IT – தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள் – 4

தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள்_KP

 
தான் வாழ பிறரை கெடுக்கும் மனிதர்கள் (அனைத்து நிலைகளிலும்)
 
தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் பெரும்பாலும் மிகப் பெரிய திட்ட நோக்கம், இலக்கங்கள் இல்லாமல் தொடங்கப்படுகின்றன.(சிவாஜி  : பார்த்த வேலை – Software Solution Architect).
 
அவைகள் தொடங்கப்படும் காலங்கட்டங்களில் அந்த இடங்களில் அங்கு என்ன மாதிரியான மனிதர்களும், படிப்புகளும் இருக்கின்றன. அவைகள் எப்படி பயன்பாடு இருக்கும் போன்ற விஷயங்களை நினைப்பது இல்லை.
 
நுட்பம் – 1
 
.ம் – B.C.A படித்த ஒருவன் மென்பொருள் துறையில் நுழைவதாக வைத்துக் கொள்வோம். மேலும் அந்த நிறுவனத்தில் 10 வருடம் அந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் கொள்வோம். இக்கால கட்டங்களில் அவனுக்கு அந்த நிறுவனத்தில் அனைத்து விஷயங்களும் தெரிந்து விடும்.
 
10 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு Master Degree படித்த ஒருவன் அங்கு வரும்போது வரும் நபருக்கு அவன் அடிப்படை விஷயங்களை எதுவும் சொல்லித் தரமாட்டான். (எவனாக இருப்பினும் சொல்லித் தரமாட்டான் என்பது வேறு கதை.) இது matter of survival  என்பதை முன்வைத்தது.
 
நுட்பம் – 2
 
நிறுவனத்தில் மேல் மட்டக் குழு விரிவாக்கம் பற்றி பேச கூடும்.
நம்ம நிறுவனத்தினை எப்படி விரிவுபடுத்தலாம். நல்ல idea குடுத்தா உங்களுக்கு promotion.
சார், நான் என்ன சொல்ல வரேன்னா, நம்ம Mr.X இருக்கானே, அவன் குடுக்ற வேலையை மட்டும் செய்யறான். அவன கழட்டி விட்டா 12 லட்சம் மிச்ச மாகும். அவனுக்கு பதிலா 2 லட்சத்தில 4 பேர வேலைக்கு எடுத்துக்கலாம். நம்ம Mr.Y க்கு புரொமோஷன்னு சொல்லி அவனுக்கு 3 லட்சம் கொடுத்தா 11 லட்சத்தில எல்லாம் முடிச்சிடும் சார்.
நுட்பம் – 3
 
தற்போதைய காலங்கட்டங்களில் (பொதுவாக) 32 – 35 வயது என்பது மனிதர்கள் வாழத்துவங்கும் காலம். எல்லா நிறுவனங்களுக்கும் இது தெரியும். எல்லோரும் அங்குதான் கை வைக்கிறார்கள். ‘புடிச்சா வேலை பாருங்க, புடிக்கலைன்னா, பேப்பர் போட்டுட்டு போக வேண்டியது தானே’ இவ்வாறு மன அழுத்தம் உண்டாக்கி வெளியே தள்ளப்படும் வகைகளும் உண்டு..
நுட்பம் – 4
 
இருக்கும் இடங்களில் மிகச் சிறந்த நட்புக்கள் (வேறு என்ன சொல்ல) உண்டாவது உண்டு.
எனக்கு ஏதாவது புமோஷனுக்கு ஏற்பாடு செய்ய மாட்டீங்களா?
கவலைய விடு டியர், நம்ம Mr. X இருக்கான்ல, அவனை ‘வேலையே செய்யாதவன்’னு சொல்லி அடுத்த மாசம் தூக்றோம். அப்புறம் நீ தான் Team Leader.
அவர் 10 வருஷமா இங்க இருக்காறே?
நீ ஏன் அதப் பத்தி கவலைப்பட்ற. இப்ப ஏதாவது Treat  உண்டா?
நுட்பம் – 5
 
ஒரு நிறுவனத்தில் இருந்து ஒருவரை வெளியே தள்ள பல காரணங்களைத் தேடுவார்கள்
·      Proper in time (out time பற்றி கவலை இல்லை). சத்தியமாகச் சொல்கிறேன்.
·      வேலைகளை குறித்த காலத்தில் முடித்துக் கொடுக்கும் திறமை
·      வேலை விடுப்பு எடுத்த நாட்கள்
·      எதிர் பால் மக்களுடன் கொஞ்சம் முன்னுக்கு பின்னாக இருத்தல்
·      மற்றவர்களும் பழகும் தன்மை
மேற் கூறியவைகள் எவையும் இல்லை எனில் 10 வருடங்களுக்கு பிறகுவேலையே செய்யவில்லைஎன்று உண்மையை கண்டறிதல்.
நுட்பம் – 6
 
மச்சான்(பாசக்கார பய புள்ளங்க), அவன எப்டி வேலை விட்டு விரட்டுரதுன்னு தெரியலடா?
டேய், நம்ம கிட்ட 6 மாசத்துக்கு எல்லாருக்கும் work load details இருக்கு. DB ல work load hours ஐ குறைச்சி போடு. 2 வாரத்து milestone ஐ 1 வார milestone ஆ போடு. இத தவிர daily milestone தினமும் 2 போடு. ஓடியே போய்டுவான். 
சூப்பர் ஐடியா மச்சான். வா ஒரு பீர் சாப்டு இன்னும் பேசுவோம்.
 
இங்கு பிரதானமாக இருப்பது ‘வேலை செய்யவில்லை’ என்பதை கண்டுபிடிப்பது தான்.

அடுத்த பதிவு :பொருளாதார சீர்திருத்தம்/முன்னேற்றம்  முன்வைத்துதொடரும்…

 
புகைபடம் : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

IT – தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள் – 3

தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள்_KP
கற்பித்தல் குறைபாடுகள்
சமீபத்தில் எனது நண்பர் (பேராசிரியர்ஒருவரை சந்திக்கச்  சென்றிருந்தேன்.   அப்போது  எனது நண்பரை சந்திக்க மாணவர் ஒருவர் வந்திருந்தார்.
சரிடாநான் உனக்கு சொல்லித் தரேன்புக்ஸ் எல்லாம் எடுத்துகிட்டு வா.
இல்லஎங்களுக்கு புக்ஸ் கொடுக்கலஸ்லைடு தான்.
எத்தனை page?
22 page.
ஒரு யூனிட்க்கா?
இல்ல சார்மொத்த சிலபஸ்ம் அவ்வளவுதான்.
என்னடா சொல்ற?
ஆமாம் சார்.
(அது என்ன subject  என்பதை கடைசியில் சொல்கிறேன்.)
படிப்பதற்கு 5 Text book  3 reference book என்பது இருந்தெல்லாம் லெமுரியா கண்டத்தோடு வழக்கொழிந்து போனது.
2000 ஆரம்ப காலகட்டங்களில் யூனிட்டையும் படித்து(ம்க்கும்) 122 பக்கத்திற்கு as per Anna University syllabus   என்று வெளியிடுவார்கள்.
இப்போது அதுவும் போயிற்றுஒரு subject க்கு 22 slide என படித்து வருபவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?
கற்றல் குறைபாடுகள் – 1
 
டேய், நாளைக்கு cycle test டா. இன்னும் ஒண்ணும் படிக்கவே இல்ல. என்ன பண்றதுடா?
டேய், விடுடா, objective type தானே, 4 answer ல ஏதோ ஒண்ண click  பண்ண வேண்டியது தானே
கற்றல் குறைபாடுகள் – 2
டேய், attendance கம்மியா வரும் போல இருக்கு.  பயமா இருக்கு டா.
விடுடா, compensatory course போட்டுக்கலாம்.
கற்றுத்தருபவர்களிடமும் கற்பவர்களிடம் இருக்கும் குறைபாடுகள் ஏராளமானவை. இரண்டுமே ஜாடிக்கு ஏத்த மூடி போல் மிக அழகாக பொருந்துகின்றன.
சமீபத்திய ஒரு கட்டுரையின் படி (Economic times), இந்த வருடத்தில் campus interview   வழியாக மிகப் பெரிய நிறுவனங்கள் 30000 ஆட்களை மட்டுமே எடுக்க இருக்கின்றன. (சென்ற வருடம் 35000).
இதற்கு காரணம் automation and artificial intelligence என்று வேறு ஒரு கட்டுரையும் வந்திருந்தது.

