சைவத் திருத்தலங்கள் 274 – திருஇரும்பைமாகாளம்

274

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருஇரும்பைமாகாளம்

 

  • காடுவெளி எனும் வெட்ட வெளியைக் குறிக்கும் கடுவெளிச்சித்தர் இத்தலத்தில் சிவனை எண்ணி தவம் செய்து கொண்டிருந்ததால், தவத்தின் காரணமாக மழை இல்லை என்று எண்ணி மாது ஒருவளை அனுப்பினான். அவள் உப்பும் காரமும் சேர்த்தஅப்பளத்தை அரச இலை போல் செய்து தை உண்ணச் செய்து அவரின் தவத்தை கலைத்தாள். சித்தர் அவனுக்காகவும், மக்களுக்காவும் மீண்டும் தவ வாழ்க்கையை தொடராமல்     அங்கேயே தங்கி சிவப் பணி செய்து வந்தார். பஞ்சம் நீங்கப் பெற்றப்பின் நடைபெற்ற திருவிழாவில் அம்மாதுவின் காற் சிலம்பு கீழே விழுந்தது. அந்த நடன நிகழ்ச்சி தடைபடக் கூடாதென்றெண்ணி, அச்சிலம்பை எடுத்து நடனமாதின் காலில் அணிவித்து விட்ட செயலைக் கண்ட மக்கள், சித்தரின் செயலை ஏளனம் செய்து நகைத்தனர். சித்தர் கோபம் கொண்டு இறைவனை நோக்கிப் பாட, ஆலயத்திலுள்ள மூலலிங்கம் வெடித்து 3 பகுதிகளாக சிதறியது. மன்னன் மன்னிப்பு கேட்டப்பின் சித்தர் மீண்டும் 1 பாடல் பாட  சிதறிய சிவலிங்கம் ஒன்று கூடியது.மன்னன் சிவலிங்கத்தை செப்புத்தகடு வேய்ந்து ஒன்றாக்கி வழிபட்டான்
  • மாகாளம் என்ற பெயருடன் விளங்கும் மூன்று சிவஸ்தலங்களில் இதுவும் ஒன்று. மற்றவை வடநாட்டிலுள்ள உஜ்ஜயனி மாகாளம், காவிரி தென்கரைத் தலமான அம்பர் மாகாளம்
  • கடுவெளி சித்தர் அரசமரத்தின் அடியில் தவம் செய்தபோது, அம்பாள் குயில் வடிவத்தில் இம்மரத்தில் தங்கியிருந்து சித்தரை கண்காணித்து, அவரது தவத்தின் மேன்மையை தன் குரலால் சிவனிடம் சொல்லியதால் அம்பாளின் நாமம் “குயில்மொழி நாயகி’
  • சிவனிடம் வரம் பெற்ற அம்பன், அம்பாசுரன் எனும் இரு அசுரர்கள் பார்வதி தேவியின் மீது ஆசை கொண்டதால். அவர்களை மகாகாளி அவதாரம் எடுத்து, தெற்கே மயிலாடுதுறைக்கு அருகே அம்பர் என்னுமிடத்தில் வதம் செய்தாள். இதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க தவம் செய்து தோஷம் நீங்கப் பெற்ற இடம்.
  • வீர சைவ மரபில் வந்த மகாகாளர் எனும் மகரிஷி பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இறைவன் மகாகாளநாதர்
  • கிரகங்கள் தம் மனைவியருடன் ஒன்றாக இருக்கும் நவக்கிரக சன்னதி
  • நடராஜர், கால் சற்று  கீழே மடங்கியபடி  சந்தோஷ  கோல அமைப்பு
  • விமானம் ஏகதள விமானம்

 

தலம் திருஇரும்பைமாகாளம்
பிற பெயர்கள் இரும்பை மாகாளம், திருவிரும்பை மாகாளம், இருஞ்சேரி , இலுப்பைவனம்
இறைவன் மாகாளநாதர், மகாகாளேஸ்வரர்
இறைவி மதுரசுந்தரநாயகி  குயில் மொழியம்மை
தல விருட்சம் புன்னை
தீர்த்தம் மகாகாள தீர்த்தம்
விழாக்கள் மகாசிவராத்திரி , மாசிமகம் , திருக்கார்த்திகை , பங்குனி உத்திரம்
மாவட்டம் விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 00 மணி முதல் இரவு 8 00மணி வரை

 

அருள்மிகு மாகாளேஸ்வரர் திருக்கோவில்

இரும்பை அஞ்சல், வானூர் வட்டம்

கடலூர் மாவட்டம், PIN 605010

+91- 413 – 268 8943, 98435-26601 , 94434-65502

வழிபட்டவர்கள் சுந்தரர் – ஊர்த்தொகை நூல்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், பட்டினத்தார்
நிர்வாகம்
இருப்பிடம் திண்டிவனம் – பாண்டி ( வழி : கிளியனூர் ) சாலை->  திருச்சிற்றம்பலம் கூட்ரோடு -> இரும்பை சாலையில் இருந்து சுமார் 2 கிமீ
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 274 வது தலம்

தொண்டை நாட்டுத் தலங்களில் 32  வது தலம்.

மாகாளநாதர்

மாகாளநாதர்

குயில் மொழியம்மை

 

குயில் மொழியம்மை

 

புகைப்படம் : தினமலர்

 

பாடியவர்          திருஞானசம்பந்தர்

திருமுறை         2

பதிக எண்         117

திருமுறை எண்    9

 

பாடல்

அட்டகாலன் றனைவவ் வினான்அவ் வரக்கன்முடி

எட்டுமற்றும் மிருபத்திரண் டும்இற வூன்றினான்

இட்டமாக விருப்பா னவன்போல் இரும்பைதனுள்

மட்டுவார்ந்த பொழில்சூழ்ந் தெழிலாரும் மாகாளமே.

 

பொருள்

 

மார்க்கண்டேய முனிவரொடு போராடிய காலனுயிரைக் கவர்ந்தவனும், இராவணன் பத்துத் தலைகளும் இருபது தோள்களும் நெரியுமாறு திருவடியை ஊன்றியவனும் ஆகிய சிவன் விருப்பமாக உறையும் இடம் தேனார்ந்த பொழில் சூழ்ந்துள்ளதுமான திருமாகாளமாகும்.

 

கருத்து

 

அட்ட – மார்க்கண்டேய முனிவரொடு போராடிய,

எட்டும் இருபத்திரண்டும்(8+22) – பத்துத் தலைகளும் இருபது கைகளுமாகிய முப்பதும்

மட்டு – தேன்

 

பாடியவர்          திருஞானசம்பந்தர்

திருமுறை         2

பதிக எண்         117

திருமுறை எண்    10

 

பாடல்

 

அரவமார்த்தன் றனலங்கை யேந்தி யடியும்முடி

பிரமன்மாலும் அறியாமை நின்ற பெரியோனிடம்

குரவமாரும் பொழிற்குயில்கள் சேரும் இரும்பைதனுள்

மருவிவானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே.

 

பொருள்

 

நாகத்தை தன் இடையில் அணிந்தவரும், தீயினை கையினில் ஏந்தியவரும், குயில்கள் வாழும் குரா மரங்கள் நிறைந்ததும், பிரமன், மால் ஆகியோரால் அடிமுடி அறியாதவாறு ஓங்கிநின்றதும்,வானோரும் மறையோரும் தொழும் இடம் பெரியோனின் திருமாகாளமாகும்.

 

கருத்து

ஆர்த்து – கட்டி ((ஆர்த்த பிறவி துயர் கெட..),   குரவம் – குராமரம் (மலைவசம்பு அல்லது குரவகம்)

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருஅரசிலி

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருஅரசிலி
·   அரச மரத்தை இறைவன் வீடாக கொண்டமையால் திருஅரசிலி(திரு+அரசு+இல்)
·   ருத்ராட்ச பந்தலின் கீழ் மூலவர் சிறிய பாணம், தாழ்வான ஆவுடையார்; தலையில் அம்பு பட்ட தழும்பு
·   மகர தோரணத்தில் தட்சிணாமூர்த்தி காலடியில் உள்ள முயலகன் இடதுபுறம் திரும்பி கையில் நாகத்தை பிடித்தவாறு காட்சி
·   வாம தேவர் எனும் முனிவருக்கு அரச மரத்தடியில் சுயம்புவாக காட்சி கொடுத்து சாபம்  விலக்கிய திருத்தலம்.
·   சத்திய விரதன் எனும் மன்னனுக்கு புத்திர பாக்யம் தருவதற்காக மான் வடிவில் காட்சி தந்து, அம்பு வாங்கி,  பின் மறைந்து லிங்க வடிவ காட்சி கொடுத்த இடம்.
·   வடிவமைப்பு –  சாளுவ மன்னன்
 
தலம்
திரு அரசிலி
பிற பெயர்கள்
ஒழுந்தியாப்பட்டு
இறைவன்
அரசிலிநாதர் ( அஸ்வத்தேஸ்வரர் , அரசலீஸ்வரர் )
இறைவி
பெரியநாயகி ( அழகியநாயகி )
தல விருட்சம்
அரசமரம்
தீர்த்தம்
வாமதேவ தீர்த்தம் ( அரசடித்தீர்த்தம் )
விழாக்கள்
வைகாசி விசாகம் 10 நாட்கள், மகாசிவராத்திரி , திருக்கார்த்திகை
மாவட்டம்
விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை,
அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில்
ஒழிந்தியாப் பட்டு – அஞ்சல்
வானூர் (வழி)
வானூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம் -605 109
04147 – 235472,295376, 9994476960
வழிபட்டவர்கள்
வாமேதவ முனிவர், சாளுக்கிய மன்னனான சத்தியவிரதன்,இந்திரசேனன், இந்திரசேனனின் மகள் சுந்தரி
பாடியவர்கள்
சிரவையாதீனம் கௌமார மடாலயம் ஸ்ரீ தண்டபாணி சுவாமிகள்
நிர்வாகம்
இருப்பிடம்
திண்டிவனத்தில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவு, புதுச்சேரியில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவு
திண்டிவனம் – பாண்டி சாலையில் ( வழி : கிளியனூர் ) தைலாபுரம் தாண்டி , ஒழுந்தியாப்பட்டு செல்லும் இடப்புற சாலையில் இருந்து சுமார் 2 கிமீ
திருவக்கரையில் இருந்து பாண்டி செல்லும் சாலை ( வழி : மயிலம் , வானூர் ) , திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு -> திண்டிவனம் சாலை -> கீழ்ப்புத்துப்பட்டு செல்லும் வலப்புறப்பாதை
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 273 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் 31 வது தலம்.
அரசலீஸ்வரர்
அரசலீஸ்வரர்
பெரியநாயகி
பெரியநாயகி
புகைப்படம் : தினமலர்
 
பாடியவர்          திருஞானசம்பந்தர்            
திருமுறை        2             
பதிக எண்         95          
திருமுறை எண்   8            
பாடல்
வண்ண மால்வரை தன்னை
மறித்திட லுற்றவல் லரக்கன்
கண்ணுந் தோளுநல் வாயும்
நெரிதரக் கால்விர லூன்றிப்
பண்ணின் பாடல்கைந் நரம்பாற்
பாடிய பாடலைக் கேட்டு
அண்ண லாயருள் செய்த
அடிகளுக் கிடமர சிலியே.
பொருள்

தான் பயணிக்கும் போது குறிக்கிட்ட அழகிய கயிலை மலையை புரட்ட  முற்பட்ட வலிய அரக்கனாகிய இராவணனின் கண்ணும் தோளும் நல்ல வாயும் நெரியுமாறு அவனைக் கால்விரலை ஊன்றி அடர்த்துப் பின் அவன் கைநரம்பால் வீணை செய்து பண்ணொடு கூடிய பாடல்களைப் பாட அதனைக் கேட்டுப் பெருந்தன்மையோடு அவனுக்கு அருள்கள் பலவும் செய்த அடிகளுக்கு உகந்த இடம் திருஅரசிலியேயாகும்.

கருத்து
வண்ணமால்வரை-கயிலைமலை.
இன்னாசெய்தாற்கும் இனியவே செய்யும் பெருமையனாகி.
பாடியவர்          திருஞானசம்பந்தர்            
திருமுறை        2             
பதிக எண்         95          
திருமுறை எண்   9            
பாடல்
குறிய மாணுரு வாகிக்
     குவலய மளந்தவன் றானும்
வெறிகொள் தாமரை மேலே
     விரும்பிய மெய்த்தவத் தோனும்
செறிவொ ணாவகை யெங்குந்
     தேடியுந் திருவடி காண
அறிவொ ணாவுரு வத்தெம்
     அடிகளுக் கிடமர சிலியே. 
பொருள்
குள்ளமான உருவமுடைய வாமனராய்த் தோன்றிப்பின் பேருரு எடுத்து உலகை அளந்த திருமாலும், மணம் கமழும் தாமரை மலரை விரும்பிய நான்முகனும் எங்கும் தேடியும் திருவடிகளை அடைய முடியாதவாறும் அறியமுடியாதவாறும் அழலுருவாய் ஓங்கி நிமிர்ந்த திருவுருவத்தைக் கொண்டருளிய எம்அடிகளுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும்.
கருத்து
குறிய மாணுருவாமனாவதாரம்
வெறிமணம்.
மெய்த்தவத்தோன்பிரமன்.
செறிவு ஒணாசெறிதல் ஒன்றா.
செறிதல்பொருந்துதல்.
அறிவொணாவுருவம்ஐம்பொறிகளாலும், மனதாலும் அறிய இயலா ஞானசொரூபம்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவக்கரை

