அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சந்ததம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  சந்ததம்

 

வார்த்தை :  சந்ததம்

பொருள்

  • எப்பொழுதும்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.

எந்த உயிர்க்கும் இரைதரும் ஈசனைச்
சந்ததம் வாழ்த்தடியோ குதம்பாய்
சந்ததம் வாழ்த்தடியோ.

 

குதம்பைச் சித்தர்

 

கருத்து உரை

(வினைகளுக்கு உட்பட்டு இருக்கும் அனைத்து) உயிர்களுக்கும் உணவு வழங்கும் ஈசனை எப்பொழுதும் வாழ்த்திப் பாடுவாயாக.

விளக்கம்

வினைகளுக்கு உட்பட்டே எல்லா உயிர்களுக்கும் இரை என்பது கிடைக்கும். உயிர்களின் வினைகளைகளை ஈசன் அறிந்திருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உயிர்களுக்கு ஈசன் உணவை வழங்குவான் என்றவாறு.

 

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

கௌ – ‘கௌவு’ என்று ஏவுதல்.
சா – இறத்தல், சாக்காடு
சீ – லட்சுமி, இகழ்ச்சி, வெறுப்புச் சொல்
சு – விரட்டடுதல், சுகம், மங்கலம்
சே – காலை, சிவப்பு.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சட்டுவம்

தமிழ் அன்னை

 

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  சட்டுவம்

வார்த்தை :  சட்டுவம்

பொருள்

  • அகப்பை
  • தோசைதிருப்பி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.

நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

சிவவாக்கியர்

கருத்து உரை

சுவை மிகுந்த உணவுப் பதார்த்தங்களைச் சமைத்த சட்டியானது. அந்த உணவின்  ருசியை  உணர்ந்து  கொள்ளாதது போலவே மனக்கோயிலினுள் இறைவன்  இருப்பதை அறியாமல் வெறும் கல்லை  நட்டு வைத்து தெய்வம் என்று  பெயரிட்டு  பூக்களாலும்  மந்திரங்களாலும்  வழிபாடு செய்வது அறியாமையே ஆகும்.

விளக்கம்

அக வழிபாடு முறையை முன்னிருத்துதல் குறித்தது இப்பாடல்

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

கு – குவளயம்
கூ – பூமி, கூவுதல், உலகம்
கை – உறுப்பு, கரம்
கோ – அரசன், தந்தை, இறைவன்
கௌ – கொள்ளு, தீங்கு

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வெய்ய

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  வெய்ய

வார்த்தை : வெய்ய
பொருள்

  • கொடிய.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.

ஐயன் திருப்பாதம் பசுவே
அன்புற்றுநீ பணிந்தால்
வெய்ய வினைகளெல்லாம் பசுவே
விட்டொடுங் கண்டாயே.

 

இடைக்காட்டுச் சித்தர்

 

கருத்து உரை

பசுவே!, ஐயனிடம் பற்றுக் கொண்டு, அவரிடம் அன்பு கொண்டு அவரின் திருப்பாதம் பணிந்தால் கொடிய வினைகள் எல்லாம் விட்டு ஓடி விலகிவிடும். இதனைக் காண்.

விளக்கம்

உயிர்களைக் குறிக்கும் சொல்லாகவே ‘பசு’ என்று இங்கு பயன்பாடு கொள்ளப்படுகிறது. ‘பதி, பசு பாசம் எனப் பகர் மூன்றில்’ எனும் வரிகள் இங்கு சிந்திக்கத் தக்கவை.

 

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

ஓ – சென்று தங்குதல், மதகு
ஔ – பூமி, ஆனந்தம்
க – வியங்கோள் விகுதி, நெருப்பு.
கா – காத்தல், சோலை
கி – இரைச்சல் ஒலி

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கண்டிகை

தமிழ் அன்னை

புகைப்படம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  கண்டிகை

வார்த்தை :  கண்டிகை

பொருள்

  • கழுத்தணி
  • உருத்திராக்க மாலை – உருத்திராட்சமாலை
  • பதக்கம்
  • நிலப்பிரிவு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.

