சித்த(ர்)த் துளிப்பு – 09-Feb-2021


பாடல்

வீணாட் கழிவதுவும் விளையாட்டே – சுடலை
சேரும்வரை அழுவதும் விளையாட்டே
மெத்தஞானம் பேசுவதும் விளையாட்டே – குளித்து
வீடுவந்து மறப்பதுவும் விளையாட்டே

அருளிய சித்தர் : கடேந்திர நாதர் என்ற விளையாட்டுச் சித்தர்

பதவுரை

இறை பற்றியும், மெய் ஞானம் பற்றிய ஞானம் சிறிதும் கொள்ளாமல் நாட்கள் கழிவது விளையாட்டே; இருப்பவர் இறந்து அதன்பின் சுடலை  வரை சேர்க்கும் வரை அந்த உயிர் குறித்து அழுவது விளையாட்டே; மெய்ஞானம் பற்றி அறியாது இருந்த போதும் அதை முழுவது அறிந்தது போல் பேசுவதும் விளையாட்டே;  அவரை எரித்தப்பின் வீடு வந்த உடன் அந்த நினைப்பை மறப்பதுவும் விளையாட்டே.

‘நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே’ எனும் திருமந்திரப் பாடலும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.