274

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருவக்கரை
·   வராகநதியான சங்கராபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மிகப்பழமையான கோயில்
·   சதுர அடிப்பாகத்தின் மீது அமைந்த வட்டமான ஆவுடையாரில் மூன்று திருமுகங்களுடன் கம்பீரமாக கிழக்கு நோக்கி திருக்காட்சி தரும் மூலவர்.
·   வக்கிரனை அழிக்க, காளி இறைவனை (சந்திரசேகரரை) வழிபட்டு அவனுடன் போர்புரிந்து வெற்றி பெற்ற தலம்
·   ராஜகோபுரத்தின் இடப்பக்கம் வக்கிரகாளி அம்மன் சந்நிதி
·   காளியம்மன் சந்நிதி எதிரில் வக்ராசூரன் வழிபட்ட வக்கிரலிங்கம்(ஆத்மலிங்கம் , கண்டலிங்கம் )
·   நடராசர், வக்கிர தாண்வம் எனும் இடுப்புக்குமேல் வரை வளைத்து தூக்கிய திருவடியுடன் கால் மாறியாடும் திருக்கோல காட்சி அமைப்பு
·   உள்பிரகாரத்தில் குண்டலி மாமுனிவர் சமாதி மீது சிவலிங்கம் உடைய சந்நிதி.
·   குண்டலினி முனிவர் வம்சத்தில் வந்த வக்கிராசுரன்  (வக்கிரன்) வழிபட்ட தலம்;  வல் + கரை – வலிய கரை, வற்கரை
·   வக்ராசூரனின் தங்கை துன்முகியை காளி சம்ஹாரம் செய்யும் போது வயிற்றில் குழந்தை இருந்த காரணத்தால் கருவில் உள்ள குழந்தையை குண்டலமாக ஆக்கிய் காதில் அணிந்திருக்கும் காட்சி.
·   சனிஸ்வரனின் காக வாகனம்  தென்திசை நோக்கி
·   கால மாற்றத்தால் பூமியில் புதைந்த மரங்கள், பட்டைகள், கிளைகள் கல்லாக கல்மரங்களாக  மாறிக் காட்சியளிக்கின்றன
·   கருவறை , நந்தி , கொடிமரம் , ராஜகோபுரம் ஆகியவை ஒரே நேர்க் கோட்டில் இல்லாமல் அமைந்துள்ளது
தலம்
திருவக்கரை
பிற பெயர்கள்
வக்ராபுரி, குண்டலிவனம் , துக்ரபுரி , வக்ரபுரிப்பட்டினம், பிறை சூடிய எம்பெருமான், ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்)
இறைவன்
சந்திரசேகரேசுவரர், சந்திர மௌலீசுவரர்
இறைவி
அமிர்தேசுவரி, வடிவாம்பிகை
தல விருட்சம்
வில்வம்
தீர்த்தம்
சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், பிரம்மா தீர்த்தம்,புண்ணிபுனல் தீர்த்தம்
விழாக்கள்
மாவட்டம்
விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை
அருள்மிகு சந்திரசேகரர் வக்ரகாளியம்மன் திருக்கோவில்
திருவக்கரை
வானூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
PIN – 604304
தொலைபேசி :  +91 – 413 – 2688949 , 2680870
வழிபட்டவர்கள்
வக்கிராசுரன்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர், திரு அருணகிரிநாதர்
நிர்வாகம்
இந்துசமய அறநிலையத்துறை
இருப்பிடம்
சென்னை – திண்டிவனம் – கூட்டேரிப்பட்டு – மயிலம் – பெரும்பாக்கம் – திருவக்கரை
சென்னை – பாண்டிச்சேரி – திருச்சிற்றம்பலம் கூட்ரோடு – பெரும்பாக்கம் – திருவக்கரை
விழுப்புரம் – முண்டியம்பாக்கம் – திருக்கனூர் – திருவக்கரை
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 271 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில்  30    வது தலம்.
சந்திர மௌலீசுவரர்
சந்திர மௌலீசுவரர்
அமிர்தேசுவரி
அமிர்தேசுவரி
புகைப்படம் : தினமலர்
 
பாடியவர்           திருஞானசம்பந்தர்         
திருமுறை         3                     
பதிக எண்          060        
திருமுறை எண்    8         
பாடல்

இலங்கையர் மன்னனாகி எழில்பெற்றஇ ராவணனைக்
கலங்கவோர் கால்விரலாற் கதிர்பொன்முடி பத்தலற
நலங்கெழு சிந்தையனாய் அருள்போற்றலு நன்களித்த
வலங்கெழு மூவிலைவேல் உடையானிடம் வக்கரையே.
பொருள்
அழகு பொருந்திய இலங்கை மன்னனான இராவணன் கலங்குமாறு, ஒளி வீசுகின்ற பொன்னாலான திருமுடிகளணிந்த அவன் தலைகள் பத்திலும் தன் காற்பெருவிரலை ஊன்றி, அலறுமாறு செய்தவன். பின் அவனது ஆணவ செருக்கு நீங்கி, நல்ல சிந்தனையோடு ஈசனைப் போற்றி துதிக்க, ஈசன் அவனுக்கு வீரவாளும், நீண்ட ஆயுளும் கொடுத்து அருள் புரிந்தான். அத்தகைய பெருமான் வலக்கையில் மூவிலைவேல்(சூலம்) ஏந்தி வீற்றிருந்து அருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும்.
கருத்து
·   மாயா மலங்களில் ஆணவ மலம் நீங்குமாறு செய்பவன் ஈசன். ஆணவத்தை விலக்கி உயிர்களுக்கு அருள் புரிபவன் என்பது துணிபு.
·   தன்னை அணுகியவர்களுக்கு வெற்றியும் அதனை அனுபவிக்கும் ஆயுளையும் தருபவன் ஈசன்
பாடியவர்           திருஞானசம்பந்தர்         
திருமுறை         3                     
பதிக எண்          060        
திருமுறை எண்    9         
பாடல்
காமனை யீடழித்திட் டவன்காதலி சென்றிரப்பச்
சேமமே உன்றனக்கென் றருள்செய்தவன் தேவர்பிரான்
சாமவெண் டாமரைமேல் அயனுந்தர ணியளந்த
வாமன னும்மறியா வகையானிடம் வக்கரையே.
பொருள்
அழகிய வலிய தேகத்தை உடைய மன்மதனை எரித்துச் சாம்பலாக்கிப் பின்னர் அவன் மனைவி ரதி இரந்து வேண்டிப் பிரார்த்திக்க சிவபெருமான் மன்மதனை உயிர்ப்பித்து அவள் கண்ணுக்கு மட்டும் புலப்படும்படி அருள்புரிந்தான். வெண்டாமரையில் வீற்றிருந்து சாமகானம் பாடுகின்ற பிரமனும், உலகையளந்த வாமனனான திருமாலும் அறியாவண்ணம் நீண்ட சோதியாக நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும்
கருத்து
·         ஈடு அழித்திட்டுவலிமைக்கு இடமாகிய உடம்பை அழித்து. (ஆணவம் முன்வைத்து)
·         உன்தனக்குச் சேமமேஉன் கண்ணுக்கு மட்டும் புலப்படுவான்
Reference
திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ
     தொழிவ துனைச்சிறி …… துரையாதே
(இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
 
 
 

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருஅச்சிறுபாக்கம்

274
தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் –
இறைவன் சுயம்பு மூர்த்தி, சதுரமான ஆவுடையார்
இரண்டு மூலவர்கள் சந்நிதி (அரசரை ஆட்கொண்ட இறைவனுன் உமையாட்சீஸ்வரர், திரிநேத்ரதாரி  முனிவரை ஆட்கொண்ட இறைவன் ஆட்சீஸ்வரர் சந்நிதி)
வித்யுந்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்களின் கோட்டைகளான பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றை தகர்க்க பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்ட இடம். அந்த நேரத்தில் வினாயகரை மறந்தால் அச்சு முறிந்து, பின் தவறை உணர்ந்து அவரை வழிபட வினாயகர் அச்சினை சரிசெய்த இடம்
சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் துவார பாலகர்கள்
அகத்தியருக்கு திருமணக் காட்சி அளித்தத் தலம்
அச்சுமுறி விநாயகர்”  கோவிலுக்கு வெளியே தனி சந்நிதியில் மேற்கு நோக்கி அமர்ந்த காட்சி
பிரமகபால மாலையுடன் பைரவர் காட்சி
திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலம்,திருநாவுக்கரசரின் ஷேத்திரக் கோவையால் குறிப்பிடப்பட்ட தலம்
சரக்கோன்றை மரத்தடியில் பாண்டிய மன்னன் ஒருவனுக்கு ஈசன் காட்சி அளித்தத் தலம்
சித்தர்களின் அருளாணைப்படி பழனிச்சாமி முதலியார் என்பரால் அமைக்கப்பட்ட ஆறுமுகவேலவரின் திருக்கரத்தில் உள்ள வெள்ளியால் செய்யப்பட்ட பழனி ஆண்டவர் சத்ருசங்காரச் சக்கரம்  பொறிக்கப்பட்ட வேலாயுதம்
தலம்
அச்சிறுபாக்கம்
பிற பெயர்கள்
அச்சுஇறுபாகம்
இறைவன்
ஆட்சிபுரீஸ்வரர், உமைஆட்சீஸ்வரர், எமையாட்சீசர் (அச்சேஸ்வரர், அச்சு கொண்டருளிய தேவர்), பார்க்கபுரீஸ்வரர், ஆட்சீஸ்வரர், ஆட்சிகொண்டநாதர், ஸ்திரவாசபுரீஸ்வரர், முல்லைக்கானமுடையார்
இறைவி
இளம்கிளி அம்மை, உமையாம்பிகை, சுந்தரநாயகி, பாலாம்பிகை, மெல்லியலாள், அதிசுந்தரமின்னாள்.
தல விருட்சம்
சரக்கொன்றை
தீர்த்தம்
தேவ தீர்த்தம், சூரிய தீர்த்தம், சங்கு தீர்த்தம், சிம்ம தீர்த்தம்
விழாக்கள்
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
அருள்மிகு ஆட்சீஸ்வரர் சுவாமி திருக்கோவில்
அச்சிறுபாக்கம் அஞ்சல்
மதுராந்தகம் வட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN – 603301
வழிபட்டவர்கள்
கண்வ முனிவர், கௌதம முனிவர், திரிநேத்ரதாரி முனிவர்
பாடியவர்கள்
அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் – 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
மேல்மருவத்தூரில் இருந்து 4 கி.மி
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 271 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் 29  வது தலம்.
ஆட்சீஸ்வரர்
ஆட்சீஸ்வரர்
 
இளங்கிளி அம்மை
 
இளங்கிளி அம்மை
புகைப்படம் : தினமலர்

பாடியவர்           திருஞானசம்பந்தர்         
திருமுறை         1                     
பதிக எண்          077        
திருமுறை எண்    8         
பாடல்
 
கச்சுமொள்வாளுங் கட்டியவுடையர் கதிர்முடிசுடர்விடக் கவரியுங்குடையும்
பிச்சமும்பிறவும் பெண்ணணங்காய பிறைநுதலவர்தமைப் பெரியவர்பேணப்
பச்சமும்வலியுங் கருதியவரக்கன் பருவரையெடுத்ததிண் டோள்களையடர்வித்
தச்சமுமருளுங் கொடுத்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

பொருள்
இத்தலத்து இறைவன், இறைவர் ஒளி பொருந்திய வாளைக் கச்சிலே பொருத்தி இடையில் ஆடையாகக் கட்டியுள்ளவர், ஒளி பொருந்திய முடி சுடர்விடக்கவரி, குடை, பீலிக்குஞ்சம் முதலியவற்றோடு பெண்களைக் கவரும் பிறை மதியை முடியிற்சூடி விளங்குபவர்.பெருமை உடைய அடியவர் தம்மை விரும்பி வழிபடுமாறு, தம் அன்பு வலிமை ஆகியவற்றைக் கருதித்தன்னைப் பெரியவனாக எண்ணிப் பெரிய கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் தோள்களை அடர்த்து அவனுக்குத் தம்பால் அன்பையும் அருளையும் கொடுத்த எம் அடிகள் ஆவார். அப்படிப்பட்ட இறைவன் அச்சிறுபாக்கத்தில் உறையிம் ஆட்சிபுரிஸ்வரர் ஆவார்
பாடியவர்           திருஞானசம்பந்தர்         
திருமுறை         1                     
பதிக எண்          077        
திருமுறை எண்    9  
பாடல்
நோற்றலாரேனும் வேட்டலாரேனு நுகர்புகர்சாந்தமொ டேந்தியமாலைக்
கூற்றலாரேனு மின்னவாறென்று மெய்தலாகாததொ ரியல்பினையுடையார்
தோற்றலார்மாலு நான்முகமுடைய தோன்றலுமடியொடு முடியுறத்தங்கள்
ஆற்றலாற்காணா ராயவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.
பொருள்
அச்சிறுபாக்கத்தில் உறையும் ஆட்சீஸ்வரர் தவம் செய்பவராக இல்லாவிட்டாலும், பிறரிடத்தில் அன்பு செய்பவராக இல்லாவிட்டாலும், வாசனை தரும் சந்தனமுடன் கையினில் மாலை ஆகிய முறைகளில் வழிபாடு செய்யாதவராக இருப்பினும் இவர் இவ்வாறானவர் எனப் பொருள் கொள்ளார். அறியமுடியாத தன்மையும் அடைய முடியாத அருமையும் உடைய இயல்பினராய் மாலும் நான்முகனும் பன்றியும் அன்னமுமாய்த் தோன்றி அடியையும் முடியையும் தங்கள் ஆற்றலால் காண இயலாதவாறு உயர்ந்து நின்றவர் எம்அடிகள்.
கருத்து
 
·         தவம் செய்வதும், மாலைகளுடன் பூசை செய்தலும் எதிர் எதிர் நிகழ்வுகள், ஒன்று புறப்பூசை, மற்றொன்று அகப்பூசை. இறைவன் இரண்டையும் கடந்தவர்.
·         நோற்றலார் – தவஞ்செய்யாதவர். வேட்டலார் – யாகஞ் செய்யாதவர்கள்

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கழுகுன்றம்

274
தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருக்கழுகுன்றம்
மூலவர் –  சுயம்புலிங்க மூர்த்தி
ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் 4 பெரிய பாறைகளாக,அதர்வணவேத பாறை உச்சியில்  – சிவபெருமான் கோவில்
  க்ருத யுகத்தில் சாபம் பெற்ற சண்டன், பிரசண்டன் என்னும் கழுகுகளும், த்ரேதா யுகத்தில் சம்பாதி, ஜடாயு என்னும் கழுகுகளும், வாப்ர யுகத்தில் சம்புகுத்தன், மாகுத்தன் என்னும் கழுகுகளும், கலி யுகத்தில் சம்பு, ஆதி என்னும் கழுகுகளும் ழிபட்டுப் பேறு பெற்றது இத்தலம். இவர்கள் பிரம்மனின் மானச புத்திரர்கள்
கருவறை கஜப்பிரஷ்ட அமைப்பு
மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவித்த போது இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும் அதுமுதற்கொண்டு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கிறது.
கோடி ருத்ரர்கள் தவம் செய்து முக்தி அடைந்த தலம்
சுந்தரர் ஈசனிடம் பொன் பெற்றத் தலம்
மாணிக்க வாசகருக்கு அருட்காட்சி கிடைக்கப்பெற்ற தலம்
சுரகுரு மன்னனுக்கு சுயம்புவாய் காட்சி
மலைக் கோவில் சுற்றி 12 தீர்த்தங்கள். இந்திர தீர்த்தம், சம்பு தீர்த்தம்,ருத்ர தீர்த்தம்,வசிஷ்ட தீர்த்தம், மெய்ஞான தீர்த்தம், அகத்திய தீர்த்தம், மார்கண்ட தீர்த்தம், கோசிக தீர்த்தம், நந்தி தீர்த்தம், வருண தீர்த்தம், அகலிகை தீர்த்தம், பட்சி தீர்த்தம்
பெயர்க்காரணம் – கழுகுகள் வழிபாடு –  கழுகாச்சலம், கோடி ருத்ரர்கள்  வழிபாடு  – உருத்திரக்கோடி, மகாவிஷ்ணு வழிபாடு  – வேதநாராயணபுரி, இந்திரன் வழிபாடு  –  இந்திரபுரி, இறைவன் மலை உச்சி – கொழுந்து வடிவம் – மலைக் கொழுந்து
சு‌ப்பையா சுவா‌மிக‌ள்(கடையனோடை சுவா‌மி, ‌பி.ஏ. சுவா‌மி, ‌திரு‌க்கழு‌க்கு‌ன்ற‌ம் சுவா‌‌மி ) முக்தி அடைந்த தலம்
 
தலம்
திருக்கழுகுன்றம்
பிற பெயர்கள்
வேதகிரி, வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம், கழுகாச்சலம், உருத்திரக்கோடி, வேதநாராயணபுரி, மலைக் கொழுந்து
இறைவன்
வேதகிரீஸ்வரர் (மலைமேல் இருப்பவர்), பக்தவத்சலேஸ்வரர் (தாழக்கோயிலில் இருப்பவர்)
இறைவி
சொக்கநாயகி என்கிற பெண்ணினல்லாளம்மை (மலைமேல் இருப்பவர்), திரிபுரசுந்தரி (தாழக்கோயிலில் இருப்பவர்)
தல விருட்சம்
வாழை
தீர்த்தம்
சங்கு தீர்த்தம்
விழாக்கள்
சித்திரை – தேர்த்திருவிழா, கார்த்திகை – சங்காபிஷேகம், குருபகவான் கன்னி லக்னத்தில் நுழையும் நாள் – லட்ச தீபம் ,சித்திரைத் திருவிழா, ஆடிப்பூரம், பௌர்ணமி
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
தாழக் கோவில்
காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
மலைக்கோவில்
காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 6.30 மணி வரை
அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில்
திருக்கழுகுன்றம்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN – 603109
044-27447139,27447393, 9894507959, 9443247394, 94428 11149
வழிபட்டவர்கள்
இந்திரன், மார்க்கண்டேயர்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் – 1 பதிகம், திருநாவுக்கரசர் – 1 பதிகம், சுந்தரர் – 1 பதிகம், பட்டினத்தார், அருணகிரி நாதர்
நிர்வாகம்
இருப்பிடம்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 270  வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் 28  வது தலம்.
 