அந்த Subject : Relational Database Management System

தான் வாழ பிறரை கெடுக்கும் மனிதர்கள் (அனைத்து நிலைகளிலும்) – அடுத்த பதிவு
தொடரும்…

புகைப்படம் : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

2038 – ஒலியியல் வழியில் மூளையின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தும் திறன்

2038
(SOUND WAVES TO CONTROL BRAIN CELLS)
·         Scientists have developed a new way to selectively activate brain, heart, muscle and other cells using ultrasonic sound waves.
·         This is a new, additional tool to manipulate neurons and other cells in the body.
·         By shining a focused laser on the cells, they can selectively open these channels, either activating or silencing the target neurons.
·         In contrast to light, low-frequency ultrasound can travel through the body without any scattering. This could be a big advantage when you want to stimulate a region deep in the brain without affecting other regions
Ref :
http://zeenews.india.com/news/science/indian-american-scientist-uses-sound-waves-to-control-brain-cells_1798152.html
http://www.salk.edu/news-release/in-first-salk-scientists-use-sound-waves-to-control-brain-cells/
              (இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)
1.
ஒரு சோதனைக்கு உங்க கணவர் எங்களுக்கு தேவைப்படுறார்ஒரு வார காலத்திற்கு கூட்டிகிட்டு போகலாமா?
சோத்த போட்டா எங்க வேணும்னாலும் வரும் அந்த நாயிஇதுக்கு கேள்வி எதுக்குமூளையே கிடையாது   அதுக்குஅதுகிட்ட என்ன சோதனை பண்ணப்போறீங்களோ?
2.
சார், நம்ம படத்துல பல புதுமைகள் செய்திருக்கோம் சார்.
கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம்.
அதாவது சார், நீங்க கதப்படி செவ்வாய் கிரகத்தில இருக்கீங்க, உங்களால எதிரி ராக்கெட்ட கன்ட்ரோல் பண்ணமுடியல, அதனால நாங்க இங்க இருந்து உங்கள கன்ட்ரோல் பண்ணி எதிரி ராக்கெட் ஒயர்  எல்லாத்தையும் பிச்சி,எதிரிராக்கெட்ட சிதைச்சிடுறோம். படப் பேர்சோனாலஜிஸ்டும், வெடித்து சிதறும் சில ராக்கெட்டுகளும்’, சுருக்கமா S-VSSR. உங்களுக்கு 9ம் எண் நல்லா இருக்கும் அப்படீங்கறதால படப்பேர் கூட 18 ல வச்சி இருக்கோம் சார்.
3.
அன்பார்ந்த வாக்காளப் பெருங்குடி மக்களே, ஒலியியல் வழியில் மூளையின் செயல்பாடுகள் கட்டுப்படுத்துவதற்காக உபகரணங்களுக்கு வாரத்தில் 2 நாட்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பதை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளோம்.
4
ரொம்ப சந்தோஷம், வெளியிலே இருந்துஉங்களை யாரோ கண்ட்ரோல் செய்து உங்களை கொல செய்ய வச்சிருக்காங்க’ன்னு சொல்லி, கேச திருப்பி உங்களுக்கு விடுதலை வாங்கி கொடுத்து விட்டேன். எனக்கு பீஸ் எப்ப கொடுப்பீங்க?
என்னா சார் இது, போன தடவ வந்தப்பவே வெளியில் இருந்து கண்ட்ரோல் செய்து உங்க பீஸை வாங்கி கிட்டீங்களே, ஞாபகம் இல்லையா? (யாருகிட்ட )
5.
இந்த ப்ராடெக்ட் தான் பெஸ்ட்ன்னு எப்படி  விளம்பரம் ரெடி பண்றது?
எங்க ப்ராடெக்ட்  பயன்படுத்தி உங்கள் மனைவியை கூட கண்ட்ரோல் செய்யலாம்அப்படீன்னு விளம்பரம் செய்ங்க. அப்புறம் பாருங்க, கூட்டத்த. இதெல்லாம் தெரியாம நீங்க எப்படி தான் விளம்பர  கம்பெனியில வேல பாக்றீங்களோ தெரியல?

Loading

சமூக ஊடகங்கள்

IT – தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள் – 2

தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள்_KP

தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள் – செயற்கையாக உருவாக்கப்படவை.
 

வாழ்வின்அனைத்து விஷயங்களும் (சந்தோஷம் துக்கம் உட்பட)  பொருளாதாரம் சார்ந்து இருப்பதே வாழ்வின் முக்கியமான வலி.

தேசத்தில்சில நிறுவனங்கள் ஏமாற்றம் செய்யும்தற்பொழுது பெரும்பாலான ஒன்றாக கூடி ஏமாற்றும் வேலையை செய்கின்றன. அதன் பொருட்டே accelerated depreciation.
<< 
Accelerated depreciation is a depreciation method whereby an asset loses book value at a faster rate than the traditional straight-line method. Generally, this method allows greater deductions in the earlier years of an asset and is used to minimize taxable income.
>> 
ஒரு நிறுவனம் ஏன் இதை மேற்கொள்கிறது?
இதன் மூலம் (உண்மை நிலை தவிர்த்து) நிறுவனத்தின் சொத்து மதிப்பு குறைத்துக் காட்டப்படுகிறது.
மேலும் இது வரிகளையும்  வருமானங்களையும் கருத்தில் கொண்டு இவ்வழி பாதுகாப்பு செய்கிறது..
இதம் மூலம் அதிக தேய்மான செலவுகள், குறைவான நிகர லாபம் தருகின்றன. உதாரணத்திற்கு 20 வருடங்களுக்கு கணக்கு காட்டி தேய்மானம் குறிப்பிடபட வேண்டிய நிறுவனங்கள் 10 வருடத்தில் அதை கணக்கில் காட்டி விடுகின்றன.

