
புகைப்படம் : திரைப்பட இயக்குனர் - திரு. ஐயப்ப மாதவன்
கண்ணுக்குத் தெரியா இறைவன் இருக்கிறான் இல்லை எனும் வாதங்கள் தாண்டி கண்ணால் காண இயலா வைரஸ் என்பது நிஜமாக இருக்கிறது. மனித குலத்தில் இந்த வைரஸ் ஏற்படுத்தி இருக்கும் சிக்கல் மிக அதிகம்.
ஒவ்வொரு முறையும் இயற்கை தன்னை தானே புதிப்பிக்கும் போது நிறைய இழப்புகளை சந்திக்கும்; இம்முறை தலைமுறை தாண்டிய இழப்புகள் அதிகம்.
எத்தனையோ துறை இருக்கையில் இந்த IT துறை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் எனும் கேள்வி எழும். மிகப் பெரிய அளவில் பொருளை / செல்வத்தினை இந்தியாவிற்கு தரும் துறை பொருளாதாரத்தை துறை என்பதாலும், இந்த துறை முன்வைத்தே பல துறை துறைகள் இயங்குகின்றன என்பதாலும் இத்துறை எடுத்துக் கொள்ளப்படுகிறது
நேரடியான பாதிப்புகள், மறைமுக பாதிப்புகள் இங்கு அதிகம் என்பதும் காரணம்.
ஒவ்வொரு முறையும் இத்துறைக்கு பாதிப்பு வரும்போது இத்துறை தன்னைத் தானே வெவ்வேறு வழிகளில் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும். இத்துறை இந்த முறை எடுக்கும் முடிவுகள் எண்ணிப்பார்க்க இயலாததாகவே இருக்கும்
கீழ் கண்ட தலைப்புகளில் எழுத இருக்கிறேன்.
- இந்திய பொருளாதாரம்
- மனித வளம் மேம்படுத்துதலில் இருக்கும் சிக்கல்கள்
- மீண்டு எழுதல்