மலைக்கோயில் மூலவர் – வேதபுரீஸ்வர்
 
வேதபுரீஸ்வர்
 
 
மலைக்கோயில்  அம்மன் – சொக்க நாயகி
 
சொக்க நாயகி
 
புகைப்படம் : தினமலர்
 
பாடியவர்          திருஞானசம்பந்தர்    
திருமுறை               1ம் திருமுறை      
பதிக எண்                103   
திருமுறை எண்     8  
பாடல்
ஆதல்செய்தா னரக்கர்தங்கோனை
யருவரையின்
நோதல்செய்தா னொடிவரையின்கண்
விரலூன்றிப்
பேர்தல்செய்தான் பெண்மகள்தன்னோ
டொருபாகம்
காதல்செய்தான் காதல்செய்கோயில்
கழுக்குன்றே.

பொருள்
அரக்கர்களின் தலைவனாகிய இராவணனை கயிலை மலையின் கீழ்ப்படுத்தி, நொடிப்பொழுதில் கால் விரலை ஊன்றி,  அவனுக்கு துன்பத்தை விளைவித்தவனும், பிறகு அவனுக்கு வரங்கள் வழங்கியவனும் பெண்மகளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு காதல் செய்தவனுமாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.
கருத்து
நொடிவரை – நொடிப்பொழுது
பாடியவர்           சுந்தரர்       
திருமுறை             7ம் திருமுறை           
பதிக எண்             81       
திருமுறை எண்       8        
 
 
பாடல்
 
அந்தம் இல்லா அடியார் தம்மனத் தேஉற
வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன்
சிந்தை செய்த மலர்கள் நித்தலுஞ் சேரவே
சந்தம் நாறும் புறவிற் றண்கழுக் குன்றமே
பொருள்
 
எண்ணிக்கை அற்ற அடியார்களது மனதில் அவரவர்க்கும் தகுந்தவாறு உறைபவனும், திருமாலும் நான்முகனும்  தினமும் வழிபடும் செய்யும் வண்ணம் இருப்பவனும், மலர்கள் நாள்தோறும் குவிந்து கிடக்கும் வண்ணமும் , நடனமாடுகின்ற சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற இடம் , சந்தன மரம் மணம் வீசுகின்ற , முல்லை நிலத்தோடு கூடிய , குளிர்ந்த திருக் கழுக்குன்றமே
கருத்து
அந்தம் இல்லா அடியார்  – எண்ணிக்கை இல்லா அடியார்
Reference
 
1.வீரராகவப் புலவர் பாடியுள்ள தலபுராணம்
2.தருமை ஆதீன முதற் குருமணி திருஞானசம்பந்தர் அருளிய சிவபோக சாரம்
தில்லைவனம் காசி திருவாரூர் மாயூரம்
முல்லைவனம் கூடல் முதுகுன்றம்நெல்களர்
காஞ்சிகழுக் குன்றமறைக் காடு அருணை காளத்தி
வாஞ்சியமென் முத்தி வரும்.
இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருஇடைச்சுரம்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருஇடைச்சுரம்
மூலவர் – மரகத (பச்சைக்கல்) சிவலிங்கத் திருமேனி; சுயம்பு மூர்த்தி, சதுரபீட ஆவுடையார்
பார்வதிதேவி பசுவடிவில் பால் சொரிந்து இறைவனை வழிபட்டத் தலம்
அகழி அமைப்புடைய கருவறை
சிவஸ்தல யாத்திரையின் போது  நீண்ட தூரம் நடந்து வந்ததாலும், வெயில் ஏறியதாலும் மிகவும் களைப்படைந்த திருஞானசம்பந்தருக்கு இறைவன் இடையன் வடிவில் வந்து தயிர் தந்த ஸ்தலம்

சிவன் மறைந்த குளக்கரை காட்சிகுளம்









தலம்
திருஇடைச்சுரம்
பிற பெயர்கள்
திருவடிசூலம் 
இறைவன்
ஞானபுரீஸ்வரர், இடைச்சுரநாதர்
இறைவி
கோவர்த்தனாம்பிகை, இமயமடக்கொடி அம்மை
தல விருட்சம்
வில்வம்
தீர்த்தம்
மதுரா தீர்த்தம்
விழாக்கள்
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை
அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில்
திருவடிசூலம்
வழி செம்பாக்கம்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN – 603108
044 – 27420485, 09444523890
வழிபட்டவர்கள்
அம்பாள் ,கௌதமர், பிருங்கி முனி ,சனற்குமாரர்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் – 1 பதிகம்
நிர்வாகம்
திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாடு
இருப்பிடம்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 271 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   27  வது தலம்.
இடைச்சுரநாதர்
 
 
 
இமயமடக்கொடி
 
 
புகைப்படம் : தினமலர்

பாடியவர்             திருஞானசம்பந்தர்       
திருமுறை            1       
பதிக எண்             78      
திருமுறை எண்       8       
பாடல்
தேம் கமழ் கொன்றை அம் திருமலர் புனைவார்;
திகழ்தரு சடைமிசைத் திங்களும் சூடி,
வீந்தவர் சுடலை வெண் நீறு மெய் பூசி,
வேறும் ஓர் சரிதையர்; வேடமும் உடையர்;
சாந்தமும் அகிலொடு முகில் பொதிந்து அலம்பி,
தவழ் கன மணியொடு மிகு பளிங்கு இடறி,
ஏந்து வெள் அருவிகள் எழில் திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே?
பொருள்
தேன் மணம் கமழும் அழகிய கொன்றை மலர் மாலையைச் சூடுபவரும், சடைமுடியில் பிறை மதியைச் சூடியவரும், இறந்தவர்களை எரித்து அந்த சுடுகாட்டுச் சாம்பலைத் தம் திருமேனி மீது பூசியவரும், பல்வேறு விதமான புராண நிகழ்வுக்குக் காரணமானவரும், புராண நிகழ்வின் காரணமாக பலப்பல வேடம் வேடம் ஏற்று காட்சி தருபவரும், சந்தனம், அகில் போன்ற வாசனை மிக்க மரங்களின் வாசனைகளை வாங்கி அவற்றின் மணத்தினை ஏற்று மழையாக பொழிய வைத்து அதன் காரணத்தால் உருண்டு வரும் பெரிய மணிகளையும் (ஸ்படிகம்) போன்ற பளிங்குகளையும் வெள்ளமென அடித்து வரும் அருவிகள் விளங்கும் மலைச் சாரலை உடைய இடைச்சுரத்தில் உறையும் பெருமானது இயல்பு யாதோ?
கருத்து
வீந்தவர் – இறந்தவர்.
சாந்தம் – சந்தனம்.
பாடியவர்             திருஞானசம்பந்தர்       
திருமுறை            1       
பதிக எண்             78      
திருமுறை எண்       9       
பாடல்
பலவிலமிடுபலி கையிலொன்றேற்பர்
பலபுகழல்லது பழியிலர்தாமும்
தலையிலங்கவிரொளி நெடுமுடியரக்கன்
றடக்கைகளடர்த்ததோர் தன்மையையுடையர்
மலையிலங்கருவிகண் மணமுழவதிர
மழைதவழிளமஞ்ஞை மல்கியசாரல்
இலையிலவங்கமு மேலமுங்கமழு
மிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.
பொருள்
பல வீடுகளுக்கு சென்று அவர்கள் இடும் பிச்சையினை தனது ஒரு கையினால் ஏற்பவரும், பலவிதமாக புகழ்ச்சிகள் அல்லது இகழ்ச்சிகள் இல்லாதவரும்(இருமைகள் அற்றவர் எனும் பொருள்) ஏற்பவரும், நீண்ட முடிகளையிம் ஒளி பொருந்திய மகுடங்களையும் தரித்த பத்து தலை இராவணனின் நீண்ட கைகளை நெரித்த வலிமை உடையவரும், மலையில் விழும் ஆர்ப்பரிக்கும் அருவிகள் கொண்டதுமான இளமயில்கள் நிறைந்ததும், மேகங்கள் தவழும் சாரலை உடையதும், இலைகளை உடைய இலவங்கம் ஏலம் கமழ்வதுமான திருஇடைச்சுரத்தில் எழுந்தருளிய இப்பெருமானது இயல்பு யாதோ?
கருத்து
பல இலம் இடு பலி – பல வீடுகளுக்கு சென்று அவர்கள் இடும் பிச்சை.
(இக் கோயில் பற்றி மேலும் விபரம் தெரிந்தால் தெரியப்படுத்தவும்.)

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருகாளத்தி

மூலவர், சுயம்பு – தீண்டாத் திருமேனி. கங்கைநீர் மட்டும் படுமாறு அமைப்பு
மிகவும் உயரமான சிவலிங்கத் திருமேனி. அடிப்பாகம் –  சிலந்தி வடிவம், மத்தியில் யானையின் இருதந்தங்கள், வலப்பக்கம் கண்ணப்பர் கண் அப்பிய வடு,  மேற்புறம் ஐந்து தலை நாகம் போலவே காட்சி அமைப்பு. ஆவுடையார் பிற்காலத்தில் கட்டப்பட்டது. சுவாமி மீது கரம் தீண்டாமல் இருக்க இருபத்தேழு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்ட தங்கக் கவசம். அகழி அமைப்புடைய  கருவறை  
அம்பாள் – ஞானப்பூங்கோதை நின்ற திருக்கோலம்; திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ‘அர்த்த மேரு ‘. அம்பாள் இருப்பு ஒட்டியாணத்தில் ‘கேது ‘ உருவம்.
அகத்தியர் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அருள் பெற்ற தலம் – பாதாள விநாயகர் சந்நிதி
பஞ்சபூத தலங்களுள்  – வாயுத் தலம் ஆதலால் மூலவர் எதிரில் கதவருகில் உள்ள இரு தீபங்கள் காற்றினால் மோதப்பெற்றதுபோல் எப்போதும் அசைந்து கொண்டு
சுவர்ணமுகி எனப்படும் பொன்முகலி ஆறு வடக்கு முகமாகப் பாய்ந்து ஓடுவதால் உத்தரவாகினி
நக்கீரர் இங்கு தங்கி பொன்முகலி  நதியில் நீராடி இறைவனைத் தொழுது வெப்பு நோயிலிருந்து முழுமையாக நீக்கம் பெற்றத் தலம்
ராகு, கேது க்ஷேத்ரம்
வேடனான (திண்ணன்) கண்ணப்பருக்கு அருள் காட்சி கிடைத்தத் தலம்
சிலந்தி – பாம்பு – யானை ஆகிய மூன்றும் வழிபட்டுப் பேறு பெற்ற சிறப்புடைய தலம்
சண்டேசுவரர் சந்நிதி – மூலவர் பாணம் (முகலாயர் படையெடுப்பின்போது மூல விக்ரகங்களையும்,செல்வத்தையும் காப்பாற்றுவதன் பொருட்டு அமைக்கப்பட்டது)
கோயில் அமைப்பு –  அப்பிரதக்ஷண வலமுறை(வலமிருந்து இடம்)
இரு கொடி மரங்கள் –  ஒன்று கவசமிட்டது; மற்றொன்று ஒரே கல்லால் ஆன 60 அடி உயரமுள்ள கொடி மரம்
சர்ப்ப தோஷம் நீங்கும் தலம்
ஸ்படிகலிங்கம் – ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தது
‘இரண்டு கால் மண்டபம் ‘  – 2 கால்களை நிறுத்தி சுவரோடு சேர்த்துக் கட்டப்பட்ட சிறிய மண்டபம் சுவரோரமாக
சொக்கப்பனை கொளுத்தி, எரிந்தவற்றை அரைத்து  (ரக்ஷை) சுவாமிக்கு கறுப்புப் பொட்டாக இடும் வழக்கம்
பிரதான கோபுரம் ‘தக்ஷிண கோபுரம்’
சம்பந்தர், இங்கிருந்தவாறே கயிலாயம், கேதாரம், கோகர்ணம், திருப்பருப்பதம், இந்திரநீலப்பருப்பதம் முதலிய தலங்களைப் பாடித் தொழுதார்.
அப்பர் காளத்தி வந்து தொழுதபோது வடகயிலை நினைவு வர, கயிலைக் கோலம் காண எண்ணி, யாத்திரையைத் தொடங்கினார். 
சுந்தரர் இறைவனைப் பாடி, இங்கிருந்தவாறே திருப்பருப்பதம், திருக்கேதாரம் முதலிய தலங்களைப் பாடிப் போற்றினார்.
நதி-நிதி-பர்வதம். நதி என்பது சந்திரகிரிமலையில் தோன்றிப் பாய்ந்து வருகின்ற சுவர்ணமுகி-பொன்முகலி ஆறு, நிதி – அழியாச் செல்வமான இறைவி, இறைவன், பர்வதம் – கைலாசகிரி.
நம் ஆறு ஆதாரங்களில்  விசுத்தி(இதயம்) திருகாளத்தி என்று பரஞ்சோதி முனிவரால் குறிப்பிடப்படும் இடம்
 
தலம்
சீகாளாத்தி, திருகாளாத்தி, காளஹஸ்தி
பிற பெயர்கள்
தட்சிண (தென்) கயிலாயம், கைலாசகிரி, கண்ணப்பர் மலை, அகண்டவில்வாரண்யம், பாஸ்கரக்ஷேத்திரம்
இறைவன்
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர், குடுமித்தேவர்
இறைவி
ஞானப்பிரசுன்னாம்பிகை, ஞானப் பூங்கோதை
தல விருட்சம்
மகிழம்
தீர்த்தம்
ஸ்வர்ணமுகி, பொன்முகலியாறு.
விழாக்கள்
மாவட்டம்
சித்தூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 8.00 மணி வரை,
அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்
காளஹஸ்தி – அஞ்சல் – 517 644
சித்தூர் மாவட்டம் – ஆந்திர மாநிலம்.
வழிபட்டவர்கள்
பாம்பு, யானை, சிவகோசரியார், கண்ணப்பர் ,கிருஷ்ணதேவராயர், சிலந்தி,  அவருடைய மனைவி, சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர், சப்தரிஷிகள், சித்திரகுப்தர், யமன், தருமர், அர்ஜுனன், வியாசர்,முசுகுந்தன், பரத்வாஜ மகரிஷி,
பாடியவர்கள்
வீரைநகர் ஆனந்தக் கூத்தர்திருக்காளத்திப் புராணம்; கருணைப் பிரகாசர், ஞானப் பிரகாசர், வேலப்ப தேசிகர் ஆகிய மூவரும் சேர்ந்து பாடிய தலபுராணம், திருஞான சம்மந்தர் – 2 பதிகங்கள், திருநாவுக்கரசர் – 1 பதிகம், சுந்தரர் – 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
ஆந்திரா மாநிலத்தில் சித்தூர் மாவட்டம். ரேணிகுண்டா – கூடூர் இரயில் மார்க்கத்தில் உள்ள இருப்புப்பாதை நிலையம். திருப்பதியிலிருந்து 40 கி. மீ. தொலைவு
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 251 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   19 வது தலம்.
ஞானப் பூங்கோதை உடனாகிய ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி

புகைப்படம் : தினமலர்

பாடியவர்                திருநாவுக்கரசர்    
திருமுறை               6     
பதிக எண்               08   
திருமுறை எண்          7    
பாடல்
கரியுருவு கண்டத்தெங் கண்ணு ளான்காண்              
கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண்
எரிபவள வண்ணன்காண் ஏகம் பன்காண்   
எண்டிசையுந் தானாய குணத்தி னான்காண்
திரிபுரங்கள் தீயிட்ட தீயா டிகாண்     
தீவினைகள் தீர்த்திடுமென் சிந்தை யான்காண்
கரியுரிவை போர்த்துகந்த காபா லிகாண்     
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

பொருள்
கரிய நிறமுடைய கண்டத்தை உடையவனாகவும், எனது விழிகளுக்குள் இருப்பவனாகவும், (அடியவர்களுக்காக அவர்களின் அன்புக்கு கட்டுப்பட்டு) வரையறைப்பட்டவனாக இருப்பவனாகவும், வண்டுகள் நுகரும் கொன்றைப் பூக்களை சூடியவனாக இருப்பவனாகவும், ஒளி வீச்சுடைய பவள வண்ணனாக இருப்பவனாகவும், ஏகம்பனாக இருப்பவனாகவும், எட்டு திசைகளையும் தன் குணமாக கொண்டவனாக இருப்பவனாகவும், முப்புரங்களையும் தீயினால் எரித்து அவ்வண்ணம் எரித்த பின்னரும் அதில் கூத்து நிகழ்த்துபவனாக இருப்பவனாகவும், எனது தீவினைகளை அழித்து என் சிந்தனையின் இருப்பவனாகவும், யானையின் தோல் உரித்து அதை தனது ஆடையாக அணிந்தவனாக இருப்பவனாகவும், காபால கூத்து ஆடுபவனாக இருப்பவனாகவும் இருக்கும் காளத்தியான் என் கண் உள்ளான்.
கருத்து
 
·         கரி உருவு-கரிபோன்ற நிறம்; கரிந்த உருவம்
·         ‘எம் கண் உளான்’ – எம்மைப் போன்ற அடியவர் கண்ணில் உள்ளான்
·         கண்டன்-வரையறைப்பட்டவன்
·         எரி பவளவண்ணன்-நெருப்பும் பவழமும் போன்ற நிறமுடையவன்
·         ‘குணம்’ – முற்றும் உணர்தல். இயக்குதலும் தானே எனப் பொருள் பெறப்படும்.
·         தீர்த்திடும்’  –  எச்சம்,  தீர்த்திடுவான்
பாடியவர்            சுந்தரர்        
திருமுறை           7      
பதிக எண்           26        
திருமுறை எண்      8          
பாடல்
நீறார் மேனியனே நிமலாநினை யன்றிமற்றுக்
கூறேன் நாவதனாற் கொழுந்தேயென் குணக்கடலே
பாறார் வெண்டலையிற் பலிகொண்டுழல் காளத்தியாய்
ஏறே யுன்னையல்லால் இனிஏத்த மாட்டேனே.
பொருள்
திருநீறு அணிந்த திருமேனியை உடையவனே, தூயவனே, மிகவும் உயர்ந்தவனே, முதன்மையானவனே, தசை நீங்கிஎலும்பு மாத்திரமாகிய தலை பிச்சை பாத்திரமாக ஏற்று திரிபவனே,எட்டு வகையான குணங்கள் கொண்டவனே அடியேன் உன்னை யறிந்தபின் உன்னையன்றிப் பிறர் ஒருவரைப் போற்றுதலே இலன் ; என் நாவால் ஒன்று செய்வதாயின் , உன்னையன்றி மற்றொரு பொருளைச் சொல்லுதல்தானும் இலேன் ; ஆகவே நீ எனக்கு அருள் செய்தல் வேண்டும்
கருத்து
கொழுந்துஉச்சிக்கண் நிற்பதாகலின்  உயர்ந்த பொருளை –  கொழுந்து  உவமம்
என் குணக் கடலே  – எட்டு வகையான குணங்களுக்கு உரியவன், சிவன்
Reference
·         அட்டமாசித்திகள் அணைதரு காளத்திஎனச் சிறப்பிக்கப்படும் அற்புதத் தலம்.
·         ‘கயிலை பாதி காளத்தி பாதிஎன்று நக்கீரரால்  பாடப்பட்டபெருமை உடைய தலம்.
இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருஊறல்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருஊறல்

இறைவன் – சுயம்பு மூர்த்தி
நந்தியின் வாயிலிருந்து ஒரு காலத்தில் நீர் விழுந்து கொண்டிருந்ததாலும், இறைவன் திருவடியில் நீர் சுரப்பதாலும் இவ்வூருக்கு திருஊறல்
தக்கன் நடத்திய யாகத்தை அழித்து அவன் தலையை வீரபத்திரர் தலையைக் கொய்த தலம்
தக்கன் தனக்கு அழிவு வரும் நிலையைக் கண்டு “ஓ” என்று ஓலமிட்டதால் தக்கோலம்
பிரகஸ்பதியின் தம்பி உத்தி முனிவரின் மகன் தீர்க்கதா. அவர் யாகம் நடத்தும் சமயம் அங்கு வந்த காமதேனு பசுவினை அங்கு தங்க கூறுதல். காமதேனு மறுத்தல், அதனால் காமதேனுவினை கட்ட முயல சாபம் பெறுதல். நாரதரின் அறிவுரைப்படி ஈசனை பூஜித்து சாப விமோசனம் பெறுதல். உததி முனிவர் வழிபட்டு வேண்டிக்கொண்டதால் நந்தியெம்பெருமான் தன்வாய் வழியாக கங்கையை வரவித்த சிறப்புடையது இத்தலம்
நர்த்தன நிலையில்(உக்கடி ஆசனத்தில்) தட்சிணா மூர்த்தி
நிறம் மாறும் லிங்கம்(உத்ராயணம் – சிகப்பு நிறம், தட்சிணாயனம் – வெண்மை நிறம்)

தலம்
திருஊறல்
பிற பெயர்கள்
தக்கோலம்
இறைவன்
ஜலநாதேஸ்வரர், ஜலநாதீஸ்வரர் உமாபதீசர்
இறைவி
கிரிராஜ கன்னிகாம்பாள்(மோகன வல்லியம்மை)
தல விருட்சம்
தீர்த்தம்
பார்வதி சத்ய கங்கை தீர்த்தம், குசத்தலை நதி
விழாக்கள்
வைகாசி விசாகம், ஆனிதிருமஞ்சனம், ஆடிப்பூரம், மார்கழி திருவாதிரை, மாசிமகம், தைப்பூசம், திருக்கார்த்திகை.
மாவட்டம்
வேலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 8.00 மணி முதல் 12 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை
அருள்மிகு ஜலநாதேஸ்வரர் திருக்கோவில்
தக்கோலம் அஞ்சல்
அரக்கோணம் வட்டம்
வேலூர் மாவட்டம்
PIN – 631151.
வழிபட்டவர்கள்
சம்வர்த்த முனிவர், காமதேனு, இந்திரன், சந்திரன், எமன், திருமால், பாண்டவர்கள், சப்த கன்னியர், உததி முனிவர், தீர்க்கத முனிவர்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் – 1 பதிகம், அருணகிரிநாதர்
நிர்வாகம்
இருப்பிடம்
அரக்கோணம் காஞ்சிபுரம் செல்லும் வழியில் தக்கோலம் கூட்ரோட்டில் இருந்து 4 கி.மி
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 244 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது    12 வது தலம்.
ஜலநாதீஸ்வரர் 
 
 
 
கிரிராஜ கன்னிகாம்பாள்
 
 
புகைப்படம் : தினமலர்

பாடியவர்          திருஞானசம்பந்தர்            
திருமுறை         1          
பதிக எண்         106          
திருமுறை எண்    7           
பாடல்
கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன்வந்தெய்துதலுங் கலங்கி
மறுக்குறு மாணிக்கருள மகிழ்ந்தா னிடம்வினவில்
செறுத்தெழு வாளரக்கன் சிரந்தோளு மெய்யுந்நெரிய வன்று
ஒறுத்தருள் செய்தபிரான் றிருவூறலை யுள்குதுமே.

பொருள்
(கோபம் கொண்டதால்) கறுத்த மனம் உடையவனாகிய காலன் தன் உயிரை பறிப்பதற்காக வரும் போது அது கண்டு கலங்கிய  மார்கண்டேயனுக்கு அருளியவனும், கோபத்தினால் சினம் கொண்டு வந்த வாள் வித்தையில் வல்லவனாகிய இராவணனின் தலை, தோள், உடல் ஆகியவற்றை நெரித்து அவனுக்கு அருள் செய்தவனுமாகிய சிவபெருமான் விரும்பி உறையும் இடம் திரு ஊறல் ஆகும். அதனை நாம் நினைவோமாக.
கருத்து
சினம் கொண்ட இருவருக்கு அவர்களின் சினம் அடக்கி அவர்களை ஆட்கொண்டு அருளிய திறம் இங்கு சிறப்பாக விளக்கப்படுகிறது.
பாடியவர்          திருஞானசம்பந்தர்            
திருமுறை         1          
பதிக எண்         106          
திருமுறை எண்    8           
பாடல்
நீரின் மிசைத்துயின்றோன் நிறைநான் முகனும்மறியா தன்று
தேரும் வகைநிமிர்ந்தான் அவன்சேரும் இடம்வினவில்
பாரின் மிசையடியார் பலர்வந் திறைஞ்சமகிழ்ந் தாகம்
ஊரும் அரவசைத்தான் திருவூறலை உள்குதுமே.
பொருள்
கடல் மீது துயில் கொள்ளும் திருமாலும், ஞானத்தினால் நிறைவுபெற்ற நான்முகனும் தேடி அறிய முடியாதவாறு நிமிர்ந்து நின்றவனும், இப்பரந்து பட்ட நில உலகில் அடியவர்கள் மகிழ்ந்து வணங்க தக்கதாகவும் பாம்பினை இடையில் கட்டியவனும் ஆகிய சிவபிரான் உறையும் இடம் திரு ஊறல் ஆகும். அதனை நாம் நினைவில் கொள்வோமாக.
கருத்து
·         நிறைநான் முகனும் – ஞானத்தால் நிறைவு பெற்றவன். முற்றிலும் உணர்ந்தவன்.
·         அரவம் – பாம்பு. கொடிய விலங்குகளும் அவனிடத்தில் அதன் தன்மைகளை இழந்து விடும். மற்றொரு பொருள் யோக மார்க்கத்தில் இருப்பவன்.
·         உள்குதல் – உள் முகமாக நினைத்தல்
இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்.
 
 
 

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருமாற்பேறு

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருமாற்பேறு
மூலவர்  – தீண்டாத் திருமேனி(பார்வதியால் விருதசீர நதிக்கரையில் அமைக்கப்பட்டது)
ததிசி முனிவரை கொல்ல திருமால் ஏவிய சக்ராயுதம், முனிவரின் தெய்வீக தன்மையால் செயலிழத்தல், அதன் பொருட்டு சக்ராயுதம் பெற ஆயிரம் இதழ் தாமரைகளால் பூசை செய்தல், இறைவன் அருளால் ஒரு தாமரை மறைதல், திருமால் தனது கண்களை தாமரையாக மாற்றி பூசித்தல். அக்காரணம் பற்றி திருமால் பார்வையும் சக்ராயுதமும் பெறுதல்.
திருமாலின் உற்சவத் திருமேனி –  ஒரு கையில் தாமரை மலர், மறு கையில் ‘கண்’,  நின்ற திருக் கோலம்
வல்லபை விநாயகர் –  பத்துக் கரங்களுடன் காட்சி
நந்தி எம்மான் நின்ற திருக்கோலம்
முன் காலத்தில் கடவுளர்களுக்கு மாலைகள் – வெள் எருக்கு மலர்கள் (கோயிலுக்கு அருகில் உள்ளது)
 
தலம்
திருமாற்பேறு
பிற பெயர்கள்
ஹரிசக்கரபும், திருமால்பூர், மாற்பேறு
இறைவன்
மணிகண்டீஸ்வரர், தயாநிதீஸ்வரர், பிரவாளேஸ்வரர், சாதரூபர், பவளமலையார், வாட்டந்தவிர்த்தார், மால்வணங்கீசர்.
இறைவி
அஞ்சனாட்சி, கருணாம்பிகை
தல விருட்சம்
வில்வம்
தீர்த்தம்
சக்கர தீர்த்தம்
விழாக்கள்
மாசிமாதம் நடக்கும் 10 நாள் பிரமோற்ஸவத்தில் மகம் நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி
(பெருமாளுக்குரிய கருட சேவை),ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆனித்திருமஞ்சனம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை
மாவட்டம்
வேலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை,
அருள்மிகு மணிகண்டேஸ்வரர் திருக்கோயில்
திருமால்பூர் -அஞ்சல் – 631 053
அரக்கோணம் வட்டம்
வேலூர் மாவட்டம்.
04177 – 248220, 09345449339
வழிபட்டவர்கள்
திருமால், சந்திரன்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் 2 பதிகங்கள், ,திருநாவுக்கரசர் 4 பதிகங்கள். சுந்தர மூர்த்தி நாயனார் இத்தலத்திற்கு எழுந்தருளி உள்ள குறிப்பு பெரிய புராணத்தில் இருக்கிறது. ஆனால் பதிகங்கள் கிடைக்கவில்லை
நிர்வாகம்
இருப்பிடம்
அரக்கோணம் – காஞ்சிபுரம் இருப்புப் பாதையில் இத்தலம் அமைவிடம்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 243 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது  11 வது தலம்.
மணிகண்டீஸ்வரர்
 
 
அஞ்சனாட்சி
 
புகைப்படம் : தினமலர்

பாடியவர்          திருஞானசம்பந்தர்            
திருமுறை         1          
பதிக எண்         55          
திருமுறை எண்    8           
பாடல்
அரச ளிக்கும் அரக்கன் அவன்றனை
உரைகெ டுத்தவன் ஒல்கிட
வரமி குத்தவெம் மாற்பேற் றடிகளைப்
பரவி டக்கெடும் பாவமே.
பொருள்
இலங்கையினை ஆளும் இராவணனின் புகழ் கெடுமாறு செய்து, அவன் தனது பிழையினை உணர்ந்தபின் அவன் விரும்பி வேண்டிய வரங்களை அளித்த எமது திருமாற்பேறு பெருமானின் திருவடிகளை வணங்க பாவங்கள் கெடும்.
கருத்து
பாடியவர்            திருநாவுக்கரசர்        
திருமுறை           5        
பதிக எண்           59       
திருமுறை எண்      10        
பாடல்
நாடி நாரணன் நான்முக னென்றிவர்
தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ
மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்
தாடி பாதமென் நெஞ்சு ளிருக்கவே.
பொருள்
எம் பெருமான் ஈசனை திருமாலும், பிரம்மனும் முறையே திருவடியினையும், வானில் பறந்தும் காண இயலாதவர்களாக ஆயினர். மாட மாளிகைகள் சூழ்ந்த தில்லை அம்பலத்தாடுவான் திருவடிகள் அன்பால் நெஞ்சினில் நிறைந்திருக்கும்.
கருத்து
இறைவனை அகத்தே காணவேண்டும் என்பதை இது காட்டுகிறது.
Reference