Subsequently, the government put out a draft roadmap that sought to rationalize exemptions such as those given to aid scientific expenditure, capital expenditure and the benefits of accelerated depreciation—mainly benefitting sectors like infrastructure and information technology and those who undertake research and development activities in India. [1]

2013 – 2014 ம் ஆண்டில் வரிகளின் இழப்பு தோராயமாக 57,793 கோடி. இது 2014 – 2015ம் ஆண்டில் 62,399 கோடியாகஉயர்ந்துள்ளது[2]

கடந்த 5 வருட காலங்களில்  மிகப் பெரிய நிகர லாபம் ஈட்டிய அனைத்து நிறுவங்களும் தங்களது வரவு செலவு கணக்கில் மிகப் பெரிய நஷ்டம் சந்தித்ததாகவே குறிப்பிடுகின்றன. இது இந்தியாவில் உள்ள பெரும்பாலான இந்திய தொழில் நுட்பம் சார்ந்த நிறுவங்களுக்கும்  இது பொருந்தும்.
அதாவது10 ஆண்டுகளில் பெறவேண்டிய பணம் முழுவதையும் 5 ஆண்டுகளில் சம்பாதித்து 5ம் ஆண்டு முடிவில் தாங்க முடியா நிதி நிலைமை காரணமாக மூடி விடுவதாக கூறுகின்றன நிறுவனங்கள். (அதாவது மூடிய பின் வந்த லாபத்தை கொண்டு வேறு நிறுவனம் ஆரம்பித்து விடுவார்கள். )

குறிப்புரை இணையங்கள்

 
புகைப்படம் : Karthik Pasupathi
 

Loading

சமூக ஊடகங்கள்

IT – தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள்

தகவல் தொழில் நுட்பம் – தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள்
 
தகவல் தொழில் நுட்பம் அதன் தனித் தன்மையை இழந்து வருவது அனைவரும் அறிந்ததே.
பொருளாதார போட்டிகள்
உலகெங்கிலும் பொருளாதார முரண்பாடுகளாலும், உலகமயமாக்கல் காரணமாகவும் வளர்ச்சி பெற்றது தகவல் நுட்பத் துறை. மேல் மட்டத்தில் இருக்கும் தலைவர்களாலும், போட்டி காரணமாகவும்   வியாபார நெறிமுறைகள் அனைத்தும் களைந்து போட்டி ஆரம்பம் ஆகிறது.
உதாரணமாக தொடர்ந்து 5 வருடங்களாக ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்துடன்    வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கலாம். அதில் 10% அதிகரித்து ஒவ்வொரு வருடமும் வியாபாரம் நடக்கும்.
புதியதாக சந்தையில் நுழையும் ஒரு நிறுவனம் வியாபாரம் பெருகுவதற்காக முன் குறிப்பிட்ட நிறுவனத்துடன் மிக குறைவான விலை குறிப்பிட்டு வியாபாரத்தில் பங்கெடுக்கும்.
இதில் இரண்டு பொருளாதார பாதகங்கள்
·         முதல் நிறுவனம் தனது 5 வருட வியாபார வாழ்வினை இழந்திருக்கிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் அதில் வேலை பார்ப்பவர்கள்,
·         இரண்டாவதாக புதியதாக சந்தையில் நுழைந்த நிறுவனம் இதில் ஏற்படும் குறைக்கப்பட்ட பண பரிமாற்ற அளவிற்காக இருக்கும் தனது ஆட்களிடம் மிக அதிக வேலை பளுவினை அதிகரிக்கும்.
உதாரணத்திற்கு கீழ் கணக்கினை எடுத்துக் கொள்வோம்.
முதல் நிறுவனம் வியாபாரம்
முதல் வருடம்          110000
இரண்டாம் வருடம்       121000
மூன்றாம் வருடம்        133100
நான்காம் வருடம்         146410
ஐந்தாம் வருடம்         161051
ஐந்தாவது வருடத்தில் இரண்டாவது நிறுவனம் தனது வியாபாரம் ஆரம்பிப்பதாக கொள்வோம்.
‘சார், நீங்க நம்ம கம்பெனிக்கு 100000 குடுங்க, உடனே வியாபார ஒப்பந்தம் போட்டு விடலாம்’ என்பார்கள்.
இவ்வாறான பொருளாதார போட்டிகள் இரு நிறுவனங்களில் இருந்தும் ஆட்களை குறைத்து பெரும்பாலானவர்களை வீட்டுக்கு அனுப்புகின்றன.
மற்ற துறைகளில் இது இல்லையா என்பவர்களுக்கு – தகவல் தொழில் நுட்ப துறை சார்ந்த பொருளாதார போட்டிகள் கைப்புண் கண்ணாடியாக இருக்கின்றன.
தொடரும்…
புகைப்படம் : Karthik Pasupathi

Loading

சமூக ஊடகங்கள்

2038 – குழந்தை மனக் குறைபாடுகளை கண்டறியும் இயந்திரங்கள்

Humanoid robot works in therapy for children with autism
TecO is the name of the humanoid robot that detects neural signals using a headset or a hood, which has electrodes mounted on the child’s head and records this signals; then they are sent to a computer that translates them into information that is interpreted by a psychologist or a neurologist.
 
It detects certain intentions, such as moving an arm, if the kid is sleepy or alert, but doesn’t read thoughts; the expression must be made clear. If the robot registers sadness in the child, it then modifies its mode of action to change that feeling.
 
Emotions are measured through facial expressions, which traditionally are done by observation, but the robot uses cameras that record the number of times that the kid turns to see it. The eye contact between the two is what denotes progress.

              (இவைகள்நடக்கலாம்அல்லதுநடக்காமலும்போகலாம்.)

1.

இந்தாபா, எவ்வூட்லயும் ஒரு கொயந்த இருக்கு. நான் அதுக்கு புருசன்னு பேரு வச்சிருக்கேன். உம் மிசின வச்சி அது வியாதிய சரி செய்ய முடியுமா?

2.

இந்தா பாருமா, நாங்க neural signalsவச்சி problem identification செய்யிரோம். அதுக்காக signal சரியில்ல, call drop ஆச்சுன்னா காச திருப்பி தருவீங்களான்னு கேட்கிறது சரியில்லை.

3.

சார் நம்ம opposite கம்பெனி Sales ஐ எப்படி கொறைக்கிறது. (உன் தமிழ்ல தீய போட்டு கொளுத்த) இதெல்லாம் ஒருமேட்டராடா, ஒரு இஸ்கூல் பொண்ணு மொபைல் வாங்கி அது எடுத்து இருக்கிற செல்பி போட்டாவ register செய்யணும்னு சொல்லுவோம். ‘Expressions are not clear’ அப்படீன்னு ஆகிடும். அவ்வளவுதான்

4.

யோவ், அறிவு இருக்கா உனக்கு, facial expressions register செய்ய ஆள் அழைச்சிகிட்டு வான்னா, கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆனவன கூட்டிகிட்டு வந்து இருக்கியே. இவனெல்லாம் வச்சி ஒரே ஒரு expression கூட எடுக்க முடியாதுன்னு உனக்கு தெரியாதா?

5.

ஏங்க, நாங்க கேமிரா வச்சி expressions எல்லாம் படம் புடிக்கிறோம். நீங்க Professional photographer ஆக இருக்கலாம். அதுக்காக Front camera எத்தனை MB, rear camera எத்தனை MB Sony’s IMX 214 13MP Exmor RS stacked image sensor இருக்கா, Auto focuses 0.3 seconds ல முடியுமான்னு கேட்கிறது நியாயம் இல்லீங்க.

