சித்த(ர்)த் துளிப்பு – 11-Feb-2021


பாடல்

அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோ அட்சரமாய்ப்
பிஞ்செழுத்தாய் எங்கும் பிரணவமாய்க் கொஞ்சப்
பொருளாய் மருளாய்ப் புரையாய் உரையாய்
அருளாய்ந் தனியிருந்த ஆனந்தன்

அருளிய சித்தர் : திரிகோணச் சித்தர்

பதவுரை

உரைத்து குருவருளால் அருளப்படும் ஐந்தெழுத்தாகவும், எட்டு எழுத்தாகவும், ஐம்பத்தி ஒர் எழுத்தாகவும், பஞ்சாக்கரத்தில் சக்தியைக் குறிக்கும்எழுத்தாகிய பிஞ்செழுத்தாகவும், அழைக்கப்படும் பொருளாகவும், மாயையாகி மாயை வடிவமாகவும், பழமை, பெருமை, உயர்வு ஆகியவனாகவும், சொல்லப்படும் சொற்களுக்கு பொருள் தருபவனாகவும், அனைத்தையும் அருளுபவனாகவும், தனியனாகவும் இருந்து அருளக்கூடிய ஆனந்த நிலையில் இருப்பவன் சிவன்.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.