காஞ்சிப் புராணம்
பதிகங்கள்:
ஊறியார்தரு -1 -55 திருஞானசம்பந்தர்
குருந்தவன் -1 -114 திருஞானசம்பந்தர்
மாணிக்குயிர் -4 -108 திருநாவுக்கரசர்
பொருமாற் -5 -59 திருநாவுக்கரசர்
பாரானைப் -6 -80 திருநாவுக்கரசர்
(இக் கோயில் பற்றி மேலும் விபரம் தெரிந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவல்லம்

·   மூலவர் – சுயம்புத் திருமேனி,; சதுரபீட ஆவுடையார்.
·   மூலவர் கருவறை அகழி அமைப்புடையது; கருவறைச் சுவர்கள் நிறைந்த கல்வெட்டுக்கள்
·   இறைவன், தீர்த்தத்தின் பொருட்டு, ‘நீ, வா’ என்றழைக்க, இந்நதி அருகில் ஓடிவந்து பாய்ந்ததால் நதியின் பெயர்  ‘நீ வா ‘ நதி. தற்போதைய பெயர்  ‘பொன்னை’ ஆறு
·   பாம்புப் புற்றுக்குப் பசு நாள்தோறும் பாலைச் சொரிந்து வழிபட புற்று கரைந்து சிவலிங்கம் தோன்றியது என்றும் ஒரு நம்பிக்கை
·   மூலஸ்தான விமானத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியே திருவுருவங்கள்
·   இறைவனுக்கு கஞ்சன் மலையில் இருந்து அபிஷேக நீர் கொண்டு வரும் அர்ச்சகரை தொல்லை செய்ததற்காக  கஞ்சனை நந்தி எப்பெருமான் பாகங்களாக கிழித்தல்
·   அதன் பொருட்டு அவன் மீண்டும் வராமல் இருக்க வாசல் நோக்கிய நந்தி
·   உக்கிர வடிவிலிருந்த இந்த அம்பாளை ( ‘தீக்காலி அம்பாள்’ (ஜடாகலாபாம்பாள்)), சாந்தப்படுத்தியது ஆதி சங்கரர்.
·   விநாயகர் சிவபெருமானைச் சுற்றிவந்து அற்புத மாங்கனியை இத்தலத்தில் பெற்ற சிறப்புடையது இத்தலம். தல வினாயகர் ‘கனி வாங்கிய வினாயகர்’ கையில் மாங்கனியுடன்
·   இறைவனருளால்  காஞ்சனகிரியில்(கஞ்சன் மலை) அசுரனின் குருதி பட்ட இடத்திலெல்லாம் அவ்விடத்தைப் புனிதப்படுத்த சிவலிங்கங்கள் உண்டாயின
·   வலது துவாரபாலகர் அழகிய புன்னகையுடன் கூடிய திருமுகம்
·   இங்குள்ள பெருமானை விஷ்ணு வழிபட்டதால், விஷ்ணுவின் பாதம் பத்மபீடத்தில் கொடிமரத்தின் முன்பு
·   சனகாதி முனிவர்களில் ஒருவரான சனகரின் ஜீவ சமாதி அமைந்துள்ள இடம்
·   ஒளவையார் நெல்லிக்கனியைப்  பெற்ற தலம்
·   சிவானந்த மௌனசுவாமிகள் தலம்

தலம்
திருவல்லம்
பிற பெயர்கள்
திருவலம், வில்வவனம்,வில்வாரண்யம், தீக்காலி வல்லம்
இறைவன்
வில்வநாதீஸ்வரர், வல்லநாதர்.
இறைவி
தனுமத்யாம்பாள், வல்லாம்பிகை.
தல விருட்சம்
வில்வம்
தீர்த்தம்
நீவாநதி, கௌரி தீர்த்தம்
விழாக்கள்
பிரம்மோற்சவம்
மாவட்டம்
வேலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
அருள்மிகு வில்வ நாதேஸ்வரர் திருக்கோவில்
திருவலம் அஞ்சல்
வழி இராணிப்பேட்டை
காட்பாடி வட்டம்
வேலூர் மாவட்டம்
PIN – 632515
சிவாச்சாரியார் உமாபதி – 9894922166, 0416 – 2236088, சிவன் 9245446956
வழிபட்டவர்கள்
கௌரி, மஹாவிஷ்ணு, சனகமுனிவர்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர்
நிர்வாகம்
இருப்பிடம்
சென்னை – காட்பாடி ரயில் பாதையில் உள்ள திருவல்லம் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மி.
ஆற்காட்டிலிருந்து ராணிப்பேட்டை வழியாக காட்பாடி செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது.
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 242 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது  10 வது தலம்.
வில்வநாதீஸ்வரர்



வல்லாம்பிகை



புகைப்படம் : தினமலர்

பாடியவர்                திருஞானசம்பந்தர்            
திருமுறை               1      
பதிக எண்                113  
திருமுறை எண்          8     
பாடல்
 
இகழ்ந்தரு வரையினை எடுக்கலுற்றாங்
ககழ்ந்தவல் லரக்கனை அடர்த்தபாதம்
நிகழ்ந்தவர் நேடுவார் நேடச்செய்தே
திகழ்ந்தவன் உறைவிடந் திருவல்லமே.
பொருள்
 
கையிலை மலையை இகழ்ந்து பேசி அதை எடுத்து அப்புறப்படுத்தலின் பொருட்டு முயன்ற இராவணனை அடக்கிய திருவடியை உடையவனும், திருவடியை உண்மை பொருளாக உடைய அன்பர்கள் தேடி வருந்தும் அவர்கள் உள்ளத்தில் திகழ்பவனும் ஆகிய சிவபெருமான் உறையும் தலம் திருவல்லமாகும்.
கருத்து
அடந்த திருவடி –  மிகப்பெரிய திருவடி
பாடியவர்                திருஞானசம்பந்தர்            
திருமுறை               1      
பதிக எண்                113  
திருமுறை எண்          9     
பாடல்
பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய
அரியவ னருமறை யங்கமானான்
கரியவ னான்முகன் காணவொண்ணாத்
தெரியவன் வளநகர் திருவல்லமே.
பொருள்
பெரியவனும்(எல்லாவற்றிலும், எல்லாரிலும்), அறிவில் சிறந்தவர்களால் சிந்தித்து அறிய இயலாதவனும், அரிய வேதங்கள் மற்றும் அதன் அங்கங்களும் ஆனவனும், கரிய நிறமுடைய திருமால் மற்றும் பிரம்மா ஆகியவர்களால் காணப்படா முடியாதவனும், அன்பில் சிறந்தவர்களால் காணக்கூடியவனும் ஆகிய சிவன் உறையும் நகர் திருவல்லமாகும்
கருத்து

தெரியவன்தெரியநிற்பவன். பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு தெரிபவன்.
 
இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்.
 
 
 

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவோத்தூர்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருவோத்தூர்
சதுர ஆவுடையார்
இறைவன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடமாதலின் ஓத்தூர் – ‘திரு’ அடைமொழி சேர்ந்து ‘திருஓத்தூர் ‘ – திருவோத்தூர்
சிவபெருமான் வீரநடனம் புரிந்த தலம்
ரத ஸப்தமி அன்று சூரிய ஒளி சுவாமி மீது விழும்.
முருகப் பெருமான் இறைவனை பூஜித்த தலங்களில் இத்தலமும் ஒன்று
திருஞானசம்பந்தர் பதிகம் பாடி, ஆண்பனை, பெண்பனையான தலம்
தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்தை கற்றுத்தரும் போது அவர்கள் தவிர வேறு யாரும் உள்ளே வராமல் தடுக்கவே இவ்வாறு நந்தி திரும்பி இருப்பதாக வரலாறு
தொண்டைமான் விசுவாவசு என்னும் மன்னனிடம் தோற்ற பொழுது அவன் வெற்றிபெறுவதற்காக நந்தியை படைத் துணையாக அனுப்பிய இடம். இதன் பொருட்டு நந்தி முன் கோபுரம் நோக்கியவாறு.

தலம்
திருவோத்தூர்
பிற பெயர்கள்
செய்யாறு, திருவத்திபுரம், திருவத்தூர்
இறைவன்
வேதபுரீஸ்வரர், வேதநாதர்
இறைவி
பாலகுஜாம்பிகை, இளமுலைநாயகி
தல விருட்சம்
பனை
தீர்த்தம்
ஆலயத்திற்கு வெளியே சேயாறு, வெளிப் பிராகாரத்தில் கல்யாணகோடி தீர்த்தம், மானச தீர்த்தம்,
விழாக்கள்
தை மாதம்பிரம்மோற்சவம், ஆடி மாதம்லட்ச தீபம், ஆடி விசாகம்ஞானசம்பந்தர் விழா, சுந்தரர் மோட்சம் சித்ரா பவுர்ணமி, பங்குனி உத்திரம்,
மாசி மகம், அப்பாத்துரை தோப்பு திருவிழா பிரதோஷம்
மாவட்டம்
திருவண்ணாமலை
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரை
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில்
திருவத்திபுரம்
செய்யாறு வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம்
PIN – 604407
04182 – 224387
வழிபட்டவர்கள்
தொண்டைமான்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் – 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2கி.மீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 250 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   8 வது தலம்.
வேதபுரீஸ்வரர்
 
 
 
இளமுலைநாயகி
 
 
 
பாடியவர்            திருஞானசம்பந்தர்        
திருமுறை           1         
பதிக எண்           54       
திருமுறை எண்      8        
பாடல்
என்றா னிம்மலை யென்ற வரக்கனை
வென்றார் போலும் விரலினால்
ஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர்
என்றார் மேல்வினை யேகுமே.
பொருள்
கயிலை மலை குறித்து குறைவாக மதிப்பிட்டு செறுக்கு கொண்ட இராவணனை தனது கால் பெருவிரலால் வென்றவரும், தனது மனதில் இருந்து மாறுபட்டவர்களான மூன்று கோட்டைகள் கொண்ட மூன்று  அசுரர்களை திரிபுர தகனம் அழித்தவரும் ஆகிய ஈசன் உறையும் தலமாகிய திருவோத்தும் எனும் ஊர்ப் பெயரைச் சொன்ன அளவில் அவர்களிடத்து இருக்கும் வினைகள் நீங்கும்.
கருத்து
என்தான் – எம்மாத்திரம். ஒன்னார் – பகைவர்
பாடியவர்            திருஞானசம்பந்தர்        
திருமுறை           1         
பதிக எண்           54       
திருமுறை எண்      9        
பாடல்
நன்றா நான்மறை யானொடு மாலுமாய்ச்
சென்றார் போலுந் திசையெலாம்
ஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர்
நின்றீ ரேயுமை நேடியே.
பொருள்
திருவோத்தூரில் விளங்கும் இறைவரே!  நான்கு வேதங்களை அதன் பொருள் உணர்ந்து ஓதுபவனாகிய பிரமன், திருமால் ஆகியோர் நீ ஏக உருவில் தீப்பிழம்பாய் இருத்தலை கண்டு அறியாமையினால் திசைகள் எல்லாம் தேடி அலைந்தனர். அவர்களது அறிவுநிலை யாது?
கருத்து
நன்றாம் நான் மறையான்நல்லன செய்யும் நான்மறைகளை ஓதியும்
Reference
தவர்வாள் தோமர சூலம் காதிய சூருந்எனத் தொடங்கும் திருப்புகழ்
‘ உலகியலின் உறுமயலின் அடைவுபெறும் எனதிதயம்  ‘ எனத் தொடங்கும் திருஅருட்பிரக்காச வள்ளளாரின் ஐந்தாம் திருமுறை
புகைப்படம் : தினமலர்
 
இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்.
 

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருகுரங்கணில் முட்டம்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருகுரங்கணில் முட்டம்
இறைவன் சுயம்பு மூர்த்தி
வாலி குரங்கு உருவிலும், இந்திரன் அணில் உருவிலும், எமன் காகம் (முட்டம்) உருவிலும் இறைவனை தனித்தனியே வழிபட்டு தங்களது சாபம் நிவர்த்தியடையப் பெற்ற தலம்
விஷ்ணு துர்க்கை – வலது கையில் பிரயோகச் சக்கரம்,இடக்கையில் சக்கர முத்திரை, காலுக்கு கீழே மகிஷாசுரனும் அற்று.
சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது
 
 
தலம்
திருகுரங்கணில் முட்டம்
பிற பெயர்கள்
கொய்யாமலை
இறைவன்
வாலீஸ்வரர், கொய்யாமலைநாதர், திருக்குரங்கணில் முட்டமுடைய நாயனார், கொய்யாமலர் ஈசுவரதேவர்
இறைவி
இறையார் வளையம்மை, இளையாளம்மன், ஸ்ரீ பூரணகங்கணதாரணி
தல விருட்சம்
இலந்தை மரம்
தீர்த்தம்
காக்கை தீர்த்தம், வாயசை தீர்த்தம்
விழாக்கள்
மாவட்டம்
திருவண்ணாமலை
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7 மணி முதல் 9 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை
அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில்
குரங்கனில் முட்டம் கிராமம்
தூசி அஞ்சல்
செய்யாறு வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் – 631703
ஸ்ரீதர் குருக்கள், கைபேசி:9629050143, 9600787419
வழிபட்டவர்கள்
வாலி, இந்திரன், யமன்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் – 1
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் காஞ்சீபுரத்திலிருந்து சுமார் 11 கி.மி
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 238 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   6 வது தலம்.
வாலீஸ்வரர்



 
இறையார் வளையம்மை



 
பாடியவர்              திருஞானசம்பந்தர்      
திருமுறை             1        
பதிக எண்             31    
திருமுறை எண்        8    
பாடல்
மையார்நிற மேனி யரக்கர்தங் கோனை
உய்யாவகை யாலடர்த் தின்னருள் செய்த
கொய்யாமலர் சூடி குரங்கணின் முட்டங்
கையால்தொழு வார்வினை காண்ட லரிதே.