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

மாணவன்:
சாங்கிய மதத்தின் ஒரு பிரிவினர்உலகத்திற்கு முதல் காரணம்பிரகிருதி“‘, அது தன்னைத்தானே தோற்றுவிக்கும் என்று கூறுகின்றனரே, அஃது எவ்வாறு?
ஆசிரியர்:
அறிவில்லாத பொருள் தானே செயல்படுவது இல்லை. எனவே உலகம்  செய்படுகிறது எனில் , அஃது அறிவு பெற்ற ஒரு கர்த்தாவினால் தான் நிகழ்த்தப்படுகிறது. எனவே அதை நடத்துபவன் பேரறிவும் பேராற்றலும் பெற்றவனாகவே இருக்க முடியும்.
மாணவன்:
அறிவு அற்றவைகளுக்கு செயல்பாடுகள் இல்லை எனில் எவ்வாறு காந்தம் இரும்பை ஈர்க்கிறது. நஞ்சு பற்றி இடம் இல்லாமல் எல்லா இடங்களுக்கும் பரவுகிறது.
ஆசிரியர்:

காந்தத்தையும், இருப்பையும் ஒருவன் கூட்டுவிக்கும் போதே அது ஈர்க்கப்படும். நஞ்சு பரவுதல் உயிர் உள்ள உடம்பின். எனவே அறிவில்லாத பொருள்கள் செயல்படா.
மாணவன்:
நீங்கள் குறிப்பிட்டது போல் உயிர்கள் அறிவுடைப் பொருள் எனில் அவைகள் உலகிற்கு கர்த்தாவாகுதல் என்பது சரியா?
ஆசிரியர்:
நிச்சயம் இல்லை. உயிர்கள் உடம்பை பெற்றபின்னரே முழுமை பெறும் தன்னை உடையதாகும். உடம்பு இல்லா உயிர்கள் மற்றொரு உடம்பை தோற்றுவிக்காது. எனவே பேரறிவு உடைய இறைவனே உலகிற்கு கர்த்தா.

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 23/25 ஏகபாதர்

வடிவம்(பொது)
·   உருவத்திருமேனி
·   வாமதேவ முகத்திலிருந்து  தோன்றியவர்
·   ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன், பிரம்மா, விஷ்ணு என்ற ஐந்து மூர்த்திகளும் ஊழிக்கால பிரளயத்தில் ஒடுங்கி ஒரே உருவத்தில் காட்சியளிக்கும் மூர்த்தம்
·   வலது கை – அபய முத்திரை
·   இடது கை – வரத முத்திரை
·   பின்கைகளில் மான், மற்றும் ஆயுதம்
·   ஆடை – புலித்தோல்
·   கழுத்து – மணிமாலை
·   ஜடாபாரத்தில் சந்திரன் மற்றும் கங்கை
வேறு பெயர்கள்
·         ஒரு பாதன்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
 
·         திருக்காளத்தி – மலைப்பாறை புடை சிற்பங்கள்
·         திருவண்ணாமலை கோயில்
·         திருவொற்றியூர்
புகைப்படம் :  ta.wikipedia
(வேறு குறிப்புகள் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

2038 – உணவகங்கள்

              (இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)
1.
என்னா சார், சாப்பாட்டு டோக்கனோட ஜெலுசில் மருந்து தரீங்க.
எங்க ஒட்டல் சாப்பாடு சாப்பிட்டா வயறு சரியில்லாம போகும். அதுக்குத் தான் இந்த ஏற்பாடு. அப்புறம் எப்படி எங்க மெடிக்கல் ஷாப்பை நடத்துறது?
2.
என்னா சார், ரவா தோசையோட பூதக்கண்ணாடி  தரீங்க.
அத வச்சித்தான் நீங்க தோச எங்க இருக்குன்னு கண்டுபிடிக்கணும்,
3.
எதுக்கு இன்சூரன்ஸ் கம்பெனிக்காரங்க எல்லாம் ஓட்டல் வாசல்ல உக்காந்து இருக்காங்க?
ஒவ்வொருத்தர் ஒவ்வொரு ஹாஸ்பிடலோட ரெப்ரசன்டேட்டிவ். குடுக்குற காசுக்கு தகுந்த மாதிரி சாப்பிட்ட ஒடனே ஆர்யபட்டா ஹாஸ்பிடல் மாதிரி  ஹாஸ்பிடல்ல சேர்ப்போம்.
4.
அடுத்த தடவைல இருந்து கார்த்திகேயன் ஒட்டலுக்கு சாப்பிட போகக்கூடாதுடா?
ஏண்டா?
இல்லடா, ஊசி பின் முனைய கரண்டியா மாத்தி வச்சிருக்காங்க, அதால சாம்பார் ஊத்ராங்க. இன்னும்         கொஞ்சம் வேணும்னா, கைய கழிவிட்டு Rs. 10312.21 க்கு பில் வாங்கிகிட்டு வரச்சொல்றாங்க.
5.
என்னா சார், சாப்பாட்ல உப்பு, ஒரப்பு ஒண்ணுமே இல்ல.

சன்யாசத்துக்கு முதல் நிலை எங்களது ஓட்டல் அப்படீன்னு போர்டு எழுதி போட்ருக்கோமே, அத பாக்கலயா நீங்க.

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 22/25 திரிபாதர்

வடிவம்
இரண்டு சிரசு
நாலு கொம்புகள்
ஏழு புஜம்
மூன்று பாதம்
வேறு பெயர்கள்
முப்பாதன்
திரிபாதத்ரி மூர்த்தி
இதரக் குறிப்புகள்
பிரளயத்தின் முடிவில் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, ருத்ரர்கள் மகேஸ்வரனிடத்தில் லயமாகும் நிலை திரிபாத மூர்த்தி ஆகும்.
சரியை, கிரியை, யோகம் அனுஷ்டிக்கும்படி செய்யும் வடிவம்.
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
மாமல்லபுரம் வடக்கு சுவர் சிற்பம்

(வேறு குறிப்புகள் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – மாக்கான்

 
 
இது சுமாராக 30 வருடங்களுக்கு முன்பு நடந்ததாக இருக்கலாம்.
மதியம் 12 மணியில் இருந்து 1 மணிக்குள் ஒருவ(ன்)ர் வருவார். எங்கிருந்து வருகிறார், எங்கு அவருக்கு வீடு, அவருடன் யார் யார் இருக்கிறார்கள என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.
மேல் ஆடை தூய வெண்மையாக இருக்கும்.வேட்டி சற்றே வெளுத்த காவி. கைகளில் மிக சுத்தமான ஒரு பித்தளை பாத்திரம். (நிச்சயம் 5 கிலோ இருக்கும்.கிட்டத்தட்ட பாய்ஸ் படத்தில் செந்தில் வைத்திருக்கும் பாத்திரம் போல).
நாங்கள்( 3 பேர்) அவருக்கு வைத்த பெயர் ‘மாக்கான்’. அந்நாளில் அதன் அர்த்தம் தெரியாது.
எல்லா வீடுகளுக்கும் செல்ல மாட்டார். நிச்சயமாக 4 வீடு மட்டுமே. அதுவும் தினசரி அந்த 4 வீடுகளில் மட்டுமே வாங்குவார். அந்த 4 வீட்டிலும் மறுக்காமல் தினமும் உணவளிப்பார்கள்.
இரவில் மிக மெல்லியதாக ஒலிக்கும் வானொலியின் குரலை ஒத்திருக்கும் அவர் குரல்.’அம்மா சோறு போடுங்க‘  இதுவே அவரிடம் இருந்து வரும் அதிகப்படியான வார்த்தைகள்.
இரண்டு மூன்று அறைகள் இருக்கும் வீடுகளில் சில நண்பர்களுடன் ஒளிந்து கொள்வேன். யாருக்கும் கேட்காமல் எல்லோரும் சேர்ந்து கத்துவோம். ‘அம்மா சோறு போடுங்க‘. சத்தம் அதிகமானால் வீட்டு பெண்களிடம் இருந்து அடி விழும்.
சில நாட்களில் கைகளில் இருக்கும் குச்சியால் விரட்ட வருவார். பல நாள் எதுவும் செய்ய மாட்டார்.
 
