
பாடல்
சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை – உபாயம்
இதுவே; மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்
அருளிய சித்தர் : ஔவையார்
பதவுரை
சிவாயநம என்னும் சிவ சிந்தனையில் ஆழ்ந்து இருப்போர்க்கு துன்பம் தரத்தக்கதான அபாயம் எந்த நாளும் இல்லை. இதை அன்றி துன்பத்தை நீக்குவதற்கு வேறு வழி இல்லை; இது நமது பெறப்பட்ட அறிவின் கண்ட சிந்தனையாக இருக்கவேண்டும்; இவை அல்லாதது மற்றவை எல்லாம் விதியின் வழியே பெறப்பட்ட சிந்தனையே ஆகும்.