‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – ஏமுறல்
பொருள்
- ஏக்கமடைதல்
- மயங்கல்
- பித்து கொள்ளுதல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
அன்றியும் நின்
வரவினை ஆதரித்து,
இன்றுகாறும் நின்று
ஏமுறுமால்; அவற்
சென்று சேருதி;
சேருதல், செவ்வியோய்!
நன்று தேவர்க்கும்; யாவர்க்கும்
நன்று எனா,
கம்பராமாயணம்
கருத்து உரை
அதுமட்டும் இல்லாமல்*, உன்னுடைய வருகையை விரும்பி இன்று வரையிலும் எதிர்பார்த்து இருக்கும் அந்த அகத்திய முனிவர் மகிழ்ச்சி அடைவார். ஆதலால் நீ சென்று அகத்தியரை அடைவாயாக; சிறந்தவனே! அகத்தியரை அடைதல் விண்ணவர்க்கும் நல்லதே; மற்ற எல்லார்க்கும் நல்லதே ஆகும் என்று கூறினார் சுதீக்கணர்.
விளக்க உரை
- * நல்லதே நினைந்தாய்…இல்லை நின்வயின் எய்தகில்லாதவே – அம்முனிவனை அடைந்த பின்னர் உன்னிடத்தில் அடையாத பேறுகள் ஒன்றுமில்லை என்று முதல் பாடல் முடிகிறது. அதனை விரித்துக் கூறும் இப்பாடல்
- இராமன் வருகை உணர்ந்து ‘எப்போது வருவான்’ என எதிர் பார்த்து ஏங்கினார் என்றும் பொருள் உரைப்பர்.