பாடல்
விளம்புகிறேன் பூரணந்தா னெதுவென்றாக்கால்
வெட்டவெளி சுழினையுச்சி வேறேயில்லை
தளம்பாதே வேறெண்ணாதே நீயும்
சகல சித்தும் கைவசமா யாடும்பீடம்
முளங்காதே பூரணத்தைக் கண்டோமென்று
முச்சுடரின் சோதிதன்னை மொழிந்தாற்தோஷம்
பழங்காறு மும்மூலந் தன்னைத்தானும்
பார் மகனே சித்தர்கள்தான் பகரார்காணே
அகஸ்தியர் ஞான சைதன்யம்
*கருத்து – வெட்டவெளி எனப்படும் சுழுமுனை உச்சியினை கண்டவர்களின் இயல்பினை உரைக்கும் பாடல்.*
பதவுரை
மனம் கலங்கி வேறு எந்த ஒன்றை பற்றியும் எண்ணாமல் சகலவிதமான சித்துகளும் கைவசம் ஆடும் பீடம் ஆனதும், முழுவதுமான மகிழ்ச்சியினை தருவதும் ஆன வெட்டவெளி எனப்படும் சுழுமுனை உச்சியினை தவிர ஏதுவும் இல்லை; இவ்வாறான பூரணத்தை கண்டுவிட்டதை எவரிடத்திலும் உரையாதே; மூன்று சுடர் போன்றதான சோதிதன்னை கண்டதை உரைத்தால் அது தோஷமாகும்; மிகப் பழையதான காலத்தில் இருந்து தொடரும் மூலம் தன்னை கண்டவர்கள் சித்தர்கள் ஆயினும் அவர்கள் கண்டதைப் பற்றி எதையும் பகரமாட்டார்கள்
விளக்க உரை
- தளும்புதல் – மனங்கலங்குதல்
மிக்க நன்றி. அனைத்தும் குருவருள்.
நன்று
சிவ சிவ