பொருள்
மையின் நிறத்தை ஒத்து இருக்கும் கரிய  நிறமுடைய மேனியை உடையவனாகிய அரக்கர்களின் தலைவனாகிய இராவணை பிழைக்க முடியாதபடி செய்து, அவனது கர்வத்தை அடக்கி, அவனுக்கு இனிய அருளைச் செய்தவனும், அடியவர் அணிவித்த மலர் மாலைகளை சூடி குரங்கணில்முட்டத்தில் எழுந்தருளிக்கும் சிவபெருமானை கைகளால் தொழுபவர்களின் வினைப்பயன்கள் இல்லாது போகும். அஃதாவது இத்தலம் கண்டவர்களின் வினைகள் நீங்கும்
கருத்து
மையார்மேனி – கரியமேனி.
அரக்கன் – இராவணன். .
கொய் ஆர் மலர் – கொய்தலைப் பொருந்திய மலர்.
பாடியவர்              திருஞானசம்பந்தர்      
திருமுறை             1        
பதிக எண்             31    
திருமுறை எண்        9    
பாடல்

வெறியார்மலர்த் தாமரை யானொடு மாலும்
அறியாதசைந் தேத்தவோர் ஆரழ லாகுங்
குறியால்நிமிர்ந் தான்றன் குரங்கணின் முட்டம்
நெறியால்தொழு வார்வினை நிற்ககி லாவே.
பொருள்
மணம் உடைய தாமரை மலரில் உறையும் நான்முகனும், திருமாலும் முறையே திருமுடியையும், திருவடியையும் அறிய முடியாது வருந்தி நிற்க தீயின் உருவமாய் நிற்கும் சிவபெருமான் விளங்கும் குரங்கணில் முட்டத்தை முறையாக தொழுபவர்களது வினைகள் முற்றிலும் நீங்கப் பெறும்.
கருத்து
அறியாது அசைந்து – முதற்கண் இறைவன் பெருமையையறியாமல் சோம்பி இருந்து
ஏத்த – பின்னர் அறிந்து துதிக்க
ஓர் ஆர் – தனக்கு ஒப்பில்லாதவன்
நெறி – ஆகமவிதி – தனக்கு விதிக்கப்பட்டவாறு தொழுதல்

புகைப்படம் : தினமலர்

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருஇலம்பையங்கோட்டூர்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருஇலம்பையங்கோட்டூர்
மூலவர் தீண்டாத் திருமேனி; சுயம்பு மூர்த்தி; கொன்றை மலரின் இதழைப்போன்று காட்சி
சிவலிங்கத் திருமேனி வெளிர் நிறமுடைய, செம்மண் நிறம். பெரிய ஆவுடையார்; அடிப்பாகம் பத்மம் போன்ற அமைப்பு
கோஷ்ட மூர்த்தமாக உள்ள தட்சிணாமூர்த்தி – யோக தட்சிணாமூர்த்தி. சின் முத்திரையை இதயத்தில் வைத்துள்ள அமைப்பு
தலவிநாயகர் –  குறுந்த விநாயகர், சுத்தான்னம் நைவேத்தியம்
வருடத்தில் ஏப்ரல் 2 – 7 , செப்டம்பர் 5 – 11 வரையில் சூரியன் தனது ஒளிக்கற்றையைப்பரப்பி ஈசனை பூஜிக்கிறார்.
திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு அருகில் வரும் போது , இறைவன் ஒரு சிறு பிள்ளை போலவும், பின் ஒரு முதியவர் போலவும் வழிமறித்து இக்கோயிலை உணர்த்துதல், உடன் வந்த அடியார்களளின் அறியாமை, பின் இறைவனே  வெள்ளைப் பசு வடிவில் வந்து திருஞானசம்பந்தரின் சிவியை முட்டிநிற்க, அப்போது திருஞானசம்பந்தர் வியந்து அப்பசு காட்டிய குறிப்பின் வழி செல்ல,தலத்தினருகில் வந்ததும் பசு மறைதல்.
அரம்பை வழிபட்டத் தலம் – ரம்பையங்கோட்டூர் –இலம்பையங்கோட்டூர்
இலம்பை –  நீர்ப்பரப்பின் அருகிலுள்ள பசுமையான சோலை
 
தலம்
திருஇலம்பையங்கோட்டூர்
பிற பெயர்கள்
எலுமியன்கோட்டூர், அரம்பாபுரி, அரம்பையங்கோட்டூர், இலம்பையங்கோட்டூர்
இறைவன்
அரம்பேஸ்வரர், தெய்வநாயகேஸ்வரர், சந்திரசேகரர். ரம்பாபுரிநாதர்
இறைவி
கனககுஜாம்பிகை, கோடேந்து முலையம்மை, தாயினும் நல்லாள்,
தல விருட்சம்
மல்லிகை.
தீர்த்தம்
சந்திர தீர்த்தம், மல்லிகை தீர்த்தம், ரம்பை தீர்த்தம், நாகதீர்த்தம், தாமரை தீர்த்தம், பூதகண தீர்த்தம்
விழாக்கள்
குரு பெயர்ச்சி, மகாசிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை, ஆடிப்பெருக்கு.
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 8.00 மணி வரை,
அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில்,
திருஇலம்பையங்கோட்டூர்-631 553. காஞ்சிபுரம் மாவட்டம்.
+91 -44 – 2769 2412, 09444865714, 9444429775
வழிபட்டவர்கள்
அரம்பை, சந்திரன்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர்ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள்
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 246 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   13 வது தலம்.
தெய்வநாயகேஸ்வரர்


கனககுஜாம்பிகை




பாடியவர்                திருஞானசம்பந்தர்                  
திருமுறை                1     
பதிக எண்                 76  
திருமுறை எண்           3    
பாடல்

பாலனாம் விருத்தனாம் பசுபதிதானாம்,
      பண்டுவெங்கூற்றுதைத்து  அடியவர்க்கருளும்
காலனாம்எனதுரை தனதுரையாகக், கனல் எரி
      அங்கையில் ஏந்திய கடவுள்
நீலமா மலர்ச்சுனைவண்டு பண்செய்ய, நீர்மலர்க்
      குவளைகள் தாதுவிண்டோங்கும்
ஏல நாறும் பொழில் இலம்பையங் கோட்டூர், இருக்கையாப்
      பேணி என்எழில் கொள்வதியல்பே.
பொருள்
சிவன் பாலன், முதியவர் மற்றும்  பசுபதி என்று பல வடிவங்கள் எடுத்து வந்தவன். அவன் கொடுமையான கூற்றுவனை காலால் உதைத்து அடியவர்களுக்கு அருளுபவன். அப்பெருமான எனது உரையை தனது உரையாக ஏற்றுக்கொண்டவன். எரியும் நெருப்பினை தனது கைகளில் ஏந்தியவன். பெரியதாகவும் இருக்கும்  நீல மலர்களை உடைய நீர் சுனைகளுக்கு அருகில் வண்டுகள் பாடுகின்றன. நீரில் இருக்கும் குவளை மலர்கள் மகரந்தத்தைப் பொழிகின்றன. அந்த இடம் மிக்க நறுமணம் உடையதாக இருக்கிறது. இவ்வாறான எழில்களை உடைய இலம்பையங் கோட்டுர் தலத்தில் உறையும் ஈசன் என் எழில் கொள்வது நல்லியல்பு ஆகுமா?
கருத்து
·  ஈசன், உயிர்களின் தன்மைக்கு ஏற்ப  அவர்கள் விரும்பிய  வடிவம் தாங்கி வருபவன்
பாடியவர்                திருஞானசம்பந்தர்                  
திருமுறை                1     
பதிக எண்                 76  
திருமுறை எண்           8    
பாடல்
கிளர்மழை தாங்கினான் நான்முகம் உடையோன்
கீழ்அடிமேல் முடி தேர்ந்து அளக்கில்லா
உளம்அழை எனதுரை தனதுரையாக
ஒள்ளழல் அங்கையில் ஏந்தியஒருவன்
வளமழை எனக்கழை வளர்துளி சோர
மாகணம் உழிதரு மணியணி மாலை
இளமழை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணி என்னெழில் கொள்வதியல்பே
பொருள்
மிகப் பெரியதாக கிளர்ந்து எழுந்த மழையை தன் கைகளால் தாங்கி துயர் துடைத்த திருமாலும், பிரம்மாவும் ஈசனின்  திருவடியையும்  மேல்  முடியையும் தரிசிக்க விரும்பி அதனை அடைய இயலாதவர்களாக இருந்தார்கள். அந்த ஈசன் எனது உரையை தனது உரையாக ஏற்றவன். அவன் ஒளிரும் நெருப்பினை தன் கரங்களில் ஏந்தியவன். மூங்கில் இலைகளிலிருந்து மழையெனத் துளிகள் வீழவும் மலைப்பாம்புகள் பக்கம் சார, அழகிய மணி மாலைகள் போல் தவழ் பொழில் திகழும் இலம்பையங்கோட்டூரில் உறையும் அப்பெருமான் என் எழில் கொள்வது நல்லியல்பு ஆகுமா?

புகைப்படம் : தினமலர்

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருமாகறல்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருமாகறலீஸ்வரர்
   இறைவன் நவபாஷாணத்தால் ஆன‌ சுயம்பு மூர்த்தி
   கஜ பிருஷ்ட  விமான அமைப்பு
   முருகனும், தெய்வயானையும் வெள்ளையானையில் அமர்ந்து மகாவிஷ்ணுவுக்கு காட்சி
   திருஞானசம்பந்தர் வினை தீர்க்கும் பதிகம் பாடிய தலம்
   இறைவன் மாகறலீஸ்வரர் உடும்பின் வால் போன்ற காட்சி.
   பிரம்மா தலம் எல்லையில் பலா மரம் தோற்றுவித்தது. இராஜேந்திர சோழன் அப்பழங்களை தினமும் சிதம்பரம் நடராஜருக்கு நிவேதனம் செய்தது. அந்தணன் மகன் அதனை வெட்டியது. இராஜேந்திர சோழன் அதற்காக நாடு கடத்தியது. உறுதி செய்து திரும்பும் போது பொன்னிற உடும்பைக் கண்டது. அதனை வெட்ட முயன்று மயக்கம் அடைந்த தருணம் இறைவன் வெளிப்பட்டு ஆலயம் எழுப்ப உத்தரவிட்டது.
   பைரவர்  – அர்த்தநாரி பைரவர் வடிவம்
 
தலம்
திருமாகறல்
பிற பெயர்கள்
அடைக்கலம் காத்த நாதர், மகம் வாழ்வித்தவர், உடும்பீசர், பாரத்தழும்பர், புற்றிடங்கொண்டார், நிலையிட்ட நாதர், மங்கலங்காத்தவர், பரிந்து காத்தவர், அகத்தீஸ்வரர், நிலையிட்ட நாதர், தடுத்தாட்கொண்டவர்
இறைவன்
திருமாகறலீஸ்வரர்
இறைவி
திரிபுவனநாயகி
தல விருட்சம்
எலுமிச்சை
தீர்த்தம்
அக்னி
விழாக்கள்
மாசி மாதம்  – பிரம்மோற்ஸவம்.
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை
அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில், திருமாகறல் -631 603, காஞ்சிபுரம் மாவட்டம்.
 +91- 044-27240294
வழிபட்டவர்கள்
பிரம்மா , மகாவிஷ்ணு, மாகறன், மலையன் என்னும் அசுரர்கள்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர்
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2கி.மீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 239 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   7 வது தலம்.
திருமாகறலீஸ்வரர்
 


திரிபுவனநாயகி
பாடியவர்          திருஞான சம்மந்தர்          
திருமுறை         3            
பதிக எண்         72         
திருமுறை எண்    9           
பாடல்

தூயவிரி தாமரைக ணெய்தல்கழு நீர்குவளை தோன்றமதுவுண்
பாயவரி வண்டுபல பண்முரலு மோசைபயின் மாகறலுளான்
சாயவிர லூன்றியவி ராவணன தன்மைகெட நின்றபெருமான்
ஆயபுக ழேத்துமடி யார்கள்வினை யாயினவு மகல்வதெளிதே

பொருள்
தூய்மையான  தாமரை மலர்கள், கழு மலர்கள், நெய்தல் மலர்கள், குவளை மலர்கள் போன்ற மலர்கள் மலர்ந்திருக்கின்றன. அதில் இருக்கும் தேனை பருகுவதற்காக வரிகளை உடைய வண்டுகள் பாடி வருகின்றன. இத்தகைய திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருக்கிறான். அவன் தனது கால் பெருவிரல் ஊன்றி இராவணின் வலிமையை அழித்தவன்.இவ்வாறாக வீற்றிருக்கும் பெருமானின் புகழை பாடுவதால் வினைகள் யாவும் நீங்கும் என்பது முடிவானது.
கருத்து

சாய – வலி குறையும்படி.
பாடியவர்          திருஞான சம்மந்தர்          
திருமுறை         3            
பதிக எண்         72         
திருமுறை எண்    10           
பாடல்
காலினல பைங்கழல்க ணீண்முடியின் மேலுணர்வு காமுறவினார்
மாலுமல ரானுமறி யாமையெரி யாகியுயர் மாகறலுளான்
நாலுமெரி தோலுமுரி மாமணிய நாகமொடு கூடியுடனாய்
ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி யாரையடை யாவினைகளே
பொருள்
சிவன், பைம் பொன்னால ஆன வீரக் கழல்களை அணிந்தவாறும், நீண்ட சடை முடியும் உள்ளவனாக விருப்பமுடன் காண வேண்டும் என்ற எண்ணம் கொண்ட திருமாலும், பிரம்மாவும் அறியாதவாறு நெருப்பு பிழம்பாகி இத்தலத்தில் வீற்றிருக்கிறான்.நாலிடத்தில் எரிகின்ற நெருப்பை கொண்டும், தோலை உரித்து மாணிக்கத்தை கக்கும் பாம்பை அணிந்தும், அசைந்து நடக்கும் இடபத்தை வாகனமாக உடைப அந்த சிவபெருமானின் அடியார்களை வினைகள் வந்து அடையாது.
 
புகைப்படம் : இணையம்,தினமலர்
 

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருகச்சிநெறிக்காரைக்காடு

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருகச்சிநெறிக்காரைக்காடு – காஞ்சிபுரம்
பஞ்சபூத தலங்களில் – பிருத்வி நிலம்
  7 சீடர்களுடன் தட்சிணா மூர்த்தி
  சுவாமி சற்றே சிவந்த நிறம்
  நந்தியின் கழுத்து மட்டும் தெற்கு நோக்கி
  உடல் முழுவதும் கண் கொண்ட இந்திரனின் சாபம் விலகிய முக்தி அடைந்த தலம்
  ஆலயம் இருக்கும் பகுதி காரைச் செடி காடாக இருந்ததால் காரைக்காடு
 
 
 
 
 
தலம்
திருகச்சிநெறிக்காரைக்காடு
பிற பெயர்கள்
திருக்காலிமேடு
இறைவன்
சத்யநாதர், திருக்காலீஸ்வரர், காரைத்திருநாதர், சத்தியவிரதேஸ்வரர், சத்தியநாதேஸ்வரர்.
இறைவி
பிரமராம்பிகை, காரார்குழலி
தல விருட்சம்
காரைச்செடி
தீர்த்தம்
இந்திர, சத்யவிரத தீர்த்தம்
விழாக்கள்
மார்கழி திருவாதிரை, சிவராத்திரி, அன்னாபிஷேகம்.
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7 மணி முதல் 1 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை
அருள்மிகு சத்யநாதசுவாமி திருக்கோயில்,
காஞ்சிபுரம் – 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 44 – 2723 2327, 2722 1664.
வழிபட்டவர்கள்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் – 11 பதிகங்கள்,
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 237 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   5 வது தலம்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மி
சத்யநாதர்
 
 

பாடியவர்                     திருஞானசம்பந்தர்
திருமுறை                    3ம் திருமுறை 
பதிக எண்                    65
திருமுறை எண்               8
பாடல்

ஏழ்கடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை யெழில்வரைவாய்த்
தாழ்விரலால் ஊன்றியதோர் தன்மையினார் நன்மையினார்
ஆழ்கிடங்குஞ் சூழ்வயலு மதில்புல்கி யழகமரும்
நீள்மறுகிற் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே
பொருள்
ஏழு கடல்களால் சூழப்பட்ட இலங்கை அரசனான இராவணனை, அழகிய கயிலையின் கீழ் தனது பெருவிரலால் ஊன்றி அழித்த பெருமை உடையவர். அவர் எல்லா உயிருக்கும் நன்மை செய்பவர். அப்பெருமான் ஆழ்ந்த அகழியும், அதை சுற்றி இருக்கும் வயல்களும், மதில்களும், நீண்ட அழகிய வீதிகளை உடைய திருக்கச்சிநெறிக் காட்டில் உறைகின்றார்.
கருத்து
உவர்நீர் (உப்புத் தண்ணீர்க் கடல்), நன்னீர் (நல்ல தண்ணி), பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், கருப்பஞ்சாற்றுக் கடல், தேன் கடல் என்று ஏழு வகைக் கடல்கள் குறிப்பிடப்படுகின்றன. இவை அனைத்தும் அந்த தேசம் செழுமையாக இருப்பதையே குறிக்கின்றன.
 