மூன்று வருடங்கள் தொடர்ந்து அவரை பார்த்திருக்கிறேன்.
பிறகு
அவரைக் காணவில்லை.
இன்றைக்கும் யாராவது யாசித்தால் இந்த ஞாபகம் தவிர்க இயலாதாக இருக்கிறது. எவ்வித காரணும் இன்றி இன்று உங்கள் நினைவு.
நீங்கள் எவ்வடிவத்திலும் இருக்கலாம். என் செய்களுக்காக மானசீகமா மன்னிப்பு கோருகிறேன். 
ஏனெனில் நீங்கள் ‘ப்ரம்மம்’.
புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்


மாணவன்

பிரமாணங்கள் குறித்து இன்னும் விளக்க வேண்டும்.
ஆசிரியர்

குடமாய் தோன்றும் பொருள் முன்பு மண்ணில் இருந்தே தோன்றியது. ஆடையாய் தோன்றும் பொருள் நூலில் இருந்தே தோன்றியது. எனவே சூன்யத்தில் இருந்தோ அல்லாதவற்றில் இருந்தோ எந்தப் பொருளும் தோன்றவில்லை. உள்ள பொருளே நிலை மாறியும் வடிவம் மாறியும் வரும். (Energy cannot be created. One form of energy can be converted to another form of energy – Ex. Kinetic energy to Static energy என்பது சிந்திக்கத் தக்கது.) இதுவே சைவ சித்தாந்தத்திற்கு அடிப்படை. இதையேமருவுசற் காரியத்தாய்என உமாபதிச் சிவாச்சாரியார் சிவப்பிரகாச நூலில் குறிப்பிடுகிறார்.
மாணவன்

தோன்றிய பொருள் தோற்றத்திற்கு முன்னும் உள்ளதுஎன்பதன் பொருள்காணப்படாத நுண்நிலையில் உள்ளதுஎன்பதன் பொருள் உணர்ந்து கொண்டேன்.எனவே உலகத்தை உள் பொருள் எனத் தயங்காது கொள்வேன்.
காரியப் பொருள்களுக்கு கர்த்தா இன்றியமையாதது
மாணவன்

உலகம் நுண் நிலையில் இருந்து பருநிலைக்கு தோன்றுகிறது எனக் கொண்டால் உலகம் உள் பொருள் என்பதற்கும் அது தானாக தோன்றாமல் அதை தோற்றுவிக்க ஒரு கர்த்தா வேண்டும் என்பது எங்கனம்? ‘

ஆசிரியர்

இல்லாதது தோன்றாது’ என்பது போலவே ‘அதை தோற்றுவிக்க ஒரு கர்த்தா வேண்டும்’ என்பதே உண்மை.


மண், நூல் ஆகியவை காரணப் பொருள்; குடம், ஆடை போன்றவை காரியப் பொருள். மண், நூல் போன்றவை தானே மாற்றம் கொள்ள இயலாது. அதை கூட்டுவிக்க குயவனும், கோலிகனும் தேவை. எனவேஉள்ளதாய் நின்று தோன்றும் பொருள்கள் யாவும் செய்வோனை உடையன‘ . அதுபோலவே உலகத்தை தோற்றுவித்ததற்கு ஒரு கர்த்தா தேவை.

எனவே ஒரு காரியம் நிகழ்த்தப்பட வேண்டுமாயின்முதற்காரணம், துணைக்காரணம், நிமித்தக்காரணம்என மூன்றும் தேவை. குடத்திற்கு மண் முதற் காரணம், தண்டச் சக்கரம் துணைக் காரணம், குயவன் நிமித்த காரணம். அதுபோலவே உலகத்திற்கு மாயை முதல் காரணம், கடவுளது ஆற்றல் துணைக் காரணம், கடவுள் நிமித்த காரணம்.

Loading

சமூக ஊடகங்கள்

2038 – Neuron Repair

·   Scientists Connect Neurons in the Lab for the First Time
·   Injuries to the central nervous system — the brain and spinal cord — are particularly devastating because the body doesn’t regenerate neurons to repair connections between vital circuits and restore function. In other words, the damage is permanent or even fatal.
·   A team artificially connected two neurons using an atomic force microscope and tiny, polystyrene spheres.
·   Peter Grutter, likened the process to pulling a piece of chewing gum apart. In this case the gum, or axon, was roughly 1/100 the width of a human hair.
              (இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)
1.
ஏம்பா, ஏதாவது கட வக்கிலாம்னு இருக்கேன். Neuron Repair கட வக்கலாமா?
அட ஏம்பா அந்த பஞ்சர்  ஒட்ர  கட வேண்டாம்பா?
2
எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் நியூரான் வழியாக செலுத்த உதவும் மின்சாரம் இலவசமாக 24 மணி நேரமும் வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
3.
மருத்துவமனையில்
சார், அந்த நியூரான் மாற்று
500 கோடி குடுங்க சார்
யோவ், அது என்னான்னு கேக்க வந்தேன்.
நாங்க தலவலின்னு வந்தாலே 10 கோடி வாங்குவோம். நீ வேற இதப்பத்தி கேக்றீயா. அதான். (Information is wealth)
4.
நோயாளி
சார், கொஞ்சம் மெதுவா சார், நீங்க செய்ற operation ல Axon சரியா connect ஆகல.  Dendrites affect ஆகி nucleus damage ஆகிடுச்சி
மருத்துவர்
என்னயா சொல்ற? உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?
நோயாளி
நீங்க இப்ப படிச்சிட்டு வந்து இருக்கீங்க. நானெல்லாம் அந்த காலத்திலேயே Artificial Intelligence ம் Neural networks ம் அரியர் வச்சி பாஸ் பண்ணியிருக்கேன்.

5.
என்னா சார், தீடிர்னு இந்த மாசம் 1,00,000 கரண்ட் பில் ஏறி இருக்கு.
அது நீங்க Neuron Repair செய்தீங்க இல்ல. அதுக்கு recharge amt..
அப்ப போனமாசம் எங்க தாத்தாவுக்கு 50000 தான் வாங்கினீங்க?
வயசானவங்களுக்கு சார்ஜ் கம்மியாத்தான் ஆவும். அதான்.
 
Reference 
http://blogs.discovermagazine.com/d-brief/2016/02/09/scientists-connect-neurons-in-the-lab-for-the-first-time/#.VsbrjrR97IU

Continue reading “2038 – Neuron Repair”

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

மாணவன்:
பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருளுக்குரிய பிரமாணங்களை கூறும் முன்  அவற்றின் இயல்புகள் பற்றிக் கூற வேண்டும்.
ஆசிரியர்
பிரமாணம்  வடசொல், அளவை  தமிழ்ச்சொல். அளப்பவன்(பிரமாதா– உயிர் அல்லது ஆன்மா), அளத்தற்கருவி (பிரமாணம்  உயிரின் அறிவாற்றல் அல்லது   ஆன்ம சிற்சக்தி), அளக்கப்படும் பொருள்(பிரமேயம்)

பதி, பசு மற்றும் பாசங்கள்) ஆகிய மூன்றாலே அளத்தல் நிகழும்.
புறப் பொருள்களை அளக்க கருவிகள் இருத்தல் போல், அகக் கருவிகளைஅளக்க அவரவர் அறிவாற்றலே பிரமாணமாகிறது.
தார்க்கியர்கள்(தருக்க நூல் சார்ந்தவர்கள்) கண் முதல் உடல் வரையிலான 5 வகை பொறிகளையே (பஞ்ச இந்திரியங்கள் ) பிரமாணம் என்பார்கள். பஞ்ச இந்திரியங்களும் வேறு ஒரு பொருளாகிய அறிவால் அளக்கப்படுவதாலும், தான் மற்றொன்றினாலும் அளக்கப் படாததுமாகவும், பிறவற்றை அளப்பதாகவும் இருப்பதே உண்மை அளவை. எனவே  தார்க்கியர்கள் கருத்து பொருந்தாது.
மாணவன்:

சைவ சித்தாந்தம் கூறும் இன்றியமையாத பிரமாணங்கள் எவை?

ஆசிரியர்

எண்
பிரமாணம்
விளக்கம்
1
காட்சிஅளவை(பிரத்தியட்சப் பிரமாணம்)
கண்ணால் கண்டேன்
2
கருதலளவை(அனுமானப் பிரமாணம்)
புகை இருப்பதால் நெருப்பு இருக்க வேண்டும்
3
உரையளவை/ஆகமப் பிரமாணம்(சப்தப் பிரமாணம்)
நான் இவரை மதிப்பவன். அதனால் இவர் கூறியதால் செய்கிறேன்
4
இன்மையளவை(அபாவப்/அனுபலத்திப்  பிரமாணம்)
முயற் கொம்பு
5
பொருளளவை(அருந்தாப்பத்தி பிரமாணம்)
இரண்டும் ஒரே அளவாகத் தான் இருக்க வேண்டும்
6
உவமையளவை(உபமானப் பிரமாணம்)
தாமரை முகம்
7
ஒழிபு அளவை(பாரிசேடப் பிரமாணம்)
மல்லிகை வெள்ளைநிறமுடையது என்பதால் அவைகளில் கருமை நிறமுடைய பூக்கள் இல்லை என்பது துணிபு
8
உண்மையளவை(சம்பவப் பிரமாணம்)
இறைவனின் தனிப்பெரும் கருணையினால் இது நிகழ்கிறது
9
வழக்களவை( ஐதிகப் பிரமாணம்)
கார்த்திகைக்குப் பின் கடுமழை இல்லை
10
இயல்பு அளவை( சுபாவப் பிரமாணம்)
சித்திரை மாதத்தில் வெப்பம் இயல்பை விட அதிகம்
  
இவைகளில் முதல் மூன்றும் பிரதானமானவை. மற்றவைகள் அவைகளின் வகையே.

Loading

சமூக ஊடகங்கள்

படைப்புகள் – அகம் புறம் – ஒரு சிறு பார்வை

(எவரையும் முன்வைத்து எழுதப்படவில்லை)
 
அகம்
 
·   நாம எல்லாம் எழுதினா போட மாட்டாங்க சார். அவங்களுக்குன்னு ஒரு குருப் வச்சிருக்கிறாங்க, அவன்க எழுதினாத்தான் போடுவாங்க.
·   நானும் 15 வருஷமா எழுதிகிட்டுத்தான் இருக்கேன் சார். ஒரு பயலும் மதிக்கிறதே இல்லை சார்.
·   சார், இவன்க எல்லாம் உள்ளுர் எழுத்தாளர்களை கொண்டா மாட்டாங்க, ரஷ்யா எழுத்துக்களை மட்டும் கொண்டாடுவாங்க.
·   முழு நேர படைப்பாளிகள்ன்னு யாரும் இல்ல சார். பொழுது போக்குக்காக படைக்கிறாங்க சார். அப்புறம் என்ன படைக்க முடியும்?
·   ஒரு வார பத்திரிக்கைக்கு ஒரு கவிதை எழுதி அனுப்சேன். நல்லா இருக்கு, நல்லா இல்ல அப்படீன்னு கூட பதில் அனுப்ப மாட்டேங்கறாங்க சார்.
·   எல்லாரும் ஈகோ புடிச்சவங்களா இருக்காங்க சார். அவன் தான், அவன் குருப்புதான் ஒஸ்தின்னு நினைக்கிறாங்க.
 
புறம்
 
·   படைப்பாளிகள் யாருமே படிக்கிறதே இல்ல சார். நினைச்சத எல்லாம் எழுதினா எப்படி சார் பத்திரிக்கையில போட முடியும்.
·   தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனோ இல்லையோ, பேனா புடிச்சவன் எல்லாம் கவித, கட்டுரைன்னு எழுத ஆரம்பிச்சா என்ன செய்ய முடியும்எல்லாருக்கும் சுஜாதான்னு நெனப்பு சார்.
·   இலக்கிய பத்திரிக்கைன்னு போட்டேன் சார். 1000 கவிதை வந்திருக்கிறது. என்னா செய்யறது சொல்லுங்க.
·   கதை, கவிதை கட்டுரைன்னு எழுதறாங்க சார், வல்லினிம் ஒற்று, மெய் எழுத்து மிகும் இடம், மிகா இடம் எதுவுமே தெரியல, அப்புறம் எப்டி நாங்க படிச்சி பப்ளிஷ் பண்ண முடியும்.
·   இருக்கும் ரோஜா தோப்பில் அழகான் ஒரு செடி நீ மட்டுமே – இப்படி கவிதை எழுதினா என்ன சார் செய்யறது? (காதுகளில் மெதுவாகஅழகான்அழகானன்னு கூட தெரியல. அதுல கூட தப்பு பார்த்தீங்களா )
·   ஒரு புஸ்தகம் போடறது எவ்வளவு கஷ்டம்ன்னு இவன்களுக்கு தெரிய மாட்டேங்குது. அதான் சார் ப்ராபளமே
·   லாசரா வோட ஜனனி படிச்சிருக்கிறியா, குபாரா வோட விடியுமா படிச்சிருக்கிறியா, 4 படைப்பாளிகள் பேரை சொல்லி கேட்டா இவங்கள் எல்லாம் யாரு அப்படீங்கறாங்க. என்ன செய்ய சொல்றீக.
·   புஸ்தகம் போட்டா Review பண்றேன்னு ஒரு குருப் எல்லாதையும் வாங்கிட்டு போயிடுது. இதுல என்னா மிஞ்சும்ன்னு நினைக்கிறீங்க?
TRB Rating கம்மியாக இருப்பதால் இந்நிகழ்ச்சி இத்துடன் முடிவடைகிறது.
 
புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

2016 – பொங்கல் – பயணவழிக் குறிப்புகள் – அகம் புறம்

சென்னையில் இருந்து சிதம்பரம் வரை நின்று கொண்டே பயணம்
அகம்
·   நின்று கொண்டே வந்ததில் 10 வயது சிறுவர்களும் அடக்கம்.
·   பெரும்பாலானவர்வகள் மொபைலில் whatsapp பார்த்துக் கொண்டே வந்தார்கள்.
·   சிலர் Tab ல் சிவாஜி படப்பாடல், சண்டி வீரன் படப்பாடல் எனப்பார்த்துக் கொண்டே வந்தார்கள். இன்னும் சிலர் எட்டிப்பார்த்து அந்த பாடல்களைப் பார்த்துக் கொண்டே வந்தார்கள்.
·   சிலர் bubbles விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
·   ‘பய புள்ளங்க என்னமா பேர் வைக்குதுங்கடா, Darling, Chellam’ என்று சிறு மாணவர்கள் குழு பேசிக் கொண்டு வந்தது.
·   அடுத்த இருக்கையில் இருப்பவர்களுக்கு தனது சிறு பிஸ்கட் போன்றவற்றை கூட தராமல் மற்றவர்களை பற்றி நினைக்கக் கூட மனமில்லாமல் தானே உண்டார்கள்.
·   பேருந்தில் இருக்கும் எல்லா பைகளையும் விடுத்து ஒரே ஒருவரிடம் இருக்கும் ஒரு பையை போலீஸ்கார் சோதனை செய்கிறார். அதில் ஒரு Full. (அதை இழக்கையில் அவன் சலனமே கொள்ளவில்லை ) –  பாவம் அவன் மனசு என்ன பாடு பட்டிருக்கும் என்று சிலர் பேசிக் கொண்டு வந்தார்கள்.
புறம்
·   ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 25 கார்கள் ஒரு பேருந்தினைக் கடக்கின்றன.
· Toyota Fortuner  போன்ற கார்களில் பின்னிருக்கையில் ஒருவர் மட்டுமே அமர்ந்திருக்கிறார்கள்
·   Alto போன்ற கார்களில் சராசரியாக ஓட்டுபவர் தவிர்த்து 6 பேர் அமர்ந்திருக்கிறார்கள்.
·   பெரிய சொகுசுக் கார்களில் பெரும்பாலும் அன்றைய தினசரிகள் கலைந்து கிடக்கின்றன.
· ‘‘5 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த சென்னை போலீஸ்காரர்போன்றவை செய்திகளில் முதன்மையான செய்திகளாக படிக்கிறார்கள்
· சிறிய மற்றும் விலை குறைவான கார்களில் சிறிய தெய்வங்களின் விக்ரகங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் 2ல் இருந்து 3 முழம் வரை சாமந்தி மற்றும் மல்லிகை போன்ற மாலைகள் தொங்குகின்றன.
· விலை குறைவான கார்களில் மனைவி ஓட்டுனர் இருக்கைக்கு அருகினில் அமர்ந்திருக்கிறார், குழந்தைகள் dash board ல்  சாய்ந்துதூங்குகின்றன. பின்னிருக்கை காலியாகவே இருக்கிறது.
·   பெரும்பாலும் காரில் பயணிப்பவர்கள் பேருந்தில் இருக்கும் கூட்டதை கண்டு வியப்புற்று அது குறித்து பேசிச் செல்கிறார்கள்
·   2 சக்ர வாகனங்களில் குறைந்தது 3 பேர் பயணிக்கிறார்கள். சில வாகனங்களில் குடும்ப உறுப்பினர்கள் 5 பேரும் பயணிக்கிறார்கள். இது நீண்ட தொலைவு பயணம் என்பது அவர்களுக்கு மறந்து விடுகிறது.

புகைப்படம் :  Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

ஆதி சித்தனின் அரங்கேற்றம்

நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க

சம்பவம்

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது வாசுகி ஆலகால விஷத்தை வெளிப்படுத்தியது. அதனை ஈசன் உண்டான். சத்தி தடுத்து நிறுத்தியதால் அது கழுத்தில் தங்கி விட்டது.
விளக்கம்

ஈசனானவர் எங்கும் நிறைந்தவர், பிறப்பிலி. மனித வாழ்வின் பிறப்பு மற்றும் இறப்பினை அவர்களின் மூச்சுக் காற்றே தீர்மானிக்கிறது.கழுத்தின் கண்டத்திற்கு மேல் வாசி பயில்பவர்கள் இறை தன்மையினை அடைவார்கள். இவர்களுக்கு பிறப்பில்லை. கழுத்துக்கு கீழே வாசி பயில்பவர்கள் உடல் ரீதியான மற்றும் மனரீதியான முன்னேற்றம் அடைவார்கள். இவர்களுக்கு பிறப்பு உண்டு.

இறை தன் நிலையிருந்து என்றும் வழுவாதிருக்க வாசியோகத்தின் முழுமையினை வெளிப்படுத்த ஈசனும் இறைவியும் நடத்திய நாடகம் அது.

மேலும் அறிய விரும்புவர்கள் குரு முகமாக அறிந்து கொள்க.

புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

2038 – மருத்துவமனைகள் – ஒரு வழிப் பாதை

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.

ABC மருத்துவமனை
சார் என் பையனுக்கு தலைய வலிக்குது. ஏதாவது மருந்து குடுங்க சார்.
உங்களுக்கு எந்த ஏரியால வீடு இருக்கு, அண்ணாநகர், அசோக் நகர், திண்டிவனம்?
சார் நான் என்ன பேசரேன், நீங்க என்ன பேசுறீங்க.
அண்ணாநகர்ல வீடுன்னா Suit ல வச்சி பாப்போம். அசோக் நகர்னா ICU ல வச்சி பாப்போம், திண்டிவனம்னா OP ல வச்சி பாப்போம். எப்படியும் நீங்க சொத்த எழுதி கொடுத்துத்தானே ஆவணும்
2.
என்னா சார் இது சளி புடுச்சி இருக்கின்னு வந்தேன். அதுக்கு பில் Rs..144,50,00,000 போட்டு இருகீங்க.

அதுவா ஒரு Lamborghini Aventador book பண்ண காசு இல்லாம இருந்தேன். நீங்க வந்துடீங்க. (Current price Lamborghini Aventador at Rs.4,50,00,000)

3.

சார் இந்த வருஷம் நம்ம மருத்துவமனைக்கு நல்ல income  வந்திருக்கு. IT மாட்டாம இருக்க என்ன செய்யறது சார்

வர மாசத்தில் இருந்து X-Ray தனி யூனிட், Blood test தனி யூனிட். மெடிக்கல் ஷாப்பை லஷ்மி மெடிக்கல்னு மாத்திடுவோம். பாவம் எல்லாம் சாமிக்கு போயிடும். அந்த ICU உள் வாடகைக்கு விட்டுடுவோம். ஏன்னா அது பிரச்சனை புடிச்சது ஒரு பேஷன்ட் கிட்டே இருந்து நமக்கு 1 கோடி நமக்கு வரணும் அப்படீன்னு மட்டும் சொல்லிடுவோம்.

4.சார் உங்க மெடிக்கல் இன்சூரன்ஸ்ல என்ன வசதி?

ஹாஸ்பிட்டல்ல எல்லா செலவையும் ஏத்துப்போம். உசுரு போச்சுன்னா சுடுகாட்டு செலவையும் நாங்களே செஞ்சிடுவோம். அதுல பாருங்க இப்ப சுடுகாட்டுச் செலவெல்லாம் இப்போ ரொம்ப அதிகம் பாருங்க.

5.

சார் எப்படி பாத்தாலும் பில் 50,00,000 வரலயே சார், என்ன செய்ய?
இதெல்லாம் ஒரு மேட்ரே இல்ல,ரூம் சார்ஜ் 10,00,000 போடு. செலைன் ஊசி போட 10,00,000 போடு. ஊசி எடுக்க 10,00,000 போடு. டுயுட்டி டாக்டர் சார்ஜ்  5,00,000 போடு, டுயுட்டி நர்ஸ் சார்ஜ்  3,00,000 போடுடுயுட்டிஆயா சார்ஜ்  2,00,000 போடு, பெட் சார்ஜ் 7,00,000 போடுஎல்லா டாக்டருக்கும் விசிட் சார்ஜ்ன்னு போட்டு ஒரு 12,00,000 போடுஅப்படியே அட்மிஷன் சார்ஜ்  2,00,000 போடுமொத்தம் எவ்வளவு ஆச்சு.
மொத்தம் எவ்வளவு ஆச்சு.
சார் 61,00,000 வருது சார்.
சூப்பர் பில்ல போட்டு அவன் கையில கொடு.