கலையிலங் கும்மழு கட்டங்கங் கண்டிகை குண்டலம்
விலையிலங் கும்மணி மாடத்தர் வீழி மிழலையார்
தலையிலங் கும்பிறை தாழ்வடஞ் சூலந் தமருகம்
அலையிலங் கும்புன லேற்றவர்க் கும்மடி யார்க்குமே.

 

தேவாரம் – 3ம் திருமுறை – திருஞானசம்பந்தர்

 

மான், மழுப்படை, யோகதண்டம், உருத்திராக்கம், குண்டலம் முதலியன கொண்டு விலைமதிப்புடைய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட மாடங்களையுடைய திருவீழிமிழலையில் இறைவர் வீற்றிருந்ருது அருளுகின்றார். தலையிலே பிறைச் சந்திரன் திகழ, கழுத்திலே எலும்புமாலை விளங்க, கையில் சூலம், உடுக்கை கொண்டு அலையுடைய கங்கையை ஏற்று இடபக்கொடி கொண்டு விளங்குபவர். யோகநெறி நின்று தம்மைத் தொழும் அடியவர்களும்  தம்மைப் போன்ற உருவம்   (சாரூப பதவி) பெறச் செய்வார் . ஒத்த தோழர்கள் ஒன்று போல் அலங்கரித்துக் கொள்வது போல.

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

ஊ – இறைச்சி, உணவு, ஊன், தசை
எ – வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்
ஏ – அம்பு, உயர்ச்சிமிகுதி, ஏவுதல்
ஐ – அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை,நுட்பம்
ஒ – மதகு

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – விகிர்தன்

தமிழ் அன்னை

 

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  விகிர்தன்

வார்த்தை :  விகிர்தன்

பொருள்

  • வேறுபட்டவன்
  • விசித்திரமானவன்
  • ஒருபடித்தல்லாது வேறுபட்ட செயலினன்
  • உலகியல்பில் வேறுபட்டவன்
  • கடவுள்
  • இறைவன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.

கொதியி னால்வரு காளிதன் கோபங்குறைய ஆடிய கூத்துடை யானே
மதியி லேன்உடம் பில்லடு நோயான்மயங்கி னேன்மணி யேமண வாளா
விதியி னால்இமை யோர்தொழு தேத்தும்விகிர்த னேதிரு வாவடு துறையுள்
அதிப னேஎனை அஞ்சல்என் றருளாய்ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

 

தேவாரம் – 7ம் திருமுறை – சுந்தரர்

 

சீற்றத்தொடு வந்த காளியினது கோபம் தணியும்படி அவளோடு எதிர்நின்று ஆடிய நடனத்தை உடையவனே, (ஒளிரும்) மணிகள் போன்றவனே, தலைவனே, (விதிவசத்தால் – அவர்களது வினை முன் நிறுத்தி) தேவர்களாலும் துதிக்கப்படும் ஈசனே, திருவாவடுதுறையில் எழுந்தருளி யிருக்கின்ற தலைவனே, அறிவில்லேனாகிய எனது உடம்பில் வந்து வருத்துகின்ற பிணியினால் செய்வது அறியாது மனம் கலங்குகின்றேன்! எனக்கு உன்னையன்றி உறவாவார் வேறு யாவர் உள்ளார்! என்னை `அஞ்சேல்` என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்வாயாக!

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’. அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

அ – சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா
ஆ – பசு, ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம், அரசன்
இ – சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.
ஈ – பறக்கும் ஈ, தா, குகை, தேனீ,அழிவு.
உ – சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஏதம்

தமிழ் அன்னை

 

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஏதம்

வார்த்தை :  ஏதம்

பொருள்

  • துன்பம்
  • குற்றம், கேடு
  • தீமை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.