பரா பட்டாரிகையான அம்பிகை உறையும் மணித்வீபம் மத்தியில்
என்பர் சாக்தர்.
பாடியவர்                     திருஞானசம்பந்தர்
திருமுறை                    3ம் திருமுறை 
பதிக எண்                    65
திருமுறை எண்               9
பாடல்
 
ஊண்டானும் ஒலிகடல்நஞ் சுடைதலையிற் பலிகொள்வர் 
மாண்டார்தம் எலும்பணிவர் வரியரவோ டெழிலாமை
பூண்டாரும் ஓரிருவ ரறியாமைப் பொங்கெரியாய் 
நீண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.           
பொருள்
சிவபெருமான், மிகுந்த சப்தங்களுடன் தோன்றிய ஆலகால விஷத்தை உண்டவர். பிரமனின் தலையினை கொய்து, அதனை கபாலமாக ஏந்தியவர்; இறந்தவர்களின் எலும்புகளை மாலையாக அணிந்தவர். வரிகளை உடைய பாம்பினை அணிந்தவர்; திருமால், ப்ரம்மா இருவரும் அறிய முடியாதவாறு நீண்ட ஒளிப் பிழம்பாகி நின்றவர். அத்தகைய சிவபெருமான், கலிக்கச்சி நெடுங்காட்டில் உறைகிறார்.
 
புகைப்படம் : தினமலர்
 

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – ஏகாம்பரநாதர் – காஞ்சிபுரம்

  பஞ்சபூத தலங்களில் – பிருத்வி – நிலம்
  மூல லிங்கம் மணலால் ஆனதால் இதற்கு அபிஷேகங்கள் கிடையது
  இறைவி கம்பை மாநதியில் நீர் பெருக்கெடுத்து வந்ததால் பயந்து பெருமானை இறுகத் தழுவிக்கொண்டதால் தழுவக் குழைந்தநாதர்
  சிவன் அம்பாளுக்கு அருள்புரிவதற்காக கங்கையையும், ஆலகால விஷத்தின் உஷ்ணத்தால் கருப்பு நிறமாக மாறிய மகாவிஷ்ணுவை குணப்படுத்த தலையை அலங்கரிக்கும் பிறைச்சந்திரனையும் அணிந்திருக்கிறார்
  பிரகாரத்தில் பிரம்மா பூசித்த இலிங்கம் – வெள்ளக்கம்பம், விஷ்ணு பூசித்த இலிங்கம் – கள்ளக் கம்பம், உருத்திரர் பூசித்த இலிங்கம் –  கள்ளக் கம்பம்
  108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி, இத் திருக்கோயில் உள் பிரகாரத்தில் அமைந்திருக்கிறது.
  இருகண்பார்வைகளும் மறையப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இடக்கண் பார்வையை கொடுத்தருளிய தலம்.
  திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ,கழற்சிங்க நாயனார் ஆகியோரின் அவதாரத்தலம்
  சாக்கிய நாயனார் முக்தியடைந்த தலம்
  தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி
  ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட சகஸ்ரலிங்கம் மற்றும் அஷ்டோத்ர (108) லிங்கங்கள் பிரகாரத்தில்
  கச்சியப்ப சிவாச்சாரியார்  “கந்த புராணத்தை’ இயற்றிய தலம்.
  கச்சி மயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னால் உள்ளது.
  172 அடி உயரமுள்ள இராஜகோபுரம்
 
இத்தலத்தைப்பற்றிய நூல்கள்
·திருவாவடுதுறை ஆதீனத்து மாதவச்சிவஞானயோகிகள் – காஞ்சிப்புராணம்,
·கச்சியப்பமுனிவர்  – காஞ்சிப்புராணம்,
·கச்சியப்பமுனிவர் – கச்சி ஆனந் தருத்திரேசர் வண்டுவிடுதூது,
·இரட்டையர்கள் –  ஏகாம்பர நாதர் உலா
·பட்டினத்துப்பிள்ளையார் – திருவேகம்ப முடையார் திருவந்தாதி,
·மாதவச்சிவஞான யோகிகள் – ஆனந்தருத்திரேசர் பதிகம், திருவேகம்பர், ஆனந்தக்களிப்பு, திரு ஏகம்பர் (யமக) அந்தாதி
சிறப்பு செய்யும் நூல்கள்
மணிமேகலை,  
தக்கயாகப் பரணி
மத்தவிலாசப்பிரகசனம் 
தண்டியலங்காரம்
பன்னிரு திருமுறைகள்
 
தலம்
ஏகாம்பரநாதர் – காஞ்சிபுரம்
பிற பெயர்கள்
திருக்கச்சியேகம்பம்
இறைவன்
ஏகாம்பரநாதர், தழுவக் குழைந்தநாதர், ஏகாம்பரேஸ்வரர், திருவேகம்பர்
இறைவி
ஏலவார்குழலி
தல விருட்சம்
மாமரம்
தீர்த்தம்
சிவகங்கை தீர்த்தம், கம்பாநதி
விழாக்கள்
பங்குனி உத்திரம், ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை,  ஆவணி மூலம், நவராத்திரி, சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம்
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை
அருள்மிகு காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்-631501.
+91- 44-2722 2084.
வழிபட்டவர்கள்
உமையம்மை, பிரம்மா, திருமால், ருத்திரர்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் – 4 பதிகங்கள், திருநாவுக்கரசர் – 7 பதிகங்கள்,  ,  சுந்தரர் – 1 பதிகங்கள், மாணிக்கவாசர் *
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 233 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   1 வது தலம்.
*சில நூல்களிலும் வலைத்தளங்களிலும் மாணிக்கவாசகர் பாடியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாணிக்க வாசகரின் பாடல் வரிகளில் இத்தலம் பற்றிய குறிப்பு உள்ளதே தவிர தனி பாடல் இல்லை.
 
 
ஏலவார் குழலம்மை உடனாகிய  ஏகாம்பரேஸ்வரர் 
 
 
 
பாடியவர்                     திருஞானசம்பந்தர்
திருமுறை                    2 ம் திருமுறை 
பதிக எண்                   12
திருமுறை எண்              8
பாடல்

தூயானைத் தூயவா யம்மறை யோதிய
வாயானை வாளரக் கன்வலி வாட்டிய
தீயானைத் தீதில்கச் சித்திரு வேகம்பம்
மேயானை மேவுவா ரென்றலை மேலாரே.
பொருள்
தூயவன். தூயனவாகிய மறைகளை ஒதிய வாயினன். ஒளி பொருந்திய வாளினை உடைய இராவணனின் வலிமையை அடர்த்த, தீயேந்தியவன். குற்றமற்ற திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளியிருப்பவன். அவனை அடைந்து துதிப்பவர் என் தலைமேல் கொள்ளத்தக்கவர்.
கருத்து
 
சர்வஞ்ஞத்வம் குற்றம் அற்றவனும், அனைத்தையும் இயக்கும் வல்லமை உடையவன் என்ற சைவசித்தாந்த கருத்து சிந்திக்கக்கூடியது.
ரென்றலை மேலாரே – என்னால் வணங்கப்படுவர்கள் எனும் பொருளில்
 
 
பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7 ம் திருமுறை 
பதிக எண்                    61
திருமுறை எண்               1
பாடல்
 
ஆலந் தானுகந் தமுதுசெய் தானை
ஆதி யைஅம ரர்தொழு தேத்தும்
சீலந் தான்பெரி தும்முடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
பொருள்
பாற்கடல் கடையும் பொழுது அதில் வந்த நஞ்சினை விரும்பி உண்டவனும் அமுதத்தை தேவர்களுக்கு அளித்தவனும், எல்லோருக்கும் முதல்வனாக இருப்பவனும், தேவர்களால் துதிக்கப்படும் பெருமை உடையவனும், நினைப்பவர்கள் நினைவில் உள்ளவனும், நீண்ட கூந்தலை உடைய உமையால் தினமும் துதிக்கப்படுபவனும், காலங்களுக்கு முடிவானவனாகவும் ஆகிய எம்மானை காண அடியேன் கண் பெற்றவாறே.
கருத்து
‘வியப்பு’ என்பது சொல்லெச்சம்
‘சீலம்’ என்பது  குணம்
 
புகைப்படம் : தினமலர்
 

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருப்பாச்சூர்

  • சிவன் சுயம்பு மூர்த்திசதுர வடிவ பீடம்
  • மூலவர்தீண்டா திருமேனி
  • அர்த்த மண்டபத்தில் ஸ்ரீசக்கரம்ஆதிசங்கரர் பிரதிஷ்டை
  • மூங்கில் வனத்தில் தோன்றியதால் பாசுரநாதர். பாசுர் – மூங்கில்
  • விஷ்ணு துர்க்கை மகிஷாசூரன் இல்லாமல்
  • தாழம்பூ தன் தவறு உணர்ந்து வேண்டியதால் மன்னித்து சிவராத்திரியில் ஒரு கால பூஜைக்கு மட்டும் பரிகாரம் பெற்ற தலம்.
  • தட்ச யாகத்திற்கு சென்ற அம்பாளை சாதாரண பெண்ணாக பிறக்கச் செய்து, தவம் செய்ய வைத்துதன் காதலியேஎன்று அழைத்த இடம்.
  • விஷ்ணு அசுரர்களை அழித்த தோஷத்தால் 16 செல்வங்களில் 11இழந்து சிவனை வணங்கி 11 விநாயர்களை பிரதிஷ்டை செய்து மீண்டும் அனைத்து செல்வங்களும் பெற்ற இடம்திரிபுராந்த தகனத்தில் தன்னை மதியாமல் சென்றதால் தேரின் அச்சு முறித்து சபை அமைத்து காரணங்களை சிவனிடம் வினாயகப் பெருமான் வினவிய இடம்
  • மேய்சலுக்கு வந்த பசுக்களில் ஒன்று பால் சொரிந்தது கண்டு வாசி என்னும் கருவியால் தோண்டி வெட்டுப்பட்டு தானே மூங்கில் காட்டில் இருப்பதை மன்னனுக்கு உணர்த்திய இடம்
  • கஜபிருஷ்ட விமானம்
தலம்
திருப்பாசூர்,
பிற பெயர்கள்
தங்காதலிபுரம்
இறைவன்
வாசீஸ்வரர், பசுபதீஸ்வரர், உடையவர், பாசூர்நாதர், சோமாஸ்கந்தர், வினை தீர்த்த ஈஸ்வரன்
இறைவி
தங்காதளி, பசுபதிநாயகி, மோகனாம்பாள், பணைமுலை
தல விருட்சம்
மூங்கில்
தீர்த்தம்
சோம தீர்த்தம்மங்கள தீர்த்தம்
விழாக்கள்
வைகாசி பிரம்மோற்ஸவம்,
 மார்கழி திருவாதிரை
மாவட்டம்
திருவள்ளுர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
அருள்மிகு வாசீஸ்வர சுவாமி திருக்கோயில்,
திருப்பாசூர் – 631 203,  
+91- 98944 – 86890
பாடியவர்கள்
அப்பர்சுந்தரர்திருஞான சம்மந்தர்
நிர்வாகம்
இருப்பிடம்
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து – 7 கி.மி.
திருவள்ளூர் நகர பேருந்து நிலையத்தில் இருந்து -3 கி.மி.
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 249 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   16 வது தலம்.
அம்பிகைதிருமால் மற்றும் சந்திரன் ஆகியவர்கள் வழிபட்ட தலம்
வாசீஸ்வரர்
 
தங்காதளி
பாடியவர்                     திருஞானசம்மந்தர்
திருமுறை                    2ம் திருமுறை 
பதிக எண்                    060
திருமுறை எண்               8
பாடல்
தேசு குன்றாத் தெண்ணீ ரிலங்கைக் கோமானைக்
கூச வடர்த்துக் கூர்வாள் கொடுப்பார் தம்மையே
பேசிப் பிதற்றப் பெருமை தருவா ரூர்போலும்
பாசித் தடமும் வயலுஞ் சூழ்ந்த பாசூரே.


பொருள்
புகழ் குறையாத, தெளிந்த நீரை உடைய கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனை அவன் மனம் கூசுமாறு செய்து அவனுக்கு வாளைப் பரிசாகக் கொடுத்தவர். தம்மைப் பற்றி பேசி, பிதற்றும் அடியவர்களுக்கு அருள் தருபவர். அது மூங்கில் மரங்களும் வயல்களும் சூழ்ந்த பாசூர் ஆகும்.
கருத்து
·         தவறு செய்தாலும் அவற்றை விலக்கி அருள் செய்பவர் என்பது இராவணனுக்கு அருளிய நிகழ்வு உணர்த்தும்.
·         குன்றா – குறையாத
·         தம்மைப்பற்றி பேசுதல் என்பது இழிவானது. அது அதிகமாகும் போது பிதற்றல் ஆகிறது. அதாவது பொருள் அற்றதாகிறது. அவர்களுக்கும் அருள்பவர் சிவன்.
·         பாசித்தடம் – நீர்ப்பாசியை வைத்து நீர் நிறைந்த குளங்களை உடைய என்று பல விளக்கங்களிலும் எடுத்தாளப்பட்டிருக்கிறது. பாசு என்பது மூங்கிலைக் குறிப்பதால் மூங்கில் காடுகளை உடைய என்று இப்பாடலில் என் பொருளாக விளக்கப்பட்டிருக்கிறது.
 
பாடல்
 
பாடியவர்                     அப்பர்
திருமுறை                    6ம் திருமுறை 
பதிக எண்                    083
திருமுறை எண்               1
விண்ணாகி நிலனாகி விசும்பு மாகி
வேலைசூழ் ஞாலத்தார் விரும்பு கின்ற
எண்ணாகி எழுத்தாகி இயல்பு மாகி
ஏழுலகுந் தொழுதேத்திக் காண நின்ற
கண்ணாகி மணியாகிக் காட்சி யாகிக்
காதலித்தங் கடியார்கள் பரவ நின்ற
பண்ணாகி இன்னமுதாம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.