புகைப்படம் : SLKumar





Loading

சமூக ஊடகங்கள்

2038 – Digital Amnesia – உயர் தொழில் நுட்பம் சார்ந்த மறதிகள்

Reality

·   The continuous progress and evolution of technology in terms of hardware, software, operating systems and methods of digital encoding guarantees the possibility that digital amnesia will become a problem in the near future. There are many versions of programs and applications that have been considered as a standard for some time, but in the end they will always be replaced by newer versions with upgraded functions. The files that are meant to be edited or read by an old program will become unreadable if used with newer programs.
·   Smart phones and tablets are eroding our ability to remember.
·   Could be called as massive destruction of information!
·   Study conducted – UK, France, Germany, Italy, Spain, Belgium, the Netherlands and Luxembourg
·   Total adults – 6000

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

Proof

1.
Doctor : சார், உங்களுக்கு வந்திருக்கிறது digital amnesia
Patient  : அப்டீன்னா என்னா சார்
Doctor : The continuous progress and evolution of technology, technology technology
Patient  : சொல்லுங்க சார்
Doctor : இருப்பா எனக்கும் மறந்து போச்சு

2.
Employee : சார் எனக்கு எட்டு மாசமா சம்பளம் குடுக்கல சார்.
IT Manager : எனக்கு  Digital Amnesia இருக்கு. அதால உனக்கு கடைசியா எப்ப சம்பளம் குடுத்தேன்னு தெரியல

3.
மனைவி : போன மாசம், செலவுக்கு 121.37 காசு குடுத்தீங்க. இந்த மாசம் 23.57 காசு தான் குடுக்குறீங்க. கேட்டா உங்களுக்கு Digital Amnesia அப்படீன்னு சொன்னா எப்படி?

4.
Digital Amnesia தொல்லையில் இருந்து விடுபட எங்களிடம் உங்கள் மூளைத் தகவல்களை சேகரியுங்கள். For 1 TB – just Rs.100/- P/M. 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு discount போக Rs. 250/- P/M.. ஆயுள் சந்தாவிற்கு நேரடியாக தொடர்பு கொள்ளவும்.

5.
‘நான் யார்’ என்று விடை அளிக்க முடியா கேள்விக்கு விடை தேடுகிறது மதம். ‘நான் யார்’  என்று அறிய முடியாதவர்களை   Digital Amnesia வால் பாதிக்கப்பட்டவர்கள் என்கிறது மருத்துவத்துறை. எனில் நாம் முடிவை நெருங்கிக் கொண்டு இருக்கிறோம் என்பதே இதன் பொருள். – இது போன்று நிறைய பயன் உள்ள தகவல்களைப் பெற அணுகவும். மருத்துவராக இருந்து சாமியாக மாறிய செல்வி சூர்பணகை.

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 19

மனைவிஏங்கஇனிமே நான் உங்களோட சண்டையே போட மாட்டேன்.
கணவன் : ????
சற்று நேரத்திற்கு பிறகு
மனைவி : நீ எல்லாம் மனுஷனாகடலை பருப்பு வாங்கிகிட்டு வரசொன்னாதொவரம் பருப்பு வாங்கி கிட்டு வந்து இருக்கியேஎன்னாஉங்க ஆத்தா உன்னை பெத்து வச்சிருக்கிருகாளோ?
கணவன் : கொஞ்சம் நேரத்துக்கு முன்னால தானே சண்ட போட மாட்டேன்னு சொன்ன?
மனைவி : ஆமாசொன்னந்தான்இன்னைக்கு தேதிய பாரு. 01-Apr-2015
செத்தாண்டா சேகரு.
———————————————————————————————————————————————————
கன்னியாக்குமரி – 15 வது மொட்டை மாடியில் 2 நண்பர்கள்
வீட்ல ரொம்ப பிரச்சனடா
என்னடா ஆச்சு
மொத நாளு தண்ணி பிரச்சனைபக்கெட்ல தண்ணி புடிச்சி வைங்க அப்படீங்கறாஅடுத்த நாளு பக்கெட் தண்ணில கொசு முட்டை போடுதுபுடிக்காதீங்க அப்படீங்கறாஎன்னடா செய்யறது.
செத்தாண்டா சேகரு.
———————————————————————————————————————————————————
சார்உக்காருங்கஅந்த கம்பில உக்காரலம் வா சார் வா. 5 பேர் தான் —உள்ள உக்காந்து கீராங்கஇவன் ஆட்டோவில் மினி பேருந்து 
கூட்டத்தை ஏற்ற முயற்சிப்போர் சங்க தலைவன்.
———————————————————————————————————————————————————
உலகின் உன்னதமான நிமிடங்கள்
ATM ல் எல்லா details ம் enter செய்து மிஷினில் பணம் count செய்து வெளியே வரும் நிமிடங்கள்.
———————————————————————————————————————————————————
பூரி மசால்ல மசால் இருக்குமசால் தோசைல மசால் இருக்குஆனா மசால் வடைல மசால் இல்லையேஇவன் 10 மசால் வடையை ஒரே நேரத்தில் சாப்பிடுவோர் சங்கம்,
———————————————————————————————————————————————————
சந்தோஷத்த கொண்டாடுரத்துக்கும் காசு தேவையா இருக்கு., கஷ்டத்த கொண்டாடுரத்துக்கும்  காசு தேவையா இருக்கு.
.ம் – சரவணபவன் 2 காபி – 56 ரூ
Chandra park 2 பீர் – ரூ 450(Including tips).
என்னடா வாழ்க்கை இது?
———————————————————————————————————————————————————
எனக்கும் ஜூஸ் கடையில் இருக்கும் பெண்ணுக்கும் நடைபெற்ற உரையாடல்
தர்பூசணி ஜீஸ் ஒன்னு கொடுங்க
புரிலங்க.
தர்பூசணி ஜீஸ் ஒன்னு கொடுங்க
தெளிவா சொல்லுங்க
தர்பூசணி ஜீஸ் ஒன்னு கொடுங்க
….
Watermelon ஜீஸ் ஒன்னு கொடுங்க.
 Watermelon ஜீஸ்சாஅப்படி தெளிவா கேளுங்க சார்.
அட பிக்காளிப்பயலுகளா.
———————————————————————————————————————————————————
வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் வரை எந்த வாகனமும் செல்ல இயலா நிலை. 1 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கிறேன்எரிச்சலாக திரும்பி வெளியே பார்க்கிறேன்.
வெளியே நிற்கும் லாரியில் எழுதப்பட்டிருக்கிறது ‘தனிக்காட்டு ராஜா‘.
என் மனசுல இருந்த பாரம் எல்லாம் இறங்கி போச்சு.
———————————————————————————————————————————————————
IT ல் வேலை பார்ப்பவர்களை எளிதாக கண்டறியும் வழி(General)
31st : Lets go to Saravanabhavan machi
1st : மச்சான் ஒரு டீ சொல்லுடாகைல காசு இல்ல
———————————————————————————————————————————————————
ரயிலில் பயணம் செய்ய மிக வேகமாக  நடை மேடை மேல் நடந்து கொண்டிருக்கிறேன்.
முதலாவது பிளாட்ஃபாமில் இருந்து இன்னும் சில நிமிடங்களில்….ஒலித்துக் கொண்டிருக்கிறது.
டோய்ங்.,,, டோய்ங்.,,,  (Doppler effect )
ஓட்டமும் வேகமும் குறைகிறது.
யாருடைய தொலை பேசியிலோ Ring tone. அழகிய கண்ணேஉறவுகள் நீயே
வினாடிக்குள் உலகம் நிலைபெறுகிறது.
அந்த மனிதர் நகர்ந்து விட்டார்.
சுய நினைவு திரும்புவதற்குள் ரயில் சென்றிருந்தது.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!