெருங்கோயிலைத் தொழுவீர்களாக.
கருத்து
நோய் – உடலைப்பற்றியனவாகி வாதபித்த சிலேட்டுமத்தால் விளைவன.
பிணி – மனத்தைப் பிணித்து நிற்கும் கவலைகள்.
அருந்துயரம் – அவற்றால் விளையும் துன்பங்கள்.
பாடியவர் திருநாவுக்கரசர்
திருமுறை 4
பதிக எண் 109
திருமுறை எண் 1
பாடல்
பொன்னார் திருவடிக் கொன்றுண்டு
விண்ணப்பம் போற்றிசெய்யும்
என்னாவி காப்பதற் கிச்சையுண்
டேலிருங் கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலமென்
மேற்பொறி மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை
மாடச் சுடர்க்கொழுந்தே.
பொருள்
விரும்பி மேகங்கள் தங்குதல் பொருந்திய பெண்ணாகடத்திலுள்ள திருக்கோயிலாகிய தூங்கு ஆனை மாடத்தில் ஒளிப் பிழம்பாய் இருக்கும் பெருமானே! உன்னுடைய பொன்போன்ற திருவடிகளில் அடியேன் செய்யும் விண்ணப்பமாகிய வேண்டுகோள் ஒன்று உளது. அஃதாவது அடியேனுடைய உயிரைப் பாதுகாக்கும் விருப்பம் உனக்கு உண்டானால், யான் சமண சமயத்தில் வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கினவன் என்று மக்கள் கூறும் பழிச் சொற்கள் நீங்குமாறு, உன்னுடைய அடிமையாக அடியேனை எழுதிக் கொண்டாய் என்பது புலப்பட ஒளிவீசும் முத்தலைச் சூலப் பொறியை அடியேன் உடம்பில் பொறித்து வைப்பாயாக.
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
திருத்தூங்காணை மாடத்தில் இருந்து நடந்தே சென்ற திருஞான சம்பந்தரின் கால்கள் நோகாமல் இருக்க அவருக்கு சிவன் முத்துச்சிவிகையும், முத்துக்குடையும், முத்துச்சின்னமும் அருளியத் தலம்
வெள்ளாறு நதியில் வெள்ளப்பெருக்கெடுத்த போது சேதம் உண்டாகாதிருக்க நந்தி தலையை திருப்பி பார்த்து வெள்ளம் வடிந்ததால் சற்று திரும்பியுள்ள நந்தியின் தலை
சீகாழிப்பதியில் உறைபவரும், பெருமையை உடைய இடப வாகனத்தில் செல்லும் நித்தத் திருமேனி உள்ளவரும், பிறரால் ‘வல்லோர்கள்’ என்று கூறப்படுவோராகிய திருமால் மற்றும் பிரமனும் ஊழிக் காலத்தில் ஒடுங்கும் இடமாகக் கூடியவரும் அரத்துறை மேவும் பரமனே, நாம் தொழுகின்ற இறைவனாகிய நம் சிவபெருமான் ஆவார்.
கருத்து
திருமாலும் பிரமனும் வணங்க, ஊழிதோறும் விளங்கும் அரத்துறை எனும் பொருள் பிரித்து அறிவார்களும் உளர்.
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 3
திருமுறை எண் 8
பாடல்
திண்டேர்நெடு வீதி யிலங்கையர்கோன்
திரள்தோள்இரு பஃதும்நெ ரித்தருளி
ஞெண்டாடுநெ டுவயல் சூழ்புறவின்
நெல்வாயி லரத்துறை நின்மலனே
பண்டேமிக நான்செய்த பாக்கியத்தாற்
பரஞ்சோதிநின் நாமம் பயிலப்பெற்றேன்
அண்டாஅம ரர்க்கம ரர்பெருமான்
அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.
பொருள்
வலிமை மிக்க தோள்கள் இருபதையும் நெரித்து பின் (அவன் கர்வம் அழிந்தப்பின்) அவனுக்கு அருளி, நண்டுகள் உலாவுகின்ற நீண்ட வயல் சூழ்ந்த, முல்லை நிலத்தையுடைய திருநெல்வாயில் அரத்துறையின் கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே, மேலான ஒளி வடிவினனே, தேவனே, தேவர்க்குத் தேவராய் உள்ளார்க்குத் தலைவனே, நான் முற்பிறவிகளில் செய்த நல்வினையினால் உனது பெயரைப் பல காலமும் சொல்லும் பேற்றினைப் பெற்றேன்; இனி, அடியேன், உலகியலினின்றும் பிழைத்துப் போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்.