பொருள்
பாசூரில் உறையும் இறைவன் விண்ணாகவும், நிலமாகவும், மேகமாகவும், கடல் சூழ் உலகில் உள்ள பூமியில் உள்ளவர்கள் விரும்பும் எண்ணாகவும், எழுத்தாகவும், இவை அனைத்தும் இயல்பாகவும், ஏழ் உலகத்தில் இருப்பவர்களாலும் வணங்கப்படுவனாகவும், காட்சிக்கு உரிய கண்ணாகவும், அக் கண்ணுள் இருக்கும் மணியாகவும், அதனால் உணர்த்தப்படும் காட்சியாகவும், காதல் கொண்டு அடியார்கள்  பாடும்  பண் நிறைந்த  பாடலாகவும், இனிய அமுதமாகவும் இருக்கிறான். இப்படிப்பட இறைவனை கண்டு அடியேன் உய்ந்தேன்.
கருத்து
விசும்பு – மேகம்,
வேலை – கடல்
காட்சி, காண்பவர், காணப்படும் பொருள் என்ற சைவ சித்தாந்தக் கருத்து இப்பாடலோடு ஒப்பு நோக்கக் கூடியது.
புகைப்பட உதவி :  Internet
 
 
 
 

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவிற்கோலம்

தல வரலாறு(சுருக்கம்)/சிறப்புகள் – கூவம்
 
·   சிவன் சுயம்பு மூர்த்தி
·   மூலவர் – தீண்டா திருமேனி
·   இறைவன் மேருவை கையால் வில்லாக பிடித்த தலம் – திரு+வில்+கோலம்
·   சிவன் – காளிக்காக ரக்க்ஷா(காத்தல்) நடனம் ஆடிய இடம்
·   சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகன், வித்யுன்மாலி – துவார பாலகர்கள்
·   கஜபிருஷ்ட விமானம்
·   இயற்கை பேரழிவுகளான மழை, வெள்ளம் வரும் போது சுவாமி வெண்மையாகவும், போர்நிகழும் காலத்தில் செம்மை நிறம் உடையதாகவும் மாறும் அதிசயம் நிகழும்..
·   அம்பாளுக்கு முன் புறத்தில் ஸ்ரீசக்கரம்
·   கூரம்(ஏர்க்கால்) முறிந்த இடமாதலால் இது கூரம். பின்னாளில் மருவி கூவம் என்றானது.
·   பைரவர் – நாய் வாகனம் இல்லாமல் காட்சி 
 
தலம்
கூவம்
பிற பெயர்கள்
கூவரம், திருவிற்கோலம், கூபாக்னபுரி
இறைவன்
திரிபுராந்தகர், சோமாஸ்கந்தர், புராந்தகேசுவரர்
இறைவி
திரிபுராந்த நாயகி, புராந்தரியம்மை
தல விருட்சம்
தனியாக ஏதுமில்லை. நைமிசாரண்ய ஷேத்திரம்
தீர்த்தம்
அக்னி, அச்சிறுகேணி மற்றும் கூபாக்கினி தீர்த்தம்
விழாக்கள்
·         சித்திரைபிரம்மோற்ஸவம்
·         ஆடிபூ பாவாடை திருவிழா
·         சிவராத்திரி
·         ஆருத்ரா தரிசனம்
மாவட்டம்
திருவள்ளுர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை
அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில்,
கூவம் – . பேரம்பாக்கம் வழி,திருவள்ளூர் மாவட்டம்.
பாடியவர்கள்
திரு ஞான சம்பந்தர், கூவப்புராணம்
நிர்வாகம்
திரு ராஜேந்திரன் – 93818-65515
இருப்பிடம்
சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து 9 கி,மீ தூரத்தில் உள்ளது
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   14 வது தலம்.
திரிபுராந்தகர்
 
 
 
திரிபுராந்த நாயகி
 

(இப்பதிகத்தில் 8வது பாடல் இல்லாததால் 5வது பாடலும், 9வது பாடலும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது)
பாடியவர்                     திருஞானசம்மந்தர்
திருமுறை                    3ம் திருமுறை 
பதிக எண்                    023
திருமுறை எண்               5
பாடல்
 
முந்தினான் மூவருள் முதல்வன் ஆயினான்
கொந்துலா மலர்ப்பொழிற் கூக மேவினான்
அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை
சிந்துவான் உறைவிடம் திருவிற் கோலமே 


பொருள்
இறைவன் எல்லாவற்றிக்கும் முற்பட்டவன்.படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் தொழிகளை உடைய மூவருக்கு முதலாவது ஆனவன். கொத்தாக பூக்கும் சோலைகளை உடைய கூகம் என்ற ஊரில் உறைபவன். அந்தி வானத்தில் தோன்றும் பிறை சந்திரனை தன் தலையில் சூடியவன். அடியவர்களுடைய வினைகளை முழுவதுமாக நீக்குபவன். அவன் உறையும் இடம் திருவிற்கோலம் ஆகும்.
* * * * * * * * * * * * * * * * * * * *
பாடியவர்                     திருஞானசம்மந்தர்
திருமுறை                    3ம் திருமுறை 
பதிக எண்                    023
திருமுறை எண்               9
பாடல்
 
திரிதரு புரம்எரி செய்த சேவகன்
வரியர வொடுமதி சடையில் வைத்தவன் 
அரியொடு பிரமனதாற்ற லால் உருத்
தெரியலன் உறைவிடம் திருவிற் கோலமே
பொருள்
இறைவன் முப்புரங்களை அழித்து தேவர்களைக் காத்தவன். வரிகள் உடைய பாம்பினையும் சந்திரனையும் தலையில் தரித்தவன். தங்களது கர்வத்தால் தங்களை பெரிதாக்கிக் கொண்டதால் ப்ரம்மா மற்றும் திருமால் இவர்களால் காணமுடியாதவன். இப்படிப்பட்ட இறைவன் வீற்றிருக்கும் இடம் திருவிற்கோலம்.
கருத்து
திருதரு – வானத்தில் பறந்து திருந்து கொண்டிருந்த; அட்டவீரட்டானத்தில் ஒன்று – திரிபுர தகனம்
சேவகன் – சிவன் எளிமையானவன் என்பதைக் குறிக்கிறது.
வரி அரவோடு – வரிகள் உடைய பாம்பு(மிகுந்த நஞ்சு உடையது)

புகைப்பட உதவி : தினமலர்

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவாலங்காடு

தல வரலாறு(சுருக்கம்)/சிறப்புகள்
·   சிவன் சுயம்பு மூர்த்தி
·   பஞ்ச சபைகளில் ரத்ன சபை
·   இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார், தனது திருவடிகளால் நடந்து நடராஜர் திருவடியில் இருக்கும் இடம்.(பேய் வடிவம் கொண்டு இருக்கும் இடம்)
·   51 சக்தி பீடங்களில் காளி சக்தி பீடம்
·   முன்காலத்தில் இங்கு இருந்த ஆலமரக் காட்டில் சிவன் சுயம்பாக தோன்றி நடனம் புரிந்தததால் வடாரண்யேஸ்வரர்
·   காரைக்கால் அம்மையாரால் மூத்த திருப்பதிகம் பாடப் பெற்ற இடம்
·   கமலத் தேர் அமைப்பு
·   சிவனும் காளியும் ஊர்த்துவ தாண்டவம் ஆடிய இடம்
·   விமானம் செப்புத் தகட்டால் செய்யப்பட்டுள்ளது.
·   வேளாளர்கள் பழையனூர் நீலிக்குக்கொடுத்த வாக்குப்படி உயிர் கொடுத்து, உண்மையை நிலை நாட்டிய இடம்.
 
  
தலம்
திருவாலங்காடு
பிற பெயர்கள்
வடாரணியம், பழையனூர் ஆலங்காடு
இறைவன்
வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான், ஆலங்காட்டுஅப்பர்
இறைவி
வண்டார்குழலி, மகாகாளி
தல விருட்சம்
பலா
தீர்த்தம்
சென்றாடு தீர்த்தம்முக்தி தீர்த்தம்.
விழாக்கள்
மார்கழிதிருவாதிரை
மாவட்டம்
திருவள்ளுர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7 மணி முதல் 12 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
அருள்மிகு வண்டார்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு-631 210,
திருவள்ளூர் மாவட்டம். 044 – 27872443
பாடியவர்கள்
மூவர் முதலிகளான திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர்,அருணகிரி நாதர், கச்சியப்ப சிவாச்சாரியார், இராமலிங்க அடிகள்
நிர்வாகம்
இந்து சமய அறநிலையத்துறை
இருப்பிடம்
சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் உள்ளது
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 248வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   15 வது தலம்.
வழிபட்டவர்கள் –  கார்க்கோடகன், சுநந்த முனிவர்
வடாரண்யேஸ்வரர்
 
வண்டார்குழலி
 
பாடியவர்                     திருநாவுக்கரசர்
திருமுறை                    6ம் திருமுறை 
பதிக எண்                    78
திருமுறை எண்               10
பாடல்
மாலைப் பிறைசென்னி வைத்தார் தாமே
    வண்கயிலை மாமலையை வந்தி யாத
நீலக் கடல்சூ ழிலங்கைக் கோனை
    நெரிய விரலா லடர்த்தார் தாமே
பாலொத்த மேனி நிறத்தார் தாமே
    பழனை பதியா வுடையார் தாமே
சீலத்தா ரேத்துந் திறத்தார் தாமே
    திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
பொருள்
திருவாலங்காட்டுடை சிவன் எப்படிப்பட்டவர் என்றால் மாலைக்காலத்து சந்திரனை அணிந்தவர், வளம் மிக்க கயிலையை வணங்காதவனும், நீல நிற கடலால் சூழப்பட்ட இலங்கையின் வேந்தனாகிய இராவணனை தனது பெரு விரலால் அழுத்தி துன்பம் அடையச் செய்தவர், வெண்மையான நிறமுடையவர், பழையனுரை தனது உறைவிடமாகக் கொண்டவர், உயர்ந்த ஒழுக்கங்களை உடையவர் போற்றும் திறமுடையவர்.
பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7ம் திருமுறை 
பதிக எண்                    52
திருமுறை எண்               2
பண்                          பழம்பஞ்சுரம்
பாடல்
பொய்யே செய்து புறம்புறமே திரிவேன் றன்னைப் போகாமே     7.52.2
மெய்யே வந்திங் கெனையாண்ட மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே    
பையா டரவம் அரைக்கசைத்த பரமா பழைய னூர்மேய  
ஐயா ஆலங் காடாஉன் அடியார்க் கடியேன் ஆவேனே.
பொருள்
மனம், வாக்கு மற்றும் காயங்களால் அவற்றுக்கு பொருந்தாத செயல்களைச் செய்து, உன்னிடத்தில் நிலைபெறும் எண்ணங்களைப் பெறாமல் திரிபவனாகிய என்னை, அவ்வாறு போகவிடாமல் தடுத்து என்னை ஆண்ட மெய்பொருளே, உண்மை நிலையினை உணர்ந்தரால் அறியப்பட்ட மெய்ப்பொருளே, ஆடும் நாகத்தினை இடையினில் அணிந்து பழையனுரில் உறைபவனே, திருவாலங்காட்டில் உறைபவனே, அடியேன் என்றும் உன் அடியவர்க்கு அடியவன் ஆவேன்.
கருத்து
பொய் பேசுதல் என்பது தாண்டி பொய்யே செய்து என்பதால் மனம், வாக்கு மற்றும் காயங்களால்
போகாமே என்பதால் தடுத்து நிறுத்தப்பட்ட
புகைப்படம் உதவி – தினமலர்

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவலிதாயம்

தல வரலாறு(சுருக்கம்)/சிறப்புகள்
·   சிவன் சுயம்பு மூர்த்தி
·   பாரத்துவாஜ முனிவர் கருங்குருவி (வலியன்) யாக வந்து வழிபட்ட தலம்
·   இராமன் வழிபட்டத் தலம்
·   மார்க்கண்டேய மகரிஷி உபதேசத்தின்படி வியாழன் தன் தவறு உணர்ந்து  சிவனை வணங்கி பாவன் நீங்கப் பெற்ற தலம்
·   பிரம்மாவின் பெண்கள் கமலியும், வல்லியும் இறைவனை பூஜித்து விநாயகரை மணம் புரிந்த தலம்
·   கஜ பிருஷ்ட விமானம்
 
 
 
 
 
தலம்
திருவலிதாயம்
பிற பெயர்கள்
பாடி
இறைவன்
வலிதாய நாதர், வல்லீஸ்வரர், திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார்
இறைவி
ஜகதாம்பாள், தாயம்மை,
தல விருட்சம்
பாதிரி, கொன்றை
தீர்த்தம்
பரத்துவாஜ தீர்த்தம்
விழாக்கள்
சித்திரைபிரம்மோற்ஸவம், தைகிருத்திகை, குரு பெயர்ச்சி
மாவட்டம்
சென்னை
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7 மணி முதல் 12 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில்,                         
பாடி, சென்னை – 600050.
+91-44 -2654 0706
பாடியவர்கள்
 திருஞானசம்மந்தர், அருணகிரியார்
நிர்வாகம்
இந்து சமய அறநிலையத்துறை
இருப்பிடம்
சென்னை  ‘பாடி’க்கு அருகில். டி.வி.எஸ், லூகாஸ்’ நிறுத்தத்தில் இருந்து மிக அருகில்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 254வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 21வது தலம்.
திருவல்லீஸ்வரர்
 
 
 
தாயம்மை

பாடியவர்                     திருஞானசம்மந்தர்
திருமுறை                    1ம் திருமுறை 
பதிக எண்                    003
திருமுறை எண்               1

பாடல்
 

பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப்புனல்தூவி

ஒத்தசொல்லியுல கத்தவர்தாந்தொழு தேத்தவுயர்சென்னி
மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறை கின்றவலிதாயம்
சித்தம்வைத்தவடி யாரவர்மேலடை யாமற்றிடர்நோயே.
பொருள்
பல சிவனடியார்களும் பொலிவுடன் விளங்கும் மலர்களை உள்ளங் கையினில் ஏந்தி, வார்த்தைகளால் மாறுபாடு இல்லாமல் மந்திரங்கள் சொல்லி, நீர் வார்த்து , ஊமத்தை மலர்களைச் சூடி பூஜிக்கிறார்கள்.  அவர்களை உயர் அடையச் செய்யும் பெருமான் உடன் உறையும் வலிதாயம் என்ற தலத்தை மனதில் வைத்த அடியவர்களை துன்பம் என்ற நோய் தாக்காது.
 
வலிதாயத்தை மனத்தால் நினைத்த அடியவர்களை துன்பம் தாக்காது என்பது துணியு.
கருத்து
பத்தர் – சிவன் அடியார்காள்
பொலியம்மலர்  – பொலிவுடன் விளங்கும் மலர்
புனல் தூவி  – நீர் இட்டு
பிரியாதுறை கின்ற – உமையம்மையை பிரியாதிருக்கும் சிவன்
பாடியவர்                     திருஞானசம்மந்தர்
திருமுறை                    1ம் திருமுறை 
பதிக எண்                    003
திருமுறை எண்               8
பாடல்

கடலினஞ்சமமு துண்டிமையோர்தொழு தேத்தநடமாடி
அடலிலங்கையரை யன்வலிசெற்றருள் அம்மான்அமர்கோயில்
மடலிலங்குகமு கின்பலவின்மது விம்மும்வலிதாயம்
உடலிலங்குமுயி ருள்ளளவுந்தொழ வுள்ளத்துயர்போமே.
பொருள்


திருபாற்கடலைக் கடந்த பொழுது எழுந்த நஞ்சினை உண்டு தேவர்கள் தொழுது ஏத்தும் படி செய்து நடனம் ஆடி, வலிமை மிக்க இலங்கை செருக்குடன் கூடிய ஆற்றலை அழித்து பின் அவனுக்கு அருள் புரிந்த இறைவன் உறையும் கோயில்களை உடையதும், தேன் சுவை போன்ற கமுகு மற்றும் பலா மரங்களை உடையதுமான வலிதாயம் என்ற இத்தலத்தை வணங்குபவர்களில் துயரானது உடலில் உயிர் வரை இருக்கும் துன்பம் என்ற நிலையை நீக்கும்.

Photo : Dinamalar

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!