வேதத் தானென்பர் வேள்வியு ளானென்பர்
பூதத்தா னென்பர் புண்ணியன் தன்னையே
கீதத் தான்கிள ருந்திரு மீயச்சூர்
ஏதந் தீர்க்கநின் றாரிளங் கோயிலே

தேவாரம் – 5ம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

உயிர்களுக்கு வினைகளை நீக்கி அருள் புரிபவனாகவும்(புண்ணியத்தின் வடிவாக) இருக்கும் இறைவனை வேத வடிவமாகவும் அதன் சாரமாகவும் இருப்பவன் என்றும், செய்யப்படும் வேள்வியின் பயன் அருளுபவன் என்றும், பஞ்ச பூதங்கங்களாகவும் இருப்பவன் என்றும் கூறுவர்; கீதமாக விளங்கும் திருமீயச்சூரில், இளங்கோயிலின்கண் அடியவர் துன்பம் தீர்க்க நின்ற இறைவரேயாவர்.

 

துக்கடா

பண்புப் பெயர் புணரும்போது ஏற்படும் மாற்றங்கள் – முன் நின்ற மெய் திரிதல் விதியின் படி (விகுதி போய் முன் நின்ற மெய் திரிந்தது)

செய்யன் = செம்மை+அன்
வெவ்வுயிர் = வெம்மை+உயிர்

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – துலங்குதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  துலங்குதல்

வார்த்தை : துலங்குதல்
பொருள்

  • ஒளிர்தல்
  • விளங்குதல்
  • தெளிவாதல்
  • சிறத்தல்
  • கலங்குதல்
  • தொங்கியசைதல்
  • ஒப்பமிடப்படுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.

காணவே பரமசிவன் வானுன் டாக்கக்
கருணையுள்ள திருமாலைக் கண்ணால் மேலிப்
பூணவே சதாசிவத்தைப் பார்க்கும் போது
புத்தியுடன் பேரண்டம் படைத்து நின்றார்
ஊணவே மயேசுரனைப் பார்க்கவே தான்
உருமுயிடி வாய்வ தனைப் படைத்து நின்றார்
தோணவே ருத்திரனைக் கண்ணால் பார்க்க
துலங்குமின்னல் அங்கியும் படைத்தார் பாரே.

 

அகஸ்தியர் செளமிய சாகரம்

 

கருத்து உரை

பரம்பொருளாகிய சிவபெருமான் வானை உண்டாக்கிப் பின் கருணை உடைய திருமாலைப் பார்த்துவிட்டுச் சதாசிவனைப் பார்க்க அவர் ஒரு பெரிய அண்டத்தைப் படைத்தார். பின் மகேஸ்வரனைப் பார்க்க அவர் விண்வெளியில் முழங்குகின்ற இடியையும் வாயுவையும் படைத்தார். பின் ருத்திரனைப் பார்க்க அவர் மின்னலையும் நெருப்பையும் உண்டாக்கினார்.

விளக்கம்
1.
‘வெளியிலே வெளிபோய் விரவிய வாறும்’ எனும் திருமந்திரப் பாடல் இங்கு சிந்திக்கத் தக்கது. வெளியில் – ஆகாச வடிவாகிய சிவத்தில்
2.
ஆகாசத்தில் இருந்து எல்லா பொருள்களும் உண்டாகின்றன. முடியும் போதும் ஆகாசத்திலே முடிகின்றன.ஆகாசமே பெரியது. ஆகாசமே முடிவான உறைவிடம்’ எனும் சாந்தோக்கியம் ஆகாசம் சிவத்தினை உணர்த்தும்

 

துக்கடா

பண்புப் பெயர் புணரும்போது ஏற்படும் மாற்றங்கள் – தன் ஒற்று இரட்டல் விதியின் படி (விகுதி போய் இறுதி எழுத்தின் தன் ஒற்று இரட்டியது)

குற்றி = குறுமை+ஆறு
நட்டாறு = நடுமை+ஆறு

Loading

சமூக ஊடகங்கள்