வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 35


உமை

மனிதர்கள் உயிருடன் இருக்கும்போதே ‘இந்த ஜீவன் நல்லகதிக்கு உரியவன்’ என்றும் ‘இவன் துன்பத்துக்கு உரியவன் என்றும்’ அறியக்கூடுமா. கூடாதா எனும் இதை உரையுங்கள்.

மகேஸ்வரர்

மனிதர்கள் தேவத்தன்மை, அசுரத்தன்மை எனும் இரண்டு வகையாக இருக்கின்றார்கள். மனம், வாக்கு செய்கையினால் தீங்கு செய்து கொண்டு இருப்பவர்கள் அசுரர் என்று அறிவாயாக. துன்பம் செய்பவரும், கள்வரும், வஞ்சகரும், பிறர்மனைவியைத் தொடுபவரும், இழிதொழிலில் விருப்பம் உள்ளவரும், சுத்தம், மங்களத்தினை விட்டவரும், ஆசாரத்தைக் கெடுப்பவரும், பாவம் செய்பவரும், உலக ஒழுக்கத்தைக் கெடுப்பவரும் அவர்களின் தீச்செயல்களால் நரகத்துக்கு உரியவர்.

பிறர் துன்பத்தினைக் கண்டு அதை தன் துன்பம் போல் கொள்பவர்கள், ஏழையாக இருந்தாலும் யாசிப்பவர்களுக்கு அன்புடன் எதையாவது கொடுப்பவர்கள், குருவுக்கு பணிவிடை செய்பவர்கள் நன்றி மறவாதவர்கள், புலன் அடக்கம் கொண்டவர்கள், கோபம், தற்புகழ்சி, கர்வம்,பொருளாசை, பகை இவற்றை விட்டவர்கள் ஸ்வர்கம் செல்பவர்கள்.

இம்மையின் ஒழுக்கத்தினால் மறுமையின் பயன் தெரியும்.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *